Category Archives: Stock Analysis

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு 

The Peon to Pidilite Industries – Fevicol Branding

1925ம் ஆண்டு குஜராத் மாநிலம் மகுவாவில் பிறந்த பல்வந்த் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்து விட்டு, பம்பாயில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார். படித்தது என்னவோ சட்டக்கல்வி, ஆனால் வேலைக்கு சென்றது சாயமிடுதல் மற்றும் அச்சக தொழிற்சாலைக்கு தான். சட்டம் சார்ந்த தனது படிப்பு வேலையை அவர் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட செயல்படுத்தவில்லை.

அச்சக துறையில் சலித்து போன அவர், மும்பையிலுள்ள மரச்சாமான்கள் செய்யும் ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். அந்த அலுவலகத்தின் பட்டறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பல்வந்துக்கு(Balvant Parekh) தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது ஏற்பட்டது. தொழில் செய்ய வேண்டுமென்றால் என்ன தொழில் செய்யலாம் மற்றும் தொழிலுக்கான முதலீட்டை தயார் செய்ய வேண்டுமே என்ற சிந்தனையும் அவரது மனதில் ஓடியது.

ஒரு முறை தனது நண்பர் ஒருவரின் மூலம் தொழில் செய்வதற்கான முதலீட்டை பெற முனைந்தார். பின்பு அவருடைய உதவியில் மோகன் என்பவர் அறிமுகமானார். மோகன் முதலீடு செய்ய தயாராக, பல்வந்த் தனது வேலையை விட்டு விட்டு சொந்த தொழிலில் களம் இறங்கினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து காகித சாயங்கள்(Paper Dye), பாக்கு கொட்டைகள், சைக்கிள் போன்றவற்றை இறக்குமதி செய்து, விற்பனை செய்வது – இது தான் பல்வந்தின் தொழில். தொழிலில் சக்கை போடு போட்டார். தொழில் சார்ந்த புதிய மனிதர்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இறக்குமதி தொழிலில் இருந்ததால், ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெட்கோ(Fedco) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பல்வந்த்துக்கு கிடைத்தது. 50 சதவீத பங்களிப்புடன் கூட்டாளியாக பெட்கோ நிறுவனத்தில் இணைந்தார். பெட்கோ நிறுவனத்தின் வாயிலாக மற்றொரு ஜெர்மன் நிறுவனத்தை கண்டறிந்தார் பல்வந்த், உடனடியாக அங்கும் சென்றார். ஹோஸ்ட்(Hoechst) என்ற ஜெர்மன் நிறுவனம் ரசாயன தொழிலில் இருந்து வந்தது. இது தற்போதைய சனோபி பார்மா(Sanofi Pharma) நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது.

ஹோஸ்ட் நிறுவனத்தில் இவரது தொழில் பங்களிப்பு இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் மறைவுக்கு பின், நிறுவனம் நேரடி விற்பனைக்கு தயாரானது. பின்னர் 1954ம் ஆண்டு உள்நாட்டுக்கு வந்த பல்வந்த் தொழில் அனுபவத்தை கொண்டு தனது சகோதரர்களுடன் மும்பையில், ‘பரேக் டை கெமிக்கல்’ நிறுவனத்தை துவங்கினார். ஜெர்மனியிலிருந்து தொழில்துறைக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் நிறமிகளை இறக்குமதி செய்து அதற்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

பசை போன்ற ஒரு பொருளை தயாரித்து அதற்கு, ‘பெவிகால் -Fevicol’ என பெயர் சூட்டினார். ‘Col – கால்’ என்றால் ஜெர்மனி மொழியில் இரு விஷயங்களை இணைப்பதன் பொருளாம். பரேக் டை கெமிக்கல் நிறுவனமே(Parekh Dyechem) பின்னர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பல்வந்த் மறைவுக்கு பின் தற்போது அவரது மகன் மதுக்கர் பரேக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். வினைல் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவராகவும், இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். நாட்டின் 16வது பணக்காரராக மதுக்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.71,000 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை. இந்த துறையில் சந்தை முன்னணியாகவும் நிறுவனம் திகழ்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம் 47 மடங்கில் உள்ளது. பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 16 மடங்காக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதம் மற்றும் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 158 கோடி ரூபாயாக சொல்லப்பட்ட நிலையில், இது 33 சதவீத குறைவாகும். எனினும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் நீண்டகாலத்தில் நன்றாக உள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாபம் 24 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் 5 வருடங்களில் 26 சதவீதமும், பத்து வருட கால அளவில் 27 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,400 கோடியாக உள்ளது. 2010ம் ஆண்டு பிடிலைட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் இன்று 1400 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் இந்த நிறுவனம் பங்கு விலையில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இந்த பங்கு இறங்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறைவான அளவில் முதலீட்டிற்கு வாங்கி வைத்து கொள்ளலாம். பங்குகளை வாங்குவதற்கு அடிப்படை அலசல் அவசியம். எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முடிவு எடுப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு 

Stock Market – Fundamental Analysis – 30 Hrs Sweet Spot Course

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு நீண்ட காலமானது. மும்பை பங்குச்சந்தையின்  வயது சுமார் 140 வருடங்களுக்கு மேல். வணிகத்தை பிரதானமாக கொண்டது தமிழகமும், நமது நாடும். நாம் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தாலும், முன்னர் பார்த்திருந்தாலும் அடிப்படையில் நாம் ஒரு தொழில்முனைவோர்களே.

வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியதுமானது. அதனை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளில் வேலை தேடுவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதே அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். அது போல தான் பங்குச்சந்தையிலும். ஊக வணிகத்தில் பணம் பண்ணுகிறேன் என கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது ஆரோக்கியமானதல்ல.

பங்குச்சந்தைக்கும், நாட்டில் உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெருமளவிலான தொடர்பு உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை காணலாம். தொட்டுணர கூடியதல்ல, பங்குச்சந்தை முதலீடு. ஆனால் நீங்கள் தொட்டுணர்ந்து பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் சேவைகளிலும் பங்குச்சந்தை நிறுவனங்கள் தான் உள்ளது.

பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களை நமது தொழில் போல பாவித்து, அதன் அடிப்படை திறன்களை அலசி ஆராய்ந்து நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதே சிறந்தது. நல்ல நிறுவனங்களை கண்டறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கற்றலுடன், நிறுவனங்களின் நிதி அறிக்கைகள்(Financial Reports) மற்றும் நிர்வாகத்தை(Management) மதிப்பிடுவது அவசியமாகும்.

இதற்கு ஒரு முதலீட்டாளராக நமக்கு தேவைப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என சொல்லப்படும் அடிப்படை பகுப்பாய்வு தான். பங்குச்சந்தையின் வர்த்தக ஏற்ற – இறக்கத்திற்கு அனைத்துமான மூதாதை தான் அடிப்படை பகுப்பாய்வு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் நம்மிடம் சிறிதளவு பண உதவி கேட்டாலே யோசிக்கும் நாம், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும்.

வெறுமென பங்குகளை வாங்கி வைத்தால், லாபமோ அல்லது செல்வத்தையோ ஏற்படுத்த முடியாது. அதற்கான விதை சரியாக இருப்பது அவசியமாகும். வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு வகுப்பை துவங்க உள்ளோம். பங்குச்சந்தையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? அப்படி  செய்யாவிட்டால் நாம் சம்பாதிக்கும் பணம் யாரோ ஒருவரால் முதலீடு செய்யப்பட்டு, அவர் பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்பு ஏன் ஏற்பட்டது ?

சரியான விலையில் பங்குகளை வாங்குவது எப்படி ?

சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வேறுபாடு என்ன ?

பங்கு முதலீட்டில் நஷ்டத்தை எவ்வாறு தவிர்க்கலாம் ?

மதிப்புமிக்க முதலீட்டாளர்களின்(Value Investors) செல்வத்தை நாமும் பெறுவது எப்படி ?

பங்குகள் மூலம் எவ்வாறு சொத்துக்களை(Financial Assets) ஏற்படுத்தலாம் ?

மோசமான நிர்வாகத்தையும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பங்குகளையும் கண்டறிவது எப்படி ?

பங்குச்சந்தையில் கூட்டு வட்டியின் மகிமை(Power of Compounding) என்ன ?

பணத்தின் மூலம் பணம் பண்ணும்(Money works for you) உண்மை சூத்திரம் என்ன ?

வாருங்கள், இது போன்ற கேள்விகளுக்கான விடையாக பங்குச்சந்தை அடிப்படை கற்றலை ஏற்படுத்துவோம்.

பதிவு செய்ய…

Stock Market – Fundamental Analysis Course – Registration 

கட்டணம்: ரூ. 4,500/- 

இணைய வகுப்பு சலுகை(Online Course):  ரூ. 2250/- மட்டுமே 

பதிவுக்கு பின் வகுப்புக்கான நாள் மற்றும் நேரம், இணைப்பு ஆகியவை உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Fundamental Analysis Course

புத்தகத்தின் வாயிலாக மட்டுமே கற்க விரும்புபவர்களுக்கு…

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – How to pick the right stock in the Share market ?

புத்தக  விலை: ரூ. 228/- மட்டுமே

உரிமை துறப்பு(Disclaimer):

மேலே சொல்லப்பட்ட நிகழ்வு (வகுப்புக்கள்) பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கற்றலுக்கு மட்டுமே. வகுப்புக்களில் சொல்லப்படும் பங்குகள் யாவும் மாதிரியாகவே(Examples) சொல்லப்படும். அவை வாங்க கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய பங்குகள் அல்ல. வர்த்தக மதுரை ஒரு நிதி சேவை(Financial Advisory Services) சார்ந்த நிறுவனம் ஆகும். நடத்தப்படும் வகுப்புகளுக்கு சான்றிதழ்கள், தரவரிசைகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது.

இது ஒரு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை வகுப்பு, தகவல் மற்றும் கற்றலுக்கு மட்டுமே.

பங்குகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய லாப, நஷ்டங்களுக்கு இந்த தளம் பொறுப்பல்ல. பங்குகளில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகரை அணுகுவது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள்

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள் 

Esvin Group of Companies and its Shares – Listed Domestic Stock Valuation

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் எஸ்வின் குழுமம். 1960ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் சேஷசாயி பேப்பர்(Seshasayee Paper & Boards) மற்றும் அதனை சார்ந்த பலகைகள் தயாரிக்கும் தொழிலை கொண்டிருந்தது. நிறுவனத்தின் நிறுவனரான திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் எஸ்வின் குழுமத்தை பல நிறுவனங்கள் கொண்ட ஒரு அங்கமாக உருவாக்கினார்.

செராமிக்(Ceramic), பேட்டரிகள், உயிரி தொழில்நுட்பவியல், சர்க்கரை மற்றும் ரசாயனம் போன்ற தொழில்களில் குழும நிறுவனங்கள் செயல்பட்டன. 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னி சுகர்ஸ்(Ponni Sugars) நிறுவனம் சர்க்கரை மற்றும் அதனை சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 3000 டி.சி.டி. கொள்ளளவு கொண்ட கலனை ஈரோட்டில் நிறுவியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தி பொருட்கள் கரும்பு  சக்கையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

பேட்டரி தயாரிக்கும் தொழிலில் உள்ள எச்.இ.பி.(High Energy Batteries) நிறுவனம், திறன்மிக்க துத்தநாகம் மற்றும் நிக்கல் காட்மியம் வகை பேட்டரிகளை தயாரித்து வருகிறது. உற்பத்தியாகும் பொருட்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆகவே, இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

காகித அச்சடிப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல்.(Tamilnadu Newsprint and Papers Limited) வெற்றிகரமாக செயல்படுவதற்கு சேஷசாயி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியத்துவமானது. உலகின் முதல் கரும்பு சக்கையிலான செய்தித்தாள் பிரிவும் இது தான்.

உயிரி தொழில்நுட்பவியலில்(Bio Technology) செயல்படும் நிறுவனம் எஸ்வின் அட்வான்ஸடு டெக்னாலஜிஸ். இந்த துறையில் உயிர் கழிவு மற்றும் எரிபொருளின் வாயுவாக்க வேலைகளை செய்து வருகிறது இந்நிறுவனம். எஸ்வின் குழுமத்தின் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சேஷசாயி நிறுவனம் பேப்பர் தயாரிப்புக்கென இரு பிரிவுகளை கொண்டுள்ளது. ஈரோடு(Erode) மற்றும் திருநெல்வேலியில் இயங்கும் ஆலைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் பேப்பர்களை உற்பத்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 780 கோடி. கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஒரு வருடமாக இந்த பங்கின் விலை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த பத்து வருட காலத்தில் நன்றாகவே இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பும், பணவரத்தும் சாதகமாக உள்ளது.

மற்றொரு நிறுவனமான பொன்னி சுகர்ஸ் நாளொன்றுக்கு 3500 டன் கரும்புகளை(Sugarcane) நசுக்கி 19 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி ரூபாய். கடன் எதுவும் பெரிதாக இல்லை. அது போல அடமான பங்குகளும் நிறுவனர் சார்பில் இல்லை. விற்பனை மற்றும் லாப வளர்ச்சி பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது இந்த துறையும்(Sugar Segment), அதனை சார்ந்த அரசு கொள்கைகளும் தான்.

இருப்பினும் நிறுவனம், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை ஓரளவு பூர்த்தி செய்கிறது பேட்டரி தயாரிப்பில் இருக்கும் நிறுவனம் ஹை எனர்ஜி பேட்டரிஸ்(HEB). இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35 கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் ஒன்றுக்கு மேலாக உள்ளது. எனவே இந்த பங்கு பொதுவாக பரிசீலிக்கக்கூடியதாக இல்லை. இதன் வாடிக்கையாளர்கள் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை என இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தான் இந்நிறுவனம் லாபத்தை ஈட்டி வருகிறது எனலாம்.

பங்குச்சந்தையில் ஈடுபடும் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் பெயர் அதிகம் தெரியாத மற்ற மாநிலங்களின் நிறுவன பங்குகளை வாங்குவதை விட, நமது ஊரில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொழிலை கண்டறிந்து முதலீடு செய்வது நமக்கும், நமது மாநிலத்தின் நலனுக்கும் சாதகமாக அமையும்.

மதுரை மாவட்ட தியாகராஜர் மில்ஸ் (Virudhunagar Textile Mills – VTM Ltd), டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜபாளையம் ராம்கோ குழும நிறுவனங்கள், முருகப்பா குழும நிறுவனங்கள், கோவை சாந்தி கியர்ஸ், சென்னையை தலைமையிடமாக கொண்ட வாகனத்துறை தயாரிப்பு மற்றும் உபகரணங்களில் உள்ள தமிழக நிறுவனங்களை அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

National Aluminium Company(NALCO) – Fundamental Analysis

ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் நால்கோ (NALCO). மத்திய அரசின் நவரத்னா நிறுவனமாக பார்க்கப்படும் நால்கோ, அலுமினிய உற்பத்தி சேவையை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தொழிலாக கொண்டுள்ளது.

அலுமினிய துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், துறை சார்ந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வழங்கும் உலகின் முக்கிய நிறுவனமாகவும் நால்கோ சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்து உள்ளது  கவனிக்கத்தக்கது.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 5,960 கோடி. அதன் புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், தற்போதைய பங்கு விலை 32 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. டிவிடெண்ட் தொகைக்கு(Dividend yield) பெயர் போன இந்நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோவின் கடன்-பங்கு விகிதம் 0.01 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 100 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NALCO DCF

நிறுவனர்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களாக சொல்லப்படும் மத்திய அரசு பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை. இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை புத்தக மதிப்பு அடிப்படையின் படி மலிவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. எனினும், இந்த துறை உலக பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளன.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 8.50 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி விகிதம் ஐந்து வருடங்களில் 24 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 3 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நான்காம் காலாண்டு முடிவுகள்(Q4FY20) இன்னும் வெளிவரவில்லை. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 42 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அதே வேளையில் பங்கு மீதான வருவாய் கடந்த 12 மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,499 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,734 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு மற்றும் பணவரத்து நன்றாக உள்ளது. அதிக ரிஸ்க் கொண்ட இந்த துறை அவ்வப்போது உலகளவில் ஏற்படும் பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் நால்கோ உள்ளது. பங்கு விலை பெரிய அளவில் ஏற்றம் பெறாவிட்டாலும், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் போது, இந்த பங்கினை சிறிய அளவில் வாங்கி கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டில் டிவிடெண்ட் தொகையை ஈர்க்க உதவும் இது போன்ற பங்குகளை சேர்த்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள்

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள் 

Fundamental Analysis – 14 Days Free Course – Quick Links to read

பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை பகுப்பாய்வு வகுப்புக்களை நாம் கடந்த மூன்று வருடங்களாக வர்த்தக மதுரை தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பயனாளர்கள், அடிப்படை பகுப்பாய்வு கற்றலின் மூலம் தங்கள் பங்குகளை அலசுவதற்கான முயற்சியை நாம் கொடுத்துள்ளோம்.

14 இலவச வகுப்புக்களை கொண்ட இந்த இணைப்பு நமது தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டண வகுப்புகளை பதிவு செய்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச வகுப்புகள் அனைத்தும் உங்களது மின்னஞ்சலில் தானியங்கி முறையில் செயல்படும்.

இதுவரை பயன்பெற்றவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் பயனாளர்களுக்கு வசதியாக விரைவான இணைப்பு ஒன்றினை இங்கே கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில், பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை கண்டறிவதற்கான வாய்ப்பு கிட்டும்.

14 இலவச வகுப்புகளின் விரைவான இணைப்புக்கள்…

மேலே குறிப்பிட்டுள்ள 14 இலவச வகுப்புகளின் இணைப்பை கிளிக் செய்து அடிப்படை பகுப்பாய்வை கற்கலாம். அடிப்படை பகுப்பாய்வில் சந்தேகம் அல்லது இணைப்பை கிளிக் செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் அதே பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

இல்லையெனில், contact@varthagamadurai.com  என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் செய்தியை அனுப்பவும்.

14 இலவச வகுப்புக்களை மின்னஞ்சலில் பெற…

Fundamental Analysis – 14 Days Free Course 

சிறப்பு  கட்டண வகுப்புகளுக்கு…

Premium Courses – Fundamental Analysis – Stocks | Mutual Funds | Money Education

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல் 

Anuh Pharma – Small Cap – Fundamental Analysis

எஸ்.கே. குழும நிறுவனங்களின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் இதர பாக்டீரியா எதிர்ப்பு மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. காசநோய் எதிர்ப்பு மற்றும் மேக்ரோலைட்ஸ் ஆகிய தயாரிப்புகளில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.கே. குழுமம்(SK Group) மருந்து தயாரிப்பு போக சுகாதாரம், கல்வி, ஏற்றுமதி, கெமிக்கல், சமூக சேவை ஆகியவற்றிலும் பங்காற்றி வருகிறது. அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 370 கோடி. தற்போதைய பங்கு ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 66 ரூபாயாக உள்ளது. எனவே பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் இரண்டு மடங்கில் உள்ளது.

கடன்-பங்கு விகிதம் 0.06 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 91 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனில்லாத நிறுவனமாக உள்ள அனுக் பார்மா நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 76 கோடியாகவும், செலவினம் 67 கோடி ரூபாயாகவும் உள்ளது.

டிசம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ. 6.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 318 கோடியாகவும், நிகர லாபம் 20.50 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஐந்து வருட காலத்தில் 4 சதவீதமும், பத்து வருடங்களில் 10.3 சதவீதமாகவும் உள்ளது.

லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 6 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 10.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 16.5 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலத்தில் 11 சதவீதம் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை நிறுவனம் ஐந்து முறை போனஸ் பங்குகளை(Bonus Issue) முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. அளிக்கப்பட்ட போனஸ் பங்குகள் அனைத்தும் பங்கு ஒன்றுக்கு, ஒன்றுக்கும் மேலாக தான் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்பு நிலை கையிருப்பு தொகை ரூ. 152 கோடியாகும். பங்கின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஒரு வருடத்தில் 14 சதவீதத்தில் உள்ளது. இதுவே ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமும், பத்து வருடங்களில் 17 சதவீதமாகவும் இருக்கிறது. சமீப தகவலில், பங்கு ஒன்றுக்கு 2.75 ரூபாயை டிவிடெண்ட் தொகையாக(Dividend) அறிவித்துள்ளது அனுக் பார்மா நிறுவனம்.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் அனுக் பார்மா நிறுவனத்தின் உண்மையான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 160 ஐ மதிப்பாக பெறும். பங்குகளை வாங்க விரும்புவோர் ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis – Free Course) கண்டறிந்து, சரியான விலையில் முயற்சி செய்ய வேண்டும். அலசுவதற்கு நேரமில்லாதவர்கள் அல்லது சிரமமாக எண்ணுபவர்கள், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்குகளை வாங்கி வைப்பது மட்டுமே வேலையாக இல்லாமல், வருங்காலங்களில் அதன் நிதி அறிக்கையையும் அலசுவது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்

தைரோகேர் டெக்னாலஜிஸ்  – பங்குச்சந்தை அலசல் 

Thyrocare Technologies – Think Thyroid, Think Thyrocare – Fundamental Analysis

1996ம் ஆண்டு கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். மருத்துவ சேவையில் உள்ள இந்த நிறுவனம் தைராய்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த துறையில் நாட்டின் முதல் தானியங்கி ஆய்வக நிறுவனமாகவும் தைரோகேர் உள்ளது. நிறுவனர்(Velumani Arokiaswamy), பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியும் ஆவார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3,300 கோடி. இதன் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாயாக உள்ளது. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 8 மடங்கில் உள்ளது. கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.03 ஆக இருக்கிறது. எனவே நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை.

நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 140 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 344 கோடியாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 370 கோடியாகவும், செலவினம் ரூ. 222 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபம் ரூ. 95 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல லாபம் மூன்று வருடங்களில் 16.50 சதவீதமும், ஐந்து வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருட காலத்தில் 14 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த ஒரு வருடத்தில் 20 சதவீதம் வளர்ந்துள்ளது.

மூன்று வருட காலத்தில் 19 சதவீதமும், ஐந்து வருடங்களில் 19 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. நிறுவனத்தின் பணவரவு(Cashflow) சீராக இருந்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் 2019 – மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 98 கோடியாகவும், செலவினம் 55 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 43 கோடி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் ரூ. 39 கோடியாக உள்ளது.

சொல்லப்பட்ட மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 கோடி ரூபாயாக உள்ளது. கடந்து பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மற்றும் லாப விகிதம் சீராக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பங்கின் விலை உச்சத்திற்கு அருகில் இருப்பதை காட்டுகிறது. அதன் தற்போதைய உண்மையான பங்கு ஒன்றின் விலை ரூ. 342 ஐ பெறும்.

இருப்பினும், தேவை அதிகமாக உள்ள பங்குகளின் விலை எப்போதும் சந்தையில் அதிகமான விலைக்கு தான் வர்த்தகமாகும். எனவே, மற்ற அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Factors) அலசி ஆராய்ந்து பங்கு வாங்கும் முடிவுகளை எடுக்கலாம். நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் பொறுப்புகள் நிறுவனத்தின் சொத்துக்களை விட குறைவாக தான் உள்ளது. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல்

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல் 

Would you buy HEG LTD – Graphite Electrode now ? Fundamental Analysis

எல்.என்.ஜே. பில்வாரா(LNJ Bhilwara) குழுமத்தின் ஒரு அங்கம் மற்றும் அதன் முதன்மை நிறுவனம் தான் எச்.இ.ஜி. லிமிடெட். மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கிராபைட் எலெக்ட்ரோடு(Graphite Electrode) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் செயல்படுகிறது. தனது உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குழுமத்தின் அனுபவம் சுமார் 60 வருடங்களாகும். நிறுவனத்தின் நிறுவனர் திரு. எல்.என். ஜுன்ஜுன்வாலா தனது ஆரம்பகட்ட தொழிலாக ஜவுளி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் துவங்கினார். பின்பு ஆற்றல் சார்ந்த பல தொழில்களையும், தொழில்நுட்பம், மருத்துவம், கிராபைட் என பல பரிணாமத்தை எடுத்து வந்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,591 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,026 கோடியாகவும் இருந்தது. எச்.இ.ஜி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,500 கோடியாகவும், புத்தக மதிப்பு 1,038 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.16 ஆக உள்ளது. எனவே, நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 90 மடங்கில் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் செய்யப்படவில்லை. அதே வேளையில் கடந்த காலாண்டில் நிறுவனர்கள் சார்பில் 2 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் ஒரு மடங்கில் தான் உள்ளன. இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை(Dividend) அளிப்பதில் சிறப்பாக உள்ளன.

எச்.இ.ஜி. லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலங்களில் 85 சதவீதமும், ஐந்து வருடங்களில் 41 சதவீதமும் மற்றும் பத்து வருட கால அளவில் 14 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 36 சதவீதமும், லாபம் 98 சதவீதமும் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை பற்றிய இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்

பங்கு மீதான வருவாய்(Return on Equity – ROE) கடந்த மூன்று வருடங்களில் 77 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 56 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் ரூ. 3,968 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதார காரணிகள் இந்த நிறுவனத்தின் தொழிலை அவ்வப்போது பாதிக்கும். அமெரிக்க – சீன வர்த்தக போர், கொரோனா வைரஸ் பதற்றம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வருவாயை சமீபத்தில் பாதித்துள்ளது எனலாம்.

கடந்த 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த பங்கின் விலை ரூ. 180 என்ற அளவில் வர்த்தகமானது. பின்பு மலை போல் உயர்ந்து, 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ. 4900 என்ற விலை வரை சென்றது. கடந்தாண்டு நிறுவனம் சார்பில் பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப பெறும் முறையில்(Buyback of Shares) பங்கு ஒன்றுக்கு ரூ. 5500 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று வருடத்திற்கு முன்னர் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெருத்த லாபத்தை எடுத்துள்ளனர். பின்பு, இந்த பங்கின் விலை 2019ம் ஆண்டு (பங்குகள் திரும்ப பெறும் செய்திக்கு பிறகு) முழுவதும் சரிவை நோக்கி தான் சென்றது. நல்ல லாபத்தை கண்ட அன்னிய முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டிலிருந்து கடந்த நிதியாண்டின் முடிவில் வெளியேறியுள்ளனர்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதன் வருவாய் மற்றும் லாபம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 394 கோடி மற்றும் செலவினம் ரூ. 389 கோடியாக இருந்துள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ. 1 கோடி நிகர நஷ்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 2000, 3000 என்ற விலையில் இந்த பங்குகளை வாங்கியவர்கள் பெருத்த சரிவை சந்தித்துள்ளனர். சுழற்சி முறை மற்றும் உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படும் இந்த பங்கு, அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்தவை. அதே வேளையில் அனைத்து காலத்திலும் வாங்கக்கூடிய பங்காக இது அமையவில்லை.

எனவே நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக வளரும் பட்சத்தில், பங்கின் விலையும் மலிவாக கிடைக்கும் போது முதலீடு செய்யலாம். நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அடிப்படை பகுப்பாய்வின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 850 மதிப்பு பெறும் என சொல்லியிருந்தோம். மூன்றாம் காலாண்டு முடிவின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 710 என்ற மதிப்பை மட்டுமே பெறக்கூடும். தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,170 என்ற விலையில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனம் கடந்த நிதியாண்டின் முடிவில் பங்கு ஒன்றுக்கு 80 ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியிருந்தது. இப்போது மூன்றாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட்

பங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட் 

Should you buy the Ex – Multibagger ITC LTD at current price ?

இந்திய பன்னாட்டு குழும நிறுவனமான ஐ.டி.சி. லிமிடெட்(ITC Ltd) 1910ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் முதன்மை தொழிலாக புகையிலை சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைமையிடமாக கொல்கத்தா விளங்குகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புகையிலை மட்டுமில்லாமல் உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், காகிதம் சார்ந்த எழுது பொருட்கள், பூஜை பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள், பேக்கேஜிங் துறை(Packaging), தொழில்நுட்பம் மற்றும் நட்சத்திர விடுதி(Hotels) போன்ற தொழில்களில் முத்திரை பதித்து முன்னிலை வகிக்கிறது.

இதன் குறிப்பிட்ட பிராண்டுகளாக ஆசீர்வாத் ஆட்டா(Aashirvaad Atta), வில்ஸ்(Wills), கிங்ஸ், கிளாஸ்மேட்(Classmate) புத்தக நோட்டுக்கள், மங்கள்தீப் ஊதுபத்திகள்(Mangaldeep), ஷெரட்டன், பார்ச்சூன் மற்றும் கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல்கள், ஐ.டி.சி. பேப்பர் பொருட்கள், சன்பீஸ்ட் பிஸ்கட், கேண்டிமேன், பிங்கோ, இப்பீ நூடுல்ஸ் என பல வகைகள் சந்தையில் உள்ளன.

ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டின் வருவாய் 52,000 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 12,820 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 27,200 நபர்கள்.

புகையிலை தொழில் முதன்மையாக சொல்லப்பட்டாலும், கடந்த சில காலங்களாக இந்த தொழிலில் உள்ள பங்களிப்பை குறைத்து, மற்ற தொழில்களில் ஐ.டி.சி. நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,91,110 கோடி. புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்காக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை(Debt Free) என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சம்.

ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை நிறுவனர்களின் பங்களிப்பு(No Promoters Holding) எதுவும் தற்போது இல்லை. அதனால் நிறுவனர்களின் பங்கு அடமானம் என்ற சமாச்சாரமும் இல்லை. கார்ப்பரேட் அமைப்பு(Bodies Corporate) மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பாக மொத்தம் 50 சதவீத பங்குகள் உள்ளது. இந்திய புகையிலை உற்பத்தியாளர்கள் அமைப்பின் சார்பில் 24 சதவீத பங்குகள் கைவசம் உள்ளன. குறிப்பிடும்படியாக எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 16 சதவீத பங்களிப்பையும், ஓரியண்டல் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம், ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸுரன்ஸ் ஆகிய காப்பீடு நிறுவனங்கள் தலா ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. சிங்கப்பூர் அரசாங்கமும் ஐ.டி.சி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 460 மடங்காகவும், பங்கு மீதான வருமானம்(ROE) கடந்த பத்து வருடங்களில் 27 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 15 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 11 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

பங்குச்சந்தை இலவச வகுப்புகள் – 14 நாட்கள் (இணைய வழியில்)

லாப வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 11 சதவீதம், ஐந்து வருட காலத்தில் 8 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 14 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 11 சதவீத வருவாயை தந்துள்ளது. எனினும், முதலீட்டாளர் ஒருவர், கடந்த 2005ம் வருடத்தின் போது ஐ.டி.சி. நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால், அன்றைய விலையில் மொத்த முதலீடு ரூ. 30,000 (பங்கு விலை ரூ. 30 X 1000 பங்குகள்). தற்போதைய நிலையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 1.08 கோடி. 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீடு தற்போது 360 மடங்கு உயர்ந்திருக்கும். இவற்றில் போனஸ் பங்குகள் மற்றும் முகமதிப்பு பிரிப்பு(Face value Split) உள்ளடக்கமாகும். டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

கடந்த 2008ம்  நிதியாண்டில் ரூ.14,633 கோடியாக இருந்த நிறுவன வருவாய் 2019ம் நிதியாண்டின் முடிவில் 48,350 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே போல, 2008ம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம்(Net Profit) 3,158 கோடி ரூபாய். தற்போது 2019ம் ஆண்டின் முடிவில் இதன் நிகர லாபம் 12,592 கோடி ரூபாய். நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் காலாண்டு முடிவில் 57,259 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்திற்கு வர வேண்டிய பண வரவும்(Cash Flow) சரியான அளவில் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சந்தையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை கணக்கில் காட்டும். ஆனால், சொல்லப்பட்ட லாபம் கல்லாவில்(Cash Flow) வந்து சேர்ந்தால் மட்டுமே, அது உண்மையான கணக்கு. இல்லையென்றால், அந்த நிறுவனம் பிற்காலத்தில் கடன் வாங்கி சிரமப்பட நேரிடும். ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை லாபம் சாதகமாக பெறப்படுகிறது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை ரூ. 236 ஆக (26,December 2019) உள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வு (DCF Valuation) முறைப்படி, இந்த நிறுவன பங்கை ஆராய்ந்தால், பங்கு ஒன்றின் விலை 180 ரூபாய்க்கு மதிப்புடையது. ஆனால் தற்போதைய சந்தையில் நிலவும் விலை 56 ரூபாய் கூடுதலாக உள்ளது. சந்தை இறக்கத்தில் இந்த பங்கினை வாங்குவதற்கான வாய்ப்பு கிட்டலாம். இருப்பினும், நீண்ட கால முதலீட்டிற்கு, இந்த பங்கினை தகுந்த நிதி அல்லது பங்கு ஆலோசகரை கொண்டு, வாங்கும் முடிவை எடுக்கலாம்.

ITC Fair Value December 2019

நிறுவனத்தின் பாதகமாக நிறுவனர்களின் பங்களிப்பு நேரிடையாக இல்லாமல் இருப்பதால், இந்த பங்கில் உள் வர்த்தகம்(Insider Trading) அதிகமாக நடைபெறும். சமீப காலமாக ஐ.டி.சி. நிறுவன பங்கில் உள் வர்த்தகத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. அதுவும் பெரும்பாலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இருப்பினும், பங்குகளை விற்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வாங்குவதற்கான காரணம், பின்னாளில் அதன் விலை ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை மட்டுமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ் 

Berger Paints – Paint your imagination – Fundamental Analysis 

ஜெர்மனியை சேர்ந்த லூயிஸ் ஸ்டெய்கன் பெர்கர்(Louis Steigenberger) என்பவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் பெர்கர் பெயிண்ட்ஸ். முதலில் தனது முழுப்பெயரை நிறுவன பெயராக கொண்டிருந்த நிலையில், பின்னர் அதனை லீவிஸ் பெர்கர்(Lewis Berger) என மாற்றம் செய்தார். பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் தற்போதைய சேர்மனாக திரு. குல்தீப் சிங் உள்ளார்.

பெயிண்ட் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம் ரஷ்யா, நேபாளம், போலந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கிளைகளையும், 3500க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான தொழில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையே ஆகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 48,000 கோடி மற்றும் புத்தக மதிப்பு 25 ரூபாய். தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக விலையில் 20 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை முதலீட்டாளர்களுக்கு 67 சதவீத வருவாயை தந்துள்ளது.

பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஒருவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ. 11.70 லட்சமாகும்(Including One Bonus & One Split). சுமார் 117 மடங்கில் இந்த பங்கின் முதலீடு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்தால், கடன்-பங்கு(Debt-Equity) விகிதம் 0.20 ஆக உள்ளது. 0.5 க்கு கீழ் இந்த விகிதம் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் கடன் தன்மை குறைவாக உள்ளதாக எடுத்து கொள்ளலாம். இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை. விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 15 சதவீதமாகவும் இருக்கிறது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 15 சதவீதமும், பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.

பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 38 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. பங்கின் மீதான வருவாயும் சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. 2008ம் ஆண்டில் 299 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 2,376 கோடியாக உள்ளது.

நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஆறு முறை போனஸ் பங்குகளையும், இரு முறை பங்கின் முக மதிப்பையும்(Facevalue Split) மாற்றியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் இயக்க லாபம் சராசரியாக 15 சதவீத வளர்ச்சியில் உள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான நிகர லாபம் பங்குதாரர்களுக்கு நன்மை தரக்கூடியவையாக அமைந்துள்ளது.

பணப்பாய்வும்(Cash Flow) ஒவ்வொரு நிதியாண்டில் சராசரியாக வரவு வைக்கப்படுகிறது. இது போல நிறுவனம் சார்பாக முதலீடும், சொத்துக்களை வாங்குவதும் நடைபெறத்தான் செய்கிறது.

செப்டம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1599 கோடியாகவும், நிகர லாபம் 195 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,062 கோடி மற்றும் செலவினங்கள் ரூ. 5,181 கோடி. நிகர லாபமாக ரூ. 498 கோடி. இதர வருமானமாக 69 கோடி ரூபாய் உள்ளது.

சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax), பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபத்தை தக்க வைக்க உதவியுள்ளது. அதே வேளையில் விற்பனை வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது பெர்கர் பெயிண்ட்ஸ் உச்சத்தில் இருப்பதால், விலை குறைவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்த பங்குகளை கவனிக்கலாம். போனஸ் பங்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு தெரிந்தாலும், அந்த நடவடிக்கைக்கு பின்னர் இந்த பங்கின் செயல்பாட்டை தேர்ந்தெடுக்கலாம்.

சந்தையில் பங்குகளை வாங்க தயாராகும் ஒருவர், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் ரிஸ்க் தன்மையை(Risk Management) அறிந்த பின்னரே, முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகுவது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com