Category Archives: Think Invest

ரியல் எஸ்டேட் முதலீட்டை போல பங்குகளை நீண்ட கால சொத்துக்களாக மாற்றுவது எப்படி ?

ரியல் எஸ்டேட் முதலீட்டை போல பங்குகளை நீண்ட கால சொத்துக்களாக மாற்றுவது எப்படி ?

How to convert Shares into Long term Assets like Real Estate Property Investing ?

 

பங்குச்சந்தையில் வெறுமனே அவ்வப்போது பங்குகளை வாங்கி விற்காமல், அதனை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது, நாம் சிறப்பான செல்வத்தை சேர்க்க முடியும். பொதுவாக வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு ஆகியவை சிறு சேமிப்பு திட்டங்களாக சொல்லப்படுகின்றன. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயும் குறைவாக தான் இருக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சிறு சேமிப்பை மட்டுமே ஒருவர் நீண்ட காலத்திற்கு நம்பியிருந்தால், எதிர்பார்த்த செல்வத்தை உருவாக்க முடியாது. சிறு சேமிப்பு திட்டம் என்பது குறைந்த வருவாய் உள்ளவர்களும் சேமிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவையே. மேலும், வருங்காலத்தில் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாது. சேமிப்பு என்பவை குறைந்த அளவு ரிஸ்க் தன்மை கொண்டவை. அதனால் தான், அவற்றின் வட்டி விகிதமும் குறைவாக அமையும்.

 

முதலீடு என்பது எப்போதும் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டது. எனினும், முதலீட்டை பரவலாக்குவதன் மூலம், நாம் ரிஸ்க் தன்மையை பரிமாற்றி நீண்ட காலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம். முதலீடு என்பதற்கு சிறந்த உதாரணமாக தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் (வீட்டு மனை), பரஸ்பர நிதிகள், பங்குகள் மற்றும் தொழிலை சொல்லலாம். முதலீட்டில் ஏற்ற – இறக்கம் என்பது எப்போதும் இருக்கும். அவ்வாறு இருக்கும் காரணத்தால் தான், நாம் நீண்ட காலத்தில் பணத்தை பெருக்க முடியும். இல்லையெனில், அவையும் சேமிப்பு திட்டத்தை போலவே குறைந்த வருவாயை கொண்டிருக்கும்.

 

உதாரணமாக நாம் தங்கத்தை எடுத்து கொள்வோம். தங்கத்தின் விலை தினமும் ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்யும் போது, நமது முதலீட்டு குணநலன்கள் எவ்வாறு அமையும் என்பது நமக்கு தெரியும். விலை குறையும் போது, தங்கத்தை(Gold) வாங்கி வைத்து கொள்வோம். விலை அதிகரிக்கும் போது, நாம் உடனடியாக அதனை விற்க போவதில்லை. ஏனெனில், நம்மை பொறுத்தவரை தங்கம் ஒரு நீண்ட கால முதலீடு. அவசர தேவைக்கு மட்டுமே அதனை அடகு வைக்கவோ, சிறிய அளவில் விற்காகவோ செய்வோம்.

 

இதனை போலவே, ரியல் எஸ்டேட் முதலீடும். இன்று ஒரு வீட்டு மனையை குறைந்த விலையில் வாங்கி, நாளை அதனை விற்க நாம் முடிவெடுக்க மாட்டோம். ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த தொழிலதிபர்கள், ஏஜெண்டுகள் வேண்டுமானால் அதனை செய்யலாம். அவர்களும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு சிறிது காலம் எடுத்து கொள்ள வேண்டும். நாம் வாங்கிய வீட்டு மனையை, பின்னொரு காலத்தில் நமக்கு தேவையான சொத்தாக நாம் கருதலாம். இல்லையெனில், பிற்காலத்தில் அதனை விற்று பணம் பண்ணலாம், அதனை நமது தேவைக்கும் பயன்படுத்தலாம்.

 

ஆனால் பங்குகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். பங்குகளும், பங்குச்சந்தையும் வேற்று கிரக வாசிகள் அல்ல. அவையும் ஒரு தொழில் தான். தங்கத்தின் விலை நம் கையில் இல்லை. அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு ஏற்ப, அவற்றின் விலையும் மாறுபடும். ரியல் எஸ்டேட்(Real Estate Property Value) விலையும் நம் நம்பிக்கையில் அல்ல. அவை அரசின் கொள்கைகளிலும், சந்தையில் உள்ள வளர்ச்சி தேவையை பொறுத்தே அமையும். பங்குகளின் விலை தொழில் செய்யும் நிறுவனத்தின் திறனை பொறுத்து மாறுபடும். 

 

பொதுவாக முதலீடு என்பது மூன்று வகையான விஷயங்களை கொண்டிருக்கும் – ரிஸ்க் தன்மை(Risk), பணவீக்கத்தை தாண்டிய வருமானம்(Beat Inflation), வரி சலுகைகள்(Tax Concession). நீண்ட கால முதலீடு மற்றும் சொத்துக்களுக்கு மட்டுமே அரசு வரி சலுகைகளை அறிவிக்கும். ரிஸ்க் தன்மையை உணர்ந்து, நீண்ட காலத்தில் அதனை பரவலாக்கும் போது வருவாயும் அதிகமாக இருக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதாரத்தின் இரு கண்கள்:

 

தேவை – உற்பத்தி(Demand & Supply) மற்றும் கடன் வழங்குதல் – பெறுதல் (Lending & Borrowing) இவ்விரண்டும் பொருளாதாரத்தின் இரு கண்கள் எனலாம். இந்த இரு காரணிகளை நாம் எந்தவொரு காலத்திலும் தவிர்க்க இயலாது. தேவையில்லாத உற்பத்தியும், உற்பத்தியில்லாத தேவையும் எந்த பயனும் இல்லை. இதனை போலவே ஒருவர் கடன் கொடுக்க முன்வந்தால் மட்டுமே, மற்றொருவர் அதனை கடனாக பெற்று தொழில் புரிய முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இதன் காரணமாக தனிமனித வாழ்வில் நிதி மேம்படும்.

 

பங்குகளில் நீண்ட கால முதலீட்டிற்கு தயாராகும் போது, சரியான நிறுவனத்தை சரியான விலையில்(Choose the Right Stock at Fair Price) அடையாளம் காண்பது முக்கியம். நாம் அதனை பற்றிய விளக்கத்தை நமது தளத்தில் கொடுத்துள்ளோம். நாம் முதலீடு செய்யப்போகும் பங்குகளின் தொழில் நமக்கு புரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். புரியவில்லை என்றால், அதனை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு எங்கேனும் கிடைக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

 

பங்குச்சந்தை  முதலீடு – 14 நாட்கள்  இலவச பயிற்சி 

 

உங்களால் புரிந்து கொள்ள முடியாத பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம். நல்ல இடம், இன்னும் 5 வருடங்களில் மதிப்பு இரண்டு மடங்காகும் என தரகர் சொன்னார். ஆனால், ஸ்மார்ட் சிட்டி வரப்போகிறது என, அரசாங்கம் குறைந்த விலையை நிர்ணயித்து விட்டதே என மனை வாங்கிய பின் யோசிக்க கூடாது. வீட்டுமனை வாங்கும் போது, நமது எச்சரிக்கை உணர்வு எவ்வாறு உள்ளதோ, அதனை போலவே பங்குகளிலும், பிற முதலீட்டிலும்.

 

நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் தொழில் எதிர்கால சவால்களை சமாளிக்க கூடிய வகையில் இருக்குமா, தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனம் மாற தயாரானால், அதற்கான முதலீடு நிறுவனத்திடம் கைவசம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். நிறுவனத்தின் தொழில் தொடர் வளர்ச்சியை பெறுமா, அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதனுடைய இலக்கு மற்றும் திறன் என்ன என்பதும் அவசியம்.

 

அதிவேக வளர்ச்சி உள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம். அடுத்த 20 வருடங்களில் ஆண்டுக்கு 10-15 சதவீத தொடர் வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் போதும். இதனை கண்டறிய கடந்த 10-20 வருட கால நிதி அறிக்கையை உற்று நோக்குங்கள். 

 

நிறுவனத்தை பற்றிய செய்தி அடிக்கடி ஊடகங்களில் வராமல் இருக்க வேண்டும். செய்தியினால் உற்சாகமடையும் பங்குகளின் விலை, பின்பு அதே செய்தியால் வீழ்ச்சி அடையவும் செய்யலாம். நம்பகமான தொழில் மற்றும் நிறுவனமாக இருக்கும் போது, அவை ஊழியர்களை மட்டுமல்ல முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

 

நிறுவனம் தனக்கு கிடைத்த லாபத்தை வெறும் டிவிடெண்ட் தொகையாக(Dividend) மட்டும் கொடுக்காமல், தொழிலுக்கான அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்க முதலீடு செய்கிறதா என பார்க்க வேண்டும். பெரும் செல்வத்தை உருவாக்க நல்லதொரு தொழிலை (பங்குகள்) தேர்ந்தெடுப்பது அவசியம். பங்குகளில் கண்ட லாபத்தை மறுமுதலீடு செய்ய தயாராகுங்கள். இல்லையெனில், அதனை சரியான வழியில் பயன்படுத்துங்கள். 

 

ரிஸ்க் நிர்வாகம்(Risk Management), தொடர் முதலீடு மற்றும் பொறுமையே(Patience) நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் சாதனமாகும். இவை பங்கு முதலீட்டிலும் நீண்ட கால சொத்தாக மாற்றும் போது கிட்டும். மேலே சொன்னவற்றை உங்களால் கடைபிடிப்பது கடினம் என யோசித்தால், உங்களுக்கான சிறந்த நிதி ஆலோசகரை வைத்து கொண்டு முதலீடு செய்யுங்கள். அதுவும் சிரமம் எனில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும், பங்கு சார்ந்த திட்டத்தினை சரியாக தேர்ந்தெடுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

தொல்லையில்லா வாழ்வுக்கு தொடர் முதலீடு !

தொல்லையில்லா வாழ்வுக்கு தொடர் முதலீடு !

SIP Investing for Hassle free Living

எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan) எனப்படும் தொடர் முதலீட்டு முறையில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, தங்கள் நிதி இலக்குகளை அடையும் வரை தொடர்ச்சியாக முதலீடு செய்வதில்லை. இதனால் நாம் நிர்ணயித்த இலக்கினை அடைய முடியாமல் போகலாம் அல்லது அடைவதில் தாமதம் ஏற்படலாம்.

 

இந்த நிதி தவறு, பின்னாளில் குடும்பத்தின் நிதி நிலைமையையும் பாதிக்கலாம். நாம் ஒரு இலக்கை(Goal) நிர்ணயித்து விட்டு, அதற்கான தொடர் வேலைகளை செய்யாமல் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் குறுகிய காலத்தில் உணர வாய்ப்பில்லை. அதனால் தான் இலக்குகள் இளமை காலத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இளமை காலத்தில் நாம் சேமிக்கும் தொகை சிறிய அளவில் இருந்தாலும், நமது இலக்கை நோக்கி பயணிக்கையில் அந்த தொகை வளத்தை உருவாக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாம் கடன் வாங்கும் போது, எவ்வாறு தவணை தொகையை சரியாக ஒவ்வொரு மாதமும் செலுத்துகிறோமோ, அதே போல முதலீட்டையும் தவறாது செய்வது, நமக்கு நாமே செய்யும் கடமை. தொடர் முதலீட்டால் பயன் பெறப்போவது நாமும், நமது குடும்பமும் மட்டுமே. நம்மை நாமே மகிழ்வித்து கொள்வது தான் தொடர் முதலீட்டின் ரகசியமே.

 

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம். உங்களுக்கு 15 வருடங்களுக்கு பிறகு ஒரு கோடி ரூபாய் கார்பஸ்(Corpus) தொகை தேவைப்படுகிறது என வைத்து கொள்வோம். நீங்கள் செய்ய வேண்டிய மாதாந்திர முதலீடு (SIP) ரூ. 14,800 /- இதற்கு நீங்கள் 15 சதவீதம் வருவாய் தரக்கூடிய முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியெனில், அது பரஸ்பர நிதி முதலீட்டில் மட்டுமே தற்போதைய நிலையில் சாத்தியமாகும். 

 

11 சதவீத வட்டி வருவாய் எனில், நீங்கள் அடுத்த 15 வருடங்களுக்கு மாதாமாதம் 21,800 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 7 சதவீதம் மட்டுமே தரக்கூடிய முதலீட்டு சாதனமாக இருக்கும் போது, உங்கள் மாதாந்திர எஸ்.ஐ.பி. தொகை 31, 400 ரூபாய். என்ன சற்று மலைப்பாக இருக்கிறதா ? மாதம் ரூ. 50,000 மற்றும் ஒரு லட்சம் என முதலீடு செய்பவர்களும் நம் ஊரில் உண்டு. 

 

பொதுவாக எஸ்.ஐ.பி. முறையில் மாதாந்திர முதலீட்டை மேற்கொள்ளும் போது, நமக்கான முதலீட்டு காலத்தை நினைவில் கொண்டிருப்பது அவசியம். இலக்கிற்கான காலம் குறுகிய காலமாக இருக்கும் போது, செய்ய வேண்டிய மாத முதலீட்டு தொகை அதிகமாக இருக்கும். அதே வேளையில், இலக்கிற்கான காலம் நீண்ட காலமாக இருக்கும் நிலையில், நமது மாதாந்திர முதலீடும் குறைவாக அமையும். இது நமது இலக்கிற்கான தொகையை பொறுத்து மாறுபடும்.

 

உதாரணமாக எனக்கு 20 வருடங்களில் ஒரு கோடி ரூபாய் கார்பஸ் கிடைத்தால் பரவாயில்லை என்றால், உங்களது மாதாந்திர முதலீடு 6,600 ரூபாய் மட்டுமே. இதுவே 15 வருடங்கள் எனும் போது தான் அது 14,800 ரூபாயாக (15 சதவீத வருவாயில்) உள்ளது. அதனால் முதலீடு செய்யும் தொகையை காட்டிலும், இடைவிடாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே அவசியம். இவை அனைத்தும் கூட்டு வட்டியின் மகிமையே !

 

எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும் போது நான்கு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இலக்கிற்கான காரணம் அல்லது பெயர்(Goal Name), இலக்கிற்கான தொகை(Goal Amount), இலக்கிற்கான காலம்(Period) மற்றும் எதிர்பார்க்கும் வருமான விகிதம்(Expected Returns). இங்கே வருமான விகிதம் என்பது நமக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருவாய். பெரும்பாலான நிதி இலக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது இந்த வட்டி வருவாய் தான். எனவே சரியான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.

 

உதாரணமாக நீங்கள் மாதாமாதம் 700 ரூபாயை, அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 10 லட்சம். இதுவே 30 வருடங்களாக இருப்பின், உங்களுக்கு கிடைக்கப்பெறும் தொகை ரூ. 49 லட்சம். கூடுதலாக பத்து வருடங்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக முதலீடு செய்யும் போது, நமக்கு கிடைக்கும் தொகையும் அதிகமாக உள்ளது. 

 

மற்றுமொரு உதாரணம் – நீங்கள் மாதாமாதம் ரூ. 10,000 /- ஐ எஸ்.ஐ.பி. முறையில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில், 15 சதவீத வருவாய் எனும் போது, முடிவில் உங்களுக்கு 1.51 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் தொடர் முதலீடு செய்வது முக்கியம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உங்கள் நண்பர் ஒருவருக்கும் இதே போன்று ஒரு இலக்கு உள்ளது. காலம் மற்றும் முதலீடு செய்யும் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் முதல் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதாமாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்து வருகிறார். சில காரணங்களால் 6வது வருடம் முழுவதும் அவர் முதலீடு செய்யவில்லை. அதாவது 12 மாதங்கள் அவர் முதலீட்டை தொடரவில்லை. பின்னர் 7வது வருடம் முதல் இலக்கு காலமான 20 வருடங்கள் வரை அவர் முதலீட்டை தொடர்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு, உங்கள் நண்பருக்கு கிடைக்கும் முதிர்வு தொகை எவ்வளவு ?

 

ஆம், உங்களை விட குறைவே… எவ்வளவு தொகை குறைவு ?

 

உங்களுக்கும், நண்பருக்குமான இடைவெளி 10 லட்சம் ரூபாய் !!!

 

நண்பருக்கு, 20 வருட முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ. 1.41 கோடி. அவர் உங்கள் தொகையை அடைய இன்னும் சிறிது காலம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது அவருக்கான இலக்கு நாட்கள் வந்திருக்கலாம். இப்போது இது ஒரு தொல்லையே. 

 

நண்பர் முதலீடு செய்யாமல் விட்ட தொகை ரூ. 1.20 லட்சம் மட்டுமே (12 மாதங்கள் X 10,000/- மாத முதலீடு). ஆனால் அதற்கான இடைவெளி 10 லட்ச ரூபாய் மதிப்பில். இதனால் தான் நாம் தொடர் முதலீட்டின்  அவசியத்தை வலியுறுத்துவது. 

 

முதலீட்டில் நாம் காலத்தை தாமதப்படுத்த முடியாது. நமது குழந்தைகளின் மேற்படிப்பு(Child Education), திருமணம்(Marriage), நமக்கான ஓய்வு காலம்(Retirement) என்பவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற வேண்டியவை. அவற்றில் கால தாமதத்தை ஏற்படுத்தும் போது, அது நமக்கு தான் தொல்லை. எனவே இலக்கினை சரியாக திட்டமிடுங்கள். அதற்கான முதலீட்டை தொடர்ச்சியாக செய்யுங்கள். இலக்கிற்கான கார்பஸ் தொகையை, இடையில் எக்காரணத்திற்காகவும் எடுத்து விடாமல் இருப்பதும் அவசியம்.

தொல்லையில்லா வாழ்வுக்கு மட்டுமல்ல, தொடர் முதலீடு….

 

தொலைநோக்கு பார்வைக்கும் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

 

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

My Investment Strategy and its my Wealth Potential – Equity Investing Secrets

முதலீடு என்பது ஒரு கலை. அவற்றில் பங்கு முதலீடு என்பதே செல்வ சூத்திர கலை. பங்குகளில் விளையாட்டு பல்வேறாக இருந்தாலும், இறுதியில் பங்கு ஜெயிக்க வைப்பதோ தன் நீண்டகால நண்பனை தான். அதனால் தான் என்னவோ நான் நீண்டகால முதலீட்டாளராக இருப்பதில் மகிழ்வடைகிறேன்.

 

நம்மில் எண்ணற்றோருக்கு உடனடியாக பணம் பண்ண வேண்டிய ஆசை, விரைவாக பணக்காரராக வேண்டுமென்ற பேராசை. ஆனால் அப்படியொன்று இதுவரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் எப்போதும் சொல்லிக்கொள்வது இது தான், ‘ போன்சி(Ponzi Schemes) திட்டத்தின் மூலம் ஒருவர் விரைவாக பணக்காரராக முடியும் என எண்ணினால், ஏன் அதனை அம்பானியும், அதானியும் முயற்சிக்க கூடாது ‘. ஏனென்றால் அப்படி ஒரு ரகசியம் எதுவும் தொழிலுலகில் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழில் முதலீட்டில் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. அதனை சார்ந்து தொழில்கள் நகரக்கூடும். ஆனால் வளர்ச்சி என்பது நீண்டகாலத்திற்கு உரியது. நான் ஐந்து வருடத்தில் கோடீஸ்வரனாக மாறி விட்டு, தொழிலை தூக்கி போட்டு விட்டு செல்வதல்ல தொழில் வளர்ச்சி. அது தான் பங்கு முதலீடும். 

 

நம் முதலீடு வளர்வதற்கான காலம் தேவை. நான் படித்தவுடன் மேதையாகவில்லை; கை நிறைய சம்பளம் வாங்கவில்லை. எனக்கு அனுபவம் தேவைப்படுகிறது. கற்க முயற்சிக்கிறேன். ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறேன். சில வருடங்களுக்கு பின்பு, எனது துறையில் நான் வலுவடைகிறேன். இப்போது நான் விரைவாக முன்னேறுவதற்கான பாதை எனக்கு தெரிகிறது. இது தான் பங்கு முதலீட்டிலும்.

 

ஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக அல்லது எந்த துறையிலும் மேதையாக நாம் சில நாட்களில் உருவாகி விட முடியாது. அப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் மட்டும் நாம் அவ்வாறாக நடந்து கொள்வதில்லை. பங்குகளை வாங்கிய உடனே விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும். முதலீடு செய்த ஆறு மாதங்களில் அது கோடிகளாக மாற வேண்டும் – எவ்வாறு சாத்தியம் ? அப்படி ஒரு வேளை கோடிகளாக மாறி விட்டாலும், அதனை கொண்டு நீங்கள் என்ன திட்டத்தை கொண்டுள்ளீர்கள் ?

 

பங்குச்சந்தைக்கும் கற்றல் அவசியம். முறையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், புத்தகங்கள் வாயிலாகவோ, இணையம் வாயிலாகவோ கற்க முயலுங்கள். நாளிதழ்களில் உள்ள வணிக பக்கம் என்ன சொல்கிறது என கேளுங்கள். பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் தரத்தை பிரித்து பாருங்கள். வங்கிக்கும், பங்குச்சந்தைக்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என ஆராயுங்கள். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பங்குச்சந்தையை பற்றிய கற்றலை ஐந்து வருடங்களுக்கு தொடருங்கள். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நீங்களாகவே ஒரு நிறுவன பங்கை Fundamental Analysis அடிப்படையில் ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். கடினமாக உள்ளது என முடிவெடுத்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரை உங்கள் இடத்தில் வைத்து கொண்டு, பங்குகளை அலசுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் பின்வருமாறு முதலீடு செய்து பாருங்கள். யாரும் இதற்கு முன்பு இவ்வாறு உங்களுக்கு சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உங்கள் பங்கு தரகர் சொல்லியிருக்க மாட்டார். 

 

என் பங்கு முதலீட்டு கொள்கை – முதலீட்டு சூத்திரம்:

 

  • ஆரம்ப  நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கின் மீது சிறிய அளவில் முதலீடு செய்யுங்கள். அதாவது உங்கள் மொத்த முதலீட்டு தொகையில் 5-10 சதவீத தொகைக்கு மட்டும்(Investing in a Small Quantity or Little Money). பங்குகளின் எண்ணிக்கை முக்கியமல்ல. மற்றவர் 1000 பங்குகள் வாங்கியுள்ளார்; நானும் வாங்கி விரைவாக லாபம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்ள வேண்டாம்.

 

  • எந்தவொரு பங்குகளில் முதலீடு செய்யும் போது, முதற்கட்டமாக சிறிய அளவில் முதலீடு செய்யும் காலத்தை சோதனை செய்யும் காலமாக எடுத்து கொள்ளலாம். அந்த பங்கு அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறதா என்பதனை நம்மால் அறிய முடியும். நன்றாக பங்கு வீழ்ச்சியடையும் பட்சத்தில், மலிவான விலையில் நாம் சராசரி(Average on Share Price) செய்து கொள்ளலாம். ஏற்றமடைந்தால் கவலை கொள்ள வேண்டியதில்லை.

 

  • வாங்கிய பங்கின் ஒவ்வொரு காலாண்டு விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை(Track Financial Results) குறித்து கொள்ளுங்கள். வளர்ச்சியில் ஏதேனும் குறை இருந்தால் காரணத்தை கண்டுபிடியுங்கள். டிவிடெண்ட், போனஸ் அறிவிப்பு ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.

 

  • நீங்கள் வாங்கிய பங்கின் விலை, நீங்கள் வாங்கிய விலையிலிருந்து இரு மடங்காக சென்றால், உங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் பாதியை விற்று விடுங்கள்(Sell half after doubled the price). இவற்றில் எந்த சமரசமும் செய்யாதீர்கள். பாதி பங்குகளை விற்ற நிலையில், உங்களது முதலீடு உங்களிடமே திரும்ப வந்து விட்டது. வந்த முதலீட்டை கொண்டு மற்றொரு நல்ல பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் திறமை. இல்லையென்றால், உங்களுக்கான மற்ற முதலீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

  • மீதம் இருக்கும் பங்குகளை நிறுவனம் நன்றாக செயல்படும் காலம் வரை வைத்திருங்கள்(Keep the half for a long to Wealth). இங்கே இரு மடங்கு விலை அவசியமில்லை. உங்களிடம் உள்ள இந்த மீத பங்குகள் தான் செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்புகள். அவை பல காலங்களை கடக்க கூடியது. 

 

  • மேலே சொன்னவற்றை ஒவ்வொரு நிறுவன பங்கை தேர்ந்தெடுக்கும் போதும் கடைபிடிக்க வேண்டும். கையிருப்பில் வைத்திருக்கும் பங்குகளை கொண்டு டிவிடெண்ட் வருவாய் பெறுவதற்கான சாத்தியங்களையும் உருவாக்கி கொள்ளுங்கள்(Create Cash Flow from Stocks). இதனை தான், ‘பணக்கார தந்தை ஏழை தந்தை’ புத்தக ஆசிரியர் ராபர்ட் கியோசகி எப்போதும் சொல்லி வருகிறார். பங்குகளை கொண்டு தொடர் வருமானத்தை ஏற்படுத்துவது அவசியமென்று.

 

  • தொடர் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும், அதிக கடனை சுமக்கும் சரியில்லாத பங்குகளை வைத்திருக்காதீர்கள். நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் வரை காத்திருக்காமல், பங்குகளை விற்க தயாராகுங்கள்.

 

  • தெளிவான நோக்கத்தை கொண்ட நிறுவனர், நல்ல நிர்வாகம், குழப்பமில்லா நிதி அறிக்கைகள் ஆகியவற்றை கொண்ட நிறுவன பங்குகளை தேடுங்கள். (Promoter, Corporate Governance and Financial Statements) 

 

இது தான் நான் கற்ற பங்கு முதலீட்டு சூத்திரம். பிடித்தால் பழகுங்கள். இல்லையெனில் நீங்கள் ஒரு முதலீட்டு சூத்திரத்தை கண்டறியுங்கள். செல்வத்திறன் செவிமடுக்கட்டும்.

 

Let us listen to Wealth !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

Why you should not choose a Dividend Plan in Mutual Funds ?

பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் பண்டுகளில் இரு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று வளர்ச்சி(Growth Plan) சார்ந்த பிரிவு, மற்றொன்று டிவிடெண்ட் என சொல்லப்படும் ஈவுத்தொகை(Dividend Plan) சார்ந்த பிரிவாகும். இவற்றில் நான் எதனை தேர்ந்தெடுக்க வேண்டுமென கேட்டால், பொதுவாக வளர்ச்சி சார்ந்த பிரிவு தான். இது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியும் கூட.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என் கையில் இப்போது ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. நான் அதனை உங்களுக்கு தர விரும்புகிறேன். நீங்கள் அதனை இப்போது வாங்கி கொள்வீர்களா அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு வாங்கி கொள்வீர்களா ?

 

இது தான் பணத்தின் கால மதிப்பு (Time Value of Money). உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை நான் வழங்க விரும்புகிறேன். அதாவது நீங்கள் என்னிடமிருந்து பெறக்கூடிய ஒரு லட்சம் ரூபாயை, ஒரு வருடத்தின் முடிவில் பெற்றால் நான் 12 சதவீத வட்டியுடன் (ஆண்டுக்கு) தர தயாராக உள்ளேன். இப்போது உங்கள் முடிவு என்ன ?

 

இல்லையெனில், நீங்கள் இன்றே அந்த ஒரு லட்சம் ரூபாயை பெற்று கொண்டு, நாளை உங்களால் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை கண்டறிய முடியுமா ? நான் சொன்ன 12 சதவீத வட்டி வருவாயை காட்டிலும் அற்புதமான திட்டத்தை ஏதும் நீங்கள் கண்டறிந்து உள்ளீர்களா ? இது தான் முதலீட்டு வாய்ப்பிற்கான தேடல். 

 

பொதுவாக பணக்காரர்கள் (ஊகத்தில் இருப்பவர்கள் அல்ல) பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்புகள் மற்றும் வீட்டு மனையை காட்டிலும் தங்கள் தொழில் மீது தான் ஆர்வம் காட்டுவர். உண்மையில் அவர்கள் வணிகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் தொழிலின் ரிஸ்க் தன்மையை உணர்ந்து நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற தயாராக உள்ளனர்.

 

பணக்காரர்கள் அதிக வளர்ச்சி இல்லாத எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தொழிலில் தோல்வி அடைந்தாலும் கூட, நல்ல முதலீட்டு வாய்ப்பை தேடுகின்றனர். எனவே அவர்கள் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளில் சிறிய அளவில் முதலீடு செய்வர். அவர்களின் முக்கிய பங்கு, தொழில் முதலீட்டில் தான். பணக்காரர்கள் தங்கள் முதலீட்டின் மூலம் தொடர்ச்சியான பணப்புழக்கத்தை உருவாக்க முற்படுகிறார்கள். அதனால் தான் அவர்களால் வேலைவாய்ப்புகளும், தொழில் விருத்தியும் ஏற்படுகிறது. இது தான் பணத்தின் கால மதிப்பு.

 

பொதுவாக வளர்ச்சி பங்குகளும்(Growth Stocks), பரஸ்பர நிதிகள் வழங்கும் வளர்ச்சி திட்டங்களும்(Growth Plan – Mutual Funds) உங்கள் மூலதனத்தை  பெருக்க கூடியவை. அதே நேரத்தில், டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களும், டிவிடெண்ட் திட்டங்களும் நல்ல ஈவுத்தொகையை கொடுக்கும். ஆனால், பெருவாரியான வளர்ச்சியை பெறாது. சந்தையில் நல்ல நிறுவன பங்குகளின் விலை எப்போதும் அதிகமாக தான் இருக்கும். டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களின் பங்கு விலை நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. காரணம் என்னவென்றால், அளிக்கப்பட்ட டிவிடெண்ட் தொகை எந்த வளர்ச்சியையும் பெறுவதில்லை.

 

உங்கள் வீடு குறிப்பிடத்தக்க வாடகை வருமானத்தை தராமல் போகலாம், ஆனால் அவற்றின் முதலீடு அருமையான விலையை கொண்டிருக்கலாம். அதனால் தான் நகர்ப்புறங்களில் நெரிசலான இடங்களில் வீட்டு மனையின் விலை அதிகமாக உள்ளது. காரணம், அவை நல்ல தொடர் வருவாயை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பால்.

 

நீங்கள் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகாது எனில், அவை கூட்டு வட்டியின் மதிப்பை இழக்கின்றன. நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாய் (தேவையில்லாத நிலையில்) எந்தவொரு வளர்ச்சியையும் பெறுவதில்லை. ஆனால் அதனை அருகிலுள்ள வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ டெபாசிட் செய்திருந்தால், அது மற்றொருவருக்கு வங்கியின் மூலம் கடனாக கொடுக்கப்படும். உங்களுக்கான வருவாய் வளர்ச்சியும் கிடைக்கும். 

 

டிவிடெண்ட் பங்குகளும், பரஸ்பர நிதிகளின் டிவிடெண்ட் திட்டங்களும் பொதுவாக ஓய்வு பெறும் நபர்களுக்கு பயன்படும். ஏனென்றால் அவர்களுக்கு வளர்ச்சியை விட, தொடர் வருவாய் அவசியமாகும். இது போல தொடர் வருவாய் பெற விரும்புபவர்கள் வேண்டுமானால், இது போன்ற திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதே வேளையில் எந்த பங்கும், டிவிடெண்ட் திட்டமும் ஒரே  அளவிலான டிவிடெண்ட் தொகையை தொடர்ச்சியாக அளிக்கும் என சொல்ல முடியாது. 

 

இளைய தலைமுறையினரும், ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களும் வளர்ச்சி பெறக்கூடிய நிறுவனங்களையும், வளர்ச்சி பிரிவு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களையும் தேர்ந்தெடுக்கும் போது, அபரிதமான முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, முதலீடு என்பது வளர வேண்டும். இது போன்ற டிவிடெண்ட் திட்டங்களால் அவை கட்டுப்படுத்தப்பட கூடாது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

Public Provident Fund (PPF) – Postal Savings Scheme

முன்னொரு காலத்தில் அரசு வேலை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியமும், கூடுதலாக வருங்கால வைப்பு நிதி என சொல்லப்படும் பி.எப்.(Provident Fund) சேமிப்பும் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. ஆனால் 2004ம் ஆண்டிற்கு பின், அரசு மற்றும் பொதுத்துறையில் ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டு புதிய பென்ஷன் திட்டம் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டம்(NPS), பழைய ஓய்வூதிய முறையை போல பாதுகாப்பான பலனை கொடுக்கும் என அரசு சார்பில் சொல்லப்படவில்லை. அது போக, இன்று அரசு வேலையில் பி.எப். சேமிப்பும் பிடிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமே தற்போது பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு முறை இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முறையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்று அஞ்சலகம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் சேமிப்பு சாதனமாக பி.பி.எப். நிதி உள்ளது.

இந்திய குடிமக்களாக உள்ள தனிநபர் ஒருவர் பி.பி.எப். கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலோ அல்லது வங்கி கிளையிலோ துவங்கலாம். கணக்கு துவங்கும் போது 100 ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் சேமிப்பது அவசியம். அதிகபட்ச முதலீடு ரூ. 1,50,000.

பி.பி.எப். கணக்கில் ஒரு முறை முதலீடு அல்லது மாதாமாதம் தவணை முறையிலும் சேமிக்கலாம். கூட்டு கணக்கை(Joint Account) பி.பி.எப். நிதியில் துவங்க இயலாது. நாமினியை எப்போது வேண்டுமானாலும் நியமித்து கொள்ளலாம். இருப்பினும், கணக்கு துவங்கும் போது நாமினியை நியமிக்கும் பட்சத்தில், பின்னாளில் எந்த சிக்கலும் வராது.

பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்(Long term Savings Plan). இதன் முதலீட்டு காலம் 15 வருடங்கள். தேவைப்பட்டால், கூடுதலாக ஐந்து வருடங்கள் நீட்டித்து கொள்ளும் வசதியும் உண்டு. பி.பி.எப். நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு.

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

வரி சலுகை என்பது பி.பி.எப். நிதியில் மூன்று விதமான நிலையில்(EEE – Exempt) பலனை தருகிறது. முதலீடு செய்யும் போதும், கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் பெறப்படும் மொத்த தொகை என மூன்று நிலையிலும் வரி செலுத்த தேவையில்லை.

பி.பி.எப். கணக்கை துவங்கிய மூன்றாவது நிதியாண்டிலிருந்து கடன் வசதியும் உண்டு. கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்ப, நமது கடன் தொகையும் மாறுபடும். அவசர காலத்திற்கு பணம் தேவைப்படும் நிலையில், கணக்கு துவங்கிய ஏழாவது நிதியாண்டிலிருந்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் வசதி உண்டு.

நடப்பில் பி.பி.எப். நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவீதம். பொது வருங்கால வைப்பு நிதி ஒரு ஓய்வூதிய திட்டமாக(Retirment Plan) நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நன்மையை அளிக்கும். நீண்ட காலத்தில் சேமிக்கப்படும் போது, நமது ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகையை பெறலாம். இதனை கொண்டு மாதாமாதம் வருமானத்தை தரும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தில் போட்டு வைக்கலாம்.

பி.பி.எப். கணக்கை இணைய வாயிலாகவும் தொடங்கும் வசதி உண்டு. தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பி.எப்.(PF, VPF) கணக்கு இல்லாதவர்கள் பொது வருங்கால வைப்பு நிதியை பயன்படுத்தி கொள்வது சிறப்பம்சம்.

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

Senior Citizen Savings Scheme (SCSS) – Postal Savings Scheme

அஞ்சலக சிறு சேமிப்பின் கீழ் பல திட்டங்கள் வலம் வந்தாலும், அதன் சிறப்பம்சமே மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் தான். இளம் தலைமுறையினருக்கும், வருமான வரி வரம்பில் உள்ளோருக்கும் பல சேமிப்பு திட்டங்களும், பல்வேறு முதலீட்டு சாதனங்கள் இருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சேமிப்பு திட்டங்கள் இருப்பது அவசியமாகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS) என்பது ஐந்து வருட கால வைப்பு திட்டம் போன்றது. ஒரு முறை மட்டும் வைப்பு தொகையாக சேமிக்கும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1000. அதற்கு மேற்பட்ட முதலீடு 1000 ரூபாய் மடங்கில் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு. திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை ரூ. 1 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் ரொக்கமாக செலுத்தலாம். ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையாக இருந்தால், காசோலை(Cheque) மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதே வேளையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது சில துறைகளில் 60 வயதுக்கு முன்பு ஓய்வு பெறக்கூடிய நிலையில், 55 வயது தளர்வு என்ற சலுகை அளிக்கப்படுகிறது. எனவே, இது போன்ற சமயங்களில் 55 வயது நிரம்பியவர்கள் முதலீடு செய்யலாம். அதற்கான ஆவணங்களை கணக்கு ஆரம்பிக்கும் நிலையில் சமர்பிக்க நேரிடும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI), இந்து கூட்டு குடும்பம்(HUF) ஆகியோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் முதிர்வு காலத்தை அடுத்த மூன்று ஆண்டுகள் வரை கணக்கை நீட்டித்து கொள்ளலாம். கணக்கை முதிர்வு காலத்திற்கு முன்னரே மூட முடிவு செய்தால், கணக்கு துவங்கிய ஒரு வருடத்திற்கு பின்னர் மூடலாம். அதற்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கை தனிநபர் ஒருவரின் பெயரில் அல்லது கூட்டு கணக்காகவும் (Joint Account கணவன் – மனைவி மட்டும்) தொடங்கலாம். நாமினியை எந்தவொரு சமயத்திலும் நிர்ணயிக்கலாம். தனிநபர் ஒருவர், ஒரு நேரத்தில் ஒரு கணக்கை மட்டுமே துவங்க முடியும். நடப்பில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது.

திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு வரி சலுகை உண்டு. அதே வேளையில் கிடைக்க கூடிய வட்டி வருவாய் ஒரு நிதியாண்டில்(2019-20) ரூ. 50,000 க்கு மிகும் போது, டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். இன்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலகத்தில் மட்டுமில்லாமல் வங்கிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

கணக்கு துவங்க அடையாள மற்றும் முகவரிக்கான நகல், பான் எண், நாமினி விவரங்கள் மற்றும் முதலீட்டு தொகைக்கான காசோலை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் இத்திட்டம் குறுகிய கால இலக்கிற்கு பயன்படும்படி அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு

செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு 

Sukanya Samriddhi Yojana – Postal Small Savings Scheme

 

அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் நல்ல வட்டி வருவாயை கொண்டிருப்பது மூத்த குடிமக்கள் திட்டம் எனலாம். இதற்கு அடுத்தாற் போல் இருப்பது பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்(Sukanya Samriddhi). நடப்பில் இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.40 சதவீதம்.

 

செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தங்கள் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க உள்ள பெற்றோர், விரைவாக கணக்கை துவங்கினால் தான் குறிப்பிட்ட பலனை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

திட்டத்தில் சேர 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையாக(Girl Child) இருக்க வேண்டும். எனவே குழந்தை பிறந்த சில நாட்கள் அல்லது வாரங்களில் திட்டமிடுவது சிறந்தது. கணக்கு முடியும் தருணம் குழந்தையின் 21வது வயதில் முடிவடையும். அதாவது ஒரு வயதுக்குள் ஆரம்பிக்கப்பட்ட கணக்கு 21வது வருடத்தில் முடிவு பெறும். நாம் தாமதமாக கணக்கை ஆரம்பிக்கும் போது, முதிர்வு காலமும் மாறுபடும்.

 

பெண் குழந்தையின் பெயரில் அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கை துவங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு(Minimum Investment) ரூ. 250. அதிகபட்சமாக முதலீட்டிற்கு வரம்பு எதுவுமில்லை. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை முதலீடு செய்யும் ஒருவருக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை உண்டு (வருமான வரி செலுத்தக்கூடியவராக இருந்தால்). 

 

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறும் பட்சத்தில் கணக்கு செயல்பாடு நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும் அபராத கட்டணத்தை செலுத்தி கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

 

பெண் குழந்தை தனது 18 வயதை அடையும் போது, மேற்படிப்பு செலவுக்காக முதலீடு செய்த தொகையில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை பணமாக பெற்று கொள்ளலாம். மீதமிருக்கும் தொகையை 21 வருட முடிவில் திரும்ப பெறலாம். 18வயது நிரம்பியவுடன் பெண் திருமணம் செய்வதற்கு தயாராகி விட்டால், கணக்கை முன்னரே முடித்து கொள்ளும் சலுகையும் அளிக்கப்படுகிறது.

 

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது வங்கியில் துவங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கை மட்டுமே துவங்க முடியும். அதே வேளையில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் (இரு பெண் குழந்தைகள்).

இரட்டை பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகளுக்கு கணக்கு துவங்க அனுமதி அளிக்கப்படும். இருப்பினும் அதற்கான பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தத்து எடுக்கப்படும் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து செல்வமகள் கணக்கை தொடங்கலாம்.

 

திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு வருமான வரி சட்டம் 80சி கீழ் முழு வரி சலுகையும் உள்ளது. அதாவது முதலீடு செய்யும் பணத்திற்கு, கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் கிடைக்க கூடிய மொத்த தொகை என மூன்று விதமான வரி சலுகை அளிக்கப்படுகிறது. 

 

செல்வமகள் திட்டத்தின் கணக்கை ஆரம்பிப்பதற்கு பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள நகல்(ID Proof), முகவரி நகல், பான் எண்(PAN), பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் குழந்தையின் புகைப்படம் அவசியம். 

 

பரஸ்பர நிதி முதலீட்டை புரிந்து கொண்டு, முதலீடு செய்ய உள்ளோர் செல்வமகள் திட்டத்திற்கு மாற்றாக பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை பெறலாம். வரி சலுகைக்காக மட்டுமே செல்வமகள் திட்டத்தை பயன்படுத்தாமல், தங்கள் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவையை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது நலம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

   

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்  

National Savings Certificate (NSC) – Postal Savings Scheme

வருமான வரி சேமிப்பு(Tax Savings) என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது காப்பீடு திட்டம் தான். இதற்கு அடுத்ததாக நம்மில் பலருக்கு தோன்றுவது அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் தான். அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் பல வரி சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன.

ஐந்து வருட வைப்பு நிதி, செல்வ மகள் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி(PPF), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) என வரி சேமிப்பு திட்டங்களை அஞ்சலகத்தில் காணலாம். இங்கு நாம் காணப்போவது தேசிய சேமிப்பு பத்திரம் சார்ந்து.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டம் எனலாம். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.

அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான  வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பொதுவாக 5 வருட கால அளவை கொண்டிருக்கும். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதம் (October 2019). வட்டி விகித முறை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும். அதாவது தற்போது முதலீடு செய்யப்படும் 100 ரூபாய், ஐந்து வருட முடிவில் ரூ. 146.25 ஐ பெற்று தரும்.

5 வருடம் மற்றும் 10 வருடம் என இரு வகைகளில் திட்டம் உள்ளதால், இதனை வங்கிகளில் அடமானம் வைத்து கடனும் பெறலாம் என்பது கூடுதல் அம்சம். வரி சேமிப்பிற்கு அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை (u/s 80C) முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்ட முதலீட்டு தொகைக்கு வரி சலுகை பெற இயலாது.

பொதுவாக இது போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் கால அளவுகள் (5 அல்லது 10 வருடங்கள்) முடிவதற்கு முன்னர், பணத்தை திரும்ப பெற முடியாது. இருப்பினும், திட்டத்தில் முதலீடு செய்த சந்தாதாரர் ஒருவர் எதிர்பாராத நிகழ்வால் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினி கணக்கை முடித்து கொண்டு பணத்தை உடனே பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகைக்கு டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படாது. முழுத்தொகையும் சந்தாதாரர்களின் கையில் கிடைக்கப்பெறும். இருப்பினும் ஒருவர் தனது வருமான வரம்பை கணக்கில் கொண்டு, முதலீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும்.

வரி சேமிப்பு திட்டத்தினை பொறுத்தவரை லாக்-இன்(Lock-in) எனப்படும் விதிமுறை உண்டு. தற்போதைய நிலையில் குறைந்த லாக்-இன் வசதி, பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் வரி சேமிப்பு பண்டுகளுக்கு (Tax Savings Funds – ELSS – 3 Years) மட்டுமே உண்டு. மற்ற முதலீடுகள் 5 வருடம், 10 வருடம், 15 வருடங்களுக்கு மேலாக என லாக்-இன் விதிமுறைகள் மாறுபடும்.

வருமான வரி சேமிக்கிறேன் என நமக்கு பயன்படாத திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லதல்ல. நமது வருமான வரியை நேர்மையான முறையில் சேமிக்க வேண்டும், அதே வேளையில் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தையும் அது தர வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா

பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா 

Anuh Pharma – Fundamental Analysis – Value Investing

மருந்து துறையில் 80 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்டிருக்கும் எஸ்.கே. குழும(SK Group) நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்து தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக அனுக் பார்மா நிறுவனம் திகழ்கிறது.

மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஏற்றுமதியிலும் தனது சேவையை கொண்டுள்ளது இந்த நிறுவனம். நடப்பாண்டில் இதுவரை 483 அவதானிப்புகளுக்கு(USFDA Observations) அமெரிக்க மருந்து மற்றும் நிர்வாக ஆணையத்திடம் இருந்து ஆய்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த 1960ம் ஆண்டு முதல் மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிட்டிருக்கும் அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 370 கோடி ரூபாய். சிறு நிறுவனமாக இருந்தாலும், தனது சிறப்பான செயல்பாட்டால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை தந்துள்ளது.

நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் தற்போது 0.03 புள்ளிகளாக உள்ளது. எனவே கடன் என்று பெரிதாக எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 130 மடங்காக உள்ளது நிறுவனத்திற்கு சாதகமானது. நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை என்பதும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயம்.

காலாண்டு விற்பனை மற்றும் நிகர லாபம் சராசரியான வளர்ச்சியை பெற்றுள்ளது எனலாம். கடந்த மூன்று வருட கால அளவில் இதன் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி குறைந்துள்ளது. பத்து வருடங்களில் விற்பனையும், லாபமும் 10 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கின்றன.

பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீதமும், ஐந்து வருட கால அளவில் இது 15 சதவீதமாகவும், 10 வருடங்களில் 17 சதவீதமாகவும் உள்ளது. பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. பத்து வருட கால அளவில் 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளன.

2018-19ம் நிதியாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 152 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்மால் கேப்(Small Cap) குறியீட்டில் காணப்படும் இந்த நிறுவனத்தின் அடுத்த சில காலாண்டு முடிவுகளை ஆராய்ந்து பங்கு விலையின் மீது கவனம் செலுத்தலாம்.

நிறுவனம் சார்பாக இதுவரை ஐந்து முறை போனஸ் பங்குகள்(Bonus Issue) வழங்கப்பட்டுள்ளன. சமீப போனஸ் பங்குகளாக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் போனஸாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்  

Understanding between the Needs and Wants

தேவைக்கும், விருப்பத்திற்குமான இடைவெளியை நம்மால் புரிந்து கொண்டால் மட்டுமே, நிதி சார்ந்த வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லாமல் பயணிக்க முடியும். நமது மனதில் தோன்றியவை எல்லாம் தேவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

நாம் இன்று உயிர் வாழ தேவையான உணவு, தட்பவெப்ப நிலையை சமாளிக்க தேவையான உடை மற்றும் இருப்பிடம், சுகாதாரம் மற்றும் சுத்தமான காற்று ஆகியவையே நமது இன்றியமையாத தேவையாகும்(Regular Needs). நாம் கற்கும் கல்வி முன்னர் அத்தியாவசியமானதாக சொல்லப்படவில்லை.

இருப்பினும், நாம் மேலே சொன்ன உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடைய இன்று கல்வி தேவைப்படுகிறது. அதற்கு குறைந்தபட்ச அறிவை பெறுதலே சிறந்தது. தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டாலே, வாழ்வு இனிமையாக அமையும்.

தேவையை பற்றி சொல்லி விட்டோம். தேவையை நாம் எக்காரணத்திற்காகவும் தவிர்க்க இயலாது. விருப்பம் என்பது நமது மனம் கேட்க துவங்கியது, இவற்றில் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது மனம் ஆசைப்பட்ட அனைத்தையும் தேவையாக மாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு நான்கு சக்கர வாகனம்(Car) வேண்டுமென்றால் நீங்கள் உடனே அதனை தேவையாக எண்ணி விட கூடாது. உங்களுக்கென்று நிறைய மாற்று வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வசிக்கும் இடம் நகரமாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி, ரயில் என பல வாய்ப்புகள் இருக்கலாம்.

வாகனம் வாங்குவதை, உங்களின் விருப்பமாக கொண்டு அதன் தினசரி தேவையென்ன மற்றும் அதனை வாங்குவதற்கு நீங்கள் எந்த மாதிரியான நிதித்திட்டமிடலை செய்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். என்னுடன் பணிபுரியும் சக அதிகாரி மற்றும் ஊழியர்கள், நண்பர்கள் இந்தந்த பொருட்களை வாங்கியுள்ளனர். நான் ஏன் வாங்க கூடாது என நிதி சிக்கலில் மாட்டி விட கூடாது.

விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்

நாம் சில வருடங்களுக்கு முன்பு, கடைக்கு செல்ல நடந்து சென்றிருப்போம் அல்லது சைக்கிளை பயன்படுத்தியிருப்போம். ஆனால், இப்போது இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம். இதுவும் நமது விருப்பத்தினால் தான். நமக்கு வயதாகி விட்டது, அதனால் நடக்க முடியாது எனில் நாம் வாங்கிய வாகனத்தை நமது குழந்தைகள் ஏன் அதனை உடனே பயன்படுத்த வேண்டும் ? அவர்களையும் சிறிது காலத்திற்கு நடக்க சொல்லி அல்லது சைக்கிளில் பயணம் செய்து கடைக்கு செல்ல அறிவுறுத்தலாமே. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம், ஆனால் அவற்றால் நாம் உற்சாகத்தை இழந்து விடக்கூடாது.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இலவசமாக தண்ணீர் கிடைக்கும் போது, சுத்தமான நீர்(RO Water) வேண்டுமென ஆசைப்பட்டோம். ஆனால் இன்று தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற தேவைக்காக தள்ளப்பட்டுள்ளோம்.

உங்களுடைய அனைத்து விருப்பங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றில் எந்தந்த விருப்பங்கள் முதன்மையாக (உண்மையில்) கருதப்படுகிறதோ, அவற்றை அடைவதற்கான நிதி திட்டமிடலை உருவாக்குங்கள். கடனாக வாங்கி சிரமப்படாதீர்கள்.

நான் எப்போதும் சொல்லும் அந்த கூற்று தான் இங்கேயும், ‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தால் அதனை கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள் ? (அதற்காக அதிர்ஷ்டத்தை நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாமே).

உங்களுக்கான வாய்ப்புகள்:

  • ஆடம்பரமாக பொருட்களை வாங்கி குவித்து மகிழ்வேன்.
  • எனது கடனை அடைத்து கொள்வேன்.
  • வீட்டிற்குள் பத்திரமாக மறைத்து வைப்பேன்.
  • பாதுகாப்பான வங்கி டெபாசிட்டில் போட்டு வைப்பேன்
  • தொழில் செய்ய பயன்படுத்தி கொள்வேன்
  • நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டை கண்டறிந்து, முதலீடு செய்வேன்.
  • இன்னும் முடிவு செய்யவில்லை / என்ன செய்வதென்று தெரியவில்லை

தேவைகளை ஓரளவு குறைத்து கொள்ளலாம். விருப்பங்களை தேர்ந்தெடுத்து, சரியான நிதி திட்டமிடல் மூலம் அதனை அடைய முயற்சிக்கலாம். தேவைக்கு மட்டும் கடன் பெறுங்கள். அவசியமற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com