நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய பிக் பஜார் பியூச்சர் குழுமம்

நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய பிக் பஜார் பியூச்சர் குழுமம்

The Future Retail Group turned from Quarterly loss to Profits – Q4FY19

 

பல்பொருள் அங்காடியில் பிக் பஜார், புட் பஜார்(Food Bazaar), நீல்கிரிஸ்(Nilgiris), ஹைப்பர் சிட்டி(Hypercity) போன்ற பிராண்டுகளின் மூலம் உணவு பொருள் சந்தையில் வலம் வரும் நிறுவனம் தான் பியூச்சர் குழுமம்(Future Group). இக்குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பியூச்சர் ரீடெயில் உள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் வெளிவந்த நான்காம் காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 203 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய மார்ச் 2018ம் காலாண்டில் பியூச்சர் நிறுவனம்(Future Retail Ltd) 464 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 5,397 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் 291 கோடி ரூபாயாகவும் உள்ளது.

 

மார்ச் 2018ம் ஆண்டுடன் முடிவடைந்த நிதி வருடத்தில் ரூ.11 கோடியை மட்டுமே லாபமாக நிறுவனம் பெற்றிருந்தது. அதே வேளையில் 2018-19ம் நிதியாண்டில் நிறுவனம் கணிசமான லாபத்தினை பதிவு செய்துள்ளது. இதனால் சென்ற மார்ச் காலாண்டில் நஷ்டத்தில் இருந்த பியூச்சர் ரீடெயில் நிறுவனம் நடப்பு வருடத்தின் மார்ச் 2019ம் காலாண்டில் லாபத்திற்கு(Net Profit) திரும்பியுள்ளது.

 

நிறுவனத்தின் கடன் ரூ. 2,554 கோடியாகவும், பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) 20 சதவீதத்திற்கு மேலாகவும், ஒரு பங்குக்கான வருவாய் 14 ரூபாயாகவும்(EPS) இருக்கிறது. விற்பனை வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று வருடங்களில் 124 சதவீதமாகவும், 5 வருட காலத்தில் 66 சதவீதமாகவும் உள்ளது.

 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 47 சதவீதமாக இருக்கின்ற நிலையில், நிறுவனர்கள் தங்களது பங்கில் 48 சதவீதம் என்ற அளவில் அடமானம்(Pledging) வைத்துள்ளனர் என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதகமான விஷயமாகும். கடந்த வருடத்தின் முடிவில் ரொக்கமாக ரூ. 183 கோடியும், இருப்பு நிலை அறிக்கையின் கையிருப்பில்(Reserves) மார்ச் 2019 முடிவின் போது 3,750 கோடி ரூபாயும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன ?

தேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன ?

Elections 2019 Results Declared, What’s next for the Indian Stock Market ?

 

கடந்த வியாழக்கிழமை அன்று(23-05-2019) நாட்டின் 17வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. இந்திய பங்குச்சந்தை சமீப காலமாக மிகவும் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் என இவற்றை சொல்லலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2019 தேர்தல் முடிவுகளை ஒட்டி, சந்தை பெரிய ஏற்றத்தை காணாவிட்டாலும், தற்போது இந்திய பங்குச்சந்தை மதிப்பளவில்(Overvalued) உச்சத்தில் உள்ளது எனலாம். இதன் காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர். 1999ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் முடிவுகள் வந்த நாட்களில் பங்குச்சந்தை இறக்கத்தில் முடிந்தது இதுவே முதன்முறை.

 

தேர்தல் முடிவு நாட்கள் என எடுத்து கொள்ளும் போது, 1999ம் ஆண்டு சென்செக்ஸ் 6 சதவீதமும், 2004ம் ஆண்டில் 0.77 சதவீதமும், 2009ம் வருடம் திரு. மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமராக பதவிக்கு வந்த நிலையில் 17 சதவீதமும் மற்றும் கடந்த 2014ம் வருடத்தில் திரு. நரேந்திர மோடி தலைமையின் போது, சென்செக்ஸ் 0.90 சதவீதமும் ஏற்றம் கண்டது. கடந்த கால ஏற்றங்களுக்கு முன்பு, இந்திய பங்குச்சந்தை அதிக இறக்கத்தில் காணப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

ஆனால் தற்போதைய இறக்கம், சந்தை உச்சத்தில் உள்ளவற்றை தான் வெளிக்காட்டுகிறது. இது போக மற்ற உலகளாவிய காரணிகளும்(Global Factors) தற்போது சந்தையை நகர்த்த உள்ளன. புதிய அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பொருளாதார ரீதியாக பல சவால்கள் வரும் காலத்தில் காத்திருக்கின்றன.

 

நிப்டி(Nifty50) மற்றும் சென்செக்ஸ்(Sensex) குறியீடுகள் தற்போது 28-30 என்ற அளவில் வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன. பெரு நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தாலும், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் இன்னும் இறக்கத்திலிருந்து மீளவில்லை எனலாம். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, வேலைவாய்ப்பு புள்ளிகள்(Unemployment rate), வங்கிகளின் வாராக்கடன், பாரத ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை(RBI Policy) மற்றும் வட்டி விகித மாற்றங்கள் அடுத்த சில மாதங்களுக்கு சந்தையை நகர்த்தும்.

 

மேலும் அமெரிக்க-சீன வர்த்தக போர்(Trade War), சீன-இந்திய நாடுகளுக்கிடையே ஏற்பட போகும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள், கச்சா எண்ணெய்,  ஈரான் எல்லையில் நிலவும் பதற்றம் மற்றும் அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதார கொள்கைகள், வாகன துறையின் விற்பனை மற்றும் வருவாய் ஆகியவை இந்திய பங்குச்சந்தையை நகர்த்தும் முக்கிய காரணிகளாகும். பிரிட்டனின் பிரெக்ஸிட்(Brexit) நிலவரமும் இன்னும் தெளிவான முடிவை எட்டவில்லை. இதுவும் நம் நாட்டின் பங்குச்சந்தையை சற்று பாதிக்கும் காரணிகளாக சொல்லலாம்.

 

நாட்டில் உள்ள நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) மற்றும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க அரசு எடுக்க போகும் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விவசாயம் சார்ந்த வளர்ச்சியில் அரசின் பங்கு எவ்வாறு இருக்கும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

 

தற்போதைய சந்தை மதிப்பளவில்(PE), முதலீட்டாளர்கள் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து அதன் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental analysis) ஆராய்ந்து சிறுகச்சிறுக முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வரும் வாரங்களில் சந்தை சிறிய இறக்கத்தை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால், அதனை கருத்தில் கொண்டு முதலீடு செய்வதே சிறந்தது.   

 

பங்கு சந்தை பகுப்பாய்வு – காரணிகள் ( Fundamental Analysis – Factors)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10

வீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10

House Rent Allowance(HRA)  – Income Tax Returns – Lesson 10

 

வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் பெரும்பாலோருக்கு குழப்பம் ஏற்படுவதே இந்த வீட்டு வாடகை படி கணக்கில் தான். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு, அந்த நிறுவனத்திடம் வாடகை படியை மாதாமாதம் சம்பளத்தில் பெற்று வந்தாலும், வருமான வரி தாக்கலின் போது எவ்வளவு தொகைக்கு வீட்டு வாடகைப்படியில் வரி சலுகை பெற வேண்டும் என்பதில் தனிநபருக்கு ஐயம் ஏற்படுவது இயல்பு.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மாத சம்பளம் வாங்கும் தனிநபர் ஒருவர் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் பட்சத்தில், வருமான வரி தாக்கலின் போது, அதற்கான வரி சலுகையை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் வரி செலுத்தும் தொகையையும் குறைத்து(Save Tax) கொள்ளலாம். வருமான வரி சட்டப்படி, வீட்டு வாடகை படியை தனது வருமானத்தில் கழித்து கொள்ள பின்வரும் மூன்று நிபந்தனைகள் உதவுகின்றன.

 

  • வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA)

 

  • அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 சதவீதம். (50 % of Basic Salary + DA)

 

  • வீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Actual Rent Paid) – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 10 சதவீதம் (10% of Basic Salary + DA).

 

மேலே சொன்னவற்றில் எவை குறைந்த தொகையாக வருகின்றனவோ அவற்றை தனிநபர் ஒருவர் தனது வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம்.

 

குமார் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (அரசு நிறுவனமாக இருந்தாலும்) பணிபுரிகிறார். இவருடைய மாத அடிப்படை சம்பளம் – ரூ. 30,000/- மற்றும் மாத அகவிலைப்படி(Dearness Allowance) ரூ. 3,000/-. அவர் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் சம்பளத்தில் பெறும் வீட்டு வாடகைப்படி ரூ. 10,000/-. குமார் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் மாதம் ரூ.12,000/- கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இனி இவருக்கான வீட்டு வாடகைப்படி சலுகையை கணக்கிடுவோம்.

 

  • நிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA) ஆண்டுக்கு – ரூ. 1,20,000/- ( 10,000 X 12 மாதங்கள்)

 

  • அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 %  – ரூ. 1,98,000/- (33,000 X 12 மாதங்கள் – 50 சதவீதம்)

 

  • வீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Rent Paid) ஆண்டுக்கு – [ ரூ. 1,44,000 ] – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% – [ ரூ. 39,600 ] =  ரூ. 1,04400 /-

 

மேலே சொல்லப்பட்ட மூன்று நிபந்தனைகளில் (ரூ. 1,20,000 / 1,98,000 / 1,04400) குறைந்தபட்ச தொகையான 1,04400/- ரூபாய்க்கு அவர் தனது வீட்டு வாடகைப்படி சலுகையாக(HRA Exemption) கோரலாம்.

 

வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீட்டு வாடகைப்படியை பெறாதவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் 80GG பிரிவின் கீழ் வீட்டு வாடகைப்படி சலுகையை பெறலாம். அதே வேளையில் வேலை பார்க்கும் இடத்திலோ அல்லது வசிக்கும் பகுதியிலோ சொந்த வீட்டை கொண்டிருந்தால் 80GG பிரிவின் மூலம் வரி சலுகையை பெற முடியாது. வருமான வரிச்சட்டம் பிரிவு 80GGன் கீழ் சலுகை பெற நிபந்தனைகள்:

 

  • மாதத்திற்கு ரூ. 5,000/-
  • சரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 25 சதவீதம்
  • வீட்டு வாடகையாக செலுத்திய தொகை – சரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 10 சதவீதம்

 

மேலே சொன்னவற்றில் குறைந்தபட்ச தொகைக்கு மட்டுமே ஒருவர் 80GGன் கீழ் சலுகை பெற முடியும். பொதுவாக சரிகட்டப்பட்ட மொத்த வருமானம்(Adjusted Total Income) என்பது தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்டகால ஆதாயம் மற்றும் 80C முதல் 80U வரையிலான தொகையை கழித்தது போக மீதம் வரும் தொகையாகும்.

 

தனிநபர் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு வீட்டு கடனுக்கான வட்டி தொகையை வங்கியில் செலுத்தி வந்தாலும், வீட்டு வாடகைப்படியில் சலுகை கோரலாம். அது போல ஒருவர் தனது வீட்டு வாடகை தொகையாக ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் செலுத்தி விட்டு, அதற்கான வரி சலுகை கோரினால் வீட்டு உரிமையாளரின் பாண் எண்ணை(PAN) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

 

வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர், வீட்டு வாடகை தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்வது அவசியமாகும். இல்லையெனில் தான் செலுத்தும் வாடகையை ரொக்கமாக செலுத்தாமல் வங்கி கணக்கு, காசோலை அல்லது இணைய பரிமாற்றம்(Online Payment) மூலம் செலுத்தும் போது அவருக்கான விவரங்கள் பதிவு செய்யப்படும். இது பின்னாளில் வருமான வரி சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க உதவும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு

ஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு

The Bse benchmark Index Sensex crossed 1400 points in a Single day

 

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ், சந்தை மதிப்பின் அடிப்படையில் 30 நிறுவனங்களை உள்ளடக்கியது. 1978-79ம் காலங்களில் 100 என்ற புள்ளிகளை கொண்டு தொடங்கிய சென்செக்ஸ் குறியீடு தற்போது 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. மும்பை சென்செக்ஸ் குறியீடு கடந்த 40 வருடங்களில் 400 மடங்கு அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 19ம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில், அன்று மாலை அறிவிக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்(Exit Poll Predictions 2019) நடப்பாட்சியில் உள்ள கட்சியே மீண்டும் ஆட்சியில் அமருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதன் தாக்கம் நேற்று(20-05-2019) இந்திய பங்குச்சந்தையிலும் தென்பட்டது. வர்த்தகத்தின் துவக்கத்திலே 500 புள்ளிகளை தாண்டி வர்த்தகமான சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 1421 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது.

 

சமீப காலங்களில் ஒரே நாளில் அதிகபட்ச புள்ளிகளை கொண்டதாக நேற்றைய வர்த்தகம் இருந்தது. இதே போல தேசிய பங்குச்சந்தையான நிப்டி(Nifty50) குறியீடும் 421 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தல் முடிவன்று சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 17 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு மே மாதத்தில் பெரும்பாலும் இறக்கத்தை கண்டிருந்த இந்திய பங்குச்சந்தை நேற்று விறுவிறுப்பான ஏற்றத்தை அடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் லாபத்தில் முடிந்தது.

 

மும்பை சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex30) கடந்த ஒரு வாரத்தில் 6 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 1.80 சதவீதம் என்ற அளவிலும், 6 மாதம் மற்றும் ஒரு வருடம் முறையே 11% மற்றும் 13.70 சதவீத வளர்ச்சியையும், கடந்த மூன்று வருட காலங்களில் சுமார் 55 சதவீத லாபத்தையும் தந்துள்ளது.

 

சென்செக்ஸ் குறியீட்டின் தற்போதைய 52 வார மற்றும் வாழ்நாள் உச்சம் 39,487 புள்ளிகளாக உள்ளது. இன்று ஒரு புதிய உச்சத்தை அடையும் வாய்ப்பு மும்பை பங்குச்சந்தையின் பிரதான குறியீட்டுக்கு உள்ளது. இந்திய பங்குச்சந்தை தற்போது தேர்தல் முடிவுகளை நோக்கி சென்று கொண்டிருப்பதால் இந்த ஏற்றம் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேர்தல் முடிவுக்கு பின், வங்கி வட்டி விகித அறிவிப்பு(RBI Policy), வாராக்கடன் பிரச்னைகள் மற்றும் நாடுகளிடையே நடந்து கொண்டிருக்கும் வர்த்தக போர்(Trade war) போன்றவை சந்தையை நகர்த்தும். குறுகிய காலத்தில் இந்திய பங்குச்சந்தை இறக்கத்தை காண்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே வேளையில், நீண்ட கால நோக்கில் முதலீட்டாளருக்கு இந்திய பங்குச்சந்தை நல்ல ஒரு வருமானத்தை தந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்

Employee to Entrepreneurship – Smart Ways to Follow

 

ன்றைய இளம் தலைமுறையினரிடம் ஒரே ஒரு விஷயத்தில் ஒருமித்த சிந்தனை இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அது, இளமையிலேயே ஓய்வுபெறுவது. 45, 50 வயதில் ஓய்வுபெற்று, வீட்டில் உட்கார்ந்துகொண்டு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். வெறும் சம்பளத்துக்கு மற்றவர்களுக்காக உழைக்காமல், தனது முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இளமையிலேயே ஓய்வு என்கிற முடிவினை எடுக்கத் தூண்டுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆனால், இந்த முடிவினை எடுத்து பிசினஸைத் தொடங்கும்முன் சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம். என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

 

 

  • கடனைக் குறைத்துக்கொள்ளுங்கள்

 

  • சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்துங்கள்
  • உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத் தொழிலாக மாற்ற சிந்தியுங்கள்
  • வேலையிலிருந்து விடுபடுங்கள்
  • உங்கள் விருப்பத்தைத் தொழில்முனைவாக்குங்கள்
  • சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்
  • தொழில்முனைவைத் தானியங்கியாக மாற்றுவதன் அனுகூலம்

 

 

 

மேலே சொன்ன வழிகளை பற்றி விரிவாகவும் மற்றும் விளக்கத்துடனும் இந்த வார நாணயம் விகடன் பத்திரிகையில்(26-05-19) படிக்கலாம்.  (Article published in Nanayam Vikatan Magazine)

 

இணைய இணைப்பு:  வேலை To தொழில்… வெற்றிக்கான வழிகள்!

 

வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நாணயம் விகடன்(Nanayam Vikatan) முதன்மை பொறுப்பாசிரியர் திரு. சி. சரவணன் அவர்களுக்கும், மேலும் இந்த நிதி சார்ந்த பதிவை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கும்(Vikatan Group) நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

Amazon starts Flight ticket Services in India

 

சமீப வருடங்களாக நுகர்வோர் சந்தையில் நம் நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதுவிதமான தொழில்களும், பொருட்களும் இங்கு வந்த வண்ணம் உள்ள நிலையில், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தோல்வியை தழுவினாலும் அவற்றின் பொருட்கள், பிராண்டுகளாக(Branding) மக்களிடையே சென்றடைந்து உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தற்போது நம் நாட்டில் விமான டிக்கெட் சேவையை அளிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது. விமான முன்பதிவு சேவையிலிருக்கும் கிளீயர் ட்ரிப்(Cleartrip) தளத்துடன் இணைந்து அமேசான் நிறுவனம் இந்த புதிய சேவையை அளிக்க உள்ளது.

 

அமேசான் செயலி(Amazon app) மூலம் ஒருவர் தனது விமான பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பெறலாம். அமேசான் தளத்தில் பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்யும் போது, கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை எனவும் அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமேசான் தளத்தில் ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம்(Amazon Pay), பல சேவைகளுக்கு கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை அளித்து வரும் நிலையில், விமான முன்பதிவு சேவை சாதகமான அம்சத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தும்.

 

சமீபத்தில் உலக பெரும் பணக்காரர் மற்றும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்டின் பெர்க்சையர் ஹாத்தவே நிறுவனம்(Berkshire Hathaway), அமேசான் நிறுவனத்தில் 4.83 லட்சம் பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடி

Indian Oil Corporation(IOC) Q4FY19 net profit rises to Rs. 6,099 Crore

 

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC) புது டில்லியை தலைமையிடமாக கொண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த தொழிலை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபமாக 6,099 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 5,218 கோடி ரூபாயாக இருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மார்ச் மாத காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,26,214 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,15,338 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவன இயக்க லாபம் ரூ.10,876 கோடி. இதர வருமானமாக ரூ.1,059 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இருந்த அதிகபட்ச தொகையாகும்.

 

ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விற்பனை அளவு கடந்த ஐந்து வருட காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. பத்து வருட காலத்தில் இதன் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 6 சதவீதத்தை ஒட்டியே உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் லாப வளர்ச்சி கடந்த 5 வருடத்தில் காணும் போது 34 சதவீதமாக உள்ளது.

 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) 1,40,800 கோடி ரூபாயாகவும், புத்தக மதிப்பு 115 ரூபாய் என்ற அளவிலும் இருந்து வருகிறது. தற்போது நிறுவனத்தின் கடன் அளவு(Debt) 83,260 கோடி ரூபாயாக உள்ளது.

 

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு(Crude Processing) மற்றும் வருவாய் இரண்டிற்கும் உள்ள இடைவெளி பேரலுக்கு 5.40 (Per Barrel) அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இதுவே 2017-18ம் ஆண்டில் 8.49 டாலர்கள் இருந்ததாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சொத்து மதிப்பு ரூ.1,24,216 கோடியாகவும் மற்றும் நடப்பு கடன் மதிப்பு 1,53,463 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 9

வருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 9

How to save tax if you are earning up to 6 Lakh per annum – Income Tax Returns – Lesson 9

 

நடப்பு வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஒரு நிதியாண்டில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்தை கொண்டுள்ளவருக்கு முழுவதுமாக வரியில்லை என அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, மாறாக வரி தள்ளுபடி(Tax Rebate) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2019-20ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஆண்டு வருமானமாக ரூ.5 லட்சம் பெற்றிருப்பின் அவருக்கு வருமான வரி விகிதமாக 5 சதவீதம் வசூலிக்கப்படும். 5 சதவீத வரி எனும் போது, அவர் வரியாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 12,500/-. இந்த வரி தொகையை, ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனமே டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்து வருமான வரி துறைக்கு செலுத்தும். இந்த தொகையை நாம் வருமான வரி தாக்கல் செய்யும் போது வரி தள்ளுபடியாக திரும்ப கிடைக்க பெறும். இதனையே பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.

 

2018-19ம் நிதியாண்டில் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடியாக (பிரிவு 87A) 2500 ரூபாய் இருந்தது. இது 2019-20ம் காலத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 12,500 ரூபாய் என சொல்லப்பட்டது, அவ்வளவே. இருப்பினும் மற்ற பிரிவுகளில் வருமான வரி சலுகைகள் தரப்பட்டுள்ளது. இதனை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.

 

குமார் என்பவர் தனது வேலையின் மூலம் ஒரு நிதியாண்டில்(2018-19) சம்பாதித்த மொத்த வருமானம் ரூ. 3 லட்சம் எனில், அவர் தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ. 40,000/- ஐ கழித்து கொள்ளலாம். மீதம் உள்ள ரூ.2,60,000 தொகையில் 2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி ஏதுமில்லை. நிலைக்கழிவு மற்றும் அடிப்படை வரி வரம்பு சலுகை (ரூ. 2.5 லட்சம்) போக உள்ள தொகைக்கு 500 ரூபாய் (10,000 X 5%) வருமான வரி விதிக்கப்படும். இதனை அவர் பிரிவு 87A ன் கீழ் வரி தள்ளுபடியாக பெறலாம். எனவே வருமான வரி தாக்கலுக்கு பின், வரி ஏதும் செலுத்த தேவையில்லை (வரி தள்ளுபடி காரணத்தால்). டி.டி.எஸ். பிடித்தம் செய்த தொகையை ஒருவர் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே திரும்ப பெற முடியும்.

 

குமாரின் ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் என வைத்து கொள்வோம். தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ.40,000/- வரை(2018-19) கழித்து கொள்ள குமாருக்கு அனுமதி உண்டு. மீதம் உள்ள 5,60,000/- ரூபாய்க்கு அவர் வரி செலுத்த வேண்டிய தொகை ரூ. 24,500/- ஆகும்.

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 40,000) = வரி வருவாய் (ரூ.5,60,000)

 

வரி வருவாய் (ரூ. 5,60,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 3,10,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

 

ரூ. 5,00,001-ரூ. 5,60,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 12,000/-*

 

(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)

 

குமார் வரி சலுகை திட்டங்களை பயன்படுத்துவதன் மூலமாக வரி செலுத்த வேண்டிய தொகையை குறைத்து கொள்ளலாம் – இதற்கு 80C, 80D, 80E மற்றும் 80G ஆகிய வரி பிரிவுகள் உள்ளன.

 

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

 

2019-20ம் நிதியாண்டிற்கு நிலைக்கழிவு தொகையாக ரூ. 50,000/- வரை சலுகை பெறலாம். நடப்பு நிதியாண்டில் குமாரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கான நிலைக்கழிவு கூடுதலாக 10,000 ரூபாய் கிடைக்கப்பெறும். இவருக்கான வருமான வரியை கணக்கிட,

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 50,000) = வரி வருவாய் (ரூ.5,50,000)

 

வரி வருவாய் (ரூ. 5,50,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 3,00,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

 

ரூ. 5,00,001-ரூ. 5,50,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 10,000/-*

 

(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)

 

வரியில்லா (வரி தள்ளுபடி) திட்டம்:

 

லைப் இன்சூரன்ஸ்(Life Insurance) மற்றும் மருத்துவ காப்பீடு – ரூ. 50,000/- ஆண்டுக்கு

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு(ரூ.50,000) – காப்பீடு(ரூ.50,000) =  வரி வருவாய்(ரூ. 5,00,000/-)

 

வரி வருவாய் (ரூ. 5,00,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 2,50,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வருமான வரி தாக்கலுக்கு பின், வரி தள்ளுபடியாக 12,500/-  ரூபாயை திரும்ப பெற்று கொள்ளலாம். இது 2019-20ம் நிதியாண்டிற்கான வருமானம், அதாவது ஒருவர் 2020-21 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த சலுகையை பெறலாம்.

 

வரி சலுகையை (80C, 80D, 80E, 80G, etc) பெறும் தனிநபர் ஒருவர் அதற்கான ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்வது அவசியம். வரி சலுகைக்கான திட்டத்தில்(Tax Savings Plan) ஒருவர் முதலீடு செய்யாமல், வரி சலுகையை பெற முற்பட்டால் வருமான வரி சிக்கலில் மாட்டி கொள்ள நேரிடும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்வு

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்வு

India’s Retail Inflation increased to 2.92 percent in the month of April 2019

 

கடந்த ஏப்ரல் மாதத்தில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் சில்லரை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 2.86 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஐந்து வருட காலமாக பணவீக்கத்தின்(Consumer Price Index -CPI) அளவு குறைந்து வந்துள்ள நிலையில், பாரத ரிசர்வ் வங்கி பணவீக்க மதிப்பீட்டின் அடிப்படையில் வட்டி விகிதத்தையும்(Repo Rate) குறைத்து வந்தது. இதனால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து இருந்தது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் சற்று உயர்ந்து இருப்பினும், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த 2.97 சதவீத பணவீக்கம் என்ற அளவை எட்டவில்லை.

 

2.92 சதவீத பணவீக்கம் என்பது கடந்த ஆறு மாதத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் முடிவில் 0.30 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்கம்(Food Inflation), தற்போது 1.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது போல காய்கறிகளின் விலை 2.87 சதவீதமும், மீன் மற்றும் மாமிசம் 7.55 சதவீதமாகவும் மற்றும் பால் பொருட்கள் 0.42 சதவீதமாகவும் இருந்துள்ளது.

 

பழங்கள், சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளின் விலை கடந்த மாதம் குறைந்துள்ளது. எரிபொருட்களின்(Fuel & Light) பணவீக்கம் 2.42 சதவீதத்திலிருந்து 2.56 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டு மனை, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை விலை குறைந்து காணப்படுகிறது.

 

மார்ச் மாதத்தில் கிராமப்புறங்களில் காணப்பட்ட 1.80 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த மாதத்தில் 1.87 சதவீதமாக(Rural Inflation) உயர்ந்துள்ளது. இது போல நகர்ப்புற(Urban) பணவீக்க விகிதம் 3.43 சதவீதத்திலிருந்து 4.23 சதவீதமாக அதிகரித்து இருந்தது.

 

பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) மதிப்பீட்டின் படி, ஏப்ரல் மாத பணவீக்கம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. இதனால் அடுத்து வரும் காலங்களிலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

The Story of ITC – Lead by Yogesh Chander Deveshwar

 

கடந்த சனிக்கிழமை அன்று(11-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் திரு. யோகேஷ் சந்தர் தேவேஸ்வர் உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய தொழில் உலகில் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு, 1947ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூரில் பிறந்தவர் யோகேஷ் தேவேஸ்வர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

டெல்லி ஐ.ஐ.டி.கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற யோகேஷ், பின்பு அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தொழில் சார்ந்த கல்வியை பயின்றார். 1910ம் வருடம் வில்ஸ்(Wills) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட புகையிலை நிறுவனம் தான் ஐ.டி.சி. ஆரம்ப காலத்தில் இம்பீரியல் புகையிலை நிறுவனம்(Imperial Tobacco Company) என்ற பெயரிலிருந்து இந்திய புகையிலை நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1974ம் காலங்களில் ஐ.டி.சி.(ITC Limited) நிறுவனம் என சுருக்கம் பெற்றது.

 

1968ம் ஆண்டு ஐ.டி.சி. நிறுவனத்தில் இணைந்த யோகேஷ், அடுத்த 15 வருடத்தில் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் முக்கிய பதவி வகித்தார். 1996ம் வருடம் யோகேஷ் தேவேஸ்வர் ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவரானார்(CEO). இவர் இருந்த காலத்தில் புகையிலையை மட்டுமே கொண்டு இயங்கும் நிறுவனம் என விமர்ச்சிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டில் இன்று பெரும்பாலான நுகர்வோர் பொருட்களின் பிராண்டாக ஐ.டி.சி. நிறுவனத்தை மாற்றினார்.

 

புகையிலையை பெரும்பான்மை தொழிலாக இந்த நிறுவனம் கொண்டிருந்தாலும், கடந்த சில வருடங்களாக புகையிலை பங்களிப்பை குறைத்து வருகிறது. நுகர்வோர் துறையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் இந்த நிறுவனத்தின் சேவை வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.

 

உணவுப்பொருட்கள், அழகு பொருட்கள், அலுவலகம் சார்ந்த பொருட்கள், தீப்பெட்டி, ஊதுவத்தி, பேப்பர் சார்ந்த பொருட்கள் என தனது தொழிலை பன்முகத்தன்மையாக உருவாக்கினார் யோகேஷ். இந்திய ஹோட்டல் துறையில் 90க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளை கொண்டு நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஐ.டி.சி. நிறுவனம். தொழில்நுட்ப துறையிலும் இதன் பங்கு முக்கியத்துவமாக அமைகிறது.

 

ஆசிர்வாத்(Aashirvaad), சன் பீஸ்ட், கேண்டி மேன், பியாமா வில்ஸ்(Fiama Di Wills), லைப் ஸ்டைல், கிளாஸ் மேட்(Classmate) நோட்டு புத்தகங்கள், மங்கள் தீப்(Mangaldeep), பார்க் ஹோட்டல்கள் என பல பிராண்டுகளில் புரட்சியை ஏற்படுத்தினார். தற்போது ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,65,000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், 26,000க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனம் சமீபமாக விவசாயம் மற்றும் பால் வளம் சார்ந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவிலும் பொறுப்பு வகிக்கும் யோகேஷ் தேவேஸ்வர்(YC Deveshwar), 2013ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த நிறுவன தலைவர்களில் 7வது இடத்தை பிடித்தார். 2011ம் ஆண்டு அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்திய கார்ப்பரேட் தொழிலில் நீண்டகாலம் தலைவர் பதவி வகித்தவர்களில் தற்போது இவரே முதலிடத்தில் உள்ளார்.

 

இன்று(13-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளும் வெளிவர உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil