வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்குமா ?
Will the Tax Rate Cut increase the India’s Fiscal Deficit ?
கடந்த வெள்ளிக்கிழமை அன்று (20-09-2019) நிதி அமைச்சகத்தின் சார்பில் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை சொல்லப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில்(GST Council) சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சில பொருட்களுக்கு வரி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய தினம் இந்திய பங்குச்சந்தையும் பெரிய ஏற்றத்துடன் முடிந்தது.
நடப்பில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும், இது நாட்டின் நிதி பற்றாக்குறையில்(Fiscal Deficit) அதிகளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அடுத்த 2-3 காலாண்டுகளில் அறியலாம். கடந்த வாரம் நிதி அமைச்சகமும், எந்தவொரு செலவினங்களையும் குறைக்க போவதில்லை என்று கூறியுள்ளது. நிறுவன வரி குறைப்பு, ஜி.எஸ். டி.வரி குறைப்பு ஆகியவை சொல்லப்பட்ட நிலையில், பொதுவாக அரசுக்கான செலவினங்களும் அதிகரிக்கும்.
இந்த செலவினங்களை குறைத்து கொள்ள வேண்டும். ஆனால் அரசின் சார்பில் செலவினங்களை குறைக்கவில்லை என கூறும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) வளர்ச்சி கண்டால் மட்டுமே, நிதி பற்றாக்குறையை சிறப்பாக கையாள முடியும். மேலும் சமீபத்தில் சொல்லப்பட்ட வரி குறைப்பு அறிவிப்புகள் உடனடியாக பொருளாதார வளர்ச்சியில் தென்படாது. அதற்கு சில காலங்கள் ஏற்படலாம்.
செலவினங்களை குறைக்க முடியாமல், அதே வேளையில் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி எட்டப்படவில்லை எனில், அரசு தனது செலவினங்களுக்காக மேலும் கடன் வாங்க நேரிடலாம். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 7.04 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எதிர்பார்த்த அளவு வந்தால் மட்டுமே, அது செலவினங்களை சரிப்படுத்த உதவக்கூடும். அப்படியிருக்கும் போது ஜி.எஸ்.டி. போன்ற வரிக்குறைப்பு தற்போது சொல்லப்பட்டுள்ளதால், எதிர்பார்த்த வரி வருவாய் குறையக்கூடும். அதே சமயத்தில், சொல்லப்பட்ட வரி குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு முழுமையாக சென்று, அது நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கடந்த ஏப்ரல்-ஜூலை 2019 காலத்தில் மத்திய அரசின் மொத்த செலவினம் 6.5 சதவீதம் அதிகரித்து 9.47 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டில் சொல்லப்பட்ட காலத்தில் 8.90 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை