நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்
Foreign Portfolio Investors have so far invested Rs. 12,000 Crore in the Current Month – April 2019
நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாதங்களாக அவர்களின் முதலீட்டு தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
நம் நாட்டில் உள்ள கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்குச்சந்தை(Stock Market) இரண்டிலும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 11,180 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். இது போன்று மார்ச் மாதத்தில் 45,980 கோடி ரூபாயும், நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 12,000 கோடி ரூபாயையும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த மூன்று மாதங்களாக உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors -DII) பெரும்பாலும் நிகர விற்பனையையே மேற்கொண்டுள்ளனர். சந்தை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் உள்ளூர் முதலீட்டாளர்களான பரஸ்பர நிதிகள், சந்தையில் கண்ட லாபத்தை வெளியே எடுத்து வருவதாலும் இவர்களது விற்பனை அதிகமாகியுள்ளது.
பிப்ரவரி மாதத்தின் முடிவில் அந்நிய முதலீட்டாளர்களின்(Foreign Portfolio Investors) பங்கு முதலீடு ரூ. 13,564 கோடியாகவும், உள்ளூர் முதலீட்டாளரின் நிகர விற்பனை (-565) கோடி ரூபாயாகவும் இருந்து வந்துள்ளது. மார்ச் மாத காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII /FPI) சுமார் 32,370 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், உள்ளூர் முதலீட்டாளர்கள் 13,930 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.
தற்போது நாட்டில் தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்கனவே தனது புதிய உச்சத்தை கடந்தாகி விட்டது. தேர்தல் முடிவுக்கு பின் சந்தையில் முதலீடு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும், தற்சமயம் சந்தையின் சிறிய இறக்கத்திலாவது முதலீடு(Equity) செய்வதே சிறந்தது.
மே மாதத்தில் தேர்தல் முடிவுக்கு பின், வலுவான ஒரு ஆட்சி அமையும் நிலையில் நமது பங்குச்சந்தை மேலும் புதிய உச்சத்தை காணலாம் என கருதப்படுகிறது. சந்தையை பாதிக்கும் காரணிகளில் உலகளாவிய நிகழ்வுகள் இருந்து வந்தாலும், இப்போது அரசியல் நகர்வுகளும், அதனை அடுத்த புதிய அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் சந்தையின் குறியீடுகளை தீர்மானிக்கின்றன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை