Income Tax Basic Education

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

Income Tax Returns (Filing) – Plan & Benefits – Lesson 1

 

2018-19ம் நிதி வருடத்தை முடித்து விட்டு, 2019-20ம் நிதியாண்டில் நாம் காலெடுத்து வைத்துள்ளோம். முன்னர் வருமான வரி செலுத்துபவர்கள் மட்டுமே வரி தாக்கலை செய்து வந்த நிலையில் இன்று மாத சம்பளம் வாங்கும் (பெரும்பாலும் அமைப்பு சார்ந்த) அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

‘ நான் தான் வருமான வரி கட்ட தேவையில்லையே, அப்புறம் எதற்கு நான் வரி தாக்கல் செய்ய வேண்டும் ? ‘ என கேட்பதற்கு பதிலாக வருமான வரி தாக்கல் சார்ந்த சில எளிமையான விஷயங்களை நாம் கற்று கொண்டாலே, பின்னாளில் அது பயன் தரும். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், தனி நபர் ஒருவர் தனது வரி தாக்கலை செய்வதற்கு, ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த பகுதியில் நாம் வருமான வரி சார்ந்த சில எளிமையான வழிமுறைகளை தெரிந்து வைத்து கொண்டு(Basics Education), நமக்கான வரி சலுகைகள் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் பயன் பெறலாம். வரி தாக்கல் செய்யும் முன், நாம் முன்னேற்பாடாக சில தகவல்களையும் சேகரித்து வைத்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

 

வாருங்கள், முதல் பாடத்திற்குள் செல்லலாம்.

 

நாம் இப்போது 2018-19ம் நிதியாண்டின், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்திற்கு வரி தாக்கல் செய்யக்கூடிய காலத்தில் இருக்கிறோம். மேலே சொன்ன காலத்தில் நாம் ஈட்டிய வருவாய்க்கு ஏற்ப நமது வருமான வரி அமையலாம் அல்லது வரி தாக்கல் செய்யக்கூடியவராக இருக்கலாம்.

 

நிதியாண்டு(Financial Year or Fiscal Year) என்றால் என்ன ?

 

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கத்தை பொறுத்தவரை அதன் கணக்கீட்டு காலம் 52 வாரங்கள் அல்லது 12 மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் வரவு-செலவு மற்றும் லாப-நட்ட நிதி அறிக்கைகள்(Financial Statements) இந்த 12 மாத அளவில் கணக்கீடு செய்யப்படும். பொதுவாக ஆங்கிலேய காலத்திலிருந்து 12 மாத காலம் என்பது ஒரு வருடத்தின் ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த வருடத்தின் மார்ச் மாதம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தான் நாம் நிதியாண்டு(Financial Year) என்கிறோம்.

 

சொல்லப்பட்ட ஏப்ரல்-மார்ச் காலத்தில் நாம் ஏதேனும் வருவாய் பெற்றிருந்தால் (இழப்பு இருந்தாலும்) அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 2018-19ம் நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்தில் உள்ள வருவாயை நாம் மார்ச் 2019க்கு பின்னர் தான் மதிப்பீடு செய்ய முடியும். நடந்து முடிந்த ஒரு நிதி வருடத்திற்கான கணக்கை நாம் அடுத்த நிதி வருடத்தில் தான் மதிப்பீடு(Assessing) செய்கிறோம் மற்றும் வரியை தாக்கல் (Income Tax Return Filing) செய்கிறோம். இந்த காலத்தை மதிப்பீட்டு காலம்(Assessment Year) எனலாம்.

 

கவனிக்க:

 

  • நீங்கள் வருவாய் ஈட்டிய காலம் (ஏப்ரல் – மார்ச்) ஒரு நிதியாண்டு எனப்படும். 2010 ஏப்ரல் முதல் 2011 மார்ச் வரை என்பது ஒரு நிதியாண்டு. இதனை 2010-11 நிதி வருடம் அல்லது 2011ம் நிதியாண்டு என்பர் – FY 2010-11 OR Fiscal year 2011.

 

  • நாம் வருவாய் பெற்ற காலத்தை நிதியாண்டு ஆண்டு எனவும், அதனை மதிப்பீடு செய்த காலத்தை மதிப்பீட்டு ஆண்டு(Assessment year) எனவும் அழைக்கிறோம்.

 

  • 2018-19ம் நிதியாண்டிற்கான மதிப்பீட்டு காலம் 2019-20ம் வருடமாகும். நீங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த வருடத்தின் மார்ச் மாத காலம் வரையிலான வருமானத்திற்கு, நடப்பு ஏப்ரல் மாதம் முதல் வரி தாக்கல் செய்யலாம். பொதுவாக வரி தாக்கல் செய்வதற்கு மதிப்பீட்டு காலத்தின் ஜூலை மாதம் வரை அனுமதிக்கப்படும் – ஜூலை 31, 2019 (AY 2019-20)

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s