Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

வாங்க முடியாத வீடுகள் – மக்களின் வாங்கும் திறன் கடந்த நான்கு வருடங்களில் குறைவு

வாங்க முடியாத வீடுகள் – மக்களின் வாங்கும் திறன் கடந்த நான்கு வருடங்களில் குறைவு 

Affordable Housing – Purchasing power on Housing affordability declined in India

 

வீட்டு நிதி நிறுவனங்கள்(HFC) வழங்கிய வீட்டுக்கடன்கள் குறித்து பாரத ரிசர்வ் வங்கி ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. கடந்த 2010ம் வருடம் முதல் காலாண்டு குடியிருப்பு சொத்து விலை கண்காணிப்பு(Residential Asset Price Monitoring Survey) கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இது சார்ந்து நாட்டில் உள்ள முக்கியமான 13 நகரங்களில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் உள்ள மக்களின் வீடு வாங்கும் திறன் குறைந்துள்ளதாகவும், அதற்கேற்ப வீட்டின் மதிப்பு குறிப்பிட்ட நகரங்களில் அதிகமாக உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி கணிப்பில் தெரிய வந்துள்ளது. வீடுகளை வாங்க முடியாத நகரத்தில் மும்பை முதலிடத்தையும், மலிவான வீடுகளை வாங்கும்(Affordable Housing) பட்டியலில் புவனேஸ்வர் முதலிடத்திலும் உள்ளது.

 

சொல்லப்பட்ட தகவல்கள் வீட்டு வசதி மதிப்பு மற்றும் வருவாய்(Housing price to Monthly income ratio) விகிதத்தில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களின் வருமானம் ஒரு வீட்டினை வாங்குவதற்கு போதுமானதாக இல்லை என்பதை காட்டுகிறது. 2015ம் ஆண்டு மார்ச் காலாண்டில் சராசரி வீட்டின் விலைக்கான மாத வருமானம் மும்பை நகரத்தில் 64.1 புள்ளிகளாக இருந்தது. இதுவே கடந்த 2019  மார்ச் காலாண்டில் 74.4 புள்ளிகளாக உள்ளது.

 

இது போல சென்னை நகரத்தில் 2015 மார்ச் காலம் 51.9 புள்ளிகளாக இருந்த சராசரி வீட்டின் விலைக்கான மாத வருமானம் 2019 மார்ச் காலாண்டில் 58.6 புள்ளிகளாக உள்ளது. அனைத்து முக்கிய நகரங்களின் கூட்டு அடிப்படையில் 2015ம் ஆண்டு 56.1 புள்ளிகளாக இருந்த விகிதம், கடந்த 2019 மார்ச் காலாண்டில் 61.5 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

 

மாநில நகரங்களில் கடந்த இரண்டு வருடங்களில் வீட்டு மனை மதிப்பு 2 – 3 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் வீட்டு மனை வளர்ச்சி 4 சதவீதம் மேம்பட்டுள்ளது. வீட்டு மனை துறையில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும், நடுத்தர மக்களின் வருவாய் போதுமான அளவில் உயரவில்லை எனவும், மாத தவணையில் வீடுகளை வாங்குவதிலும் அவர்கள் சிரமப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.

 

கடந்த சில வருடங்களாக நாட்டின் பணவீக்கம் குறைவு மற்றும் வீட்டு மனை விலை(Real Estate) அதிகரிக்காமல் இருப்பதும் மக்களின் வீட்டு மனை வாங்குவதில் சாதகமாக இல்லை. ஒருவர் வீட்டு சொத்தினை வாங்குவதற்கான வருமான வருடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ரூ. 8,131 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ரூ. 8,131 கோடி 

TCS Net profit rises to Rs. 8,131 Crore – Q1FY20

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஐ.டி. துறையில் முதன்மை இடத்தில் அங்கம் வகிக்கும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(Tata Consultancy Services) நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளிவந்தது. ஜூன் மாத காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 38,172 கோடியாகவும், நிகர லாபம் 8,131 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முதலாம் காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம்(PBT) 10,638 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளிவந்த நிறுவனத்தின் நிகர லாபத்தை கடந்த வருடம் ஜூன் மாத காலாண்டுடன் ஒப்பிடும் போது 10.8 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் வருவாய் வளர்ச்சியும் 11.42 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

இதர வருமானமாக ரூ. 1,675 கோடி ரூபாய் மற்றும் தேய்மானமாக 817 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. லைப் சயின்ஸ்(Life Science) மற்றும் சுகாதார துறை இரண்டும் 18 சதவீத வருவாய் வளர்ச்சியை கொண்டுள்ளது. மற்ற அனைத்தும் இம்முறை ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.

 

டாலர் மூலமான(Currency terms) வருவாயிலும் டி.சி.எஸ். நிறுவனம் எதிர்பார்த்த அளவை முதலாம் காலாண்டில் பெறவில்லை. கடந்த ஜூன் காலாண்டில் சில்லரை மற்றும் நுகர்வோர் தொகுக்கப்பட்ட பொருட்களில் 10 சதவீத வளர்ச்சியை கண்டிருந்த நிலையில், இம்முறை 8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது.

 

வங்கி நிதி சேவை மற்றும் காப்பீடு(BFSI) துறையில் நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை. இந்த துறையில் கடந்த ஜூன் காலாண்டில் 11.6 சதவீதத்தை பெற்றிருந்த நிலையில், இம்முறை 9 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. இருப்பினும் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவோம் என நிறுவனத்தின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

 

நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு(Promters Holding) 72 சதவீதமாகவும், பங்கு அடமானம்(Pledging) சுமார் 3 சதவீதமாகவும் உள்ளது. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பில் நிறுவனர்கள் தங்களது பங்களிப்பை 65 சதவீதமாக குறைத்து கொள்ள வேண்டுமென சொல்லப்பட்டது. இதன் தாக்கம் வரும் நாட்களில் டி.சி.எஸ். நிறுவன பங்கின் விலையில் ஏற்படலாம்.

 

டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாயாகவும், 5 வருட சராசரி விற்பனை மற்றும் லாப வளர்ச்சி 12 மற்றும் 10 சதவீதம் முறையே காணப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை (12-07-2019) மற்றொரு பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா ?

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா ?

Economy Slow down – Is the Indian Economy Falling 

 

கடந்த சில காலாண்டுகளாக இந்திய சந்தை நிறுவனங்களின் வருவாய் குறைந்து வருவதும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மந்தமடைந்து வருவதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக இல்லை. குறிப்பாக வாகன துறை விற்பனை வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

 

எளிமையாக சொன்னால், நாட்டில் உள்ள வங்கிகளின் நிதி நிலைமை மோசமாகி உள்ளது மற்றும் அதனை சார்ந்து மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளின் வாராக்கடன் மற்றும் நிர்வாக குறைபாட்டால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள்(PSU Banks Merger) இணைக்கப்பட்டு வந்தன. இருப்பினும் வங்கிகளில் ஏற்படும் நிதி மோசடிகள்(Scam), வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் நடைபெற்று கொண்டிருக்கும் பணப்புழக்க நெருக்கடி ஆகியவை வரும் நாட்களில் தொழில்களை ஊக்குவிப்பதற்கு சாதகமாக இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வங்கிகளில் ஏற்பட்டுள்ள நிதி பிரச்னைகள் தீடீரென்று ஏற்பட்ட விஷயமல்ல. கடந்த காலங்களில் நடந்த மோசடிகள், இடர் மேலாண்மை குறைபாடு ஆகியவையே இன்று வங்கிகளில் வாராக்கடனாக வந்துள்ளன. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பும் இதனை வெளிப்படுத்தவே செய்கிறது.

 

வளர்ந்து வரும் சந்தையில் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருந்து வந்தாலும், கடந்த சில காலங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி சார்ந்த பிரச்னைகள் மற்றும் குழப்பங்கள் இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியை நோக்கி எடுத்து செல்கிறதா என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. உலகளவில் வர்த்தக போர், எல்லை பதற்றம், அணு ஒப்பந்தம் போன்ற காரணிகள் பொருளாதாரத்தை பாதிக்க நேரிட்டாலும், தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமை(Financial Crisis) விரைவாக சரி செய்யப்படுமா என்பது சந்தேகமே.

 

பட்ஜெட் அறிவிப்பில் துறை வாரியாக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிதி துறையை மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 70,000 ரூபாய் கோடி அளவில் மறுமூலதனம் செய்யப்படுவது, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில்(NBFC) ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலை களைவது என அரசு பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

 

நிதி பற்றாக்குறையை சரி செய்வதற்கான காரணியாக வங்கிகளின் நிதி நிலைமையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப்படாதது, வாகனத்துறையில் உள்ள சிக்கலை சரி செய்யாமல் மின்சார வாகனங்களுக்கான சலுகை, பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பை குறைப்பது மற்றும் பங்கு விலக்கல் இலக்கு(Disinvestment) ரூ. 1.05 லட்சம் கோடியாக நிர்ணயம் ஆகியவை நிதி சார்ந்த சிக்கலை தான் சொல்கிறது.

 

இதனிடையே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்களிப்பை குறைப்பது மற்றும் பங்குகளை திரும்ப பெறுவதற்கான(Buyback of Shares) முறையில் 20 சதவீத வரி ஆகியவை இந்திய பங்குச்சந்தைக்கு பாதகமாக அமைந்துள்ளன. அந்நிய முதலீட்டாளர்களின்(FPI) வரி கொள்கையிலும் அரசு சலுகை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பொருளாதாரத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தலாம்.

 

சாலை, உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சுகாதாரத்திற்கு திட்டங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் இவை முழுமையாக வளர்ச்சி பெறும் நிலையில் மட்டுமே அவை பொருளாதாரத்திற்கு ஊக்குவிக்கும். இல்லையெனில், சொல்லப்பட்ட விஷயங்கள் நடுத்தர மக்கள் வாழ்வில் எதிர்மறை நிகழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.  கல்வித்திறனை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் அவை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை உறுதிப்படுத்த வேண்டும்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதன் மூலமே, அவை தனிநபர் வருமானத்திலும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக அமையும். வரும் நாட்களில் அரசின் கொள்கைகளும், அதனை சார்ந்த திட்டங்களும் மக்களுக்கு பயன் தருமா என்பதை கவனத்தில் கொள்ளலாம். அதே வேளையில் 5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு($5 Trillion Economy) என்பதை விட, அத்தியாவசிய  தேவைகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைமை மக்களுக்கு ஏற்படாமல் இருந்தால் நல்லது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பொது பட்ஜெட் 2019 – அறிக்கை துளிகள்

பொது பட்ஜெட் 2019 – அறிக்கை துளிகள் 

Union Budget 2019 – Highlights

 

ஐந்து ட்ரில்லியன் டாலர்($5 Trillion Economy) பொருளாதார இலக்கு, கிராமப்புற வாழ்வை மேம்படுத்துதல், சாலை மற்றும் உட்கட்டமைப்பு சேவையை அதிகரித்தல் என பல இலக்குகள் நடப்பு மத்திய அரசினால் கூறப்பட்டுள்ளது. இதனை சார்ந்து நேற்று பட்ஜெட் தாக்கலும் முடிந்து விட்டது.

 

நேற்றைய பொது பட்ஜெட் 2019 – தாக்கலை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் வழங்கினார். நடப்பு 2019ம் வருடத்தின் இரண்டாவது மற்றும் இறுதி பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் பல அம்சங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நிறை, குறைகள் சமமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2013-14ம் நிதியாண்டில் 11வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit) கடந்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 2.1 சதவீதமாக உள்ளது. இது 2013-14ம் நிதியாண்டில் 5.6 சதவீதமாக இருந்துள்ளது.

 

கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடு(FDI) சுமார் 64.4 பில்லியன் டாலர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பில் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 3.3 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2013-14ம் நிதியாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது.

 

சாலை மற்றும் கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்த அதற்கான திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. வான் வழி போக்குவரத்தில் சேவையை சிறப்பாக செய்யவும், ரயில் சேவையை மேம்படுத்தவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில்வே உட்கட்டமைப்புக்காக ரூ. 50 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. இது 2018ம் ஆண்டு முதல் 2030 வரையிலான காலத்திற்கு எனவும், ரயில்வே துறையில் அரசு-தனியார் கூட்டு(PPP) ஒப்பந்தம் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும், இதற்காக நடப்பு நிதியாண்டில் தற்போது ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவை ஊக்குவிக்க தூர்தர்சன் மூலம் புதிய சேனல்(New Startup TV Channel) தொடங்கப்படும்.

 

2019-20ம் நிதியாண்டிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல்(Disinvestment) தொகை ரூ. 1.05 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி மூலம் அரசுக்கு 21 பைசா வருமானமாக கிடைத்துள்ளது. அதே வேளை செலவினங்களில் வரிகள் மூலம் 23 பைசாவை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டுள்ளன.

 

ஐந்து சதவீதம் பென்ஷன் திட்டத்திற்கும், 8 சதவீதம் மானியத்திற்கும் மற்றும் 9 சதவீத தொகை பாதுகாப்பு துறைக்கும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நேரடி வரி மூலம்(Direct Tax) அரசுக்கு 11.4 லட்சம் கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

 

திறந்த மலம் கழித்தல் இல்லா (Open defecation free) திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் கிராமங்கள் பயன்பெற்றுள்ளன. இதுவரை 95 சதவீத நகரங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 45,000க்கும் மேற்பட்ட பொது கழிப்பிடங்களின் இடஅமைவு கூகுள் மேப்பில்(Google map) பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கிராமப்புற வாழ்வை மேம்படுத்த அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குதலை உறுதி செய்வது, சாலைகளை இணைப்பது மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தொகையை உறுதி செய்வதென பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

 

முத்ரா(Mudra Loan Scheme) திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களில் 70 சதவீதம் பெண்களே. 7 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் ஓய்வு காலத்தை பாதுகாக்க குறைந்தபட்ச பென்ஷன் திட்டம், இளைஞர்களின் கல்வித்திறனை மேம்படுத்த திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது.

 

நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறவும், மாசில்லா நகரங்களை உருவாக்க மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் என பல விஷயங்கள் நேற்றைய பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பட்ஜெட் 2019க்கான நிறை மற்றும் குறைகளை அடுத்து வரும் பதிவில் காண்போம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019

India to achieve $ 5 trillion economy target – Economic Survey 2019

 

பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னர் பொருளாதார ஆய்வு நடைபெறுவது இயல்பு. சாலை வழிகாட்டி(Roadmap) போன்று பொருளாதார இலக்கை அடைவதற்கான வரைபடம் ஒன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதனை பொதுவாக அரசு சார்ந்த பொருளாதார ஆலோசகர் திட்டமிட்டு வழங்குவார்.

 

நடப்பு அரசின் முக்கிய இலக்காக வரும் 2024ம் வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் மதிப்பை அடைவது. இதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில், நடப்பு மத்திய அரசுக்கு பல சவாலான பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் காத்திருக்கின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார ஆலோசகர் சார்பில் அரசுக்கு முன்வைத்த சில பரிந்துரைகள் – சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது, வளர்ச்சியில் தொடர் கண்காணிப்பு ஆகியவை ஆகும். வட்டி விகிதத்தை சரியான தருணத்தில் குறைப்பதால், தொழில்கள் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

 

சரியான வளர்ச்சி 8 சதவீதமாகவும், பணவீக்கம் 4 சதவீதமாகவும் இருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பு(Nominal GDP growth) 12 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பெயரளவு பொருளாதார வளர்ச்சியின் படி, நடப்பு நிதி வருடத்தில் 190 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி இருக்கும் எனவும், இதுவே 2024-25ம் நிதியாண்டில் 375 ட்ரில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 75 ஆக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இலக்குகளுக்கான கணிப்புகள் இருப்பினும், 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை(5 Trillion Economy) அடைவது பெரும் சவாலாகவே இருக்கும். வரி மாற்றங்கள், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் மற்றும் தொழிலாளர் கொள்கையில் புதிய மாற்றங்கள் ஆகியவை மேம்படும் போது, இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும்.

 

தற்போது அரசுக்கு சவாலான காரியங்களாக பருவ மழை, வங்கிகளின் நிதி நிலைமை, எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம்(Iran Tension), வர்த்தக போர்(Trade war), விவசாயிகளுக்கான(Farmers) ஆதரவளிக்கும் கொள்கை ஆகியவை உள்ளன. சீன நாட்டின் வளர்ச்சிக்கு சேமிப்பு மற்றும் சரியான முதலீடு, ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியத்துவம் என பல காரணிகள் உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

நாட்டின் பட்ஜெட் தாக்கல் நாளை நடைபெறுகிறது – ஜூலை 5, 2019

நாட்டின் பட்ஜெட் தாக்கல் நாளை நடைபெறுகிறது  – ஜூலை 5, 2019

Budget India 2019 on July 5, 2019

 

சுதந்திர இந்தியாவின் 2019ம் ஆண்டுக்கான இரண்டாவது பட்ஜெட் தாக்கல் நாளை (ஜூலை 5) நடைபெற உள்ளது. நடப்பு வருடத்தில் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்(Interim Budget) செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் சொல்லப்பட்டிருந்தாலும், அவற்றிற்கான முழுமையான வடிவத்தை நாளைய பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்க்கலாம்.

 

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, நாடுகளிடையே நிலவும் வர்த்தக போர் மற்றும் எல்லை பதற்றம் ஆகியவற்றை எல்லாம் கடந்து, இந்திய பட்ஜெட் 2019 எவ்வாறு வெற்றி காணப்போகிறது என்பதில் பெரும்பாலான வல்லுனர்களின் கணிப்பு அதிகமாகியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த இடைக்கால பட்ஜெட்டில் பிரதம மந்திரியின் பென்ஷன் திட்டம், கிசான்(Kisan) திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு ஆதரவு தொகை, வருமான வரி தள்ளுபடிகள்(Tax Rebate) மற்றும் டிஜிட்டல் முறையில் கிராமங்களை இணைக்கும் திட்டம் என பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தது.

 

நாளை நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கலையும் சேர்த்து, கடந்த மூன்று பட்ஜெட்டிலும் வெவ்வேறான நிதி அமைச்சர்களை நம் நாடு கண்டுள்ளது. திரு. அருண் ஜெட்லீ அவர்களால் அறிவிக்கப்பட்ட பட்ஜெட், கடந்த இடைக்கால பட்ஜெட் 2019ல் பியூஸ் கோயல் அவர்களால் வழங்கப்பட்டது. இம்முறை திருமதி. நிர்மலா சீதாராமன்(Nirmala Seetharaman) நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

 

பட்ஜெட் தாக்கலில் எந்தவிதமான திட்டங்கள் மற்றும் சலுகைகள் கொண்டுவரப்பட்டாலும், தற்போது இருக்கும் சவாலாக வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரங்கள், நீர் ஆதார பிரச்சனை(Water Crisis), உற்பத்தி துறை வளர்ச்சி, விவசாயிகளுக்கான கொள்கை, வரி மாற்றங்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி நிலைமையை சரி செய்ய அரசு என்ன செய்ய போகிறது என்பதும் நாளை தெரிய வரும். ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் மந்தநிலை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான வரைமுறை, மின் உற்பத்தி மற்றும் வாகன துறையில் மாற்றங்கள் என பல விஷயங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த பட்ஜெட், அதனை பூர்த்தி செய்யுமா ?

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். டெலிகாம் மூடப்படுகிறதா ?

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். டெலிகாம் மூடப்படுகிறதா ?

Is BSNL Telecom in tamilnadu shutting down ?

 

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியால் குரல் வழி அழைப்புகளும்(Voice based Calls), இணைய சேவைகளும் மேம்பட்டு கொண்டிருக்கின்றன. முன்னர் அழைப்புகளுக்கும், இணைய சேவைகளுக்கும் தனித்தனியே கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின்(JIO) வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் ஒருமித்த கட்டணங்களை வசூலிக்க தொடங்கின.

 

இன்று தொலைத்தொடர்பு சேவையில் அளவில்லா அழைப்புகள்(Unlimited calls) மற்றும் இணைய சேவைகளுக்கு ஒரே கட்டணமாக பெறப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயும்(Arpu) நிறுவனத்திற்கு அதிகமாக கிடைத்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் முன்பை விட, தற்போது கூடுதல் கட்டணத்தை மறைமுகமாக செலுத்தி வருகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய சேவையில் நுகர்வோரின் தேவை ஒவ்வொரு நாளும் மாறுபட்டு கொண்டிருக்கும் நிலையில், அதனை சார்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் புதுமையை கொண்டு வரும் கட்டாயத்தில் உள்ளன. இதனை சமாளிக்க முடியாத நிறுவனங்கள் மற்றும் கடனில் தத்தளிக்கும் டெலிகாம் நிறுவனங்கள் சேவையை விட்டு விலகும் நிலையில் உள்ளது. ஏர்செல், யூனினார், வோடபோன்-ஐடியா(Vodafone-Idea) இணைப்பு போன்றவற்றை சொல்லலாம்.

 

போட்டியை சமாளிக்க முடியாத நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்(MTNL) மற்றும் பி.எஸ்.என்.எல்.(BSNL) நிறுவனமும் அடங்கியுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்பட உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

 

இதனை ஏற்கனவே மறுத்திருந்த தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘ பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிதி சிக்கலில் உள்ளன. கட்டண விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்(Tariff Competition), சேவையில் ஜியோவின் போட்டி ஆகியவற்றால் எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நிறுவனத்தை மூடும் எண்ணம் இல்லை ‘ என கூறியிருந்தார்.

 

கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க முடியாமல் உள்ளன. பி.எஸ்.என்.எல். டெலிகாமில் சுமார் 1.64 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தொலைத்தொடர்பு துறையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. இதன் சேவைகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சார்ந்த சேவை நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

ஜூன் மாத வாகனத்துறை விற்பனை – குறைவு

ஜூன் மாத வாகனத்துறை விற்பனை – குறைவு 

Automobile Sales in India – Down in June 2019

 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) உற்பத்தி துறை பெரும்பங்கு புரியாவிட்டாலும், உற்பத்தியில்(Manufacturing) வாகனத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த சில காலாண்டுகளாக வாகனத்துறையில் ஏற்பட்ட சுணக்கமே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வாகனத்துறையின் விற்பனை கணிசமாக குறைந்து வருவது நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. வாடிக்கையாளர்களின் வாங்கும் மனநிலை குறைந்ததால், வாகன விற்பனை குறைவு என சொல்லப்பட்டாலும் ஜி.எஸ்.டி.(GST) வரி விகிதங்கள் மற்றும் சமீபத்திய வாகன காப்பீடு பிரீமியம்(Vehicle Insurance) தான் இதன் விற்பனை வளர்ச்சியை பாதித்துள்ளது எனலாம்.

 

வாகனத்துறையில் உள்ள முக்கிய பெரு நிறுவனங்கள் வெளிநாட்டு ஏற்றுமதியில் வளர்ச்சியை கண்டிருந்தாலும், உள்நாட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன(Passenger Vehicle) பிரிவில் 16 சதவீதமும், இருசக்கர வாகன பிரிவில் 11 சதவீதமும் விற்பனை குறைவாக உள்ளது.

 

உள்நாட்டு கார் விற்பனையில் முக்கிய நிறுவனமான மாருதி சுசூகி(Maruti Suzuki Sales) ஜூன் மாத காலத்தில் 17 சதவீத வீழ்ச்சியை கொண்டுள்ளது. இதே போல ஹூண்டாய் நிறுவனம் 7 சதவீதமும், டாட்டா மோட்டார்ஸ் 27 சதவீதமும் மற்றும் இருசக்கர வாகனத்தில் ராயல் என்பீல்ட்(Royal Enfield) 24 சதவீதமும் விற்பனை குறைவை சந்தித்துள்ளது.

 

மஹிந்திரா நிறுவனம் மட்டும் பயணிகள் வாகன பிரிவில், ஜூன் மாத காலத்தில் 4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. டி.வி.எஸ். மோட்டார்ஸ் 8 சதவீதம் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனம் 19 சதவீத விற்பனை வீழ்ச்சியை கண்டிருந்தது.

 

நடப்பு வருடத்தில் மழைப்பொழிவு குறைவு என்ற கணிப்பினால் டிராக்டர் விற்பனையும் ஜூன் மாத காலத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த வாரத்தில் நடக்கவுள்ள பட்ஜெட் தாக்கலில்(Budget 2019) விவசாயம் சார்ந்த சலுகைகள் மற்றும் வாகனத்துறைக்கு ஜி.எஸ்.டி. வரி மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனை சார்ந்து தான் இந்திய வாகனத்துறை தற்போது வளர்ச்சியை காணும் நிலையில் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஜூலை மாத வட்டி விகிதங்கள் – 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஜூலை மாத வட்டி விகிதங்கள் – 2019

Small Savings Scheme Interest rates for the Period – July to September 2019

 

அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின்(Small Savings) ஜூலை – செப்டம்பர் மாத காலத்திற்கான வட்டி விகிதங்கள் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

 

கடந்த ஜனவரி-மார்ச் மற்றும் ஏப்ரல்-ஜூன் மாத கால வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில், தற்போது 10 புள்ளிகள் (0.10) என்ற அளவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen) ஐந்து வருட சேமிப்பு திட்டத்தில் 8.70 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 8.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏப்ரல்-மார்ச் காலாண்டில் 8 சதவீதமாக இருந்த தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), ஜூலை-செப்டம்பர் காலத்திற்கு 7.90 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. செல்வமகள்(Sukanya samriddhi) திட்டத்திலும் வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைவாக உள்ளது. முன்னர் 8.50 சதவீதமாக காணப்பட்ட செல்வமகள் திட்டம் தற்போது 8.40 சதவீதமாக அமையும்.

Small Savings Interest Rate july 2019

 

குறைக்கப்பட்ட அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலில்(July-Sep 2019) வரும். சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் மத்திய நிதி அமைச்சகத்தால்(Ministry of Finance) மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும்.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(EPF) கடந்த முறை 8.65 % என்று இருந்த வட்டி விகிதம் இம்முறையும் தொடரும் என தெரிகிறது. 2015-16ம் நிதியாண்டில் 8.8 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், கடந்த 2018-19ம் நிதியாண்டில் 8.65 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.

 

சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான சேமிப்பு உள்ளதாகவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆறு கோடிக்கும் மேலான சந்தாதாரர்கள் உள்ளதாக அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

உங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள் – இந்த வார நாணயம் விகடனில்

உங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள் – இந்த வார நாணயம் விகடனில் 

Five ways of Financial Planning – Financial Wheels

 

வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்கிறவர்கள் பணக்காரர்கள் அல்ல. சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு நிதித் தட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவர்கள் தான் உண்மையாகவே பணக்காரர்கள்(Rich Men). நிதித் தட்டுப்பாடு இல்லாமல் யாரால் வாழமுடியும் என்றால், நிதி சார்ந்த திட்டமிடலைச் சரியாகச் செய்கிறவர்கள் மட்டுமே எனச் சொல்ல முடியும். நிதித் திட்டமிடலின் ஐந்து நிதிச் சக்கரங்களை(Financial Wheels) பழக்கமாக்கிக்கொண்டவர்கள் எல்லோருமே பணக்காரர்கள்தான். இவர்களுக்கு நிதித் தட்டுப்பாடு எப்போதும் வருவதே இல்லை.

 

ஒவ்வொரும் பழகி கொள்ள வேண்டிய பஞ்ச நிதி சக்கரங்களை பற்றி இந்த வார நாணயம் விகடனில் (30-06-2019) நமது வர்த்தக மதுரையின் கட்டுரை வெளிவந்துள்ளது. இதழில் சொல்லப்பட்டுள்ள ஐந்து நிதி சக்கரங்களும் தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவசியம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள் “ என்ற  தலைப்பில்  கட்டுரையை வெளியிட்ட  நாணயம் விகடன் பொறுப்பாசிரியர் மற்றும்  அதன் நிதி சார்ந்த குழுவிற்கு வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 

இணைய வழி பார்க்க:  

 

https://www.vikatan.com/nanayamvikatan/2019-jul-07/recent-news/152349-five-ways-of-financial-planning.html

 

உங்களுக்கு அருகே உள்ள கடைகளில், இந்த வார நாணயம் விகடனை கேட்டு பெறலாம்.

 

இந்த பஞ்ச நிதிச் சக்கரங்களை உங்கள் விரல்நுனியில் சுழற்ற நீங்கள் தயாராகிவிட்டால் நீங்களும் பணக்காரர்தான்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com