அன்னிய முதலீட்டாளர்களின் விதிகளை தளர்த்தும் செபி
SEBI relaxes Foreign Investors’ (FPI) Rules
நடப்பு வருட ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் அறிவிப்பிற்கு பின், இந்திய பங்குச்சந்தையிலிருந்து அன்னிய முதலீடுகள் வெகுவாக குறைந்தன. பட்ஜெட் அறிவிப்பில் சொல்லப்பட்ட அன்னிய முதலீட்டாளர்களுக்கான வரி கொள்கை, உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் இந்தியாவில் தற்போதைய நிலைமை சாதகமாக இல்லாதது போன்ற காரணங்களால் இவர்களது முதலீடு வெளியேறியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் இந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி(SEBI) தனது கூட்டத்தில் அன்னிய முதலீட்டாளர்களுக்கான விதிகளை தளர்த்தும் முடிவுகளை எடுத்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அன்னிய முதலீட்டாளர்கள் இனி இரு பிரிவுகளாக அமைக்கப்படுவர் எனவும், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குகளை திரும்ப பெறுவதிலும்(Buyback of Shares) மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அன்னிய முதலீட்டாளர்கள் மூன்று பிரிவுகளாக சொல்லப்பட்டனர்.
முன்னர் அன்னிய முதலீட்டாளர்களுக்கான கே.ஒய்.சி. நடைமுறை கடினமாக இருந்தது. இனி எளிமையாக்கப்படலாம் என தெரிகிறது. சந்தையில் பட்டியலிடப்படாத மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களிலும் அன்னிய முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய ஏதுவாக கொள்கை மாற்றப்பட்டுள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து, அதற்கான பங்குகளை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளிலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட விஷயங்கள் நடைமுறைக்கு வந்த பின், அதனை சார்ந்து அன்னிய முதலீட்டாளர்களுக்கான வரி கொள்கையில்(FPI Taxation) மத்திய அரசின் நிலைப்பாடு மாறலாம் என தெரிகிறது.
செபியின் அன்னிய முதலீட்டாளர்களுக்கான விதிமுறை தளர்வு சார்ந்த ஆவணத்தை கீழ்காணும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள,
Review of SEBI (Foreign Portfolio Investors) Regulations – Press Release
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை