3301 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம்

3301 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம்

Reliance Infra has reported a net loss of Rs. 3301 Crore in Q4FY19

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம் உள்கட்டமைப்பு(Infrastructure) துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் மின் பரிமாற்ற சேவைகளை செய்து வருகிறது. 2018-19ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இந்நிறுவனம் 3,301 கோடி ரூபாய் நஷ்டத்தை காண்பித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதற்கு முந்தைய வருடத்தின்(2017-18) மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 134 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவன வருவாய் 4,013 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.888 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய வருமானம் 1,832 கோடி ரூபாய் நிகர இழப்பாக உள்ளது.

 

வரிக்கு பிந்தைய வருவாய்(PAT) ரூ. 3,301 கோடி நஷ்டமாகவும், ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனம் 2,427 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்து பத்து நிதியாண்டுகளுக்கும் மேலாக நிறுவனம் இதர வருமானத்தை கொண்டிருந்தாலும், தற்போது முதன்முறையாக 2018-19ம் நிதி வருடத்தில் நஷ்டத்தை அடைந்துள்ளது.

 

நிறுவனத்தின் விற்பனை கடந்த 10 வருடங்களில் 13 சதவீத வளர்ச்சியையும், லாபம் பத்து வருடங்களில் 10 சதவீத இழப்பையும் கண்டுள்ளது. நிறுவனம் 15,860 கோடி ரூபாயை கடனாக கொண்டுள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்களிப்பில் 98 சதவீத பங்குகளை அடமானம் வைத்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

2018-19ம் நிதியாண்டில் இருப்பு நிலை கையிருப்பு(Reserves) 13,913 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில் 23,975 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனில் அம்பானியின் பெரும்பாலான பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடனில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. கடன் தன்மையை குறைக்க, வளர்ச்சியை கொண்டிருந்த மியூச்சுவல் பண்ட் தொழிலிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.

 

இருப்பினும், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட்(Reliance Mutual Fund) தொழிலில் ஜப்பானை சேர்ந்த நிப்பான் லைப் நிறுவனம்(Nippon Life) கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளன. ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் சராசரி வளர்ச்சியை கொண்டிருக்கின்றன. வரவிருக்கும் நாட்களில் இதன் புதிய நிர்வாக திறமையை ஆராயலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

தயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு

தயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு

India to raise Import tariffs for US Goods – 29 Items in line

 

கடந்த ஜூன் 1ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி.(GSP) சலுகைகளை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து, தற்போது அமெரிக்க நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா தயாராக உள்ளது. ஜி.எஸ்.பி.(Generalized System of Preferences) என்பது ஏழை மற்றும் வளரும் நாடுகள், அமெரிக்க சந்தைக்கு தங்கள் பொருட்களை எவ்வித கட்டணமில்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும். இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரி சலுகைகளை பெறும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சுமார் 29 பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இது நாளை(16-06-2019) முதல் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு இறக்குமதியாகும் உருக்கு(Steel Import) மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு கூடுதல் வரி விதித்திருந்தது.

 

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முனைந்தது. இருப்பினும், இடையே நடைபெற்ற சீன-அமெரிக்க வர்த்தக போர், தேர்தல் அறிவிப்புகள் ஆகியவற்றால் தாமதம் ஏற்பட்டது. நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்க அலுவலகம் இந்தியாவுக்கான ஜி.எஸ்.பி. சலுகைகளை திரும்ப பெற்றதை அடுத்து, தற்போதைய கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு முடிவு ஏற்பட்டுள்ளது.

 

29 வகையான பொருட்களில் ஆப்பிள், பாதாம் பருப்பு, பருப்பு வகைகள், போரிக் அமிலம்(Boric Acid), சுண்டல் ஆகியவை அடங்கும். இதனால் வரும் நாட்களில் இதன் விலையில் மாற்றம் தெரியலாம். கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருக்கு பொருட்களுக்கு 25 சதவீதமும், அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதமும் கூடுதல் வரியை விதித்தது அமெரிக்கா.

 

கூடுதல் வரி விதிக்கப்பட உள்ள 29 வகை பொருட்களின் இறக்குமதி மதிப்பு(Import Cost) (வரிக்கு பிந்தைய) 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், இவற்றில் ஆப்பிள் மற்றும் பாதாம் பொருட்களின் மதிப்பு பெரும்பான்மையாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நடப்பு ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் ஜி 20(G20 Summit) மாநாடு நடைபெற உள்ள நிலையில், தற்போதைய இறக்குமதி சார்ந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே ஏற்படலாம் என தெரிகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மே மாத சில்லரை விலை பணவீக்கம் (Retail Inflation) 3.05 சதவீதமாக உயர்வு

மே மாத சில்லரை விலை பணவீக்கம் (Retail Inflation) 3.05 சதவீதமாக உயர்வு

Inflation rose to 3.05 percent in May, but IIP growth up 3.4 percent in April 2019

 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) என்றழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 3.05 சதவீதமாக உள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது. மே மாதத்திற்கு சொல்லப்பட்ட பணவீக்கம் கடந்த 7 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத பணவீக்கம் 2.92 சதவீதத்திலிருந்து 2.99 சதவீதமாக சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டது. இருப்பினும் பணவீக்க விகிதம் கடந்த 10 மாதங்களாக  நிர்ணயிக்கப்பட்ட(RBI Policy) 4 சதவீத அளவிற்குள் தான் உள்ளது.

 

நாட்டின் பணவீக்க சராசரியை கணக்கிட்டால், கடந்த 2012ம் வருடம் முதல் 6.11 சதவீத சராசரியை கொண்டுள்ளது. முதலீட்டை மேற்கொள்ளும் ஒருவர் பணவீக்கத்தை சரிகட்டிய பிறகே, தனது மூலதன வருவாயை(Capital Gains) கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலோர் பணவீக்கத்தை தங்கள் குடும்ப பட்ஜெட்டில் சேர்த்து கொள்வதில்லை. இதன் காரணமாக கல்வி, திருமணம், ஓய்வு போன்ற நீண்ட கால நிதி இலக்குகளை சரியாக திட்டமிடுவதில் சிரமம் ஏற்படுவதுண்டு.

 

மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றின் பணவீக்கம் 8.12 சதவீதமும், காய்கறிகள் 5.46 சதவீதமும், பருப்பு வகைகள்(Pulses) 2.13 சதவீதமும் மற்றும் எண்ணெய், கொழுப்பு பொருட்கள் 0.91 சதவீதமாகவும் உள்ளது. அதே வேளையில் பழங்களின்(Fruits) சில்லரை விலை பணவீக்கம் 5.17 சதவீதமாக குறைந்துள்ளது.

 

பணவீக்கம் உயர்ந்து வந்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தின் தொழிற்துறை உற்பத்தி(Industrial Production) 3.4 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மாத காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்க தொழிலில்(Mining) குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

தொழில்துறை உற்பத்தி கடந்த 15 வருடங்களில் 6.28 சதவீதம் என்ற சராசரி அளவை பெற்றிருக்கிறது. வீட்டுமனை பணவீக்கம் மே மாதத்தில் உயர்ந்தும், ஆடைகள் மற்றும் காலணிகள் விலை குறைந்தும் காணப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா ?

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா ?

Automobile Sales drop – Economic recession ?

 

சீன-அமெரிக்க வர்த்தக போர் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான எல்லை பதற்றம் ஆகியவை ஒருபுறம் எனில், சமீபத்திய வாகனத்துறையின் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்திய நாடு விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டது என்ற நிலை மாறி, இன்று சேவைத்துறையில்(Service sector) மட்டுமே நாம் சிறந்து விளங்குகிறோம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில்(GDP) விவசாயம் 16 சதவீதத்தையும், உற்பத்தி துறை(Manufacturing) 30 சதவீதத்தையும் மற்றும் சேவைத்துறை 54 சதவீதம் என்ற அளவை கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறை இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை எனலாம்.

 

நடப்பு  ஜூன் மாதத்தில் 7 நிறுவனங்கள் தனது பயணிகள் வாகன(Passenger vehicle) உற்பத்தியை குறைத்து கொள்வதாக கூறியுள்ளன. இவற்றில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் மாருதி நிறுவனங்கள் அடங்கும். கடந்த மாதத்தில் உள்ளூர் பயணிகள் வாகன விற்பனையும் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இது போன்ற விற்பனை வீழ்ச்சி கடந்த 2001ம் ஆண்டில் தான் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் பண்டிகை நாட்களிலும் வாகன விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதன் தாக்கம் வாகனத்துறை பங்குகளிலும் வெளிப்பட்டு வந்துள்ளது. நடப்பு வருடத்தில் ஜனவரி மாதம் முதல் வாகன விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

மே மாதத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் வணிக வாகனங்கள் முறையே விற்பனை 7 சதவீதம் மற்றும் 10 சதவீத சரிவை கண்டுள்ளன. வாகன ஏற்றுமதியும் கடந்த சில மாதங்களாக வளர்ச்சியில் தேக்கத்தை கொண்டுள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம்(Maruti Suzuki) டீசல் வாகன உற்பத்தியை வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

 

பொருளாதாரத்தில் வலுவடைந்த நாடுகளிடையே ஏற்பட்டு கொண்டிருக்கும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் தற்போது வாகனத்துறையை பாதித்து கொண்டிருந்தாலும், உள்நாட்டிலும் இந்த துறைக்கு சாதகமான விஷயங்கள் நடைபெறவில்லை.

 

அதிகரிக்கப்பட்ட வாகன காப்பீடு தொகை(Insurance Premium), சரக்கு மற்றும் சேவை வரி(GST) ஆகியவற்றால் வாகன துறை வளர்ச்சி உள்நாட்டிலும் சரிவடைந்ததாக கூறப்படுகிறது. நடப்பில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 28 சதவீதமாக இருந்து வருகிறது. இதனை 18 சதவீதம் என்ற வரி விதிப்பில் கொண்டுவரும் போது வாகன துறை வரும் காலத்தில் வளர்ச்சியை காணலாம். நம்மை போன்ற வளர்ந்து வரும் நாட்டில், உட்கட்டமைப்பு(Infrastructure) மற்றும் போக்குவரத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். வாகனத்துறை வளர்ச்சி இதனை சாத்தியமாக்குமா என்பதை வரவிருக்கும் நாட்களில் எதிர்பார்ப்போம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிக்கலில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் – 98,000 கோடி ரூபாய் முறைகேடு புகார்

சிக்கலில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் – 98,000 கோடி ரூபாய் முறைகேடு புகார்

Indiabulls Housing Finance in Trouble – Complaint of Rs. 98K Crore Scam

 

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வீட்டு நிதி நிறுவனமாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்(IHFL) உள்ளது. தேசிய வீட்டு வசதி வங்கியின்(NHB) கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த நிறுவனம் வீட்டு கடனுக்கான சேவையை வழங்கி வருகிறது. குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானங்களுக்கு கடன் அளிக்கும் வசதியையும் செய்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம், இந்தியா புல்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,300 கோடி ரூபாயாகவும், நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு 21 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளில் 13 சதவீதம் என்ற அளவிற்கு பங்குகளை அடமானம் வைத்துள்ளனர்.

 

தற்போது இந்த நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் ஒரு மோசடி புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சமீர் மற்றும் இயக்குனர்கள் பொது மக்களின் பணத்தை மோசடி செய்து விட்டார்கள் எனவும், இதன் மதிப்பு சுமார் 98,000 கோடி ரூபாய் எனவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

 

ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை பெற்ற இந்தியாவை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் துணையுடன், நிறுவனத்தின் தலைவர் பல போலி நிறுவனங்களை (Shell Companies) உருவாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதலீடாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு கடன் தொகையும் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த புகாரை இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் பெயரை களங்கப்படுத்தவும், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை அச்சுறுத்தவும்(Blackmailing) தான் இது போன்ற பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

வழக்கின் முக்கியத்துவமாக, நிறுவனத்தின் தலைவர் அரசியல் பின்புலம் உள்ளவர் என்றும், அரசு பணியாளர்கள் மற்றும் தர மதிப்பீட்டு(Rating Agencies) நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மோசடி(Scam) நடைபெற்றிருக்காது. வருமான வரித்துறை(Income Tax Department), செபி மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இது சார்ந்து நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டும் ‘ எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

உலகளவில் பொருளாதார மந்தநிலை இருக்கும் சூழலில், இந்தியாவில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்னை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளன என்றே சொல்லலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ

India’s Top most Influential Brands – Reliance Jio takes Second Place

 

உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்(Ipsos), பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமான இப்சோஸ், ஊடகம் மற்றும் சந்தைப்படுத்துதல், கருத்துக்கணிப்புகள் மற்றும் சமூக ஆராய்ச்சியை பல நாடுகளில் சேவையாக கொண்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் இந்த நிறுவனம் இந்தியாவிற்கான சிறந்த மற்றும் செல்வாக்கு மிகுந்த(Influential Brands) பிராண்டுகளின் பெயர்களையும், அதனை சார்ந்த நிறுவன பெயர்களையும் வெளியிட்டது. நாட்டின் மிகச்சிறந்த பிராண்டாக,  ‘கூகுள்(Google)’ முதலிடத்தில் உள்ளது. கூகுள் பிராண்டு கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் அங்கம் வகித்து வருகிறது.

 

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்டுகளில் இரண்டாவது இடத்தை இம்முறை ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) பெற்றுள்ளது. கடந்த வருடம் அமேசான் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஜியோ மூன்றாவது இடத்திலும்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மார்ச் மாத முடிவில் 30 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 840 கோடியாகவும் உள்ளது.

 

மூன்றாம் இடத்தில் பே.டி.எம்.(Paytm) நிறுவனமும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் பேஸ்புக், அமேசான் நிறுவனங்கள் உள்ளன. எட்டாவது இடத்தில் ஏர்டெல் மற்றும் பத்தாவது இடத்தில் ஆப்பிள்(Apple – Iphone) நிறுவனமும் உள்ளது. முதல் பத்து இடங்களில் பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனமும், பிளிப்கார்ட்(Flipkart) மற்றும் சாம்சங் நிறுவங்களும் அடங்கும்.

 

சொல்லப்பட்ட தரவரிசை, மக்களின் நினைவில் இருந்த முக்கிய நிறுவன பிராண்டுகள், நம்பகத்தன்மை மற்றும் நிறுவனங்களின் முன்னணி சேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிராண்டுகளை ஆராய்ந்த பிறகே, மேற்சொன்ன தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இப்சோஸ்(Ipsos – Global Market research) நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

முதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர நிதித்திட்டங்கள் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

முதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர நிதித்திட்டங்கள் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

DHFL Defaults on payment – Precautions for the Mutual Fund Investors

 

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தை அடுத்து சமீபத்தில் திவான் ஹவுசிங் பைனான்ஸ்(DHFL) நிறுவனத்தின் தர மதிப்பீடு குறைக்கப்பட்டது. இதனால் பரஸ்பர நிதிகளில் கடன் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான வருவாய் சிறிய இறக்கத்தை கண்டிருந்தது. பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் திவான் ஹவுசிங் பங்கை தங்களது கடன் திட்டங்களில் கொண்டுள்ளதால், ஏறக்குறைய அனைத்து கடன் திட்டங்களும் கடந்த சில நாட்களாக முதலீட்டு வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களிடையே மியூச்சுவல் பண்டு திட்டங்கள்(Mutual Funds) பற்றிய ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முன்னர் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனம் தான் பெற்ற முதலீட்டிற்கு சரியான வட்டி வருவாயை கொடுக்க முடியாமலும், முதிர்வு பணத்தை செலுத்த முடியாமல் போக தர மதிப்பீட்டு(Rating Agencies) நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் மதிப்பீட்டை குறைத்தன.  இதன் வெளிப்பாடு பெரும்பாலான பரஸ்பர நிதித்திட்டங்களில் தென்பட்டது. இதற்கு அடுத்த படியாக எஸ்ஸல் குழுமத்தின்(Essel) ஜீ நிறுவனமும் இதே மாதிரியான பிரச்சனையை சந்தித்தது. ஜீ(Zee Entertainment) நிறுவனத்தின் பங்கு ஒரே நாளில் 25 சதவீதத்திற்கும் மேலாக சந்தையில் இறக்கத்தை கண்டது.

 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்களில் தான் ரிஸ்க் தன்மை அதிகம் உள்ளதென்றால், கடன் திட்டங்களிலும்(Debt Mutual Funds) வருவாய் இழப்பு சமீபத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது புதிய முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக எந்தவொரு முதலீட்டு சாதனமும் குறிப்பிட்ட ரிஸ்க் தன்மையை கொண்டவையே. நாம் முதலீடு செய்யும் வங்கி வைப்பு நிதிகளிலும் இந்த ரிஸ்க் தன்மை பொதுவாக உள்ளது. வங்கியில் நாம் பல லட்ச ரூபாயை சேமித்து வைத்திருந்தாலும், நமக்கான பாதுகாப்பு அம்சம் ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே.

 

இதற்காக நாம் வங்கியில் நமது சேமிப்பையோ அல்லது முதலீட்டையோ மேற்கொள்ளாமல் இருக்க போவதில்லை. நமக்கு தேவையான சரியான நிதி இலக்குகளை(Financial Goals) நிர்ணயித்து கொண்டு, அதற்கு தேவையான திட்டங்களை தேர்ந்தெடுப்பதே நமக்கான முதலீட்டு கடமையாகும். ரிஸ்க் தன்மையை பரவலாக்குவதும்(Diversification) நமது பண்பாக இருந்திருத்தல் வேண்டும். தங்கத்தில் முதலீடு பெரிய ஏற்ற-இறக்கத்தை சந்திக்காவிட்டாலும், தங்க ஆபரணங்கள் எப்போதும் ரிஸ்க் அதிகம் கொண்டவை. இருப்பினும், நாம் நமது குடும்பத்தின் விருப்பத்தேவைக்காக வாங்க தான் செய்கிறோம்.

 

சமீபத்தில் திவான் ஹவுசிங்(Dewan Housing) நிறுவனம் பல பரஸ்பர நிதித்திட்டங்களின் மூலம் பெற்ற கடனுக்கான வருவாயை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதனால் மியூச்சுவல் பண்டின் கடன் திட்டங்கள் வருவாய் இழப்பை கொண்டுள்ளன. இந்த பிரச்னை தற்காலிகமானது தான், எனினும் ஒரு முதலீட்டாளராக நமது முதலீட்டை பரவலாக்கம் செய்வது மற்றும் நீண்ட கால தேவையை சரியாக திட்டமிடுவதன் மூலம் நாம் நமக்கான மூலதன ஆதாயத்தை சரியாக பெறலாம்.

 

திவான் ஹவுசிங் நிறுவனத்தில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம், அரசு மற்றும் தனியார் நிறுவன ஓய்வூதிய திட்டங்களின்(Pension Funds) பங்கு அதிகமுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தொழிலாளர்களின் பி.எப்.(PF) தொகை மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பும் திவான் ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திவான் ஹவுசிங் நிறுவனத்தின் சார்பிலும், தான் செலுத்த வேண்டிய தொகையை அடுத்த ஒரு வாரத்தில் முழுவதுமாக செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் எந்தவொரு முதலீடு திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போதும், முதலீட்டு ஆவணங்களை சரியாக புரிந்து கொண்டு, ரிஸ்க் தன்மையை(Risk Management) ஆராய்ந்து விட்டு முதலீடு செய்வது சிறந்தது. பொன்சி(Ponzi) திட்டங்களில் தங்களது முதலீட்டை மேற்கொள்ளாமல், பல்வேறு முதலீட்டு சாதனங்களை பற்றிய அடிப்படை சிந்தனையை கற்று கொள்வது நலன் பயக்கும். முதலீடு சார்ந்த விஷயங்கள் நமக்கு புரியாத நிலையில், தகுந்த நிதி ஆலோசகர்களின் உதவியை பெறலாம்.

 

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சமீப காலமாக நிதி சார்ந்த பிரச்னைகளையும், வருவாய் இழப்பையும் சந்தித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி, செபியின்(RBI, SEBI) சார்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும்.

 

அதிக வருமானத்தை பெற வேண்டும் என்பதை கடந்து, முதலீட்டை பற்றிய சரியான நிதிக்கல்வி மற்றும் ரிஸ்க் நிர்வாகத்தை கையாளுவதே தற்போது அவசியம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு

Bank’s Repo rate cuts to 5.75 percent by 25 bps – Monetary Policy Committee

 

நேற்று(06-06-2019) நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee – MPC) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னர் இருந்த 6 சதவீதத்திலிருந்து தற்போது 5.75 சதவீதமாக மாற்றமடைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு குறுகிய கால கடனாக அளிக்கும் தொகைக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதமாகும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிவர்ஸ் ரெப்போ வட்டி(Reverse Repo) விகிதம் 5.50 சதவீதமாகவும், வங்கி வட்டி விகிதம் 6 சதவீதமாகவும் மற்றும் ரொக்க இருப்பு விகிதம்(CRR) 4 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகள் தங்களிடம் உள்ள உபரித்தொகையை, மத்திய ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்வார்கள். இந்த உபரி தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்றழைக்கப்படுகிறது.

 

நடப்பு வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித குறைப்பு கடந்த ஒன்பது வருடங்களில் காணப்பட்ட குறைவான ரெப்போ விகிதமாகும்.

 

நுகர்வோர் பணவீக்கம்(CPI Inflation) நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3.1 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் 3.7 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மத்திய நிதிக்கொள்கை குழு மதிப்பிட்டுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம்  நிதியாண்டின் முடிவில் 7 சதவீதமாக இருக்கும் என கூறியுள்ளது. இதற்கு முந்தைய மதிப்பீட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்(GDP) 7.2 சதவீதமாக இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

 

மத்திய நிதிக்கொள்கை குழுவில் இம்முறை பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைப்பதை ஆதரித்துள்ளனர். ரெப்போ வட்டி விகித குறைப்பு(RBI Policy) சாதகமான அம்சமாக அமைந்திருந்தும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டதால் நேற்று இந்திய பங்குச்சந்தை ஒரு சதவீதத்திற்கு மேல் இறக்கத்தை கண்டிருந்தது.

 

ஏற்கனவே வங்கிகளின் வாராக்கடன் அளவு மற்றும் நிதி நெருக்கடி(Liquidity crunch) அதிகமாகியுள்ள நேரத்தில், தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித சலுகை வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வாறு சாதகமாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும். அடுத்த மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வங்கி வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கும் இந்திய பங்குச்சந்தை – மத்திய நிதி கொள்கை

வங்கி வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கும் இந்திய பங்குச்சந்தை – மத்திய நிதி கொள்கை

Expecting Repo rate cut of 25 bps in June 2019 – Monetary Policy Committee

 

மத்திய நிதி கொள்கை குழுவின்(MPC) மூன்று நாட்கள் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று வங்கி வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஏப்ரல் மாத 2.92 சதவீத பணவீக்கம் காரணமாக அமையலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் பொருளாதார வளர்ச்சியும்(GDP) ஜனவரி – மார்ச் காலத்தில் 5.8 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது. விவசாய துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை, நடப்பாண்டில் எதிர்பார்க்கப்பட்ட பருவ மழைக்கு முந்தைய காலத்தில் பெய்த  மழையின் அளவும் 25 சதவீதம் குறைவாக உள்ளது.

 

இன்று வங்கியின் ரெப்போ வட்டி விகிதம்(Bank Repo Rate) 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கடனுக்கான வட்டி விகிதம் குறையலாம், அதே வேளையில் வங்கியில் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படும்.

 

பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி(RBI) வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலும், வங்கிகள் அதனை உடனே நடைமுறைக்கு கொண்டுவருவதில்லை. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்களும் வட்டி விகித குறைப்பு பயனை முழுவதுமாக பெற முடிவதில்லை.

 

வட்டி விகித குறைப்பு 25 அடிப்படை புள்ளிகள் என்றால், பொதுத்துறை வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை 10-15 புள்ளிகள் வரை மட்டுமே குறைக்கின்றன. ஆனால் டெபாசிட்தாரர்களின் வட்டி விகிதத்தை(Interest rate) உடனே முழுவதுமாக குறைத்து விடுகின்றன.

 

நிறுவனங்களின் வருவாய் குறைவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்றம் பெறாதது மற்றும் உலக பொருளாதார மந்த நிலை ஆகிய காரணத்தால் இந்திய பொருளாதாரம் சுணக்கம் அடைந்திருந்தாலும், வங்கி வட்டி விகித குறைப்பும், பணவீக்க கட்டுப்பாடும்(Inflation) சந்தைக்கு சற்று சாதகமாக உள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தங்க பத்திர திட்டம் ஜூன் 3 முதல் – முதலீடு செய்வது எப்படி ?

தங்க பத்திர திட்டம் ஜூன் 3 முதல் – முதலீடு செய்வது எப்படி ?

Sovereign Gold Bonds – Series I – How to invest in Gold Bonds Scheme ?

 

மத்திய அரசின் தங்க பத்திர திட்டம் 2019-20ம் நிதியாண்டுக்கான முதல் வெளியீடு ஜூன் 3 முதல் ஜூன் 7, 2019 வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவிற்கு பின், வரும் ஜூன் 11ம் தேதி முதலீட்டாளர்களுக்கு பத்திரங்கள் வழங்கப்படும்.

 

பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்படும் இந்த தங்க பத்திர திட்டத்தில் இந்திய குடிமக்களாக உள்ள தனி நபர், இந்து கூட்டு குடும்பம், டிரஸ்ட்(Trust), பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு வருமான வரி துறையிடம் பாண்(PAN) எண்ணை பெற்றிருப்பது அவசியமாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முதலீடு செய்யப்போகும் முன், நகைக்கடையில் தங்கம் வாங்கும் போது பின்பற்றும் கே.ஒய்.சி.(KYC) முறையை இங்கும் பின்பற்ற வேண்டும். தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே முதலீடு செய்யலாம் அல்லது பங்குச்சந்தையிலும் தங்க பத்திரத்தை வாங்கி கொள்ளலாம். தங்கப்பத்திர திட்டம் பங்குச்சந்தையில் வருடம் முழுவதும் வர்த்தகமாகி(Trading in Stock Exchange) கொண்டிருப்பதால், தனிநபர் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

 

தங்க பத்திர திட்டம்(SGB) என்பது நாம் தங்கம் வாங்குவது போன்றே கிராம் கணக்கில் வாங்கி கொள்ளலாம். ஆனால் நமக்கு அது நகைகளாக கிடைக்கப்பெறாமல், பத்திரமாக(Bonds) கிடைக்கப்பெறும். குறைந்தபட்ச முதலீடு 1 கிராமாக(1 Gram) உள்ளது. அதிகபட்சமாக தனிநபர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் 4 கிலோ வரை முதலீடு செய்து கொள்ளலாம். டிரஸ்ட்களுக்கு இந்த வரம்பு 20 கிலோ வரையாகும்.

 

தங்கத்தின் தினசரி ஏற்ற-இறக்கத்தை தங்க பத்திர திட்டத்திலும் காணலாம். முதிர்வு காலம் 8 வருடங்கள் ஆகும். இருப்பினும் ஒருவர் முதலீடு செய்த ஐந்தாவது வருடம் முதல் வெளியேறி கொள்ளலாம். துவக்கத்தில் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்ற அளவில் வட்டி கணக்கிடப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, முதலீட்டின் மீதான வட்டி வருவாய்(Interest Income) வழங்கப்படும்.

 

முதலீட்டின் முதிர்வில், அன்றைய தங்கத்தின் விலைக்கேற்ப பணமாக மட்டுமே பெற முடியும், தங்கமாக கொடுக்கப்படாது. அதே வேளையில் முதலீடு செய்யப்படும் தொகை ஒரு கிராம் தங்கத்தின் விலையில்(Units per Gram) அமையும். தங்கத்தின் தரம் 999 சுத்தத்தில்(Purity) அடங்கும்.

 

பாரத ரிசர்வ் வங்கியின் வரைமுறைப்படி, ஒருவர் தான் முதலீடு செய்திருக்கும் தங்க பத்திரத்தினை அடமானம்(Collateral loan) வைத்து வங்கியில் கடனை பெற்று கொள்ளலாம். தங்க பத்திர திட்டத்தில் முதலீட்டை திரும்ப பெறும் போது, கிடைக்கப்பெறும் வருவாய்க்கு(Capital Gains) வரி சலுகையும் உண்டு. தங்க பத்திரத்தை மற்றொருவருக்கு மாற்றம் செய்யும் போதும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.

 

தங்க பத்திர திட்டத்தில் பெரும்பாலும் குறைந்த அளவிலான முதலீட்டிற்கு மட்டும் ரொக்கமாக முதலீடு செய்ய முடியும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரைவோலை(DD), காசோலை(Cheque) அல்லது இணைய பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.

 

நடப்பு நிதியாண்டில் இரண்டாம் கட்ட வெளியீடு வரும் ஜூலை 8ம் தேதியும், மூன்றாவது வெளியீடு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றும் நான்காம் வெளியீடு செப்டம்பர் மாதத்திலும் தொடங்கப்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil