Category Archives: mutual funds

பரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5

பரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5

Mutual Funds Taxation – Income Tax Returns – Lesson 5

 

வங்கிகளில் பெறப்படும் வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டவை என கூறியிருந்தோம். அது போல வங்கி வைப்பு நிதிகளுக்கு டி.டி.எஸ். பிடித்தம் உள்ளது என்பதையும் நாம் அறிந்து கொண்டோம். மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என நாம் காண்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளுக்கு(Shares) டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதே வேளையில் பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளுக்கு பங்கு பரிவர்த்தனை வரி உண்டு. இருப்பினும் நாம் பரஸ்பர நிதித்திட்டங்கள் மற்றும் சந்தையில் விற்கும் பங்குகளின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை நாம் தான் வருமான வரி தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

 

பரஸ்பர நிதித்திட்டங்களில் வரி விதிப்பு இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கடன்(Debt) சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள், மற்றொன்று பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Oriented) மற்றும் கலப்பின திட்டங்கள் ஆகும். கலப்பின திட்டங்கள்(Hybrid or Balanced Funds) என்பது கடன் சந்தை மற்றும் பங்கு சந்தை சார்ந்த இரண்டும் கலந்த முதலீடாகும்.

 

கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, அதனை மூன்று வருடத்திற்குள் வெளியே எடுக்கும் பட்சத்தில், தனி நபர் ஒருவரின் வருமான வரி வரம்பிற்கு தகுந்தாற் போல் வரி விதிக்கப்படும். இதுவே முதலீடு செய்த மூன்று வருடத்திற்கு பிறகு, நாம் திரும்ப பெறும் பட்சத்தில் பணவீக்க சரிக்கட்டலுடன் கூடிய 20 சதவீத வரி விதிக்கப்படும்.

Mutual Funds Taxation

 

உதாரணத்திற்கு, சேகர் என்பவர் ரூ. 1 லட்ச ரூபாயை கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்கிறார். பத்து மாதங்களுக்கு பிறகு அவரது முதலீட்டை சேர்த்து ரூ. 1,06,000 ஐ திரும்ப பெறுகிறார். சேகர் வருமான வரி செலுத்துபவராக இல்லாத நிலையில், பெறப்பட்ட வருமானத்திற்கு வரி எதுவுமில்லை. 20 சதவீத வரி வரம்பிற்குள் சேகர் இருந்திருந்தால், அவர் பெற்ற 6,000 ரூபாய்க்கு (1,06,000 – 1,00,000) 1200 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். [ இதர வரி மற்றும் கட்டணங்கள் தனி ]

 

மூன்று வருடத்திற்கு பின்பு சேகரின் ரூ. 1 லட்சம் முதலீடு 1,24,000 ரூபாயாக உள்ளது. இப்போது அவர் பணத்தை திரும்ப பெறும் பட்சத்தில், பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு(Indexation) 20 சதவீத வரியை செலுத்தினால் போதும். அதாவது பணத்தை வெளியே எடுக்கும் காலத்தில் உள்ள பணவீக்கத்தை, நாம் பெற்ற வருமானத்தில் கழித்து விட்டு மீதம் இருக்கும் தொகைக்கு 20 சதவீத வரி செலுத்த வேண்டும். உதாரணமாக பணவீக்க சரிக்கட்டல் மதிப்பு(Indexation Benefit Cost) 12,000 ரூபாய் எனில், நாம் பெற்ற ரூ. 24,000 /- வருமானத்தில் 12,000 ரூபாயை கழித்து விட்டு மீதமிருக்கும் தொகைக்கு இருபது சதவீத வரி விதிக்கப்படும்.

 

பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் வருமானம், வங்கி வைப்பு நிதி வட்டியை(Fixed Deposit Rates) காட்டிலும் சற்று அதிகமாக தான் இருக்கும். இது நமது முதலீட்டுக்கு சாதகமான விஷயம் எனலாம்.

 

பங்கு சார்ந்த மற்றும் கலப்பின திட்டங்களில் நாம் ஒரு வருடத்திற்கு முன், பணத்தை வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவீத வரி விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு மேலாக முதலீட்டை திரும்ப பெறும் போது, மூலதன ஆதாயம்(Capital Gains) ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 10 சதவீத வரி செலுத்த வேண்டும். இது சந்தையில் உள்ள பங்குகளுக்கும் பொருந்தும். உதாரணமாக சேகர் பங்கு சார்ந்த திட்டங்களில் பத்து லட்ச ரூபாயை முதலீடு செய்து விட்டு, ஒரு வருடத்திற்கு பிறகு லாபத்துடன் 11,25,000 ரூபாயாக பெறுகிறார் என வைத்து கொள்வோம். இப்போது அவர் மொத்த பணத்தையும் வெளியே எடுக்கும் போது, பெறப்பட்ட மூலதன ஆதாயமான 1.25 லட்சத்தில், ஒரு லட்ச ரூபாய்க்கு வரி சலுகையை பெறலாம். மீதமிருக்கும் 25,000 ரூபாய்க்கு மட்டும் 10 சதவீத வரி செலுத்தினால் போதுமானது.

 

இது போல, பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்படும் நஷ்டத்திற்கும்(Carry Forward on Loss) வரி சலுகை பெறலாம். இதனை பின்வரும் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

Best 5 Long term Equity Mutual Funds to Invest – 2019

 

பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்திருப்பது இந்திய பங்குச்சந்தையின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது எனலாம். முன்னர் இருந்ததை விட கடந்த மாதத்தில் இறக்குமதியின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்திய டாலர்-ரூபாய் பரிமாற்றத்தில், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதும் சந்தைக்கு சாதமாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில், அந்த நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில காலங்களாக நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவாக இல்லையெனினும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் வளர்ச்சி சராசரிக்கும் மேலாகவே உள்ளன. பங்குச்சந்தை ஏற்ற காலங்களில் நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதே பாதுகாப்பானது. பின்னாளில் சந்தை ஏதேனும் காரணத்தால் இறக்கம் கண்டாலும், நல்ல பங்குகளில் அந்த தாக்கம் அவ்வளவாக இருக்காது.

 

பங்குச்சந்தையில் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis) ஆராய்ந்து பங்குகளை வாங்குவதற்கு நேரம் உள்ளவர்கள் பங்குச்சந்தையில் நேரிடையாக ஈடுபடலாம். மற்றவர்களுக்காகவே பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்  இன்று பல கொட்டி கிடக்கின்றன. தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக நிதி சார்ந்த விஷயங்களும் நல்ல முன்னேற்றம் காணும். அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரக்கூடியது.

 

இந்திய சந்தையில் நாம் முதலீடு செய்கிறோமோ இல்லையோ, ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டின் கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்கு சந்தையில்(Stock Market) தற்போது தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறார்கள். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் நீண்ட கால நிதி இலக்குகள் மற்றும் செல்வம் சேர்ப்பதற்கான ஒரு சிறந்த முதலீட்டு சாதனமாக உள்ளது. குறுகிய கால மற்றும் உடனடி தேவை உள்ளவர்களுக்கும் பரஸ்பர நிதிகளில் திட்டங்கள் அமைய பெற்றுள்ளன.

 

நடப்பு 2019ம் வருடத்தில் உங்கள் முதலீட்டை தொடங்குவதற்கான சிறந்த ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்(Long term Equity Funds) இங்கே,

 

  • ஆக்ஸிஸ் ப்ளூ சிப் பண்ட் (Axis Blue Chip Fund)
  • ஐ.சி.ஐ.சி.ஐ. புரு ப்ளூ சிப் (ICICI Pru Blue Chip Fund)
  • மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூ சிப் (Mirae Asset Emerging Blue Chip Fund)
  • எச்.டி.எப்.சி. மிட்கேப் ஆஃபர்ச்சுனிடிஸ்(HDFC Midcap Opps Fund)
  • எச்.டி.எப்.சி. டாப் 100 பண்ட் (HDFC Top 100 Fund)

Best Long term Equity funds 2019

 

மேலே சொன்ன மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்(Mutual Funds) நீண்ட காலத்திற்கு உரியவை. ஐந்து வருட காலத்தில் சொன்ன அனைத்து திட்டங்களும் 12 சதவீதத்திற்கு மேல் வருவாயை கொடுத்துள்ளன. இவை எதிர்காலத்திலும் கிடைக்க கூடிய வருவாய் என நாம் சொல்ல முடியாது. அதே வேளையில் நீண்ட கால பயணத்தில் நல்ல வருமானத்தை அளிக்க கூடிய பண்டுகளாக இவை உள்ளன.

 

முதலில் உங்கள் நிதி இலக்குகளை தீர்மானியுங்கள். பிறகு அதன் காலத்திற்கு ஏற்றாற் போல், மேலே சொன்ன திட்டங்களில் முதலீடு செய்து விட்டு இலக்குகளை அடையும் வரை பொறுமையாக இருங்கள். ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் செலவின விகிதம்(Expense Ratio) என காணும் போது, சராசரியாக இரண்டிலிருந்து 2.5 சதவீதம் வரை உள்ளன. ஒரு வருடத்திற்குள் உங்கள் முதலீட்டை திரும்ப பெறும்(Redemption) பட்சத்தில், வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுக்கும் முன், உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். ஒவ்வொரு முதலீட்டு சாதனமும் வெவ்வேறான ரிஸ்க் மற்றும் வருவாய் காலத்தை கொண்டிருப்பவை. தெளிவான முதலீட்டு முடிவுகளுக்கு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் பயன் பெறுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

Become a Millionaire / Crorepati with a monthly investment of 1444 rupees in SIP

 

சிலருக்கு செல்வம் சேர்ப்பது ஒரு கலையாக இருந்தாலும், பலருக்கு அது ஒரு எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. செல்வம் சேர்ப்பதின் முதல் ரகசியமே சரியான பட்ஜெட் திட்டமிடல்(Budget Planning) தான். நாம் தினசரி மேற்கொள்ளும் வரவு-செலவுகளை எழுதி வைத்து பழக்கப்படுத்தினாலே நமக்கான செல்வ மகள் தானாக வருவாள். கூட்டு குடும்பத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கூட்டு வட்டியின் பலனை நீங்கள் அனுபவித்தது உண்டா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகின் எட்டாவது அதிசயம், ‘கூட்டு வட்டி (Power of Compounding)’ என்றார் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஏழு அதிசயங்களை நாம் வரலாற்றில் அவ்வப்போது மாற்றி கொண்டாலும், இன்றும் மாறாதது கூட்டு வட்டியின் ரகசியமே. கூட்டு வட்டியின்(Compound Interest) பலனை அறிய நாம் புத்தகங்கள் எதனையும் வாங்கி படிக்க வேண்டாம். சிறு துளி பெருவெள்ளம் போல, நமது பாரம்பரிய அஞ்சலக சேமிப்பு, மாத சீட்டு கட்டும் முறை, பி.எப்.(Provident Fund) தொகையினை சொல்லலாம்.

 

நாம் சேமிக்கும் மாதாந்திர சீட்டு அல்லது பி.எப். தொகையை நாம் உற்று நோக்கினால் அதற்கான பலன் நமக்கு தெரிய வரும். நாம் சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் பின்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான தொகையை நமக்கு கொடுத்திருக்கும். இது கூட்டு வட்டியின் பலனே இன்றி வேறு எதுவுமில்லை. இந்த கூட்டு வட்டியின் பலத்தை நாம் முழுவதுமாக அறிய அல்லது வாழ்நாள் முழுவதும் இதன் பலனை அனுபவிக்க பல முதலீட்டு சாதனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான சாதனம் எனில், அது பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) தான்.

 

தங்கம் மற்றும் நிலத்தில் நமது முதலீடுகள் இருப்பினும் நாம் அவற்றில் ஒவ்வொரு மாதமும் அல்லது நம்மிடம் உள்ள சிறு தொகைக்கு வாங்கி வைக்க முடியாது. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நாம் முதலீடு செய்யலாம். பொதுவாக செல்வம் சேர்ப்பதற்கு தொடர்ச்சியான முதலீடு(Regular Investing) அவசியமாகும். நாம் முதலீடு செய்யும் பணம் சிறு தொகையாக இருப்பினும், தொடர் முதலீடு நமக்கான செல்வத்தை சேர்த்து தரும்.

 

பங்குச்சந்தையில் தொடர் முதலீடு நீண்ட காலத்தில் பெரும் செல்வதை கொடுக்கும். அதே வேளையில் பங்குச்சந்தை போன்ற முதலீட்டில் அடிப்படை நிதி கல்வி அவசியமாகும்(Stock Market Analysis). ஏனென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் குறுகிய காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. இதற்கு மாற்றாக நாம் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம். பங்குச்சந்தையை பற்றிய நிதி கல்வியை பெற முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் பங்குச்சந்தை போன்ற நீண்ட கால கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.

 

உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை பெற வேண்டுமென்றால் உங்களுக்கான கால அளவும்(Investment Period), முதலீடு செய்வதற்கான பணமும்(Minimum Investment) முக்கியம். உங்களுக்கு ஐந்து வருடங்களில் ரூ. 1 கோடி வேண்டுமென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,22,444 பணத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தாக வேண்டும். இதன் மூலம் 12 சதவீத வட்டி வருமானத்தை கொடுக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ரூ. 1.06 கோடி தொகை கிடைக்கும். இதுவே 15 சதவீத வட்டி எனும் போது, நீங்கள் மாதாமாதம் ரூ. 1,12,899 ஐ அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கான ஒரு கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும்.

 

மாதாமாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் முதலீடா என மலைப்பாக இருக்கிறதா ?

 

இன்றும், இது போன்ற முதலீட்டு தொகையை சிலர் சாத்தியமாக்கி பயனடைந்து வருகின்றனர். சரி வாருங்கள், சிறிய தொகையை கொண்டு பெரிய விஷயங்களை செய்து பார்க்கலாம். உங்களுக்கு தேவையான ஒரு கோடி ரூபாய் இலக்கை நீங்கள் விரைவாக அடைய வேண்டுமெனில், உங்களுக்கான மாத முதலீடு அதிகமாக தான் இருக்கும். அதற்கு பதிலாக, மாதம் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்து விட்டு, இலக்கிற்கான காலத்தை நீட்டிக்கலாம்(Time). இதன் வாயிலாக நமக்கான நிதி இலக்கை எளிமையாக பெறலாம்.

 

மாதாமாதம் ரூ.36,335 ஐ அடுத்த பத்து வருடங்களுக்கு சேமிக்கும் பட்சத்தில் நாம் ஒரு கோடி ரூபாய் இலக்கை அடையலாம். இல்லையெனில், 20 வருடங்களுக்கு மாதம் ரூ.6,679/- ஐ முதலீடு(Systematic Investment Plan -SIP)  செய்தாலும் அதன் பலனை பெறலாம். இதனை விட ஒரு எளிமையான முறை உள்ளது, இது ஒரு வெற்றி பெற்றவர்களின் முதலீட்டு முறை என்றும் கூறலாம். அதாவது மாதாமாதம் ரூ.1,444 ஐ நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது தான். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக (48 ரூபாய்) நீங்கள் முதலீடு செய்ய பழகும் போது, 30 வருடங்களில் உங்கள் கனவு இலக்கு சாத்தியமாகும்.

 

ஒரு முறை முதலீடாக(One Time Investment) 1,50,000 ரூபாயை முதலீடு செய்து விட்டு, அடுத்த 30 வருடங்களுக்கு காத்திருக்கும் பட்சத்தில், 15 சதவீத வட்டி வருமானத்தில் உங்களுக்கான ஒரு கோடி ரூபாயை பெறலாம். முப்பது வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு (Present Value of Future Cash) எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா ?

 

30 வருடங்களுக்கு பின்பு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாய், இன்றைய சராசரி பணவீக்கமாக 5 சதவீதம் என எடுத்து கொண்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 23,13,774. பரஸ்பர நிதி திட்டங்களில் இன்றும் இது போன்ற முதலீட்டு வருமானம் சாத்தியமாக தான் இருக்கிறது. ஏன் மற்ற முதலீடுகளில் கிடைப்பதில்லையா என கேட்கலாம். நிலம், தங்கம் போன்ற முதலீடுகளில் நாம் ஏற்ற-இறக்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு எப்போதும் கிடைப்பதில்லை. ஆனால் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் அந்த வாய்ப்பு ஒவ்வொரு காலத்திலும் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தில் வருமானம் கடந்த 20 வருடங்களாக வங்கி வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது எனலாம். தங்கத்தின் விலை அதிகரிப்பது டாலர் மதிப்பு உயர்வதால் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணவீக்கம் குறைந்து வருவதால் வங்கி வைப்பு நிதிகள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் போதுமானதாக இருப்பதில்லை.

 

பரஸ்பர நிதி திட்டங்களில் மாதம் ரூ. 290 ஐ முதலீடு செய்து 30 வருடங்களில் 20 லட்ச ரூபாயை பெறலாம். இது போன்று, மாதாமாதம் 722 /- ரூபாயை முதலீடு செய்து அடுத்த 30 வருடத்தின் முடிவில் 15 சதவீத வட்டி வருமானத்தில் ரூ. 50 லட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் நீண்ட காலத்தில் 15 சதவீத வட்டி என்பது சராசரியாக பெறக்கூடிய வருமானமாகும்.

 

அப்புறம் என்ன, உங்கள் இலக்குகளுக்காக, உங்கள் குழந்தைகளின் தேவைக்காக இப்போதே ஒரு சிறு தொகையை முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் – கூட்டு வட்டியின் பலனை பெறுங்கள் !

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

Minimum Investment amount of 100 rupees and Free Term Insurance – Mutual Funds Schemes

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி துறை(Mutual Fund Industry) 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

1987-1993 ம் வருட காலங்களில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வந்த நிலையில், பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் பரஸ்பர நிதி துறையில் நுழைந்தன. அரசு சார்பில் துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதன்முறையாக பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி. நிறுவனமும்(LIC India) திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தின. 1992ம் ஆண்டு பரஸ்பர நிதிக்கான ஒழுங்குமுறை செபியிடம்(SEBI) வந்த பிறகு, முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக கோத்தாரி பயோனியர்(Kothari Pioneer) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் பிராங்கிளின் டெம்பிள்டன்(Franklin Templeton) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பினும், தற்போது பரஸ்பர நிதி திட்டங்கள் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது. இன்றும் சிலருக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் என்றாலே பங்குச்சந்தை தான் என்ற ஐயம் உள்ளது. சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வும், திட்டங்களில் உள்ள வடிவமைப்பும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது கருத்தரங்குகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

பரஸ்பர நிதி சார்ந்த விழிப்புணர்வை நமது ஊரில் பரவலாக விகடன் குழுமம் (நாணயம் விகடன் – Nanayam Vikatan) சேர்த்து வருவது நல்ல விஷயம். சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த அடிப்படை கல்வி நமக்கு பள்ளி, கல்லூரி காலங்களில் கிடைப்பதில்லை என்றாலும், இன்று அதற்கான தளங்கள் அமைய பெற்றிருப்பது மக்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் லிக்விட் பண்டுகள்(Liquid Funds) என்று சொல்லப்படும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் முதல் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள்(Equity oriented Funds) வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதி இலக்குகள், கால அளவுகளை கொண்டு மற்றும் ரிஸ்க் தன்மையை பொறுத்து பரஸ்பர நிதி திட்டங்கள் வேறுபடும். நீண்டகாலத்தில் பரஸ்பர நிதித்திட்டங்கள் பணவீக்கத்தை காட்டிலும் நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. அதே வேளையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை காட்டிலும் பெறக்கூடிய நீண்டகால வருமானம் பல மடங்கு லாபத்தை தரக்கூடியவையாக உள்ளது.

இன்றைய நிலையில், வரி சலுகையை பெற மிகவும் குறைந்த லாக் இன் காலம்(Lock in Period) கொண்ட மற்றும் அதிக வருமானத்தை தரும் திட்டமாக மியூச்சுவல் பண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள்(Tax Saving Mutual Funds) உள்ளன. முன்னர் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (ரூ.500-5000) முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து, தற்போது குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அஞ்சலக சேமிப்பை போல, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டு தொகையை, நாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெற்று கொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம். சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan -SIP) தொகைக்கு இலவச டேர்ம் பாலிசியையும் வழங்குவது ஆதாயமான விஷயம். நாம் செய்யும் முதலீடு தொகைக்கு ஏற்றாற் போல் மற்றும் கால அளவுகளை பொறுத்து, நமக்கான டேர்ம் காப்பீடு தொகையும்(Term Policy Insurance) அதிகரிக்கும். இதற்காக அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

இருப்பினும், இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, நீங்கள் உங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் நிலையில் உங்களது காப்பீடு ரத்து செய்யப்படலாம். சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 வருடங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கு காப்பீட்டை வழங்கும். எனவே காப்பீடு இலவசமாக கிடைக்கப்பெற்றாலும், தனியாக டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

வரும் காலங்களில் வங்கி வைப்பு தொகை மற்றும் அஞ்சலக திட்டங்களுக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு முழுமையாக இருக்கலாம் என்பது தான் உண்மை. அதனால் தான் என்னவோ, சில வங்கிகள் தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை பரிந்துரைக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

Which is the best Investment – Physical Gold or Gold Funds

 

நமது வர்த்தக மதுரை இணையதளத்தில் கடந்த சில கட்டுரைகளுக்கு முன், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் மற்றும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருந்தோம். கடந்த பத்து வருட கால அளவில் மதிப்பீடும் போது, தங்கத்தின் மீதான வருமானம் பெரும்பாலும் வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதிக்கான(Fixed Deposits) வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தங்கத்தை நகைகளாக(Jewels) வாங்குவதை காட்டிலும் அதனை ஒரு முதலீட்டு சாதனமாக மாற்றுவதே நமக்கான புத்திசாலித்தனமாகும். நாம் ஏற்கனவே சொன்னது போல, தங்க ஆபரணங்கள் என்பது ஒரு தேய்மான பொருளாகவும், வருமானம் எதுவும் தராமல் போகும் அணிகலனாக மட்டுமே (Liability) உள்ளது. நம்முடைய பெரும்பாலான சேமிப்பு தொகை தங்க நகைகள் வாங்குவதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. மாறாக நமக்கான நிதி இலக்குகளுக்கு(Financial Goals) அது துணைபுரிவதில்லை.

 

எந்த ஒரு முதலீட்டு சாதனத்திற்கும் வருமான வாய்ப்பு மற்றும் நீண்ட காலத்தில் வளர்ச்சியும் உண்டு. அந்த வகையில் காணும் போது, நாம் நமது நகைகளை கொண்டு எவ்வளவு சம்பாதித்தோம் என பார்த்தால், தேய்மான செலவும்(Depreciation), தங்கத்தை பரிமாற்றம் செய்த செலவுகள்(Exchange) தான் மிஞ்சும். நமக்கு தேவையான சிறிதளவு நகைகளை மட்டும் வைத்து கொண்டு, தங்கத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை கண்டறிவது நல்லது.

 

தங்க நகைகளுக்கு மாற்றாக தங்க பண்டுகள் (அ) தங்க இ.டி.எப்.(Gold ETF) என்று சொல்லக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் நமது முதலீடு இருக்கும் போது, நாம் போதுமான வருமானத்தை பெறலாம். தங்க நகைகளுக்கும், கோல்டு இ.டி.எப். திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை பின்வரும் படத்தில் பாருங்கள்.

Gold vs Gold Fund

பொதுவாக நாம் தங்க நகைகளாக வைத்திருக்கும் போது, அவற்றில் ரிஸ்க் அதிகம். அது ஒரு பாதுகாப்பான முதலீடு என்று நாம் கூறினாலும், நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா என்பதை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் 91.6 சதவீத சுத்தமான தங்கத்தை மட்டுமே நாம் வாங்கும் வாய்ப்புண்டு. அதே வேளையில் பரஸ்பர நிதி திட்டங்கள் அளிக்கும் கோல்டு பண்டுகளில்(Gold Mutual Funds) 99.5 சதவீத மதிப்பிலான சுத்த தங்கத்தின் அடிப்படையில் நமது முதலீடு அமையும்.

 

வெறும் தங்க நகைகளாக மட்டுமே நாம் இப்போது வைத்திருக்கும் போது, பிற்காலத்தில் அந்த நகைகள் தேய்மானம் அடைவதும், மீண்டும் நாம் அதற்கான மாற்று பொருளாக புதிய நகைகளை வாங்குவதும் நமக்கு வீண்செலவு தான். அதற்கு பதிலாக இது போன்ற தங்க பண்டுகளில் நாம் முதலீட்டை மேற்கொள்ளும் போது, தேவைப்படும் காலத்தில் நமக்கான புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம், நமக்கும் இதன் மூலம் வருவாயும் கிடைத்திருக்கும்.

 

நாம் வைத்திருக்கும் தங்க நகைகளை அவ்வளவு எளிதாக பணமாக மாற்ற முடியாது. நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ மட்டுமே நம்மால் முடியும். மேலும் நகைகளின் மதிப்பில் குறைவான பணமே நமக்கு கிடைக்கும். ஆனால் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டங்களில் நாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு தேவையான தொகையை பெற்றுக்கொள்ளலாம். பாதுகாப்பான முதலீடும் மட்டுமில்லாமல் இதனை வாங்குவதற்கான செலவும் மிக குறைவு.

 

தங்க இ.டி.எப். திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடாக(Minimum Investment) ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை கூட நாம் வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் தங்க நகைகளுக்கு உள்ள காலங்களே இ.டி.எப். பரஸ்பர நிதி திட்டத்திற்கும் பொருந்தும். நாம் தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் லாபத்திற்கு செல்வ வரி(Wealth Tax) உண்டு. ஆனால் தங்க பண்டுகளுக்கு இது போன்ற வரிகள் இல்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

Best 5 Tax Saving Mutual Funds – ELSS – 2019

 

நடப்பு நிதி வருடத்திற்கான(2018-19) காலம் முடிவடைவதற்கு இன்னும் ஏழு வாரங்களே உள்ளன. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பட்ஜெட் வாயிலாக தனி நபர் வருமான வரியில் தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கப்பட்டன. இந்த வரி தள்ளுபடிகளும், மற்ற சலுகைகளும் அடுத்து வரும் 2019-20ம் நிதியாண்டுக்கானது. இருப்பினும் நமக்கு நடப்பு வருடத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை கொண்டு நாம் வருமான வரி தாக்கல்(Income Tax filing) செய்ய போகிறோம். நடப்பு வருடத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை, வரி தள்ளுபடியாக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நம்மில் பெரும்பாலோர் வருமான வரியில் விலக்கு பெற(Income Tax exemption), கடைசி நேரத்தில் வரி சலுகை திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். வரி சலுகையை பெற ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்தில் முதலீட்டை துவங்குவதே நல்லது. நீங்கள் செய்யப்போகும் முதலீடு வரி சலுகைக்காக மட்டுமில்லாமல், உங்களின் நிதி இலக்குகளை(Financial Goals) சார்ந்து இருக்க வேண்டும். இன்னும் சிலரோ வருமான வரி சலுகைக்கு வெறும் காப்பீட்டு திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம். வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உள்ள ஒரு தனி நபர், தனக்கு போதுமான காப்பீட்டு தொகையை எடுத்து விட்டு பின்னர் மற்ற வரி சலுகை திட்டங்களை பற்றி யோசிக்கலாம். போதுமான காப்பீடு என்பது இன்று டேர்ம் பாலிசியில்(Term Insurance Policy) மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கிறது. காப்பீடு போக மீதமுள்ள தொகைக்கு நாம் வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் மற்ற வரி சலுகை திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். Income Tax Act – 80 சி பிரிவின் கீழ் தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.

 

வரி சலுகைக்கான திட்டங்கள் எனும் போது, பொதுவாக அஞ்சலக மற்றும் வங்கிகளில் வழங்கப்படும் திட்டங்கள் ஞாபகம் வரலாம். பொது வருங்கால வைப்பு நிதி(PPF), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi), காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் அளிக்கும் வரிச்சலுகை முதலீடுகள்(Tax Saving Mutual Funds) ஆகியவை நமக்கான வாய்ப்புகளாக உள்ளன.

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் வருமான வரி சட்டம் பிரிவு 80சி ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை (அனைத்துக்கும் சேர்த்து) வரி சலுகை பெறக்கூடியவை. வரி சலுகை திட்டங்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு(Lock-in Period) பிறகு தான் நாம் அந்த திட்டங்களில் இருந்து பணத்தை பெற வேண்டும். இதன் காரணமாக தான் நமக்கு வரிச்சலுகை கிடைக்க பெறுகிறது. அவ்வாறு பார்க்கும் போது, குறைந்த காலத்தில் முதலீட்டை எடுக்கக்கூடியதாகவும், ரிஸ்க்குடன் கூடிய நல்ல வருமானத்தை தருவதாக பரஸ்பர நிதி வரிச்சலுகை  திட்டங்கள்(ELSS -Equity linked Savings Scheme) உள்ளன. இவை மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுப்பவை.

 

நடப்பு நிதியாண்டு 2019ல் சிறந்த மற்றும் வரி சலுகை அளிக்கக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள்(Tax Saving Mutual Funds),

 

  • Canara Robeco Equity Tax Saver
  • Axis Long Term Equity Fund
  • Mirae Asset Tax Saver Fund
  • Taurus Tax Shield Fund
  • Kotak Tax Saver Fund

 

இந்த ஐந்து திட்டங்களும் வருவாய் மற்றும் ரிஸ்க் விகிதத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. Value Research Online மற்றும் Morningstar தளங்கள், சொல்லப்பட்டுள்ள ஐந்து பரஸ்பர நிதி திட்டங்களுக்கும் ஒன்று முதல் ஐந்து வரை தரவரிசை பட்டியலில் இடம் கொடுத்துள்ளது. ஒரு பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போது, அதன் நிர்வாகம்(Fund Manager), வருவாய் மதிப்பீடு, துறை சார்ந்த மற்றும் பென்ச்மார்க் வருமானம்(Benchmark Returns), ரிஸ்க் விகிதங்கள்(Risk ratios) போன்றவற்றை ஆய்வு செய்வது அவசியம்.

 

மேலே சொல்லப்பட்டுள்ளன வரி சலுகை அளிக்கும் பரஸ்பர நிதி திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500/- மட்டுமே. செலவின விகிதம்(Expense ratio) 2.0 – 2.75 % என்ற அளவிலும், பணத்தை திரும்ப பெறும் போது வெளியேறும் கட்டணம்(No exit load) எதுவுமில்லை. பண்டுகளின் ரிஸ்க் அளவு குறைந்தது முதல் மிதமானதாக(Low to Average) உள்ளது. நியமச்சாய்வு(Standard Deviation) 14லிருந்து 15 புள்ளிகள் வரை கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட கால வருவாய் என பார்க்கும் போது, சராசரியாக மூன்றிலிருந்து ஏழு சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த வருடத்தில் சந்தை மந்தமாக இருந்ததும், இந்த வருவாய் குறைவுக்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் ஐந்து வருட காலத்தில் அனைத்து பண்டுகளும் 15 சதவீதத்திற்கும் மேல் வருமானத்தை தந்துள்ளது.

 

5 சிறந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ஒவ்வொரு பண்டின் சந்தை மூலதனமும் ரூ.50,000 கோடிக்கும் மேல் உள்ளது. நட்சத்திர மதிப்பீடை(Star Rating) மட்டுமே கருத்தில் கொள்ளாமல், மற்ற விஷயங்களையும் நாம் ஆராயும் போது சிறந்த பரஸ்பர நிதி திட்டங்கள் நமக்கு கிடைக்கும். சொல்லப்பட்ட வருமான விகிதங்கள் மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் கடந்த கால செய்தியே. இனிவரும் காலத்தில் அவை நன்றாக செயல்படுமா என்பது சந்தை மற்றும் நிர்வாகத்தை சார்ந்தது.

 

மறவாதீர்கள், கடைசி நேர வரிச்சலுகை திட்டங்களை தவிருங்கள். உங்களுக்கான நிதி இலக்குகளை அல்லது தேவைகளை முதலில் தீர்மானியுங்கள். அதனை சார்ந்து வரி சலுகை திட்டங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். செய்யப்படும் வரி சலுகை முதலீடு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் நிதியாண்டின் (ஏப்ரல் மாதம்) தொடக்கத்தில் இருக்கட்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018

5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018

5 Large Cap Funds to Invest in 2018

 

இன்றையளவில் பணவீக்கத்தை தாண்டிய  வருமானம் ஈட்டுதலும், பணத்தை பெருக்குவதிலும் பங்குச்சந்தை முக்கிய பங்காற்றுகிறது. தங்கம், நிலம், வங்கி முதலீடுகளை  காட்டிலும் நல்லதொரு வருமானத்தை நீண்ட கால நோக்கில் பங்குச்சந்தையே தந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் நம்மில் பலருக்கு பங்குச்சந்தை பற்றிய அச்சம் (Risk) பொதுவாக இருப்பதுண்டு.

 

பங்குச்சந்தை இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்ய…

 

https://varthagamadurai.com/share-market-course-registration/

 

 

பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்யாமல், அதே நேரத்தில் பங்குச்சந்தையின் பலனை அடைய விளைந்தது தான் பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்கள். இன்று பெரும்பாலானோர் மியூச்சுவல் பண்டில் எதற்காக முதலீடு செய்கிறோம் என்று அறியாமல் பல பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது.

 

ஒருவரின் நிதி இலக்கை (Financial Goal) சார்ந்து பரஸ்பர நிதி முதலீடுகள் இருக்கும் பட்சத்தில் அவர் தனது இலக்கினை எளிமையாக அடையலாம். பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்கள் பல வகைகள் உள்ளன. முதலீட்டாளர் தனது ரிஸ்க் தன்மை பொருத்து பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.

 

இங்கே நாம் அதனை போன்று, பெருமூலதன பரஸ்பர நிதி திட்டங்கள் (Large Cap Funds) சிலவற்றை தேர்ந்தெடுத்து உங்களுக்காக கொடுத்துள்ளோம். இந்த திட்டங்கள் கடந்த 5-10 வருட காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுத்துள்ளன.

 

அவைகளில் சில (5 Best Large Cap Funds),

 

  • Axis Blue Chip Fund
  • ICICI Pru Blue Chip Fund
  • Reliance Large Cap Fund – Retail Plan
  • Aditya Birla Sun life Frontline Equity Fund (ABSL)
  • HDFC Top 100 Fund

 

 

5 Best Large Cap Funds 2018

 

 

அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகள் CRISIL நிறுவனத்தினுடையது (Crisil Rating). கொடுக்கப்பட்டுள்ள ஐந்து திட்டங்களுக்கும் நுழைவு கட்டணம் (No Entry Load) எதுவுமில்லை. வெளியேறும் கட்டணம் (Exit Load) திட்டங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும், ஆனால் பொதுவாக ஒரு சதவீதத்தில் இருக்கும்.

 

ஒவ்வொரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும் செலவு விகிதம் (Expense Ratio) மாறுபடும். அதே நேரத்தில் மொத்த செலவு விகிதம் (TER – Total Expense Ratio) செபி விதிமுறை படி, 2.5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

இந்த 5 பெருமூலதன பரஸ்பர நிதி திட்டங்களும் 500 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை (AUM) நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டங்கள் கடந்த 8-10 வருட காலமாக செயல்பட்டு வருகின்றன.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குறைந்த பட்ச முதலீடு:

 

ICICI Pru Blue Chip Fund ல் குறைந்த பட்ச முதலீட்டு தொகை ரூ. 100/- ஆகவும், ஆதித்யா பிர்லா (Aditya Birla Sun life Frontline Equity) திட்டத்தில் ரூ. 1000/- ஆகவும் உள்ளது. Reliance Large Cap, HDFC Top 100 மற்றும் Axis Blue Chip திட்டங்களில் குறைந்த முதலீடாக ரூ. 5000/- ஐ மேற்கொள்ளலாம்.  இந்த திட்டங்கள் பெரும்பாலும் வங்கிகள், நிதி சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் வாகன துறையில் முதலீடு செய்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி  

Change and Disclosure of Total Expense Ratio to Mutual Investors – SEBI

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது நிதி திட்டங்களை நிர்வகிக்க வருடாந்திர கட்டணமாக, முதலீட்டாளரிடம் ஒரு தொகையை வசூலிக்கும். இதனை செலவின விகிதம் (Expense Ratio) என்பர். பரஸ்பர நிதியில் ஒரு முதலீட்டாளருடைய மொத்த செலவு விகிதம் TER (Total Expense Ratio) எனப்படும்.

 

மொத்த செலவு விகிதம் என்பது ஒரு முதலீட்டாளர்(Mutual Fund Investor) நிதியை வாங்கும் போது, விற்கும் போது மற்றும் தணிக்கை செலவுகள், மற்ற இதர செலவுகளை உட்படுத்தும். இதனை ஒரு வருடத்தின் மொத்த செலவுகளை அந்த வருடத்திற்குரிய சராசரி மொத்த வருவாயில் வகுத்தால் கிடைக்கும் விகிதமாகும்.

 

கடந்த மாதம், செபி அமைப்பு(SEBI) பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு(Mutual Fund Companies) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதலீட்டாளருக்கு விதிக்கப்படும் மொத்த செலவு விகிதத்தை (TER) பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளருக்கு அவ்வப்போது குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல் (Email) மூலமோ தெரிவிக்க வேண்டுமென அறிவித்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது இணைய தளத்திலும் இது சம்மந்தமான தகவல்களை பகிர வேண்டும் எனவும், TER விகிதத்தில் மாற்றம் ஏதேனும் இருந்தாலும் அதனை உடனடியாக, அதாவது கட்டணம் விதிக்கப்படும் மூன்று வேலை நாட்களுக்கு முன்னரே (At least three working days prior to effecting such change)  முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

 

மார்ச் 31, 2018 க்கு பின்னர் அறிவிக்கப்படும் எந்த ஒரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும், அதற்கு முன்னர் இருந்த திட்டத்திற்கும் TER விகிதத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் என செபி தனது குறிப்பில் வெளியிட்டுள்ளது.

 

SEBI (Mutual Funds) Regulations, 1996 ன் படி, ஒவ்வொரு பரஸ்பர நிதியை நிர்வகிக்க (Sales & Advertising, Administrative Expenses, Transaction Cost, Management Fees, Custodian and Audit Fees) முதலீட்டாளரிடம் இருந்து ஒரு கட்டணம் பெறப்படும். ரூ. 100 கோடி வரையிலான வாராந்திர சராசரி நிகர சொத்துக்களை(Net Assets)  நிர்வகிக்கப்படும் சமபங்கு திட்டங்களுக்கு (Equity Schemes) மொத்த செலவு விகிதம் 2.5 % ஆகவும், அடுத்த 300 கோடிக்கு 2.25 % ஆகவும், அடுத்தடுத்த 300 கோடிக்கு 2 % ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு மேல் எந்த ஒரு பரஸ்பர நிதி நிறுவனமும் கட்டணங்களை விதிக்க கூடாது.

 

கடன் திட்டங்களுக்கு, பங்கு சார்ந்த(Equity) திட்டங்களை விட 0.25 % செலவின விகிதம் குறைவாக உள்ளது.  முதலீட்டாளரை பொறுத்தவரை தங்கள் பரஸ்பர நிதி திட்டத்தின் தேர்ந்தெடுத்தலில் Total Expense Ratio விகிதம் ஒரு முக்கியமானவை. நீண்ட காலத்தில், அதிக TER விகிதம் உள்ள திட்டத்தில் முதலீட்டாளரின் கணிசமான தொகை கட்டணத்திற்கு செல்லும். அதே நேரத்தில் ஒவ்வொரு நிதி திட்டத்தின் செயல்பாடுகளையும் மற்றும் அதன் பலன்களையும் பார்த்து விட்டு தான், ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

(Source:  Total Expense Ratio – Change and Disclosure )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

How to update Aadhaar online for Mutual Funds ? (Aadhaar Linking)

 

பயோமெட்ரிக் (Biometric) மற்றும் மக்கள் தொகை தரவை அடிப்படையாக கொண்டு 12 இலக்க தனியுரிமை அடையாள எண்ணாக(12 Digit) உருவாக்கப்பட்டுள்ள ஆதார் (Aadhaar) இன்று ஒவ்வொரு தகவல் நடைமுறைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் உரிமை எண்ணாகவும் உள்ளது. நீங்கள் வங்கி கணக்கு, பான் அட்டை, பங்குச்சந்தை, பரஸ்பர நிதி என ஒவ்வொரு செயல்முறைக்கும் கணக்கு துவங்கும் போது ஆதார் என்பது கட்டாயம்.

 

வங்கிக்கணக்கு, கைபேசி எண்களுக்கான ஆதார் இணைப்பை நாம் பெரும்பாலும் நேரிடையாகவே பதிவு செய்திருப்போம். ஆனால் பெரும்பாலும் நாம் தவற விடுவது மற்றும் மறப்பது நமது பரஸ்பர நிதிக்கான இணைப்பை தான். நாம் பரஸ்பர நிதியில்(Mutual Funds) பொதுவாக மாதாந்திர முதலீடு என்று சொல்லப்படும் SIP (Systematic Investment plan) திட்டத்தை தான் தேர்ந்தெடுத்திருப்போம். இதன் மூலம் நமது வங்கிக்கணக்கில் இருந்து பரஸ்பர நிதிக்கு தானியங்கி சேவையாக பண பரிமாற்றம் நடைபெறும். இதன் காரணமாக நாம் பெரும்பாலும் பரஸ்பர நிதி சார்ந்த குறுஞ்செய்தி, மின்னஞ்சலை பார்க்க தவறி விடுவோம்.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஏற்கனவே பணமோசடி தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act -PMLA) Rules 2017 ன் படி பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனத்தை (முதலீடு செய்த நிறுவனம்) அணுகலாம் அல்லது இணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்(Communicate with Nearest branch or update online). இங்கே நாம் ஆன்லைனில் பதிவு செய்வது பற்றி பார்ப்போம்.

 

நினைவில் இருக்கட்டும், பரஸ்பர நிதியுடன் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி –  வரும் மார்ச் மாதம் 31,2018 (31st march, 2018).

 

பொதுவாக பரஸ்பர நிதி சார்ந்த உங்களின் தகவல்கள் பரஸ்பர நிதி வசம் பராமரிக்கப்படாது. அதனை RTA (Registrar and Transfer Agent) போன்ற அமைப்புகள் தான் பராமரித்து தகவல்களை சேமித்து வைக்கும். இணையத்திலும் அது போன்ற அமைப்புகள் தான் உங்களுடைய ஆதார் தகவல்களை பெறுகிறது. RTA ஆக தற்போது CAMS, UTI, Karvy, Franklin பரஸ்பர நிதிக்கு உள்ளன. அவற்றின் இணைய தளத்தில் நாம் நமக்கான ஆதார் தகவலை பதிவு செய்யலாம்.

 

CAMS Online

 

கீழே  கொடுக்கப்பட்ட இணைய  தளத்தில் நீங்கள் உங்களுக்கான  பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைக்கலாம். CAMS அமைப்பு பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனத்துக்கான தகவல்களை பராமரிக்கிறது. ( SBI Mutual Fund, ICICI Prudential, Birla Sunlife, HDFC, DSP blackrock, IDFC, IIFL, PPFAS, Tata mutual fund, Kotak, HSBC, L and T, Shriram, Mahindra)

 

CAMS – Aadhaar Linking

CAMS Aadhaar linking

 

 

CAMS இணைய தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் பான் எண் (PAN), பரஸ்பர நிதி கணக்கு (Folio Account number), மற்றும் ஆதார் எண்ணை (Aadhaar) உள்ளீடு செய்யவும். உங்களுக்கான சந்தேகங்களையும் நீங்கள் அதே பக்கத்தில் அறியலாம்.

 

FAQ on Aadhaar Linking process – CAMS

 

Karvy Computershare:

 

கார்வி நிறுவனமும் பரஸ்பர நிதிக்கான தகவல்களை பராமரிக்கிறது. கார்வி நிறுவனம் கையாளும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் – Axis mutual fund, UTI, Canara robeco, Mirae asset, Motilal oswal, Reliance, Quantum, BOI Axa, Invesco, DHFL மற்றும் இன்னும் பிற நிறுவனங்கள். அதற்கான பதிவை செய்ய கீழ்கண்ட இணைய தளத்தை பாருங்கள்.

 

Karvy – Link your Aadhaar with mutual fund

 

Karvy Aadhaar linking

 

மேலே நாம் சொன்ன இரு தளத்திலும் உங்கள் பரஸ்பர நிதிக்கான ஆதாரை பதிவு செய்வதுடன், உங்கள் நடப்பு நிலையையும் (Aadhaar linking status for mutual fund) அதே தளத்தில் அறிந்து கொள்ளும் வசதி உண்டு. நாம் சொன்ன இரு தளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது உங்கள் பரஸ்பர நிதிக்கான நிறுவன பெயர் இல்லையென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பதிவின் போது உங்களுக்கான OTP கைபேசியில் வரலாம். அதனால், பரஸ்பர நிதியில் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியம்.

 

ஆதார் இணைப்பு – பரஸ்பர நிதி சம்மந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு, வர்த்தக மதுரைக்கு நீங்கள் மின்னஞ்சல் (contact at varthagamadurai.com) அனுப்பலாம்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை.

 

www.varthagamadurai.com

 

  

 

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

EMI – EQUATED MONTHLY INSTALLMENT

SIP – SYSTEMATIC INVESTMENT PLAN

 

 

உங்களுக்கு ஒரு ஆசை… ஒரு அழகான மற்றும் நல்ல சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் (Mobile) வாங்க வேண்டுமென்று; சந்தையில் அதன் விலை ரூ. 15,000 /- மட்டுமே என வைத்து கொள்வோம். நல்ல Features உள்ள செல்போன் தான்; ஆனால் கையில் தான் பணம் சற்று குறைவாக உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் இருப்போ மிகவும் குறைவு. Minimum Balance ஐ பராமரிப்பது கூட, சில சமயம் சிரமமாக உள்ளது; யாரிடமாவது கைமாத்து வாங்கலாமா ? அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டுமென்றாலும், அடுத்த மாத சம்பளம் தானே இருக்கு ! என்ன பண்ணலாம் ???

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நினைத்து கொண்டிருந்த அந்த நேரத்தில், உங்களுக்காக ஒரு அதிர்ஷ்ட விளம்பரம் அழைக்கிறது; ஆம், அதிர்ஷ்ட விளம்பரமே தான் !!!  நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனின் விளம்பரத்துடன்…

என்ன ஒரு ஆச்சர்யம் ! நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனுக்கு, நீங்கள் எந்த முன்பணமும் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்து செல்லலாம்; நீங்கள் பதிவு செய்த அன்றைய தினமே ரூ.15,000 /- மதிப்புள்ள பொருள் உங்களுக்கு சொந்தம் 🙂

ஆமாங்க, அந்த அதிர்ஷ்ட  EMI (EQUATED MONTHLY INSTALLMENT)  🙂

பிளான் இது தான்; செலக்ட் பண்ணுங்க என்று அந்த விளம்பரம் சொல்கிறது. முன்பணம் எதுவும் இல்லை !

 

EMI(Equated Monthly Installment):

 

நீங்கள் வாங்க நினைக்கும் ஒரு பொருளுக்கு, எந்த முன்பணமும் செலுத்தாமல் (அ) சிறு தொகை ஏதேனும் செலுத்தி விட்டு, மீதத்தொகையை மாத தவணைகளில் வட்டியுடன்  செலுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது.

Loan  EMI:  For Rs. 15,000 /-                     Rate of Interest:   12 %
6 Months 12 Months 24 Months
2588/- Monthly 1333/- Monthly 706/- Monthly

 

சாதகங்கள்:

  • நாம் விருப்பப்பட்ட பொருளை உடனடியாக, நாம் நினைத்த நேரத்தில் வாங்கலாம்; முழுத்தொகையையும் செலுத்தாமல் !
  • குறுகிய கால (அ) அவசர கால தேவைகளுக்கு ஏற்றது(Short term/Immediate Needs)

 

பாதகங்கள்:

  • பொருளின் அசல் சந்தை (Actual Price) மதிப்பை விட நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள்; அதாவது நீங்கள் செலுத்தும் வட்டி % (Paying more than the Actual market price )
  • ஒரு பொருளை நீங்கள் உடனடியாக பெற்றாலும், அதற்கு நீங்கள் முழு உரிமை பெற முடியாது (உங்கள் தவணை காலம் முடியும் வரை)
  • செலவழிக்கும் பழக்கம் அதிகரிக்கும்; எதையும் உடனே வாங்க வேண்டுமென்ற எண்ணம் (Impulsive Buying) ஏற்படலாம்; நீங்கள் எதிர்காலத்தில் கடன்காரராக மாறலாம்.

 

SIP(Systematic Investment Plan / Recurring):

 

இலக்குகளுக்காக (அ) எதிர்கால தேவைகளுக்காக, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (Monthly, Quarterly, Yearly – Frequency) உங்கள் பணத்தினை முதலீடு செய்வது / சேமிப்பது; முதலீட்டின் முதிர்வில், உங்கள் இலக்குகளில் (அ) தேவைகளை நிறைவேற்றுவது.

 

SIP என்றாலே, பரஸ்பர நிதி திட்டம்(Mutual Funds) தான் என்று நாம் முடிவு செய்து விட கூடாது. நீங்கள் சேமிக்கும் அஞ்சலக சேமிப்பு(Postal Savings), வங்கி RD, PF ம் SIP ஆகும்.

 

உங்கள் இலக்கு, ரூ. 15,000 /- மொபைல் போன் என்றால்,

SIP Goal:     Rs. 15,000 /-  (Mobile Phone)    Expected Return:   10 %
6 Months 12 Months 24 Months
2430 /- Monthly 1200 /- Monthly 565 /- Monthly

 

சாதகங்கள்:

  • சேமித்து வாங்கும் பழக்கம் ஏற்படுவதினால், நீங்கள் அவ்வளவு சீக்கிரமாக எந்த பொருளையும், பணத்தையும் விரயம் செய்யமாட்டீர்கள்.
  • நீங்கள் வாங்க நினைக்கும் பொருளுக்கு, முழு தொகையை செலுத்தி சொந்தம் கொண்டாடலாம்.
  • வாங்க நினைக்கும் பொருளின் மதிப்பை விட,  உங்கள் முதலீடு கொஞ்சம் வட்டி வருமானம் அதிகமாகவும் கொடுத்திருக்கலாம்.
  • நீண்ட கால இலக்குகளுக்கு நல்லது (Education, Marriage, Retirement).

 

பாதகங்கள்:

  • அவசர தேவைகளுக்கு(Medical Emergency, Unusal Happenings)  நீங்கள் இலக்குகளை நிர்ணயிக்க முடியாது (அ) காத்திருக்க முடியாது; எனவே முன் கூட்டிய இலக்குகள்/ சேமிப்பு வேண்டும்.

 

 

Climax:  தீர்வு

 

உணர்ச்சிவயப்பட்டு செலவழிக்க வேண்டுமா (அ) இலக்குகளை அடைய சேமிக்க / முதலீடு செய்ய வேண்டுமா என நீங்கள் உங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுங்கள்;

அவசரத்திற்கு தவணை உதவலாம்;

வருமுன் காப்பது நல்லதா ?

வந்தபின் வருந்துவதா ?       மூளையை யோசிக்க விடுங்கள் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

www.varthagamadurai.com

(Image Courtesy:  fpindia.in )