உணவக வணிகத்தில் இறங்க உள்ளீர்களா – இது உங்களுக்கு தான்
Are you get into the Food Startups ? – Business Insider
நேற்று மதியம் நானும், என்னுடைய உறவுமுறைகளில் உள்ள சகோதரர் ஒருவரும் பேசி கொண்டிருக்கும் போது, ‘ அவர் உணவு சார்ந்த தொழிலை தனது நண்பர்களுடன் சேர்ந்து துவங்க உள்ளதாக கூறினார். மேலும் அதனை சார்ந்து என்னுடைய அபிப்பிராயத்தை கேட்க முனைந்தார் ‘. எனக்கு உணவு சார்ந்த தொழிலை பற்றி அவ்வளவாக தெரியாது எனினும், அந்த சகோதரருக்கு சிறு வயது என்பதால் தொழில்முனைவை கொண்டாட, அவர் தொழில் செய்ய ஊக்கத்தை ஏற்படுத்தினேன்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நான் பலமுறை சொன்னது போல, விவசாயம் என்பதும் ஒரு தொழில் என்பதை நாம் மறக்க கூடாது. தனது நிலத்தில் உற்றார், உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை வேலைக்கு அமர்த்தி, களையெடுக்க தினக்கூலி வழங்கி, காலம் வரும் வரை காத்திருந்து அறுவடை செய்பவர் ஒரு தொழில்முனைவை தான் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் விவசாயி, தொழில்முனைவோர், தொழிலதிபர், கூலி வேலை என பல பெயர்களை ஏற்படுத்தினாலும், அவர் செய்து கொண்டிருப்பது தொழில் தான்.
கோடிகளில் தொழில் செய்து வருபவர் தற்கொலை செய்து கொண்டாலும், கூலியாக இருந்தும் தனது சொந்த நிலத்தில் விவசாயத்தை செய்து வருபவரும் தொழிலை தான் செய்கிறார். நான் ஏன் இந்த விஷயத்தை அழுத்தமாக சொல்கிறேன் என்றால், தொழில்முனைவு(Entrepreneurship) என்பது தன்னை தானே சமாதானம் செய்து கொள்வதல்ல, மாறாக தன்னை வெற்றி கொள்வதே ஆகும்.
நமது சகோதரர் கதைக்கு வருவோம், உணவு சார்ந்த சேவைகளில் இன்று ஸ்விக்கி(Swiggy), ஜோமோடோ(Zomato), உபேர் ஈட்ஸ்(Uber Eats) என பல பிராண்டுகள் வந்து விட்டன. அப்புறம் எங்கே நாம் தொழில் செய்வது என கேட்கலாம். காலங்காலமாக இந்த நிகழ்வு மாற்றம் பெற்று கொண்டு தான் இருக்கிறது. தொழில் என்பது ஒரு ரிஸ்க் தன்மை கொண்ட செயல் எனினும், வேறு யார் அதை செய்வது. தொழில் விருத்தி அடையாவிட்டால், அனைவருக்குமான வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரம் எங்கே என்பது கேள்வி.
இளவயதிலேயே தொழிலில் ஈடுபட்டு தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. எண்ணத்தில் மட்டுமே கொண்டு, தொழில் செய்யாமல் விட்டுவிட்டால், அது ஒரு வாழ்க்கை தோல்வி தான். சகோதரர் கேட்டிருக்கிறார் என்பதற்காக உணவு சார்ந்த சில காரணிகளை இணையத்தில் கூகுள் செய்தேன்.
நம்மை போன்ற நுகர்வு சந்தையை கொண்டிருக்கும் நாடுகளில், உணவுக்கு எப்போதும் தேவை அதிகம் தான். பொதுவாக உணவு சார்ந்த தொழிலை பொறுத்தவரை வீணாகும் உணவு(Food Wastage) தான் தொழிலை பாதிக்கும் காரணியாக இருக்கும். இரண்டாவதாக சேவை பரிமாற்றத்தில் கவனமாக செயல்படுவது அவசியமாகும். நாம் எந்த மாதிரியான உணவு வகைகளை பரிமாற உள்ளோம், உணவகம் அமைவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் இடம், நமது வேலையாட்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.
நாம் மற்ற உணவகத்திலிருந்து உணவு வகைகளை பெற்று கொண்டு விநியோக தொழிலை(Delivery Business) மட்டும் மேற்கொள்ள உள்ளோமா, தொழிலுக்கான பட்ஜெட் திட்டமிடல், நமது வாடிக்கையாளர்கள் யார்(Target Audience) என கண்டறிவதும் அவசியமான ஒன்றாகும். உணவு தொழிலுக்கான அரசு உரிமங்கள், உணவை எந்த முறைகளில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற போகிறோம் என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உணவு சார்ந்த ஸ்டார்ட் அப்(Startups) தொழில்களில் கடந்த ஐந்து வருடங்களாக முதலீடு பெருகி வருகிறது. நாளுக்கு நாள் நுகர்வோர் தேவை அதிகரித்து வருவதால், அதற்கான முதலீட்டு வாய்ப்புகளும் திறந்தநிலையில் உள்ளது. பொருளாதார மந்த நிலை என்று சொல்லப்படும் காலத்திலும், உணவு சார்ந்த தொழிலில் தேவைகள் இருந்த வண்ணம் தான் உள்ளன.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே சில உணவகங்களில் தோல்வியை தழுவ செய்கின்றன. நடப்பு 2019ம் ஆண்டில் உணவு சார்ந்த தொழில்கள் பெற்ற முதலீடு சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த வருடத்தை காட்டிலும் இரு மடங்கு என சொல்லப்படுகிறது. நாம் இந்த தொழிலில் சரியான முறையில் சேவைகளை அளித்து வரும் நிலையில், முதலீடுகளை ஈர்ப்பது கடினமான விஷயமாக இருக்காது.
கடந்த ஒரு வருடத்தில் ஸ்விக்கி நிறுவனம் 50 கோடி விநியோகங்களை(டெலிவரி) அளித்துள்ளது. வெறும் கைபேசி செயலியை(Mobile App) கொண்டு உணவு விநியோக சேவையில் ஈடுபட்டு வரும் பெரு நிறுவனங்கள், இயந்திர வழி கற்றலுக்கு(Machine Learning – AI) மாறி கொண்டிருக்கின்றன. இந்த சேவையில் தானியங்கி முறையை அமல்படுத்த நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் தயாராக உள்ளனர்.
நம் மதுரையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் உணவு விற்பனையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சுஸ்(Swiggy,Uber Eats and Zomato) நிறுவனங்களே இதற்கு சான்றாக உள்ளன. ஒரு முறை நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் திரு. குமரவேல்(C K Kumaravel, Naturals Salon) சொன்னது போல, ‘ மதுரையில் உள்ள இளைஞர்கள் சிலர் இங்குள்ள உணவகங்களை இணைத்து ஒரு உணவு விநியோக செயலியை ஏற்படுத்தி இருந்தால், இன்று ஸ்விக்கி, ஜோமாடோ போன்ற நிறுவனங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கிருந்தோ வந்த நிறுவனங்கள் தென்னகத்தின் கோவில் நகரத்தில் சில புள்ளிவிவரங்களை கொண்டு தொழில் செய்யக்கூடிய நம்பிக்கை இருந்தால், நாம் ஏன் உள்ளூர் இளைஞர்கள் செய்ய முடியாது ‘ என்று கூறினார்.
உணவு தொழில் மற்றும் விநியோக சேவையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து தொழில்முனைவை ஏற்படுத்துவதே உத்தமம். ஆழம் தெரியாமல் காலை விட கூடாது. அதற்கான காலை விட கூடாது என சொல்லவில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை