Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

Burden to banks, Boost to customers – New Interest rate Benchmark – RBI

 

நேற்று நடைபெற்ற (05-12-2018) மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் (RBI) வட்டி விகிதம் சம்மந்தமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. அதன் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த 6.5 சதவீத வட்டி என்ற அளவிலே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழு (Monetary Policy Committee) கூட்டத்தில் 5 பேர் வட்டி விகிதத்தில் இம்முறை மாற்றம் தேவையில்லை எனவும், ஒருவர் நடுநிலையாகவும் கூறியிருந்தனர். வங்கிகளின் வாராக்கடன் மற்றும் நிதி நிலை அறிக்கையில் ஏற்படும் வேறுபாட்டை கலைந்து, அதனை சீரமைக்கும் பணியில் உள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கும் வேளையில், நாட்டின் பணவீக்க மதிப்பீடை குறைத்துள்ளது பாரத ரிசர்வ் வங்கி. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.8 – 4.5 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணவீக்கம் (Inflation) 2.7 – 3.2 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீட்டை குறைத்துள்ளது.

 

கச்சா எண்ணெய் விலையின் சரிவு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஆதாயம் ஆகியவை பணவீக்க மதிப்பீட்டை குறைக்க துணைபுரிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் வங்கிகளின் கடன் கொள்கைகளில் தனது இறுக்கத்தை தொடர்கிறது மத்திய வங்கி.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த காலாண்டு முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 7.1 சதவீதமாக குறைந்தது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இன்னும் தேக்கநிலையே காணப்படுகிறது. நாட்டின் குறைவான உற்பத்தி மற்றும் விவசாய பொருட்களுக்கான சரியான விலை கிடைக்காதது பணவீக்க மதிப்பீட்டை குறைக்க காரணமாகவும் அமைந்துள்ளது. இதன் தாக்கம் தான் நாட்டின் GDP மதிப்பில் தெரிய வந்துள்ளது.

 

நடப்பு வருடத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.4 சதவீத அளவில் இருக்கும் என நிதி கொள்கை குழு கூறியுள்ளது. வங்கிகளின் பத்திரங்கள் வைத்திருக்கும் விகிதத்தை (Bond Holding) காலாண்டிற்கு ஒரு முறை 25 புள்ளிகள் என்ற அளவில் குறைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள நீர்மை நிறையையும் (Liquidity) அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும்சுமையாக இருந்த வட்டி விகித மாற்ற அமலில், இப்போது புதிய முறை சொல்லப்பட்டுள்ளது. முன்னர் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது, உடனே வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கடன் அளவில் வட்டி விகிதத்தை உயர்த்தும். அதே சமயம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், அது விரைவாக வாடிக்கையாளர்களுக்கு சேராது. வட்டி விகித உயர்வில் மட்டும் விரைவான நடைமுறையை கையாளும் வங்கிகளால் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சுமையாக காணப்பட்டது. மிதவை விகிதத்தில் (Floating Rate) கடனை பெறுவோருக்கு இது ஒரு சிக்கலாகவே இருந்தது. ஆனால் இவற்றில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய முறையை புகுத்த உள்ளது.

 

இதுவரை வங்கிகளுக்கு உள்ளே மட்டும் சொல்லப்பட்ட வட்டி விகித மாற்றம், இனி வெளிப்படையாக வட்டி விகித வரையரைகளுடன் (Benchmark) வரவிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிதவை வட்டி விகிதத்தை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். வங்கிகளும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த புதிய முறை வாடிக்கையாளர்களுக்கு நலனை கொடுக்கும். அதே வேளையில், வங்கிகளில் இதற்கான கொள்கைகளும் மாற்றப்படும். வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் இது தொடக்கத்தில் பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வட்டி விகித வரையறை வரும் ஏப்ரல் 1, 2019 முதல் அமலாகலாம் என தெரிகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பிரமிப்பான வளர்ச்சி… பிரச்சினையில் யெஸ் வங்கி – வரலாறு

பிரமிப்பான வளர்ச்சி… பிரச்சினையில் யெஸ் வங்கி – வரலாறு

Astonishing Growth and Facing problems – Yes Bank Story

 

நாட்டில் உள்ள வங்கிகளின் சேவை நம் அனைவருக்கும் தேவையென்றாலும், வங்கிகளின் வாராக்கடன் பொருளாதார மந்த நிலையையும், மீண்டும் அந்த சிக்கல் மக்களிடமே செல்கிறது. ஒரு புறம் நேர்மையான முறையில் தனது கடனை அடைப்பவர்களும், மற்றொரு திசையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் திவாலாகும் நிலையும் நம் நாட்டில் தற்போது அடிக்கடி ஏற்படுகிறது.

 

தனி நபர் முதல் தனியார் நிறுவனங்கள் வரை இன்று வங்கிக்கடன் என்பது அவசியமான ஒன்றாகி விட்டது எனலாம். வங்கிகள் தனி நபர் சார்ந்த கடன்  அளிக்கும் சேவைகளில் கறாராக இருப்பினும், நிறுவனங்கள் கடன் பெறுவதில் அவ்வாறு இருக்க முடிவதில்லை. இதன் விளைவாக வங்கிகளின் வாராக்கடன் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கின்றன. இதனை சரிசெய்யும் முயற்சியில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு  கொள்கைகளை வடிவமைத்து வருகிறது.

 

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லையென்றாலும், தனியார் வங்கிகள் சில தொடர்ச்சியான வருமான இலக்கை அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனியார் வங்கியான யெஸ் வங்கியின் (Yes Bank) தொடர் வளர்ச்சி முக்கியமானது. அதுவும் வங்கி சேவையின் அனுபவம் மிக குறைந்த காலத்தில் என்பது தான் பிரமிக்கத்தக்கது.

 

டில்லியில் பிறந்தவர் திரு. ராணா கபூர் (Rana Kapoor). பள்ளி மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை தனது சொந்த ஊரிலே முடித்திருந்தாலும், மேற்படிப்பை அமெரிக்காவில் கற்ற இவர் பேங்க் ஆப் அமெரிக்கா (Bank of America) வங்கியில் மேலாண்மை பயிற்சியில் தொடங்கி தலைமை பதவி வரை சுமார் 16 வருடங்கள் பணிபுரிந்தார். பின்பு க்ரின்ட் லேஸ் வங்கியில் (ANZ Grindlays) பொது மேலாளர் பதவியில் இருந்த ராணா 1997 ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் வங்கி அல்லாத நிதி சேவையில் (NBFC) தனது தொழிலை ஆரம்பித்தார்.

 

2003 ம் வருடத்தில் ராணா கபூர் மற்றும் அசோக் கபூரால் (Ashok Kapur) தொடங்கப்பட்டது யெஸ் வங்கி – YES Bank. ராணா கபூரின் மனைவி பிந்து, பிந்துவின் தங்கை கணவர் தான் அசோக் கபூர். 5 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட யெஸ் வங்கி அப்போது பெரும்பாலானவருக்கு ஒரு சிறிய நிதிச்சேவை நிறுவனமாக தான் தெரிந்தது. 2004 ம் ஆண்டில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரியாக ராணா கபூர் நியமிக்கப்பட்டார். 2005 ம் ஆண்டில் யெஸ் வங்கி பொது பட்டியிலடப்பட்ட நிறுவனமாக (Public Listed – IPO) மாற்றம் பெற்று அதன் ஆரம்ப விலையாக, பங்கு ஒன்றுக்கு ரூ. 45 ஆக சந்தைக்கு (Share Price) வந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2008 ம் வருடத்தில் ஏற்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலில், தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த அசோக் கபூர் கொல்லப்பட்டார். இதன் பின்னர் அசோக் கபூரின் மனைவி மது கபூர் (Madhu Kapur) நிர்வாகத்தில் வந்தாலும், ராணா கபூரின் நிதிச்சேவை செயல்பாடு யெஸ் வங்கியை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றது. வங்கியின் சேவை குறைந்த கிளைகளை கொண்டிருந்தாலும் அதன் வருமான வளர்ச்சி துரிதமாக வளர்ந்தது. ஆண்டிற்கு 30 சதவீத தொடர் வளர்ச்சியில் அதன் லாபமும் அடைந்தது. 2007-2008 ம் நிதியாண்டில் 200 கோடி ரூபாயாக இருந்த யெஸ் வங்கியின் நிகர லாபம் 2017-18 ம் வருடத்தில் 4,225 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் பெருத்த லாபமடைந்தனர்.

 

வளர்ச்சி ஒரு புறம் இருக்க, 2014 ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிர்வாக கட்டமைப்பில் ராணா கபூருக்கும், அசோக் கபூரின் மனைவி மது கபூருக்கும் இடையே சர்ச்சை (Dispute) ஆரம்பமானது. இதன் தாக்கம் 2017 ம் ஆண்டின் நிதி அறிக்கையில் இடைவெளியை (Divergence) காண்பித்தது. நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கலால் யெஸ் வங்கி தனது பங்குதாரர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளானது. IPO முறைகேடு, ராணா – மது கபூர் வாதம், Yes Capital நிறுவனத்தின் ராணாவின் பங்கு, இயக்குனர் குழுவில் அடுத்தடுத்த ராஜினாமா என யெஸ் வங்கியின் செய்தி பரவலானது.

 

ராணா கபூரின் பதவி காலம் முடியும் நிலையில், பாரத ரிசர்வ் வங்கி இவருடைய பதவி காலத்தை வரும் ஜனவரி 31, 2019 வரை நீட்டித்துள்ளது. ராணா தனது பதவியில் இருந்து வெளியேறும் காலத்தில், அந்த பதவிக்கு வருபவர் யெஸ் வங்கியின் வளர்ச்சியை மேற்கொண்டு செல்வது தான் எதிர்பார்ப்பாக உள்ளது. ராணா கபூர் மீண்டும் தனது பதவிக்கு வருவதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இல்லையென்றால், இயக்குனர் குழுவில் அவருக்கான இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது.

 

ராணா – மது கபூர் இரு குடும்பத்திற்கிடையே நடைபெறும் இந்த வாதம் முற்றுப்பெற்றால் மட்டுமே, யெஸ் வங்கியின் நிர்வாகத்தில் நலன் காணலாம். யெஸ் வங்கியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டாலும் தனது பங்குகளை விற்க மாட்டேன் என ராணா கபூர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘ இங்கே வைரங்கள் எப்போதும் உள்ளன (Diamonds are Forever). என்னுடைய ஒரு பங்கினை கூட நான் விற்க போவதில்லை ‘ என்கிறார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கச்சா எண்ணெய் வீழ்ச்சியும், ரூபாய் மதிப்பும் – பொருளாதார போக்கு

கச்சா எண்ணெய் வீழ்ச்சியும், ரூபாய் மதிப்பும் – பொருளாதார போக்கு

Declining Crude oil prices and India Rupee against Dollar – Economical Trend

 

கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக இறங்கு முகத்தில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. WTI எண்ணெய் குறியீடு 50 டாலருக்கு அருகிலும், Brent குறியீடு 60 டாலர் அளவிலும் வர்த்தகமாகி வருகிறது. இதே போல டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 70 – 71 என்ற அளவில் உள்ளது.

 

Brent குறியீடு கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ஏற்றம் பெற்று அதிகபட்சமாக 87 டாலர் அளவில் வர்த்தகமானது. கிட்டத்தட்ட 96 சதவீதம் உயர்ந்த இந்த குறியீடு, கடந்த ஒரு மாதமாக 30 சதவீதத்திற்கும் கீழ் இறங்கி தற்போது 60 டாலர் என்ற அளவில் உள்ளது. WTI எண்ணெய் குறியீடும் அதிகபட்சமாக 76 டாலர் சென்றாலும், இப்போது 50 டாலருக்கு அருகில் வர்த்தகமாகிறது.

 

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 6 வாரங்கள் அடிப்படையில் பார்த்தால், வரலாற்று உச்சமாக 74.72 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 70.80 ரூபாய் மதிப்பில் வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலையும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சந்தையில் இன்னும் இறங்கலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்க – சீன வர்த்தக போர், சவுதி அரேபியாவின் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி ஆகியவை கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பை நடப்பில் தீர்மானிப்பதாக உள்ளது. சவுதி அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. அமெரிக்கா நாளொன்றுக்கு 11.7 மில்லியன் பேரல் என்ற அளவிலும், ரஷ்யா 11.5 மில்லியன் பேரலும் உற்பத்தி செய்கிறது.

 

இதன் நிலை வரும் OPEC (Organization of the Petroleum Exporting Countries) நிகழ்விலும், G20 மாநாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கச்சா எண்ணெய் விலை கடந்த காலத்தில் 2008, 2014-15 மற்றும் நடப்பு வருடத்தில் மிகுந்த இறக்கத்தை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

தற்போது நிகழும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு இந்திய பொருளாதாரத்திற்கு துணைபுரிவதாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எண்ணெய் சார்ந்த மானிய சுமையை குறைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும் போக்குவரத்து செலவையும், நுகர்வோர் செலவினங்களுக்கும் சாதகமாக உள்ளது. இதனால் பங்குச்சந்தைக்கும், அன்னிய முதலீடு திரட்டுவதற்கும் ஆக்கபூர்வமாக இருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

அதென்ன குறைந்தபட்ச ரீசார்ஜ் – 35 ரூபாய் திட்டம் ?

அதென்ன குறைந்தபட்ச ரீசார்ஜ் – 35 ரூபாய் திட்டம் ?

25 Crore Mobile users be moved to Minimum Recharge Plan Rs. 35 – Telecom in India

 

கடந்த காலத்தில் கைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்த போதும், ப்ரீபெய்ட் (Prepaid) என்று சொல்லும் முன்பணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளருக்கும், பேசி விட்டு பின்பு பணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் (Postpaid) வாடிக்கையாளருக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கும். ஆனால் ஸ்மார்ட் போன் மற்றும் 4G அலைவரிசை வந்த பிறகு இதற்கான இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது குறைந்தபட்ச பயன்பாட்டின் அளவு அதிகரித்தது தான்.

 

முன்னர் கைபேசி வாடிக்கையாளர்களின் சராசரி மாத பயன்பாட்டு செலவு (Average Usage) ரூ. 50 ஐ தாண்டாது. விலை வெட்டிகள் (Rate Cut), உயர்த்திகள் (Boosters) மற்றும் முழு டாக் டைம் என பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இன்று அளவில்லா அழைப்புகளும், இணைய பயன்பாடு (Unlimited Calls and Data) என்ற இரு விஷயம் மட்டுமே வாடிக்கையாளரை தக்க வைத்து கொண்டுள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.

 

சமீபத்தில் தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட தகவல்களின் படி, ஏர்டெல் மற்றும் ஜியோவில் ஒரு பயனருக்கான சராசரி மாத வருவாய் (Average Reveneu per user -ARPU) 100 ரூபாய்க்கு குறையாமல் இருப்பதாகவும், வோடபோன் – ஐடியா இணைப்பிற்கு பிறகு அதன் ஒரு பயனருக்கான சராசரி மாத வருவாய் 88 ரூபாய் என்ற அளவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 25 கோடி வாடிக்கையாளர்கள் ஒரே கைபேசியில் இரு சிம் கார்டை பயன்படுத்துபவராக உள்ளனர் என்றும், அவர்களின் மாத ரீசார்ஜ் 10 ரூபாய்க்கு குறைவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தும் இது போன்ற வாடிக்கையாளர்களில் ஏர்டெல் நிறுவனம் (Airtel) 10 கோடி நபர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 15 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

 

இது போன்ற வாடிக்கையாளர்களின் வாயிலாக ஏர்டெல் நிறுவனம் ஆண்டுக்கு 1200 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது. அதே நேரத்தில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) வருடத்திற்கு ரூ.1800 கோடியை வருமானமாக பெறுகிறது. இவர்களை குறைந்த பட்ச ரீசார்ஜ் (Minimum Recharge) என்ற அமைப்பில் கொண்டுவர இந்த இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டு கொண்டுள்ளது.

 

கடந்த சில வாரங்களாக, ‘ இனி இன்கமிங் கால்கள் இலவசம் இல்லை (No Free Incoming Calls)‘ என்ற செய்தி மக்களிடையே வந்த நிலையில், தற்போது இந்த செய்தியும் கைபேசி வாடிக்கையாளர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் – 35 ரூபாய் என்ற திட்டத்துடன் இரு நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளது. இதனால் இனி மாதத்திற்கு குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செலுத்தினால் மட்டுமே பயன்பாட்டை தொடர முடியும். தவறும் பட்சத்தில் வெளிச்செல்லும் அழைப்புகள் (Outgoing Calls) நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளது.
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சொல்லப்பட்ட 25 கோடி வாடிக்கையாளர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் – 35 ரூபாய் திட்டத்திற்கு மாற்றப்பட்டாலே ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 900 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதுவே வோடபோன் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1300 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கக்கூடும். இந்த 25 கோடி வாடிக்கையாளர்களும் 2G அலைவரிசையில் இருப்பவர்கள் என்றும், இவர்கள் 3G மற்றும் 4G வரிசைக்கு மாற்றம் பெறும் போது, மாத பயன்பாடு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சந்தைக்கு வந்த பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடைய கடும் போட்டி நிலவுகிறது. 35 ரூபாய் திட்டம் ஜியோ நிறுவனத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து மாத குறைந்த பட்ச தொகையாக ரூ. 49 ஐ நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜியோவின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) ரூ. 130 ஆக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

வீழ்கிறதா எல்.ஐ.சி ? – வளர்ச்சியில் முந்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

வீழ்கிறதா எல்.ஐ.சி ? – வளர்ச்சியில் முந்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

Is LIC India declining on growth over private insurance companies ?

 

2017-18 ம் நிதியாண்டில் எல்.ஐ.சி. (Life Insurance Corporation of India) இந்தியாவின் பங்குச்சந்தை வர்த்தகம் மூலமான லாபம் மட்டும் ரூ. 25,000 கோடி. கடந்த டிசம்பர் மாத இறுதியில் இதன் பங்கு மூலமான சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாகும்.

 

பங்குச்சந்தையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஆதிக்கம் மற்ற பொதுத்துறை நிறுவனங்களை காட்டிலும் மிக அதிகம். இதனை சார்ந்த விமர்சனங்களும் அவ்வப்போது எழும். பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. யில் காப்பீடு பெறும் வாடிக்கையாளர்களின் பணம் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படுவது கவனிக்க வேண்டியது. முன்னர் புகையிலையை தொழிலாக கொண்ட ஐ.டி.சி. (ITC) நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்த போது சர்ச்சைக்குள்ளானது.

 

சமீப காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இதன் முதலீட்டு விகிதம் (Holding) சற்று அதிகமாயிருந்தது. ஐ.டி.பி.ஐ. (IDBI Bank) மற்றும் ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிதிச்சிக்கலில் மாட்டிய போது, எல்.ஐ.சி. நிறுவனம் மீட்க முன்வந்தது. மத்திய அரசே இந்த பிரச்சனையில் தலையிட்டு வங்கியை  மீட்க எல்.ஐ.சி. நிறுவனத்தை கேட்டு கொண்டது. இதற்கு சொல்லப்பட்ட முதற்காரணம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிரமாண்டமான சொத்து மதிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.

 

ஆனால் நடந்தது என்னவோ இதன் எதிர்கால வளர்ச்சியை பாதித்துள்ளது. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் எல்.ஐ.சி. வைத்திருக்கும் பங்குகள் மீது காப்பீட்டு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வாராக்கடன் பிரச்னையில் சிக்கும் நிறுவனங்களை ஏன் எல்.ஐ.சி. மீட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த அக்டோபர் மாதத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி 32 சதவீதமாக உள்ளது. இதே காலத்தில் எல்.ஐ.சி. 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. தனியார் காப்பீடு நிறுவனங்களின் காப்பீடு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அதன் வருமான வளர்ச்சி பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது.

 

எச்.டி.எப்.சி. லைப்  (HDFC Life) நிறுவனத்தின் வளர்ச்சி 37 சதவீதத்திலும், எஸ்.பி.ஐ. லைப் (SBI Life) 17 சதவீத வளர்ச்சி அளவிலும் உள்ளது. பொதுத்துறையில் உள்ள ஒரே காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியாவாகும். வங்கிகளில் செய்யப்பட்ட மூலதனம், எல்.ஐ.சி. யில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது வரும் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

விமான நிறுவனங்களின் காலாண்டு நஷ்டமும், கையகப்படுத்தலும்

விமான நிறுவனங்களின் காலாண்டு நஷ்டமும், கையகப்படுத்தலும்

Net loss quarters and acquisition action on Airlines Industry

 

செப்டம்பர் மாத காலாண்டில் 1297 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் (Jet Airways) தெரிவித்துள்ளது. இதே காலாண்டு அறிக்கையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 389 கோடி ரூபாய் நட்டத்தையும், இன்டர் குளோப் (Indigo) ரூ. 652 கோடி நட்டத்தையும் கொண்டுள்ளது.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் 21 காலாண்டு முடிவுகள் லாபத்தையும், 20 காலாண்டு முடிவுகளில் நஷ்டமும் (Quarterly net loss) அடைந்துள்ளன. 21 காலாண்டுகளின் மொத்த லாபமாக 4,120 கோடி ரூபாயையும், அதே வேளையில் 20 காலாண்டுகளின் நஷ்டம் ரூ. 12,450 கோடியாகும்.

 

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (SpiceJet) கடந்த பத்து ஆண்டுகளில் 7 ஆண்டுகள் நஷ்டத்தை பெற்றுள்ளன. அதிகபட்சமாக கடந்த 2014 ம் நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் 8000 கோடி ரூபாயாகவும், ஸ்பைஸ் ஜெட்டின் கடன் ரூ. 1300 கோடியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

 

முன்னர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Kingfisher Airlines) தனது கடனை அடைக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் விமான சேவையை நிறுத்தி கொண்டது. பின்பு அந்த நிறுவனம் திவாலானதும், நிறுவனர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதும் மற்றுமொரு விஷயம். வளர்ந்து வரும் நாட்டில் விமான சேவைகளில் மக்களின் போக்குவரத்து அதிகரித்து இருந்தாலும், நிறுவனங்களின் தொடர் நஷ்டம், சேவையை தொடர விடுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு வாரத்தில் மத்திய அரசின் சூசகமான விஷயமும், ஜெட் ஏர்வேஸை டாடா நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியும் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீத அளவிற்கு உயர்ந்தது. டாடா நிறுவனம் தனது விஸ்தாரா சேவையுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இணைக்க உள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் பங்குகள் வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தன.

 

டாடா நிறுவனத்தின் கையகப்படுத்தும் (TATA  Vistara – Jet airways Merger) விஷயத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது சம்மந்தமான ஒரு அறிக்கையில், ஆங்கில பத்திரிகையில் (Economic Times) வெளியிடப்பட்ட செய்தி ஊகமாக சொல்லப்பட்டது எனவும், இவற்றில் உண்மை எதுவும் இல்லை எனவும் நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

 

பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த கையகப்படுத்தும் செய்தியில் மத்திய அரசு  செயலாற்ற முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் (Interglobe Aviation -INDIGO)  கடன் 2400 கோடி ரூபாயாகவும், இந்த நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை நோக்கி சென்றுள்ளது. கடந்த 2017-18 ம் நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் 2200 கோடியாக இருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்

கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்

Crude oil prices fell below $70 a barrel

 

ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை நான்கு வருடங்களுக்கு (2014) முன், பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமானது நினைவிருக்கலாம். அதே காலத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் (West Texas Intermediate -WTI) கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு அதிகபட்சமாக 90 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. தற்போது ப்ரெண்ட் எண்ணெய் 70 டாலருக்கு குறைவாகவும், WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60 டாலர் அளவிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

 

இந்தியாவின் கச்சா எண்ணெய் (Crude oil) தேவை அதிகரிப்பால், நடப்பு மாதம் முதல் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய முன்னரே ஒப்பந்தம் இருந்தது. அமெரிக்கா – ஈரான் இடையே வர்த்தக போர் இருப்பினும் இந்தியாவுக்காக, அமெரிக்கா தனது பிடியை தளர்த்தியது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தாலும், நமது நாட்டிற்கு அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

ஓமன் வளைகுடாவில் அமையப்போகும் சபார் (Chabahar Port) துறைமுகத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாகும். இதனால் பயன்பெற போகும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தான்  நாட்டுக்கு உதவும் நோக்கில் இந்தியாவின் சபார் கட்டமைப்பை இணக்கம் காட்டி, ஈரானுடன் வர்த்தகம் புரிய அனுமதி அளித்துள்ளது.

 

உலகளாவிய எண்ணெய் தேவை மற்றும் பொருளாதார மந்த நிலையால் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் கடந்த மாதம் 10 ம் தேதி முடிவில் 83 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த ஒரு வார அதிகபட்ச விலையாக பேரலுக்கு 73 டாலராக இருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி (Iran Crude oil import) செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. நடப்பு வருடத்தில் மட்டும் இந்தியா, ஈரானிலிருந்து சராசரியாக தினமும் 5,77,000 பேரல்களை இறக்குமதி செய்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பேரல் ஒன்றுக்கு 2-3 டாலர் வரை விலை குறைவாக கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

 

அதே நேரம் ஈரானில் மற்ற நாடுகளின் தேவையால் இந்தியாவில் தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் கேஸ் சிலண்டரின் விலையும், மாதத்தின் துவக்கத்தில் 1000 ரூபாயை நெருங்கியுள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, இரவு 10:30 மணியளவில் (இந்திய நேரம் – 11-09-2018) 69.80 டாலர் ($69.80 / barrel) அளவில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

144 வங்கி கணக்குகள், 19 கோடி ரூபாய் – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

144 வங்கி கணக்குகள், 19 கோடி ரூபாய் – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

Only 19 Crores in combined 144 Bank accounts – Reliance Communication’s Tragedy

 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (Reliance Communication -Rcom) நிறுவனம் கடன் பிரச்னையால் கடந்த வருடம் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அதன் மொபைல் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு மாறினர்.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சொல்லப்பட்ட கடன் மட்டும் ரூ. 46,000 கோடியாகும். தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் நிறுத்தப்பட்ட சேவைகள் முகேஷ் அம்பானியின் ஜியோவில் (Reliance Jio) மாற்றம் பெற்று வருகின்றன. கடன் பிரச்சினையை தொடர்ந்து முதலீடு செய்த நிறுவனங்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள்  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மீது அடுத்தடுத்து வழக்குகளை தொடுக்க ஆரம்பித்தனர்.

 

பாஸ்டன் நகரத்தை சேர்ந்த அமெரிக்க டவர் நிறுவனம் (American Tower Corp), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் இருந்து வசூலிப்பதற்கான ரூ. 230 கோடி தொகைக்காக வழக்கு தொடுத்துள்ளது. அதே போன்று, எரிக்சன் (Ericsson) நிறுவனமும் ரூ. 550 கோடி தொகையை பெற வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இது சம்மந்தமாக அனில் அம்பானி நிறுவனம் தனது ஸ்பெக்ட்ரம் சேவையை ஜியோவிற்கு விற்பதன் மூலம் கடனை அடைத்து விடும் என தெரிவித்தது.

 

2018 செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிக்சன் கடனை அடைத்து விடும்படி நீதிமன்றம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதனிடையே சொத்துக்களை விற்பதற்கான குறுக்கீடுகள், எரிக்சனின் திவால் வழக்குகள் மேலும் கால தாமதத்தை ஏற்படுத்தின. இதனை அடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனக்கு 60 நாள் கூடுதல் அவகாசம் தருமாறு உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு ஆணையத்தில் (NCLT) கேட்டு கொண்டது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உச்ச நீதிமன்றமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதல் அவகாசத்தை அனுமதித்து, வரும் டிசம்பர் 15 ம் தேதிக்குள் கடனை முழுமையாக அடைக்க வழிவகை செய்துள்ளது. செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் 15 ம் தேதி வரையிலான காலத்திற்கு தினசரி 12 சதவீத தனி வட்டியில் கடனை அடைக்க வேண்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இந்நிலையில் நிறுவனம் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (RCom) மற்றும் அதனை சார்ந்த ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் மொத்த வங்கி கணக்குகள் 144 எனவும், அவற்றிலிருக்கும் மொத்த தொகை (Bank Balance) 19.34 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில்  உள்ள 119 வங்கி கணக்குகளில் உள்ள தொகை ரூ. 17.86 கோடி மட்டுமே. மீதம் உள்ள 1.48 கோடி ரூபாய் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் 25 கணக்குகளில் இருந்தது. வெளியேறும் கட்டணம் மற்றும் சேவை கட்டணமாக மட்டும் ரூ. 230 கோடியை அமெரிக்க டவர் நிறுவனம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 13 ல் நடைபெறும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

வரும் திங்கள் முதல் இந்த 9 நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்படுகின்றன

வரும் திங்கள் முதல் இந்த 9 நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலிருந்து  நீக்கப்படுகின்றன

These 9 Stocks are to be delisted from Monday – BSE India

 

சில மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை பட்டியலில் இருந்து, விதிமீறல் காரணமாக பல்வேறு நிறுவன பங்குகள் நீக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இப்போது பின்வரும் ஒன்பது நிறுவன பங்குகளும் வரும் திங்கள் கிழமை (05-11-2018) முதல் மும்பை பங்குச்சந்தையிலிருந்து (Bombay Stock Exchange – BSE) நீக்கப்படவுள்ளன.

 

அணில் லிமிடெட் (Anil Ltd), பிரேக்ஸ் ஆட்டோ (Brakes Auto India), இண்டஸ் பிளா (Indus Fila), ஐ.கியூ.இன்போடெக் (IQ Infotech), லோக் ஹவுசிங் (Lok Housing), மெட்ரோபோலி ஓவர்சீஸ் (Metropoli Overseas), பிதாம்பூர் ஸ்டீல் (Pithampur Steels), பிரகாஷ் சால்வெண்ட் (Prakash Solvent Extractions) மற்றும் சிபார் மென்பொருள் சேவை (Sibar Software Services) நிறுவனம் ஆகிய 9 நிறுவன பங்குகள் வரும் திங்கள் முதல் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த நிறுவனங்களின் சந்தை செயல்பாடு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் மும்பை பங்குச்சந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பங்குகள் ஏற்கனவே கடந்த 6 மாத காலமாக மும்பை சந்தையில் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்பது நிறுவனங்களின் இயக்குனர்கள், நிறுவனர்கள், மற்றும் அதனை சார்ந்த குழு நிறுவனங்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சந்தையில் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒன்பது நிறுவனங்களின் நிறுவனர்கள் சந்தையில் உள்ள பொது பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும், அதற்கான பங்கு விலை மதிப்பை வெளியிடுமாறும் மும்பை பங்குச்சந்தை அறிவுறுத்தியுள்ளது.

 

தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இனி சந்தையில் வர்த்தகமாகாது எனவும், பங்குகளை கொண்ட பங்குதாரர்கள் நிறுவனர்களிடம் ஒப்படைப்பதற்கான செயல்பாட்டை செய்யுமாறும் செபி சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் பங்குச்சந்தையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் பங்குகள் நீக்கப்பட்டுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

Mostly outflows of FII and the rise in Domestic Investments – Trading Activity for October 2018

கடந்த மாதம் (October 2018) முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியது இந்திய பங்குச்சந்தை. நமது நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஏற்ற-இறக்கம் அதிகமாக காணப்பட்டது. நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை மாற்றம், வங்கிகளின் செயல்பாடு போன்ற்வற்றால் பங்குச்சந்தை முதலீடு வெகுவாக பாதிக்கப்பட்டது.

 

அக்டோபர் மாதத்தில் மட்டும் நடந்த 21 வர்த்தக நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரும்பாலும் விற்பனையை மட்டும் கையாண்டிருந்தனர். அந்த மாதத்தின் மொத்த விற்பனையாக ரூ. 1,40,238 கோடியும், நிகர விற்பனையாக ரூ. 29,200 கோடியும் அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகமாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் மாத மொத்த கொள்முதல் ரூ.111,037 கோடியாகவும், மொத்த விற்பனை ரூ.1,40,238 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இருப்பினும், உள்நாட்டு முதலீடு நல்ல ஏற்றம் பெற்றது. கடந்த மாதத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (Domestic Institutional Investors -DII) மொத்த கொள்முதலாக ரூ. 1,00,992 கோடியையும், மொத்த விற்பனையாக ரூ. 74, 958 கோடியையும் கொண்டிருந்தனர். அவர்களின் அக்டோபர் மாத நிகர கொள்முதல் ரூ. 26,033 கோடியாக முடிவடைந்தது.

 

அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை பொறுத்தவரை அக்டோபர் 15 மற்றும் 17 ம் தேதிகளில் மட்டும் நிகர கொள்முதலை பெற்றிருந்தனர். மற்ற நாட்கள் அனைத்தும் விற்பனையை மட்டுமே மேற்கொண்டிருந்தனர். அதே சமயத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் விற்பனையையும், மற்ற வர்த்தக நாட்களில் நிகர கொள்முதலையும் வர்த்தகமாக்கினர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தினை பார்க்கும் பொழுது, வெளிநாட்டு முதலீடு நிகர விற்பனையாக ரூ.9,468 கோடியாகவும், உள்நாட்டு முதலீடு நிகர கொள்முதலாக ரூ. 12,500 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் 200 சதவீத விற்பனையையும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 108 சதவீத கொள்முதலையும் கொண்டிருந்தனர்.

 

உள்நாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் நிகர கொள்முதல் கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 2017 மாதத்தில் இருந்த ரூ. 21,025 கோடி நிகர கொள்முதல்  தான் அதிக அளவாக சொல்லப்பட்டது.  கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(Sensex) குறியீடு 2000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty50) 600 புள்ளிகளும் நிகரமாக இறங்கியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com