Category Archives: Investopedia

The iDEA of Stock Market and Economic Crisis – T20

The iDEA of Stock Market and Economic Crisis – T20

பங்குச்சந்தை போக்கு மற்றும் பொருளாதார மந்தநிலை – 2020

இந்த நிகழ்வுக்கு உங்களை பதிவு செய்து கொள்ள…

SARAVANAKUMAR NAGARAJ (Founder of Varthaga Madurai E Services) is inviting you to a scheduled Zoom meeting.

Topic: The iDEA of Stock Market and Economic Crisis – T20

Time: Apr 11, 2020 05:30 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/3875875746?pwd=eDJxam8xbmZ2WGtuUEtPWjNkblNIZz09

https://js.instamojo.com/v1/button.js 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள்

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள் 

Fundamental Analysis – 14 Days Free Course – Quick Links to read

பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை பகுப்பாய்வு வகுப்புக்களை நாம் கடந்த மூன்று வருடங்களாக வர்த்தக மதுரை தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பயனாளர்கள், அடிப்படை பகுப்பாய்வு கற்றலின் மூலம் தங்கள் பங்குகளை அலசுவதற்கான முயற்சியை நாம் கொடுத்துள்ளோம்.

14 இலவச வகுப்புக்களை கொண்ட இந்த இணைப்பு நமது தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டண வகுப்புகளை பதிவு செய்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச வகுப்புகள் அனைத்தும் உங்களது மின்னஞ்சலில் தானியங்கி முறையில் செயல்படும்.

இதுவரை பயன்பெற்றவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் பயனாளர்களுக்கு வசதியாக விரைவான இணைப்பு ஒன்றினை இங்கே கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில், பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை கண்டறிவதற்கான வாய்ப்பு கிட்டும்.

14 இலவச வகுப்புகளின் விரைவான இணைப்புக்கள்…

மேலே குறிப்பிட்டுள்ள 14 இலவச வகுப்புகளின் இணைப்பை கிளிக் செய்து அடிப்படை பகுப்பாய்வை கற்கலாம். அடிப்படை பகுப்பாய்வில் சந்தேகம் அல்லது இணைப்பை கிளிக் செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் அதே பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

இல்லையெனில், contact@varthagamadurai.com  என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் செய்தியை அனுப்பவும்.

14 இலவச வகுப்புக்களை மின்னஞ்சலில் பெற…

Fundamental Analysis – 14 Days Free Course 

சிறப்பு  கட்டண வகுப்புகளுக்கு…

Premium Courses – Fundamental Analysis – Stocks | Mutual Funds | Money Education

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார மந்தநிலை – மார்ச் 2020

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார மந்தநிலை – மார்ச் 2020 

Automobile Sales in Economic Crisis – March 2020

அடுத்தடுத்த பிரச்சனைகளுடன் நகரும் இந்திய பொருளாதாரம், கடந்த வருடத்தில் வாகனத்துறையின் மூலம் மந்தம் கண்டது. தற்போது அதே நிலையில் வாகனத்துறையின் விற்பனையும் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், வாகனத்துறை விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை.

மார்ச் மாதத்தின் முடிவில் நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors) விற்பனையில் பெருத்த சரிவை கண்டுள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை அளவு 11,012 ஆகவும், ஏற்றுமதியின் அளவு 1,787 வாகனங்களாக இருந்தது. 2019ம் ஆண்டின் மார்ச் காலத்துடன் ஒப்பிடும் போது உள்நாட்டு வாகன விற்பனை 84 சதவீதமும், ஏற்றுமதி 68 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 95,400 கோடி ஆகும். இந்நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக (6 காலாண்டுகள்) நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. இந்த பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 48 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மஹிந்திரா(M&M) நிறுவனம் தனது மார்ச் மாத வாகன விற்பனையில் 90 சதவீத வீழ்ச்சியை (உள்நாட்டு) கண்டுள்ளது. இது போல ஏற்றுமதியிலும்(Exports) 68 சதவீத சரிவை ஏற்படுத்தியுள்ளன.

Auto Sales India March 2020

மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனம் மார்ச் மாதம் உள்நாட்டு விற்பனையில் 47 சதவீதமும், ஏற்றுமதியில் 55 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) தனது வோல்வோ பிரிவில் 1,409 வாகனங்களை மார்ச் மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதியில் வெறும் 67 வாகனங்கள் மட்டுமே விற்றுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 1,216 வாகனங்களாக இருந்தது கவனிக்கத்தக்கது.

ஆக, இந்நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் 81 சதவீதமும், ஏற்றுமதி அளவில் 95 சதவீதமும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அசோக் லேலண்ட் அனைத்து ரக வாகனங்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக 91 சதவீத வீழ்ச்சியை உள்நாட்டு(Domestic Sales) விற்பனையில் அடைந்துள்ளது. இது போல ஏற்றுமதியில் இம்முறை 61 சதவீத விற்பனை குறைவாக நடந்துள்ளது.

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரு சக்கர வாகன பிரிவில் உள்நாட்டு விற்பனையாக 3.16 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 42 சதவீத சரிவாகும். ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் 35 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது.

சொல்லப்பட்ட நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சி நடப்பு ஏப்ரல் மாதத்திலும் தொடரலாம். இதன் விளைவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அடுத்த இரு காலாண்டுகளில் பெரும்பாலும் சரிவை மட்டுமே கொண்டிருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல் 

Anuh Pharma – Small Cap – Fundamental Analysis

எஸ்.கே. குழும நிறுவனங்களின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் இதர பாக்டீரியா எதிர்ப்பு மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. காசநோய் எதிர்ப்பு மற்றும் மேக்ரோலைட்ஸ் ஆகிய தயாரிப்புகளில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.கே. குழுமம்(SK Group) மருந்து தயாரிப்பு போக சுகாதாரம், கல்வி, ஏற்றுமதி, கெமிக்கல், சமூக சேவை ஆகியவற்றிலும் பங்காற்றி வருகிறது. அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 370 கோடி. தற்போதைய பங்கு ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 66 ரூபாயாக உள்ளது. எனவே பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் இரண்டு மடங்கில் உள்ளது.

கடன்-பங்கு விகிதம் 0.06 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 91 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனில்லாத நிறுவனமாக உள்ள அனுக் பார்மா நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 76 கோடியாகவும், செலவினம் 67 கோடி ரூபாயாகவும் உள்ளது.

டிசம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ. 6.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 318 கோடியாகவும், நிகர லாபம் 20.50 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஐந்து வருட காலத்தில் 4 சதவீதமும், பத்து வருடங்களில் 10.3 சதவீதமாகவும் உள்ளது.

லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 6 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 10.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 16.5 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலத்தில் 11 சதவீதம் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை நிறுவனம் ஐந்து முறை போனஸ் பங்குகளை(Bonus Issue) முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. அளிக்கப்பட்ட போனஸ் பங்குகள் அனைத்தும் பங்கு ஒன்றுக்கு, ஒன்றுக்கும் மேலாக தான் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்பு நிலை கையிருப்பு தொகை ரூ. 152 கோடியாகும். பங்கின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஒரு வருடத்தில் 14 சதவீதத்தில் உள்ளது. இதுவே ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமும், பத்து வருடங்களில் 17 சதவீதமாகவும் இருக்கிறது. சமீப தகவலில், பங்கு ஒன்றுக்கு 2.75 ரூபாயை டிவிடெண்ட் தொகையாக(Dividend) அறிவித்துள்ளது அனுக் பார்மா நிறுவனம்.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் அனுக் பார்மா நிறுவனத்தின் உண்மையான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 160 ஐ மதிப்பாக பெறும். பங்குகளை வாங்க விரும்புவோர் ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis – Free Course) கண்டறிந்து, சரியான விலையில் முயற்சி செய்ய வேண்டும். அலசுவதற்கு நேரமில்லாதவர்கள் அல்லது சிரமமாக எண்ணுபவர்கள், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்குகளை வாங்கி வைப்பது மட்டுமே வேலையாக இல்லாமல், வருங்காலங்களில் அதன் நிதி அறிக்கையையும் அலசுவது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்

தைரோகேர் டெக்னாலஜிஸ்  – பங்குச்சந்தை அலசல் 

Thyrocare Technologies – Think Thyroid, Think Thyrocare – Fundamental Analysis

1996ம் ஆண்டு கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். மருத்துவ சேவையில் உள்ள இந்த நிறுவனம் தைராய்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த துறையில் நாட்டின் முதல் தானியங்கி ஆய்வக நிறுவனமாகவும் தைரோகேர் உள்ளது. நிறுவனர்(Velumani Arokiaswamy), பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியும் ஆவார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3,300 கோடி. இதன் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாயாக உள்ளது. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 8 மடங்கில் உள்ளது. கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.03 ஆக இருக்கிறது. எனவே நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை.

நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 140 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 344 கோடியாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 370 கோடியாகவும், செலவினம் ரூ. 222 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபம் ரூ. 95 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல லாபம் மூன்று வருடங்களில் 16.50 சதவீதமும், ஐந்து வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருட காலத்தில் 14 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த ஒரு வருடத்தில் 20 சதவீதம் வளர்ந்துள்ளது.

மூன்று வருட காலத்தில் 19 சதவீதமும், ஐந்து வருடங்களில் 19 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. நிறுவனத்தின் பணவரவு(Cashflow) சீராக இருந்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் 2019 – மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 98 கோடியாகவும், செலவினம் 55 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 43 கோடி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் ரூ. 39 கோடியாக உள்ளது.

சொல்லப்பட்ட மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 கோடி ரூபாயாக உள்ளது. கடந்து பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மற்றும் லாப விகிதம் சீராக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பங்கின் விலை உச்சத்திற்கு அருகில் இருப்பதை காட்டுகிறது. அதன் தற்போதைய உண்மையான பங்கு ஒன்றின் விலை ரூ. 342 ஐ பெறும்.

இருப்பினும், தேவை அதிகமாக உள்ள பங்குகளின் விலை எப்போதும் சந்தையில் அதிகமான விலைக்கு தான் வர்த்தகமாகும். எனவே, மற்ற அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Factors) அலசி ஆராய்ந்து பங்கு வாங்கும் முடிவுகளை எடுக்கலாம். நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் பொறுப்புகள் நிறுவனத்தின் சொத்துக்களை விட குறைவாக தான் உள்ளது. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல்

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல் 

Would you buy HEG LTD – Graphite Electrode now ? Fundamental Analysis

எல்.என்.ஜே. பில்வாரா(LNJ Bhilwara) குழுமத்தின் ஒரு அங்கம் மற்றும் அதன் முதன்மை நிறுவனம் தான் எச்.இ.ஜி. லிமிடெட். மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கிராபைட் எலெக்ட்ரோடு(Graphite Electrode) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் செயல்படுகிறது. தனது உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குழுமத்தின் அனுபவம் சுமார் 60 வருடங்களாகும். நிறுவனத்தின் நிறுவனர் திரு. எல்.என். ஜுன்ஜுன்வாலா தனது ஆரம்பகட்ட தொழிலாக ஜவுளி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் துவங்கினார். பின்பு ஆற்றல் சார்ந்த பல தொழில்களையும், தொழில்நுட்பம், மருத்துவம், கிராபைட் என பல பரிணாமத்தை எடுத்து வந்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,591 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,026 கோடியாகவும் இருந்தது. எச்.இ.ஜி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,500 கோடியாகவும், புத்தக மதிப்பு 1,038 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.16 ஆக உள்ளது. எனவே, நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 90 மடங்கில் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் செய்யப்படவில்லை. அதே வேளையில் கடந்த காலாண்டில் நிறுவனர்கள் சார்பில் 2 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் ஒரு மடங்கில் தான் உள்ளன. இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை(Dividend) அளிப்பதில் சிறப்பாக உள்ளன.

எச்.இ.ஜி. லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலங்களில் 85 சதவீதமும், ஐந்து வருடங்களில் 41 சதவீதமும் மற்றும் பத்து வருட கால அளவில் 14 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 36 சதவீதமும், லாபம் 98 சதவீதமும் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை பற்றிய இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்

பங்கு மீதான வருவாய்(Return on Equity – ROE) கடந்த மூன்று வருடங்களில் 77 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 56 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் ரூ. 3,968 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதார காரணிகள் இந்த நிறுவனத்தின் தொழிலை அவ்வப்போது பாதிக்கும். அமெரிக்க – சீன வர்த்தக போர், கொரோனா வைரஸ் பதற்றம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வருவாயை சமீபத்தில் பாதித்துள்ளது எனலாம்.

கடந்த 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த பங்கின் விலை ரூ. 180 என்ற அளவில் வர்த்தகமானது. பின்பு மலை போல் உயர்ந்து, 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ. 4900 என்ற விலை வரை சென்றது. கடந்தாண்டு நிறுவனம் சார்பில் பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப பெறும் முறையில்(Buyback of Shares) பங்கு ஒன்றுக்கு ரூ. 5500 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று வருடத்திற்கு முன்னர் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெருத்த லாபத்தை எடுத்துள்ளனர். பின்பு, இந்த பங்கின் விலை 2019ம் ஆண்டு (பங்குகள் திரும்ப பெறும் செய்திக்கு பிறகு) முழுவதும் சரிவை நோக்கி தான் சென்றது. நல்ல லாபத்தை கண்ட அன்னிய முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டிலிருந்து கடந்த நிதியாண்டின் முடிவில் வெளியேறியுள்ளனர்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதன் வருவாய் மற்றும் லாபம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 394 கோடி மற்றும் செலவினம் ரூ. 389 கோடியாக இருந்துள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ. 1 கோடி நிகர நஷ்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 2000, 3000 என்ற விலையில் இந்த பங்குகளை வாங்கியவர்கள் பெருத்த சரிவை சந்தித்துள்ளனர். சுழற்சி முறை மற்றும் உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படும் இந்த பங்கு, அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்தவை. அதே வேளையில் அனைத்து காலத்திலும் வாங்கக்கூடிய பங்காக இது அமையவில்லை.

எனவே நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக வளரும் பட்சத்தில், பங்கின் விலையும் மலிவாக கிடைக்கும் போது முதலீடு செய்யலாம். நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அடிப்படை பகுப்பாய்வின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 850 மதிப்பு பெறும் என சொல்லியிருந்தோம். மூன்றாம் காலாண்டு முடிவின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 710 என்ற மதிப்பை மட்டுமே பெறக்கூடும். தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,170 என்ற விலையில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனம் கடந்த நிதியாண்டின் முடிவில் பங்கு ஒன்றுக்கு 80 ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியிருந்தது. இப்போது மூன்றாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – வோல்டாஸ் பங்குகளை வாங்கலாமா ?

பங்குச்சந்தை அலசல் – வோல்டாஸ் பங்குகளை வாங்கலாமா ?

Voltas – A Tata Product – Fundamental Analysis

டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ்(Voltas) நிறுவனம் கடந்த 1954ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இந்நிறுவனம் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் வணிகத்தில் பரவலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏர் கண்டிஷனர், ஏர் கூலர்கள், நீர் குளிரூட்டிகள், நீர் விநியோகிப்பான் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை சேவையை செய்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் முதல் இன்வெர்ட்டருடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை தயாரித்த நிறுவனம் வோல்டாஸ். இந்தியாவின் மிகப்பெரிய ஏர் கண்டிஷனிங் நிறுவனமாகவும் வோல்டாஸ் வலம் வருகிறது. உலகின் மிகப்பெரிய கோபுரமான துபாயின் பர்ஜ் கலிஃபா(Burj Khalifa) மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் மிகப்பெரிய கப்பலான குயின் மேரியிலும்(RMS Queen Mary 2) வோல்டாஸ் நிறுவனத்தின் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.

வீட்டு உபகரணங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க சேவைகளை கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 23,210 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 123 விலையில் உள்ளது. இதன் சந்தை பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 6 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்திற்கு கடன்கள் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 30 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை.

கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 32 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த பத்து வருட காலத்தில் 17 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 8 சதவீதமும், 5 வருட காலத்தில் 6 சதவீதமும் மற்றும் பத்து வருட காலங்களில் 5 சதவீதமும் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை இலவச வகுப்புகள்(Stock Market Course) – பதிவு செய்ய

நிறுவனத்தின் லாபம் கடந்த மூன்று வருடங்களில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமும் மற்றும் 10 வருடங்களில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. வோல்டாஸ் பங்கின் விலை கடந்த ஐந்து வருடங்களில் 23 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 4,060 கோடி.

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் 2019ம் காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,493 கோடியாகவும், நிகர லாபம் 87 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த டிசம்பர் 2018 காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் மற்றும் லாபத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,124 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 508 கோடி.

Voltas Balance sheet 2019

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 30 மடங்காகவும் உள்ளது. தற்போது இந்த பங்கின் விலை ரூ. 700க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வின்(DCF) படி, பங்கு ஒன்றின் விலை 250 ரூபாய் மதிப்பை பெறும். நிறுவனத்தின் நிதி அறிக்கை திருப்திகரமாக உள்ளது. பிராண்டு(Value Brand) காரணத்தால் பங்கு விலை அதிகமாக காணப்படுகிறது. இந்த துறை பருவகால மற்றும் சுழற்சி முறையில் காணப்படுவதால், வருவாய் பெரும்பாலும் சொல்லப்பட்ட காலத்தில் தான் மீண்டெழும்.

பொதுவாக சில்லரை வணிகத்தில் குளிர் சாதனங்களின் சேவை கோடை காலத்தில் தான் தேவைப்படும். இந்த நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் ஜூன் காலாண்டுகளில் (ஏப்ரல் – ஜூன்) தான் அதிகமாக இருக்கும். அதே போல மார்ச் காலாண்டுகளும் (ஜனவரி-மார்ச்) ஓரளவு வருமானத்தை ஈட்டும். எனவே வருவாய் மற்றும் பங்கு விலை குறைந்திருக்கும் காலங்களில் இந்த பங்கினை கவனிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டுகள் – வரி சேமிப்பு – கவனிக்க வேண்டியவை

இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டுகள் – வரி சேமிப்பு – கவனிக்க வேண்டியவை 

Things to know about ELSS Mutual Funds – Tax Saving Avenues

சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்ஜெட் தாக்கல் 2020ல் பெரும்பாலானோரின் குழப்பம் வருமான வரி வரம்பு முறையில் தான். இரு வகையான வரி முறை உள்ளதே, நான் எந்த முறையை தேர்ந்தெடுக்க வேண்டும், இந்த முறையை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு பலன் என பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உண்மையில் நடப்பு பட்ஜெட் தாக்கலில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தான். மாறாக, வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது – 115 BAC. இந்த புதிய பிரிவின் படி தனிநபர் மற்றும் இந்து கூட்டு குடும்பம் ஆகியோர் தங்கள் வரியை செலுத்தும் நிலையில் இரு வகையான தேர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த தேர்வில் முதலாவதாக நடப்பில் இருக்கும் வருமான வரி வரம்பு மற்றும் அதற்கான அடிப்படை கழிவுகள், வரி சலுகைகள் அமையும். இரண்டாவதாக வருமான வரி குறைந்த விகிதத்தில்(New Tax Regime) வசூலிக்கப்படும். ஆனால் இந்த தேர்வுக்கு நீங்கள் அடிப்படை கழிவு(Standard Deduction) மற்றும் சொல்லப்பட்ட 70 வகையான வரி சலுகைகளை விட்டு கொடுக்க வேண்டும். அதாவது வரி தாக்கல் செய்யும் போது அதனை வரி விலக்காக பயன்படுத்த இயலாது – அவ்வளவே.

பிரிவு 115BACன் படி இரண்டாம் முறையில் நீங்கள் பயன்படுத்த முடியாத சில முக்கிய வரி சலுகைகள் – பி.எப்., பி.பி.எப்., செல்வ மகள், வரி சேமிப்பு மியூச்சுவல் பண்டுகள், வீட்டு வாடகை படி, குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை, வீட்டு கடனுக்கான அசல் மற்றும் வட்டி, ஓய்வூதிய தொகையில் ஒரு பகுதி, மருத்துவ காப்பீடு, அஞ்சலக வரி சேமிப்பு திட்டங்கள், வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு, தேசிய பென்ஷன் திட்டம், ஆயுள் காப்பீடு, மாற்று திறனாளிகளுக்கான சலுகை, நன்கொடை ஆகியவை.

முக்கியமாக இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமான படை – இவற்றில் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்தவர் தனது பணிக்காலத்தில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டும், முழுமையான பணிக்காலத்தை நிறைவு செய்திருந்தால் அவருக்கு கிடைக்கப்பெறும் ஓய்வூதியத்தில் வரி சலுகை உண்டு. தற்போது சொல்லப்பட்ட இரண்டாம் வரி வரம்பில், இதற்கான சலுகையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக 80C வரிசை, 80D வரிசை, 80E வரிசை, 80G வரிசைகளில் இனி இரண்டாம் வரி வரம்பின் படி, வரி சலுகை கிடைக்கப்பெறாது.

இருப்பினும் 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலில் வரி சேமிப்பை அதிகமாக கொண்டிருப்போர் முதலாவது வரி முறையை (பழைய  முறை) தேர்ந்தெடுப்பது சாதகமாக இருக்கும். குறைவான வருமான வரி வரம்பில் உள்ளோருக்கும் முதல் பிரிவு நன்மையாக அமையும். ஏனெனில் அங்கு அடிப்படை கழிவு மற்றும் பி.எப்.(PF), என்.பி.எஸ்.(NPS) வரி சலுகைகள் உண்டு.

நம்மில் பெரும்பாலோர் காப்பீடை மட்டுமே வரி சலுகையாக கொண்டிருந்தாலும், இ.எல்.எஸ்.எஸ். எனப்படும் பரஸ்பர நிதிகளின் வரி சலுகை முதலீடுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இனி இந்த பண்டின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

ELSS (Equity Linked Saving Scheme) – Tax Saving Mutual Funds:

ELSS Funds என்பது பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் வரி சலுகை திட்டமாகும். வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80Cன் கீழ் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி சலுகை உண்டு. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். இந்த பிரிவில் தான் பி.எப்., தேசிய பென்ஷன் திட்டம், ஆயுள் காப்பீடு, வீட்டுக்கடனுக்கான  அசல் தொகை ஆகியவற்றுக்கு வரி சலுகை கிடைக்கப்பெறும். எனவே மற்ற வரி சேமிப்புகளையும் கணக்கில் கொண்டு, இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பொதுவாக வரி சலுகை பெறும் அனைத்து திட்டங்களுக்கும் லாக்-இன்(Lock-in Period) காலம் உண்டு. அதாவது திட்டத்தில் சொல்லப்பட்ட காலம் வரை அந்த முதலீட்டை வெளியே எடுக்க முடியாது. ELSS பண்டு திட்டத்தில் அதிகபட்சமாக மூன்று ஆண்டு காலம் மட்டுமே. வேறு எந்த வரி சலுகை திட்டத்திலும் இல்லாத குறைந்த கால லாக்-இன் வசதி இந்த பண்டில் மட்டுமே உள்ளது சாதகமான விஷயமாகும்.

இ.எல்.எஸ்.எஸ். பண்டுகளில் பெறப்படும் முதலீடு பெருவாரியாக பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும். சிறிய அளவிலான தொகை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படலாம். நீண்டகாலத்தில் இந்த பண்டுகள் மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் (PPF, Insurance, Postal Savings, Tax Saving Bonds) அதிக வருவாயை கொடுக்க கூடியவை. அதே வேளையில் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் தன்மை கொண்டவை.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு தொகை என எதுவும் கிடையாது. முதலீட்டின் முடிவில் கிடைக்கக்கூடிய தொகை மூலதன ஆதாயம்(Capital Gains) எனப்படும். எனவே இவற்றில் முதிர்வு தொகை என எதுவும் கிடையாது. நாம் எப்போது இந்த திட்டத்தில் இருந்து பணத்தை வெளியே பெறுகிறோமோ, அப்போது அந்த தொகை மூலதன ஆதாயம் எனப்படும்.

லாக்-இன் ரகசியங்கள்:
  • ELSS பண்டுகளில் குறைந்தபட்ச லாக்-இன் காலமாக மூன்று வருடங்களை சொல்லியிருந்தோம். இங்கே கவனிக்க வேண்டியவை, இந்த வசதி மற்ற வரி சலுகை திட்டங்களின் லாக்-இன் வசதியை போல அல்ல.
  • அதாவது, நீங்கள் ஒரு முறை மட்டுமே இந்த பண்டில் முதலீடு செய்திருந்தால், முதலீடு செய்த தேதியிலிருந்து மூன்று வருட காலம் கணக்கிடப்படும். மூன்று வருட காலம் முடிந்தவுடன் நீங்கள் முதலீட்டு தொகையை பெறலாம் அல்லது முதலீட்டை உங்கள் இலக்கு காலம் வரை தொடரலாம்.
  • இதுவே, மாதாமாதம் எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்திருந்தால், ஒவ்வொரு மாத முதலீடும் மூன்று வருட கால லாக்-இன் வசதியை பூர்த்தி செய்ய வேண்டும். எனவே இந்த ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நலம்.
  • மற்ற மியூச்சுவல் பண்டுகளில் வெளியேறும் கட்டணம் இருந்தாலும், இந்த வரி சேமிப்பு பண்டுகளில் அவ்வாறான கட்டாயம் எதுவுமில்லை. எதிர்பாராத விதமாக முதலீடு செய்துள்ள நபர் இறக்க நேரிடுகையில், லாக்-இன் காலத்திற்கு முன்னரே, நாமினி பணத்தை பெற்று கொள்ளலாம். பெறக்கூடிய தொகை, அன்றைய நாளின் NAV மதிப்பை பொறுத்தது.
ELSS Funds வரி விகிதங்கள்:
  • மியூச்சுவல் பண்டுகளை பொறுத்தவரை திறந்த வெளி பண்டுகளுக்கு முதிர்வு தொகை எனவும் எதுவுமில்லை. பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நாம் வெளியேற முடிவெடுக்கும் போது, அன்றைய நாளில் உள்ள மதிப்பு அதன் லாப – நட்டத்தை நிர்ணயிக்கும்.
  • நமது முதலீடு லாபமாக இருந்தால், அதனை வெளியே எடுக்கும் போது மூலதன ஆதாயம் என கூறப்படும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் லாபத்தை, உங்களது வங்கி கணக்கில் பெற்றால் மட்டுமே, அது மூலதன ஆதாயமாக கணக்கிடப்படும். நட்டமாக இருந்தால் அது மூலதன இழப்பாக(Capital Loss) எடுத்து கொள்ளப்படும்.
  • உங்கள் முதலீடு லாபமாக இருந்து, அதனை முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் வெளியேற்றினால் குறுகிய கால மூலதன ஆதாயமாக(Short term capital gains -STCG) எடுத்து கொள்ளப்பட்டு அதற்கான வரி விகிதம் 15 சதவீதமாக உள்ளது.
  • ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கப்படும் தொகை, நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்படும். நீண்ட கால மூலதன ஆதாய(Long term capital gains -LTCG) தொகை ஒரு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்திற்கு மேலாக இருந்தால், அந்த தொகைக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். எனவே ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.
  • டிவிடெண்ட் தொகைக்கு(Dividend Plan), நடப்பில் 10 சதவீத வரி செலுத்தி விட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும். எனவே முதலீட்டாளர்கள் இதற்கு வரி செலுத்த தேவையில்லை. அதே வேளையில், ஒரு நிதியாண்டில் பெறப்படும் டிவிடெண்ட் தொகை ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் போது, முதலீட்டாளர் 10 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
  • சொல்லப்பட்ட டிவிடெண்ட் நடைமுறையில், நடப்பு பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 10 சதவீத வரியை செலுத்த தேவையில்லை எனவும், முதலீட்டாளர்கள் தாங்கள் பெறக்கூடிய டிவிடெண்ட் தொகைக்கு, தங்களது வருமான வரி வரம்பின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. புதிய நடைமுறை 2020-21ம் நிதியாண்டுக்கானது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வங்கி வட்டி விகிதம் – ஒரு சிறு பார்வை

நாட்டின் வங்கி வட்டி விகிதம் – ஒரு சிறு பார்வை 

Bank Interest Rate in India – A Short look

கடந்த டிசம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம்(Retail Inflation) 7.35 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது போல கடந்த 2019 செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 4.5 சதவீதமாக இருந்தது. டிசம்பர் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.60 சதவீதமாக உள்ளது. பொதுவாக நாட்டின் பணவீக்கம் உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி மந்த நிலை காண்பதும் மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பது – இந்த மூன்று நிலையும் ஒரு சேர நிகழ்வதை தேக்கநிலை(Stagflation) என்பர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிலை தொடர்ந்து நிகழ்ந்து வந்தால், அது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே அதனை மீட்டெடுப்பதே ஒரு நாட்டின் அரசுக்கான கடமையாக சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலையில், ஒரு நாட்டின் வட்டி விகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது. வட்டி விகித மாற்றங்கள் பொருளாதார கதையில் முக்கிய கதாபாத்திரமாக அமையும் என்பதில் மாற்றமில்லை.

மத்திய ரிசர்வ் வங்கியின் நடப்பு ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 – 3.50 % என்ற அளவில் உள்ளது. இது முன்னர் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடத்திற்கான டெபாசிட் விகிதம் 6.10 – 6.40 சதவீதம் என்ற அளவில் பாரத ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்டுள்ளது. கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் 8.45 – 9.40 சதவீத அளவில் காணப்படுகிறது. மேலே சொன்னவை மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தகவல். ஆனால் வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தும்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய ரிசர்வ் வங்கி(RBI), நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரை வங்கி வட்டி விகிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லியிருந்தோம். உதாரணமாக பொருளாதார மந்த நிலையில், ஒரு நிறுவனத்திற்கு கடன் அதிகமாக இருக்கும் போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனை களைய அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். வங்கியின் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், நிறுவனங்களும் குறைவாக வட்டியை கட்டி விட்டு, உற்பத்தியை மேம்படுத்தலாம். இதன் மூலம் விற்பனை மற்றும் தொழிலாளர்களின் வருவாயில் மாற்றம் ஏற்படலாம். இது அரசுக்கான வரி வருவாயை பெறக்கூடும்.

மாறாக, பணவீக்கம் அதிகரித்து அதன் மூலம் வங்கி வட்டி விகிதங்கள் கூட்டப்பட்டால், நிறுவனத்தின் நிதி அறிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தனிநபர் வருவாய் மற்றும் கடன் நிலையிலும் பாதகமாக அமையும். எனவே மத்திய ரிசர்வ் வங்கி கவனமாக பணவீக்கம் மற்றும் வட்டி விகித நிலையை கையாளும். அரசை பொறுத்தவரை மக்களிடையே பணப்புழக்கத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை ஊக்குவிப்பதே முதல் கடமையாகும். இதன் காரணமாக அரசின் வரி வருவாய் அதிகரிக்கும். வரி வருவாய் நாட்டின் மானிய தேவைக்கு உதவக்கூடும்.

பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இது வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். அதே வேளையில் கடன் பெறுபவர்களுக்கு பாதகமாக செல்லும். நாட்டின் வட்டி விகிதம்(Interest Rate) கடந்த 20 வருடங்களில் சராசரியாக 7 சதவீத அளவில் காணப்படுகிறது. அதிகபட்சமாக 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 14.50 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரே வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக மாற்றிய எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) மியூச்சுவல் பண்ட் பங்கு

ஒரே வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக மாற்றிய எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) மியூச்சுவல் பண்ட் பங்கு

153 Percent Returns in a year – HDFC Asset Management Company – Mutual Fund

எச்.டி.எப்.சி.(HDFC) குழுமத்தின் துணை நிறுவனமான எச்.டி.எப்.சி. அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி(HDFC Asset Management Company) பரஸ்பர நிதி துறையில் தனது சேவையை அளித்து வருகிறது. டிசம்பர் 2019 மாத முடிவின் படி, எச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 3.82 லட்சம் கோடி. வேறு எந்த பரஸ்பர நிதியும் இந்தளவு தொகையை கொண்டிருக்காததால், தற்போது எச்.டி.எப்.சி. பரஸ்பர நிதி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டாம் இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் பண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனமும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எச்.டி.எப்.சி. அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1100 என வெளியிடப்பட்டது. தற்போது இந்த நிறுவன பங்கு ஒன்றின் விலை ரூ. 3,178.

எச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்டு(Mutual Fund) நிறுவனத்தின் சந்தை மதிப்பு 67,600 கோடி ரூபாய். பரஸ்பர நிதி துறையில் சேவை புரிவதால், நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதமும் 258 மடங்கில் உள்ளது முதலீட்டாளருக்கு சாதகமான அம்சம். நிறுவனர்களின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது.

கடந்த மூன்று வருட கால விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 25 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கின் விலை ரூ. 1,470 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 52 வார உச்சபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ. 3,844 வரை சென்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 150 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு, நாம் ரூ. 1 லட்சத்தை இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால், பங்கு ஒன்றுக்கு 3,800 ரூபாய் என்ற விலையில் விற்கும் போது, நமக்கு கிடைக்கப்பெறுவது ரூ. 2.58 லட்சம். லாபம் மட்டுமே 1.58 லட்சம் ரூபாய் என அளவிடப்படுகிறது.

டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 525 கோடியாகவும், செலவினம் 111 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 466 கோடி மற்றும் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net Profit) 353 கோடி ரூபாய். கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் நிகர லாபம் 243 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது சொல்லப்பட்ட லாபம் 45 சதவீதம் கூடுதலாகும்.

2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,075 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 931 கோடி ரூபாயாகவும் இருந்தது. செப்டம்பர் 2019 காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 3,307 கோடி. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஒரு வருடத்தில் 35 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com