Category Archives: Think Invest

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

Indian Stock Market Ups and Downs – What can happen this year 2019 ?

 

கடந்த 2014ம் ஆண்டில் ஏற்றமடைய துவங்கிய சந்தை 2017ம் வருடம் சந்தையின் உச்சத்தில் இருந்தது. கடந்த ஒரு வருடமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்தில் மட்டுமே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை நோக்கி சந்தையின் போக்கு சென்று கொண்டிருந்தாலும், கடந்த வரலாற்றில் அரசியலை சார்ந்து சந்தை பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட் தாக்கல் மற்றும் தேர்தல் காலங்கள் சிறிய ஏற்ற இறக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தையில் வெகுவாக இல்லை எனலாம். நடப்பு நிதி ஆண்டில் சந்தையின் ஏற்ற இறக்கம் பெரும்பாலும் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை(Company Earnings) மற்றும் சந்தை அதிக மதிப்பில்(Market Valuation) வர்த்தகமாகி கொண்டிருந்தது தான் காரணமாக உள்ளது.

 

இனி அடுத்து வரும் காலங்களில் சந்தை எப்படி இருக்கலாம் என கணிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் வரலாற்று தகவல்கள் அதற்கான வாய்ப்பை நமக்கு எப்போதும் தந்து கொண்டு தான் இருந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், இங்கிலாந்து நாட்டின் பிரெக்ஸிட்(Brexit) பிரச்னை மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் சந்தையில் பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கிறது.

 

சந்தையில் முதலீடு செய்ய பல்வேறு வகையான அடிப்படை பகுப்பாய்வுகள் இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையின் விலையை அறிந்து கொள்ள கீழ்கண்ட நான்கு காரணிகள்(Four Factors) நமக்கு உதவும். இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

  • Price to Earnings(P/E)

  • Price to Book Value (P/B)

  • G-sec X PE (Price to Earnings)

  • Market Cap to GDP

 

Price to Earnings மற்றும் Price to Book Value பற்றி நமது வர்த்தக மதுரை தளத்தில் நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இவை இரண்டும் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Analysis factors) சார்ந்தவை.

 

பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கல்வி உங்களுக்கு இலவசமாக வேண்டுமா ?

 

சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கின் விலையையோ அல்லது ஒட்டுமொத்த சந்தையின் விலையை அதனதன் வருவாயுடன் ஒப்பிட்டு பார்த்தல் Price to Earnings எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் அல்லது சந்தையின் விலையுடன் புத்தக மதிப்பை கொண்டு ஒப்பிட்டு ஆராய்தல் Price to Book Value ஆகும். கீழ்காணும் தேசிய பங்குச்சந்தையின் இணைய தளத்தில் இதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சந்தையில் பி.இ. மற்றும் பி.பி. விகிதம் அதிகமாக இருக்கும் சமயத்தில், ஈவு தொகை(Dividend Yield) குறைவாக இருக்கும்.

 

Nifty PE, PB, Dividend Yield Valuation – NSE India

 

மூன்றாவதாக அரசாங்க பத்திரங்கள்(Govt. Securities) வழங்கும் வட்டி விகிதங்களை, PE விகிதத்துடன் பெருக்கி விட்டு அதன் மதிப்பை சார்ந்து பங்குச்சந்தை நகர்வுகளை முடிவெடுப்பது. அரசாங்க பத்திரங்கள் பொதுவாக பத்து வருட காலத்தில்(10 year Bond Yield %)  முதிர்வடையும் திட்டத்திற்கு வட்டி விகிதங்களை அறிவிக்கும். இதனை சந்தையின் பி.இ. விகிதத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது, நமக்கு தற்போதைய சந்தையின் நிலை தெரிய வரும்.

 

Valuation = G-Sec X PE

 

நான்காவதாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) எண்களோடு சந்தையின் மதிப்பை(Market Capitalization) ஒப்பிட்டு கொள்வது ஒரு மதிப்பீடு அம்சமாகும். கடந்த பத்து வருட காலத்தில் பங்குச்சந்தையின் மதிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சில காலங்களில் சந்தையின் மதிப்பு மிக அதிகமாகவும், அதே வேளையில் பல சமயங்களில் சந்தை தள்ளுபடி விலையில் அதன் மதிப்பை கொண்டிருந்தது.

 

சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் சந்தையின் மதிப்பு ரூ. 156 லட்சம் கோடியாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 162 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, உள்நாட்டு உற்பத்தியில் சந்தை மதிப்பு 4 சதவீத தள்ளுபடியில் மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2007ல் சந்தை மதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக பின்னர் பெரிய வீழ்ச்சியை கண்டது நினைவிருக்கலாம். பின்னாளில் மார்ச் 2009ம் வருட காலத்தில் சந்தை 39 சதவீத தள்ளுபடியில் கிடைத்ததும், அந்த நேரத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று லட்சங்களையும், கோடிகளையும் குவித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

 

தற்போது 2019ம் வருட காலத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 186 லட்சம் கோடியாகவும், சந்தை மதிப்பு 140 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(Gross Domestic Product) சந்தை மதிப்பு 25 சதவீத தள்ளுபடியில் கிடைத்திருப்பதை காட்டுகிறது. சந்தையின் மதிப்பு எப்போதெல்லாம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதோ அப்போது தான் முதலீட்டாளராக நாம் முதலீடு செய்ய வேண்டிய காலமிது.

 

சந்தை இன்னும் இறக்கத்தை காணலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தற்போது சந்தை தள்ளுபடியில் காணப்படுவதால் பங்குகளை வாங்கி வைப்பதற்கான காலமாகவே இன்று பார்க்கப்படுகிறது. சந்தை மேலும் இறக்கத்தில் சென்றாலும், அது முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே நாம் பார்க்க வேண்டும். இது கடந்த கால புள்ளிவிவர வரலாறு, எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியாது. நீண்டகாலத்தில் பங்குச்சந்தை நல்ல வருமானத்தை தரும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

Become a Millionaire / Crorepati with a monthly investment of 1444 rupees in SIP

 

சிலருக்கு செல்வம் சேர்ப்பது ஒரு கலையாக இருந்தாலும், பலருக்கு அது ஒரு எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. செல்வம் சேர்ப்பதின் முதல் ரகசியமே சரியான பட்ஜெட் திட்டமிடல்(Budget Planning) தான். நாம் தினசரி மேற்கொள்ளும் வரவு-செலவுகளை எழுதி வைத்து பழக்கப்படுத்தினாலே நமக்கான செல்வ மகள் தானாக வருவாள். கூட்டு குடும்பத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கூட்டு வட்டியின் பலனை நீங்கள் அனுபவித்தது உண்டா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகின் எட்டாவது அதிசயம், ‘கூட்டு வட்டி (Power of Compounding)’ என்றார் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஏழு அதிசயங்களை நாம் வரலாற்றில் அவ்வப்போது மாற்றி கொண்டாலும், இன்றும் மாறாதது கூட்டு வட்டியின் ரகசியமே. கூட்டு வட்டியின்(Compound Interest) பலனை அறிய நாம் புத்தகங்கள் எதனையும் வாங்கி படிக்க வேண்டாம். சிறு துளி பெருவெள்ளம் போல, நமது பாரம்பரிய அஞ்சலக சேமிப்பு, மாத சீட்டு கட்டும் முறை, பி.எப்.(Provident Fund) தொகையினை சொல்லலாம்.

 

நாம் சேமிக்கும் மாதாந்திர சீட்டு அல்லது பி.எப். தொகையை நாம் உற்று நோக்கினால் அதற்கான பலன் நமக்கு தெரிய வரும். நாம் சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் பின்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான தொகையை நமக்கு கொடுத்திருக்கும். இது கூட்டு வட்டியின் பலனே இன்றி வேறு எதுவுமில்லை. இந்த கூட்டு வட்டியின் பலத்தை நாம் முழுவதுமாக அறிய அல்லது வாழ்நாள் முழுவதும் இதன் பலனை அனுபவிக்க பல முதலீட்டு சாதனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான சாதனம் எனில், அது பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) தான்.

 

தங்கம் மற்றும் நிலத்தில் நமது முதலீடுகள் இருப்பினும் நாம் அவற்றில் ஒவ்வொரு மாதமும் அல்லது நம்மிடம் உள்ள சிறு தொகைக்கு வாங்கி வைக்க முடியாது. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நாம் முதலீடு செய்யலாம். பொதுவாக செல்வம் சேர்ப்பதற்கு தொடர்ச்சியான முதலீடு(Regular Investing) அவசியமாகும். நாம் முதலீடு செய்யும் பணம் சிறு தொகையாக இருப்பினும், தொடர் முதலீடு நமக்கான செல்வத்தை சேர்த்து தரும்.

 

பங்குச்சந்தையில் தொடர் முதலீடு நீண்ட காலத்தில் பெரும் செல்வதை கொடுக்கும். அதே வேளையில் பங்குச்சந்தை போன்ற முதலீட்டில் அடிப்படை நிதி கல்வி அவசியமாகும்(Stock Market Analysis). ஏனென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் குறுகிய காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. இதற்கு மாற்றாக நாம் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம். பங்குச்சந்தையை பற்றிய நிதி கல்வியை பெற முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் பங்குச்சந்தை போன்ற நீண்ட கால கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.

 

உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை பெற வேண்டுமென்றால் உங்களுக்கான கால அளவும்(Investment Period), முதலீடு செய்வதற்கான பணமும்(Minimum Investment) முக்கியம். உங்களுக்கு ஐந்து வருடங்களில் ரூ. 1 கோடி வேண்டுமென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,22,444 பணத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தாக வேண்டும். இதன் மூலம் 12 சதவீத வட்டி வருமானத்தை கொடுக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ரூ. 1.06 கோடி தொகை கிடைக்கும். இதுவே 15 சதவீத வட்டி எனும் போது, நீங்கள் மாதாமாதம் ரூ. 1,12,899 ஐ அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கான ஒரு கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும்.

 

மாதாமாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் முதலீடா என மலைப்பாக இருக்கிறதா ?

 

இன்றும், இது போன்ற முதலீட்டு தொகையை சிலர் சாத்தியமாக்கி பயனடைந்து வருகின்றனர். சரி வாருங்கள், சிறிய தொகையை கொண்டு பெரிய விஷயங்களை செய்து பார்க்கலாம். உங்களுக்கு தேவையான ஒரு கோடி ரூபாய் இலக்கை நீங்கள் விரைவாக அடைய வேண்டுமெனில், உங்களுக்கான மாத முதலீடு அதிகமாக தான் இருக்கும். அதற்கு பதிலாக, மாதம் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்து விட்டு, இலக்கிற்கான காலத்தை நீட்டிக்கலாம்(Time). இதன் வாயிலாக நமக்கான நிதி இலக்கை எளிமையாக பெறலாம்.

 

மாதாமாதம் ரூ.36,335 ஐ அடுத்த பத்து வருடங்களுக்கு சேமிக்கும் பட்சத்தில் நாம் ஒரு கோடி ரூபாய் இலக்கை அடையலாம். இல்லையெனில், 20 வருடங்களுக்கு மாதம் ரூ.6,679/- ஐ முதலீடு(Systematic Investment Plan -SIP)  செய்தாலும் அதன் பலனை பெறலாம். இதனை விட ஒரு எளிமையான முறை உள்ளது, இது ஒரு வெற்றி பெற்றவர்களின் முதலீட்டு முறை என்றும் கூறலாம். அதாவது மாதாமாதம் ரூ.1,444 ஐ நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது தான். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக (48 ரூபாய்) நீங்கள் முதலீடு செய்ய பழகும் போது, 30 வருடங்களில் உங்கள் கனவு இலக்கு சாத்தியமாகும்.

 

ஒரு முறை முதலீடாக(One Time Investment) 1,50,000 ரூபாயை முதலீடு செய்து விட்டு, அடுத்த 30 வருடங்களுக்கு காத்திருக்கும் பட்சத்தில், 15 சதவீத வட்டி வருமானத்தில் உங்களுக்கான ஒரு கோடி ரூபாயை பெறலாம். முப்பது வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு (Present Value of Future Cash) எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா ?

 

30 வருடங்களுக்கு பின்பு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாய், இன்றைய சராசரி பணவீக்கமாக 5 சதவீதம் என எடுத்து கொண்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 23,13,774. பரஸ்பர நிதி திட்டங்களில் இன்றும் இது போன்ற முதலீட்டு வருமானம் சாத்தியமாக தான் இருக்கிறது. ஏன் மற்ற முதலீடுகளில் கிடைப்பதில்லையா என கேட்கலாம். நிலம், தங்கம் போன்ற முதலீடுகளில் நாம் ஏற்ற-இறக்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு எப்போதும் கிடைப்பதில்லை. ஆனால் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் அந்த வாய்ப்பு ஒவ்வொரு காலத்திலும் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தில் வருமானம் கடந்த 20 வருடங்களாக வங்கி வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது எனலாம். தங்கத்தின் விலை அதிகரிப்பது டாலர் மதிப்பு உயர்வதால் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணவீக்கம் குறைந்து வருவதால் வங்கி வைப்பு நிதிகள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் போதுமானதாக இருப்பதில்லை.

 

பரஸ்பர நிதி திட்டங்களில் மாதம் ரூ. 290 ஐ முதலீடு செய்து 30 வருடங்களில் 20 லட்ச ரூபாயை பெறலாம். இது போன்று, மாதாமாதம் 722 /- ரூபாயை முதலீடு செய்து அடுத்த 30 வருடத்தின் முடிவில் 15 சதவீத வட்டி வருமானத்தில் ரூ. 50 லட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் நீண்ட காலத்தில் 15 சதவீத வட்டி என்பது சராசரியாக பெறக்கூடிய வருமானமாகும்.

 

அப்புறம் என்ன, உங்கள் இலக்குகளுக்காக, உங்கள் குழந்தைகளின் தேவைக்காக இப்போதே ஒரு சிறு தொகையை முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் – கூட்டு வட்டியின் பலனை பெறுங்கள் !

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

பங்குச்சந்தை பரிந்துரைகளா, அழைப்புகளா ? – எச்சரிக்கை தேவை

பங்குச்சந்தை பரிந்துரைகளா, அழைப்புகளா ? – எச்சரிக்கை தேவை

The Ugly truth about Stock Market recommendations

 

இந்த கட்டுரை பங்குச்சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்கானது மட்டுமல்ல, சந்தையில் கடந்த சில காலங்களாக இருக்கும் தின வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தான். பங்குச்சந்தை என்பது ஒரு தொழில்(Share Market is a Business) சார்ந்த விஷயம் என்று நாம் ஏற்கனவே சொல்லி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சந்தையில் நடப்பது என்னவென்று ஆராய்ந்தால், சந்தையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பங்குச்சந்தை அதலபாதாளத்திற்கு சென்று விடுமா என சந்தையில் புதிதாக உள்ளவர்கள் பயம் கொள்ள வேண்டாம். இது பங்குகளின் பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் பங்குச்சந்தை சார்ந்து வரும் அழைப்புகளின்(Trade recommending calls) எச்சரிக்கை மணி. பங்குச்சந்தையில் தின வர்த்தகர்கள், குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கென தனித்தனி அடையாளங்கள் உண்டு. அவர்களுக்கென்று ஆய்வும் வேறுபடுகிறது (அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis)). அல்காரித வர்த்தகம்(Algorithm Trading) மற்றும் அதிக அதிர்வெண் வர்த்தகம்(High Frequency Trading -HFT) மேற்கொண்டிருக்கும் காலம் இது.

 

நீங்கள் ஒரு பங்கினை வாங்க அதற்கான கட்டளையை இயக்கும் முன்(Ordering), இந்த அதிர்வெண் மென்பொருள் பயன்பாடுகள் தங்களுக்கான கட்டளையை முடித்து விட்டு, உங்களை சந்தையின் எதிர்திசையில் பயணிக்க வைக்கும், முடிவில் உங்களுக்கு ஏற்படுவது நஷ்டம் தான். இந்த தாக்கம் தின வர்த்தகர்களுக்கு மட்டுமில்லாமல், சில சமயங்களில் குறுகிய கால வர்த்தகர்களையும் பாதிக்கும். சந்தையில் உள்ள பங்குகள் ஒரே நாளில் 20 சதவீதத்திற்கு மேல் ஏறுவதும், இறங்குவதும் இதன் காரணமாகவே.

 

சில்லறை முதலீட்டாளர்களை(Retail Investors) தவிர்த்து, மனித தொடர்பு இல்லாத கணினி சார்ந்த தானியங்கி செயல்பாடுகள் பங்குச்சந்தையில் இருப்பதை யாரும் மறக்க வேண்டாம். இது போன்ற காலங்களில் மற்றுமொரு வருந்தத்தக்க விஷயம் சந்தையில் ஈடுபடுபவர்கள் ஊடக பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளை ஏற்பது தான். நீங்கள் ஒரு தின வர்த்தகராக இருக்கலாம் அல்லது முதலீட்டாளராக சந்தையில் வளம் வரலாம். சந்தையில் உங்களுக்கான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் இருக்கலாம். அதனை நன்றாக அறிந்து கொண்டு, உங்களுக்கான முதலீட்டு தாரக மந்திரங்களை(Trading and Investment Rules) உருவாக்கினால் போதும். நீண்ட காலத்தில் சந்தை வர்தகருக்கும், முதலீட்டாளருக்கும் நன்மை அளிக்கும்.

 

இன்று ஊடகங்களில் பங்குச்சந்தை சார்ந்த பங்கு பரிந்துரைகள்(Buy or Sell) ஒரு பக்கம் இருந்து வந்தாலும், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அவ்வப்போது அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். ‘நாங்கள் உங்களுக்கு தினமும் ரூ. 2000 முதல் 5000 ரூபாய் வரை பங்குச்சந்தையில் சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறோம். இதற்கான கட்டணம் மாதம் ரூ. 5000/- மட்டுமே. நீங்கள் மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை (20 வர்த்தக நாட்கள் X ரூ.5000) சம்பாதிக்கலாம் ‘ என்று சில அழைப்புகள் வரும்.

 

மற்றொரு அழைப்பு, ‘ பங்குச்சந்தையில் நாங்கள் கடந்த பல வருடங்களாக பங்குகளை பரிந்துரைத்து வருகிறோம். எங்கள் மூலம் பல முதலீட்டாளர்கள் 100 சதவீதத்திற்கு மேல் வருமானம் பெற்றுள்ளனர். நீங்கள் எங்களுக்காக எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். உங்களுக்கான லாபத்தில் சில சதவீதம் மாதத்திற்கு ஒரு முறை அளித்தால் போதும் (Scam)‘ என வருவதுண்டு.

 

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் வருவாய்(Business Earnings) தன்மையை குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ கணிக்கலாம். ஆனால் ஒரு பங்கின் விலையை உங்களால் எதிர்காலத்தில் கணிப்பது சாத்தியமல்ல. பங்குச்சந்தையில் உள்ள சில வல்லுநர்கள் நிறுவனத்தின் கடந்த கால வருவாயை கொண்டு, எதிர்காலத்தில் இதன் வருமானம் இவ்வாறு இருக்கலாம் மற்றும் அடுத்த ஒரு வருடத்திற்கான பங்கு விலை இலக்கு இவ்வளவு என்று சொன்னாலும், அது அவருடைய சொந்த மதிப்பீடு தான். சொல்லப்பட்ட பங்கின் இலக்கு எதிர்காலத்தில் வெற்றி பெறலாம், தோல்வியும் உண்டு. அதனால் தான் ஆராயப்பட்ட பங்குகளுக்கான இலக்கு விலையை(Target Price) நிர்ணயிக்கும் போது, அந்த பங்கிற்கான இழப்பு நிறுத்ததையும்(Stop loss) அவர்கள் சொல்வதுண்டு. ஏனெனில் பங்குச்சந்தையில் யாராலும் விலையை எதிர்காலத்தில் கணிக்க முடியாது. பத்து வருடங்களுக்கு முன்பு 50 ரூபாய் இருந்த ஒரு பங்கின் விலை இன்று 5000 ரூபாயாக இருக்கலாம். அதே வேளையில் ரூ. 3000 விலையை கொண்ட ஒரு பங்கு இன்று வெறும் 2 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டிருப்பதும் பங்குச்சந்தையில் இயல்பது தான்.

 

பங்குச்சந்தையில் இலக்கு விலைகளை கணிப்பதை விட்டு விட்டு, ஒரு நிறுவனத்தின் அல்லது துறையின் ஆய்வுகளை நாம் மேற்கொள்ளலாம்.  பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்திற்கான காரணங்களை நாம் கண்டறியலாம். அதனை நாம் மேற்கொள்ளாமல் பங்குச்சந்தை பரிந்துரைகள்(Stock Recommendations) மற்றும் அழைப்புகளின் பின்னால் ஓடினால் கோடிகளை கொட்டி கொடுப்பதற்கான தீனி நாம் தான். பங்குச்சந்தையில் யாவரும் சம்பாதிக்கலாம். அதற்கு தேவை சிறு முதலீடும், பங்குச்சந்தை பற்றிய அடிப்படை கல்வியும் தான்.

 

ஒருவர் தனது பட்டப்படிப்பில் இன்ஜினியரிங்(Engineering Graduate) படிக்க முனைகிறார் என வைத்து கொள்வோம். இன்ஜினியரிங் படிப்பிற்கான மொத்த செலவு என பார்க்கும் போது, 5-10 லட்சம் ரூபாய் வரை ஆகும். இதற்கான காலம் 4 வருடங்கள். தனது இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த ஒரு இளைஞர் அதனை தகுதியாக கொண்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிவார். ஆரம்பத்தில் அவருக்கு தொழில் அனுபவம் இல்லாததால் குறைந்த அல்லது மிதமான சம்பளத்தில் வேலை செய்வார். பின்பு சில காலங்களுக்கு பிறகு அவரது அனுபவமும், வருமானமும் அதிகரிக்கும். இது போன்று தான் மற்ற படிப்புகளுக்கும். உங்களுக்கான வருமானம் அதிகம் தேவையென்றால், அதற்கான படிப்பு செலவும், படிக்கும் காலமும் அதிகமாக இருக்கலாம். மருத்துவர்களின் மாத வருமானம் கணக்காளர்களின் வருமானத்திலிருந்து வேறுபடுகிறது. அதே போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பணிபுரிபவர்களின் சம்பளம் விற்பனையாளர்களிடம் இருந்து வேறுபடும். தொழிலாளர்களின் வருமானம், தொழில் புரிபவர்களின் லாபத்திற்கு ஈடாகாது.

 

இப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் நாம் எந்த அடிப்படை அறிவையும் பெறாமல் குறுகிய காலத்தில் நமது சம்பளத்தை விட பல மடங்கு லாபத்தை எதிர்பார்ப்பது எவ்வாறு சாத்தியம் ? பங்குச்சந்தையில் வருமானம் பார்க்க அதற்கான விலை மதிப்பும் மற்றும் காலமும் மிகவும் அவசியம். அனுபவமே வெற்றியாளர்களை உருவாக்கும். வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களில் இருந்து நாம் கற்க முயன்றாலும், நமக்கான வெற்றி பாதை தெளிவாகும்.

 

பங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகள் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருந்தால், ஏன் இன்று பல தொழிலதிபர்கள் கோடிகளை முதலீடு செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு நிறுவனங்களை இயக்க வேண்டும், பங்குச்சந்தையிலே அவர்கள் சம்பாதிக்கலாமே ?  பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், அது மற்ற தொழில்களை போன்று தான். சந்தை இறக்கத்தில் போர்ட்போலியோ(Portfolio Management Services -PMS) என்று சொல்லப்படும் முதலீட்டு சேவையை கொண்டிருப்போருக்கும் அவர்களது முதலீட்டு மதிப்பில் சில நேரங்களில் சறுக்கல் ஏற்படலாம், அப்படியிருக்கும் போது நாம் எம்மாத்திரம். நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரும் முதலீடு பங்குச்சந்தை. இது போன்று ஏமாற்று விஷயங்களில் பங்குச்சந்தை அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் நாம் ஒரு தின வர்த்தகராக, முதலீட்டாளராக எப்படி செயல்படுகிறோம் என்பது தான் அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான சரியான விலையை நாம் பெறலாம். ஆனால் அதனை விற்பதற்கான இலக்கு விலை ஒரு முதலீட்டாளரை சார்ந்தது, பங்கு பரிந்துரைகள் மற்றும் அழைப்புகளின் பின்னால் அல்ல !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்

நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா  ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்

The Eight Strategies to get Financial Freedom fast

 

இன்றைய நவீனத்துவ உலகில் பொருளாதார வாழ்க்கை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. பணம் நமக்கு அதிகம் தேவையில்லை என்று சொன்னாலும், தொழில் வளர்ச்சியும், அதனை சார்ந்த தேவைகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதனால் தான், ‘ சிறு துளி பெருவெள்ளம் ‘ என்ற வாசகம் இன்றும் பிரகாசமாகவே உள்ளது.

 

எளிய முறை வாழ்க்கையோ அல்லது நாம் விரும்பிய வாழ்க்கை முறையோ, எதுவென்றாலும் நாம் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளோம். அப்படி இருக்கும் போது, பொருளாதார தேவைக்காக நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைக்கின்றனர். பணம் தேவை தான், அதற்காக வாழ்நாள் முழுவதும் பணத்தின் பின்னால் செல்வதில் என்ன மகிழ்ச்சி உள்ளது ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை சந்தோசமாக செலவழிப்பதற்கான காலம் இருந்தால் மட்டுமே, நாம் சேர்த்த பணத்திற்கான பயன் உண்டு. தொழில்நுட்பம் மேம்பட்டு கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மில் சிலர் இளமை காலத்தில் ஓய்வு பெறுவது பற்றியும் (Early Retirement Plan), பொருளாதார சுதந்திரத்தை அடைய முயற்சிப்பதும்(Financial Freedom) நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான சாத்தியம் குறைவு தான் என்று சொல்ல வந்தாலும், இது போன்ற சிந்தனைகள் ஒரு ஆரோக்கியமான விஷயமே.

 

ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) வேண்டாம் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்று தங்களது தேவைக்கு அதனையே சார்ந்துள்ளனர். இதனை போன்றே நிதி சுதந்திரம் பெறுவதும் ஒரு தேவையே. நிதி சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம்(Financially Free) என்பது நாம் நமக்கான தேவைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்காமல், அதற்கான போதுமான செல்வத்தை முன்கூட்டியே சேர்த்து வைத்து கொள்வது. இதன் மூலம் நாம் நமது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படலாம்.

 

நிதி சுதந்திரத்தை பெற இன்று பல தகவல்கள் இணையத்தில் கிடைத்தாலும், வெற்றி பெற்றவர்கள் சிலரின் அனுபவங்கள், தோல்விகள் ஆகியவை நம்மை எளிதாக நிதி சுதந்திரம் பெற துணைபுரியும். அப்படியான ஒரு நபரின் சந்திப்பையும், அவரது வார்த்தைகளையும் தான், நான் சில நாட்களுக்கு முன் பெற்றிருந்தேன். கனடா நாட்டை சேர்ந்த ஹார்வ் எக்கர் (Harv Eker) ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர், தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர். ‘ Secrets of the Millionaire Mind ‘ என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரும் ஹார்வ் எக்கர் ஆவார். அவரிடம் நான் கற்ற விஷயங்கள் சில,

 

நிதி சுதந்திரத்தை விரைவாக பெறுவதற்கான 8 தாரக மந்திரங்கள்:

 

  • சுதந்திரமான மனதை அமைத்து கொள்ளுதல்(Freedom Mindset) :

 

உங்கள்  எண்ணங்கள், நம்பிக்கை, வார்த்தைகள் மற்றும் கொள்கைகளில் நீங்கள் சுதந்திரமாக செயல்பட முனையுங்கள். உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, அதற்கான திட்டம் உங்களிடம் இருக்கும். அதுவே உங்களை முன்னேற்றத்தில் செல்ல துணைபுரியும்.

 

  • இலக்கு மற்றும் திட்டத்தை ஏற்படுத்தி கொள்ளுதல் (Goal and Plan):

 

நீங்கள் பொருளாதார சுதந்திரம் அடைய முடிவெடுத்தவுடன், உங்களுக்கான சரியான இலக்கையும், திட்டத்தையும் ஏற்படுத்துவது அவசியம். உங்களுக்கு என்ன வேண்டும், எங்கே செல்ல விரும்புகிறீர்கள், என்ன மாதிரியான வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறீர்கள் (What do you want) என்பதை தீர்மானித்து கொள்வது நன்று.

 

பொருளாதார ரீதியாக தேவைப்படும் பணத்தின் மதிப்பையும் குறித்து வைத்து கொள்வது, அடுத்த 10-15 வருடங்களுக்கு எனக்கும், எனது குடும்பத்திற்கும் என்ன தேவை உள்ளது என்பதையும் கணக்கிட்டு கொள்ள வேண்டும். இலக்கு மற்றும் திட்டமில்லாத சுதந்திரம் என்று எதுவும் கிடையாது. நீங்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டுமானால், இலக்கு மற்றும் திட்டம் என்பதும் அவசியமாகும்.

 

  • சம்பாதிப்பதை விட குறைவாக செலவழியுங்கள் (Spend less than you Earn):

 

தேவையற்ற செலவுகளை குறைத்தல் அல்லது அதனை தவிர்த்தல் என்பது நிதி சுதந்திரத்தின் முக்கிய பண்பாகும். உங்களிடம் என்ன உள்ளதோ, அதன் எல்லைக்குள் உங்கள் பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

 

அவசியமற்ற செலவுகளை தவிர்த்தல் என்பதை உங்கள் வாழ்வில் ஒரு பழக்கமாக்கி கொள்வதும், பின்னாளில் அது உங்களை பல சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைய செய்யும்.

 

  • உங்கள் பணத்தை நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள் (Manage your money):

 

உங்களுக்கு தேவையான மாத அடிப்படை செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள், உங்களுக்கு பிரியமான இடத்திற்கு செல்ல தேவைப்படும் தொகை ஆகியவற்றை தனித்தனியாக ஒதுக்கீடு (Splitting) செய்ய பழகுங்கள். முடிந்தால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வங்கி கணக்குகளை ஆரம்பியுங்கள்.

 

ஒவ்வொரு தேவைக்குமான தொகையை முன்னரே எடுத்து வைக்க பழகுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிதி சிக்கல் இல்லாமல் பொருளாதார சுதந்திரத்தை எளிமையாக அடையலாம்.

 

  • அதிகப்படியான பணம் சம்பாதியுங்கள் (Earn a lot more money):

 

நீங்கள் உங்கள் இளமை காலத்தில் அதிகப்படியான வருமானத்தை பெறும் போது, உங்களுடைய சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிதி சுதந்திரம் பெறுவதை விரைவாகவும், எளிமையாகவும் அடையலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பணம் சம்பாதிப்பதின் ரகசியமே (Secret of Earning Money) , நாம் பெறும் வருமானம் எவ்வாறு நமக்கு கிடைக்கிறது என்பதில் தான் உள்ளது. நம்மை சுற்றியுள்ளவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதின் மூலமே நமக்கான வருமானம் கிடைக்கிறது. மக்களுடைய அதிகப்படியான பிரச்னைகளை கண்டறியுங்கள், அதனை தீர்க்க உதவுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வை அளிப்பவராக (Problem Solver) உங்களை மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான பணம் தானாக வந்து சேரும்.

 

  • மூலதனத்தின் சக்தி வாய்ந்த வாய்ப்புகள் (Investment Appreciation):

 

உங்களின் பணத்தை வெறும் முதலீடாக மட்டுமல்லாமல், முதலீட்டின் மூலம் பெறும் வருமானத்தின் மதிப்பையும் (Value to Increase) உயர்த்த முயலுங்கள். கையில் கிடைத்த லாபத்தை மறுமுதலீடு (Reinvesting) செய்வதால் உங்களுடைய செல்வத்தின் மதிப்பும் உயரும்.

 

பங்குகள் (Stocks), பரஸ்பர நிதிகள் (Mutual Funds), மனை விற்பனை (Real Estate), வாடகை வருமானம் (Rental Income) போன்ற மூலதன பெருக்குதலில் உங்கள் ஆர்வத்தை காட்டுங்கள். நீங்கள் ஒரு சொத்தினை வாங்கும் போது மட்டுமே உங்களுக்கான லாபத்தை பெறுகிறீர்கள், விற்கும் போது அல்ல.

 

  • மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை உருவாக்குங்கள் (Create Passive Income):

 

உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை அதிகமாக வீணாக்காமல், வருமானத்தை அதிகரிப்பதற்கான கற்றலை மேற்கொள்ளுங்கள். கற்றலின் மூலம் மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை பெறுங்கள். நீங்கள் இல்லாமல் செயல்படும் ஒரு தொழிலை அல்லது வணிக அமைப்பை (Business System) ஏற்படுத்துங்கள். அந்த தொழில் உங்களுக்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து தரும்.

 

உங்களிடம் உள்ள சேமிப்பு சிறு தொகையாக இருந்தாலும், அதனை ஒரு தொழிலாக மாற்றுங்கள் (Converting liquid cash to Business Opportunity). அவை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கான மற்றொரு வாய்ப்பை காட்டும்.

 

  • உங்களுடைய பங்களிப்பு அப்போதும் அவசியம் (Helping others):

 

நீங்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவது ஒரு புறம் இருந்தாலும், உங்களுடைய பங்களிப்பை மற்றவர்களுக்கும் அளியுங்கள். ஏழை, எளியவர்களின் கல்விக்கு உதவுவது, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது, தொழிலில் ஆர்வமுள்ளவர்களை மேம்படுத்த துணைபுரிவது போன்ற செயல்களை எப்போதும் மேற்கொள்ளுங்கள்.

 

‘ என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நான் மற்றவர்களுக்கு உதவுவேன் என்று நீங்கள் கூறினால், உங்களால் வாழ்நாள் முழுவதும் யாருக்கும் நன்மையை செய்ய முடியாது. ‘

 

பணத்தின் ரகசியமே மற்றவர்களுக்கு கொடுப்பதின் மூலம் தான் உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு உதவியும், உங்களை மேம்படுத்தும்.

 

அறிவே ஆற்றல்(Knowledge is Power). அறிவை நீங்கள் செயல்படுத்தவில்லை என்றால், அதனால் யாருக்கு என்ன பயன் ? செயல்படுத்தப்பட்ட அறிவே பயன்களை விளைவிக்கும். அதனால் தான் இன்று படித்தவர்கள் அதிகம் இருப்பினும், அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. அதற்கு காரணம் கற்ற கல்வியை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான். அதே நேரத்தில் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், சிலர் தங்களின் செயல்களின் மூலம் பிரமாண்டமான வாழ்க்கையை வாழ்கின்றனர். சமுதாயத்திற்கும் பல நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

நீங்கள் கற்கும் எந்தவொரு கல்வியையும் செயலில் கொண்டுவர பழகுங்கள். பின்பு, அதனை உங்களின் பழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றி உங்களின் பாதத்தில்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

The Neccessity of Investing at Young – Warren Buffet

 

வாரன் பப்பெட்(Warren Buffet) 1930 ம் ஆண்டு அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் பிறந்தவர். இவர் ஒரு முதலீட்டாளர் மற்றும் அமெரிக்க தொழிலதிபராக வலம் வருபவர். தொழிலின் மீதும், முதலீட்டின் மீதும் கொண்ட காதலால் தனது 11ம் வயதில் முதலீட்டை(Investing) தொடங்கினார். முதன்முதலில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்த இவர், ஒரு பங்கு 38 டாலர் வீதம் 6 பங்குகளை நியூயார்க் பங்குச்சந்தையில் வாங்கினார். அப்போதும் பகிர்ந்தளிப்பு முறையில், தனக்கு மூன்று பங்குகளையும், தனது சகோதரிக்கு 3 பங்குகள் என்றும் பிரித்து கொண்டார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனது 14ம் வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்ததன் மூலம் 200 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றார் வாரன் பப்பெட். வருமான வரி செலுத்துவோர் பட்டியலில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இடம் பெற்றார், அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. உயர்நிலை கல்வியை முடித்த வாரன் தனது சிறு வயது சேமிப்பின் மூலமான பணத்தை கொண்டு ஒமாஹா (Omaha) நகரத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். நிலத்தின் மதிப்பு அப்போது அதிக பண மதிப்பை கொண்டிருக்காவிட்டாலும், 15 வயது சிறுவன் வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

தொழிலின் மீது கொண்ட ஈர்ப்பால், தன்னுடைய கல்லூரி படிப்பை தான் விரும்பிய ஹார்வர்டு வணிக பள்ளியில் (Harvard) பயில முயன்றார். ஆனால் அங்கே அவருக்கான கதவு திறக்கப்படவில்லை, அவரது வரவேற்பை நிராகரித்தது ஹார்வர்டு. பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற வாரன் பப்பெட், அங்கு தான் தனது குருவான பெஞ்சமின் கிரகாம் (Benjamin Graham) அவர்களை கண்டார். பின்னாளில் பெஞ்சமின் கிரகாம், ‘ முதலீட்டின் தந்தை (Father of Value Investing)‘ என்று வரலாற்றில் இடம் பிடித்தார்.

 

ஒரு சிறப்பான குருவிடம் கற்ற கல்வி வாரன் பப்பெட் அவர்களை மேலும் செதுக்கியது. தனது 31ம் வயதில் தான் விற்பனையாளராக பணிபுரிந்த நிறுவனத்தில் சிறுகச்சிறுக முதலீட்டை மேற்கொண்டார். பின்னர் அதனையே தனது சொந்த நிறுவனமாக்கி கொண்டார். அது தான் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) என்ற நிறுவனம். முதலீட்டின் மூலம் வலம் வந்த வாரன் பல தொழில்களை துவங்கினார். 43ம் வயதில் வாரனின் சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. தனது 52ம் வயதில் போர்ப்ஸ்(Forbes) பத்திரிகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற பப்பெட் அதே காலத்தில் தனது சொத்து மதிப்பை மூன்று மடங்கு உயர்த்தினார். அப்போது அவரது சொத்து மதிப்பு 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கி இருந்தது.

 

பெர்க்சயர் நிறுவனத்தில் வாரன் தனக்கான சம்பளமாக பெற்ற தொகையை சுமார் 15 வருட காலம் உயர்த்தி கொள்ளவில்லை. எந்த ஊதிய உயர்வோ, போனஸ் தொகையோ பெற்று கொள்ளாத வாரன் பப்பெட்டின் மாத சம்பளம், அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட குறைவானதாகும். பெரும்பாலும் தனது சேமிப்பு மற்றும் முதலீட்டினை கொண்டே வாரன் தனது குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். Duracell, Brooks, Clayton Homes ஆகிய பிராண்டுகள் வாரனின் நிறுவனங்களே.

 

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக மற்றும் முதலீட்டாளராக இருக்கும் வாரனின் சொத்து மதிப்பு கடந்த வருட முடிவில் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($80 USD Billion), இந்திய மதிப்பில் 5.63 லட்சம் கோடி ரூபாயாகும். பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தராத வாரன் ஒரு புத்தக வாசிப்பாளர் ஆவார். தினமும் 5 மணிநேரம் புத்தகங்களை வாசிப்பதற்காக நேரம் ஒதுக்கும் இவர், தனது சொத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கும் வாரனிடம் ஆப்பிள் ஸ்மார்ட் போன் (Apple Smartphone) இல்லை என்பது சிறப்பம்சம். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்ய மட்டுமே உள்ளதாக ஒரு முறை கூறியுள்ளார்.

 

நாம் விரும்பும் துறையில் சாதிக்க இளமையிலே கற்க முயலும் போது, நமக்கான வெற்றி எளிமையாக அமையும். அதே போன்று, நமது குடும்பத்திற்கான நிதி தேவைகளை நாம் இளமை காலத்திலே முடிவெடுக்க ஆரம்பித்தால், பின்னாளில் பண தேவைக்கான சிக்கல் இருக்காது. கடனும் வாங்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

Budget Planning for Middle Class Family – Part 3

 

பட்ஜெட் திட்டமிடலின் மூன்றாவது பகுதிக்கு வரவேற்கிறோம்…

 

கடந்த பகுதிகளின் மூலம் நடுத்தர பட்ஜெட் குடும்பத்திற்கு தேவையான சில யோசனைகள் மற்றும் திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் வந்திருக்கலாம். அதனை நீங்கள் உடனே செயல்படுத்துவதற்கான ஆயுத்தங்களை செய்தால் போதும். அப்போது தான் பட்ஜெட் திட்டமிடலின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். சரி வாருங்கள், இந்த பகுதிக்கான திட்டமிடலை பார்ப்போம்.

 

திரு. பாண்டி மத்திய அரசுத்துறையில் வேலை பார்த்து வரும் 28 வயது இளைஞர். சாத்தூரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தனது வேலை நிமித்தமாக மதுரை மாநகரில் வசித்து வருகிறார். இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர் தனது இலக்கான அரசு பணியினை கைப்பற்றிய பாண்டி, தனக்கான மணப்பெண்ணையும் தேடி வருகிறார் 🙂

 

பட்ஜெட் திட்டமிடல்:

 

சம்பளத்தில் பிடித்தம் போக தனது கையில் (வங்கியில்) மாதம் ரூ. 35,000 ஐ வருமானமாக பெறுகிறார். அதாவது ஆண்டுக்கு ரூ. 4.20 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார். தற்போதைய அடிப்படை செலவாக (Fixed Expenses)  அவர் மாதம் ரூ. 12,000 மும், இன்சூரன்ஸ் செலவாக மாதம் 2000 ரூபாயும் ஒதுக்குகிறார். முதலீட்டு செலவாக (Investing Expenses) மாதம் ரூ. 17,000 ஐ கொண்டுள்ளார். மீதம் அவரிடம் 4000 ரூபாய் உள்ளது, இதனை தனது எதிர்பாராத செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்.

 

Budget Financial Planning 3

 

அடிப்படை செலவு என்பது பொதுவாக அத்தியாவசிய செலவுகளாக கருதப்படும். இருப்பிடம், உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரம், இணைய கட்டணம், காப்பீடு போன்றவை அடிப்படை செலவுகளாகும். முதலீட்டு செலவு எனும் போது, நமது எதிர்கால தேவைக்காக நாம் இன்று சேமிக்கும், முதலீடு மேற்கொள்ளும் தொகையாகும். முதலீட்டை நாம் ஒரு செலவாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் பின்னாளில் கிடைக்கும் முதிர்வு தொகையை செலவழிக்க தான் போகிறோம்.

 

உடன்பிறந்தோர் தனது பெற்றோரை பார்த்து கொண்டிருந்தாலும், பாண்டி தனது பெற்றோருக்காக ஒரு கார்பஸ் (Corpus) தொகையை பெற முதலீட்டை மேற்கொண்டு வருகிறார். அவரது முதலீட்டு செலவில் இதுவும் (மாதம் ரூ. 5000/-) அடங்கும். இன்னும் 5 வருடத்தில் முதிர்வு பெறும் நிலையில் கிடைக்கும் ரூ. 8,70,000 /- தொகையை தனது பெற்றோருக்கு கொடுக்க உள்ளார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மேலே உள்ள அட்டவணையின் மூலம் நாம் பாண்டி அவர்களின் வரவு மற்றும் செலவை அறியலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட (NPS) தொகையை அவர் தனது ஓய்வு காலத்திற்கு பயன்படுத்தி கொள்வார். தனி நபராக இருக்கும் போது அவருக்கு செலவுகள் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், தனது எதிர்காலத்தை (திருமணம் மற்றும் அதனை அடுத்த பொறுப்புகள்) கவனத்தில் கொண்டு சேமிப்பு மற்றும் முதலீட்டை முன்னரே செய்துள்ளார். பணிபுரியும் மணப்பெண்ணை அவர் எதிர்பார்ப்பதால், வரக்கூடிய எதிர்கால செலவுகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

நினைவில் கொள்க:

 

  • பாண்டி தனது நிதி இலக்குகளாக (Financial Goals) 5 வருடத்திற்கு பிறகு புதிய வீட்டு மனை ஒன்றை வாங்க விரும்புவதாகவும், 3 வருடத்தின் முடிவில் ஒரு காரை வாங்க வேண்டுமென முடிவு செய்துள்ளார்.

 

  • இவரின் திருமண செலவு மற்றும் பிற நிதி இலக்குகளுக்கு தேவைப்படும் தொகையை, தான் ஏற்கனவே மேற்கொண்ட முதலீட்டில் பயன்படுத்தி கொள்ளலாம். மீதத்தொகைக்கு வங்கியில் கடன் பெறலாம். நான்கு சக்கர வாகனம் தற்போது அவசியமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அதற்கான காலத்தை தள்ளி போடலாம்.
  • தனது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை முன்னரே கணக்கிட்டு அதற்கான முதலீட்டை நாம் மேற்கொள்ளும் போது, எந்த நிதி சிக்கலும் இல்லை.

 

  • பொதுவான எண்டோவ்மென்ட் பாலிசியை எடுத்திருக்கும் இவர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நலம். ஏற்கனவே தான் எடுத்திருக்கும் மெடிக்ளைம் (Mediclaim) பாலிசியில் திருமணத்திற்கு பிறகு, தனது மனைவியை சேர்த்து கொள்ளலாம். இது போக பாலிசிக்கான கவரேஜ் தொகையையும் அதிகரித்து கொள்வது நிதி செலவை பாதுகாக்கும்.

 

  • நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் பிடிக்கப்படும் NPS ஐ மட்டும் சாராமல், பிற முதலீட்டு சாதனங்களையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். நிறுவனம் உங்கள் சம்பளத்தில் தான் குறிப்பிட்ட சதவிகிதத்தை பிடித்தம் செய்ய முடியும். ஓய்வு காலத்திற்கு தேவையான சரியான தொகையை நாம் மட்டுமே கணக்கிட முடியும்.

 

பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இளம் தொழில்முனைவோராக கற்று கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

இளம்  தொழில்முனைவோராக கற்று  கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

10 Smart Ideas to learn as Young Entrepreneurs

நேற்று (25.02.2018)  மதுரை  மடீட்சியா அரங்கில், Youngs Indians (YI) – Confederation of Indian Industry(CII)  மற்றும்  Native Lead Foundation சார்பாக ஆரம்பம் (Aarambam – Startup Contest) 4 வது பதிப்பு (4th Edition) நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில் Native Lead Foundation நிறுவனர்  திரு. சிவராஜா  ராமநாதன் (Sivarajah Ramanathan), Thyrocare Technologies நிறுவனத்தின் நிர்வாக  இயக்குனர்  மற்றும்  நிறுவனர்  Dr. வேலுமணி (Dr. Velumani) அவர்கள், மற்றும்  YI – CII சார்பானவர்களும்  கலந்து  கொண்டனர்.

 

புதிய  தொழில்முனைவோருக்கான  தேடலும், அவர்களுக்கான  முதலீட்டு  வாய்ப்புகள்  பற்றி  பேசப்பட்டது. புதிய  சிந்தனைகள்  கொண்ட இளம்  தலைமுறையினர்  எவ்வாறு  அவற்றை  தொழிலாகவும், சமுதாயத்திற்கு  பயன்படும்படியும்  மாற்றுவதற்கான  ஆலோசனைகள்  கூறப்பட்டன.

 

இளம் தொழில்முனைவோராக  கடைபிடிக்க மற்றும்  கற்று  கொள்ள  வேண்டிய  அடிப்படை  சிந்தனைகள்  பற்றி  Thyrocare நிறுவனத்தின்  நிறுவனர்  டாக்டர்  வேலுமணி அவர்கள்  பேசும்  போது ,

( Read this post after the advertisement… )

 

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

  • ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது, அதனை பூஜ்யத்திலிருந்து தொடங்குங்கள் (Start from Zero). தொழிலை பற்றிய அறிவு, தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும்.

 

  • எப்போதும் எளிமையாக (Be Frugality)  இருக்க பழகுங்கள். அது தான் உங்களை ஒரு சிறந்த தொழில்முனைவோராக காட்டும்.

 

  • ரிஸ்க் (Risk – Reward) எடுக்க தயாராகுங்கள்; உங்கள் திடமான ரிஸ்க் உங்களுக்கு தித்திப்பான பலனை கொடுக்கும்.

 

  • விவாதம், ஆலோசனை மற்றும் முடிவெடுத்தல் (Discuss vs Decision Making) என வரும்பொழுது, எப்போதும் முடிவெடுக்க முயலுங்கள். விவாதம் ஒரு நல்ல முடிவை தராது. முடிவெடுங்கள், அந்த முடிவை நல்ல பயனாக மாற்றுங்கள் (No one decision is better).

 

  • தொழிலில் தவறு (Mistakes) என்பது ஒரு பெரிய குற்றமில்லை. தவறு செய்தால் தான் நீங்கள் தொழிலை சரியாக அணுகுகிறீர்கள் என அர்த்தம். தவறு செய்தால் மட்டுமே நீங்கள் தொழிலில் வெற்றியடைய முடியும்.

 

  • சொந்த ஊரில் தொழில் செய்வதை விட, தொழில் வாய்ப்பு அதிகமுள்ள சூழ்நிலையை தேர்வு செய்யுங்கள் . வீட்டை விட்டு வெளியே வர உங்கள் மனதுக்கு சொல்லுங்கள். மிகப்பெரிய வெற்றியடைய நீங்கள் மாற்றத்திற்கும் தயாராக வேண்டும் (Be out of Comfort Zone).

 

  • உங்கள் தொழில் மற்றும் சிந்தனைகளுக்கேற்ற நண்பர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் பால்ய நண்பர்கள் என்பதற்காக நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை( Choose Good contacts and friends).

 

  • உங்கள் நேரத்தை வீணடிக்கும் நபர்களிடமிருந்து விலகி செல்லுங்கள் (Avoid not related to you).

 

  • நீங்கள் ஆரம்பிக்கும்  தொழிலில் ஏழை மற்றும் அனுபவம் ஏதும்  இல்லாதவருக்கு  வாய்ப்பு  கொடுங்கள். அவர்களால் தான்  உங்களுக்காக  உண்மையாக  உழைக்க முடியும் (Employment for Poor and Freshers). நீங்கள்  ஒரு தொழிலில்  வெற்றி வேண்டுமென  நினைத்தால், ஒரு முதலாளியிடம் எந்த  சம்பளமும் வாங்காமல், கற்றலுக்கு  மட்டுமே  முக்கியத்துவம்  கொடுங்கள். அது  உங்களை  பெரும் முதலாளியாக்கும்(Learn to earn).

 

  • ஏற்கனவே  இருக்கும்  வேலையை விட்டு  விட்டு நீங்கள்  தொழில் செய்ய விரும்பினால், தொழிலுக்கு  தேவையான முதலீட்டை முன்னரே  சேமியுங்கள் (Create Emergency fund).

 

  • தொழில் ஆரம்பத்தில்  கடன்  எதுவும்  அதிகம் பெற  வேண்டாம். ஏற்கனவே  உங்களுக்கு  கடன்  இருந்தால், அதனை அடைத்து  விட்டு தொழில் தொடங்குவது  நல்லது (No Debt – No EMI).

 

இரண்டாம் தொழில்முனைவோர்களுக்கு (Second Generation Entrepreneurs) பெற்றோர் கற்று கொடுக்க  வேண்டியது…

 

  • உங்கள்  பிள்ளைகளுக்கு  எளிமையாக  வாழ (Frugality)  கற்று  கொடுங்கள். ஆடம்பரம்  வேண்டாம்.

 

  • ரிஸ்க் எடுக்க சொல்லி  கொடுங்கள். தவறுகளிலிருந்து பாடம்  கற்று கொடுங்கள்(Risk taking ability).

 

  • அவர்களுக்கு  உங்களின் தொழில் ஆலோசனை எதுவும்  தேவையில்லை (Don’t advise). உங்கள்  பிள்ளைகளை அவர்களாகவே  சிந்திக்க  கூறுங்கள்.

 

  • பிள்ளைகளுக்கு  சேமிப்பதின் அவசியத்தை சொல்லுங்கள் (Ask them to save).

 

  • உறவினர்கள் என்ன  நினைப்பார்கள்  என்ற  கவலை  வேண்டாம்(Avoid Neighborhoods words). உங்கள் குழந்தைகளை வெளி உலகுக்கு செல்ல அனுமதியுங்கள். வாய்ப்புகள் வெளியே  காத்திருக்கிறது (Don’t being Homesick).

 

மேலும் டாக்டர் வேலுமணி கூறும் போது, “ பொதுவாக ஏழையாக பிறந்தவர்கள் தான் பின்னாளில் பணக்காரராக மாறுகிறார்; ஒரு பணக்காரர் தான் பின்னாளில் ஏழையாக உள்ளார். இரவும், பகலும் போல இதுவும் நடக்கும். அதனால் ஏழையாக உள்ளோருக்கு வாய்ப்புகள் எப்போதும் காத்திருக்கிறது. விடா முயற்சியே வெற்றியின் கல்” எனவும் கூறினார்.

 

“ If you are born as poor, you have a 100 % chance of being  Rich “

 

தொழில் செய்வதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. ஆனால் நாம் நம் தொழில் சார்ந்த நபர்களுடன் தோழமை கொள்கிறோமா என்பதே இங்கு வெற்றிக்கான விடை. நாம் மேலே சொன்ன பத்து சிந்தனைகளை உங்கள் வாழ்விலும் பொருத்தி பாருங்கள். உங்கள் தொழிலிலும் வெற்றி நிச்சயம்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இளமையில் ஓய்வு பெற விரும்புகிறீர்களா ?

இளமையில் ஓய்வு பெற விரும்புகிறீர்களா ?

 

நவீன யுகத்தில், “Workaholic” என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் வேலைப்பளு, வேலை திருப்தியின்மை என்பது ஒரு பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது.

 

அது என்ன ‘ Workaholic ‘ ?

 

WorkaholicPerson with a compulsive need to work ; Workaholism is a compulsive about working.

 

வேலை செய்ய வேண்டிய கட்டாயம் (அ) எப்போதும் வேலை, வேலை என்றிருப்பது.

 

பெரும்பாலோர் விருப்பமில்லாமல் பணிச்சுமையை ஏற்பதற்கு காரணம் – பொருளாதார தேவை. இது இன்றைய அதிக சம்பளம் மற்றும் ஆடம்பரத்துக்கும் பொருந்தும்.  உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் மறைந்து, இன்று விருப்பத்தேவை மட்டும் தான் தலை தூக்கி உள்ளது. எனக்கு எது தேவை என்பதை விட, எனக்கு இது வேண்டும் என்ற கொள்கை இன்று வளர்கிறது. நாகரீக மாற்றத்தில் இதுவும் அடங்கும் தானே 🙂

 

கால் காசுனாலும் கவர்ன்மென்ட் வேலை “ என்பதெல்லாம் இன்று பொய்யாகி விட்டது. இன்று எல்லா வேலைகளிலும் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு என்ற விஷயம் இல்லாமையால், சம்பள அதிகரிப்பை மட்டுமே பெரும்பாலோர் எதிர்பார்க்கின்றனர். ஒரு புறம் நிறுவனங்களுக்கு வேலை ஆட்கள் கிடைக்கவில்லை; மறுபுறம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற போதும், தாங்கள் பணிபுரியும் துறையில் நாட்டமின்மை, பணிச்சுமையாக கருதுதல் என்பது வாடிக்கையாகி விட்டது. முன்னொரு காலத்தில் ஒரே துறை அல்லது ஒரே  நிறுவனத்தில் 30 (அ) 40 வருடங்கள் பணிபுரிந்த அனுபவங்கள் இன்று இல்லை. இன்னும் சொல்ல போனால், இன்றைய  தலைமை அதிகாரிகளும் நீண்ட காலம் ஒரு நிறுவனத்தில் நீடிப்பதில்லை. இதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுவது, நாம் நமக்கு பிடித்த  துறையை (அ) கல்வியை தேர்ந்தெடுக்காதது  தான்; பணியில்  சுமை என்று  நாம் பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. தினக்கூலியிலிருந்து, டாட்டா (Tata) வரை எல்லாருக்கும் பணிச்சுமை உள்ளது. அந்த பணிச்சுமை தான் சிலரை மாபெரும் மனிதர்களாக்கி உள்ளது. ஆனால் நவீன யுகம் மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது. இன்றைய தலைமுறையில் பணிச்சுமை என்பதை விட, வேறு ஒரு வார்த்தை புதுமையாக்கப்பட்டுள்ளது – “ இளமையில் ஓய்வு (Retire Early)

 

இளமையில் ஓய்வு:

 

அப்போதெல்லாம் நாங்க 60 வயது வரை உழைத்து ஓய்வு பெற்றோம் “ என்ற வாசகத்தை இனி நாம் கேட்க போவதில்லை. இன்று இளமையில் ஓய்வு (Retire Early) என்ற வார்த்தை தான் போக்காக (Trending) உள்ளது.  இளமையில் ஓய்வு பெறுவதை இருவகையாக பிரித்து பார்க்கலாம்,

 

  • இருக்கும் பணியிலிருந்து இளமையில் ஓய்வு பெற்று புதிதாக தொழில் தொடங்குவது / தொழில்முனைவோராக விரும்புவது. (Become an Entrepreneur )

 

  • இனி எந்த வேலையிலும், தொழிலிலும் ஈடுபட போவதில்லை; வாழ்க்கையை விருப்பம் போல கழிக்க வேண்டும் என விரும்புவது. (Live as Life, Live as like ).

 

Become an Entrepreneur:

 

இருக்கும் பணியிலிருந்து  இளமையில் ஓய்வு பெற்று அல்லது தன்னை விடுவித்து கொண்டு தொழில் முனைவோராக களமிறங்குவது இன்று நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் தான். “ நல்ல தொழில் செய்ய வேண்டும், நாலு பேருக்கு வேலை தர வேண்டும் “ என்பது ஒரு லட்சிய நோக்கமே. பணம் சம்பாதிக்க தான் தொழில் தொடங்கினாலும், மறைமுகமாக நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் தொழில்முனைவோராக சிறக்க சரியான திட்டமிடல் மற்றும் செயலாற்றல் அவசியம். வெறும் புதுமையான யோசனைகளை மட்டும் வைத்து கொண்டு வெற்றி பெற்று விட முடியாது.

 

Live as Life, Live as like:

 

“ இனி மேல் நான் எந்த வேலைக்கும் செல்வதை விரும்பவில்லை; தொழில் செய்யவும் இல்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ போகிறேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக வேண்டும்” – இதுவும் இங்கு நடக்கும். சில சமயங்களில் பலருக்கு இந்த வரிகள் உபயோகப்படாமல் போனாலும், சிலருக்கு இது அர்த்தமுள்ளதாகி விடும். இருக்கும் வாழ்க்கையை பிடித்தவாறு உணர வேண்டும், பிறரை நேசிக்க வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை. அப்படியே வாழலாம். இன்று நாம் பார்க்கும் புதுமையான தொண்டுகளும், புவி சார்ந்த நிகழ்வுகளும் அப்படி தான் அமைந்தன.

 

‘ அப்புறம் என்ன பிரச்சனை, தலைப்பை முடித்து விட்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா  ? ‘   🙂

 

இனிமேல் தானே விஷயம் இருக்கு. இருக்கும் வேலையை விட்டு விட்டு நீங்கள் தொழில்முனைவோரானாலும் சரி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக உருவாக்கினாலும் சரி – வேலையை கடந்தவுடன் தான் நமது வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பதை மறக்க வேண்டாம். இளமையில் ஓய்வு பெறுவதற்கு ஒரு மன தைரியம் வேண்டும். இளமை கால ஓய்வு என்பது நாம் இனி வாழ போகும் காலம் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அக்கரைக்கு இக்கரை பச்சையாகி விட கூடாது. அதனால் நமது இளமை கால ஓய்வுக்கான நிதித்திட்டமிடல் அவசியம்.

 

உதாரணத்திற்கு, நாம் 40 வயதில் ஓய்வு பெற விரும்பினால் நாம் அடுத்து எத்தனை வயது (அ) காலம் வரை இருக்க போகிறோம் என்பது முக்கியம். 70 வயது வரை நம்மால் வாழ முடியும் என்ற கணிப்பு (கணிப்பு தான்) இருந்தால், ( 70-40 = 30 ) 30 வருடத்திற்கான  செலவுகளை (அடிப்படை தேவை, மருத்துவம், போக்குவரத்து ) எவ்வாறு  கையாள போகிறோம் என்பது நிபந்தனை. வேலையை துறந்து பின் செயலாற்றல் மிகவும் கடினம். நம்மால் தொழிலில் சிறந்து விளங்க எவ்வளவு காலமாகும், நமது குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவுகள் என்பவை எல்லாம் கணக்கிடப்பட வேண்டும். இதற்கான தகவல்கள்  நிதி சார்ந்த, காப்பீடு  சம்மந்தமான இணையதளத்தில் Retirement Planning, Retirement Calculator என்ற வசதி உள்ளது. அவற்றை பயன்படுத்தி நமக்கு தேவையான பணத்தை நாம் தயார் செய்து கொள்ளலாம் அல்லது  சொத்துக்களை கையாள வேண்டும். பணவீக்கத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

 

HDFC Life’s Retirement Planning and Pension Calculator

Money Control’s Retirement Calculator

 

பொதுவாக, இந்த Retirement Calculator சரியாக சொன்னாலும், நாம் சற்று கூடுதலான பாதுகாப்பை ஏற்படுத்துவது நலம். ஏனென்றால் நாம் இளமையில் சம்பாதிப்பதை விட, வயதான காலத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. அதாவது நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது, பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதலான தொகையை வைத்திருப்போமே, அது போன்று.

 

General Retirement Planning:

 

இந்த முறையில், நமக்கு தேவைப்படும் காரணிகள் – நமது தற்போதைய வயது, ஓய்வு பெறப்போகும் வயது, தற்போதைய ஆண்டு வருமானம், மாத செலவுகள், தற்போதைய  முதலீடு மற்றும் சேமிப்பு இருப்பு, எதிர்காலத்தில் அதற்கு எதிர்பார்க்கும் வருமானம், பணவீக்கம் ஆகியவற்றை நாம் குறித்து வைத்து கொண்டு, நமது இளமை கால நிதித்திட்டமிடலை துவக்கலாம்.

 

( Current Age, Retirement Age, Annual Income, Monthly Expenses, Current Savings and Investing, Expected Return on Investments(ROI), Inflation )

 

Early Retirement Formula (ERF):

 

டக் மஸ்ஸி (Doug Massey) என்ற ஆசிரியர் ஓய்வு கால திட்டத்திற்கான விதியை உருவாக்கியுள்ளார். இவர் தனது 41 வயதில் மற்றவர்களுக்காக வேலை செய்வதிலிருந்தும், தொழில் மற்றும் முதலீட்டில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்து (ஓய்வு) கொண்டார்.

 

ERF =  Your Age X  Networth / Yearly Expenses

 

Maintain the ERF value is > 1000

 

உதாரணத்திற்கு, உங்களுடைய வயது 30 மற்றும் உங்களிடம் இருக்கும் சொத்து (மனை, வீடு, முதலீடு, சேமிப்பு, பணம் கையிருப்பு) ரூ. 2,00,00,000 /- (2 கோடி) மற்றும் ஆண்டு செலவு- ரூ. 6,00,000 /- எனில்,

 

[ 30 X 2 Crores / 6 lakhs ] = 1000  

 

–  ஓய்வு எண் 1000 க்கு குறையாமல் இருப்பது நல்லது.

 

இதை போல, நீங்களும் உங்களுடைய இளமை கால ஓய்வு எண்ணை கணக்கிடலாம். அவர் இந்த விதியில் பரிந்துரைப்பது கூடுதலான தொகையை சேர்க்க வேண்டும் என்பது தான்.

 

இளமையில் ஓய்வு பெறுவதும் ஒரு சாமர்த்தியமான இலக்கு தான்; இலக்கை சரியாக திட்டமிடுங்கள்.

 

இளமையில் வெல்லுங்கள் !

 

வாழ்க வளமுடன், வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அரவணையுங்கள், ஆனால் தனியாக முடிவெடுங்கள்

 

அரவணையுங்கள், ஆனால் தனியாக முடிவெடுங்கள்

 

INVESTMENT DECISION (S) KILLS

 

 

நாம் பள்ளிப்பருவத்திலே பத்தாம் வகுப்பு (அ)  பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது, அடுத்து என்ன படிக்கலாம் என்பதை ஒரு Ph.D  ஆராய்ச்சி போலவே எடுத்து கொள்வோம். யாரிடமெல்லாம் அதனை பற்றி கேட்கலாம், என்னென்ன படிப்புகள், அதற்கான விளம்பரங்கள் மற்றும் செய்திகள், நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்வது என நிறைய விஷயங்களை நமக்கான படிப்பினை தேர்ந்தெடுப்பதற்காக செய்திருப்போம். ஆனால் முடிவில் ஏதேனும் ஒரு படிப்பை (Specialisation) தேர்ந்தெடுத்து விட்டு, இடையில் எந்த சந்தேகமும் இல்லாமல் மேற்படிப்பையும் முழுதும் முடித்திருப்போம். வேலை (அ) தொழில் என வரும் போது, நான் ஏன் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன் என பல சமயங்களில் நமக்கு நாமே குறைப்பட்டு  கொள்வதுண்டு.

 

ஏன் இந்த முடிவு ?

 

நாம் நமது மேற்படிப்பை பற்றி பல பேரிடம் விளக்கம் கேட்டிருப்போம். நம் மூளையில் அதற்கான  தகவல்கள் பல சேகரிக்கப்பட்டுவிட்டன, கூடவே குழப்பமும். தேர்ந்தெடுப்பின் தொடக்கத்தில் யாரோ ஒருவர் சொன்ன அந்த கடைசி விளக்கம், நமக்கான படிப்பை தேர்ந்தெடுக்க வைத்திருக்கும். உண்மையில் நாம் அதனை தேர்ந்தெடுக்கவில்லை. அப்புறம் ஏன் நமக்கு நாமே குறைப்பட்டு கொள்ள வேண்டும். இது தான் முடிவெடுத்தலின் விளைவு (Effect of Decision making). நாம் Ph.D அளவுக்கு ஆராய்ச்சி செய்து விட்டு, முடிவில் செய்த தகவல் (Project) நமக்கானது இல்லையென்றால் ! முடிவின் விளைவு அப்படிதான் அமைகிறது. நமது தேவை மற்றும் இலக்கு சார்ந்து தேர்ந்தெடுத்திருந்தால், நாம் படித்த படிப்பு நமக்கு வேலையை தாமதப்படுத்தினாலும், நமக்கு கிடைத்த அறிவு நம் விருப்பப்படி செயல்பட ஆரம்பிக்கும். அதனால் தான் சிலர் பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும், வாழ்க்கையிலும் தங்கள் தொழிலிலும் சிறந்து விளங்குகின்றனர்.

 

Decision Making (S)kills…

 

“ முடிவெடுத்தலும் ஒரு சிறந்த கலையே… நாமாக முடிவெடுத்திருந்தால் ! “

 

நம் பள்ளிப்பருவத்தில் நாம் செய்த தேர்ந்தெடுப்பதின் தவறே (விளைவு) நமது முதலீட்டிலும் தொடர்கிறது. நண்பர்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று ஏதேனும் ஒரு முதலீட்டு சாதனத்தை(Investment Product), நமக்கு தேவையில்லை என்றாலும் எடுப்பது. என் பெற்றோர் செய்தனர் என முதலீட்டை ஆராயாமல் பின்பற்றுவது, பொருளின்(Brand) மேல் உள்ள அன்பில் [ஆசையில்] 🙂 முடிவெடுப்பது. தரகரின் குறிப்பை (Tip) அப்படியே நமது முடிவாக எடுத்து கொண்டு, முதலீடு செய்வது என நமது முடிவெடுத்தலின் அளவு மாறுகிறது. முடிவில், நமக்கான பலனை நாம் அனுபவிக்காமல் போவதுண்டு.

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, முடிவெடுத்தலும் ஒரு கலையே !  ஆனால் அதனை நீங்களாக செய்ய வேண்டும். நம் எல்லோருக்கும் ஒரு அனுபவம் உண்டு. நெருக்கடியான (Traffic – Peak Hours) சாலை பயணத்தில், நாம் நமது இரு சக்கர வாகனத்தில் நமக்கு முன் செல்லும் மற்றொரு வாகனத்தை, மிக நெருக்கமாக பின் தொடர்ந்து செல்வோம். திடீரென்று ஒரு பள்ளம் தென்படும். முன் சென்ற வாகனம் அதனை சிரமமின்றி கடக்கும். நாம் பள்ளத்தில் தட்டுத்தடுமாறி செல்வோம்.         “ ஏன் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்றோம், சாலையை பார்த்து சென்றிருக்கலாமோ “ என நினைவில் கேட்டிருப்போம். இது தான் நாம் செய்யும் முடிவெடுத்தலின் விளைவு. நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை, உங்களுக்காக முதலீடு செய்ய போகிறீர்கள். அந்த முதலீட்டின் பலன் உங்களுக்கோ (அ) உங்கள் குடும்பத்திற்காகவோ இருக்கலாம். அப்படியிருக்க முடிவினை நீங்கள் தான் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

முடிவெடுப்பதின்  சரியான காரணிகள்:

 

  • தெளிவான தேவை (Needs)
  • திட்டமிடப்பட்ட இலக்கு (Goals)
  • உறுதியான காலவரையறை  (Time Period)
  • முதலீட்டு முடிவின் பலனை அனுபவித்தல்.  (Returns / Benefits)

 

உதாரணத்திற்கு:

 

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு ஒரு நிரந்தர இடம் தேவை (Needs), அதனால் ஒரு புதிய வீட்டை வாங்க (Goals) முடிவெடுக்கிறீர்கள், அதற்காக சில வருடங்கள் பணத்தை சேமிக்க முயல்கிறீர்கள் (அ) வீட்டுக்கடனை பெறுகிறீர்கள் (Time Period). முடிவில் வீடு உங்களுக்கு சொந்தமாகிறது (Benefits). இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே !

 

நீங்கள் யாரிடமும் முதலீட்டு ஆலோசனைகளை கேளுங்கள்; ஆனால் அதற்காக உங்கள் நேரம் முழுவதையும் வீணடிக்க வேண்டாம். எனவே, சரியான ஆலோசகரை தேர்ந்தெடுப்பதும் அவசியம். மேலே சொன்ன முடிவெடுப்பதின் காரணிகளை, ஆலோசனையுடன் பொருத்தி  பாருங்கள்.  ஆலோசனைகளின் கடந்த கால விளைவுகளையும், இனி அதற்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனையும் கவனியுங்கள். முடிவில், நீங்களாகவே முடிவெடுங்கள்.

 

……… are subject to market risks. Please read the offer document carefully before investing.

 

Insurance is not an investment, it just protects your wealth

 

Insurance ஐ insurance ஆக பாருங்கள்; Investment ஐ investment ஆக பயன்படுத்துங்கள். Risk ஐ உணருங்கள். ஆனால் அதற்காக முதலீட்டை ஒதுக்க வேண்டாம்.

 

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த கருத்து (ஆங்கிலத்தில்):

 

A crow was sitting on a tree doing nothing. A rabbit saw the crow and asked “Can I also sit like you and do nothing all day long?” The crow answered:”Sure why not.” So, the rabbit sat on the ground below the crow and rested. All of a sudden a fox appeared, jumped on the rabbit and ate it.

 

Moral:

To be sitting and doing nothing, you must be sitting very high up.

 

முடிவுகள் ஜாக்கிரதை !

 

தகவல்களையும், மனிதர்களையும் அரவணையுங்கள்; முடிவுகள் உங்களிடம் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

செல்வத்தின் மதிப்பு செவித்திறனில்

 

செல்வத்தின் மதிப்பு செவித்திறனில்…   Investing is Listening

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை.   

 

குறளின் வடிவிலே நாம் புரிந்து கொள்ளலாம், ‘ செவிச்செல்வம் ‘ தான் ஒருவருக்கு தலையாய செல்வமென்று. ‘ LISTENING ‘ என்று சொல்லப்படும் செவிமடுத்தல் என்பது எந்த துறையிலும், எக்காலத்திற்கும் ஏற்றதொன்று. படம் பார்த்து கற்று கொள் என்பார்கள்; அதனை போல நமக்கு தேவையான விஷயங்களை நாம் கேட்டு புரிந்து கொண்டாலே நமக்கான வாய்ப்புகள் கிட்டும். பொதுவாக செல்வம் சேர்ப்பதிலும் அவ்வாறு தான்.

 

நீங்கள் செல்வந்தராக வெறும் பணத்தினை மட்டும் கொண்டால் போதாது; மாறாக, அதனை வளப்படுத்துவதற்கான, பாதுகாப்பான வழிமுறைகளை பிறரிடம் கற்று கொள்ளவும் வேண்டும். நாம் விமர்சனம் செய்வதை விட மற்றவர்களிடம், நேர்மறையான செல்வம் படைத்தவர்களிடம் செவிமடுக்கவும் வேண்டும். பெரும்பாலான வெற்றிகள் செவிமடுத்தலிலும், அதனை சார்ந்த உரையாடலிலுமே நிகழ்கிறது. இன்று நாம் வாழும் வாழ்க்கை 100 சதவிகிதம் நகலாக தான் உள்ளது. நாம் செய்யாததை, மற்றவர்கள் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். நமது வெற்றி, தோல்வியும் அப்படி தான். செல்வத்தை பெருக்க உதவும் மந்திரம், இந்த ‘ Listening ‘ என்ற ஆயுதம்.

 

நாம் நினைப்பது போல, ‘ பெரும் செல்வந்தர்கள் மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை மற்றும் அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர் ‘ என்பது உண்மையல்ல… உண்மையில், அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை மதித்து, அவற்றிலிருந்து தங்களுக்கு தேவையானதை, தங்களால் முடிந்ததை வாய்ப்பாக மாற்றுகிறார்கள். அந்த மாற்றம் தான் அவர்களை வித்தியாசப்படுத்துகிறது. Warren Buffet, Bill Gates போன்ற பெரும் பணக்காரர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் புத்தக வாசிப்புக்கென்று தனி இடம் வைத்துள்ளனர். அது தான் அவர்களை சிறந்த ஒரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இது செல்வத்திற்கு மட்டுமல்ல. பகுத்தறிவிலும், மற்ற சேவைகளிலும் தான். திரு. அப்துல் கலாம் (Dr. A.P.J. Adbul Kalam)  ஐயா அவர்களின் உயர்ந்த இடத்திற்கு காரணம், இந்த இரு குணங்கள் தான்.

 

  • மற்றவர்களிடம் செவிமடுப்பது (அ) கற்று கொள்வது (Listening and Learning)
  • கற்ற விஷயத்தை சரியாக மற்றவர்களிடம் சேர்ப்பது (Sharing  to others)

 

அதற்காக நாம் வெறுமெனே காது கொடுத்து கேட்பது என்பதும் சரியான வேலையாகாது; வெறுமெனே காது கொடுத்து கேட்பதற்கும், புரிந்து கொண்டு கற்பதற்கும் (Hearing vs Listening) வித்தியாசம் உள்ளது. அது போல தான், நமது முதலீட்டிற்கும். நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முன், உங்கள் ஆலோசகர் (அ) தரகரின் பேச்சை உள்ளபடியே கேட்டு கொண்டு முதலீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக, நீங்கள் உங்களின் முதலீட்டு நோக்கத்தை தெரிவித்த பின், அதற்கு அவரின் சரியான அணுகுமுறையே நமக்கு தேவை. அதனை புரிந்து கொண்ட பின்னர் நாம் முதலீடு செய்தால் போதுமானது. செவிமடுத்தலிலும் நாம் நமக்கு தேவையான விஷயங்களை சரியாக தேர்ந்தெடுத்து கற்று கொண்டாலே, நமக்கான செல்வம் நம்மை வந்து சேரும்.

 

‘ Investing is like Listening ‘

 

‘ Listening is the secret to discover great stories ‘

 

இன்று  பங்குச்சந்தையில் நம்மில் பெரும்பாலானோரின் பணம் ஊகத்திலும், சரியான வழிமுறை இல்லாமலும் நஷ்டமடைகிறது. தரகர் சொன்னார், நண்பரிடம் கேட்டேன் என்று பணத்தை போட்டு விட்டு பின்பு தங்கள் தின வாழ்க்கையை சுமையாக பார்க்கிறார்கள். உங்கள் நோக்கத்தை சரியாக திட்டமிட்டு, அதற்கு பரிசலிக்கும் அணுகுமுறையை கடைபிடிக்க பழகுங்கள். பங்குச்சந்தையில் மட்டுமல்ல, மற்ற முதலீட்டிலும் நாம் அப்படிதான் செயல்பட வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கஷ்டப்பட்டு இழப்பது என்பது அவசியமில்லையே ! அதனால் நிறைய வெற்றி, தோல்விகள் பற்றிய புத்தகங்களையும் வாசியுங்கள்; அதனை சார்ந்த மனிதர்களையும் சந்தியுங்கள். உங்கள் உரையாடல் நலம் பெறும்.

 

“ செவிமடுத்தல் செல்வத்தை சேர்க்கும் “

வாழ்க வளமுடன்,

வர்த்தக மதுரை – www.varthagamadurai.com