Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

வாகனத்துறை 2019 மறு பார்வை – எச்சரிக்கை தேவை

வாகனத்துறை 2019 மறு பார்வை – எச்சரிக்கை தேவை 

How was the Automobile Sector in India ? – December 2019 Review

இந்திய வாகனத்துறை கடந்த 2019ம் வருடம் முழுவதும் சுணக்கத்தில் தான் இருந்தது. பி.எஸ். 6 (Bharat Stage VI) சுழற்சி முறைக்கான விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1, 2020 முதல் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே நாட்டில் உள்ள அனைத்து வாகன உற்பத்தியாளர்களும், வரும் 2020-21ம் நிதியாண்டு முதல்  பி.எஸ். 6 ரக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏப்ரல் 1, 2020 முதல் பி.எஸ். 6 ரக வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் மற்றும் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனத்துறை கடந்த டிசம்பர் மாதத்திலும் விற்பனையில் தொய்வான நிலையை தான் எட்டியது.

இருப்பினும், இந்த தேக்கநிலை வரும் காலங்களில் சரி செய்யப்படலாம். வரும் காலங்களில் மின்னணு சார்ந்த வாகனங்களுக்கு(EV) முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், வாகனத்துறை மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த துறையில் வரும் நாட்களில் அதிகப்படியான வேலையிழப்புகளும், அதே வேளையில் புதிய வேலைவாய்ப்புக்கான சூழலும் ஏற்படலாம்.

கடந்த டிசம்பர் 2019 காலத்தில் வாகனத்துறை வளர்ச்சி 13 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த 15 வருடங்களில் காணப்பட்ட குறைந்த வளர்ச்சி விகிதமாக சொல்லப்படுகிறது. முக்கிய காரணியாக பயணிகள் வாகனங்களும், இரு சக்கர வாகனம் மற்றும் வணிக வாகனங்களின் விற்பனை வளர்ச்சி சரிந்துள்ளது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி 12 சதவீதமும், பயணிகள் கார் விற்பனை வளர்ச்சி 8.50 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் 2019 வரையிலான காலத்தில் பயணிகள் வாகனங்கள் 16.40 சதவீத சரிவை சந்தித்துள்ளன. சொல்லப்பட்ட காலத்தில் ஒட்டுமொத்த வணிக வாகனங்கள்  விற்பனை 21 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் ஏப்ரல் – டிசம்பர் 2019 காலத்தில் 16 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 3.86 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

டிசம்பர் மாதத்தில் அசோக் லேலண்ட்(Ashok Leyland) நிறுவனம் வாகன விற்பனையில் 28 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது போல ராயல் என்பீல்ட்(Royal Enfield – Eicher Motors) 13 சதவீதம், ஹீரோ மோட்டார் 6.50 சதவீதம் மற்றும் மாருதி விற்பனை 4 சதவீதம் என்ற அளவிலும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. டி.வி.எஸ். மோட்டார் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் இரண்டும் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், மஹிந்திரா நிறுவனமும் விற்பனை வளர்ச்சியில் தொய்வை சந்தித்துள்ளன.

அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் நிறுவனங்களை இந்த துறையில் கண்டறிந்து, பங்கு விலை மலிவாக கிடைக்கப்பெறும் போது, சிறு அளவில் முதலீடு செய்வது சாதகமான அம்சமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விப்ரோ நிறுவன மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,456 கோடி

விப்ரோ நிறுவன மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,456 கோடி

Wipro Q3FY20 Net profit of Rs. 2,456 Crore – Quarterly Results

இந்திய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனமான விப்ரோ, ஐ.டி. சேவையில் உள்ள முக்கிய நிறுவனமாக செயல்படுகிறது. ஆரம்ப காலத்தில் காய்கறிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனம் (Western India Palm Refined Oil Ltd) பின்னர், தன்னை ஒரு ஐ.டி. நிறுவனமாக மாற்றி கொண்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிறுவனத்தின் சேவை 50க்கு மேற்பட்ட நாடுகளிலும், நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்திற்கு மேற்பட்டதாகவும் உள்ளது. கிசான், சன் பிளவர், கேமல்(Camel), துளசி, செந்தூர் பவுடர்(Santoor Talcum), விப்ரோ ஜாஸ்மின் மற்றும் விப்ரோ பேபி சாப்ட் ஆகியவை இதன் முக்கிய பிராண்டுகளாக வலம் வந்தன.

2019ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் வருவாய் 8.47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாய். நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 74 சதவீதமாகவும், நிறுவன கடன் 9,000 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவன கடன் ஓரளவு இருந்தாலும், அதன் கடன்-பங்கு (Debt to Equity) விகிதம் 0.20 க்கு கீழ் தான் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்கிலும், இருப்புநிலை கையிருப்பு ரூ. 49,940 கோடியாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15,470 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 12,290 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 3,079 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 2,456 கோடியாகவும் உள்ளது. இது கடந்த டிசம்பர் 2018 காலத்தில் ரூ. 15,060 கோடி வருவாயாகவும், நிகர லாபம் ரூ. 2,510 கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, காலாண்டு நிகர லாபம் இம்முறை குறைந்துள்ளது.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 5 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதம் மற்றும் 10 வருட கால அளவில் 9 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) ஐந்து வருட கால அளவில் 3 சதவீதமும், 10 வருடங்களில் 9 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மூன்று வருடங்களில் 11 சதவீதம், ஐந்து மற்றும் பத்து வருட கால அளவில் 4 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. போனஸ் பங்குகள் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் இங்கு சேர்க்கப்படவில்லை. இதன் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பின்னொரு நாளில் காண்போம். (போனஸ் பங்குகளை கொண்டு கோடிகளை அள்ளிக்கொடுத்த விப்ரோ )

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

குலை நடுங்க வைத்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்

குலை நடுங்க வைத்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 

India’s Retail Inflation to 7.35 Percent – Breached the RBI’s Target

நாட்டின் பொருளாதார வளர்ச்சி என சொல்லப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP Growth) ஒரு புறம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கையில், அதற்கு நேரெதிராக சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) வீறு நடைபோட்டு கொண்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 1.97 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பர் 2019 மாத முடிவின் பணவீக்கம் 7.35 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சந்தை எதிர்பார்த்த 6.2 சதவீத சில்லரை விலை பணவீக்கம் என்ற நிலையை காட்டிலும், டிசம்பர் மாத விலைவாசி உயர்ந்துள்ளது. இதனை காட்டிலும் பெரிய அதிர்ச்சி என்னவெனில், பாரத ரிசர்வ் வங்கியின் 6 சதவீதம் என்ற இலக்கை மீறியுள்ளது, தற்போது சொல்லப்பட்டுள்ள பணவீக்க விகிதம்.

உணவுப்பொருட்களின் சமீபத்திய விலை உயர்வால் நுகர்வோர் விலை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காய்கறிகளின் விலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போல பருப்பு(Pulses) வகைகள் 15.50 சதவீதமும், அத்தியாவசிய உணவுகளின்(Food & Beverages) விலை 12 சதவீதமும் கடந்த டிசம்பர் மாதத்தில் உயர்ந்து காணப்பட்டுள்ளது.

தானியங்கள் மற்றும் பால் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. காலணிகள், துணிமணிகள், வீட்டுமனை மற்றும் எரிபொருட்களின் விலையும் ஓரளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவு தற்போது உணவு பொருட்களின் பணவீக்கம் உள்ளது கவனிக்கத்தக்கது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இறக்கத்தில் செல்லும் நிலையில், பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருந்தால் அது சாதகமான அம்சமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது சாமானிய மக்களை குலைநடுங்க வைத்துள்ளது எனலாம்.

பணவீக்க உயர்வை தொடர்ந்து, வரவிருக்கும் மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) பாரத ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா, இல்லையெனில் வட்டி விகித அதிகரிப்பை ஏற்படுத்துமா என்பது தெரிய வரும். 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஏற்படுத்தப்பட்ட வரி குறைப்பு நடவடிக்கையால் பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்காமல், லாபத்தை பெற்றிருந்தன. இந்நிலையில் பணவீக்கம் உயர்ந்து காணப்படுவதால், வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது, அது நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதே வேளையில், வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை அல்லது வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் அது வங்கி டெபாசிட்தாரர்களுக்கு சாதகமாக இருக்காது. பணவீக்கம் அதிகமாக காணப்படும் நிலையில், வங்கியில் பணவீக்கத்தை ஒட்டிய வருமானத்தை பெற முடியாமல், நஷ்டத்தை ஏற்படுத்தலாம். தற்போது ஒரு வருட வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(CPI Inflation) கடந்த 2013ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 12.17 சதவீதம் இருந்தது. இதுவே நாட்டின் அதிகபட்ச விலை உயர்வாக சொல்லப்படுகிறது. குறைந்தபட்ச அளவாக கடந்த 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இந்த வார நாணயம் விகடனில் – நிதி பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்

இந்த வார நாணயம் விகடனில் – நிதி பாதுகாப்புக்கு 5 அம்சங்கள் 

The Best 5 Basic Financial Protection Tools – Create Wealth

பொதுவாக நாம் தினசரி சந்திக்கும் பிரச்னை ‘ரிஸ்க்’. காலையில் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, அலுவலகம் போய் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் நாம் எடுக்கும் ரிஸ்க்குகள் எத்தனையோ இருக்கின்றன. அதனால்தான் `எல்லா இடங்களிலும் ரிஸ்க் வியாபித்திருக்கிறது’ (Risk pertains everywhere) என்கிறோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சேமிப்பு மற்றும் முதலீடு (Savings and Investment) ஆகிய இரு விஷயங்களுக்கு முன்னர் நாம் செய்ய வேண்டியது நிதிப் பாதுகாப்பு (Financial Protection). நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் கட்டாயம் செய்தாக வேண்டிய ஐந்து விஷயங்களை பற்றி, இந்த வார நாணயம் விகடன் இதழில் (19-01-2020) கூறியுள்ளோம்.

உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் ரிஸ்க் எடுக்கவில்லை என்றாலும், மறைமுகமாக பல தடைகள் வாழ்க்கையில் காத்திருக்கின்றன. குறிப்பாக நிதி சார்ந்த பொருளாதார வாழ்வில் இந்த விஷயம் பொருந்தும். எனவே உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க இந்த ஐந்து நிதி பாதுகாப்புகள் உதவும்.

உங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் நாணயம் விகடன் இதழை கேட்டு பெற்று பயன் பெற விரும்புகிறோம். இந்த கட்டுரையை பதிவு செய்த ஆசிரியர் மற்றும் நிர்வாக குழுவினருக்கு வர்த்தக மதுரை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இனி உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீட்டிற்கும் யூ.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் வசதி

இனி உங்கள் எஸ்.ஐ.பி.(SIP) முதலீட்டிற்கும் யூ.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் வசதி 

Start your SIP Investment using UPI Payments now

அஞ்சலகம் மற்றும் வங்கியில் நாம் சேமிக்கும் மாதாந்திர தொடர் வைப்பு கணக்கு(Recurring Deposit – RD) போன்று தான் எஸ்.ஐ.பி. முதலீடும். பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டு சேவையில் இரு வகை மூலம் நாம் முதலீடு செய்யலாம். முதலாவதாக ஒருமுறை முதலீட்டின் மூலம் மேற்கொள்ளலாம். அதாவது நம்மிடம் உள்ள ஒரு குறிப்பிட தொகையை முழுவதுமாக ஒரு தவணையில் முதலீடு செய்வது தான் Lumpsum Investment.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதனை நாம் மற்றொரு முறை முதலீடு செய்தால் அதற்கு கூடுதல் கொள்முதல்(Additional Purchase) என சொல்வர். ஒரு முறை மட்டும் அல்லது மற்றொரு முறை செய்யும் முதலீட்டில் எந்த கால வரையறையும் இல்லை. நாம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த முதலீட்டு முறையில் திட்டங்களை பொறுத்து குறைந்தபட்ச முதலீட்டு தொகையும் மாறுபடும். சில திட்டங்களுக்கு குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாயாக இருக்கலாம். இல்லையெனில் 5000 ரூபாயாக அமையலாம்.

இரண்டாவது வகை தான் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan) முதலீடு, நாம் ஏற்கனவே சொன்ன அஞ்சலக ஆர்.டி. சேமிப்பை போல. இங்கே மாதாந்திர முதலீடு மட்டுமில்லாமல், வாராந்திர, மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் சாதனத்தை தேர்ந்தெடுக்கலாம். தானியங்கி முறையில்(Auto Clearance) செயல்படும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 100 அல்லது ரூ. 500 ஆக அமையலாம்.

பொதுவாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் ரொக்கமாக பணத்தை செலுத்த முடியாது. நமது வங்கி கணக்கை மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துடன் இணைப்பதன்(One Time Mandate – OTM) மூலம், தானியங்கியாக நமது வங்கி கணக்கிலிருந்து மாதாமாதம் நாம் கேட்டு கொண்ட தொகை பிடிக்கப்படும். இது ஒரு பாதுகாப்பான முறையே. இரண்டாவது முறையாக காசோலை(Name Cheque) வழங்குவதன் மூலம், நாம் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இன்று பெரும்பாலானோர் இணைய வழியாக வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், நெட் பேங்கிங்(Internet Banking) வசதி மூலமும் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். பீம்(BHIM), கூகுள் பே, போன் பே(Phone pe) மற்றும் இதர யூ.பி.ஐ. செயலிகள் மூலமும் நாம் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒருமுறை முதலீட்டிற்கு மட்டுமே யூ.பி.ஐ.(UPI) சேவை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எஸ்.ஐ.பி. முதலீட்டிற்கும் இதனை பயன்படுத்தலாம் என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த பண பரிவர்த்தனை செயலி மூலம் அதிகபட்சமாக ரூ. 2000 வரையுள்ள எஸ்.ஐ.பி முதலீட்டிற்கு பயன்படுத்தலாம். அதற்கு மேலான தொகைக்கு நாம் மேலே சொன்ன முறையை பயன்படுத்த நேரிடும். இனி வங்கியில் கிடைக்கப்பெறும் நெட் பேங்கிங் வசதி இல்லையென்றாலும், யூ.பி.ஐ. மூலம் உங்கள் மியூச்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி. முதலீட்டை துவங்கலாம்.

இந்திய பரஸ்பர நிதி முதலீடுகளின் மொத்த சொத்து மதிப்பு 26.54 லட்சம் கோடி ரூபாய். செயல்பட கூடிய நிலையில்(Active SIP) உள்ள எஸ்.ஐ.பி. முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை சுமார் 2.96 கோடி. அதே வேளையில் நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தவர்களின் பங்களிப்பு வெறும் 2 சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது. தற்போதைய நிலையில், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய கடினமாக ஆவணங்கள் சமர்ப்பிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் என்று பெரிதாக எதுவுமில்லை. வருங்காலங்களில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மேலை நாடுகளில் உள்ளது போன்று, இந்த திட்டத்தில் கணக்கு துவங்குவதற்கு கட்டணம் விதிக்கப்படலாம். ஆவணங்கள் சார்ந்து கட்டுப்பாடுகளும் மாறுபடலாம். எனவே, இப்போதைய காலத்தில் ஒரு பரஸ்பர நிதி முதலீட்டு கணக்கை துவங்குவது சிறந்தது. இன்று பெரும்பாலான திட்டங்களுக்கு நாம் மாதாந்திர எஸ்.ஐ.பி. முதலீடாக ரூ. 100 ஐ கொண்டு துவங்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 4,457 கோடி

இன்போசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 4,457 கோடி

Infosys reported a Net Profit of Rs. 4,457 Crore – Q3FY20 – Quarterly Results

நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனமான இன்போசிஸ்(Infosys) 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 23,092 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டின் டிசம்பர் காலத்தில் ரூ. 21,400 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.14 லட்சம் கோடி. புத்தக மதிப்பு(Book Value) ஒரு பங்குக்கு ரூ. 142 விலையிலும், முகமதிப்பு 5 ரூபாய் விலையிலும் காணப்படுகிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 172 மடங்குகளில் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்க லாப வளர்ச்சி(Operating Profit Margin) சராசரியாக 25 சதவீதம் என்ற அளவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் 17,291 கோடி ரூபாய். தேய்மானமாக(Depreciation) நிறுவனத்தின் சார்பில் ரூ. 737 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net Profit) ரூ. 4,457 கோடி. இது கடந்த டிசம்பர் 2018ம் காலாண்டில் ரூ. 3,609 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. 2018-19ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 82,675 கோடி மற்றும் நிகர லாபம் 15,404 கோடி ரூபாய்.

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 7.5 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 10 சதவீதமாகவும் . இருந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 8.50 சதவீதம் அதிகரித்துள்ளது.

மூன்று வருட காலத்தில் 15 சதவீதமும், 10 வருடங்களில் 8.60 சதவீதமும் பங்கு விலை உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் 2019ம் காலாண்டு முடிவில் 58,400 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஈரானுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அறிக்கை 2020

ஈரானுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அறிக்கை 2020

Indians can travel to Iran without Visa – Most Powerful Passport 2020 – Henley Index

ஹென்லி & பார்ட்னர்ஸ்(Henley & Partners) நிறுவனம் 2020ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடுகளின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு, அந்த குடிமக்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் அனுமதியை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் ஜப்பான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்ப்போர்ட்டுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை கொண்டிருப்பதற்கு காரணம், அந்த நாட்டின் பாஸ்போர்ட்டை கொண்டு, 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இரண்டாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் நாட்டு மக்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதி உண்டு.

இந்தியாவிற்கு இம்முறை 84வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2019ம் வருடத்தில் இந்தியா 82வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு, 58 நாடுகளுக்கு விசா பெறாமல் செல்லலாம். இருப்பினும், சில நாடுகளில் அங்கே தங்குவதற்கு, அந்த நாட்டினை விமானம் மூலம் அடைந்தவுடன் விசா பெறும் வசதியும்(On Arrival Visa) உண்டு.

விசா இல்லாமல் இந்தியர்கள் பூட்டான், கம்போடியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு செல்லலாம். மத்திய கிழக்கு நாடுகளில் அர்மேனியா, ஈரான், ஜோர்டான் மற்றும் கத்தார் நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதி உண்டு. இது போன்று ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும், கரீபியன் பகுதியில் உள்ள சில நாடுகளிலும் இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்.

ஆசியாவில் லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் சீனாவின் மக்காவு போன்ற பகுதிகளுக்கும் விசா இன்றி செல்ல இந்தியர்களுக்கு அனுமதி உண்டு. இந்த பட்டியலில் அமெரிக்கா எட்டாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி மற்றும் தென் கொரியா மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ளன. நான்காம் இடத்தில் பின்லாந்தும், ஐந்தாம் இடத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உள்ளன.

72வது இடத்தில் இருக்கும் சீன பாஸ்போர்ட் மூலம் 71 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். மோசமான பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 26 நாடுகளுக்குள் மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும். இந்த பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் சோமாலியா நான்காம் இடம் பிடித்துள்ளது. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 32 நாடுகளுக்குள் மட்டுமே விசா இன்றி செல்ல முடியும்.

பங்களாதேஷ் மற்றும் இரான் நாடுகளின் பாஸ்போர்ட் கொண்டு 41 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். ஆனால் இராக் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 28 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும். மோசமான பாஸ்போர்ட் பட்டியலில் ஈராக் நாட்டிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்த நிலையிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இருப்பது ஏன் ?

பொருளாதார மந்த நிலையிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இருப்பது ஏன் ?

Why are Indian Stock Markets soaring despite the Economy Slowdown ?

பொருளாதார மந்தநிலையிலும், இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் உள்ளதே என்பது பலரது கேள்வி. நாட்டில் கடந்த சில காலங்களாக வாகனத்துறை விற்பனை குறைந்து வருவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, உலக பொருளாதார காரணிகளின் தன்மை மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் வரை, நாட்டின் வளர்ச்சி பெருமளவு பாதித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இது போன்ற எதிர்மறையான சூழ்நிலையிலும் இந்திய பங்குச்சந்தைகள் உச்சத்தில் இருந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை நிப்டி(Nifty50) குறியீடும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடும் போட்டி போட்டு கொண்டு ஏறியுள்ளன. சமீபத்திய போர் பதற்ற சூழல் தான், சந்தையின் அடுத்தகட்ட ஏற்றத்தை சற்று நிறுத்தி வைத்துள்ளது. இவையும் எதிர்காலத்தில் கலையப்படலாம்.

கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது, சந்தை பெருவாரியான இறக்கத்தை கண்டிருந்தது. அதனை மீட்டெடுக்க பல மாதங்கள் தேவைப்பட்டது. அப்போதைய காலத்தில் நாம் இன்று காணும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. 2008 பங்குச்சந்தை வீழ்ச்சியில் அதிகம் அடிபட்டவர்கள் பெரும்பாலானோர் இன்று சந்தைக்கு திரும்பவும் இல்லை.

புதிய இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்தையை பற்றிய விழிப்புணர்வும் தற்போதைய நிலையில் மேம்பட்டுள்ளது. ஆனால் சந்தையை பற்றிய கற்றல்(Stock Market Analysis) தான் இன்னும் அதிகம் தேவையாக உள்ளது. முக்கியமாக அன்றைய காலத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின்(Mutual Funds) மூலம் அதிக முதலீடுகள் பெறப்படவில்லை. ஆனால் இன்று நிலைமையோ வேறு.

இன்று யாரும் சந்தையில் முதலீடு செய்வது வெறும் பணம் பண்ணுவதற்காக மட்டுமல்ல, மாறாக அவர்களின் நிதி இலக்குகளை சார்ந்தும் முதலீடு செய்கின்றனர். தனிநபர் ஒருவருக்கு 15 வருட நிதி இலக்கு உள்ளதென்றால், அவர் குறுகிய காலத்தில் ஏற்படும் சந்தை ஏற்ற – இறக்கத்தை பற்றி கவலை கொள்ள மாட்டார். அவருக்கு தேவையான காலம் 15 வருடங்கள் தான். எனவே எந்தவொரு ரிஸ்க்(Risk) தன்மை உள்ள முதலீடும் நீண்ட காலத்தில் நல்ல வருவாயை அளிக்கும்.

கடந்த டிசம்பர் மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீடு சுமார் 8,500 கோடி ரூபாய். சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்ததற்கு இந்த எஸ்.ஐ.பி. முதலீடும் ஒரு காரணம். அந்நிய முதலீட்டாளர் மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் சந்தை பங்களிப்பு போன்று, இன்று பரஸ்பர நிதி முதலீடுகளும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சந்தையில் ஏதேனும் பாதகமான செய்திகள் தென்பட்டால், குறுகிய கால மற்றும் தின வர்த்தகர்கள் பயத்தில் பணத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பெறப்பட்ட முதலீடுகள் பெரும்பாலும் முழுவதுமாக வெளியேறுவதில்லை.

இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் வேண்டுமானால் பயத்தில் பணத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் நீண்ட காலத்தில் தங்கள் இலக்குகளுக்காக(Financial Goals) முதலீடு செய்பவர்கள், தங்கள் தேவைக்கு மட்டுமே அதனை பயன்படுத்துகின்றனர். டிசம்பர் 2019 காலத்தில் பெறப்பட்ட பங்கு சார்ந்த முதலீடுகளின்(Equity Funds) மதிப்பு சுமார் ரூ. 4,595 கோடி மற்றும் வெளியே எடுக்கப்பட்ட தொகை(Outflow) ரூ. 15,440 கோடி. இதில் பெரும்பாலானவர்கள் சிறு முதலீட்டாளர்களே.

கடந்த டிசம்பர் மாதத்தில் மியூச்சுவல் பண்டு திட்டங்களின் சார்பாக லார்ஜ் கேப்(Large Cap) பண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு 1,134 கோடி ரூபாய். இவற்றில் எஸ்.ஐ.பி. அல்லது மறுமுதலீடு என்பது சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்ளவும். லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) வெளியே எடுக்கப்பட்ட தொகை சுமார் 71,158 கோடி ரூபாய். மல்டி கேப்(Multicap) பண்டுகளில் புதிய முதலீடாக டிசம்பர் மாதத்தில் 511 கோடி ரூபாயும், மிட் கேப்பில் 796 கோடி ரூபாய் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகள் ரூ. 421 கோடி முதலீடும் பெறப்பட்டுள்ளன. போகஸ்ட்(Focused Funds) என சொல்லப்படும் குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் சுமார் ரூ. 1,830 கோடி டிசம்பர் மாதத்தில் பெறப்பட்டுள்ளன.

டிசம்பர் 31, 2019 தேதியின் படி, பரஸ்பர நிதி முதலீடுகளின் சொத்து மதிப்பு(AUM) ரூ. 26.54 லட்சம் கோடி. ஆகையால், சந்தை இறக்கம் கண்டாலும் அவற்றை தக்க வைப்பதில் பரஸ்பர நிதி முதலீடுகளும் தற்போது துணைபுரிகின்றன. எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்யும் போது, சந்தையின் ஏற்ற – இறக்கத்தில் நல்ல வருமானத்தை பெறுவது நிச்சயம். நாம் திட்டமிட வேண்டியது நமக்கான இலக்கு மற்றும் அதற்கான காலம்(Goals & Period) தான். இதன் அடிப்படையில் தான் நாம் மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்கு சந்தை வீழ்ச்சி – போர் பதற்றம் – முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது ?

பங்கு சந்தை வீழ்ச்சி – போர் பதற்றம் – முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது ?

Stock Market Crash – War Tensions – Tools for the Investors

அமெரிக்க – ஈரான் போர் பதற்ற சூழலை தொடர்ந்து, உலகின் அனைத்து பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(BSE Sensex) இரண்டும் 1.90 சதவீத இறக்கத்தை கண்டுள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதாவது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 788 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி(Nifty50) 233 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. அதே வேளையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. பொதுவாக போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை போன்ற சூழ்நிலைகளில் தங்கத்தின் விலை அதிகரிக்க செய்யும். பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் போது, தங்கத்தின் தேவை குறைவாக காணப்படும்.

இது போன்ற காலங்களில் சந்தை இறக்கம் காண்பது இயல்பு. இதனை யாராலும் தவிர்க்க இயலாது. முதலீட்டாளராக ஒருவர் செய்ய வேண்டியது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பின்பற்றுவதே. இங்கே பங்குச்சந்தை வரைபடங்கள்(Technical Analysis) எல்லாம் வேலை செய்யாது. இன்றிரவு என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பது போர் பதற்ற சூழ்நிலைகளில் கண்டறிய முடியாது. பெரும்பாலும் சந்தையில் வதந்திகளும், பதற்றமும் தான் தொற்றி கொள்ளும்.

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கை கணிப்பதை விட, குறிப்பிடத்தக்க துறையில் உள்ள பங்குகளின் நிதி நிலையை கண்டறிவது அவசியம். நாம் முதலீட்டு செய்ய உள்ள பங்கின் விலை, தற்போது மலிவாக கிடைக்கிறதா, நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கைகள் எவ்வாறு காணப்படுகிறது என்பது தான் முதலீட்டிற்கு அவசியமானது.

உதாரணமாக சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120 என வைத்து கொள்வோம். உங்களுக்கு தெரிந்த நபர் ஒருவர் இரண்டு கிலோ 80 ரூபாய்க்கு தருவதாக கூறுகிறார். நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள் ? சந்தையில் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கும் போது, இவர் எப்படி 80 ரூபாய்க்கு தருவார், அதுவும் இரண்டு கிலோ வெங்காயம் ? நமக்கு ஏற்படுவது சந்தேகம் தான், பிறகு அது தேடுதலை உருவாக்கும். வெங்காயத்தின் தரத்தை அறிய முற்படுவோம். அவரால் இவ்வாறான மலிவான விலையில் விற்பதற்கான காரணம் என்ன – இது போன்ற கேள்விகளுக்கான விடையை அடைந்த பின்னர், உண்மையில் அது மதிப்பானது தான் என அறிந்தால், நாம் வாங்க தயாராவோம். 

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) – இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்

இது தான் பங்குச்சந்தையிலும், முதலீட்டாளர்களுக்கு தேவை – தரமான நிறுவனங்களை கண்டறிவதே. உலக காரணிகளை நம்மால் தடுக்க முடியாது. நாம் செய்ய வேண்டியது, நம்மிடம் முதலீடு செய்ய பணமிருந்தால், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து இது போன்ற காலங்களில் சிறுக சிறுக முதலீடு செய்வதே – அதுவும் மலிவான விலை என்றால் மட்டுமே. அதனால் தான் சொல்கிறேன், சந்தையின் மதிப்பை பார்க்காதீர்கள். தற்போது இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் உள்ளது. அமெரிக்க சந்தைகளும் தான். நமக்கு அது தேவையில்லை. நாம் முதலீடு செய்ய வேண்டும், பணம் பண்ண வேண்டும். அதுவும் நீண்ட கால வருவாயை பெருக்க வேண்டும்.

பங்குச்சந்தைகள் பல போர் காலங்களையும், பொருளாதார வீழ்ச்சிகளையும் பார்த்து விட்டது. அவை ஒன்றும் வீழ்ச்சியில் மட்டுமே செல்லவில்லை, மீண்டு எழுந்துள்ளன – மிகவும் பிரமாண்டமாய். முதலீட்டாளர்களுக்கு தேவை, பொறுமை(Patience) மட்டுமே. போரினை பார்த்து ஓடுவதற்கு அல்ல. பணத்தை கையிருப்பாக வைத்திருங்கள். சரியான பங்குகளை, சரியான விலையில் தேர்ந்தெடுங்கள். சிறுக சிறுக முதலீடு செய்யுங்கள். அடுத்து ஒரு பெரிய இறக்கத்தை எதிர்பாருங்கள். மறு முதலீடு செய்ய தயாராகுங்கள். கூட்டு வட்டி நீண்ட காலத்தில் வேலை செய்யும். தங்கத்தின் விலையையும் சற்று கவனியுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஈரான் – அமெரிக்க நாடுகளின் போர் பதற்றம் இந்தியாவிற்கு பாதகமாகும்

 ஈரான் – அமெரிக்க நாடுகளின் போர் பதற்றம் இந்தியாவிற்கு பாதகமாகும்

War Panic – Iran and US tensions would hurt India’s Economy

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்க விமான தாக்குதலால் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி சுலைமானி(Soleimani) கொல்லப்பட்டார். இதன் காரணமாக இரு நாடுகளிடையே போர் பதற்ற சூழல் நிலவுகிறது. போர் போன்ற சூழல்கள் ஏற்பட்டாலும், தற்போதைய நிலையில் இரானிடம் அதனை கையாள போதிய நிதி ஆதாரம் இல்லை என சொல்லப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இரு நாடுகளிடையே எண்ணெய் வளம், ஆக்கிரமிப்பு சார்ந்த பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளது. முன்னொரு காலத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை அழிக்க முற்பட்டன. பின்னர் அது தோல்வியடைந்ததை அடுத்து, ஈராக் அதிபர் சதாம் உசைனை ஈரான் மீது தாக்குதல் நடத்த ஏவி விட்டது வல்லரசு நாடான அமெரிக்கா. 

 

இப்படி எண்ணெய் வளத்தை(Crude Oil) கையகப்படுத்த, எல்லையில் பதற்ற நிலை அவ்வப்போது ஏற்பட்டு கொண்டிருந்தது. நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முதல் மூன்று  இடங்களை பிடித்திருப்பவை – சவூதி அரேபியா, ஈராக் மற்றும் ஈரான் நாடுகள். கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு தேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

தற்போதைய சூழ்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளின் தாக்குதலும் ஈராக்கில் தான் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என சொல்லப்படுகிறது. உட்கட்டமைப்பு மற்றும் ஆற்றலில்(Energy) நாம் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி காணாத நிலையில், இது போன்ற நிகழ்வு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.

 

வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளிடையே ஏற்படும் பாதகமான நிகழ்வு, கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க செய்யலாம். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றங்கள் உள்நாட்டில் ஏற்படலாம். போர் பதற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் தங்கத்தின் விலையும்(Gold Prices) கடந்த இரு தினங்களாக உயர்ந்து காணப்படுகிறது.

 

அடுத்த மாதம் நாட்டின் பட்ஜெட் தாக்கல் இருக்க கூடிய நிலையில், எதிர்பாராது நடக்கும் நிகழ்வால் நாட்டின் பணவீக்கத்தில் குறுகிய காலத்தில் மாற்றம் இருக்கலாம். வளைகுடா நாடுகளில் சுமார் 85 லட்சம் இந்திய குடிமக்கள் பணிபுரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

இப்போதும் இருக்கும் காலகட்டத்தில், ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் உறவை பேணவே இந்தியா விரும்புகிறது. அங்கு அசாதாரண சூழல் நிலவாமல் இருப்பது, ஒவ்வொரு நாடுகளுக்கும் நலன் பயக்கும். குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com