All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Government Bonds (G-Secs) in Global Indices Soon – RBI

பொதுவாக அரசாங்க பத்திரங்கள் என்பது மத்திய அரசினால் நமது நாட்டின் நாணயத்தில்(ரூபாய் மதிப்பு) வழங்கப்படும். இந்த பத்திரங்களை வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பில் வெளியிட்டால், அது சவரின் பத்திரங்கள்(Sovereign Bonds) எனப்படும். மத்திய அரசு தனக்கு தேவையான நிதியை (கடன்) முதலீட்டாளர்களிடம் இது போன்ற பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் பெறும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பத்திரங்களை பெறும் முதலீட்டாளர்கள் அதற்கான வட்டி வருமானத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறுவர். அரசு பத்திரங்களை பெறுவதில் நாட்டில் உள்ள வங்கிகள் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது போக வெளிநாட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த பெரு நிறுவனங்கள் அரசாங்க பத்திரங்களை வாங்கும். அரசாங்க பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் ரிஸ்க் தன்மை மிக குறைவாக உள்ளவை.

பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் தான் அரசாங்க பத்திரங்கள்(Government Bonds) வெளியிடப்படும். ஆரம்ப நிலையில், மத்திய அரசின் நிதி தேவைக்காக வெளியிடப்படும் பத்திரங்கள் முதன்மை சந்தைக்கு வரும். பின்னாளில் அதனை இரண்டாம் சந்தையிலும் நாம் வாங்கி கொள்ளலாம். பொதுவாக அரசு பத்திரங்கள் 5, 10,15, 20, 30 வருடங்கள் என முதிர்வு காலத்தை கொண்டிருக்கும். அரசு பத்திரங்களில் கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் ரிஸ்க் இல்லா விகிதமாக(Risk Free Rate – Bond yield) சொல்லப்படும். ஏனெனில், அரசாங்கம் கடன் வாங்கியிருந்தாலும் அந்த கடனை உறுதியாக அடைத்து விடும் என்ற நம்பிக்கை உலகளவில் உள்ளது. மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில், அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதற்கு உரிமை உள்ளது.

அரசு பத்திரங்களுக்கும், வங்கி வட்டி விகிதங்களுக்கும் நேரெதிர் உறவு உண்டு. அதாவது எப்போதெல்லாம், வங்கியில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதோ, அப்போது பத்திரங்களுக்கான வட்டி விகிதம்(Bond Prices) அதிகரிக்கும். அதே போன்று வங்கி வட்டி விகிதம் அதிகமாக காணப்படும் போது, அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் குறைய கூடும். இது முதலீட்டாளர்களின் வருவாய் தேவையை சார்ந்து தான் மாறுபடுகிறது.

அதனால் தான் பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் அதிகரிக்கும். இரண்டையும் சாதகமாக பயன்படுத்துவது தான் ஒரு முதலீட்டாளரின் சாமர்த்தியம். தற்போது பத்து வருட அரசு பத்திரங்களின் விலை 6.42 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதுவும் பங்குச்சந்தை போன்றது தான், வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

சில தகவல்கள்: GS2029 – 10 வருட பத்திரங்கள் – 6.45 %, GS2026 – 7.27 %, GS2024 – 7.32 %, GS2024 – 6.18 %, GS2021 – 6.17 %, 91 Day T-bills – 5.05 % (Data: RBI)

கடந்த பட்ஜெட் தாக்கலிலும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சலுகை சம்மந்தமாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். மேலும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுடன் இணைந்து அந்நிய முதலீட்டாளர்களும் நம் நாட்டின் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வசதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களை வாங்கி வைக்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) துவங்குவது அவசியம். அரசு பத்திரங்களை விற்கும் போது வரி விகிதங்கள் உள்ளது என்பதை மறக்க கூடாது.

வங்கியில் உள்ள நிதி நிலைமையை சரி செய்யவும், அரசுக்கு தேவையான நிதி முதலீடுகளை பெறுவதற்கும் உலக சந்தையில் அரசு பத்திரங்களை வெளியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அமெரிக்க சந்தையில் அதன் பத்திரங்களின் வட்டி விகிதம் 2 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், சீனாவில் 2.97 சதவீதம் என்ற வட்டி விகிதத்திலும் அரசு பத்திரங்கள் உள்ளது. ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், நம் நாட்டின் அரசு பத்திரங்களின் வருவாய் வளர்ந்த நாடுகளிடையே கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே வேளையில் அரசு கடன் பெறுவதற்காக உலக சந்தைகளில் பத்திரங்களை விற்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் சில பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.எது எப்படியோ, வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை, இந்தியா ஒரு முதலீட்டு வாய்ப்பாக தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு ?

வெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு ?

Will the SBI Cards IPO get Success – Initial Public Offering ?

ஒரு தொழிலை துவங்குவது எளிதான விஷயமல்ல, அதே வேளையில் அதனை முடியாத காரியமாக நாம் காண முடியாது. ஒரு புதிய தொழிலை துவங்குவதில் முதலீடு திரட்டுவது என்பது எதிர்பார்க்கும் தன்மையே. தொழில் ஆரம்பிப்பதற்கான முதலீட்டை தனது சேமிப்பிலிருந்தோ, குடும்பம் மற்றும் உற்றார்-உறவினர்களின் மூலம் பெறுவதை சிறுவிதை நிதி(Seed Capital) என கூறலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சில வேளைகளில் கூட்டு நிதியும், சிறு முதலீட்டாளர்களின் நிதியும்(Crowd Funding & Angel Investing) சிறுவிதை நிதியாக அழைக்கப்படலாம். இதற்கடுத்தாற் போல துணிகர முதலீடு(Venture Capital), தனியார் மூலதனம்(Private Equity) என்ற முதலீட்டு முறைகளும் உண்டு. இதனை சார்ந்து தொழில் நிறுவன அமைப்பும் மாறுபடும். ஆரம்ப காலத்தில் தனியுரிமை கொண்ட தொழில்(Proprietorship), பின்னர் கூட்டு முயற்சி, தனியார் நிறுவனம் முதல் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம் வரை செல்லும்.

பொதுவெளியில் முதலீடு திரட்ட முயற்சிக்கும் நிறுவனம், பொது நிறுவனமாக பதிவு செய்வது அவசியமாகும். முதலீடு செய்யும் நபர்களுக்கு பங்குகளை ஒதுக்குவது நிறுவனத்தின் கடமையாகும். பங்குச்சந்தைக்கு ஒரு நிறுவனம் வருவதால், வட்டியில்லாத கடன் பெறுவது போன்றதாகும். முதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கு பங்குகளை வழங்குவதால், அவர்களுக்கு நிறுவனத்தின் லாப-நஷ்டத்தில் பங்கு உண்டு.

அதே வேளையில், நிறுவனத்தின் நிறுவனருக்கு நிதி சார்ந்த பொறுப்புகள் மிக குறைவு. நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட அந்த நிறுவனம் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பங்குகள் முதன்மை சந்தையில் வெளியீடு செய்யப்படும். ஆனால், இரண்டாம் சந்தையில்(Secondary Market) தான் வர்த்தகமாகும். நல்ல நிறுவனங்களின் பங்குகளை முதன்மை சந்தை வெளியீட்டில் பெறுவோர், இரண்டாம் சந்தையில் விற்று விட்டு லாபம் காண்பர். இது சரியில்லாத நிறுவனங்களுக்கும் சில சமயங்களில் லாபத்தில் அமையலாம்.

சமீபத்தில் ஐ.பி.ஓ. வெளியீட்டில் வந்த ஐ.ஆர்.சி.டி.சி(IRCTC). பங்கு ஒன்றின் விலை ரூ. 320 ஆக இருந்தது (வெளியீட்டு தேதி: அக்டோபர் 3, 2019). தற்போது இந்த பங்கின் விலை ரூ. 1900 க்கும் மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதுவும் வெளியீட்டிலிருந்து ஐந்து மாதத்துக்கும் குறைவான காலத்தில், ஆறு மடங்கு விலையில் – 500 சதவீதத்திற்கு மேல் லாபம் !

இது எல்லா பங்குகளிலும் நடைபெற வாய்ப்பில்லை. ஐ.ஆர்.சி.டி.சி. ஒரு மத்திய அரசின் நிறுவனமாக மட்டுமில்லாமல், நாட்டின் ரயில்வே துறையில் உள்ள ஏகபோக(Monopoly) நிறுவனமாகும். இதற்கு ரயில் பயண சீட்டு சேவையில் போட்டியாளர்கள் யாருமில்லை என்பது கவனிக்கத்தக்கது. இனி வருங்காலத்தில், தனியார் நிறுவன ரயில் சேவைகளும், அதனை சார்ந்த வருவாயும் வந்தால் மட்டுமே ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திற்கு போட்டியாக அமைய முடியும்.

கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட டி.மார்ட் (Avenue Supermarts – DMart) நிறுவனம், ஐ.ஆர்.சி.டி.சி. வெளியீட்டை போல நடந்தது. அன்று பங்கு ஒன்றுக்கு ரூ. 299 என்ற விலையில் இருந்த டி.மார்ட் நிறுவன பங்கு இன்று ரூ. 2500க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால், அதே வருடத்தில் வெளிவந்த மற்ற நிறுவன பங்குகள் அவ்வளவாக ஏற்றம் பெறவில்லை. சில நிறுவனங்கள் அதன் வெளியீட்டு விலையை விட குறைவாக தற்போது வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

பொதுவாக, முதலீட்டு ஜாம்பவான் திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) ஐ.பி.ஓ. வெளியீட்டில் பங்குகள் வாங்குவதை விரும்புவதில்லை. ஐ.பி.ஓ. வெளியீட்டில் பங்குகளை வாங்கி, இரண்டாம் சந்தையில் உடனடியாக லாபம் பார்த்தாலும், நீண்டகாலத்தில் ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கையை அலசுவது முக்கியமாகும்.

வங்கிகள் அல்லாத நிதி சேவை துறையில் பதிவு செய்யப்பட்ட எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் & பேமென்ட் சேவை(SBI Cards & Payments) நிறுவனம் கடந்த 1998ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்தாண்டு எஸ்.பி.ஐ. கார்டு நிறுவனம் ‘ 9 மில்லியன் கார்டுகள் ‘ கிளப்பில் இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி 74 சதவீத பங்குகளையும், கார்லைல் குழுமம் 26 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கிறது.

2018-19ம் நிதியாண்டில் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,286 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 862 கோடியாக உள்ளது. ஐ.பி.ஓ. வெளியீடு வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி, மார்ச் 5ம் தேதி முடிவடையும். முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 10 ஆகவும், நிறையளவு(Lot Size) ஒன்றுக்கு 19 பங்குகளும், பங்கு ஒன்றின் விலை ரூ. 755 (750-755) என சொல்லப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை என இரண்டு சந்தைகளிலும் வெளியிடப்படும் இந்த பங்கு இரண்டாம் சந்தைக்கு மார்ச் 13ம் தேதி வெளிவரும். திரட்டப்படும் நிதி ரூ. 8500 கோடி. நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு சேவையில் இதன் பங்களிப்பு 18 சதவீதமாகும். ஏற்கனவே எஸ்.பி.ஐ. நிறுவன பங்குகளை வைத்திருப்போருக்கு பங்குகளில் சலுகை அறிவிக்கப்படலாம்.

வளர்ந்த நாடாகவும், நுகர்வோர் தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் இடமாகவும் நம் நாடு இருப்பதால், நிதி சார்ந்த சேவையில் இந்த நிறுவனம் ஐ.பி.ஓ. வெளியீட்டில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொருளாதாரம் மந்தமடைந்து கிரெடிட் கார்டு பெற்றவர்கள் முறையாக தவணையை செலுத்த தவறும் பட்சத்தில், இந்த நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

யெஸ் வங்கி வெளியேற்றம் – நிப்டி 50 குறியீட்டு பங்குகள் மாற்றம்

யெஸ் வங்கி வெளியேற்றம் – நிப்டி 50 குறியீட்டு பங்குகள் மாற்றம் 

YES Bank excluded from Nifty 50 – Changes on NSE Indices

 

தேசிய பங்குச்சந்தை குறியீடு பராமரிப்பு துணைக்குழு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று பங்குச்சந்தை குறியீடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தேசிய பங்குச்சந்தையின் கீழ் 28 நிப்டி குறியீடுகளும்(Nifty Indices), 17 துறை சார்ந்த குறியீடுகளும்(Sectoral Indices) உள்ளன. நிப்டி பொதுத்துறை நிறுவனங்கள், நிப்டி வங்கி, நிப்டி நிதி சேவை, நிப்டி ஆட்டோ, நிப்டி ஐ.டி., நிப்டி நுகர்வோர் பொருட்கள் என 17 துறை சார்ந்த பிரிவுகள் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

துணைக்குழு சார்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள பங்குகள் வரும் மார்ச் 27ம் தேதி முதல் அமலுக்கு வரும். தேசிய பங்குச்சந்தையின் முதன்மை குறியீடான நிப்டி 50(Nifty50) பட்டியலிலிருந்து யெஸ் வங்கி நீக்கப்பட்டுள்ளது. நிப்டி 100 குறியீட்டில் இருந்தும் யெஸ் வங்கி நீக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி நிப்டி மிட்கேப் 150 குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

யெஸ் வங்கியின்(YES Bank) சந்தை மதிப்பு ரூ. 9,000 கோடியாகும். கடந்த ஒரு வருட அதிகபட்ச விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 286ம், குறைந்தபட்சமாக 29 ரூபாய்க்கும் வர்த்தகமாகி உள்ளது. தற்போது யெஸ் வங்கியின் பங்கு விலை ரூ. 35 ஆக உள்ளது. நிறுவனத்தின் கடன் பொறுப்புகள் சுமார் 6.58 லட்சம் கோடி ரூபாய்.

 

நிப்டி 50 குறியீட்டில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள ஒரே பங்கு யெஸ் வங்கி மட்டுமே. இதற்கு பதிலாக ஸ்ரீ சிமெண்ட் லிமிடெட்(Shree Cement) சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தாற் போல் உள்ள நிப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் அசோக் லேலண்ட், இந்தியா புல்ஸ் ஹௌசிங், எல் & டி. பைனான்ஸ் ஹோல்ட்டிங்ஸ், ஸ்ரீ சிமெண்ட், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அதானி டிரான்ஸ்மிஷன், ஐ.டி.பி.ஐ., இன்போ எட்ஜ், எல் & டி இன்போடெக், டோரன்ட் பார்மா ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

 

நிப்டி 500 குறியீட்டில் திவான் ஹௌசிங், லட்சுமி விலாஸ் வங்கி, பி.சி. ஜுவல்லரி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் உட்பட 20 நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது. நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீட்டில் கிராபைட் இந்தியா, எச்.இ.ஜி.(HEG), இங்கர்சோல் ரேண்ட், ஏரிஸ்(Eris Lifesciences), புளூடார்ட் ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 

 

நிப்டி டிவிடெண்ட் வாய்ப்புகள் 50 குறியீட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பங்குகள் – அசோக் லேலண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ், எம் பேஸிஸ், எம்.சி.எக்ஸ். இந்தியா, நெஸ்லே, கெயில், ஹெக்சாவேர் உட்பட 16 நிறுவனங்களாகும். இந்த குறியீட்டில் ஏற்கனவே இருந்த எச்.இ.ஜி., சியென்ட், இந்துஸ்தான் ஜிங்க், கர்நாடகா வங்கி, வேதாந்தா ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம் உட்பட 16 நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது.

 

2019ம் ஆண்டின் எப்.ஐ.ஏ. வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, உலகின் மிகப்பெரிய ஊக வணிக(Derivatives) சந்தையாக தேசிய பங்குச்சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்கு வர்த்தக அளவின் படி, உலகின் மிகப்பெரிய மூன்றாவது சந்தையாகவும் தேசிய பங்குச்சந்தை உள்ளது.  நாட்டின் மிக பழமையான சந்தையாக மும்பை பங்குச்சந்தை உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

தைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்

தைரோகேர் டெக்னாலஜிஸ்  – பங்குச்சந்தை அலசல் 

Thyrocare Technologies – Think Thyroid, Think Thyrocare – Fundamental Analysis

1996ம் ஆண்டு கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். மருத்துவ சேவையில் உள்ள இந்த நிறுவனம் தைராய்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த துறையில் நாட்டின் முதல் தானியங்கி ஆய்வக நிறுவனமாகவும் தைரோகேர் உள்ளது. நிறுவனர்(Velumani Arokiaswamy), பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியும் ஆவார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3,300 கோடி. இதன் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாயாக உள்ளது. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 8 மடங்கில் உள்ளது. கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.03 ஆக இருக்கிறது. எனவே நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை.

நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 140 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 344 கோடியாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 370 கோடியாகவும், செலவினம் ரூ. 222 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபம் ரூ. 95 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல லாபம் மூன்று வருடங்களில் 16.50 சதவீதமும், ஐந்து வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருட காலத்தில் 14 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த ஒரு வருடத்தில் 20 சதவீதம் வளர்ந்துள்ளது.

மூன்று வருட காலத்தில் 19 சதவீதமும், ஐந்து வருடங்களில் 19 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. நிறுவனத்தின் பணவரவு(Cashflow) சீராக இருந்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் 2019 – மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 98 கோடியாகவும், செலவினம் 55 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 43 கோடி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் ரூ. 39 கோடியாக உள்ளது.

சொல்லப்பட்ட மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 கோடி ரூபாயாக உள்ளது. கடந்து பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மற்றும் லாப விகிதம் சீராக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பங்கின் விலை உச்சத்திற்கு அருகில் இருப்பதை காட்டுகிறது. அதன் தற்போதைய உண்மையான பங்கு ஒன்றின் விலை ரூ. 342 ஐ பெறும்.

இருப்பினும், தேவை அதிகமாக உள்ள பங்குகளின் விலை எப்போதும் சந்தையில் அதிகமான விலைக்கு தான் வர்த்தகமாகும். எனவே, மற்ற அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Factors) அலசி ஆராய்ந்து பங்கு வாங்கும் முடிவுகளை எடுக்கலாம். நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் பொறுப்புகள் நிறுவனத்தின் சொத்துக்களை விட குறைவாக தான் உள்ளது. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நஷ்டங்கள் – பேடிஎம் முதலிடம்

பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நஷ்டங்கள் – பேடிஎம் முதலிடம் 

Net losses of Famous Startup Companies in India – Startup Mania

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜனவரி மாதத்தில் 7.16 சதவீதமாக இருந்தது. நகர்புறத்தில் 9.70 சதவீதமும், கிராமப்புறத்தில் 5.97 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை இருந்துள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 32.7 சதவீதமும், புதுச்சேரியில் 0.6 சதவீதமும் உள்ளது. தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment Rate) 1.6 சதவீதம் மட்டுமே உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதற்கு காரணமாக சொல்லப்படுவது புதிய தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான். எப்போதும் போல இருக்கும் தொழில் என்பதனை காட்டிலும் புதிய தொழில்முனைவு என்பது இப்போது வரவேற்கப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த இணையவழியிலான நிறுவனங்களின் வருகைக்கு பின், ஸ்டார்ட் அப்(Startup) என்ற பெயர் பிரபலமடைந்துள்ளது.

பிளிப்கார்ட், ஓலா, உபெர், ஒயோ, ஸ்விக்கி, ஜோமாடோ, பேடிஎம், ரெட் பஸ், பஸ்ட் க்ரை(First Cry) என ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பெயர்களும் சந்தையில் அட்டகாசமாக வந்தடைந்தன. இது போன்ற நிறுவனங்களின் சேவைகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. அதே வேளையில் நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானவை நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன.

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒயோ(OYO) நிறுவனம் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் வருவாயாக 95.1 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது. செலவினம் 127.4 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. சொல்லப்பட்ட காலத்தில் நிகர நஷ்டமாக 33.5 கோடி அமெரிக்க டாலர்கள்  இருந்தது கவனிக்கத்தக்கது. இதுவே கடந்த 2017-18ம் ஆண்டில் வருவாய் 21 கோடி அமெரிக்க டாலர்களாகவும், நிகர நஷ்டம் 5.2 கோடி அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பேடிஎம்(Paytm) நிறுவனத்தின் நஷ்டமே அதிகமாக சொல்லப்பட்டுள்ளது. 2019ம் நிதியாண்டில் பேடிஎம் நிறுவனம் 4,200 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது போல ஓலா நிறுவனம் ரூ. 2,600 கோடி நஷ்டத்தையும், உணவு விநியோக சேவையில் உள்ள ஸ்விக்கி(Swiggy) நிறுவனம் ரூ. 2,360 கோடி நஷ்டத்தையும் சந்தித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 3,800 கோடி மற்றும் ஜோமாடோ நிறுவனம் ரூ. 1000 கோடி நஷ்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிசி பஜார் 350 கோடி ரூபாயும், பஸ்ட் க்ரை ரூ. 120 கோடியும் மற்றும் குரோபர்ஸ்(Grofers) நிறுவனம் ரூ. 450 கோடியையும் நஷ்டமாக சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், புதிய தொழில்முனைவில் சில அடிப்படை விதிகளை பின்பற்றினால் நீண்டகாலத்தில் வெற்றிநடை போடலாம்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று (14-02-2020) சேலம் மாவட்டத்தின் கியாட் தொழில்நுட்ப பொறியியற் கல்லூரியில்(KIOT) தொழில்முனைவுக்கான துவக்க முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு(EDII-TN) மற்றும் தொழிலுக்கான நிதி முதலீடு செய்யும் நேட்டிவ் லீட்(Native Lead) இணைந்து செயல்பட்ட இந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட புதிய தொழில்முனைவோர்கள்(New Startup Founders) பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்களுக்கான வணிக திட்டம்(Business Plan), வணிக மாதிரிகள்(Business Model) பற்றி விவரிக்கப்பட்டது. தொழில்முனைவுக்கு  தயாராகும் மற்றும் தொழில்முனைவில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பவர்களுக்கு தங்கள் தொழிலுக்கான நிதி முதலீட்டை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும், நிறுவனத்தை பதிவு செய்தல் மற்றும் வரி சார்ந்த மாற்றங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

முக்கியமாக மூன்று விஷயங்கள் தொழில்முனைவு சார்பாக சொல்லப்பட்டிருந்தது. தொழில்முனைவு என்பது வெறும் எண்ணங்களாக(Ideas) மட்டுமில்லாமல், அவை சந்தையில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறும் இருக்க வேண்டுமென்பதை வெளிப்படுத்தியது. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை(Problem Solving) அடிப்படையாக கொண்டு தொழில்முனைவு உருவாக்கப்பட வேண்டும். அதே வேளையில் அவை எதிர்காலத்தில் வருவாய் ஈட்டக்கூடியதாகவும், இடையூறு விஷயங்களை புறந்தள்ளும் தன்மையாகவும்(Scaling) இருக்க வேண்டும். 

வெறும் நிதியை பெறுவது மட்டுமே ஒரு தொழில்முனைவோரின் செயலாக இருந்து விட கூடாது. மாறாக, ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பில் புதிய கற்றலை நோக்கி இருக்க வேண்டும். விளம்பர நடவடிக்கைகளை தாண்டி, வாடிக்கையாளர்களின் மன நலன்களை புரிந்து கொள்ளுமாறு இருக்க வேண்டுமென கூட்டத்தில்(Knowledge Institute of Technology – Boot Camp) அறிவுறுத்தப்பட்டது.

அடிப்படை வணிகத்திற்கும், தொழில்முனைவுக்கும்(Business vs Entrepreneurship) உள்ள வேறுபாடுகளை கண்டறிந்து, தொழில்முனைவில் உள்ள ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு செயல்பட்டால் அது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். வெறுமென வேலைகள் கிடைக்கவில்லை என்பதனை கடந்து, தொழில் புரிதல் சமூகத்தை சிறக்க செய்யும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம்

ன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம் 

Delisted from All Recognized Stock Exchanges – 28 Companies including Lanco Infra

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்படுவதற்கு செபியின் கீழ் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலமே ஒரு நிறுவனம் சந்தைக்கு வர முடியும். ஆரம்பகட்டத்தில் தனியார் நிறுவனம் சந்தைக்கு வருவதற்கு முன், பொது நிறுவனமாக(Public Listed) மாற்றப்படுவது அவசியமாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பங்குச்சந்தைக்கு பல்வேறு நிறுவனங்கள் வருவதற்கான முதற்காரணம் முதலீடு தான். எனினும், சில நிறுவனங்கள் பிற்காலத்தில் சந்தையிலிருந்து வெளியேற முடிவெடுக்கும். இதற்கான காரணங்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். பங்குச்சந்தை விதிமுறையை பொறுத்தவரை பட்டியல் நீக்கம்(Delisting) என்பது இருவகையாக அமையலாம். அதாவது சந்தையிலிருந்து ஒரு நிறுவனம் இரு வகைகளில் ஏதேனும் ஒரு முறையில் வெளியேற வேண்டும்.

முதலாவதாக தன்னார்வமாக நீக்குதல்(Voluntary Delisting) – பட்டியலிடப்பட்ட நிறுவனம் சிலகாரணங்களால் சந்தையை விட்டு வெளியே செல்ல விண்ணப்பிக்கும். இவற்றில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றும் பட்சத்தில், செபி(SEBI) அந்த நிறுவனத்தை வெளியே செல்ல அனுமதிக்கும்.

Delisted Companies

இரண்டாம் முறையாக, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியே, குறிப்பிட்ட நிறுவனத்தை சந்தையிலிருந்து வெளியேற்றும். இதனை கட்டாய நீக்கம்(Compulsory Delisting) என்பர். பொதுவாக விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் ஆரம்ப நிலையில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சில மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படும். இடைநீக்கத்திற்கு பிறகும், சொல்லப்பட்ட நிறுவனம் விதிமுறைகளை கடைபிடிக்காத நிலையில் அவை பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

இதனால் வரும் நாட்களில் அந்த பங்கு, சந்தையில் வர்த்தகமாகாது. கடந்த 2019ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சில நிறுவனங்கள் செபியின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என சந்தையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த நிறுவனங்களின் நிறுவனர்களுக்கும், இனி பங்குச்சந்தையில் எந்த செயல்பாடுகளையும் அடுத்த 10 வருடங்களுக்கு செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சில நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையிலிருந்து முழுவதுமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தன. மற்ற சில நிறுவனங்களோ இடைநீக்கத்தில் இருந்து வந்துள்ளது. தற்போது மும்பை பங்குச்சந்தையும் இதன் சார்ந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது தேசிய பங்குச்சந்தையில் இடைநீக்கம் செய்யப்பட்ட குறிப்பிட்ட 28 நிறுவனங்கள், இன்று முதல் (14-02-2020) மும்பை பங்குச்சந்தையிலிருந்தும் நீக்கப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இனி மேல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது. நீக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் சில – அக்வா லாஜிஸ்டிக்ஸ், லாங்கோ இன்ப்ரா, டாட்ஸன் லேப்ஸ், மோஸர் பேர், எவ்ரான், சுப்ரீம் டெக்ஸ் மார்ட், ஜெனித் இன்போடெக், லாய்ட்ஸ் பைனான்ஸ் ஆகியவை.

சொல்லப்பட்ட 28 நிறுவனங்களில் பங்கு வைத்திருப்போர் இனி மேல் அதனை சந்தையில் விற்க இயலாது. அதே வேளையில் நிறுவனம் சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அதன் தொழில் நடைபெறலாம். இவ்வாறான சூழ்நிலையில், அந்த நிறுவன அலுவலத்தை அணுகி, பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கலாம். ஒரு நிறுவனம் சந்தையிலிருந்து வெளியேறினாலும், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியோருக்கு முழு உரிமை உண்டு. சந்தையில் நிறுவனம் இல்லாவிட்டாலும், கொண்டிருக்கும் பங்குகளை நேரிடையாக நிறுவனத்திடம் விற்பதற்கு சட்டம் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)

எச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)

Quick Alert: India’s rising CPI – Retail Inflation in January 2020

நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்ல, விலைவாசியும் உச்சத்தில் தான் உள்ளது. சில்லரை விலை பணவீக்க வரைபடத்தை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கடந்த 2019ம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை (சில்லரை விலை) பணவீக்கம் 2.57 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது நடப்பாண்டின் ஜனவரி மாத பணவீக்கம் 7.59 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த வருடம் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பர் 2019ல் 5.54 சதவீதமாகவும், டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாகவும் இருந்துள்ளது. விறுவிறு வேகத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) உயர்ந்து வருவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு தற்சமயத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், தற்போது நாட்டில் நிலவி கொண்டிருப்பது ஒருவித தேக்கநிலை(Stagflation) எனலாம்.

அதாவது விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பு(GDP Growth) குறைவாக உள்ளது. மறுபுறம் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது கவலையளிக்கும் நிகழ்வாக உள்ளது. ஜனவரி மாதத்தின் முடிவில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை(Unemployment rate) விகிதம் 7.16 சதவீதமாக உள்ளது. இதில் பெருத்த ஏமாற்றம் என்னவென்றால், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 9.70 சதவீதம் என்ற உச்சத்தில் உள்ளது. அதே வேளையில் கிராமப்புற விகிதம் 6 சதவீதத்திற்கு அருகில் காணப்படுகிறது.

தற்போது சொல்லப்பட்ட 7.59 சதவீத பணவீக்கம், சந்தை எதிர்பார்த்த 7.4 சதவீதம் என்ற அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது. ஜனவரி 2019 மாத நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாக உள்ளது. இதுவரை உயர்ந்து வந்த உணவுப்பொருட்களின் விலை தணிந்து இருந்தாலும், எதிர்பாராத வகையில் எரிபொருட்களின் விலை, துணிமணி மற்றும் காலணிகள், பருப்பு வகைகள், பால், பழங்கள் மற்றும் தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) பணவீக்க விலை 3.7 சதவீதமும், பருப்பு வகைகள் 16.7 சதவீதம், தானியங்கள் 5.3 சதவீதம், பால் பொருட்கள் 5.6 சதவீதம் மற்றும் பழங்கள் 5.8 சதவீதமாக உள்ளன. காய்கறி மற்றும் மற்ற உணவுப்பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளது.

பொதுவாக நம் நாடு எரிசக்தியில் இறக்குமதியை நம்பியிருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் தற்போது நிலவும் நிதி பற்றாக்குறை ஆகியவை காரணமாக உணவுப்பொருட்களை சந்தைக்கு சரியான நேரத்தில் சேர்க்க முடிவதில்லை. இதனால் உணவு சார்ந்த பொருட்களின் விலை உயர்வு நிலையற்றதாக காணப்படுகிறது. இவற்றில் தீர்வு காணப்படும் போது, அது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மாற்றத்தை கொண்டு வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல்

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல் 

Would you buy HEG LTD – Graphite Electrode now ? Fundamental Analysis

எல்.என்.ஜே. பில்வாரா(LNJ Bhilwara) குழுமத்தின் ஒரு அங்கம் மற்றும் அதன் முதன்மை நிறுவனம் தான் எச்.இ.ஜி. லிமிடெட். மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கிராபைட் எலெக்ட்ரோடு(Graphite Electrode) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் செயல்படுகிறது. தனது உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குழுமத்தின் அனுபவம் சுமார் 60 வருடங்களாகும். நிறுவனத்தின் நிறுவனர் திரு. எல்.என். ஜுன்ஜுன்வாலா தனது ஆரம்பகட்ட தொழிலாக ஜவுளி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் துவங்கினார். பின்பு ஆற்றல் சார்ந்த பல தொழில்களையும், தொழில்நுட்பம், மருத்துவம், கிராபைட் என பல பரிணாமத்தை எடுத்து வந்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,591 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,026 கோடியாகவும் இருந்தது. எச்.இ.ஜி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,500 கோடியாகவும், புத்தக மதிப்பு 1,038 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.16 ஆக உள்ளது. எனவே, நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 90 மடங்கில் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் செய்யப்படவில்லை. அதே வேளையில் கடந்த காலாண்டில் நிறுவனர்கள் சார்பில் 2 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் ஒரு மடங்கில் தான் உள்ளன. இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை(Dividend) அளிப்பதில் சிறப்பாக உள்ளன.

எச்.இ.ஜி. லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலங்களில் 85 சதவீதமும், ஐந்து வருடங்களில் 41 சதவீதமும் மற்றும் பத்து வருட கால அளவில் 14 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 36 சதவீதமும், லாபம் 98 சதவீதமும் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை பற்றிய இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்

பங்கு மீதான வருவாய்(Return on Equity – ROE) கடந்த மூன்று வருடங்களில் 77 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 56 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் ரூ. 3,968 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதார காரணிகள் இந்த நிறுவனத்தின் தொழிலை அவ்வப்போது பாதிக்கும். அமெரிக்க – சீன வர்த்தக போர், கொரோனா வைரஸ் பதற்றம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வருவாயை சமீபத்தில் பாதித்துள்ளது எனலாம்.

கடந்த 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த பங்கின் விலை ரூ. 180 என்ற அளவில் வர்த்தகமானது. பின்பு மலை போல் உயர்ந்து, 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ. 4900 என்ற விலை வரை சென்றது. கடந்தாண்டு நிறுவனம் சார்பில் பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப பெறும் முறையில்(Buyback of Shares) பங்கு ஒன்றுக்கு ரூ. 5500 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று வருடத்திற்கு முன்னர் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெருத்த லாபத்தை எடுத்துள்ளனர். பின்பு, இந்த பங்கின் விலை 2019ம் ஆண்டு (பங்குகள் திரும்ப பெறும் செய்திக்கு பிறகு) முழுவதும் சரிவை நோக்கி தான் சென்றது. நல்ல லாபத்தை கண்ட அன்னிய முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டிலிருந்து கடந்த நிதியாண்டின் முடிவில் வெளியேறியுள்ளனர்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதன் வருவாய் மற்றும் லாபம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 394 கோடி மற்றும் செலவினம் ரூ. 389 கோடியாக இருந்துள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ. 1 கோடி நிகர நஷ்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 2000, 3000 என்ற விலையில் இந்த பங்குகளை வாங்கியவர்கள் பெருத்த சரிவை சந்தித்துள்ளனர். சுழற்சி முறை மற்றும் உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படும் இந்த பங்கு, அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்தவை. அதே வேளையில் அனைத்து காலத்திலும் வாங்கக்கூடிய பங்காக இது அமையவில்லை.

எனவே நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக வளரும் பட்சத்தில், பங்கின் விலையும் மலிவாக கிடைக்கும் போது முதலீடு செய்யலாம். நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அடிப்படை பகுப்பாய்வின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 850 மதிப்பு பெறும் என சொல்லியிருந்தோம். மூன்றாம் காலாண்டு முடிவின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 710 என்ற மதிப்பை மட்டுமே பெறக்கூடும். தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,170 என்ற விலையில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனம் கடந்த நிதியாண்டின் முடிவில் பங்கு ஒன்றுக்கு 80 ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியிருந்தது. இப்போது மூன்றாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி 

A New One Rupee note coming soon – RBI

நடைமுறையில் நாட்டின் பணப்புழக்கத்தில் உள்ள மிகச்சிறிய ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நோட்டு தான். 9.7 X 6.3 செ.மீ செவ்வக அளவை கொண்டது இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டு. வரவிருக்கும் புதிய ஒரு ரூபாய் நோட்டு 110 மைக்ரான் தடிமனாகவும், 90 ஜி.எஸ்.எம். எடையுள்ளதாகவும் அமைந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரூபாய் நோட்டில் மேல்பக்க தலைப்பாக, ‘பாரத் சர்க்கார்’ என தேவநாகரி எழுத்துக்களிலும், அதன் கீழ், ‘GOVERNMENT OF INDIA’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு ரூபாய் நோட்டுக்கள் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் அச்சடிக்கப்படும்.

புதிய ஒரு ரூபாய் நோட்டுகளில் நிதி அமைச்சகத்தின் செயலாளர் இரு மொழிகளில் கையொப்பமிட்டுள்ளதாக அமைந்துள்ளது. ரூபாய் நோட்டின் ஒரு புறம் இளம்சிவப்பு பச்சை நிறத்தில் இருக்கும். மற்றொரு புறம், மற்ற நிறங்களின் கலவையாக இருக்கும். ஒரு ரூபாய் சின்னமும் அமைந்துள்ளது.

இந்த ரூபாய் சின்னம் விவசாயத்தை ஆதரிப்பதாக தானியங்களின் சின்னமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள வடிவமைப்பு, ‘சாகர் சாம்ராட்’ எண்ணெய் ஆய்வு தளத்தின் படத்தையும் உள்ளடக்கியுள்ளது.

ரூபாய் நோட்டின் ஒரு புறத்தில், ஒரு ரூபாய் மதிப்பை பிரதிபலிக்கும் விதமாக 15 இந்திய மொழிகளில் பதியப்பட்டுள்ளது. மேலும் ஒரு ரூபாய் நாணயத்தை பிரதிபலிப்பதாக 2020ம் ஆண்டின் சத்யமேவ் ஜெயதே குறியீடும் அடங்கியுள்ளது. நம் நாட்டில் ரூபாய் நோட்டுகள் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். நாணயத்தை நிர்வகிப்பதையும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதும் மற்றும் நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதும் மத்திய ரிசர்வ் வங்கியின் வேலையாகும்.

இந்திய நாட்டின் ஒரு ரூபாய் குறியீட்டை(Rupee Symbol) வடிவமைத்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த திரு. உதயகுமார் ஆவார். தற்போது சில்லரை நாணயங்களில் அதிக புழக்கத்தில் உள்ளவை ரூ. 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள். ரூபாய் நோட்டுகளில் அதிக புழக்கம் கொண்டவை ரூ. 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000 ஆகியவை.

பொதுவாக ரூபாய் நோட்டுக்களை அதிகாரபூர்வமாக பயன்படுத்தும் நாடுகள் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான். அதிகாரபூர்வமற்ற வகையில் ஜிம்பாப்வே நாடும் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

Looking for a job in Indian Railways – Check before about the Modernization of Indian Railways

நாட்டின் மிகப்பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனமாகவும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட சாம்ராஜ்யமாகவும் திகழ்வது இந்தியன் ரயில்வே(Indian Railways). நம் நாட்டில் இந்திய ரயில்வேயின் வரலாறு 166 வருடங்களாகும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் இந்திய ரயில்வேயின் பங்கும் முக்கியமானது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகமான பயணமாக ரயில் இருந்து வந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளரும் நாடுகளில் ஒவ்வொரு நாடும் கேபிட்டலிசம் என்ற தன்மையை கொண்டு ஓடி கொண்டிருக்கிறது. அவற்றில் நம் நாட்டிற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. சமூக சேவை கடமைகள் என்ற நிலை மாறி, அரசு துறையும் தனியார் நிறுவனங்களை போன்று வருவாயை வலுப்படுத்த வேண்டுமென்ற நிலைக்கு சென்று விட்டன. நடப்பு பட்ஜெட் 2020 தாக்கல் படி, ரயில்வே துறையின் உட்கட்டமைப்புக்கு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை (தேஜஸ் – Tejas Express) துவங்கப்பட்டது. தனியார் ரயில் சேவையின் முதல் மாதத்தில் நல்ல லாபத்தை பார்த்ததாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்தது.

அடுத்த வாரம் நாட்டின் மூன்றாவது தனியார் ரயில் சேவை இந்தூர் – வாரணாசி இடையே தொடங்கப்பட உள்ளது. ரயில் பயண சீட்டு வழங்குவதிலும் ரயில்வே துறை ஏற்கனவே நவீனமாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மேற்கு ரயில்வேயில் ஒரே நாளில் 5.5 லட்சம் பயணச்சீட்டுகள் டிஜிட்டல் முறையில் விற்கப்பட்டுள்ளன. வெறும் கைபேசி செயலி மூலமே சொல்லப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரயில்வே துறையின் அடுத்த இலக்கு நூறு வெவ்வேறு வழித்தடங்களில் நாடு முழுவதும் 150 தனியார் ரயில் சேவையை துவங்குவதாகும்.

வரும் 2025ம் ஆண்டுக்குள் தனியார் முதலீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டுடன் 500 ரயில்கள் மற்றும் 750 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதாகும். சுருக்கமாக சொன்னால் 750 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும். பயணிகள் ரயில்களின் வேகத்தை 160 கி.மீ. வரை அதிகப்படுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. அரசு துறையான ரயில்வே வேலை கிடைப்பதற்கும், சொல்லப்பட்ட விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் ?

இதுவரை மத்திய அரசின் ரயில்வே வேலை கிடைப்பதற்கு பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். ஆனால், அது போன்ற நிலை இனி எதிர்காலத்தில் நடைபெறாது. பெரும்பாலான இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைக்கலாம். காரணம், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே உலகளவில் நவீனமயமாக்கப்படுவது தான். அதே வேளையில், அரசு துறை வேலை தானே என இனி யாரும் அலட்சியம் கொள்ள முடியாது. இது ஒரு தனியார் கார்பொரேட் நிறுவனம் போன்று தான். சேவை என்ற நிலையிலிருந்து மாறி வருவாய் மட்டுமே இலக்கு என்ற தன்மை நிகழும் போது, ஒவ்வொருவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். வேலையில் பிழை ஏற்பட்டால், ரயில் பயணிகளின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், அதனை சார்ந்த ஊழியர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை வலுப்படும். இனி லஞ்சம் என்ற நிலை இல்லாமல், உயர்ரக பயணங்களுக்கு செல்ல வேண்டும்.

ரயில்வே வேலைக்கு செல்லும்  முன், தேஜஸ் ரயில் சேவையில் பயணம் செய்து பாருங்கள். பிறகு உங்களுக்கு தெரியும், வேலைக்கு செல்ல வேண்டுமா அல்லது பங்குதாரராக வேண்டுமா என்று.

ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட், ஹூண்டாய், சீமென்ஸ், மெக்குவாரி ஆகிய பிரபலமான அந்நிய நிறுவனங்கள் தங்கள் ரயில் சேவையை நம் நாட்டில் துவங்க உள்ளன. டாட்டாவும், அதானியும் இந்த ரயில் களத்தில் இறங்க உள்ளன. முற்றிலும் தனியார் பங்களிப்புடன் இனி இந்திய ரயில்வே உலகத்தரத்திற்கு நவீனமயமாகும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் (ராணுவத்தை தவிர்த்து) ஓய்வூதியம் இல்லை என்பதை மறக்க வேண்டாம். இனியும் பழைய ஓய்வூதியம் என்ற நிலைக்கு அரசு முன்வராது.

எனவே நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான இந்த பொதுத்துறைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பிராண்டட்(Branded) நிறுவனத்தில் வேலை செய்வது போன்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், ஏமாற்றமே மிஞ்சும். நல்ல சேவை, மிடுக்கான உடை, வேகமெடுக்கும் பயணம், கை நிறைய சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் ஐ.டி. நிறுவனத்தை போன்ற தோரணை ஆகியவை கிடைக்கப்பெறும். எந்த நிலையிலும் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அரசு வேலை என எண்ணிக்கொள்ள வேண்டாம்.

ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்தாண்டின் அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு வந்தது. சந்தைக்கு வரும் போது, இந்த பங்கின் விலை ரூ. 320. தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,514. இதன் சந்தை மதிப்பு ரூ. 24,216 கோடி. நிறுவனர்களின் (மத்திய அரசு) பங்களிப்பு 87 சதவீதம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. பங்கின் விலை கடந்த நான்கு மாதங்களில் 450 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதாவது நீங்கள் வாங்கிய விலையிலிருந்து சுமார் 5 மடங்குக்கு அருகில். வருங்காலத்தில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனத்திற்கும் இது நடக்கலாம். ஆனால் நீண்டகாலத்தில் நல்ல நிதி அறிக்கையை கொண்ட நிறுவனங்களே சந்தையில் முதலீட்டாளர்களை கவரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com