National Pension System - NPS

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

Recent Changes in National Pension System (NPS)

 

என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய பென்ஷன் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2004 ஜனவரி மாதம்(January 1,2004) முதல் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், 2009 ம் வருடம் முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் என கொண்டு வரப்பட்டது. இதனை புதிய பென்ஷன் திட்டம் எனவும் கூறுவதுண்டு.

 

NPS(National Pension System) செயலாக்கத்தால் 2004 ஜனவரி 1 ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு முன்பிருந்த வரையறுக்கப்பட்ட பயனமைப்பை (Defined Benefit System) கொண்ட பென்ஷன் முறை ரத்து செய்யப்பட்டது. இதனால் 2004 முதல் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் முறைக்கு மாற்றாக, வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டம் (Voluntary Defined Contribution System) என்னும் தேசிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

 

என்.பி.எஸ் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர் சந்தாதாரர்(Subscriber) எனப்படுவார். இந்த திட்டம் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) அமைப்பால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சந்தாதாரர் சார்ந்த தகவல்கள் மற்றும் முதலீட்டு முறைகள் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய பென்ஷன் திட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் கொண்டு வருவதுண்டு. சமீபத்தில் அது போன்ற மாற்றங்கள் சில அறிவிக்கப்பட்டுள்ளன. சந்தாதாரராக உள்ளவர் திட்டத்தில் இணைந்த மூன்று வருடங்களுக்கு பிறகு தனது பங்களிப்பில் 25 சதவீத பணத்தை விரும்பினால் பெற்று கொள்ளலாம்(25 percent withdrawal). பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் காரணமாக, தனது துறை சார்ந்த உயர்கல்வி படிப்பது, புதிதாக தொழில் துவங்குவது போன்றவையாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

தனியார் துறையில் பணிபுரியும் சந்தாதார்களுக்கு தனது என்.பி.எஸ். கணக்க்கில் சமபங்கு முதலீட்டை(Equity Investment) 75 சதவீதம் வரை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விகிதம் 50 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சந்தாதாரர் தனது திட்ட காலத்தில் அதிகபட்சமாக மூன்று முறை தனது பங்களிப்பு பணத்தை பெற்று கொள்ளலாம் எனவும், இது சம்மந்தமான விண்ணப்ப கோரிக்கையை CRA (Central Record Keeping Agency) என்ற மத்திய ஆவண பதிவு அமைப்பில் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. அருகில் உள்ள நோடல் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை கொடுக்கலாம் என தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s