260 கோடி ரூபாய் முதலீடு, பங்குச்சந்தைக்கு தயாராகும் – திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
Rs. 260 Crore Private Equity raised by Dindigul Thalappakatti Biriyani
“ என்னை ஊக்குவிக்க பழமொழி அவசியமில்லை, ஊக்கமூட்டும் பேச்சும் தேவையில்லை. எனக்கு கொஞ்சம் பிரியாணி மட்டும் கொடுங்கள் “ – இது சாப்பாட்டின் புதுமொழி.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தின் பிரியாணி கடைகளில் பிரபலம் என்றாலே அது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தான். 1957ம் ஆண்டு திரு. நாகசாமி அவர்களால் துவங்கப்பட்ட பிரியாணி உணவகம் தான் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி. நாவில் சுவை நுகர இன்று உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது தலப்பாக்கட்டி பிரியாணி(Dindigul Thalappakatti).
முன்னர் திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் பிரியாணி கடை என்று இயங்கி வந்த சிறு உணவகம் தான் பின்னாளில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பிராண்டு உணவகமாக மாறியது. சீரக சம்பா அரிசியில் தயாராகும் பிரியாணி, அசைவத்திற்காக கன்னிவாடி மற்றும் பரமத்தி சந்தைகளில் இருந்து உயர் ரக கால்நடை இனங்கள் பெறப்படுகின்றன.
தற்போதைய நிலையில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணிக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்களும், தினமும் 5 லட்சம் பிரியாணிகளும் விற்பனையாகி வருகின்றன. ஆண்டு வருவாய் 300 கோடி ரூபாயாக சொல்லப்படும் இந்த நிறுவனம் தற்போது தொழிலை மேம்படுத்த முதலீடுகளை பெறுவதற்கு களமிறங்கியுள்ளது.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சேவையில் சி.எக்ஸ். பார்ட்னர்ஸ்(CX Partners) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் 260 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. சி.எக்ஸ். பார்ட்னர்ஸ் நிறுவனம் நிதித்துறை, மருத்துவம்(Health Care), நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை சார்ந்த சேவை, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகளில் முதலீடு செய்வதை தொழிலாக கொண்டுள்ளது.
சொல்லப்பட்ட முதலீட்டின் மூலம், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி நிறுவனத்தின் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அதிக தொழில்முறை வேலையாட்களை பணிக்கு அமர்த்துவது, உணவகத்தில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், நிறுவனம் சார்ந்த தகவல்கள் கூறப்பட்ட நிலையில் அடுத்த சில வருடங்களில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் எனவும், இதன் மூலம் இந்திய பங்குச்சந்தைக்கு வருவதற்கான(Initial Public Offering – IPO) சாத்திய கூறுகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை