India Post PPF

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

Public Provident Fund (PPF) – Postal Savings Scheme

முன்னொரு காலத்தில் அரசு வேலை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியமும், கூடுதலாக வருங்கால வைப்பு நிதி என சொல்லப்படும் பி.எப்.(Provident Fund) சேமிப்பும் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. ஆனால் 2004ம் ஆண்டிற்கு பின், அரசு மற்றும் பொதுத்துறையில் ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டு புதிய பென்ஷன் திட்டம் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டம்(NPS), பழைய ஓய்வூதிய முறையை போல பாதுகாப்பான பலனை கொடுக்கும் என அரசு சார்பில் சொல்லப்படவில்லை. அது போக, இன்று அரசு வேலையில் பி.எப். சேமிப்பும் பிடிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமே தற்போது பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு முறை இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முறையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்று அஞ்சலகம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் சேமிப்பு சாதனமாக பி.பி.எப். நிதி உள்ளது.

இந்திய குடிமக்களாக உள்ள தனிநபர் ஒருவர் பி.பி.எப். கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலோ அல்லது வங்கி கிளையிலோ துவங்கலாம். கணக்கு துவங்கும் போது 100 ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் சேமிப்பது அவசியம். அதிகபட்ச முதலீடு ரூ. 1,50,000.

பி.பி.எப். கணக்கில் ஒரு முறை முதலீடு அல்லது மாதாமாதம் தவணை முறையிலும் சேமிக்கலாம். கூட்டு கணக்கை(Joint Account) பி.பி.எப். நிதியில் துவங்க இயலாது. நாமினியை எப்போது வேண்டுமானாலும் நியமித்து கொள்ளலாம். இருப்பினும், கணக்கு துவங்கும் போது நாமினியை நியமிக்கும் பட்சத்தில், பின்னாளில் எந்த சிக்கலும் வராது.

பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்(Long term Savings Plan). இதன் முதலீட்டு காலம் 15 வருடங்கள். தேவைப்பட்டால், கூடுதலாக ஐந்து வருடங்கள் நீட்டித்து கொள்ளும் வசதியும் உண்டு. பி.பி.எப். நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு.

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

வரி சலுகை என்பது பி.பி.எப். நிதியில் மூன்று விதமான நிலையில்(EEE – Exempt) பலனை தருகிறது. முதலீடு செய்யும் போதும், கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் பெறப்படும் மொத்த தொகை என மூன்று நிலையிலும் வரி செலுத்த தேவையில்லை.

பி.பி.எப். கணக்கை துவங்கிய மூன்றாவது நிதியாண்டிலிருந்து கடன் வசதியும் உண்டு. கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்ப, நமது கடன் தொகையும் மாறுபடும். அவசர காலத்திற்கு பணம் தேவைப்படும் நிலையில், கணக்கு துவங்கிய ஏழாவது நிதியாண்டிலிருந்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் வசதி உண்டு.

நடப்பில் பி.பி.எப். நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவீதம். பொது வருங்கால வைப்பு நிதி ஒரு ஓய்வூதிய திட்டமாக(Retirment Plan) நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நன்மையை அளிக்கும். நீண்ட காலத்தில் சேமிக்கப்படும் போது, நமது ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகையை பெறலாம். இதனை கொண்டு மாதாமாதம் வருமானத்தை தரும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தில் போட்டு வைக்கலாம்.

பி.பி.எப். கணக்கை இணைய வாயிலாகவும் தொடங்கும் வசதி உண்டு. தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பி.எப்.(PF, VPF) கணக்கு இல்லாதவர்கள் பொது வருங்கால வைப்பு நிதியை பயன்படுத்தி கொள்வது சிறப்பம்சம்.

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s