இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்
The Neccessity of Investing at Young – Warren Buffet
வாரன் பப்பெட்(Warren Buffet) 1930 ம் ஆண்டு அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் பிறந்தவர். இவர் ஒரு முதலீட்டாளர் மற்றும் அமெரிக்க தொழிலதிபராக வலம் வருபவர். தொழிலின் மீதும், முதலீட்டின் மீதும் கொண்ட காதலால் தனது 11ம் வயதில் முதலீட்டை(Investing) தொடங்கினார். முதன்முதலில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்த இவர், ஒரு பங்கு 38 டாலர் வீதம் 6 பங்குகளை நியூயார்க் பங்குச்சந்தையில் வாங்கினார். அப்போதும் பகிர்ந்தளிப்பு முறையில், தனக்கு மூன்று பங்குகளையும், தனது சகோதரிக்கு 3 பங்குகள் என்றும் பிரித்து கொண்டார்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனது 14ம் வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்ததன் மூலம் 200 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றார் வாரன் பப்பெட். வருமான வரி செலுத்துவோர் பட்டியலில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இடம் பெற்றார், அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. உயர்நிலை கல்வியை முடித்த வாரன் தனது சிறு வயது சேமிப்பின் மூலமான பணத்தை கொண்டு ஒமாஹா (Omaha) நகரத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். நிலத்தின் மதிப்பு அப்போது அதிக பண மதிப்பை கொண்டிருக்காவிட்டாலும், 15 வயது சிறுவன் வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
தொழிலின் மீது கொண்ட ஈர்ப்பால், தன்னுடைய கல்லூரி படிப்பை தான் விரும்பிய ஹார்வர்டு வணிக பள்ளியில் (Harvard) பயில முயன்றார். ஆனால் அங்கே அவருக்கான கதவு திறக்கப்படவில்லை, அவரது வரவேற்பை நிராகரித்தது ஹார்வர்டு. பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற வாரன் பப்பெட், அங்கு தான் தனது குருவான பெஞ்சமின் கிரகாம் (Benjamin Graham) அவர்களை கண்டார். பின்னாளில் பெஞ்சமின் கிரகாம், ‘ முதலீட்டின் தந்தை (Father of Value Investing)‘ என்று வரலாற்றில் இடம் பிடித்தார்.
ஒரு சிறப்பான குருவிடம் கற்ற கல்வி வாரன் பப்பெட் அவர்களை மேலும் செதுக்கியது. தனது 31ம் வயதில் தான் விற்பனையாளராக பணிபுரிந்த நிறுவனத்தில் சிறுகச்சிறுக முதலீட்டை மேற்கொண்டார். பின்னர் அதனையே தனது சொந்த நிறுவனமாக்கி கொண்டார். அது தான் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) என்ற நிறுவனம். முதலீட்டின் மூலம் வலம் வந்த வாரன் பல தொழில்களை துவங்கினார். 43ம் வயதில் வாரனின் சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. தனது 52ம் வயதில் போர்ப்ஸ்(Forbes) பத்திரிகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற பப்பெட் அதே காலத்தில் தனது சொத்து மதிப்பை மூன்று மடங்கு உயர்த்தினார். அப்போது அவரது சொத்து மதிப்பு 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கி இருந்தது.
பெர்க்சயர் நிறுவனத்தில் வாரன் தனக்கான சம்பளமாக பெற்ற தொகையை சுமார் 15 வருட காலம் உயர்த்தி கொள்ளவில்லை. எந்த ஊதிய உயர்வோ, போனஸ் தொகையோ பெற்று கொள்ளாத வாரன் பப்பெட்டின் மாத சம்பளம், அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட குறைவானதாகும். பெரும்பாலும் தனது சேமிப்பு மற்றும் முதலீட்டினை கொண்டே வாரன் தனது குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். Duracell, Brooks, Clayton Homes ஆகிய பிராண்டுகள் வாரனின் நிறுவனங்களே.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக மற்றும் முதலீட்டாளராக இருக்கும் வாரனின் சொத்து மதிப்பு கடந்த வருட முடிவில் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($80 USD Billion), இந்திய மதிப்பில் 5.63 லட்சம் கோடி ரூபாயாகும். பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தராத வாரன் ஒரு புத்தக வாசிப்பாளர் ஆவார். தினமும் 5 மணிநேரம் புத்தகங்களை வாசிப்பதற்காக நேரம் ஒதுக்கும் இவர், தனது சொத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கும் வாரனிடம் ஆப்பிள் ஸ்மார்ட் போன் (Apple Smartphone) இல்லை என்பது சிறப்பம்சம். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்ய மட்டுமே உள்ளதாக ஒரு முறை கூறியுள்ளார்.
நாம் விரும்பும் துறையில் சாதிக்க இளமையிலே கற்க முயலும் போது, நமக்கான வெற்றி எளிமையாக அமையும். அதே போன்று, நமது குடும்பத்திற்கான நிதி தேவைகளை நாம் இளமை காலத்திலே முடிவெடுக்க ஆரம்பித்தால், பின்னாளில் பண தேவைக்கான சிக்கல் இருக்காது. கடனும் வாங்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை