Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்

Employee to Entrepreneurship – Smart Ways to Follow

 

ன்றைய இளம் தலைமுறையினரிடம் ஒரே ஒரு விஷயத்தில் ஒருமித்த சிந்தனை இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அது, இளமையிலேயே ஓய்வுபெறுவது. 45, 50 வயதில் ஓய்வுபெற்று, வீட்டில் உட்கார்ந்துகொண்டு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். வெறும் சம்பளத்துக்கு மற்றவர்களுக்காக உழைக்காமல், தனது முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இளமையிலேயே ஓய்வு என்கிற முடிவினை எடுக்கத் தூண்டுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆனால், இந்த முடிவினை எடுத்து பிசினஸைத் தொடங்கும்முன் சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம். என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

 

 

  • கடனைக் குறைத்துக்கொள்ளுங்கள்

 

  • சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகப்படுத்துங்கள்
  • உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத் தொழிலாக மாற்ற சிந்தியுங்கள்
  • வேலையிலிருந்து விடுபடுங்கள்
  • உங்கள் விருப்பத்தைத் தொழில்முனைவாக்குங்கள்
  • சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்
  • தொழில்முனைவைத் தானியங்கியாக மாற்றுவதன் அனுகூலம்

 

 

 

மேலே சொன்ன வழிகளை பற்றி விரிவாகவும் மற்றும் விளக்கத்துடனும் இந்த வார நாணயம் விகடன் பத்திரிகையில்(26-05-19) படிக்கலாம்.  (Article published in Nanayam Vikatan Magazine)

 

இணைய இணைப்பு:  வேலை To தொழில்… வெற்றிக்கான வழிகள்!

 

வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நாணயம் விகடன்(Nanayam Vikatan) முதன்மை பொறுப்பாசிரியர் திரு. சி. சரவணன் அவர்களுக்கும், மேலும் இந்த நிதி சார்ந்த பதிவை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கும்(Vikatan Group) நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

Amazon starts Flight ticket Services in India

 

சமீப வருடங்களாக நுகர்வோர் சந்தையில் நம் நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதுவிதமான தொழில்களும், பொருட்களும் இங்கு வந்த வண்ணம் உள்ள நிலையில், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தோல்வியை தழுவினாலும் அவற்றின் பொருட்கள், பிராண்டுகளாக(Branding) மக்களிடையே சென்றடைந்து உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தற்போது நம் நாட்டில் விமான டிக்கெட் சேவையை அளிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது. விமான முன்பதிவு சேவையிலிருக்கும் கிளீயர் ட்ரிப்(Cleartrip) தளத்துடன் இணைந்து அமேசான் நிறுவனம் இந்த புதிய சேவையை அளிக்க உள்ளது.

 

அமேசான் செயலி(Amazon app) மூலம் ஒருவர் தனது விமான பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பெறலாம். அமேசான் தளத்தில் பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்யும் போது, கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை எனவும் அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமேசான் தளத்தில் ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம்(Amazon Pay), பல சேவைகளுக்கு கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை அளித்து வரும் நிலையில், விமான முன்பதிவு சேவை சாதகமான அம்சத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தும்.

 

சமீபத்தில் உலக பெரும் பணக்காரர் மற்றும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்டின் பெர்க்சையர் ஹாத்தவே நிறுவனம்(Berkshire Hathaway), அமேசான் நிறுவனத்தில் 4.83 லட்சம் பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடி

Indian Oil Corporation(IOC) Q4FY19 net profit rises to Rs. 6,099 Crore

 

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC) புது டில்லியை தலைமையிடமாக கொண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த தொழிலை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபமாக 6,099 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 5,218 கோடி ரூபாயாக இருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மார்ச் மாத காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,26,214 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,15,338 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவன இயக்க லாபம் ரூ.10,876 கோடி. இதர வருமானமாக ரூ.1,059 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இருந்த அதிகபட்ச தொகையாகும்.

 

ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விற்பனை அளவு கடந்த ஐந்து வருட காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. பத்து வருட காலத்தில் இதன் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 6 சதவீதத்தை ஒட்டியே உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் லாப வளர்ச்சி கடந்த 5 வருடத்தில் காணும் போது 34 சதவீதமாக உள்ளது.

 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) 1,40,800 கோடி ரூபாயாகவும், புத்தக மதிப்பு 115 ரூபாய் என்ற அளவிலும் இருந்து வருகிறது. தற்போது நிறுவனத்தின் கடன் அளவு(Debt) 83,260 கோடி ரூபாயாக உள்ளது.

 

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு(Crude Processing) மற்றும் வருவாய் இரண்டிற்கும் உள்ள இடைவெளி பேரலுக்கு 5.40 (Per Barrel) அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இதுவே 2017-18ம் ஆண்டில் 8.49 டாலர்கள் இருந்ததாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சொத்து மதிப்பு ரூ.1,24,216 கோடியாகவும் மற்றும் நடப்பு கடன் மதிப்பு 1,53,463 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்வு

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்வு

India’s Retail Inflation increased to 2.92 percent in the month of April 2019

 

கடந்த ஏப்ரல் மாதத்தில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் சில்லரை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 2.86 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஐந்து வருட காலமாக பணவீக்கத்தின்(Consumer Price Index -CPI) அளவு குறைந்து வந்துள்ள நிலையில், பாரத ரிசர்வ் வங்கி பணவீக்க மதிப்பீட்டின் அடிப்படையில் வட்டி விகிதத்தையும்(Repo Rate) குறைத்து வந்தது. இதனால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து இருந்தது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் சற்று உயர்ந்து இருப்பினும், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த 2.97 சதவீத பணவீக்கம் என்ற அளவை எட்டவில்லை.

 

2.92 சதவீத பணவீக்கம் என்பது கடந்த ஆறு மாதத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் முடிவில் 0.30 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்கம்(Food Inflation), தற்போது 1.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது போல காய்கறிகளின் விலை 2.87 சதவீதமும், மீன் மற்றும் மாமிசம் 7.55 சதவீதமாகவும் மற்றும் பால் பொருட்கள் 0.42 சதவீதமாகவும் இருந்துள்ளது.

 

பழங்கள், சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளின் விலை கடந்த மாதம் குறைந்துள்ளது. எரிபொருட்களின்(Fuel & Light) பணவீக்கம் 2.42 சதவீதத்திலிருந்து 2.56 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டு மனை, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை விலை குறைந்து காணப்படுகிறது.

 

மார்ச் மாதத்தில் கிராமப்புறங்களில் காணப்பட்ட 1.80 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த மாதத்தில் 1.87 சதவீதமாக(Rural Inflation) உயர்ந்துள்ளது. இது போல நகர்ப்புற(Urban) பணவீக்க விகிதம் 3.43 சதவீதத்திலிருந்து 4.23 சதவீதமாக அதிகரித்து இருந்தது.

 

பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) மதிப்பீட்டின் படி, ஏப்ரல் மாத பணவீக்கம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. இதனால் அடுத்து வரும் காலங்களிலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

The Story of ITC – Lead by Yogesh Chander Deveshwar

 

கடந்த சனிக்கிழமை அன்று(11-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் திரு. யோகேஷ் சந்தர் தேவேஸ்வர் உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய தொழில் உலகில் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு, 1947ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூரில் பிறந்தவர் யோகேஷ் தேவேஸ்வர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

டெல்லி ஐ.ஐ.டி.கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற யோகேஷ், பின்பு அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தொழில் சார்ந்த கல்வியை பயின்றார். 1910ம் வருடம் வில்ஸ்(Wills) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட புகையிலை நிறுவனம் தான் ஐ.டி.சி. ஆரம்ப காலத்தில் இம்பீரியல் புகையிலை நிறுவனம்(Imperial Tobacco Company) என்ற பெயரிலிருந்து இந்திய புகையிலை நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1974ம் காலங்களில் ஐ.டி.சி.(ITC Limited) நிறுவனம் என சுருக்கம் பெற்றது.

 

1968ம் ஆண்டு ஐ.டி.சி. நிறுவனத்தில் இணைந்த யோகேஷ், அடுத்த 15 வருடத்தில் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் முக்கிய பதவி வகித்தார். 1996ம் வருடம் யோகேஷ் தேவேஸ்வர் ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவரானார்(CEO). இவர் இருந்த காலத்தில் புகையிலையை மட்டுமே கொண்டு இயங்கும் நிறுவனம் என விமர்ச்சிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டில் இன்று பெரும்பாலான நுகர்வோர் பொருட்களின் பிராண்டாக ஐ.டி.சி. நிறுவனத்தை மாற்றினார்.

 

புகையிலையை பெரும்பான்மை தொழிலாக இந்த நிறுவனம் கொண்டிருந்தாலும், கடந்த சில வருடங்களாக புகையிலை பங்களிப்பை குறைத்து வருகிறது. நுகர்வோர் துறையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் இந்த நிறுவனத்தின் சேவை வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.

 

உணவுப்பொருட்கள், அழகு பொருட்கள், அலுவலகம் சார்ந்த பொருட்கள், தீப்பெட்டி, ஊதுவத்தி, பேப்பர் சார்ந்த பொருட்கள் என தனது தொழிலை பன்முகத்தன்மையாக உருவாக்கினார் யோகேஷ். இந்திய ஹோட்டல் துறையில் 90க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளை கொண்டு நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஐ.டி.சி. நிறுவனம். தொழில்நுட்ப துறையிலும் இதன் பங்கு முக்கியத்துவமாக அமைகிறது.

 

ஆசிர்வாத்(Aashirvaad), சன் பீஸ்ட், கேண்டி மேன், பியாமா வில்ஸ்(Fiama Di Wills), லைப் ஸ்டைல், கிளாஸ் மேட்(Classmate) நோட்டு புத்தகங்கள், மங்கள் தீப்(Mangaldeep), பார்க் ஹோட்டல்கள் என பல பிராண்டுகளில் புரட்சியை ஏற்படுத்தினார். தற்போது ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,65,000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், 26,000க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனம் சமீபமாக விவசாயம் மற்றும் பால் வளம் சார்ந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவிலும் பொறுப்பு வகிக்கும் யோகேஷ் தேவேஸ்வர்(YC Deveshwar), 2013ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த நிறுவன தலைவர்களில் 7வது இடத்தை பிடித்தார். 2011ம் ஆண்டு அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்திய கார்ப்பரேட் தொழிலில் நீண்டகாலம் தலைவர் பதவி வகித்தவர்களில் தற்போது இவரே முதலிடத்தில் உள்ளார்.

 

இன்று(13-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளும் வெளிவர உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு – எச்சரிக்கை மணியா ?

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு – எச்சரிக்கை மணியா ?

Alert: India’s increasing Trade Deficit – 10.89 Billion US Dollar

 

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவை அரசாங்கம் குறைக்க முனைந்தாலும், உற்பத்தி மற்றும் தேவைக்கான இடைவெளி ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை காட்டிலும், அந்த நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு அதிகமாக காணப்பட்டால், அதுவே நாட்டின் வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு கடன் சுமையாகவே நாம் பார்க்கலாம். வர்த்தக பற்றாக்குறையின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரிக்காமல் இருக்க, இறக்குமதி அளவை நாம் குறைத்தாக வேண்டும். இல்லையெனில், நாட்டின் ஏற்றுமதி அளவை அதிகரிக்க தயாராக வேண்டும்.

 

சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க-சீன வர்த்தக போருக்கான காரணமே, அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தான். இதன் காரணமாகவே சீன பொருட்களுக்கு அமெரிக்கா(US-China Trade War) இரு மடங்கிற்கு மேல் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது. நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மார்ச் மாத முடிவில் 10.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

 

நடப்பு வருட பிப்ரவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 9.60 பில்லியன் டாலராகவும், இதற்கு முந்தைய வருடத்தின் மார்ச் மாதத்தில் 13.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட மார்ச் 2019ம் காலத்தில் ஏற்றுமதியில்(Exports India) 11 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது. இதற்கு ரசாயனங்கள், பொறியியல் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் வளர்ச்சி துணைபுரிந்துள்ளது.

 

இறக்குமதியின் பங்களிப்பு மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் 6.3 பில்லியன் டாலரிலிருந்து மார்ச் மாதத்தில் 8.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியும் மார்ச் மாத காலத்தில் கணிசமாக உயர்ந்து நிகர மதிப்பு அடிப்படையில் 2.97 பில்லியன் டாலராக இருந்தது.

 

கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி(Crude Import) செய்வதற்கான செலவினமும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. 2018-19ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் சுமார் 11,200 கோடி டாலராக இருந்தது. இது இதற்கு முந்தைய வருடத்தில் 8,800 கோடி அமெரிக்க டாலராக இருந்துள்ளது.

 

இந்தியாவின் வர்த்தக பங்காளராக முதல் மூன்று இடங்களில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளது. தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியின் அளவை அரசு குறைக்க, கடந்த சில வருடங்களாக நடவடிக்கை எடுத்து வந்த பின்பும் உள்நாட்டில் தேவைப்பாடு அதிகமாயுள்ளது. தங்க இறக்குமதி அளவை குறைப்பதற்காக தங்க முதலீட்டில் பல்வேறு திட்டங்களும் (Gold ETF, Bond Scheme, Gold Deposit), மாற்றங்களும் கொண்டுவரப்பட்டிருந்தது. இது போல வாகன துறையில் அடுத்து வரவிருக்கும் காலங்களில் மின்சார வாகனங்கள் முக்கியத்துவம் பெறும் காலம் வெகு விரைவில்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்

பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்  

Pledged shares by the Promoters – Reliance Infra, Vodafone

 

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருவது போன்று, நிறுவனங்களின் பங்குகளில் உரிமையாளர் வைத்திருக்கும் பங்கு சதவீதமும் ஒவ்வொரு காலாண்டிலும் பங்குச்சந்தை அமைப்புக்கு தெரிவிக்கப்படும். கடந்த ஜனவரி – மார்ச் 2019ம் காலாண்டில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எஸ்.இ. 500(BSE 500) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஜனவரி-மார்ச் மாத காலத்தில் இவர்களின் பங்கு அடமான விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல்(Reliance Capital) முறையே 22 மற்றும் 15 சதவீத பங்குகள் மார்ச் காலாண்டில் அடமான விகிதத்தை அதிகரித்துள்ளது. இதுவரை ரிலையன்ஸ் இன்ப்ராவின் மொத்த அடமானம் 98 சதவீதம் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் 97 சதவீதமாகும். ஏற்கனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Rcom) நிறுவனம் தனது முழு பங்குகளையும் அடமானம் வைத்து விட்டு, கடனில் தத்தளித்து கொண்டு தற்போது திவால் நிலைக்கு வந்து விட்டது.

 

டிஷ் டிவி(Dish TV) நிறுவனர்களின்  பங்குகள் 94.6 சதவீதம் வரை அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஜீ டிவி(Zee) நிறுவனம் 66 சதவீதமும், எவெரெடி(Eveready) நிறுவனர்கள் 50 சதவீதமும், சன் பார்மா 11 சதவீதமும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் 78 சதவீதம் என்ற அளவிலும் நிறுவனர் பங்குகளை அடமானம் வைத்துள்ளது.

 

இது போல வோடபோன் நிறுவனம் 44 சதவீத பங்குகளை வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அடமானம் செய்துள்ளது. தற்போது வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனத்தை 71 சதவீத பங்களிப்புடன் வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனங்கள் நிர்வாகம் செய்து வருகிறது.

 

கடந்த காலாண்டில் அசோக் லேலாண்ட் நிறுவனமும் 2.3 சதவீதம் என்ற அளவில் பங்குகளை அடமானம் வைத்துள்ளது. இதன் மொத்த நிறுவனர்களின் பங்கு அடமான விகிதம் 6.7 சதவீதமாகும். பியூச்சர் குழுமத்தின் (பிக் பஜார்) பியூச்சர் லைப் ஸ்டைல் நிறுவனம் 23 சதவீத பங்குகளையும், JSW நிறுவனம் 60 சதவீத பங்குகளையும் மற்றும் ஜே.கே. டயர் 28 சதவீதமும் உரிமையாளர்களின் பங்குகளை அடமானம் செய்துள்ளது.

 

பொதுவாக நிறுவனர்களின் நிறுவனர்கள் தங்கள் சொந்த தேவை அல்லது வணிக நோக்கங்களுக்காக, தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை மற்றொரு நிறுவனத்திடமோ அல்லது   வங்கிகளிடமோ அடமானம் வைப்பதுண்டு. இது ஒரு நீண்ட கால முதலீட்டாளருக்கு ஆரோக்கியமான விஷயமல்ல. நல்ல முதலீட்டாளர்கள், நிறுவனர்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்வதில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மீண்டும் வலுக்கும் சீன-அமெரிக்க வர்த்தக போர்

மீண்டும் வலுக்கும் சீன-அமெரிக்க வர்த்தக போர்

China-US Trade war to Reinforce 2019

 

உலக பொருளாதாரத்தில் கடந்த ஒரு வருடமாக பேசப்பட்டு வந்த விஷயம் அமெரிக்க-சீன வர்த்தக போர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இறக்குமதி வரியை உயர்த்தப்படவுள்ள நிலையில், இதன் மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்து வருகிற இந்த வர்த்தக போரில், ஏற்கனவே அமெரிக்காவுக்கான சீன பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு கடந்த சில காலங்களாக வெகுவாக குறைந்துள்ளது. டிரம்ப்(Donald Trump) முடிவினால், வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளுக்கிடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படலாம் என சீன அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் வரி உயர்வு(Import Tax) கொள்கை மற்ற நாடுகளை மட்டுமில்லாமல், தங்களது நாட்டிலும் அமெரிக்க மக்கள் விலை உயர்வை சந்திக்கலாம். இதன் காரணமாக அமெரிக்க நாட்டிலும், பெரும்பாலானவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரி உயர்த்தப்படும் நிலையில், சீன யுவான் மதிப்பு மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகின்றன.

 

2018ம் ஆண்டில், அமெரிக்காவின் 3வது பெரிய ஏற்றுமதி(Largest Export) நாடாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் அமெரிக்காவிலிருந்து சீன நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது இதற்கு முந்தைய வருடத்தை விட 7 சதவீத குறைவாகும்.

 

இது போல அமெரிக்காவின் மிக பெரிய இறக்குமதி(Largest Import) நாடாக சீன இருந்து வருகிறது. 2018ம் ஆண்டில் சீன நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தகம் சுமார் 540 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 6.7 சதவீத வளர்ச்சியாகும்.

 

சீனாவுடனான அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீன நாட்டில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டில்(FDI) அமெரிக்காவின் பங்கு சுமார் 107 பில்லியன் டாலர்களாகும் (2017ம் ஆண்டு இறுதியின் படி). சீனாவின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது பருத்தி, தேயிலை, அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் சோயா பீன்ஸ்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

Foreign Portfolio Investors have so far invested Rs. 12,000 Crore in the Current Month – April 2019

 

நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாதங்களாக அவர்களின் முதலீட்டு தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

நம் நாட்டில் உள்ள கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்குச்சந்தை(Stock Market) இரண்டிலும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 11,180 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். இது போன்று மார்ச் மாதத்தில் 45,980 கோடி ரூபாயும், நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 12,000 கோடி ரூபாயையும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த மூன்று மாதங்களாக உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors -DII) பெரும்பாலும் நிகர விற்பனையையே மேற்கொண்டுள்ளனர். சந்தை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் உள்ளூர் முதலீட்டாளர்களான பரஸ்பர நிதிகள், சந்தையில் கண்ட லாபத்தை வெளியே எடுத்து வருவதாலும் இவர்களது விற்பனை அதிகமாகியுள்ளது.

 

பிப்ரவரி மாதத்தின் முடிவில் அந்நிய முதலீட்டாளர்களின்(Foreign Portfolio Investors) பங்கு முதலீடு ரூ. 13,564 கோடியாகவும், உள்ளூர் முதலீட்டாளரின் நிகர விற்பனை (-565) கோடி ரூபாயாகவும் இருந்து வந்துள்ளது. மார்ச் மாத காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII /FPI) சுமார் 32,370 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், உள்ளூர் முதலீட்டாளர்கள் 13,930 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

தற்போது நாட்டில் தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்கனவே தனது புதிய உச்சத்தை கடந்தாகி விட்டது. தேர்தல் முடிவுக்கு பின் சந்தையில் முதலீடு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும், தற்சமயம் சந்தையின் சிறிய இறக்கத்திலாவது முதலீடு(Equity) செய்வதே சிறந்தது.

 

மே மாதத்தில் தேர்தல் முடிவுக்கு பின், வலுவான ஒரு ஆட்சி அமையும் நிலையில் நமது பங்குச்சந்தை மேலும் புதிய உச்சத்தை காணலாம் என கருதப்படுகிறது. சந்தையை பாதிக்கும் காரணிகளில் உலகளாவிய நிகழ்வுகள் இருந்து வந்தாலும், இப்போது அரசியல் நகர்வுகளும், அதனை அடுத்த புதிய அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் சந்தையின் குறியீடுகளை தீர்மானிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ (இண்டஸ்ட்ரீஸ்) – நான்காம் காலாண்டு முடிவுகள்

தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ (இண்டஸ்ட்ரீஸ்) – நான்காம் காலாண்டு முடிவுகள்

Q4 Results of Reliance Industries Limited(RIL) – Financial year 2018-19

 

ஜியோவின்(JIO) வருகைக்கு பின் இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள முடியாமை, ஐடியா-வோடபோன் இணைப்பு, ஏர்செல் மற்றும் டொகோமோ என்ற நிறுவனங்கள் காணாமல் போனது ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா புரட்சியில் தான். சந்தையில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது 2018-19ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,38,659 கோடியாகவும், செலவினங்கள் 1,17,827 கோடி ரூபாயாகவும் இருந்தது. இயக்க லாபம் 20,832 கோடி ரூபாயாகவும் மற்றும் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாகவும் உள்ளது.

 

இதர வருமானம் என எடுத்து கொண்டால் நான்காம் காலாண்டில் சுமார் 3,215 கோடி ரூபாய் வந்துள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் இருந்த அதிகபட்ச அளவாகும். வரிக்கு முந்தைய வருமானமாக 13,858 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது.

 

கடந்த மார்ச் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,16,915 கோடி ரூபாயும், இதர வருமானம் 2,203 கோடி ரூபாயாகும். வரிக்கு முந்தைய வருமானம் ரூ. 13,254 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 9,438 கோடி. தற்போதைய காலாண்டு முடிவுகளை இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் 18.60 சதவீத வளர்ச்சியும், நிகர லாபம் 9.80 சதவீதமும் உயர்ந்துள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Capitalization) சுமார் 8,78,519 கோடி ரூபாய். ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் 65 சதவீதம் உயர்ந்து நான்காம் காலாண்டில்(Fourth Quarterly results) 840 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய வருடத்தின் சொல்லப்பட்ட காலாண்டில் ஜியோவின் நிகர லாபம்(Net Profit) 510 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.

 

சில்லறை வணிகத்தில் இதன் ஆண்டு வருவாய் 88 சதவீதம் அதிகரித்து ரூ. 1,30,566 கோடியாக இருந்தது. உலகளவில் மிகவும் குறுகிய காலத்தில் 30 கோடிக்கும்(300 Million Subscribers) மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. இதன் வாடிக்கையாளர்களின் சராசரி மாத தரவு பயன்பாடு(Data usage) 10 ஜி.பி. க்கு மேலாக உள்ளது. இருப்பினும் ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) கடந்த காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறிது சரிந்துள்ளது.

 

கடந்த சில காலங்களாக முக்கிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் சாதகமாக இல்லை. சில்லறை வணிகம்(Retail), தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாயை ஈட்டிய போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பில் இதன் வருவாய் குறைந்துள்ளது.

நிறுவனத்தின் கடன் நிலுவை(Debt) ரூ. 2.80 லட்சம் கோடிக்கும் மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன் தொகை 2.17 லட்சம் கோடியாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com