Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

கரூர் வைசியா வங்கியின் நிகர லாபம் 77 % வீழ்ச்சி

கரூர் வைசியா வங்கியின் நிகர லாபம் 77 % வீழ்ச்சி

Karur Vysya Bank Net Profit declines 77 Percent

 

கரூர் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனமான கரூர் வைசியா வங்கி தனது காலாண்டு முடிவுகளை அண்மையில் (25-05-18) வெளியிட்டது. இந்த முடிவு வங்கியின் 2017-18 ம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டு நிதி அறிக்கையாகும்.

 

2017-18 ம் வருடத்திற்கான நான்காம் காலாண்டில் வங்கி நிகர லாபமாக ரூ. 50.56 கோடியை சம்பாதித்துள்ளது. கடந்த டிசம்பர் 2017 ல், அதாவது மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் ரூ. 71.50 கோடியாக இருந்தது.

 

இதற்கு முந்தைய வருடத்தில் (2016-17) இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் 217.56 கோடி ரூபாயாகும். இதனை ஒப்பிடும் போது, தற்போதைய  நிகர லாபம் 77 சதவீதம் சரிந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த காலத்துடன் (2016-17) ஒப்பிடும் போது, 2017-18 ம் நிதியாண்டில் நிகர வட்டி வருமானம்(Net Interest Income) 11 % உயர்ந்து ரூ. 643 கோடியாக உள்ளது. மொத்த வாராக்கடன் மார்ச் 2018 காலாண்டில் 6.56 % ஆக உள்ளது. இது டிசம்பர் 2017 ம் காலாண்டில் 5.94 சதவீதமாக இருந்தது.

 

வங்கியின் நிகர வாராக்கடன் தற்போது முடிந்த காலாண்டில் 4.16 சதவீதமாகவும், 2017-18 ன் மூன்றாவது காலாண்டு முடிவில் 3.88 சதவீதமாகவும் உள்ளது.

 

இதர வருவாய்(Other income) குறைந்து மார்ச் காலாண்டில் ரூ. 480 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.4 % குறைவாகும். கடந்த நிதியாண்டை 2016-17 வருத்தத்துடன் பார்க்கும் போது, இதர வருவாய் 2017-18 ல் ரூ. 208 கோடி ஆகும். இது 10 % இதர வருவாய் சரிவாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம் – 8.55 %

ஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம் – 8.55 %

5 Years Low on EPF Interest Rate – Cuts to 8.55 %

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.55 சதவீதமாக வழங்க EPFO(Employees’ Provident Fund Organization) முடிவெடுத்துள்ளது. 2017-18 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதமாக 8.55 சதவீதத்தை ஏற்கனவே தனது மத்திய குழு கூட்டத்தில் EPF அமைப்பு அறிவித்தது.

 

2016-17 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆகவும், 2015-16 ம் ஆண்டுக்கு 8.8 சதவீதமாகவும், 2014-15 ல் 8.75 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது சொல்லப்பட்டுள்ள 8.55 சதவீதம் கடந்த ஐந்து வருட குறைவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. 2012-13 ம் நிதி வருடத்தில் EPF வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது.

 

இந்த ஐந்து வருட வட்டி குறைப்பு, சுமார் ஆறு கோடி பி.எப். சந்தாதாரர்களை பாதிக்கும் என ஏற்கனவே பொருளாதார நிபுணர்களால் சொல்லப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட இந்த 8.55 % வட்டி, கர்நாடக தேர்தலை மேற்கோள் காட்டி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இதனை நடைமுறைப்படுத்த கூறியுள்ளது.

 

கடந்த மார்ச் 2018 ன் படி, 8.4 கோடி சந்தாதாரர்கள் தங்களின் பிறப்பு தேதியை சமிர்ப்பிக்கவில்லை என்றும், 11 கோடி பி.எப். கணக்கில் சந்தாதாரர்களின் தந்தை பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சரவையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

தொழிலாளர்களுக்கான பி.எப். கணக்கு நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. UAN (Universal Account Number) என்ற பொது கணக்கு எண் ஒவ்வொரு சந்தாதார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஒரே கணக்கு எண்ணை கொண்டு நிர்வகிக்கலாம். தங்கள் விவரங்கள் மற்றும் பி.எப். பணத்தை கையாளும் முறையும் எளிதாக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

Recent Changes in National Pension System (NPS)

 

என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய பென்ஷன் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2004 ஜனவரி மாதம்(January 1,2004) முதல் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், 2009 ம் வருடம் முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் என கொண்டு வரப்பட்டது. இதனை புதிய பென்ஷன் திட்டம் எனவும் கூறுவதுண்டு.

 

NPS(National Pension System) செயலாக்கத்தால் 2004 ஜனவரி 1 ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு முன்பிருந்த வரையறுக்கப்பட்ட பயனமைப்பை (Defined Benefit System) கொண்ட பென்ஷன் முறை ரத்து செய்யப்பட்டது. இதனால் 2004 முதல் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் முறைக்கு மாற்றாக, வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டம் (Voluntary Defined Contribution System) என்னும் தேசிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

 

என்.பி.எஸ் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர் சந்தாதாரர்(Subscriber) எனப்படுவார். இந்த திட்டம் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) அமைப்பால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சந்தாதாரர் சார்ந்த தகவல்கள் மற்றும் முதலீட்டு முறைகள் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய பென்ஷன் திட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் கொண்டு வருவதுண்டு. சமீபத்தில் அது போன்ற மாற்றங்கள் சில அறிவிக்கப்பட்டுள்ளன. சந்தாதாரராக உள்ளவர் திட்டத்தில் இணைந்த மூன்று வருடங்களுக்கு பிறகு தனது பங்களிப்பில் 25 சதவீத பணத்தை விரும்பினால் பெற்று கொள்ளலாம்(25 percent withdrawal). பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் காரணமாக, தனது துறை சார்ந்த உயர்கல்வி படிப்பது, புதிதாக தொழில் துவங்குவது போன்றவையாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

தனியார் துறையில் பணிபுரியும் சந்தாதார்களுக்கு தனது என்.பி.எஸ். கணக்க்கில் சமபங்கு முதலீட்டை(Equity Investment) 75 சதவீதம் வரை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விகிதம் 50 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சந்தாதாரர் தனது திட்ட காலத்தில் அதிகபட்சமாக மூன்று முறை தனது பங்களிப்பு பணத்தை பெற்று கொள்ளலாம் எனவும், இது சம்மந்தமான விண்ணப்ப கோரிக்கையை CRA (Central Record Keeping Agency) என்ற மத்திய ஆவண பதிவு அமைப்பில் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. அருகில் உள்ள நோடல் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை கொடுக்கலாம் என தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

A Man who still using a Flip Mobile Phone, but wants to own APPLE Company

 

உலகின் மிகப்பெரும் பணக்காரராகவும், Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவராகவும் அங்கம் வகிப்பவர் வாரன் பப்பெட் (Warren Buffet) ஆவார். 87 வயதாகும் வாரன் பப்பெட் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ளார். பணக்காரர்கள் பட்டியலில் அதிக வயதுடையவரும் இவரே, தற்சமயம் இவரது சொத்து மதிப்பு 8440 கோடி டாலராகும்.

 

முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸின் சொத்து மதிப்பு 13,200 கோடி டாலராகும். சமீபத்தில் வாரன் பப்பெட் ஒரு பேட்டியில் கூறியதாவது, “ நாங்கள் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளோம். இது ஒரு நீண்ட கால அடிப்படையில் செய்யப்பட்ட முதலீடு. ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக உள்ளது. மேலும் முதலீடு செய்ய காத்திருக்கிறோம்; முடிந்தால் 100 சதவீத பங்குகளை வாங்க விரும்புகிறோம்.

 

ஒரு நண்பர் எனக்கு ஐபோன் 10 (iPhone 10)  ஐ பரிசாக அளித்தார். மேலும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் எனக்கு விளக்கியிருந்தார். ஒரு சிறு குழந்தைக்கு விளக்குவது போல அவர் ஐபோனை பற்றி என்னிடம் வர்ணித்தார்.

 

நான் இதுவரை அந்த மாதிரியான கைபேசியை பயன்படுத்தியது இல்லை. மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நான் அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்குவதில் ஆவலாக உள்ளோம் “ என்றார்.

 
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வாரன் பப்பெட் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் 7.5 கோடி பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்களில் Berkshire Hathaway இரண்டாம் இடம் பிடித்தது.

 

பப்பெட் பெரும் பணக்காரராக இருந்தும், இன்னும் மடக்கு கைபேசியை(Flip Mobile phone) தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தனது 11 வது வயதிலிருந்து பப்பெட் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் நிறுவனத்தின் பங்குகளை கொஞ்சம் வாங்குவதும், பிற்காலத்தில் அந்த நிறுவனத்தையே கையகப்படுத்துவதும் இவரது முதலீட்டு மந்திரங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

பிளிப்கார்ட் இனி வால்மார்ட் – 2000 கோடி டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம்

பிளிப்கார்ட் இனி வால்மார்ட் – 2000 கோடி டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம்

Flipkart to sell nearly 75 Percent of its stake to Walmart

 

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதலிடத்தில் உள்ள ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் தனது 75 சதவீத பங்குகளை அமெரிக்காவின் பன்னாட்டு சில்லரை நிறுவனமான வால்மார்ட்டுக்கு விற்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இது சம்மந்தமான தனது சந்திப்பில் இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

வால்மார்ட் நிறுவனத்துடன், கூகுள் ஆல்பபெட் நிறுவனமும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் அமேசான் நிறுவனமும் இருந்தது. அமேசான் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவன பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2000 கோடி அமெரிக்க டாலராகும். இவற்றில் சுமார் 1500 கோடி டாலர் மதிப்பிலான 75 % பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஜப்பானை சேர்ந்த சாப்ட்பாங்க் (Softbank) நிறுவனமும், சீன நிறுவனமான டென்செண்டும் (Tencent) முதலீடு செய்துள்ளது. இது போக நாஸ்பெர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. பிளிப்கார்ட் – வால்மார்ட் ஒப்பந்த முடிவில், ஜப்பானை சேர்ந்த சாப்ட்பாங்க் நிறுவனம் தனது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு வெளியேற இருக்கிறது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2007 ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவின் தலைவராக சச்சின் பன்சால் உள்ளார். இவருடன் மற்றொரு நிறுவனராக பின்னி பன்சால் இருந்தார். பிளிப்கார்ட் விற்பனை தருணத்தில், இணை நிறுவனர் சச்சின் பன்சால் தன்னிடமுள்ள 5.5 % பங்குகளை விற்று விட்டு நிறுவனத்திலிருந்து  வெளியேறும் முடிவில் உள்ளார்.

 

வால்மார்ட் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய  சில்லரை விற்பனை நிறுவனமாகும். இது ஒரு பன்னாட்டு நிறுவனமும் கூட, இதன் வருவாய் 48,600 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமானதாகும். பிளிப்கார்ட் விற்பனைக்கு பிறகு, நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிறுவனர் பின்னி பன்சால் வால்மார்ட்டிலும் தொடர்ந்து இருப்பார்கள் என தெரிகிறது.

 

பிளிப்கார்ட் இனி வால்மார்ட் என்ற பெயரில்… !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

ஜியோவின் நான்காவது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி

ஜியோவின் நான்காவது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி

Reliance Jio’s 4th Quarter Profit of Rs. 510 Crores

 

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டிருக்குகிறது. ஜியோ தனது ஆரம்ப நிலையில் நஷ்டத்தை சந்தித்தாலும் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அளித்த சேவை (Rs. 49/- Pack Offer) மூலம் கடந்த இரு காலாண்டுகளில் லாபத்தை நோக்கி சென்றுள்ளது.

 

கடந்த நான்காவது காலாண்டில் (FY 2017-18 – 4th Quarter) ஜியோ நிறுவனம் வருவாயாக 7128 கோடி ரூபாயை எட்டியுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ. 510 கோடி இருந்துள்ளது. இது இதற்கு முன்னர் இருந்த காலாண்டை காட்டிலும் 1.2 சதவீத லாப வளர்ச்சியாகும். ஏர்டெல் நிறுவனம் கடந்த காலாண்டில் பெற்ற வளர்ச்சியை விட, ஜியோவின் இந்த லாப வளர்ச்சி அதிகமாகும்.

 

ஜியோவின் வரி மற்றும் வட்டிக்கு முந்தைய (EBITDA) வருமானமாக ரூ. 2694 கோடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மூன்றாவது காலாண்டை விட 2.5 சதவீத வளர்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மார்ஜின் 1.1 சதவீதமாக குறைந்துள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நான்காவது காலாண்டில் ஜியோ நிறுவனம் கூடுதலாக 2.65 கோடி புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த காலத்தில் அதன் வாடிக்கையாளர்கள் 2.15 கோடியாக இருந்தனர். மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாகும்.

 

ரிலையன்ஸ் ஜியோ கடந்த காலாண்டில் லாபமீட்டினாலும் அதன் ARPU (Average Revenue Per User) என்று சொல்லப்படும் ஒரு பயனாளருக்கான சராசரி வருவாய் 11 % குறைந்துள்ளது. தற்போது ஜியோவின் ARPU வருவாய் ரூ. 137 /- ஆக உள்ளது. இருப்பினும் இந்த பயனாளருக்கான வருவாய் ஏர்டெல் நிறுவனத்தை காட்டிலும் அதிகமாக தான் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ARPU வருவாய் ரூ. 116/- ஆக நிலை கொண்டுள்ளது.

 

ஜியோவின் தரவு போக்குவரத்து (Data Traffic) 4940 கோடி ஜி. பி.(4940 Crore GB) ஆகவும், ஒரு பயனாளரின் தரவு பயன்பாடு சராசரியாக 9700 MB ஆகவும் உள்ளது. குரல் அழைப்பு (Voice Calls) பயன்பாடு வாடிக்கையாளர்  ஒருவருக்கு அதிகபட்சமாக 716 நிமிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே ஏர்டெல் பயனாளிகளுக்கு 670 நிமிட அழைப்புகள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

India’s First 100 Billion Dollar Company on Market Cap – TCS

 

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான  டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) சமீபத்தில் தான் தனது  2017 ம் வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. காலாண்டு முடிவில் நிறுவனம் லாபமாக ஈட்டிய தொகை ரூ. 6904 கோடி.

 

இதனை தொடர்ந்து TCS நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு லாபத்தின் ஒரு பகுதியாக ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும் அறிவித்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் நேற்று ஒரு முக்கியமான நிகழ்வை ஏற்படுத்தியது.

 

பங்குச்சந்தையில் திரட்டப்படும் Market Capitalisation என்று சொல்லப்படும் சந்தை மூலதனத்தில் 1000 கோடி டாலரை(1000 Crore US Dollar) கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் படைத்தது. உலகளவில் முதல் இடத்தில் ஆப்பிள் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனம்  87,700 கோடி டாலர் மதிப்புடையதாகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்த நிறுவனம் 6 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தில் நிலைபெற்று, வார நாள் இறுதியில் 990 கோடி டாலருக்கு சற்று மேலாக முடிவடைந்தது. இந்நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனமாக மாறியது.

 

TCS நிறுவனம் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகவும், அதன் கிளைகள் 46 நாடுகளிலும் பரவியிருக்கிறது. நிறுவனத்தின் மரியாதைக்கு ஏற்ப பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 35 % பெண் ஊழியர்கள் இருப்பதும் இந்த நிறுவனத்திற்கு பெருமைக்குரியதாகும்.

 

டாடா குழுமத்தின் லாபத்தில் 85 % பங்கு TCS நிறுவனத்தின் மூலம் கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. TCS நிறுவனம் உலகின் முதல் 100 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகவும், தற்போது 97 வது இடத்திலும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

1:1 Bonus issue for TCS Shareholders approved by Board

 

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) தனது 2017 ம் நிதி வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று (19-04-2018) வெளியிட்டது. கடந்த ஜனவரி-மார்ச் காலத்தில் நிறுவனம் லாபமாக ரூ. 6904 கோடியை சம்பாதித்துள்ளது.

 

TCS நிறுவனம் அதன் முந்தைய காலத்தில் (Oct-Dec’ 2017) ஈட்டிய லாபம் ரூ. 6620 கோடியாகும். இதனை ஒப்பிடும் போது, தற்போதைய முடிவுகளின் லாபம் 4.50 % வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வருமானம் நான்காம் காலாண்டில் ரூ. 32,075 கோடியாகவும், இது ஆண்டுக்கு(கடந்த வருட காலாண்டு)  8.2 % வளர்ச்சியாகவும் உள்ளது.

 

அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 3.93 % இருந்ததாகவும், ஜூலை-செப்டம்பர் மாத காலத்தில் இது 4.29 % இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

 

லாபத்தின் பங்காக நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு: ஒரு பங்குக்கு ரூ. 29 /- (Final Dividend) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும்(Bonus Issue Ratio 1:1) சொல்லப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நிலவிய தேவைகள் மற்றும் நிறுவனத்தின் ஒப்பந்த பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெற்றிகள் போன்றவை நான்காவது காலாண்டு முடிவை ஒரு சிறப்பானதாக மாற்றியது எனவும் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

காலாண்டு முடிவுகள் நேர்மறையாக இருந்ததை தொடர்ந்து இன்றைய பங்கு சந்தையில் TCS நிறுவனத்தின் பங்கு 1 % ஏற்றத்தில் முடிவடைந்தது. TCS நிறுவனம் 1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிலான சொத்துக்களை நிர்வகிக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India

பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India

Equity profits of Rs. 25,000 Crore by LIC India

கடந்த டிசம்பர் 2017 மாத இறுதி புள்ளிவிவரப்படி, LIC India (Life Insurance Corporation of India) ன் பங்கு சார்ந்த சொத்து மதிப்பு ரூ. 5 லட்சம் கோடியாகும். இவை பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் அடங்கிய சொத்துக்களாகும். எல்.ஐ.சி. நிறுவனம் கடந்த 2017-18 ம் நிதியாண்டில் பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் ரூ. 25,000 கோடியை லாபமாக பதிவு செய்துள்ளது.

 

2015-16 ம் நிதி காலத்தில் பங்குகள் மூலம் ரூ. 11,000 கோடியை லாபமாக எல்.ஐ.சி நிறுவனம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-17 ம் நிதி ஆண்டில் ரூ. 19,000 கோடியை லாபமாக பங்குகள் மூலம் பெற்றது. இதனை ஒப்பிடுகையில் அதன் பங்கு மூலமான லாபம் ரூ. 19,000 கோடியிலிருந்து ரூ. 25,000 கோடியாக அதிகரித்துள்ளது(Equity Trading Profit).

 

LIC India நிறுவனம் 2017-18 ம் நிதியாண்டில் பங்கு சந்தையில் மட்டும் ரூ. 80,000 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு முதன்மை சந்தையில் முதலீடு மற்றும் அரசாங்க நிறுவனத்தில் முதலீடு போன்றவையாக இல்லை. முதன்மை சந்தை மற்றும் அரசாங்க பங்கு விலக்கல் போன்ற முதலீடுகளை எடுத்து கொண்டால் அவற்றில் சுமார் 60,000 கோடியை தனியாக முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த சில காலங்களாக பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்து வந்ததால், LIC நிறுவனத்துக்கு விற்பனைக்கான வாய்ப்பும், அதிக லாபமும் பெற முடிந்தது. கடந்த 2017 நிதி வருடத்தின் படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு 11 % லாபத்தை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த வருடத்தின் ஜனவரி – மார்ச் (இறுதி காலாண்டு 2017-18) காலத்தில் சென்செக்ஸ் 3 % சரிவை கண்டுள்ளது.

 

LIC India க்கு கிடைத்த லாபம், அந்த நிறுவனத்தில் பங்கு சார்ந்த காப்பீடு பெறும் முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாகும். இருப்பினும் காப்பீடு பெற்றுள்ளோருக்கு இது போனஸ் தொகையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

 

எல்.ஐ.சி. பெறும் முதல் வருட காப்பீட்டாளரின் தொகை மட்டும் ரூ. 45,000 கோடியாகும். இந்த தொகை அதன் ஆண்டு வளர்ச்சியில் 15 % என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மார்ச் மாத சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018

மார்ச் மாத  சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018

Retail Inflation India eases to 4.28 % on March 2018

 

2017-18 ம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் நாட்டின் சில்லரை பணவீக்க விகிதம் 4.28 % ஆக இருந்தது. கடந்த பிப்ரவரி 2018 மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த பணவீக்கம் 0.16 சதவீதம் குறைவாகும். பிப்ரவரி மாதத்தில் சில்லரை பணவீக்கம் 4.44 % ஆகவும், ஜனவரி மாதத்தில் 5.07 % ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மார்ச் மாத பணவீக்கம் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 5 மாத குறைவாகும். உணவு  பொருட்களின் விலை குறைவால் இந்த பணவீக்க விகிதம் ஏற்பட்டதற்கான காரணமாக உள்ளது.

 

உணவுப்பொருட்களின் பணவீக்கம் கடந்த மாதத்தில் 2.81  சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.26 சதவீதமாகவும் இருந்தது. எரிபொருள் மற்றும்  மின்சார பணவீக்கம் 5.73 % ஆக இருந்தது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.8 % ஆக நிலை கொண்டிருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

காய்கறிகளின் பணவீக்கமும் 17.57 சதவீதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 11.7 % சதவீதமாக சரிந்தது. அதே நேரத்தில் பழங்களின் பணவீக்கம் 4.8 % லிருந்து 5.78 சதவீதமாக உயர்ந்தது.

 

துணிமணி  மற்றும் காலணிகள் பணவீக்கம் 4.91 % இருந்தது. இதுவே பிப்ரவரியில் 5 சதவீதம் என்ற அளவில் அமைந்தது. பருப்பு வகைகளின் பணவீக்கம் -17.35 % லிருந்து மார்ச்சில் -13.41 சதவீதமாக இருந்தது.

 

இடைக்கால பணவீக்க விகித முறையில், கிராமப்புற பகுதிகளில் 4.44 % ஆகவும், நகர்ப்புற பகுதிகளில் 4.12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com