உணவக வணிகத்தில் இறங்க உள்ளீர்களா – இது உங்களுக்கு தான்

உணவக வணிகத்தில் இறங்க உள்ளீர்களா – இது உங்களுக்கு தான் 

Are you get into the Food Startups ? – Business Insider 

நேற்று மதியம் நானும், என்னுடைய உறவுமுறைகளில் உள்ள சகோதரர் ஒருவரும் பேசி கொண்டிருக்கும் போது, ‘ அவர் உணவு சார்ந்த தொழிலை தனது நண்பர்களுடன் சேர்ந்து துவங்க உள்ளதாக கூறினார். மேலும் அதனை சார்ந்து என்னுடைய அபிப்பிராயத்தை கேட்க முனைந்தார் ‘. எனக்கு உணவு சார்ந்த தொழிலை பற்றி அவ்வளவாக தெரியாது எனினும், அந்த சகோதரருக்கு சிறு வயது என்பதால் தொழில்முனைவை கொண்டாட, அவர் தொழில் செய்ய ஊக்கத்தை ஏற்படுத்தினேன்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான் பலமுறை சொன்னது போல, விவசாயம் என்பதும் ஒரு தொழில் என்பதை நாம் மறக்க கூடாது. தனது நிலத்தில் உற்றார், உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை வேலைக்கு அமர்த்தி, களையெடுக்க தினக்கூலி வழங்கி, காலம் வரும் வரை காத்திருந்து அறுவடை செய்பவர் ஒரு தொழில்முனைவை தான் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் விவசாயி, தொழில்முனைவோர், தொழிலதிபர், கூலி வேலை என பல பெயர்களை ஏற்படுத்தினாலும், அவர் செய்து கொண்டிருப்பது தொழில் தான்.

கோடிகளில் தொழில் செய்து வருபவர் தற்கொலை செய்து கொண்டாலும், கூலியாக இருந்தும் தனது சொந்த நிலத்தில் விவசாயத்தை செய்து வருபவரும் தொழிலை தான் செய்கிறார். நான் ஏன் இந்த விஷயத்தை அழுத்தமாக சொல்கிறேன் என்றால், தொழில்முனைவு(Entrepreneurship) என்பது தன்னை தானே சமாதானம் செய்து கொள்வதல்ல, மாறாக தன்னை வெற்றி கொள்வதே ஆகும்.

நமது சகோதரர் கதைக்கு வருவோம், உணவு சார்ந்த சேவைகளில் இன்று ஸ்விக்கி(Swiggy), ஜோமோடோ(Zomato), உபேர் ஈட்ஸ்(Uber Eats) என பல பிராண்டுகள் வந்து விட்டன. அப்புறம் எங்கே நாம் தொழில் செய்வது என கேட்கலாம். காலங்காலமாக இந்த நிகழ்வு மாற்றம் பெற்று கொண்டு தான் இருக்கிறது. தொழில் என்பது ஒரு ரிஸ்க் தன்மை கொண்ட செயல் எனினும், வேறு யார் அதை செய்வது. தொழில் விருத்தி அடையாவிட்டால், அனைவருக்குமான வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரம் எங்கே என்பது கேள்வி.

இளவயதிலேயே தொழிலில் ஈடுபட்டு தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. எண்ணத்தில் மட்டுமே கொண்டு, தொழில் செய்யாமல் விட்டுவிட்டால், அது ஒரு வாழ்க்கை தோல்வி தான். சகோதரர் கேட்டிருக்கிறார் என்பதற்காக உணவு சார்ந்த சில காரணிகளை இணையத்தில் கூகுள் செய்தேன்.

நம்மை போன்ற நுகர்வு சந்தையை கொண்டிருக்கும் நாடுகளில், உணவுக்கு எப்போதும் தேவை அதிகம் தான். பொதுவாக உணவு சார்ந்த தொழிலை பொறுத்தவரை வீணாகும் உணவு(Food Wastage) தான் தொழிலை பாதிக்கும் காரணியாக இருக்கும். இரண்டாவதாக சேவை பரிமாற்றத்தில் கவனமாக செயல்படுவது அவசியமாகும். நாம் எந்த மாதிரியான உணவு வகைகளை பரிமாற உள்ளோம், உணவகம் அமைவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் இடம், நமது வேலையாட்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.

நாம் மற்ற உணவகத்திலிருந்து உணவு வகைகளை பெற்று கொண்டு விநியோக தொழிலை(Delivery Business) மட்டும் மேற்கொள்ள உள்ளோமா, தொழிலுக்கான பட்ஜெட் திட்டமிடல், நமது வாடிக்கையாளர்கள் யார்(Target Audience) என கண்டறிவதும் அவசியமான ஒன்றாகும். உணவு தொழிலுக்கான அரசு உரிமங்கள், உணவை எந்த முறைகளில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற போகிறோம் என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உணவு சார்ந்த ஸ்டார்ட் அப்(Startups) தொழில்களில் கடந்த ஐந்து வருடங்களாக முதலீடு பெருகி வருகிறது. நாளுக்கு நாள் நுகர்வோர் தேவை அதிகரித்து வருவதால், அதற்கான முதலீட்டு வாய்ப்புகளும் திறந்தநிலையில் உள்ளது. பொருளாதார மந்த நிலை என்று சொல்லப்படும் காலத்திலும், உணவு சார்ந்த தொழிலில் தேவைகள் இருந்த வண்ணம் தான் உள்ளன.

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே சில உணவகங்களில் தோல்வியை தழுவ செய்கின்றன. நடப்பு 2019ம் ஆண்டில் உணவு சார்ந்த தொழில்கள் பெற்ற முதலீடு சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த வருடத்தை காட்டிலும் இரு மடங்கு என சொல்லப்படுகிறது. நாம் இந்த தொழிலில் சரியான முறையில் சேவைகளை அளித்து வரும் நிலையில், முதலீடுகளை ஈர்ப்பது கடினமான விஷயமாக இருக்காது.

கடந்த ஒரு வருடத்தில் ஸ்விக்கி நிறுவனம் 50 கோடி விநியோகங்களை(டெலிவரி) அளித்துள்ளது. வெறும் கைபேசி செயலியை(Mobile App) கொண்டு உணவு விநியோக சேவையில் ஈடுபட்டு வரும் பெரு நிறுவனங்கள், இயந்திர வழி கற்றலுக்கு(Machine Learning – AI) மாறி கொண்டிருக்கின்றன. இந்த சேவையில் தானியங்கி முறையை அமல்படுத்த நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் தயாராக உள்ளனர்.

நம் மதுரையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் உணவு விற்பனையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சுஸ்(Swiggy,Uber Eats and Zomato) நிறுவனங்களே இதற்கு சான்றாக உள்ளன. ஒரு முறை நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் திரு. குமரவேல்(C K Kumaravel, Naturals Salon) சொன்னது போல, ‘ மதுரையில் உள்ள இளைஞர்கள் சிலர் இங்குள்ள உணவகங்களை இணைத்து ஒரு உணவு விநியோக செயலியை ஏற்படுத்தி இருந்தால், இன்று ஸ்விக்கி, ஜோமாடோ போன்ற நிறுவனங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கிருந்தோ வந்த நிறுவனங்கள் தென்னகத்தின் கோவில் நகரத்தில் சில புள்ளிவிவரங்களை கொண்டு தொழில் செய்யக்கூடிய நம்பிக்கை இருந்தால், நாம் ஏன் உள்ளூர் இளைஞர்கள் செய்ய முடியாது ‘ என்று கூறினார்.

உணவு தொழில் மற்றும் விநியோக சேவையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து தொழில்முனைவை ஏற்படுத்துவதே உத்தமம். ஆழம் தெரியாமல் காலை விட கூடாது. அதற்கான காலை விட கூடாது என சொல்லவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா நிறுவனமாக ஜியோ மாறும் – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடனில்லா நிறுவனமாக ஜியோ மாறும் – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 

Reliance JIO will become a Debt Free Company in 2020 – Reliance Industries

 

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 9 லட்சம் கோடி. இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் அதனை சந்தைப்படுத்துதல், சில்லறை வணிகம் மற்றும் டிஜிட்டல் சேவை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்று 35 கோடிக்கும் மேலான சந்தாதாரர்களை கொண்டிருக்கும் ஜியோ(JIO), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ஜியோவின் வருகைக்கு பின்னர், நாட்டின் தொலைத்தொடர்பு சேவையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஜியோவின் அதிரடியான இணைய சேவையே காரணமாக அமைந்துள்ளன.

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இணைய வழி வைரல்களை ஏற்படுத்திய பெருமை ரிலையன்ஸ் ஜியோவை சாரும். துவக்க காலத்தில் ஜியோ நிறுவனம் வருமானத்தை பெறாவிட்டாலும், பின்பு வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டு, லாப பாதைக்கு செல்ல ஆரம்பித்தது.

 

தற்போது, டிஜிட்டல் சேவையை மேம்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றுமொரு துணை நிறுவனத்தை உருவாக்க முனைந்துள்ளது. இதற்கான கூட்டமும் நடைபெற்று, நேற்று (25-10-2019) நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் ஒப்புதலை பெற்றுள்ளது. 

 

அதன் படி, டிஜிட்டல் சேவைக்காக புதிய துணை நிறுவனம் துவங்க உள்ளதாகவும், ஆரம்ப நிலையில் ரூ. 1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முதலீடு உரிமை பங்குகளாக திரட்டப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

அதே போல, நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடனில்லா நிறுவனமாக(Virtually Debt Free), அதாவது கடனை வெகுவாக குறைக்கும் உத்தியில் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. 

 

சொல்லப்பட்ட புதிய நிறுவனம் மூலம் சிறந்த மற்றும் மாற்றத்தக்க டிஜிட்டல் சேவையை அளிக்க உள்ளதாக நிறுவனர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய கடன் 2.52 லட்சம் கோடி ரூபாய். 

 

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5.66 லட்சம் கோடியாகவும், இயக்க லாபம் 84,000 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் 39,588 கோடி ரூபாய் ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்(Reliance Industries) தனது முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் 39 சதவீத வருவாயை தந்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்

எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் 

India Jumps in the ease of doing business to Rank No. 63 – World Bank

 

உலக வங்கி சார்பில் வணிக விதிமுறைகளை அளவிடுதல் சார்ந்த புள்ளிவிவரங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. புதிய தொழில் தொடங்குவது, எளிதாக தொழில் செய்வதற்கான சூழ்நிலை(Ease of doing business), கட்டுமான அனுமதிகளை கையாள்வது, தொழிலுக்கான மின் இணைப்பை பெறுதல், கடன் பெறுதல் மற்றும் வரிகளை செலுத்துதல் என தொழில் சார்ந்த புள்ளிவிவரங்களை உலக வங்கி அளிக்கும்.

 

எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் பட்டியலில் நியூஸிலாந்து(New Zealand) முதலிடத்தில் உள்ளன. இந்த நாடு புதிய தொழில் துவங்குவதற்கான தரவரிசையிலும் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எளிதாக தொழில் செய்வதற்கான தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும், ஹாங்காங்கை சிறப்பு நிர்வாக பிராந்தியமாக கொண்டிருக்கும் சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்தியா தர வரிசையில் 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. 190 நாடுகளை கொண்ட பட்டியலில்(World Bank – Doing Business Rank) 2014ம் ஆண்டு இந்தியா 144வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் எளிதாக தொழில் செய்ய ஏதுவாக உள்ள நகரங்களில் லூதியானா(Ludhiana) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் மற்றும் பத்தாம் இடத்தில் மும்பையும் உள்ளது. 

 

புதிய தொழில் தொடங்கும் தர வரிசையில் தமிழகம் பத்தாவது இடத்திலும், எளிதாக தொழில் செய்ய ஏதுவான நகரங்களின் பட்டியலில் 15வது இடத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.

 

தர வரிசையில் இந்தியா கடந்த ஆறு வருடங்களில் முன்னேற்றம் கண்டிருப்பதற்கு காரணமாக சொல்லப்படுவது, பெரு நிறுவனங்கள் இந்திய நுகர்வோர் சந்தையை பிடித்தது, அயல் நாடுகளில் ஏற்பட்டுள்ள வர்த்தக போர் மற்றும் அரசின் புதிய கொள்கைகள் ஆகியவை ஆகும். புதிய தொழில் தொடங்குவதற்கான(Starting Business) வரிசையில் இந்தியாவிற்கு 136வது இடம் அளிக்கப்பட்டுள்ளது பாதகமானது.

 

மின் இணைப்புகளை பெறுவதில் 22ம் இடமும், சொத்துக்களை பதிவு செய்வதில் 154வது இடமும், கடன் பெறுதலில் 25வது இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் பெரு நிறுவனங்கள் மட்டுமே புதிய தொழில்களை துவங்குவது என்ற நிலை மாறி, வரும் காலத்தில் பெரும்பாலானவர்கள் தொழில் தொடங்குவதற்கான நிலை எளிதாக்கப்படலாம். 

 

எளிதாக தொழில் செய்ய ஏதுவாக நாடுகளில் இந்தியா முன்னேற்றம் பெற்றிருந்தாலும், சுகாதாரம் மற்றும் உலகளாவிய பசி அட்டவணையில்(Global Hunger Index) 102வது இடத்தில் இருப்பது கவலை அளிக்கக்கூடியது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

Asian Paints Colourizing Net Profit to Rs. 823 Crore – Q2FY20

பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints). இந்த நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளது. இரண்டாம் காலண்டான ஜூலை-செப்டம்பர் காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 5,050 கோடியாக இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானமாக 105 கோடி ரூபாயும், செலவினங்கள் ரூ. 4,319 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 852 கோடி ரூபாய் எனவும், இரண்டாம் காலாண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net Profit) ரூ. 823 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 9 சதவீத வளர்ச்சியையும், நிறுவனத்தின் நிகர லாபம் 67 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,615 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 65 கோடியாகவும் இருந்தது. அப்போதைய நிகர லாபம் ரூ. 491 கோடியாக இருந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) ரூ. 1.70 லட்சம் கோடியாக இருக்கிறது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 10.66 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாக உள்ளது. அதே போல லாப வளர்ச்சி, கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், பத்து வருட காலத்தில் 18 சதவீதமாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதம் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கில் பத்து வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், 27 சதவீத வருமானத்தை பெற்றிருக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிக்கலில் இந்திய ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ்

சிக்கலில் இந்திய ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ் 

Indian Tech Firm Infosys trouble in Whistleblower Complaint

நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3.27 லட்சம் கோடி ரூபாய். 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 82,675 கோடியாகவும், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ. 15,404 கோடியாகவும் இருந்தது.

நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் காலாண்டு முடிவில் ரூ. 58,400 கோடி என இருப்பு நிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டி.சி.எஸ்.(TCS) நிறுவனத்திற்கு அடுத்தாற் போல், மிகவும் கவுரமாக பார்க்கப்படும் நிறுவனம் தான் இன்போசிஸ்.

பொதுவாக பெரு நிறுவனங்கள் ஏதேனும் செய்திகள் அல்லது சிக்கலில் மாட்டி கொண்டால், அதன் தாக்கம் சந்தை முழுவதையும் தொற்றி கொள்ளும். இதனை நாம் டாட்டா, ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற பெரிய நிறுவனங்களிடம் காணலாம். முன்பு நிர்வாக குறைபாடு என குற்றம் சாட்டப்பட்ட்டிருந்த இன்போசிஸ் நிறுவனம், பின்னர் அந்த பிரச்சினையை களைந்து மீண்டு வந்தது.

தற்போது மீண்டும் ஒரு சிக்கலில் இன்போசிஸ் நிறுவனம், இந்த சமயம் சிக்கல் இன்போசிஸ் ஊழியர்களிடம் இருந்து துவங்கியுள்ளது. அவர்களின் குற்றசாட்டு, ‘ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) மற்றும் தலைமை நிதி அதிகாரி(CFO) இருவரும் பல காலாண்டுகளாக நெறிமுறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ‘ கூறியுள்ளனர்.

இந்த குற்றசாட்டை இன்போசிஸ் நிறுவனம் தனது புகார் பட்டியலில் பெற்றுள்ளது. மேலும் இதனை சந்தை அமைப்புகளிடமும்(Stock Exchange) நிறுவனம் சார்பில் சமர்ப்பித்துள்ளது. குற்றம் சாட்டியுள்ளவர்கள் எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், தாங்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு தங்களிடம் மின்னஞ்சல் மற்றும் குரல் வழியிலான சான்றுகள் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இயக்குனர்கள் மற்றும் தணிக்கையாளர்களிடம்(Audit) இருந்து தகவல்களை மறைக்க உயர் நிர்வாகம் சில ஊழியர்களை கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. வெரிசோன்(Verizon), இன்டெல் மற்றும் கூட்டு முயற்சிகள்(Joint Ventures) போன்ற பெரிய ஒப்பந்தங்கள், ஏ.பி.என். அம்ரோ(ABN AMRO) கையகப்படுத்தல் போன்றவற்றில் நெறிமுறையற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக நேற்றைய அமெரிக்க நியூயார்க் சந்தையில்(NYSE) இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதம் வீழ்ச்சி கண்டது. சந்தை துவங்கும் முன் நடைபெற்ற வர்த்தகத்தில் 18 சதவீதம் வரை இந்த பங்கு இறக்கம் கண்டது. இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை தினம் என்பதால், இன்று (22-10-2019) வர்த்தகத்தின் போது, இன்போசிஸ் நிறுவன பங்கின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

260 கோடி ரூபாய் முதலீடு, பங்குச்சந்தைக்கு தயாராகும் – திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

260 கோடி ரூபாய் முதலீடு, பங்குச்சந்தைக்கு தயாராகும் – திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி 

Rs. 260 Crore Private Equity raised by Dindigul Thalappakatti Biriyani 

 

“ என்னை ஊக்குவிக்க பழமொழி அவசியமில்லை, ஊக்கமூட்டும் பேச்சும் தேவையில்லை. எனக்கு கொஞ்சம் பிரியாணி மட்டும் கொடுங்கள் “ – இது சாப்பாட்டின் புதுமொழி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தமிழகத்தின் பிரியாணி கடைகளில் பிரபலம் என்றாலே அது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தான். 1957ம் ஆண்டு திரு. நாகசாமி அவர்களால் துவங்கப்பட்ட பிரியாணி உணவகம் தான் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி. நாவில் சுவை நுகர இன்று உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது தலப்பாக்கட்டி பிரியாணி(Dindigul Thalappakatti).

 

முன்னர் திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் பிரியாணி கடை என்று இயங்கி வந்த சிறு உணவகம் தான் பின்னாளில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பிராண்டு உணவகமாக மாறியது. சீரக சம்பா அரிசியில் தயாராகும் பிரியாணி, அசைவத்திற்காக கன்னிவாடி மற்றும் பரமத்தி சந்தைகளில் இருந்து உயர் ரக கால்நடை இனங்கள் பெறப்படுகின்றன.

 

தற்போதைய நிலையில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணிக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்களும், தினமும் 5 லட்சம் பிரியாணிகளும் விற்பனையாகி வருகின்றன. ஆண்டு வருவாய் 300 கோடி ரூபாயாக சொல்லப்படும் இந்த நிறுவனம் தற்போது தொழிலை மேம்படுத்த முதலீடுகளை பெறுவதற்கு களமிறங்கியுள்ளது.

 

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சேவையில் சி.எக்ஸ். பார்ட்னர்ஸ்(CX Partners) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் 260 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. சி.எக்ஸ். பார்ட்னர்ஸ் நிறுவனம் நிதித்துறை, மருத்துவம்(Health Care), நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை சார்ந்த சேவை, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகளில் முதலீடு செய்வதை தொழிலாக கொண்டுள்ளது.

 

சொல்லப்பட்ட முதலீட்டின் மூலம், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி நிறுவனத்தின் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அதிக தொழில்முறை வேலையாட்களை பணிக்கு அமர்த்துவது, உணவகத்தில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

 

மேலும், நிறுவனம் சார்ந்த தகவல்கள் கூறப்பட்ட நிலையில் அடுத்த சில வருடங்களில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் எனவும், இதன் மூலம் இந்திய பங்குச்சந்தைக்கு வருவதற்கான(Initial Public Offering – IPO) சாத்திய கூறுகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

நிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதன் லாபத்தை அதிகரித்துள்ளதா ?

நிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதன் லாபத்தை அதிகரித்துள்ளதா ?

Has the Corporate Tax cut for Companies increased its Profitability ?

 

கடந்த மாதம் நிதி அமைச்சகத்தின் சார்பில் இரண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முதலாவதாக நிறுவனங்களுக்கான வருமான வரி குறைப்பு(Corporate Tax) மற்றும் இரண்டாவதாக சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி.(GST) வரி விகித குறைப்பு சொல்லப்பட்டது.

 

இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையும் தொடர்ச்சியாக இரு நாட்கள் ஒரு சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றன. பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், முதலீடுகளை அதிகரிப்பது சார்பாகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

30 சதவீதத்திற்கு மேலாக இருந்த நிறுவனங்களுக்கான வருமான வரி 22 சதவீதமாக சொல்லப்பட்டது. இதன் தாக்கம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் நிறுவனங்களிடம் தெரிந்ததா என்பதே பலருடைய கேள்வி. சில துறைகளில் உற்பத்தி அதிகமானதும், அதனை தொடர்ந்து பலவீனமான தேவை நுகர்வுகளும்(Weak Demand) இருந்ததே பெருவாரியான நிறுவனங்களின் விற்பனையை பாதித்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் இருந்தாலும், நம்மை போன்ற வளரும் நாட்டில் தேவை நுகர்வு குறைந்து வருவது சந்தைக்கு சாதகமாக இல்லை. பொதுவாக அரசின் சார்பில் மானிய தொகையும், வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டாலும், தனியார் முதலீடு, வேலை மற்றும் அதன் வளர்ச்சியே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

 

பொதுத்துறையில் மற்றும் அரசு மானியம் மூலம் கிடைக்கப்பெறும் வேலைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவை சேவை மூலம் உருவாக்கப்பட்ட திட்டமாக மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். இதுவே தனியார் சேவை என வரும் போது, அவற்றுக்கான பொருளாதார ஊக்குவிப்பு பெரும்பாலும் அரசாங்கத்திடம் இருந்தே பெறப்படுகிறது. 

 

வரி குறைப்பு, அரசின் கொள்கைகளில் மாற்றங்கள், நிலம் கையகப்படுத்தல் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. இவற்றை சார்ந்தே தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியும் இருக்கும். வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் அரசு-தனியார் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. இருப்பினும், அரசாங்கம் தனது சேவையை சிறப்பாக செய்வதும், தனியார் நிறுவனங்கள் தனக்கான முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் தான் அவசியமான ஒன்று.

 

சமீபத்திய வரி குறைப்பு, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம். 2019-20ம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. யாரும் எதிர்பார்க்காத வகையில் நிறுவனங்களின் நிகர லாபங்கள் அதிகரித்துள்ளன. இதனை டி.வி.எஸ். மோட்டார், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இதர நிறுவனங்களின் முடிவுகளில் காணலாம்.

 

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனங்களின் விற்பனை பெரிய அளவில் இல்லையென்றாலும், இதர வருமானமும், வரி குறைப்பும் அதன் லாபத்தை சாதகமாக்கி உள்ளன. வாகனத்துறையில் உள்ள சில நிறுவனங்களின் லாபங்கள் பெரும்பாலும், வரி குறைப்பு நடவடிக்கையை சார்ந்தே உள்ளன. நுகர்வோர் பொருட்கள் துறையை சார்ந்த நிறுவனங்களிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

 

இதுவரை வெளிவந்த காலாண்டு முடிவுகளின் படி, பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு முன்பு 30 சதவீதத்திற்கு மேல் வரியை செலுத்தியுள்ள நிலையில், செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் 20-22 சதவீத அளவில் வரியை செலுத்தியுள்ளதாக கூறியுள்ளன. இதன் தாக்கம் நிறுவனங்களின் லாபத்திலும் வந்துள்ளது. எதிர்பாராத வகையில், இது போன்ற பொருளாதார மந்த நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் லாபங்களை அதிகரித்து வருவது முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயமே.

 

நிறுவனங்கள் தங்கள் லாபங்களை எவ்வாறு கையாள போகிறது என்பது தான் நாம் காண வேண்டிய விஷயம். நிறுவனங்கள் தங்கள் லாபங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். தாங்கள் பெற்ற கடனுக்கான தொகையை செலுத்த இதனை பயன்படுத்தி கொள்ளலாம். முதலீட்டாளர்களுக்கு கூடுதலான டிவிடெண்ட்(Dividend) தொகையை அறிவிக்கலாம். போனஸ் அல்லது நிறுவனமே பங்குகளை திரும்ப பெற(Buyback of Shares) ஏதேனும் அறிவிப்பை ஏற்படுத்தலாம்.

 

நிறுவனங்களின் தற்போதைய லாபம் ஒரு முதலீட்டாளராக நாம் பயனடையலாம். அதே வேளையில் நுகர்வு தன்மையை ஏற்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு, தனது வளர்ச்சியை பகிரும் போது தான் அது மென்மேலும் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய வரி குறைப்பு நிறுவனங்களின் நிதி நிலைமையை தக்க வைக்க உதவும். 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள்

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் 

Jio’s Net profit rises to 990 Crore – Reliance Industries Q2FY20 Results

இந்திய பங்குச்சந்தையில் ரூ. 8.97 லட்சம் கோடி சந்தை மதிப்பை கொண்டிருக்கும் முதல் நிறுவனம், திரு. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries). நேற்றைய (18-10-2019) வர்த்தகத்தில் முதன்முறையாக ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்த நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் உள்ள நிறுவனம் ரூ. 7.71 லட்சம் கோடி மதிப்பை கொண்டுள்ள டி.சி.எஸ்.(TCS) நிறுவனம்.

2019-20ம் நிதியாண்டுக்கான தனது இரண்டாம் காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) முடிவை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. செப்டம்பர் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் விற்பனை ரூ. 1,48,526 கோடியாக உள்ளது. செலவினங்கள் ரூ. 1,26,374 கோடியாகவும், இயக்க லாபம் 22,152 கோடி ரூபாயாகவும் உள்ளது.

இதர வருமானமாக செப்டம்பர் காலாண்டில் 3,668 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 15,055 கோடியாகவும், காலாண்டு நிகர லாபம் 11,262 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 6 சதவீத அளவிலும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி, கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், பத்து வருட காலத்தில் 10 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 2.5 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸின் துணை நிறுவனமான ஜியோ(JIO) இரண்டாம் காலாண்டு முடிவில் ரூ. 990 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. 

கடந்த 2018ம் வருடத்தின்  இதே காலத்துடன் ஒப்பிடும் போது, ஜியோவின் லாபம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 681 கோடி ரூபாயாக உள்ளது. லாபம் அதிகரித்து இருந்தாலும், ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) சரிந்துள்ளது.

355 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கும் ஜியோ நிறுவனம், ஒரு பயனருக்கான சராசரி வருவாயை 120 ரூபாயாக கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் செப்டம்பர் காலாண்டில் சற்று குறைந்துள்ளது.

சில்லரை வணிகத்தின்(Retail Business) மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சேவையை பொறுத்தவரை இணைய பயன்பாடு அதன் வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பேசக்கூடிய நிமிடங்களின்(Voice Calls) எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

டி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி

டி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி

TVS Motor Company Net Profit rises to Rs. 255 Crore – Q2FY20

இந்தியாவின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாகவும், தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனம் தான் டி.வி.எஸ். நிறுவனம்(TVS Motor). 1978ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளராகவும் திகழ்கின்றன.

தனது வாகனங்களை உலகளவில் 60 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகளை சந்தையில் வெளியிட்டிருந்தது. செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை ரூ. 4,348 கோடியாகவும், செலவினங்கள் 3,966 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 382 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப அளவு(Operating Profit Margin) கடந்த 10 காலாண்டுகளில் சராசரியாக 7-8 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 81 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. தேய்மான செலவுகளாக 124 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் லாபம் 22 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இருப்பினும் விற்பனை 9.27 சதவீதம் குறைந்துள்ளது. தற்போதைய லாபத்திற்கு வருமான வரி குறைப்பும் ஒரு காரணமாக செயல்பட்டுள்ளது. ஜூன் 2019 காலாண்டில் நிறுவனம் செலுத்திய வரி 32 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய வரி செலுத்தப்பட்ட விகிதம் 18 சதவீதம் மட்டுமே.

வரிக்கு முந்தைய லாபம் 310 கோடி ரூபாயாகவும், இரண்டாம் காலாண்டின் நிகர லாபம்(Net Profit) 255 கோடி ரூபாயாகவும் உள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் பங்கு கடந்த ஒரு வருட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 17.50 சதவீத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 30.80 சதவீதமும் வருவாயை(CAGR) தந்துள்ளது.

டி.வி.எஸ். நிறுவனத்தின் விற்பனை கடந்த ஐந்து வருடங்களில் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. லாப வளர்ச்சி ஐந்து வருட காலத்தில் 21 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 37 சதவீதமாக இருந்துள்ளது.

இருப்பு நிலை அறிக்கையில் நிறுவனத்தின் கையிருப்பாக ரூ. 3,645 கோடி என கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20,900 கோடி ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம்(Debt-Equity) 0.40 என்ற அளவிலும், கடன் ரூ. 1,484 கோடி ரூபாயாகவும் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil