Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – ஜனவரி 2020

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – ஜனவரி 2020

Small Savings Scheme Interest rates for the Period – January to March 2020

அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள், நடப்பு ஜனவரி மாதம் முதல் மார்ச் 2020 வரையிலான காலாண்டுக்குரியதாகும். சமீபத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இதனையடுத்து வட்டி விகிதத்திலும் அரசு முன்னெச்சரிக்கையாக இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜனவரி – மார்ச் 2020 காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், கடந்த அக்டோபர் – டிசம்பர் 2019 காலத்திலிருந்த வட்டி விகிதங்கள் தான் தற்போதும் சொல்லப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருட காலமாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

சேமிப்பு கணக்குக்கு(Savings Account), சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்பு(Senior Citizen Savings Scheme) திட்டத்தில் வட்டி விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஜனவரி 2019 காலத்தில் 8.7 சதவீதம் என சொல்லப்பட்டிருந்தது.

ஐந்து வருட ஆர்.டி.(RD) சேமிப்பு திட்டத்திற்கு 7.2 சதவீதமும், செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.4 சதவீதமும் சொல்லப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான(NSC) வட்டி விகிதம் 7.9 சதவீதம். இது கடந்த ஜனவரி 2019 காலாண்டில் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Small Savings interest rate January 2020

பொது வருங்கால வைப்பு நிதி(PPF) திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவீதம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 500 ரூபாய் சேமிப்பது அவசியம். இது ஒரு ஓய்வு கால திட்டமாகும். வருமான வரி சலுகையும் இத்திட்டத்திற்கு உண்டு. 

ஒரு வருட கால அளவிலான வைப்பு திட்டத்திற்கு 6.9 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டுள்ளது. இது 2 வருட மற்றும் 3 வருட திட்டங்களுக்கும் பொருந்தும். 5 வருட வைப்பு திட்டத்திற்கு மட்டும் 7.7 சதவீத வட்டி வழங்கப்படும். கிசான் விகாஸ் பத்திரம்(KVP) மற்றும் மாதாந்திர வருமான திட்டம்(Monthly Income Scheme)  போன்ற திட்டங்களுக்கு 7.6 சதவீதம் என்ற அளவில் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட வட்டி விகிதம் நடப்பு 2020 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை உள்ள காலத்திற்காகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

2019ம் ஆண்டில் பிரியாணிக்கு முதலிடம் – உணவு விநியோக சேவை

2019ம் ஆண்டில் பிரியாணிக்கு முதலிடம் – உணவு விநியோக சேவை 

Biryani tops the list in 2019 – Online Food Delivery Service

 

2014ம் ஆண்டில் பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு உணவு விநியோக சேவையில் துவங்கப்பட்ட நிறுவனம் தான், ‘ஸ்விக்கி’ (Swiggy). இரண்டு நபர்களால் தொடங்கப்பட்ட ஸ்விக்கி நிறுவனம், இணைய வழியாக உணவு சார்ந்த ஆர்டர்களை பெற்று விநியோக சேவையை புரிந்து வருகிறது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்று நாடு முழுவதும் 100க்கு மேற்பட்ட நகரங்களில் இதன் சேவையும், 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட உணவு ஸ்டார்ட்-அப்(Startup) நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. தனியார் முதலீடுகளின் மூலம் ஆரம்ப நிலையில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்ற இந்நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை பெறும் நிறுவனமாக மாறியது.

 

கடந்த 2019ம் ஆண்டில் உணவு விநியோக சேவையில், எந்த உணவு அதிகமாக தங்களின் சேவையில் இருந்தது மற்றும் சில வித்தியாசமான உணவு வகைகளையும் பட்டியலிட்டுள்ளது ஸ்விக்கி. ஸ்விக்கி தளத்தின் வாயிலாக அதிகமாக ஆர்டர்கள் செய்யப்பட்ட உணவு பட்டியலில், சிக்கன் பிரியாணி(Chicken Biryani) முதலிடத்தை பிடித்துள்ளது.

 

இரண்டாம் இடமாக மசாலா தோசையும், மூன்றாம் இடமாக பன்னீர் பட்டர் மசாலா, நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் சிக்கன் பிரைட் ரைஸ், மட்டன் பிரியாணி உள்ளது. 2019ம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 95 பிரியாணிகள் என்ற அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையான உணவு, புனே சிக்கன் பிரியாணி(Pune’s Chicken Sajuk Tup Biryani) வகை – இதன் விலை ரூ. 1,500 /-

 

குறைந்தபட்ச விலையாக மும்பையின் ‘சல் தந்நோ’ பிரியாணி ஒன்று 15 ரூபாய் என்ற விலையில் ஸ்விக்கி மூலம் விற்கப்பட்டுள்ளது. காலை உணவின் சிறப்பம்சமாக பொங்கல் மற்றும் இட்லி இருந்துள்ளது. அதிகாலை வேளையில், காலை 6 மணியளவில் கோவை நகரத்தில் பொங்கலும், இட்லியும் வழங்கப்பட்டுள்ளது.

 

பீட்ஸா வகைகளில் அன்னாசி பழம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அனைத்து வகை பீட்ஸா ஆர்டர்களின் போது, அன்னாசி பழத்தின் ஆர்டர்கள் 1.5 சதவீதம் மட்டுமே என சொல்லப்பட்டுள்ளது. 2019ம் வருடத்தில், ஸ்விக்கி தளத்தின் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட குலாப் ஜாமுன்(Gulab Jamun) எண்ணிக்கை மொத்தம் 17.69 லட்சம். மூன்று லட்சம் கேக்குகளும் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதலிடம் பிடிப்பது, ‘பிளாக் பாரஸ்ட்’ (Black Forest).

 

சுமார் 35,056 ரக பிரியாணி வகைகள் கடந்த வருடத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. சிக்கன் தம் பிரியாணி, மட்டன் பிரியாணி, போன்லெஸ் சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, சைவ பிரியாணி மற்றும் பன்னீர் பிரியாணி ஆகியவை வாடிக்கையாளர்களின் மனதில் முக்கிய இடங்களை பிடித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஸ்விக்கி கோ(Swiggy Go) சேவையில் முக்கிய ஆவணங்கள், சாவிகள், கைபேசிகள், லேப்டாப், வீட்டிலிருந்து சாப்பாடு பொட்டலங்கள், கண்ணாடிகள் என பல டெலிவரி செய்யப்பட்டுள்ளன. விசித்திரமாக அணுகப்பட்ட சேவைகள் டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலை, காற்றை சுவாசிக்கும் ஆக்ஸிஜன் மெஷின், கோயில் பிரசாதம், தலையில் வைக்கக்கூடிய விக்குகள்(Wigs) ஆகியவை ஆகும்.

 

ஸ்விக்கி மளிகை சாமான்கள் பிரிவில் அதிகமாக டெலிவரி செய்யப்பட்ட பலசரக்கு – பெரிய வெங்காயம், உருளை கிழங்கு மற்றும் வெண்டைக்காய். எதிர்பாராது கேட்கப்பட்ட பொருட்கள் – குடிநீர் அடி பம்பு, வளையல் மற்றும் வாடகை ரசீது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

      

மத்திய அரசின் 102 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ?

மத்திய அரசின் 102 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ?

Rs. 102 Lakh Crore Investment Plan – How much allocation for department wise ?

 

கடந்த செவ்வாய் கிழமை அன்று (31-12-2019) பேசிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நாட்டின் உட்கட்டமைப்புக்காக 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த முதலீடு அடுத்த ஐந்து வருடத்திற்கான முதலீட்டு திட்டம் எனவும் கூறியுள்ளார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முதலீடு செய்யப்பட உள்ள ரூ. 102.5 லட்சம் கோடி மூலம் ஆற்றல் சேமிப்பு(Energy), சாலை மேம்பாடு(Roadways), ரயில் போக்குவரத்து(Railways), வீட்டு வசதி மற்றும் நீர்ப்பாசன(Irrigation) மேம்பாட்டிற்கு பயன்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் நீளத்தை அதிகரிப்பதும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, அனைத்து வீடுகளிலும் குடிநீர் தேவையை உறுதி செய்வது என பல திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன.

 

மின் உற்பத்தியை அதிகரிப்பது, நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற பார்வையையும் அரசு முன்வைத்துள்ளது. நாட்டின் அடுத்த இலக்கான 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்($5 Trillion Economy) பொருளாதாரம் என்ற நிலையை அடைய உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அது சாத்தியம். இந்நிலையில் ஒவ்வொரு துறைக்குமான முதலீட்டு பட்ஜெட்டை பற்றியும் மத்திய அரசு கூறியுள்ளது.

 

போக்குவரத்து துறையில் சாலை மேம்பாட்டிற்கு 19.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 13.7 லட்சம் கோடி ரூபாயும், விமான துறைக்கு ரூ. 1.40 லட்சம் கோடி மற்றும் துறைமுகத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது.

 

ஆற்றல் சேமிப்பை(Energy) பொறுத்தவரை மின்சாரத்திற்கு(Power) 11.8 லட்சம் கோடி ரூபாய், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ரூ. 9.3 லட்சம் கோடி, அணு 1.5 லட்சம் கோடி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு 1.9 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கென முதலீடும் கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்புக்கு 4.1 லட்சம் கோடி ரூபாயும், கிராமப்புறங்களில் குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய ரூ. 3.6 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுக்கு 16.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

 

விவசாய துறைக்கு 8 லட்சம் கோடி ரூபாயும், சமூக உட்கட்டமைப்புக்கு (கல்வி, விளையாட்டு, உடல்நலம், சுற்றுலா துறை) ரூ. 3 லட்சம் கோடி, தொழிற்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2025ம் ஆண்டின் முக்கிய இலக்காக 2 லட்சம் கிலோமீட்டர் சாலையும், 750 ரயில் நிலையங்கள் வளர்ச்சிக்காக தனியார் மயமாக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இணைய வேகம் மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள 35 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவது, 619 கிகா வாட் மின் உற்பத்தி, நாட்டில் உள்ள சாலைகளில் 10 சதவீதத்தை விரைவுவழி பாதைகளாக(Expressways) மாற்றுவது என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் காலங்களில் அரசின் பட்ஜெட் அறிவிப்பு, அதனை சார்ந்த நிதி பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் காலாண்டு பொருளாதார வளர்ச்சி எண்கள் முக்கியத்துவம் பெறும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள்

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள் 

Simple Investment Thoughts for the year T20 – 2020

 

2019ம் வருடத்தின் கடைசி நாளை இன்று அடைந்தாயிற்று. 2020ம் ஆண்டினை வரவேற்கத்தக்க வகையில் பல கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெறும். தமிழர்களின் புத்தாண்டு தைத்திருநாள் தான் எனினும், புதிய கொள்கைகளையும், பழக்கங்களையும் கடைபிடிக்க ஆங்கில ஆண்டு ஒரு உந்துதல் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாம் ஜனவரி 1ம் தேதி நினைத்த ஒரு விஷயத்தை பழக்கமாக மாற்றுகிறோமோ, இல்லையோ – ஆனால் அதற்கான முயற்சியை எடுத்தாலே பாதி வெற்றி பெற்றது போல் தான். அது போல சில எளிய முதலீட்டு சிந்தனைகளை இங்கே கொடுத்துள்ளோம். அவை அனைவரும் கடைபிடிக்க கூடிய வகையில் அமையும்.

 

T20 ஆண்டுக்கான முதலீட்டு சிந்தனைகள்…

 

  • மரம் நடுங்கள். அவை அடுத்த 20 வருடங்களுக்குரியது, பணத்தின் மீது எவ்வாறு கூட்டு வட்டி செயல்படுகிறதோ, அதனை போல மரத்தின் மீதும் இயற்கை உந்துதல் எப்போதும் இருக்கும். நாம் செய்ய வேண்டியது, மரம் நட்டு அதனை பராமரிப்பது தான். (SIP Investment போல !)

 

  • வங்கியில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை எப்போதும் சரியான அளவில் பராமரிக்க பழகுங்கள். இந்த பழக்கம் பின்னாளில் நமது குடும்பத்தின் நிதி நிலையிலும்(Asset to Liability) பிரதிபலிக்கும். அதிக பணத்தையும், ஆடம்பரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் சிறு தொகையை பராமரித்தாலே போதும்.

 

  • உங்களின் வருமானம் மாத சம்பளமாக இருக்கலாம். இல்லையெனில் தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதனை ஒரு மணிநேர கணக்கில்(Earnings per Hour) பார்க்க பழகுங்கள். உதாரணத்திற்கு, தனிநபர் ஒருவரின் மாத சம்பளம் ரூ. 30,000 எனில், அவருடைய ஒரு நாள் சம்பளம் ரூ. 1000 மற்றும் ஒரு மணிநேர சம்பளம் ரூ. 125 /- (8 மணிநேர வேலை எனும் போது). அதற்காக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களிடம் செலவிடக்கூடிய நேரங்களை தவறவிடாதீர்கள். அதற்கும் ஒரு நன்மதிப்பு உண்டு.

 

  • சாலையில் யாராவது உங்களிடம் உதவி கேட்டு நின்றால், அவர்களுக்கு பணம் கொடுக்க முதலில் முன்வராதீர்கள். அதற்கு மாற்றாக அவர்களுடைய கதையை (பிரச்சனைகள்) சில நிமிடங்கள் கேட்க துவங்குங்கள். உண்மையில் அவருடைய பிரச்சனை பணம் மட்டுமில்லாமல், வேறு ஏதாவது விஷயமாக இருக்கலாம். அது அடிப்படை கல்வியோ, மருத்துவமோ, ஆதரவோ அல்லது நல்ல உணவாக இருக்கலாம்.

 

  • நிதி சார்ந்த விஷயங்களில் நண்பர்கள் குழுவை (Build a Financial Relationship) ஏற்படுத்துங்கள். வெறும் மால்களிலும், திரையரங்குகளிலும் செலவழிப்பது மட்டுமே நம் நோக்கமாக இருக்க கூடாது. மாறாக மால்களிலும், அரங்கத்தின் பின் உள்ள தொழில் தன்மையையும் நாம் கற்று கொள்ள வேண்டும். நான்கு நண்பர்கள் சேர்ந்தால், ஆரோக்கியமான நிதி விஷயங்களை கலந்துரையாட வேண்டும். பணம் சார்ந்த விஷயத்தை பேச பழக வேண்டும். அதனை சார்ந்த தகவல்களையும் பரிமாறி கொள்ள வேண்டும். (உதாரணமாக நாளிதழ்களில் வரும் வணிக செய்திகள் மற்றும் குடும்ப பட்ஜெட் சார்ந்து)

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • பெரிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். ஆனால் சிறு சிறு இலக்குகளுக்கு (Goals) முக்கியத்துவம் கொடுங்கள். சிறு இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு, உங்களுக்கு நீங்களே ஒரு சிறிய அளவிலான பரிசை கொடுத்து பழகுங்கள். (உதாரணமாக, நான் இன்று இந்த ஐந்து வேலைகளை முடிக்க கற்று கொள்வேன். அதனை அடைந்து பரிசையும் பெறுவேன்)

 

  • தோல்வி அடைய தயங்காதீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதில் பெரிய பாடங்களை கற்று கொள்ள வாய்ப்பில்லை. வெறும் பாராட்டுகளை மட்டுமே பெறுவீர்கள். தோல்வியில் மட்டுமே விமர்சனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை (New Opportunities) கண்டறிய முடியும். உங்களுக்கு தேவை, புதிய வாய்ப்புகளே – கவலை அல்ல…

அனைவருக்கும் 2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… T20 Year Wishes

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

அடுத்த ஐந்து வருடத்திற்கான அற்புதமான முதலீட்டு வாய்ப்புகள் – 2020

அடுத்த ஐந்து வருடத்திற்கான அற்புதமான முதலீட்டு வாய்ப்புகள் – 2020

Good Investment Opportunities for the next Five years – T20 Year

சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே, அதற்கான பலனை பெற முடியும். வெறுமென நம் வீட்டின் ஏதாவது ஒரு மூளையில், தலையணைக்கு அடியில் பணத்தை சேர்த்து வைப்பது வெறும் சேமிப்பாக தான் இருக்கும். அதனால் நமக்கு ஒரு வார அல்லது ஒரு மாத பயன் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனை நீங்கள் நீண்ட நாட்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பதில் எந்த பலனும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பணவீக்கம்(Inflation) என்ற சொல்லை நீங்கள் அறிந்து கொண்டால், இந்த பொருளாதார உலகினை வெல்லலாம். நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்து வைப்பது சேமிப்பு, அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதும் சேமிப்பு(Savings) தான். அதனை குறுகிய காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், முதலீடு(Investment) என்னும் சாதனம் வளர கூடியது. நீண்ட காலத்தில் கூட்டு வட்டி என்னும் பணக்கார விதியை எடுத்து கொண்டு செல்லும் இந்த முதலீட்டு சாதனத்திற்கு உண்டு.

அதனால் நம்மில் பெரும்பாலோர் முதலீட்டிற்கும், சேமிப்புக்கும்(Savings vs Investing) வித்தியாசம் தெரியாமல் போன்சி திட்டங்களில் பணத்தை போட்டு ஏமாந்து விடுகின்றனர். மேலும் அதனை ஒரு முதலீடு என தவறாக கருதுகின்றனர். எந்தவொரு முதலீட்டுக்கும் வளர்வதற்கு கால அவகாசம் தேவை. நாம் ஒரு தொழிலை ஆரம்பித்தவுடன், ‘ அண்ணாமலை ‘ ஆகி விட முடியாது. அந்த தொழில் சிறப்பாக வளர்வதற்கான கால அவகாசம் தேவை. நாம் தொடர்ச்சியாக தொழிலை செய்ய வேண்டும், குறைகள் இருப்பினும் அதனை திருத்தி செய்ய வேண்டும். பின்பு தான் அதன் முதலீடு வளரும். அதனால் தான் தொழில் புரிபவர்கள், தாங்கள் செய்த முதலீட்டை ஐந்து வருடங்களுக்கு பிறகு தவணை முறையில் பெறுகின்றனர்.

இதனை போல தான் ரியல் எஸ்டேட் துறைக்கும், நீங்கள் வாங்கிய வீட்டையோ அல்லது நிலத்தையோ உடனடியாக விற்க போவதில்லை. ரியல் எஸ்டேட் விளம்பரம் வேண்டுமானால், உடனடியாக இந்த விலைக்கு போகும் என கதை கட்டலாம். ஆனால் எதார்த்த நிலை, அந்த முதலீடு வளர்வதற்கு நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இது தான் முதலீட்டின் சாராம்சம்.

அடுத்த ஐந்து வருடங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம். ஐந்து வருட காலம் என்ற அளவு நிர்ணயிக்கப்பட்டதின் அவசியம், நீங்கள் உங்கள் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவற்கான காலம் எனலாம். ஒன்றாம் வகுப்பு சேர்ந்தவுடன் ஐ.ஏ.எஸ்.(IAS) ஆகி விட முடியாது. கற்க வேண்டும், கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

முதலீட்டு கொள்கைக்கு மூன்று விதமான பிரிவுகளாக நாம் வகைப்படுத்தலாம். முதலாவதாக குறைந்த ரிஸ்க் தன்மை உடையவர்கள் (ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள்), இரண்டாவதாக நடுத்தர ரிஸ்க் தன்மையை எடுக்க கூடியவர்கள் மற்றும் தீவிரமாக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய கூடியவர்கள் என மூன்று வகைகளாக பிரித்துள்ளோம். நீங்கள் எந்த மனப்பான்மை உடையவர்கள் என்பதை பொறுத்து முதலீட்டு தேர்வுகள் மாறுபடும்.

அதற்காக இளம்வயதினர் ரிஸ்க் எடுக்காமல் இருக்க கூடாது. வருவாய் ஈட்டுவதற்கான காலம் அதிகமாக இருப்பதால், இவர்கள் குறைந்தபட்சம் நடுத்தர ரிஸ்க் தன்மையை தேர்வு செய்வது சிறந்தது. இல்லையென்றால், நீண்ட கால பலனை பெற முடியாது. நம் நாட்டில், பெரும்பாலான இளைஞர்கள் குறைந்த ரிஸ்க் தன்மையை மட்டுமே கொண்டிருக்கிறார்கள் என்பது பாதகமான விஷயம். இல்லையெனில், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ஏதாவது ஏமாற்று பேர்வழிகளிடம் மாட்டி கொள்கின்றனர். 

வயதானவர்கள் முடிந்தவரை அதிக ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவர்கள் குறைந்த அளவிலான ரிஸ்க் முதலீட்டு சாதனங்களை தேர்வு செய்து தங்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக வாழ்வது நன்று. செல்வ வளம்(Wealth) படைத்த வயதானவர்கள் தங்கள் பலத்தை பொறுத்து ரிஸ்க் தன்மையை மாற்றி கொள்ளலாம்.

Investment opportunities 2020 India

முதலீட்டு காலத்தை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலமாக பிரித்துள்ளோம். குறுகிய காலமாக மூன்று வருடத்திற்கு குறைவாக, நடுத்தர காலம் எனில் மூன்று முதல் ஏழு வருடங்களுக்குள் மற்றும் நீண்ட காலமாக 7 வருடத்திற்கு மேல் என சொல்லியுள்ளோம். குறைந்த அளவிலான ரிஸ்க் உடையவர்கள்(Conservative) அல்லது ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் குறுகிய கால தேவைக்கு அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், தங்க பண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவற்றில் தங்கம் சார்ந்த எந்தவொரு சாதனமும் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது என்பதை மறக்க வேண்டும். பங்குச்சந்தையுடன் ஒப்பிடும் போது, தங்கம் பெரிய ஏற்ற இறக்கத்திற்கு உட்படாது. அதே வேளையில் அவற்றின் வருவாயும் குறைவாக தான் இருக்கும். நீண்ட காலம் எனில், பணவீக்கத்தை தாண்டி வருவாயை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

குறுகிய கால முதலீட்டிற்கு, நடுத்தர ரிஸ்க்(Moderate) எடுக்க கூடியவர்கள் லிக்விட் பண்டுகள் மற்றும் கால அளவு கொண்ட பண்டுகளை (Duration Based) தேர்ந்தெடுக்கலாம். அதிக ரிஸ்க் எடுக்க கூடியவர்கள் கால அளவு மற்றும் கிரெடிட் ரிஸ்க் பண்டுகளை(Credit Risk Funds) தேர்வு செய்யலாம்.

இது போல மற்ற காலங்களுக்கும், முதலீட்டாளர்களின் மனநிலையை பொறுத்து முதலீட்டு வாய்ப்புகளை கொடுத்துள்ளோம். முதலீடு செய்யும் முன், உங்களுக்கான தேவை அல்லது இலக்கை நிர்ணயித்து முதலீடு செய்ய பழகுங்கள். வெறுமனே என்னிடம் நிறைய பணம் உள்ளது, நான் முதலீடு செய்கிறேன் என செய்ய வேண்டாம். அவ்வாறான சூழ்நிலை இருந்தால், நீங்கள் மற்றவர்களுக்கு உதவ முன் வரலாம். மற்றவர்களின் தொழிலை ஊக்குவிப்பதற்கு பயன்படலாம். அதனால் முதலீட்டு இலக்கு என்பது எப்போதும் அவசியம்.

முதலீடு என்பது பொதுவாக ரிஸ்க் தன்மையை கொண்டது. அதனால் தான் வளரக்கூடியது. நான் செய்த முதலீடு ஏன் இறக்கம் காண்கிறது என கேட்க கூடாது. தேவைக்கான காலத்தை பொறுத்து முதலீட்டை தேர்வு செய்யுங்கள். பி.எஸ்.சி.(B.Sc) மூன்று வருடங்கள், பி.இ.(B.E) நான்கு வருடங்கள் மற்றும் மருத்துவம் ஐந்து வருடங்கள்… புரிந்து கொள்ளுங்கள்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இங்கே ரியல் எஸ்டேட் துறை பற்றி சொல்லப்படவில்லை என்றாலும், இது போன்ற முதலீடுகள் நடுத்தர காலம் முதல் நீண்ட காலத்தை சார்ந்தவை. உங்களுக்கு அந்த தொழிலை புரிந்து கொள்ள முடியும் என்றால் மட்டும் முதலீடு செய்யுங்கள். இல்லையெனில், முதலீட்டு பரவாலாக்கத்தை ஏற்படுத்துங்கள். அதாவது ரியல் எஸ்டேட் கொஞ்சம், சிறிதளவு தங்கம், பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Funds) பகுதியாக என பிரித்து முதலீடு செய்யலாம்.

உங்களுக்கு முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்துவது சிரமமாக இருப்பின், பரஸ்பர நிதிகள் வழங்கும் அஸெட் அலோகேஷன் பண்டுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஏனெனில், அவர்கள் இதனை தான் செய்கிறார்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரலாறு காணாத வங்கி மோசடிகள் – உங்கள் பணமும் இருந்திருக்கலாம்

வரலாறு காணாத வங்கி மோசடிகள் – உங்கள் பணமும் இருந்திருக்கலாம் 

All Time High in Bank Frauds of worth Rs. 2.63 Lakh Crore  – H1: 2019 – 20 – RBI

நம் நாட்டில் உள்ள நிதி துறையில் மக்களின் நம்பிக்கையாக விளங்குவது வங்கிகளும், அஞ்சலகங்களும் தான். நாம் வாங்கக்கூடிய மாத சம்பளமாக இருந்தாலும், சிறு சேமிப்பாக இருந்தாலும், இல்லையெனில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பண பரிவர்த்தனை செய்வதாக இருந்தாலும் நாம் மேலே சொன்ன இரண்டு பிரிவுகளை தான் தேர்ந்தெடுப்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அஞ்சலகத்தை விட வங்கியில் கூடுதல் சேவை வழங்கப்படுவதால், நாம் பெரும்பாலும் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். நகைக்கடன், மாத வருவாய், ஓய்வூதியம், பிக்சட் டெபாசிட்(Fixed Deposit), ஏ.டி.எம்.(ATM) சேவை, காசோலை பரிவர்த்தனை, இணைய வழி பரிவர்த்தனை என பல தேவைகளுக்கு நாம் வங்கிகளை நம்பியுள்ளோம்.

இன்று நாம் பண பரிவர்த்தனை சார்ந்த பல செயலிகளை கண்டிருந்தாலும், நம்மில் பலர் வங்கிகளில் கிடைக்கப்பெறும் செயலிகளை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் நமக்கு வங்கியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக. இருப்பினும், நம் நாட்டை பொறுத்தவரை இணைய வழி பரிமாற்றத்திற்கான பாதுகாப்பு முழுவதுமாக அமைக்கப்படவில்லை எனலாம். குறிப்பிடத்தக்க பாதுகாப்பை தாண்டி, ஏதேனும் மோசடிகள்(Bank Frauds) நடந்தாலும் அதற்கான உடனடி தீர்வுகள் மற்றும் குறைதீர்க்கும் மையங்கள் இங்கு பெரிதாக இல்லை.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டில் உள்ள வங்கிகளில் ஏற்பட்டுள்ள மோசடிகளின் மதிப்பு ரூ. 2.63 லட்சம் கோடி என பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் நடைபெற்ற மோசடிகளின் எண்ணிக்கை மட்டும் 4,412 மற்றும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.13 லட்சம் கோடி ஆகும்.

Bank Frauds H1FY20 RBI Report

கடந்த நிதியாண்டில் 6,801 வங்கி மோசடிகள் நடைபெற்று இருந்தன. ஆனால் அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 71,540 கோடி மட்டுமே. தற்போது சொல்லப்பட்டுள்ள வங்கி மோசடிகளின் மதிப்பு வரலாறு காணாத புதிய உச்சத்தை கண்டுள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 398 வழக்குகள் 50 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகள் என பாரத ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய்க்கு மேலான வழக்குகள் 21 எனவும், அவற்றின் மதிப்பு 44,951 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு காரணமாக சொல்லப்படுவது, ‘ மோசடி நடந்த தேதிக்கும், அதனை கண்டறிய தேவைப்பட்ட நாளுக்குமான இடைவெளியே. அதாவது கால தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது ‘. வங்கி மோசடிகள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் தான் அதிகமாக காணப்பட்டுள்ளது. 85 – 90 சதவீத மோசடிகள் பொதுத்துறை வங்கிகளிலும், 10 சதவீத மோசடிகள் தனியார் வங்கிகளிலும் மற்றும் இதர வெளிநாட்டு வங்கிகளிலும் நடைபெற்றுள்ளது. இதர பிரிவுகளில் பேமெண்ட் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளும் அடங்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

150 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத சாதனை, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி

150 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத சாதனை, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி

First time in 150 years on Zero Fatality Rate in Indian Railways

 

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் நிறுவனமான இந்தியன் ரயில்வே(Indian Railways), உலகின் நான்காவது  பெரிய ரயில் நிறுவனமாகும். 1853ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்திய ரயில்வே துறை தினசரி 20,000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளையும், 13 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்திய ரயில்வே பாதையின் நீளம் சுமார் 67,300 கிலோ மீட்டர் மற்றும் மொத்த தடத்தின் நீளம் சுமார் 1,21,400 கிலோமீட்டர் (மார்ச் 2017 நிலவரப்படி). 2018-19ம் நிதியாண்டின் முடிவில் ரயில்வே துறையின் வருவாய் 1.97 லட்சம் கோடி ரூபாய். சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 6000 கோடி ரூபாய். 

 

18 மண்டலங்களை கொண்டுள்ள இந்திய ரயில்வே துறை CRIS, RITES, CONCOR, IRCON, IRCTC, RVNL, IRFC, NHSRCL, DFCCI, RAILTEL மற்றும் MVRC ஆகிய 10 துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியது. இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக இயக்கப்பட்ட ரயில், தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

 

ரயில் பயணம் அனைவருக்கும் சுகமானதாக இருந்தாலும், தாமதம் மற்றும் கூட்ட நெரிசல் ஆகியவை பெரும்பாலானவர்களை பயணங்களில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அது போல எதிர்பாராத ரயில் விபத்துகளும், பெருமளவிலான உயிர்சேதத்தை ஏற்படுத்தும். 

 

1990-1995 கால கட்டங்களில் ரயில் விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக 500 பேர் இறக்க நேரிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் இறப்பு விகிதங்கள் குறைவாக இருந்தாலும், அது ஒரு ஆபத்தான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ரயில் விபத்துகளால் உயிர் சேதம் மட்டுமில்லாமல், அதற்கான இழப்பீடு தொகையும் அரசாங்கத்தால் அதிகளவில் செலவு செய்யப்பட்டது.

 

இதனை காரணமாக கொண்டு, ரயில்வே துறையில் சமீப வருடங்களாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கான காப்பீட்டை(Travel Insurance) பெறும் வகையிலும் வசதி செய்யப்பட்டது. இதனால், பயணிகளின் பயணமும் காப்பீடு தொகையால் பாதுகாக்கப்பட்டது. சிக்னல் கோளாறுகள், விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிகைகள் என பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் ரயில்வே துறையின் கவனம் ஈர்க்கப்பட்டது.

 

2017-18ம் நிதியாண்டில் 73 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2018-19ம் ஆண்டில் 37 ஆக குறைந்தது. அதாவது 40 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை விட, 94 சதவீத குறைபாடுகள் சொல்லப்பட்ட காலத்தில் தீர்க்கப்பட்டன. 1980 கால கட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்திருந்த நிலையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் 59 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன.

 

இதனை விட ஆச்சர்யம் என்னவென்றால், நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதுவரை எந்த ஒரு ரயில் விபத்துகளிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்திய ரயில்வே வரலாற்றில் இது போன்ற நிகழ்வு, முதன்முறையாக தற்போது நடந்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் பயணிகளுக்கான சுகமான மற்றும் பாதுகாப்பான பயணமாக, இந்திய ரயில் போக்குவரத்து அமையும் என எதிர்பார்க்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மலைப்பிரதேச ரயில் பயணங்களை மகிழ்விக்க ஏற்கனவே விஸ்டாடோம்(Vistadome Coach) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் விமான சேவை தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில் சேவைகளும் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன. இது வெற்றி பெற்றதையடுத்து, இந்திய ரயில்வே துறை உலகளவிலான மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.

 

நாடு முழுவதும் மின்சார சேவை(Electricity) மற்றும் இரட்டை பாதை வேலைகள் முடியும் தருவாயில், ரயில் பயணங்கள் பெருமளவிலான நகர்ப்புற சாலை நெரிசல்களை குறைக்கும் எனலாம். உயர்ரக சேவையில் கட்டணம் அதிகம் இருக்கலாம் என்பதனை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், குறுகிய தூரங்களுக்கான ரயில் சேவையும் சலுகை கட்டணத்தில் ரயில் பயணிகளை மகிழ்விக்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

    

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

Deadline for PAN – Aadhaar Linking – 31, December, 2019

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி, 2019 என வருமான வரி அலுவலகம் கூறியுள்ளது. வருமான வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் – ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட தேதிக்குள், இணைக்காத பட்சத்தில் வரும் நாட்களில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. மேலும் நாம் வாங்கிய பான் கார்டு(PAN) எண்ணும் செயலிழக்கப்படும். இந்த இணைப்பை இந்திய குடிமக்கள் (பான் இருப்பு) அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை, பட்ஜெட் தாக்கலில் பான் எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை(Aadhaar) கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டிருந்தது. பின்பு பான் – ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு 30, செப்டம்பர், 2019 என சொல்லப்பட்டது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது வரும் 31, டிசம்பர், 2019 என நிர்ணயிக்கப்பட்டது.

ஆதார் – பான் எண் இணைப்பை இரண்டு வகைகளில் கையாளலாம். முதல் முறை, வருமான வரி தாக்கல் இணைய தளத்திற்கு சென்று பதிவிடுவது. மற்றொன்று குறுஞ்செய்தி (SMS) வாயிலாக இந்த இணைப்பை ஏற்படுத்தலாம். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

பான் – ஆதார் எண் இணைப்பு – இரு முறைகள்(PAN – Aadhaar Linking) 

மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து பான் – ஆதார் எண் இணைப்பு வழிமுறையை பின்பற்றுங்கள்.

பான் – ஆதார் எண் இணைப்பதில் சில நபர்களுக்கு விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆதார் மற்றும் பான் எண்ணில், உங்கள் பெயர், பிறந்த காலம் மாறுபட்டிருந்தால் உடனடியாக தேவையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதன் பின்பு, மறு இணைப்பை ஏற்படுத்த முயற்சியுங்கள். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள்

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் 

Recent Changes in Public Provident Fund(PPF) – 2019

பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, சிறு சேமிப்பு திட்டத்தின் அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் பி.எப். கணக்கிற்கு மாற்றாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் சட்டத்தில் பி.பி.எப். க்கான சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப்.(Public Provident Fund) கணக்கு என்பது 15 வருட கால சேமிப்பு திட்டமாகும். தேவைப்பட்டால், 15 வருட காலத்திற்கு பிறகு 5 வருட கால அளவில் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.. ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை. பி.பி.எப். முதலீட்டிற்கு வருமான வரி சலுகையும் உண்டு.

கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெறுவதென்றால், இதற்கு முன்பு 7 வருடங்களுக்கு பிறகு மட்டுமே முடியும். ஆனால் தற்போது 5 வருடங்கள் (நிதியாண்டுகள்) முடிந்தவுடன் பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு படிவம் 5 ஐ நிரப்பி, பணத்தை கோரலாம்.

முன்னர் 7 வருடங்களுக்கு பிறகு, 25 சதவீத தொகையை மட்டுமே எடுக்க கூடிய நிலை இருந்தது. தற்போது 5 நிதியாண்டுகளுக்கு பின்னர் வரவில் உள்ள 50 சதவீத தொகையை பெறலாம். பணத்தை பெறுவதற்கான காரணங்கள் கடுமையான நோய்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்க்கான சிகிச்சை தேவைக்காக, உயர்கல்வி தேவை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியராக செல்லும் பட்சத்தில் என சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப். கணக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI) முதலீடு செய்ய முடியாது என்ற சட்டத்தை சற்று மாற்றி, கணக்கை துவங்கும் போது இந்திய குடிமக்களாக இருந்து பின்னாளில் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தாலும், முதிர்வு காலம் முடியும் வரை, முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது குழந்தைகளின் பெயரிலும்(Minor Child) பி.பி.எப். கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்கும்(Joint Account) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை, கணக்கு வைத்திருப்பவருக்கு எந்தவொரு கடன் அல்லது நிதி தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது ஆணையின் கீழ் இணைக்கப்படாது.

பி.பி.எப். கணக்கில் உள்ள தொகையை கொண்டு, கடன் வசதியும் பெறலாம். முன்னர், கடனுக்கான வட்டி விகிதம் பி.பி.எப். கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது இது ஒரு சதவீதமாக (பி.பி.எப். வட்டி மற்றும் கூடுதலாக 1 %) சொல்லப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வு காலத்திற்கான(Retirment Savings) திட்டமாகும். இதனை சரியாக திட்டமிட்டு, நீண்ட காலத்தில் சேமித்து வரும் பட்சத்தில் நமக்கான ஓய்வு கால கார்பஸ் தொகை பலனளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com