மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்க – சீன வர்த்தக போர் – பேச்சு வார்த்தை

மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்க – சீன வர்த்தக போர் – பேச்சு வார்த்தை 

Sino – US Trade war – Talks again

 

சீன-அமெரிக்க வர்த்தக போர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை(Trade Deficit) சரி செய்யும் பொருட்டு, வர்த்தக போரை முதன்முதலில் ஆரம்பித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump). இதனையடுத்து சீன நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்க தொடங்கினார்.

 

அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வரி விதிப்பு உதவக்கூடும் என பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டிருந்தது. ‘ வர்த்தக போர் ஆரோக்கியமானது, இதன் மூலம் எளிய முறையில் தீர்வு காணப்படும் ‘ என டொனால்ட் டிரம்ப் ஒரு முறை கூறியிருந்தார். இதன் காரணமாக இரு நாடுகளிடையே வரி விதிப்பும், பேச்சு வார்த்தையும் அவ்வப்போது நடைபெறத்தான் செய்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், உலக பொருளாதரத்தில் போட்டி போட்டு கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளிடையே தீர்வும் சுமுகமாக முடிவடையவில்லை. அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் 20 ட்ரில்லியன் டாலர் மதிப்பை கொண்டிருக்க, சீன நாட்டின் மதிப்பு 13 ட்ரில்லியன் டாலர்களாக இருந்து வருகிறது.

 

கடந்த வாரத்தில் அமெரிக்கா சீன பொருட்களுக்கு வரி விதிக்க, சீன நாடும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க தயாரானது. இதனை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன நாட்டிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டார். தற்போது டிரம்ப், ‘ வர்த்தக போர் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு சீனா கேட்டு கொண்டுள்ளது ‘ என கூறியுள்ளார்.

 

ஏற்கனவே ஹாங்காங் நாட்டில் ஏற்பட்டு கொண்டிருக்கும் பதற்றம் சீனா நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இவ்வேளையில், சொல்லப்பட்ட அமெரிக்க-சீன பேச்சுவார்த்தை எந்தவொரு கட்டத்தை அடைய போகும் என தெரியவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

சீன-அமெரிக்க வர்த்தக போரால், உலகளவில் ஒரு வித பொருளாதர பதற்றம் நிலை கொண்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்று கொண்டிருக்கிறது. பணப்புழக்கமும் குறைந்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் சீன இடையேயான வர்த்தக போர் முடியும் தருவாயில், மற்ற நாடுகளில் மாற்றம் ஏற்படலாம்.

 

அடுத்த வருடம் அமெரிக்க நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் வர்த்தக போருக்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியுமா என்பதை மற்ற நாடுகளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. இந்த இரு நாடுகளிடையேயான பிரச்சனை நம் நாட்டிலும் வாகனத்துறை மற்றும் பிற துறைகளிலும் தொய்வை ஏற்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த வரவிருக்கும் தேர்தல் உத்திக்காக, வரி விதிப்பு முறையை கையாள்வதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, இந்த வர்த்தக போர் கலையப்பட்டால் மட்டுமே, உலக பொருளாதாரத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இல்லையெனில், மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அனைத்து நாடுகளும் சென்று கொண்டிருக்கிறதா என்பது வரவிருக்கும் மாதங்களில் நிறுவனத்தின் வருவாயில் தெரிய வரும். 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக போர்

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s