All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

18 பொதுத்துறை வங்கிகள், 32,000 கோடி ரூபாய் மோசடி – பாரத ரிசர்வ் வங்கி தகவல்

18 பொதுத்துறை வங்கிகள், 32,000 கோடி ரூபாய் மோசடி – பாரத ரிசர்வ் வங்கி தகவல் 

Rs. 32K Crore worth of Scams in 18 PSU Banks – RBI 

சமீபத்தில் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் வங்கி மோசடி சார்பாக 3,760 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இதன் மதிப்பு சுமார் 71,500 கோடி ரூபாய் எனவும், மோசடி நடந்த வங்கிகளில் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள் தான் அதிகமுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

2017-18ம் நிதியாண்டை காட்டிலும் 2018-19ம் நிதியாண்டில் வங்கி மோசடிகளின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. பெரிய தொகை அளவிலான மோசடிகள் தான் அதிகம் இருந்ததாகவும், சிறிய தொகையான ரூ. 1 லட்சத்திற்கு குறைவான மோசடிகளின் (Bank Frauds) அளவு 0.1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

100 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகளை கண்டறிய வங்கிகளுக்கு நான்கு முதல் ஐந்து வருட காலம் தேவைப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில்(PSU Banks) நடைபெற்ற மோசடி வழக்குகள் 2,480. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 32,000 கோடி ரூபாய் எனவும், இந்த மோசடிகள் 18 பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வாங்கி(RBI) கூறியுள்ளது.

சொல்லப்பட்ட 32,000 கோடி ரூபாய் வங்கி மோசடியில், ஸ்டேட் வங்கியில்(State Bank of India) மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது. முதல் காலாண்டில் ஸ்டேட் வங்கியின் சார்பாக பதியப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 1200 ஆகும்.

மோசடி நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட், ஓரியண்டல், பரோடா மற்றும் யூனியன் வங்கி ஆகியவையும் அடக்கம். சிண்டிகேட் வங்கியில் சுமார் 800 கோடி ரூபாய் அளவிலான மோசடியும், கார்பொரேஷன்(Corporation Bank) வங்கியில் 960  கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியும் நடைபெற்றுள்ளது.

பரோடா(Bank of Baroda) மற்றும் ஓரியண்டல் வங்கி முறையே ரூ. 2,300 கோடி மற்றும்  2,130 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் நடந்துள்ளது. இதே போல் கனரா மற்றும் சென்ட்ரல் வங்கிகளிலும் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது. வங்கி மோசடி சார்ந்து பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 42 வழக்குகளும், யூகோ வங்கியில்(UCO Bank) 34 வழக்குகளும், யூனியன் வங்கியில் 51 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதும், வாராக்கடன் அளவு அதிகரிப்பதும் இது போன்ற காரணங்களால் தான் என சொல்லப்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மோசடிகளின் விகிதம் ஒவ்வொரு காலத்திலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரஷ்யாவின் தூர கிழக்கு மண்டல வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் வழங்கப்படும் – பிரதமர் மோடி

ரஷ்யாவின் தூர கிழக்கு மண்டல வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் வழங்கப்படும் – பிரதமர் மோடி 

USD 1 Billion for Russia’s Far East Development – PM Modi

கடந்த வியாழக்கிழமை அன்று (05-09-2019) ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் 5வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு துவங்கியது. இந்த பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, ‘ இந்தியாவுக்கும், ரஷ்யாவின் தூர கிழக்கு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஒன்றும் புதிதல்ல. சோவியத் ரஷ்யாவின் போது மற்ற நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்த நிலையிலும், இந்திய நாட்டிற்கு விளாடிவோஸ்டாக் எப்போதும் திறந்த நிலையில் தான் இருந்தது.

விளாடிவோஸ்டாக் நகரில் (Vladivostok) தனது தூதரகத்தை திறந்த முதல் நாடு இந்தியாவாகும். தூர கிழக்கு மண்டலங்களின் வளர்ச்சியில் இந்தியா எப்போதும் துணை நிற்கும். இந்த வளர்ச்சிக்காக இரு நாட்டு ஒப்பந்தங்களின் படி, இந்தியா ரஷ்ய நாட்டிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை வழங்க முன் வருகிறது ‘ என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்திய நிறுவனங்கள் சார்பில் பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டின் வாயிலாக 50 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இந்த முதலீடு எரிசக்தி, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, மர வேலைகள் மற்றும் சுரங்க தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் என்ற சொல்லப்பட்டுள்ளது.

நடைபெற்ற கூட்டமைப்பு மாநாட்டில், தனது நாடு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை வரும் 2024-25ம் ஆண்டுக்குள் அடைவது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இந்தியா மற்றும் ரஷ்யா இரு நாடுகளும் எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிடுவதை ஏற்று கொள்ளாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை  

www.varthagamadurai.com

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமா ?

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமா ?

PSU Banks Merger – Is there benefits for the Investors ?

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை அடுத்து, இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. ஒரு புறம் வங்கிகளின் இணைப்பு சரியானதே, இந்த இணைப்பினால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமில்லாமல், தனியார் வங்கிகளுடன் போட்டியை சமாளிக்க இது உதவ கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

மறுபுறம் வங்கிகளின் வாராக்கடன் சுமையை மறைக்க, வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் வங்கிகள் இணைப்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்(NPA)  நாட்டின் பெருவாரியான பிரச்னையாக தற்போது பார்க்கப்படுகிறது.

வங்கிகளின் வாராக்கடன் மத்திய அரசின் நிதி பற்றாக்குறையிலும்(Fiscal Deficit) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதி சுமையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரத ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றது, வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் முதலீடுகளை திரட்டுவது என வங்கி சிக்கல்களை மட்டுமே களையும் நிலை உள்ளது.

வங்கிகளின் இணைப்பில் அரசு நடவடிக்கையை மேற்கொண்டாலும், பங்கு முதலீட்டாளராக உள்ள ஒருவருக்கு இந்த வங்கிகள் இணைப்பு பயன் தருமா என்பது தான் கேள்வியாக உள்ளது. தற்போதைய நிலையில் ஓரளவு வருவாய் ஈட்டி கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கியுடன், நஷ்டத்தில் இருக்கும் வங்கியை தான் அரசு இணைக்க முடிவு செய்துள்ளது.

கடந்த சில வருடங்களாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. இதற்கு காரணமாக வாராக்கடன் சுமை என சொல்லப்படுகிறது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வங்கி சேவை தவிர காப்பீடு, பரஸ்பர நிதி(Mutual Funds) மற்றும் பங்கு சார்ந்த சேவைகளும் வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதன் தாக்கம் வங்கிகளில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

பங்கு முதலீட்டாளர்களை பொறுத்தவரை, தற்போது பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வது சாதகமாக இருக்குமா என கேட்டால், சந்தேகம் தான். பொதுவாக வங்கிகளின் சேவை மற்றும் அதனை சார்ந்த நிதி அறிக்கைகளை ஆராய்வது அவ்வளவு எளிதல்ல. ஒரு எளிய முதலீட்டாளராக நாம் வாகன துறை அல்லது தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையை எளிமையாக அலசலாம். ஆனால் நிதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நிதி அறிக்கையை முழுமையாக அலசுவது என்பது கடினம் தான்.

அவ்வாறு இருக்க, வங்கிகளின் இணைப்பில்(Merger of PSU Banks) நமக்கு கிடைக்க பெறும் தகவல்கள் புரிந்து கொள்ளும் முறையில் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நிறைவேறும் பட்சத்தில், அடுத்த சில காலங்களுக்கு அந்த பங்கு அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகலாம். ஆனால் நீண்ட காலத்தில் முதலீட்டாளருக்கு வருவாயை கொடுக்கும் நிலையில் இருக்குமா என்பது சந்தேகமே.

இணைப்பிற்கு பிறகான சேவையின் வெளிப்பாடு அதன் வருவாயில் தெரிய வரும். தொடர்ச்சியான லாபத்தில் இயங்க வங்கிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும். வாராக்கடன் நிலை எவ்வாறான நிலையை பெறுகிறது என்பதை நாம் உடனடியாக அறிய முடியாது. தனியார் வங்கி எனில், அவை வாராக்கடன் என்ற நிலையையும் தாண்டி, நஷ்டத்தை அறிவிக்க தயாராக இருக்கும். தங்களுக்கு தேவையான முதலீட்டை திரட்டி மீண்டும் லாபத்திற்கு திரும்புவது இயல்பு. ஆனால் பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை அரசு கொள்கைகளில் அது மாற்றத்தை பெறும்.

பங்குச்சந்தை இறங்கி கொண்டிருக்கும் தற்சமயத்தில், நல்ல நிறுவன பங்குகளை ஆராய்ந்து சரியான விலையில் வாங்குவதே சிறந்தது. பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகிறது, அவை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக உண்மையான மதிப்பை(Valuation) அறியாமல் முதலீடு செய்வதை தவிர்க்கலாம். பொதுத்துறை வங்கி பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர், பரஸ்பர நிதி திட்டங்களின் வாயிலாக முதலீடு செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கான ரிஸ்க் குறைந்து, முதலீடு பரவலாக்கம் செய்யப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

Declining Economic Growth – GDP in India – A Short look

கடந்த வெள்ளிக்கிழமை (30-08-2019) அன்று மத்திய புள்ளியியல் அமைச்சகம்(Central Statistics Office – CSO) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளதாக கூறப்பட்டது. அதாவது இதற்கு முந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் செப்டம்பர் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையக்கூடும். உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டு பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமான அம்சத்தை கொண்டிருக்கவில்லை.

நாட்டின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதுவே நம் நாட்டின் உச்சபட்ச அளவாக நடப்பில் காணப்படுகிறது. உலக பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 4.40 சதவீதமாகும். கடந்த வாரம் சொல்லப்பட்ட 5 சதவீத வளர்ச்சி, கடந்த ஆறு வருடங்களில் காணப்பட்ட குறைந்த பட்ச அளவாக உள்ளது.

வருட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காணும் போது, கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி வளர்ச்சி 6.20 சதவீதமாகவும், வாழ்நாள் உச்சமாக 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.40 சதவீதமும், குறைந்த பட்சமாக 1979ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.

2016ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டின் துவக்கத்தில் 8.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி படிப்படியாக இறக்கத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்த மாற்றங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது என சொல்லப்பட்டாலும், நுகர்வு தேவை குறைந்து(Weak Demand Consumption) வருவதே பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் வாகன துறை தேவையான வளர்ச்சியை பெறும் பட்சத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கலாம். அதே வேளையில் வங்கிகளின் வாராக்கடன் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் சிக்கல்கள் தீர்க்கப்படுமாயின், அது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

நுகர்வு மற்றும் முதலீட்டு தேவைகளும் குறைந்துள்ளதாக பெருவாரியான நிதி மதிப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளது. தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி வியட்நாம், சீனா, எகிப்து ஆகியவை முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 – 2017 காலத்தில் இந்தியா வேகமாக வளரும் நாடுகளில்(Emerging Economy) முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பொருளாதார சூழலில், நடப்பு நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சி இலக்கை அடைவது கடினமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா வாழ்வு பேரின்பமே…

கடனில்லா வாழ்வு பேரின்பமே

 Debt Free Life is a Bliss

 

கடன் அன்பை முறிக்கும்; இல்லையில்லை, கடன் அனைத்தையும் முறிக்கும். கைபேசி வாங்குவதற்கான EMI முதல் ‘Entrepreneurship’ என்னும் தொழில்முனைவு வரை இன்று கடன் பெறுவது என்பது சுலபமானதாக உள்ளது. தேவையிருந்தால்  கடன் வாங்கலாம். ஆனால் கடன் வாங்குவதை மட்டுமே நமது தேவையாக வைத்திருத்தல் நல்லதல்ல. ஏழைக்கும், நடுத்தர மக்களுக்கும் தான் இந்த கடன் ஒரு பிரச்சனை என்றால், பணக்காரர்கள் என்று சொல்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் கடன் ஒரு தொல்லையே.

 

இன்று பலருக்கு மரணக்குழிக்கான பாதையை காட்டுவது இந்த கடன்(Debt) தான். நம்மில் பலர் கடன் வாங்கியாவது மற்றவர்களிடம் ஆடம்பரத்தை வெளிப்படுத்த வேண்டும் என முனைகின்றனர். நான்கு சக்கர வாகனம் தேவைப்படாவிட்டாலும், தவணை முறையில் வாங்கி வைத்து விட்டு, சில காலத்திற்கு பின்பு அதனை சுமக்க முடியாமல் விற்பது அல்லது எக்ஸ்சேஞ் மேளாவிற்கு(Exchange Mela) செல்வது நடைபெற தான் செய்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இவ்வுலகில் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய விஷயம் இன்று, கடன் பெறுவது தான். கடினமான வாழ்க்கை எனில், அது எளிமையாக(Frugality) வாழ்வது தான். கடனில்லாமல் நம்மால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பரவாயில்லை, கடனை அடைக்க பழகலாம். ஆனால் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன், மேலும் ஒரு கடன் என வாங்க முயலாதீர்கள். இங்கு தான் பெரும்பாலானவர்கள் கடன் வலையில் விழுவதற்கான வாய்ப்பு அதிகம். கந்து வட்டி கதையும் இங்கு தான்.

 

கடனில்லா வாழ்வின் சுகங்கள்:

 

  • நிதி சார்ந்த விஷயத்தில், உங்களிடம் சுய கட்டுப்பாடு(Self Control) இருக்கும். எந்தவொரு பொருளையும் யோசித்து தான் வாங்குவீர்கள்.

 

  • நீங்கள் விரும்பிய தொழிலை, பிடித்த வேலையையோ செய்யலாம்.

 

  • நிதி சுதந்திரம்(Financial Freedom) பெறுவதற்கான முதல் படி கடனில்லாமல் இருப்பது அல்லது கடனை குறைப்பது தான்.

 

  • வரவுக்குள் உங்கள் செலவுகள் உள்ளதை இங்கே உறுதி செய்து கொள்ளலாம்.

 

  • அமைதியான குடும்பம், மன அழுத்தமில்லா வாழ்க்கை(Stress free Life).

 

  • யாரிடமும் நீங்கள் பயமின்றி (பொருளாதார ரீதியாக) பேசலாம்.

 

  • உண்மையில் நீங்கள் தான் பணக்காரர் (வரவுக்குள் செலவு). உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் ஏராளம்.

 

  • தேவை மற்றும் விருப்பத்திற்கான(Need & Wants) தேர்வை பிரித்துணர முடியும்.

 

  • எப்படிப்பட்ட நிதிச்சிக்கலையும் உங்களால் சமாளிக்க முடியும்.

 

  • குறைவில்லா நிதி வாழ்க்கையை பெற முடியும்.

 

கடனில்லாமல் வாழ்வதற்கான எளிய உத்திகள்

 

  • உங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குங்கள்.

 

  • மற்றவர்களிடம் உள்ளது என பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.

 

  • கடன் வாங்கும் முன், அது நமக்கு தேவையா என பல முறை யோசியுங்கள். கடன் வாங்க முயலும் போது, குறைந்த வட்டிக்கான வாய்ப்புகளை கண்டறியுங்கள்.

 

  • நிதி சார்ந்த விஷயங்களில் பேரம் பேச தயங்காதீர்கள். அதற்காக இலவசமாக எதையும் பெற வேண்டாம்.

 

  • எப்போதும் பட்ஜெட் திட்டமிடலை(Budget Planning) செயலாற்றுங்கள்.

 

  • கடன் – முதலீடு என வரும் போது, கடனை அடைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் கடனை அடைக்கும் நிலையில், உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் அமையும்.

 

  • கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை பெறுங்கள்.

 

  • எந்தவொரு பொருளை வாங்கும் முன், அதற்கான சேமிப்பை அல்லது முதலீட்டை முன்னரே துவக்கி, முதிர்வு தொகையை கொண்டு உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குங்கள்.

 

  • EMI vs SIP – இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

 

  • வரி சலுகையை திறமையாக பயன்படுத்துங்கள். டேர்ம் பாலிசி(Term Policy) மற்றும் உடல்நல காப்பீட்டுக்கு(Health Insurance) முக்கியத்துவம் கொடுங்கள்.
  • தாமதமான மனநிறைவை கொள்ளுதல் (Delayed Gratification) – இது பணக்காரர் ஆவதற்கான சூத்திரம். நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது, கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்கலாம். இது பிற்காலத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க உதவும்.

 

 

நீங்கள் இப்போதே பணக்காரரா, ஏழையா என்பதனை அடையாளம் காண:

 

Rich Worth Value (பணக்கார மதிப்பு) =   மொத்த சொத்துக்கள் / மொத்த கடன்கள்

 

உங்களின் பணக்கார மதிப்பு ஒன்றுக்கு(1) மேற்பட்டு இருந்தால் சந்தோசப்பட்டு கொள்ளுங்கள். இன்னும் உயர்த்த தயாராகுங்கள்.

 

சமமாக ஒன்று(1) அல்லது ஒன்றுக்கு குறைவாக இருந்தால், நிதி விஷயத்தில் கவனம் தேவை. இதனை திருத்தி கொள்ளுங்கள் (கடனை குறையுங்கள்).

 

நண்பர் ஒருவர், ‘ எனக்கு இணைய விளையாட்டில் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் சந்தோஷப்படுவேன் ‘ என்று சொன்னார். ‘ நீங்கள் அந்த ஒரு கோடி ரூபாயை வைத்து என்ன செய்வீர்கள் ‘ என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கையில், ‘ நான் அதனை எனக்கு பிடித்த விதத்தில் செலவு செய்வேன் ‘ என்கிறார். இங்கு தான் நிதித்திட்டமிடல் முக்கியத்துவம் பெறுகிறது. உங்களிடம் நிறைய பணம் இருந்தால் நன்று. மாறாக, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே இருக்கையில், அதனை சாமர்த்தியமாக முதலீடு செய்து, பின்பு அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் செலவு செய்ய தொடங்கினால் – கடனில்லா வாழ்வு பேரின்பமே !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் – பிட்ச் குழுமம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் – பிட்ச் குழுமம்

Fitch Group India Ratings cut GDP growth to 6.7 Percent for FY20

உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் நிதி தகவல் சேவையை அளித்து வரும் பிட்ச் குழுமத்தின்(Fitch Group) துணை நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தனது பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளிவிவரங்களை கூறும் போது, நடப்பு 2019-20ம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக காணப்படும் என சொல்லியிருந்தது.

 

இதற்கு முன்பு 2019-20ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.3 சதவீதமாக சொல்லப்பட்டிருந்தது. தற்போது இந்த வளர்ச்சியை குறைத்து கூறியுள்ளது பிட்ச் குழும இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் மத்திய அரசால் சொல்லப்பட்ட நிதி சார்ந்த மாற்றங்கள் சாதகமாக இருப்பினும், நடப்பு வருடத்தில் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உடனடியாக வளர்ச்சியை பெறுவது சாத்தியமில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் கூறுகையில், ‘மத்திய அரசு பொது மக்களிடம் பொருளாதார மாற்றம் சார்ந்த நம்பிக்கையை உருவாக்க தவறி விட்டது ‘ என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

இந்தியா ரேட்டிங்ஸ்(India Ratings) நிறுவனம் கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்துள்ளது. வீட்டு சேமிப்பும்(Household Savings) வெகுவாக குறைந்துள்ளதாக கூறியுள்ள இந்நிறுவனம், கடந்த 2012ம் வருடம் 23 சதவீத சேமிப்பு வளர்ச்சி  என்ற நிலையிலிருந்து 2018ம் வருடம் 17 சதவீத சேமிப்பு மட்டுமே என்ற மாற்றத்தை பெற்றுள்ளன.

 

நகர்ப்புற சேமிப்பும், முதலீடும் சாதகமாக இல்லை எனவும், கிராமப்புறங்களில் தனியார் நுகர்வும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தனியார் துறையில் சேமிப்பு வளர்ச்சி அதிகரித்தும், அவை தற்போது உள்ள சூழ்நிலையில் முதலீடு செய்ய தயங்குகின்றன. 

 

உலக பொருளாதார காரணிகளும் தொய்வு நிலையில் இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய அளவு மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

1,76,000 கோடி ரூபாய் பரிமாற்றம் – அரசு எவ்வாறு செலவிட போகிறது ?

1,76,000 கோடி ரூபாய் பரிமாற்றம் – அரசு எவ்வாறு செலவிட போகிறது ?

How the Central Govt can use the Rs. 1.76 Lakh Cr at best – RBI to Govt. of India

 

பிமல் ஜலான்(Bimal Jalan) கமிட்டி பரிந்துரையின் பேரில் மத்திய ரிசர்வ் வங்கி 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியானது. உலக பொருளாதார மந்த நிலை உள்ள இந்த சூழ்நிலையில் ரூ. 1.76 லட்சம் கோடி தொகை நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க உதவும் என சொல்லப்படுகிறது. மறுபுறம் மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி தொகையை ஏன் மத்திய அரசுக்கு தற்போது பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சொல்லப்பட்ட நிலைப்பாட்டை நாம் எப்படி அணுகினாலும் சரி, தற்போது பொருளாதார மந்த நிலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான் எனினும், ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார சரிவை சமாளிக்க பல கொள்கைகளும், மாற்றங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

சில வருடங்களுக்கு முன்பு, 1,76,000 கோடி ரூபாய் என்ற மதிப்பு 2ஜி ஸ்பெக்ட்ரம்(Spectrum) சர்ச்சையாக பேசப்பட்டது. இப்போது பாரத ரிசர்வ் வங்கியின் பரிமாற்றமாக களம் இறங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதும், வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையால் நிதிநிலை மோசமடைந்து வருவதும் நாட்டின் பொருளாதத்திற்கு சாதகமாக இல்லை.

 

மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கும் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சொல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ரூ. 1.76 லட்சம் கோடி பரிமாற்ற முடிவு என சொல்லப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India), மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்யும் அதிகபட்ச தொகையாக இது கருதப்படுகிறது. பிமல் ஜலான் கமிட்டி பாரத ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது தான் எனவும் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரத ரிசர்வ் வங்கி, பொருளாதார மூலதன கட்டமைப்பு குழு(Economy Capital Framework) ஒன்றை ஏற்படுத்தியது. இதன் தலைவராக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. பிமல் ஜலான் பொறுப்பு வகித்தார். இந்த குழு மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள உபரித்தொகையை அரசுக்கு பரிமாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டை வழங்கும்.

 

பரிமாற்ற தொகையான ரூ. 1.76 லட்சம் கோடி இந்திய பொருளாதார மதிப்பில்(GDP) 0.5 சதவீதம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1.23 லட்சம் கோடி ரூபாய் கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாரத ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபமாகும். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கியிலிருந்து(RBI) மத்திய அரசுக்கு பண பரிமாற்றம் செய்யப்படும். இம்முறை பரிமாற்றம் செய்யப்பட்ட அதிகபட்ச தொகைக்கான காரணம், பாரத ரிசர்வ் வங்கியின் லாபம் அதிகரித்தது தான் என கூறப்படுகிறது.

 

பெறப்படும் தொகை எவ்வாறு கையாளப்படலாம் என்பதை பற்றி நிதி அமைச்சர் இன்னும் சொல்லவில்லை. இந்த தொகையை கொண்டு மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை(Fiscal Deficit) குறைத்து கொள்ளும், வங்கிகளின் நிதி நிலையை (Bank Liquitiy crisis) சரி செய்ய பயன்படுத்தும் என பொருளாதர வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

தற்போது காணப்படும் பொருளாதார மந்த நிலையை களைய இந்த தொகை உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதன் தாக்கம் அடுத்து வரும் காலாண்டு முடிவுகளிலும், அரசின் திட்ட செயல்பாடுகளிலும் தெரிய வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்க – சீன வர்த்தக போர் – பேச்சு வார்த்தை

மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்க – சீன வர்த்தக போர் – பேச்சு வார்த்தை 

Sino – US Trade war – Talks again

 

சீன-அமெரிக்க வர்த்தக போர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை(Trade Deficit) சரி செய்யும் பொருட்டு, வர்த்தக போரை முதன்முதலில் ஆரம்பித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump). இதனையடுத்து சீன நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்க தொடங்கினார்.

 

அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வரி விதிப்பு உதவக்கூடும் என பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டிருந்தது. ‘ வர்த்தக போர் ஆரோக்கியமானது, இதன் மூலம் எளிய முறையில் தீர்வு காணப்படும் ‘ என டொனால்ட் டிரம்ப் ஒரு முறை கூறியிருந்தார். இதன் காரணமாக இரு நாடுகளிடையே வரி விதிப்பும், பேச்சு வார்த்தையும் அவ்வப்போது நடைபெறத்தான் செய்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், உலக பொருளாதரத்தில் போட்டி போட்டு கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளிடையே தீர்வும் சுமுகமாக முடிவடையவில்லை. அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் 20 ட்ரில்லியன் டாலர் மதிப்பை கொண்டிருக்க, சீன நாட்டின் மதிப்பு 13 ட்ரில்லியன் டாலர்களாக இருந்து வருகிறது.

 

கடந்த வாரத்தில் அமெரிக்கா சீன பொருட்களுக்கு வரி விதிக்க, சீன நாடும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க தயாரானது. இதனை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன நாட்டிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டார். தற்போது டிரம்ப், ‘ வர்த்தக போர் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு சீனா கேட்டு கொண்டுள்ளது ‘ என கூறியுள்ளார்.

 

ஏற்கனவே ஹாங்காங் நாட்டில் ஏற்பட்டு கொண்டிருக்கும் பதற்றம் சீனா நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இவ்வேளையில், சொல்லப்பட்ட அமெரிக்க-சீன பேச்சுவார்த்தை எந்தவொரு கட்டத்தை அடைய போகும் என தெரியவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

சீன-அமெரிக்க வர்த்தக போரால், உலகளவில் ஒரு வித பொருளாதர பதற்றம் நிலை கொண்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்று கொண்டிருக்கிறது. பணப்புழக்கமும் குறைந்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் சீன இடையேயான வர்த்தக போர் முடியும் தருவாயில், மற்ற நாடுகளில் மாற்றம் ஏற்படலாம்.

 

அடுத்த வருடம் அமெரிக்க நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் வர்த்தக போருக்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியுமா என்பதை மற்ற நாடுகளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. இந்த இரு நாடுகளிடையேயான பிரச்சனை நம் நாட்டிலும் வாகனத்துறை மற்றும் பிற துறைகளிலும் தொய்வை ஏற்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த வரவிருக்கும் தேர்தல் உத்திக்காக, வரி விதிப்பு முறையை கையாள்வதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, இந்த வர்த்தக போர் கலையப்பட்டால் மட்டுமே, உலக பொருளாதாரத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இல்லையெனில், மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அனைத்து நாடுகளும் சென்று கொண்டிருக்கிறதா என்பது வரவிருக்கும் மாதங்களில் நிறுவனத்தின் வருவாயில் தெரிய வரும். 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக போர்

 

www.varthagamadurai.com

 

ஏற்றத்திற்கான முனைப்பில் இந்திய பங்குச்சந்தை – பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான மாற்றங்கள்

ஏற்றத்திற்கான முனைப்பில் இந்திய பங்குச்சந்தை – பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான மாற்றங்கள் 

Changes to Stimulate the Indian Economy – Is the Indian Market ready to push up ?

நேற்று மாலை(23-08-2019) மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை வகித்த மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான மாற்றங்களை சொன்னார்.

 

பி.எஸ். 4(BS IV) வகை வாகனங்களை பதிவு காலம் வரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், வாகனத்திற்கான ஒரு முறை பதிவு கட்டணம் வரும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மூலதன சந்தை வளர்ச்சிக்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி சேவைகளுக்கு எளிமையான ஆதார் அடிப்படையிலான கே.ஒய்.சி.(KYC) நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் (Ministry of Finance) கூறியுள்ளார்.

 

அந்நிய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோருக்கு கடந்த ஜூலை மாத பட்ஜெட்டில் வரி விதிப்பு சொல்லப்பட்டது. தற்போது இதனை நீக்குவதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. கட்டணத்தை(GST Refund) திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல்கள் களையப்படும், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள தொகை 30 நாட்களுக்குள் முடிக்கப்படும். வரும் காலத்தில் ஜி.எஸ்.டி. கட்டணத்தை பெறுவது சார்ந்த விஷயங்கள் 60 நாட்களுக்குள் சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இனி மேல் சி.எஸ்.ஆர்.(CSR Violations) விதிமீறல்கள் சிவில் குற்றமாகவே எடுத்து கொள்ளப்படும் எனவும், அவை கிரிமினல் குற்றமாக கருதப்படாது எனவும் சொல்லப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு வரி சலுகை அளிக்க உள்ளதாகவும், தொழில் செய்பவர்களுக்கான ஏஞ்சல் வரி(Angel Tax) விதிப்பு இல்லை எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.

 

தொழில்துறைக்கான சட்டங்களும், தொழில் புரிபவர்கள் எளிமையாக அணுகும் முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும். ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த வங்கிகளுக்கான மறுமூலதனம் ரூ. 70,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்குவதற்கு வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

 

பெரும் செல்வந்தர்களுக்கான வரி விதிப்பு முறையும்(Super Rich Tax) கைவிடப்பட்டுள்ளது. வங்கிகள் அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி கணக்கீட்டு, ரெப்போ வட்டி விகிதத்துடன் இணையாக செயல்படுவதற்கு மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம் அடுத்து வரும் காலத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கான வட்டி சலுகை கிடைக்கலாம்.

 

பங்குச்சந்தையில் பெறப்படும் நீண்டகால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு முன்னர் சொல்லப்பட்டிருந்த சர்சார்ஜ்(Surcharge) கட்டணம் விலக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றோர் கடனை முடிக்கும் தருவாயில், அவர்களிடம் பெற்றிருந்த கடன் ஆவணங்களை 15 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் எனவும், கடன் சார்ந்த துன்புறுத்தல்கள் களையப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

நேற்று சொல்லப்பட்ட விஷயங்கள் உடனடியான வளர்ச்சியை கொண்டு வர முடியாது. வரும் வாரங்களில் பங்குச்சந்தை சாதகமான அம்சத்தை பெறும். மீண்டும் சென்செக்ஸ் குறியீடு(Sensex) 40,000 புள்ளிகளை நோக்கி செல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்வது சிறந்தது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

அன்னிய முதலீட்டாளர்களின் விதிகளை தளர்த்தும் செபி

அன்னிய முதலீட்டாளர்களின் விதிகளை தளர்த்தும் செபி 

SEBI relaxes Foreign Investors’ (FPI) Rules

 

நடப்பு வருட ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் அறிவிப்பிற்கு பின், இந்திய பங்குச்சந்தையிலிருந்து அன்னிய முதலீடுகள் வெகுவாக குறைந்தன. பட்ஜெட் அறிவிப்பில் சொல்லப்பட்ட அன்னிய முதலீட்டாளர்களுக்கான வரி கொள்கை, உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் இந்தியாவில் தற்போதைய நிலைமை சாதகமாக இல்லாதது போன்ற காரணங்களால் இவர்களது முதலீடு வெளியேறியுள்ளது.

 

கடந்த இரண்டு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் இந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி(SEBI) தனது கூட்டத்தில் அன்னிய முதலீட்டாளர்களுக்கான விதிகளை தளர்த்தும் முடிவுகளை எடுத்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அன்னிய முதலீட்டாளர்கள் இனி இரு பிரிவுகளாக அமைக்கப்படுவர் எனவும், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குகளை திரும்ப பெறுவதிலும்(Buyback of Shares) மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அன்னிய முதலீட்டாளர்கள் மூன்று பிரிவுகளாக சொல்லப்பட்டனர்.

 

முன்னர் அன்னிய முதலீட்டாளர்களுக்கான கே.ஒய்.சி. நடைமுறை கடினமாக இருந்தது. இனி எளிமையாக்கப்படலாம் என தெரிகிறது. சந்தையில் பட்டியலிடப்படாத மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களிலும் அன்னிய முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய ஏதுவாக கொள்கை மாற்றப்பட்டுள்ளது.

 

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து, அதற்கான பங்குகளை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளிலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட விஷயங்கள் நடைமுறைக்கு வந்த பின், அதனை சார்ந்து அன்னிய முதலீட்டாளர்களுக்கான வரி கொள்கையில்(FPI Taxation) மத்திய அரசின் நிலைப்பாடு மாறலாம் என தெரிகிறது.

 

செபியின் அன்னிய முதலீட்டாளர்களுக்கான விதிமுறை தளர்வு சார்ந்த ஆவணத்தை கீழ்காணும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள,

 

Review of SEBI (Foreign Portfolio Investors) Regulations – Press Release

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com