Tag Archives: quarterly results

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

Bharti Airtel reported a Net loss of Rs. 1,035 Crore in Q3FY20 – Quarterly Results

இந்திய தொலைத்தொடர்பு துறையில் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களுக்கான போட்டி வெகுவாக குறைந்துள்ளது. முன்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பரவலாக இருந்த நிலையில், இன்று பல நிறுவனங்கள் காணாமல் போயின. ரிலையன்ஸ் ஜியோ(Jio) மற்றும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனங்கள் மட்டுமே பெரு நிறுவனங்களாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்கள் சந்தையை கொண்டிருந்தாலும், நிறுவனம் கடந்த பத்து காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கடனாக ரூ. 99,660 கோடி உள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 50,922 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

ஏர்டெல் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 21,947 கோடி எனவும், செலவினம் ரூ. 12,701 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம் இம்முறை ரூ. 1,035 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது.

கடந்த 14 வருடங்களில் முதன்முறையாக 2019-20ம் நிதியாண்டின் மூன்று காலாண்டுகளிலும் ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத்தொகையை(AGR) செலுத்துமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் சொல்லப்பட்ட நிலுவை தொகையை ஒதுக்கியதன் மூலம் காலாண்டு முடிவில் நஷ்டத்தை சமர்ப்பித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை 40 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்திருந்தது. 2018ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் உயர்ந்திருந்தாலும், நிகர வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.83 லட்சம் கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 1.84 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதமும் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. பொதுவாக தொலைத்தொடர்பு சேவையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையார்களிடம் இருந்து பெறப்படும் சந்தா கட்டணத்தை(Subscription Fee – Recharge) கொண்டு தான் தொழிலை நிர்வகித்து வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.28 லட்சம் கோடி உள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 4 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 80,780 கோடியாகவும், நிகர லாபம் ரூ.410 கோடியாகவும் இருந்தது. ஆனால் இம்முறை நடப்பு நிதியாண்டில் மூன்று காலாண்டுகளில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆண்டு முடிவில் பெரும்பாலும் நிகர நஷ்டமாகவே சொல்லப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மணப்புரம் பைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 399 கோடி

மணப்புரம் பைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 399 கோடி

Manappuram Finance Ltd reported a Net Profit of Rs. 399 Crore in Q3FY20 results

கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1949ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிதி சேவை நிறுவனம் தான் மணப்புரம் பைனான்ஸ்(Manappuram Finance). தற்போது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனமாக செயல்படும் மணப்புரம் நாடு முழுவதும் 4000க்கும் மேற்பட்ட கிளைகளையும், 17,000 க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய வழியிலான தங்க நகைக்கடன், கிளைகளில் அளிக்கப்படும் நகைக்கடன், வாகன கடன், அந்நிய நாட்டின் பண மாற்றம்(Forex) மற்றும் பண பரிவர்த்தனை ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனம். மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 15,900 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 60 ரூபாய் விலையிலும், தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் மூன்று மடங்கில் வர்த்தகமாகிறது.

நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், வருவாய் ரூ. 1400 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. செலவினம் ரூ. 382 கோடியாகவும், இதர வருவாய் 15 கோடி ரூபாயாகவும் உள்ளது. மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 399 கோடியாக உள்ளது.

இது கடந்த 2018-19ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வருவாய் ரூ. 1,081 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 245 கோடியாகவும் இருந்துள்ளது. தற்போதைய லாபம் கடந்த வருட காலாண்டை காட்டிலும் 63 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

ஒட்டு மொத்த வாராக்கடன் விகிதமும் இம்முறை சற்று குறைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 வருட காலத்தில் காணும் போது, மணப்புரம் பைனான்ஸ் பங்கின் விலை 43 சதவீதமும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமும் விலை உயர்ந்து காணப்படுகிறது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 15 சதவீதமாக உள்ளது.

இது போல லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 33 சதவீதமும், பத்து வருடங்கள் எனும் போது 41 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,887 கோடி. பங்கின் மீதான வருவாய் 22 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வீட்டுக்கே லேமினேஷன் – ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 764 கோடி

வீட்டுக்கே லேமினேஷன் – ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 764 கோடி

Asian Paints reported Net Profit of Rs. 764 Crore in Q3FY20 – Quarterly Results

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ், பெயிண்ட் துறையில் பூச்சுகள், வண்ணப்பூச்சுகள், அலங்காரத்துடன் தொடர்புடைய பொருட்கள், தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகிய சேவைகளை செய்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் துறையில் 54 பங்களிப்பை ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints) நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் முதன்மை பெயிண்ட் நிறுவனமாகவும், ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வலம் வருவது ஏசியன் பெயிண்ட்ஸ். 1942ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1.71 லட்சம் கோடி. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.03 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 36 மடங்கில் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமும், நிறுவனர்கள் தங்களின் பங்குகளில் 13 சதவீத பங்குகளை அடமானம்(Pledged Shares) வைத்துள்ளனர். தற்போதைய பங்கு விலை இதன் புத்தக மதிப்பை காட்டிலும் 17 மடங்கு உள்ளது. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5,420 கோடியாகவும், செலவினம் ரூ. 4,231 கோடியாகவும் இருந்துள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,057 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 764 கோடி. இரண்டாம் காலாண்டில் ஒரு சதவீத வரியை செலுத்தியிருந்த நிலையில், இம்முறை மூன்றாம் காலாண்டில் 26 சதவீத வரியை நிறுவனம் செலுத்தியுள்ளது. அதன் காரணமாக மூன்றாம் காலாண்டில் நிகர லாபத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 2018ம் வருடத்தின் டிசம்பர் காலாண்டை காட்டிலும் தற்போது லாபத்தில் 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5,263 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 636 கோடியாகும்.

2018-19ம் நிதியாண்டில் நிறுவனம் வருவாயாக ரூ. 19,342 கோடியை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,159 கோடி. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த பத்து வருட கால அளவில், பங்கின் விலை சுமார் 26 சதவீதம் ஏற்றம் அடைந்துள்ளது. போனஸ் பங்குகள் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) கடந்த ஐந்து வருடத்தில் 10 சதவீதமும், பத்து வருடங்களில் 14 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல கூட்டு லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 12 சதவீதமும், பத்து வருட கால அளவில் 18.50 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக(Reserves) ரூ. 9,975 கோடி உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி 

India’s Largest Private Sector Bank – HDFC Bank – Q3FY20

வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான எச்.டி.எப்.சி.(HDFC) குழுமத்தின் ஒரு அங்கம் தான் எச்.டி.எப்.சி. வங்கி. துணை நிறுவனமாக செயல்படும் இந்த வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகவும் செயல்படுகிறது. இதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் கோடி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிதி சேவையில் உள்ள இந்த வங்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களை கொண்டு சேவை புரிந்து வருகிறது. கடந்த ஆண்டில் உலகின் சிறந்த பிராண்டுகளில் 60வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 25 வருடங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank) இன்று 2,700 நகரங்களில் 5,500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு, இதுவரை 2.5 கோடி டெபிட் கார்டுகள் மற்றும் 1.3 கிரெடிட் கார்டுகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.

வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 11.89 லட்சம் கோடி. இன்று அனைத்து பரஸ்பர நிதி சேவைகளின் திட்டத்தில்(Mutual Funds Scheme Portfolio) முன்னிலை வகிப்பது எச்.டி.எப்.சி. வங்கி தான். வங்கியின் மீதான நம்பிக்கையால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த பங்கின் விலை 22.50 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ. 29,370 கோடி என சொல்லப்பட்டுள்ளது. நிதி லாபமாக ரூ. 3,233 கோடியும், வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 9,902 கோடியும் உள்ளது. வங்கியின் நிகர லாபமாக ரூ. 7,416 கோடி சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 33 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இம்முறை இதர வருவாய் நிகர லாபத்தை ஊக்குவித்துள்ளது.

வங்கியின் வருவாய் கடந்த 10 வருடங்களில் 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது போல வங்கியின் லாப வளர்ச்சியும் கடந்த பத்து வருட காலத்தில் 25 சதவீதமாக இருக்கிறது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE), பத்து வருடங்களில் 18 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக ரூ. 1.48 லட்சம் கோடி உள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் 1.45 சதவீதமாக உள்ளது. நிகர வாராக்கடன் 0.48 சதவீதமாக உள்ளது. இது 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த வாராக்கடன் 1.38 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.42 சதவீதமாகவும் இருக்கிறது. பொறுப்புகளுக்கான ஒதுக்கீடு(Provisions) மூன்றாம் காலாண்டில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு தொகை முன்னர் ரூ. 2,211 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 3,043 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

எச்.டி.எப்.சி. வங்கியின் கடன்-பங்கு விகிதம் 6.97 மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 1.64 மடங்கில் உள்ளது. பொதுவாக மற்ற துறையில் உள்ள நிறுவனங்களின் கடன்-பங்கு மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதத்துடன் வங்கித்துறையில் உள்ள நிறுவனங்களை ஒப்பிட கூடாது. ஏனெனில், நிதித்துறையில் கடன் வழங்கினால் மட்டுமே வருவாய் கிடைக்கப்பெறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி – காலாண்டு முடிவுகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி – காலாண்டு முடிவுகள் 

RIL’s debt of Rs. 3 Lakh Crore – Quarterly Results – Q3FY20

இந்திய சந்தையில் 10 லட்சம் கோடி ரூபாயை சந்தை மதிப்பாக கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) நிறுவனமாகும். 1973ம் ஆண்டு திருபாய் அம்பானி அவர்களால் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இன்று நாட்டின் மிகப்பெரிய குழும நிறுவனமாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோ கெமிக்கல், ஜவுளி, சில்லரை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம், இசை மற்றும் நிதி சேவை என பல தொழில் முகங்களை கொண்டிருக்கிறது. ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஆகியவை இதன் துணை நிறுவனங்களாகும்.

இந்த நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு 49 சதவீதமாக உள்ளது. புத்தக மதிப்பு 639 ரூபாய் விலையிலும், கடன்-பங்கு விகிதம் 0.62 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) குறைந்த அளவாக 4 மடங்கில் உள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,52,939 கோடி மற்றும் செலவினமாக ரூ. 1.30 கோடி சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 11,640 கோடி ரூபாய்.

இயக்க லாப வளர்ச்சி(OPM) தொடர்ச்சியாக 15 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது. ஆனால் அதே வேளையில் வட்டி பாதுகாப்பு விகிதம் போதுமான அளவில் இல்லை. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 28 சதவீதமும், ஐந்து வருடங்களில் 5.50 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 14 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

லாப வளர்ச்சி எனும் போது, கடந்த மூன்று வருட காலத்தில் 10 சதவீதம், ஐந்து வருடங்களில் 14 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே ஐந்து வருடங்களில் 29 சதவீதமும், 10 வருட கால அளவில் 11.30 சதவீதமும் விலை ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் சேர்க்கப்படவில்லை. எப்படியிருப்பினும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு நல்ல வருவாயை அளித்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 3.99 லட்சம் கோடியாக உள்ளது. பணவரத்து சரியாக வந்து கொண்டிருக்கிறது, அதே வேளையில் நிலையான சொத்துக்களும் நிறுவனத்தால் வாங்கப்படுகின்றன. மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் கடன் 3.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் கடனை குறைக்கும் பொருட்டு, தனது எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் சிறு பங்குகளை ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வு நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் எட்டப்படும்.

அடுத்து வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லரை வணிகம்(JIO Mart) மற்றும் ஜியோ சேவைக்கு(Reliance JIO) அதிக முக்கியத்துவம் கொடுக்கும். இதன் மூலம் அதன் வருவாயும் மேம்படும். கடன் அதிகம் இருந்தாலும், இதன் விற்பனை வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இருப்பினும், முதலீட்டாளர்களை பொறுத்தவரை நிறுவனம் தனது கடனை குறைப்பது தான் சாதகமான அம்சமாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விப்ரோ நிறுவன மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,456 கோடி

விப்ரோ நிறுவன மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,456 கோடி

Wipro Q3FY20 Net profit of Rs. 2,456 Crore – Quarterly Results

இந்திய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனமான விப்ரோ, ஐ.டி. சேவையில் உள்ள முக்கிய நிறுவனமாக செயல்படுகிறது. ஆரம்ப காலத்தில் காய்கறிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனம் (Western India Palm Refined Oil Ltd) பின்னர், தன்னை ஒரு ஐ.டி. நிறுவனமாக மாற்றி கொண்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிறுவனத்தின் சேவை 50க்கு மேற்பட்ட நாடுகளிலும், நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்திற்கு மேற்பட்டதாகவும் உள்ளது. கிசான், சன் பிளவர், கேமல்(Camel), துளசி, செந்தூர் பவுடர்(Santoor Talcum), விப்ரோ ஜாஸ்மின் மற்றும் விப்ரோ பேபி சாப்ட் ஆகியவை இதன் முக்கிய பிராண்டுகளாக வலம் வந்தன.

2019ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் வருவாய் 8.47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாய். நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 74 சதவீதமாகவும், நிறுவன கடன் 9,000 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவன கடன் ஓரளவு இருந்தாலும், அதன் கடன்-பங்கு (Debt to Equity) விகிதம் 0.20 க்கு கீழ் தான் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்கிலும், இருப்புநிலை கையிருப்பு ரூ. 49,940 கோடியாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15,470 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 12,290 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 3,079 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 2,456 கோடியாகவும் உள்ளது. இது கடந்த டிசம்பர் 2018 காலத்தில் ரூ. 15,060 கோடி வருவாயாகவும், நிகர லாபம் ரூ. 2,510 கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, காலாண்டு நிகர லாபம் இம்முறை குறைந்துள்ளது.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 5 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதம் மற்றும் 10 வருட கால அளவில் 9 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) ஐந்து வருட கால அளவில் 3 சதவீதமும், 10 வருடங்களில் 9 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மூன்று வருடங்களில் 11 சதவீதம், ஐந்து மற்றும் பத்து வருட கால அளவில் 4 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. போனஸ் பங்குகள் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் இங்கு சேர்க்கப்படவில்லை. இதன் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பின்னொரு நாளில் காண்போம். (போனஸ் பங்குகளை கொண்டு கோடிகளை அள்ளிக்கொடுத்த விப்ரோ )

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 4,457 கோடி

இன்போசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 4,457 கோடி

Infosys reported a Net Profit of Rs. 4,457 Crore – Q3FY20 – Quarterly Results

நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனமான இன்போசிஸ்(Infosys) 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 23,092 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டின் டிசம்பர் காலத்தில் ரூ. 21,400 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.14 லட்சம் கோடி. புத்தக மதிப்பு(Book Value) ஒரு பங்குக்கு ரூ. 142 விலையிலும், முகமதிப்பு 5 ரூபாய் விலையிலும் காணப்படுகிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 172 மடங்குகளில் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்க லாப வளர்ச்சி(Operating Profit Margin) சராசரியாக 25 சதவீதம் என்ற அளவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் 17,291 கோடி ரூபாய். தேய்மானமாக(Depreciation) நிறுவனத்தின் சார்பில் ரூ. 737 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net Profit) ரூ. 4,457 கோடி. இது கடந்த டிசம்பர் 2018ம் காலாண்டில் ரூ. 3,609 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. 2018-19ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 82,675 கோடி மற்றும் நிகர லாபம் 15,404 கோடி ரூபாய்.

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 7.5 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 10 சதவீதமாகவும் . இருந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 8.50 சதவீதம் அதிகரித்துள்ளது.

மூன்று வருட காலத்தில் 15 சதவீதமும், 10 வருடங்களில் 8.60 சதவீதமும் பங்கு விலை உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் 2019ம் காலாண்டு முடிவில் 58,400 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

Asian Paints Colourizing Net Profit to Rs. 823 Crore – Q2FY20

பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints). இந்த நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளது. இரண்டாம் காலண்டான ஜூலை-செப்டம்பர் காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 5,050 கோடியாக இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானமாக 105 கோடி ரூபாயும், செலவினங்கள் ரூ. 4,319 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 852 கோடி ரூபாய் எனவும், இரண்டாம் காலாண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net Profit) ரூ. 823 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 9 சதவீத வளர்ச்சியையும், நிறுவனத்தின் நிகர லாபம் 67 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,615 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 65 கோடியாகவும் இருந்தது. அப்போதைய நிகர லாபம் ரூ. 491 கோடியாக இருந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) ரூ. 1.70 லட்சம் கோடியாக இருக்கிறது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 10.66 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாக உள்ளது. அதே போல லாப வளர்ச்சி, கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், பத்து வருட காலத்தில் 18 சதவீதமாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதம் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கில் பத்து வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், 27 சதவீத வருமானத்தை பெற்றிருக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள்

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் 

Jio’s Net profit rises to 990 Crore – Reliance Industries Q2FY20 Results

இந்திய பங்குச்சந்தையில் ரூ. 8.97 லட்சம் கோடி சந்தை மதிப்பை கொண்டிருக்கும் முதல் நிறுவனம், திரு. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries). நேற்றைய (18-10-2019) வர்த்தகத்தில் முதன்முறையாக ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்த நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் உள்ள நிறுவனம் ரூ. 7.71 லட்சம் கோடி மதிப்பை கொண்டுள்ள டி.சி.எஸ்.(TCS) நிறுவனம்.

2019-20ம் நிதியாண்டுக்கான தனது இரண்டாம் காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) முடிவை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. செப்டம்பர் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் விற்பனை ரூ. 1,48,526 கோடியாக உள்ளது. செலவினங்கள் ரூ. 1,26,374 கோடியாகவும், இயக்க லாபம் 22,152 கோடி ரூபாயாகவும் உள்ளது.

இதர வருமானமாக செப்டம்பர் காலாண்டில் 3,668 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 15,055 கோடியாகவும், காலாண்டு நிகர லாபம் 11,262 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 6 சதவீத அளவிலும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி, கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், பத்து வருட காலத்தில் 10 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 2.5 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸின் துணை நிறுவனமான ஜியோ(JIO) இரண்டாம் காலாண்டு முடிவில் ரூ. 990 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. 

கடந்த 2018ம் வருடத்தின்  இதே காலத்துடன் ஒப்பிடும் போது, ஜியோவின் லாபம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 681 கோடி ரூபாயாக உள்ளது. லாபம் அதிகரித்து இருந்தாலும், ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) சரிந்துள்ளது.

355 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கும் ஜியோ நிறுவனம், ஒரு பயனருக்கான சராசரி வருவாயை 120 ரூபாயாக கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் செப்டம்பர் காலாண்டில் சற்று குறைந்துள்ளது.

சில்லரை வணிகத்தின்(Retail Business) மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சேவையை பொறுத்தவரை இணைய பயன்பாடு அதன் வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பேசக்கூடிய நிமிடங்களின்(Voice Calls) எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

டி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி

டி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி

TVS Motor Company Net Profit rises to Rs. 255 Crore – Q2FY20

இந்தியாவின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாகவும், தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனம் தான் டி.வி.எஸ். நிறுவனம்(TVS Motor). 1978ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளராகவும் திகழ்கின்றன.

தனது வாகனங்களை உலகளவில் 60 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகளை சந்தையில் வெளியிட்டிருந்தது. செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை ரூ. 4,348 கோடியாகவும், செலவினங்கள் 3,966 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 382 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப அளவு(Operating Profit Margin) கடந்த 10 காலாண்டுகளில் சராசரியாக 7-8 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 81 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. தேய்மான செலவுகளாக 124 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் லாபம் 22 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இருப்பினும் விற்பனை 9.27 சதவீதம் குறைந்துள்ளது. தற்போதைய லாபத்திற்கு வருமான வரி குறைப்பும் ஒரு காரணமாக செயல்பட்டுள்ளது. ஜூன் 2019 காலாண்டில் நிறுவனம் செலுத்திய வரி 32 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய வரி செலுத்தப்பட்ட விகிதம் 18 சதவீதம் மட்டுமே.

வரிக்கு முந்தைய லாபம் 310 கோடி ரூபாயாகவும், இரண்டாம் காலாண்டின் நிகர லாபம்(Net Profit) 255 கோடி ரூபாயாகவும் உள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் பங்கு கடந்த ஒரு வருட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 17.50 சதவீத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 30.80 சதவீதமும் வருவாயை(CAGR) தந்துள்ளது.

டி.வி.எஸ். நிறுவனத்தின் விற்பனை கடந்த ஐந்து வருடங்களில் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. லாப வளர்ச்சி ஐந்து வருட காலத்தில் 21 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 37 சதவீதமாக இருந்துள்ளது.

இருப்பு நிலை அறிக்கையில் நிறுவனத்தின் கையிருப்பாக ரூ. 3,645 கோடி என கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20,900 கோடி ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம்(Debt-Equity) 0.40 என்ற அளவிலும், கடன் ரூ. 1,484 கோடி ரூபாயாகவும் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com