Tag Archives: gdp india

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

India’s GDP of 4.7 Percent in December Quarter – What Next ?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்துள்ளது என கடந்த வாரம் அரசு சார்பில் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி கடந்த ஏழு வருடங்களில் காணப்படாத குறைந்த அளவாகும். 2018ம் வருடத்தின் ஆரம்ப நிலையில் 7.7 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்பு குறைய தொடங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொடர்ச்சியாக 7 காலாண்டுகளாக இந்த வளர்ச்சி குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த வளர்ச்சி குறைவு தான் எனினும், அடுத்து வரும் காலகட்டங்களில் அதன் மாற்றம் தான் சந்தை எதிர்பார்த்து வருவது. பெரும்பாலான வல்லுநர்கள் இது தான் அடிப்பாக பொருளாதார வளர்ச்சியாக(Bottomed out) இருக்கும், அடுத்த காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டு எழும் என கூறியுள்ளனர்.

அதே வேளையில், நடப்பு ஜனவரி – மார்ச் காலத்தில் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்பதே உண்மை. டிசம்பர் 2019 காலாண்டை காட்டிலும், மார்ச் 2020 காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக தான் இருக்கும். வாகனத்துறையில் உள்ள பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்கள் பிப்ரவரி மாத விற்பனையில் சுணக்கத்தை சந்தித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிலக்கல்(Disinvestment) நிகழ்வும் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக முடிந்து, அரசின் இலக்கிற்கு உதவினால் தான் சந்தையில் நுகர்வை வேகப்படுத்த முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, நிதி மற்றும் காப்பீடு, வீட்டு மனை, உணவகங்கள், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வேளாண்மை, காடுகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 12 சதவீத பங்கை தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பிரிவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது கவனிக்கத்தக்கது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை, உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை தான் அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளது. தற்போதைய நிலையில் முதலீடுகளை பெற்று, சரியான முறையில் கையாண்டால் மட்டுமே அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் வருவாய் பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நுகர்வு தன்மையும் சுமுகமாக அமையும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடியக்கூடும் என்பது குறித்து தற்சமயம் தெரியாது. அதே நேரத்தில், இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனங்களின் நிதி அறிக்கையில் தெரிய வரும். அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் முடிவை எட்டவில்லை. 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு எதிர்பார்த்த அளவை பெறாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தையில் பங்குபெறும் முதலீட்டாளர்கள் சரியான நிறுவனங்களை அலசி ஆராய்ந்து, அதன் உண்மையான விலையில் பங்குகளை வாங்குவது நலம். ஆறு மாதத்திற்கு முன்னர் காணப்பட்ட விலையே பெரும்பாலான பங்குகளில் தற்போது நிலவி கொண்டிருக்கிறது. சில பங்குகளின் விலை மூன்று வருட மற்றும் ஐந்து வருட விலை குறைவில் இருந்தாலும், அவற்றின் மற்ற காரணிகளை கண்டறிவது அவசியம். வெறும் பங்கு விலை எண்களை கொண்டு பங்குகளை வாங்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் – சர்வேதச நாணய நிதியம்

2020ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் – சர்வேதச நாணய நிதியம் 

India’s GDP for FY20 would be 4.8 Percent – IMF Projection

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த செப்டம்பர் காலாண்டு முடிவில் 4.5 சதவீதமாக இருந்தது. இது ஆறு வருட கால குறைவான விகிதமாக சொல்லப்பட்டது. இன்னும் டிசம்பர் 2019 காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 2019-20ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) 4.8 சதவீதமாக இருக்கும் என சர்வேதச நாணய நிதியம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகளாவிய பொருளாதார காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டில் நிலவும் காரணிகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளன. கடந்த அக்டோபர் மாத அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணித்த சர்வேதச நாணய நிதியம்(IMF), தற்போது இந்த மதிப்பீட்டை குறைத்து வெளியிட்டுள்ளது.

வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டதற்கு காரணமாக சொல்லப்படுவது, ‘ வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் குறைவான வருமான வளர்ச்சி ஆகியவையே. நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதாக ஊக்குவிக்கப்போவதில்லை.

அதற்கு மாறாக உட்கட்டமைப்பை மேம்படுத்தி அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் கிராமப்புற வருவாயும் மேம்படும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வலுப்படுத்தும் ‘ எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம் ஆண்டில் 4.8 சதவீதமாகவும், இதுவே 2020-21ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாகவும் மற்றும் 2021-22ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கலாம் என நாணய நிதியம் கூறியுள்ளது. இது போல உலக பொருளாதார வளர்ச்சி(World GDP) மதிப்பீட்டையும் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமும், 2020-21ம் ஆண்டில் 3.3 சதவீதம் மற்றும் 2021-22ம் நிதியாண்டில் 3.4 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம்  நிதியாண்டில் 2.3 சதவீதமாக இருக்கும் எனவும், அதே வேளையில் சீனாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வேதச நாணயம் நிதியம் கூறியுள்ளது. ஏறக்குறைய அனைத்து வளரும் நாடுகளின் வளர்ச்சியும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வேகமாக வளரும் நாடுகளின் (Emerging Economy) வரிசையில் இந்தியா கடந்த சில காலாண்டுகளாக பின்னுக்கு செல்கிறது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாட்டின் பொருளாதார மதிப்பு சுமார் 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அடுத்த 7-10 வருடங்களில் பொருளாதார மதிப்பில் வல்லரசான அமெரிக்காவை வீழ்த்தலாம் என ஒரு கணிப்பு கூறுகிறது. அதே வேளையில் சீன நாட்டின் வளர்ச்சி அடுத்த 30-50 வருடங்களில் அபரிதமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை 

GDP and Inflation in India – A Short and Thumbnail View

 

ஒவ்வொரு நாட்டின் பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வெவ்வேறு காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டவை. இந்த இரண்டும் ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார காரணிகளாக செயல்பட்டு வருகிறது. பணவீக்கம்(Inflation) என்பது பொதுவாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பது மற்றும் பணத்தை வாங்கும் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுவது எனலாம்.

 

சுருக்கமாக நாம் வாங்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வந்தால், விலைவாசி உயர்ந்து வருகிறது என சொல்வோம். இதனை தான் பொருளாதார வார்த்தையில், பணவீக்கம்(Inflation) என்கிறோம். பணவீக்கம் உள்ளது போல, பணவாட்டம் மற்றும் தேக்கநிலை என்ற மற்றொரு தன்மையும் விலையை குறிப்பிடுகிறது. பொருட்களின் விலை எதிர்மறையாக செல்லும் போது, அதாவது மிகவும் மலிவான விலைக்கு செல்லும் நிலையில் இதனை பணவாட்டம்(Deflation) என்கிறோம். பணவாட்டத்தின் மதிப்பு சுழிக்கு (பூஜ்யம்) கீழ் இருக்கும். இது தொடர்ச்சியாக இருக்கும் சமயத்தில், சரியான ஊதியம் கிடைக்காமல் போகலாம். வேலைவாய்ப்பின்மையை ஏற்பட கூடும். காரணம், பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் போவதால்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேக்கநிலை (Stagflation) என்பது பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது, நாட்டில் காணப்படும் அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் தேவையில் உள்ள தேக்கம் ஆகியவற்றால் ஒருங்கிணைந்து காணப்படுவது. இது பொதுவாக பொருளாதார மந்த நிலை அல்லது வீழ்ச்சியின் போது நிகழும். 

 

மறுபுறம் செல்வோம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross Domestic Product – GDP) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். இதனை பொதுவாக அந்நாட்டின் நுகர்வு, முதலீடு, அரசு செலவினங்கள் மற்றும் நிகர ஏற்றுமதி வர்த்தகத்தை(ஏற்றுமதி – இறக்குமதி) கொண்டு கணக்கிடுவார்கள். இதனை தான் நாம் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) என பெயரிடுகிறோம்.

 

மேலே சொன்ன இரண்டும் (பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி) ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களாகும். இந்த இரண்டையும் ஒப்பிடும் போது, குறுகிய காலத்தில் பலன் தரும் எனவும், நீண்ட காலத்தில் துல்லியமான முடிவுக்கு வர இயலாது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறுகிய காலத்தில் இவை இரண்டும் நேர்-எதிராகவும், நீண்ட காலத்தில் மாறுபட்டும் காணப்படுகிறது. 

 

நம் நாட்டின் புள்ளிவிவரங்களை கடந்த சில வருடங்களுடன் மதிப்பிடும் போது பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் எவ்வாறு நடந்துள்ளது என பார்ப்போம். கடந்த ஒரு வருட காலத்தை பார்க்கும் போது, நாட்டின் பணவீக்கம் மெதுவாக உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக இறங்குமுகத்திலும் காணப்படுகிறது. எனவே, இவை இரண்டும் கடந்த ஒரு வருடகாலமாக நேர்-எதிர் திசையில் பயணித்துள்ளது. 

 

ஐந்து வருட காலத்தில் மதிப்பிடும் போது, பணவீக்கம் சராசரியாக 4 – 6 சதவீதம் என்ற நிலையில் இருந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 9 சதவீதத்திற்கு மேல் இருந்த வளர்ச்சி, தற்போது 4.5 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது.

 

பத்து வருட காலத்தில் பார்க்கும் போது, இரண்டும் ஒரே சேர பயணித்தது போல் அமைகிறது. பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இறங்குமுகத்தில் உள்ளது போன்ற நிலை காணப்படுகிறது. 25 வருட காலத்தில் ஆராயும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தும், பணவீக்கம் குறைந்தும் காணப்பட்டுள்ளது. 

 

கடந்த 50 வருட காலத்தில் இந்திய பொருளாதாரம் மேம்பட்டும், பணவீக்க விகிதம் ஒரு சில வருடங்கள் தவிர, மற்ற காலத்தில் சராசரியாக விலையை கொண்டுள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை ஒரு ரூபாயை, இரண்டு ரூபாயாக மாற்றுவது எளிதான செயல். அதே வேளையில், ஒரு லட்சத்தை உடனடியாக இரண்டு லட்சமாக மாற்றுவது சற்று கடினம். இது போன்று தான் பொருளாதார வளர்ச்சியும். நாம் 4-5 சதவீத வளர்ச்சி எனும் போது இரு மடங்கு வளர்ச்சியை ஓரிரு வருடங்களில் அடையலாம். ஆனால் 8 சதவீத வளர்ச்சியை 16 சதவீதமாக மாற்றுவது சவாலான விஷயம்.

 

சமீபத்திய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என அமையும் போது, கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவாக சொல்லப்பட்டது. இதுவே சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என குறிப்பிடும் போது, 27 வருடங்களில் காணப்படாத அளவாக சென்று விட்டது. நம் நாட்டின் பொருளாதாரம் 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் சீனாவின் பொருளாதாரம் 13.60 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். நினைவில் கொள்ளுங்கள். 

 

பொருளாதாரம் மந்தம் அடையும் போது, வங்கிகளின் வட்டி விகிதம் குறைவதும் இதனால் தான். நிறுவனங்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய கூடும். அதே வேளையில், நுகர்வை அதிகப்படுத்த செலவு செய்வதை ஊக்கப்படுத்தும். இதற்கு மாறாக விலையேற்ற காலங்களில், அதாவது அதிகமாக செலவு செய்யும் நிலையில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் கூடும். இது பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 

எனவே பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் குறுகிய காலத்தில் எதிரியாக இருந்தால் கூட, நீண்ட காலத்தில் ஒரு நாட்டின் உற்ற நண்பர்களாக இருப்பார்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

    

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதம் – செப்டம்பர் 2019

நாட்டின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி 4.5 சதவீதம் – செப்டம்பர் 2019

India’s GDP growth to 4.5 Percent in September 2019 Quarter

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஜூலை – செப்டம்பர் காலத்திற்கானது. இதற்கு முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சொல்லப்பட்டுள்ள வளர்ச்சி குறைவு சந்தை எதிர்பார்த்த 4.7 சதவீத வளர்ச்சி என்ற அளவை காட்டிலும் குறைவாக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கம், முதலீட்டை பெருமளவு ஈர்க்காதது மற்றும் ஏற்றுமதியின் அளவு குறைந்ததும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டை பாதித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக காணப்படும் உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசு சார்பில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அவை வந்தடைந்த காலம் தாமதமாக இருந்துள்ளது.

இதனையடுத்து வரவிருக்கும் காலங்களிலும் வங்கிகளுக்கான வட்டி விகிதம்(Repo Rate) குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.(GST) அமலுக்கு பின், எதிர்பார்த்த முதலீட்டு வரவு மற்றும் நுகர்வு தன்மை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், தற்போதைய வளர்ச்சி குறைவு ஒரு தற்காலிகமானதாகவே சொல்லப்படுகிறது.

2018ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 8 சதவீதமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) தற்போது தொடர் வேகமாக குறைந்து 4.5 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. அக்டோபர் – டிசம்பர் 2019ம் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் ஜனவரி 2020ல் வெளிவரும். இதனை அடிப்படையாக வைத்தே, பொருளாதார மந்த நிலையா அல்லது வீழ்ச்சியை சந்தித்து வருகிறதா என்பது தெளிவாகும்.

ஏற்கனவே அரசு சார்பில் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, வாகன துறைக்கான ஊக்குவிப்பு, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு முதலீடு என மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகித குறைப்பை தொடர்ச்சியாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நிதி துறை, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் போதுமான வளர்ச்சி எட்டப்படவில்லை. அதே வேளையில் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை செப்டம்பர் காலாண்டில் பெற்றுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியீடு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியீடு 

India’s GDP numbers will be released Today – September Quarter 2019

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாக உள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி குறியீடு தான் தற்போது வெளிவர உள்ளது.

கடந்த முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு கீழ் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பலவீனமான தேவை நுகர்வால் கடந்த சில காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார மந்தநிலையை சரி செய்ய மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் சமீப காலமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய புள்ளிவிவரம் சந்தையை குறுகிய காலத்தில் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும், கடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டு கை ஓங்கி உள்ளது. கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 6.20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டில் 11.40 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 1979ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது.

நடப்பு பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணமாக சொல்லப்படுவது உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம், நுகர்வு தன்மை குறைவு ஆகியவையே. பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் என்ற நிகழ்வால், மீண்டும் ஒரு முறை வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய கடன் சந்தையிலும், அரசு கடன் பத்திரங்களுக்கான தேவையும் அதிகமாக இருந்தது. பொதுவாக வங்கியில் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்க கூடும். இதன் காரணமாக கடன் பத்திரங்களின்(Bond yield) வட்டி வருவாய் சற்று அதிகமாக இருக்கும்.

மத்திய ரிசர்வ் வங்கி(RBI) இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2025ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார மதிப்பு 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக மாறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு தற்போது சேவை துறையால் மட்டுமே சாத்தியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பில் உற்பத்தி துறையின் பங்கு கடந்த சில வருடங்களாக வெகுவாக குறைந்துள்ளது எனலாம். விவசாயமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை. நுகர்வு தேவையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாடு சேவை துறையை மட்டுமே தற்போது நம்பியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்குமா ?

வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்குமா ?

Will the Tax Rate Cut increase the India’s Fiscal Deficit ?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று (20-09-2019) நிதி அமைச்சகத்தின் சார்பில் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை சொல்லப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில்(GST Council) சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சில பொருட்களுக்கு வரி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய தினம் இந்திய பங்குச்சந்தையும் பெரிய ஏற்றத்துடன் முடிந்தது.

நடப்பில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும், இது நாட்டின் நிதி பற்றாக்குறையில்(Fiscal Deficit) அதிகளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அடுத்த 2-3 காலாண்டுகளில் அறியலாம். கடந்த வாரம் நிதி அமைச்சகமும், எந்தவொரு செலவினங்களையும் குறைக்க போவதில்லை என்று கூறியுள்ளது. நிறுவன வரி குறைப்பு, ஜி.எஸ். டி.வரி குறைப்பு ஆகியவை சொல்லப்பட்ட நிலையில், பொதுவாக அரசுக்கான செலவினங்களும் அதிகரிக்கும்.

இந்த செலவினங்களை குறைத்து கொள்ள வேண்டும். ஆனால் அரசின் சார்பில் செலவினங்களை குறைக்கவில்லை என கூறும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) வளர்ச்சி கண்டால் மட்டுமே, நிதி பற்றாக்குறையை சிறப்பாக கையாள முடியும். மேலும் சமீபத்தில் சொல்லப்பட்ட வரி குறைப்பு அறிவிப்புகள் உடனடியாக பொருளாதார வளர்ச்சியில் தென்படாது. அதற்கு சில காலங்கள் ஏற்படலாம்.

செலவினங்களை குறைக்க முடியாமல், அதே வேளையில் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி எட்டப்படவில்லை எனில், அரசு தனது செலவினங்களுக்காக மேலும் கடன் வாங்க நேரிடலாம். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 7.04 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எதிர்பார்த்த அளவு வந்தால் மட்டுமே, அது செலவினங்களை சரிப்படுத்த உதவக்கூடும். அப்படியிருக்கும் போது ஜி.எஸ்.டி. போன்ற வரிக்குறைப்பு தற்போது சொல்லப்பட்டுள்ளதால், எதிர்பார்த்த வரி வருவாய் குறையக்கூடும். அதே சமயத்தில், சொல்லப்பட்ட வரி குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு முழுமையாக சென்று, அது நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கடந்த ஏப்ரல்-ஜூலை 2019 காலத்தில் மத்திய அரசின் மொத்த செலவினம் 6.5 சதவீதம் அதிகரித்து 9.47 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டில் சொல்லப்பட்ட காலத்தில் 8.90 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

Declining Economic Growth – GDP in India – A Short look

கடந்த வெள்ளிக்கிழமை (30-08-2019) அன்று மத்திய புள்ளியியல் அமைச்சகம்(Central Statistics Office – CSO) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளதாக கூறப்பட்டது. அதாவது இதற்கு முந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் செப்டம்பர் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையக்கூடும். உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டு பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமான அம்சத்தை கொண்டிருக்கவில்லை.

நாட்டின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதுவே நம் நாட்டின் உச்சபட்ச அளவாக நடப்பில் காணப்படுகிறது. உலக பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 4.40 சதவீதமாகும். கடந்த வாரம் சொல்லப்பட்ட 5 சதவீத வளர்ச்சி, கடந்த ஆறு வருடங்களில் காணப்பட்ட குறைந்த பட்ச அளவாக உள்ளது.

வருட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காணும் போது, கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி வளர்ச்சி 6.20 சதவீதமாகவும், வாழ்நாள் உச்சமாக 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.40 சதவீதமும், குறைந்த பட்சமாக 1979ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.

2016ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டின் துவக்கத்தில் 8.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி படிப்படியாக இறக்கத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்த மாற்றங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது என சொல்லப்பட்டாலும், நுகர்வு தேவை குறைந்து(Weak Demand Consumption) வருவதே பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் வாகன துறை தேவையான வளர்ச்சியை பெறும் பட்சத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கலாம். அதே வேளையில் வங்கிகளின் வாராக்கடன் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் சிக்கல்கள் தீர்க்கப்படுமாயின், அது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

நுகர்வு மற்றும் முதலீட்டு தேவைகளும் குறைந்துள்ளதாக பெருவாரியான நிதி மதிப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளது. தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி வியட்நாம், சீனா, எகிப்து ஆகியவை முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 – 2017 காலத்தில் இந்தியா வேகமாக வளரும் நாடுகளில்(Emerging Economy) முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பொருளாதார சூழலில், நடப்பு நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சி இலக்கை அடைவது கடினமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019

India to achieve $ 5 trillion economy target – Economic Survey 2019

 

பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னர் பொருளாதார ஆய்வு நடைபெறுவது இயல்பு. சாலை வழிகாட்டி(Roadmap) போன்று பொருளாதார இலக்கை அடைவதற்கான வரைபடம் ஒன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதனை பொதுவாக அரசு சார்ந்த பொருளாதார ஆலோசகர் திட்டமிட்டு வழங்குவார்.

 

நடப்பு அரசின் முக்கிய இலக்காக வரும் 2024ம் வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் மதிப்பை அடைவது. இதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில், நடப்பு மத்திய அரசுக்கு பல சவாலான பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் காத்திருக்கின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார ஆலோசகர் சார்பில் அரசுக்கு முன்வைத்த சில பரிந்துரைகள் – சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது, வளர்ச்சியில் தொடர் கண்காணிப்பு ஆகியவை ஆகும். வட்டி விகிதத்தை சரியான தருணத்தில் குறைப்பதால், தொழில்கள் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

 

சரியான வளர்ச்சி 8 சதவீதமாகவும், பணவீக்கம் 4 சதவீதமாகவும் இருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பு(Nominal GDP growth) 12 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பெயரளவு பொருளாதார வளர்ச்சியின் படி, நடப்பு நிதி வருடத்தில் 190 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி இருக்கும் எனவும், இதுவே 2024-25ம் நிதியாண்டில் 375 ட்ரில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 75 ஆக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இலக்குகளுக்கான கணிப்புகள் இருப்பினும், 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை(5 Trillion Economy) அடைவது பெரும் சவாலாகவே இருக்கும். வரி மாற்றங்கள், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் மற்றும் தொழிலாளர் கொள்கையில் புதிய மாற்றங்கள் ஆகியவை மேம்படும் போது, இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும்.

 

தற்போது அரசுக்கு சவாலான காரியங்களாக பருவ மழை, வங்கிகளின் நிதி நிலைமை, எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம்(Iran Tension), வர்த்தக போர்(Trade war), விவசாயிகளுக்கான(Farmers) ஆதரவளிக்கும் கொள்கை ஆகியவை உள்ளன. சீன நாட்டின் வளர்ச்சிக்கு சேமிப்பு மற்றும் சரியான முதலீடு, ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியத்துவம் என பல காரணிகள் உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்தது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்தது

India’s GDP declined to 5.8 percent in January – March Quarter

 

நடப்பு வாரத்தில் மத்திய புள்ளியியல் அமைச்சகம்(CSO) வெளியிட்ட பொருளாதார தகவலில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) விகிதம் 2018-19ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்னர் 2013-14ம் வருடத்தில் காணப்பட்ட 6.4 சதவீதமே அப்போதைய குறைந்த வளர்ச்சியாக சொல்லப்பட்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போதைய அறிவிக்கப்பட்ட 5.8 சதவீத வளர்ச்சி என்பது கடந்த ஐந்து வருடங்களில் குறைவாக காணப்பட்டதாகும். கடந்த 2018-19ம் நிதியாண்டு முழுவதுமான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(Gross Domestic Product) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்துள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது விவசாயம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்ட மந்த நிலையே.

 

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதமும்(Unemployment rate) கடந்த 45 வருடங்களில் காணப்படாத அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் அறிவிக்கப்பட்ட இந்த பொருளாதார புள்ளிவிவரங்கள் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளன.

 

நாட்டின் புதிய நிதி அமைச்சராக திருமதி. நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது இளங்கலை பட்டப்படிப்பை பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்து திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும்(Seethalakshmi Ramasamy College), முதுகலை மேற்படிப்பை டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

 

வரும் ஜூலை மாதத்தில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்கள் தொய்வை ஏற்படுத்தியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை  

 

www.varthagamadurai.com

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு  

India’s GDP growth slowed to 6.6 percent in the Third Quarter of Current Financial Year 2018-19

 

மத்திய புள்ளியியல் அமைச்சகம்(CSO) நேற்று (28-02-2019) வெளியிட்ட தனது அறிக்கையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதி வருடத்தின்(2018-19) முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம்(Gross Domestic Product -GDP) கடந்த காலாண்டுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மேலும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவை நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன.

 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த 8.2 சதவீதம் மாற்றியமைக்கப்பட்டு 8 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் இருந்த 7.1 சதவீதம் பின்னர் 7 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு 2018-19 முழு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

முன்னொரு காலத்தில் விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்த நம் நாடு தற்போது சேவை துறையில்(Service sector) மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது நினைவிருக்கலாம். கடந்த பிப்ரவரி 8ம் தேதி நிலவரப்படி, மொத்த உள்நாட்டு மதிப்பில்(Gross Value Added -GVA) சேவை துறை 54.40 சதவீதமும், உற்பத்தி துறை(Manufacturing) 29.73 சதவீதமும், விவசாயம்(Agriculture) மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் 15.87 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.   

 

உற்பத்தி துறையில் கடந்த சில காலங்களாக மந்தமான நிலை இருப்பினும், வாகன துறை மிகப்பெரிய சந்தையை உள்நாட்டில் கொண்டிருப்பது சாதகமான அம்சம். உற்பத்தி துறை கடந்த மூன்று ஆண்டுகளில் 1.5 சதவீத வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டிருக்கிறது.

 

மூன்றாம் காலாண்டுக்கு சொல்லப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருப்பினும், இது சீன நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக தான் உள்ளது. சீனாவின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமாக அமைந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com