Tag Archives: fundamental analysis

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ் 

Berger Paints – Paint your imagination – Fundamental Analysis 

ஜெர்மனியை சேர்ந்த லூயிஸ் ஸ்டெய்கன் பெர்கர்(Louis Steigenberger) என்பவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் பெர்கர் பெயிண்ட்ஸ். முதலில் தனது முழுப்பெயரை நிறுவன பெயராக கொண்டிருந்த நிலையில், பின்னர் அதனை லீவிஸ் பெர்கர்(Lewis Berger) என மாற்றம் செய்தார். பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் தற்போதைய சேர்மனாக திரு. குல்தீப் சிங் உள்ளார்.

பெயிண்ட் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம் ரஷ்யா, நேபாளம், போலந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கிளைகளையும், 3500க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான தொழில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையே ஆகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 48,000 கோடி மற்றும் புத்தக மதிப்பு 25 ரூபாய். தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக விலையில் 20 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை முதலீட்டாளர்களுக்கு 67 சதவீத வருவாயை தந்துள்ளது.

பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஒருவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ. 11.70 லட்சமாகும்(Including One Bonus & One Split). சுமார் 117 மடங்கில் இந்த பங்கின் முதலீடு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்தால், கடன்-பங்கு(Debt-Equity) விகிதம் 0.20 ஆக உள்ளது. 0.5 க்கு கீழ் இந்த விகிதம் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் கடன் தன்மை குறைவாக உள்ளதாக எடுத்து கொள்ளலாம். இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை. விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 15 சதவீதமாகவும் இருக்கிறது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 15 சதவீதமும், பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.

பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 38 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. பங்கின் மீதான வருவாயும் சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. 2008ம் ஆண்டில் 299 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 2,376 கோடியாக உள்ளது.

நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஆறு முறை போனஸ் பங்குகளையும், இரு முறை பங்கின் முக மதிப்பையும்(Facevalue Split) மாற்றியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் இயக்க லாபம் சராசரியாக 15 சதவீத வளர்ச்சியில் உள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான நிகர லாபம் பங்குதாரர்களுக்கு நன்மை தரக்கூடியவையாக அமைந்துள்ளது.

பணப்பாய்வும்(Cash Flow) ஒவ்வொரு நிதியாண்டில் சராசரியாக வரவு வைக்கப்படுகிறது. இது போல நிறுவனம் சார்பாக முதலீடும், சொத்துக்களை வாங்குவதும் நடைபெறத்தான் செய்கிறது.

செப்டம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1599 கோடியாகவும், நிகர லாபம் 195 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,062 கோடி மற்றும் செலவினங்கள் ரூ. 5,181 கோடி. நிகர லாபமாக ரூ. 498 கோடி. இதர வருமானமாக 69 கோடி ரூபாய் உள்ளது.

சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax), பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபத்தை தக்க வைக்க உதவியுள்ளது. அதே வேளையில் விற்பனை வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது பெர்கர் பெயிண்ட்ஸ் உச்சத்தில் இருப்பதால், விலை குறைவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்த பங்குகளை கவனிக்கலாம். போனஸ் பங்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு தெரிந்தாலும், அந்த நடவடிக்கைக்கு பின்னர் இந்த பங்கின் செயல்பாட்டை தேர்ந்தெடுக்கலாம்.

சந்தையில் பங்குகளை வாங்க தயாராகும் ஒருவர், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் ரிஸ்க் தன்மையை(Risk Management) அறிந்த பின்னரே, முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகுவது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் ?

பங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் ?

Are you Day Trader (Intra day) in the Stock Market ?

 

சேமிப்பும், முதலீடும் (Savings & Investing) வெவ்வேறு என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான், செல்வம் சேர்ப்பதை பற்றிய புரிதல் அமையும். அதே போல தான் பங்குச்சந்தை முதலீடும். இன்று நாம் காணும் செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் – ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை. நம்மில் சிலர் மெய்நிகர் நாணயமும் (Crypto Currency – Bitcoin) ஒரு செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பு என கூறினாலும், இன்னும் நம் நாட்டில் அதற்கான புரிதலும், வழிமுறைகளும் உருவாக்கப்படவில்லை. அதனாலேயே பாரத ரிசர்வ் வங்கி (RBI), மெய்நிகர் நாணய வர்த்தகத்தை தடை செய்துள்ளன.

 

மேலை நாடுகளிலும், இது சார்ந்த தகவல்கள் இன்றும் வெளிப்படையாக இல்லை. இருப்பினும் இதன் வர்த்தகம் சில நாடுகளில் விதிமீறலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) கூறும் போது, ” மெய்நிகர் நாணயத்தை ஒரு சொத்தாக கருத முடியாது ” என்கிறார். ஆக, சொத்தினை உருவாக்க பயன்படும் சாதனமே இன்று உலகில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்திகிறது. இதன் காரணமாக தான் ரியல் எஸ்டேட்டும், அதனை சார்ந்த வாடகை வருமானமும் இன்றளவிலும் மதிப்புமிக்கதாக உள்ளன.

 

ரியல் எஸ்டேட்டும், தங்கமும் கடந்த சில வருடங்களாக பெரிய வருமானத்தை ஏதும் தராதது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதமும் முதலீட்டிற்கு சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஆனால் பங்குச்சந்தை (Share Market) என்னவோ ஏற்ற-இறக்கத்துடன் இருந்தாலும் வருமானம் பண்ணுவதற்கான மற்றும் நீண்டகால செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்பாகவே உள்ளது. பங்குச்சந்தை ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சாதனம் எனினும், இன்று நாம் பணவீக்கத்தை விட சிறந்த வருமானம் ஈட்டுவதற்கான நீண்டகால முதலீடு பங்குச்சந்தையை தவிர வேறு எதுவும் இல்லை.

 

பங்குசந்தையில் மூன்று விதமான மனிதர்கள் பொதுவாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தினசரி வர்த்தகர் (Day Trader), குறுகிய கால முதலீட்டாளர் (Short Term Investor), நீண்ட கால முதலீட்டாளர் (Longterm Investor). பங்குச்சந்தையை ஒரு சொத்தாக கருதி, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் நபர் – நீண்ட கால முதலீட்டாளர். வாங்கிய பங்குகளை மூன்று மாதத்திலிருந்து மூன்று வருடம் வரை வைத்திருக்க கூடியவர்கள் குறுகிய கால முதலீட்டாளர். தினமும் பங்குகளை வாங்கி அன்றே சந்தையில் விற்று விட்டு (Intra day) செல்பவர் தினசரி வர்த்தகர்  ஆவர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தினசரி வர்த்தகரா (Day Trader) நீங்கள் ?

 

தினசரி வர்த்தகர் என்பது அதிக ரிஸ்க் கொண்ட மனநிலை ஆகும். நீங்கள் 100 சதவீத லாபம் ஈட்டினாலும், அளவில்லா நஷ்டத்தை அடைய வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், சில நேர்த்தியான குறிப்புகளால் (Intra day Strategy) நீங்கள் உங்கள் நஷ்டத்தை குறைக்கலாம். நஷ்டத்தை நாம் குறைப்பதிலிருந்தே நமக்கான லாபம் வளரும். தினசரி வர்த்தகம் என்பது எல்லோருக்குமானதல்ல. சந்தையில் ஆளுமை உணர்வை (Aggressive) செலுத்தக்கூடியவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய வர்த்தகமிது.

 

  • தினசரி வர்த்தகம் (Day Trading) என்பது உங்கள் ரிஸ்குக்கான வெகுமதியை அளிக்கும். அது லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ (Risk-Reward) இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடத்தில் வேண்டும். எல்லோரும் சந்தையில் பங்குகள் வாங்குகிறார்கள் என்ற மனநிலையை நீங்கள் கைவிட வேண்டும். எப்போதும் பங்குகள் வாங்கலாம் என்ற நினைப்பையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. நாம் எந்த விலையில் பங்கினை வாங்க வேண்டும் (Entry price) மற்றும் எந்த விலைக்கு பங்கினை விற்க (Exit price) வேண்டும், எவ்வளவு நஷ்டம் வந்தால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் (Tolerance) போன்றவற்றை முன்னரே திட்டமிட்டு நீங்கள் சந்தைக்குள் செல்ல வேண்டும்.

 

  • சந்தையின் போக்கினை (ஏற்ற-இறக்கம்) நன்றாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு நீண்ட கால முதலீட்டாளர் வேண்டுமானால் சந்தை போக்குக்கு எதிரே செயல்பட்டு பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். அதனால் அவருக்கு பெரிய பாதிப்பு உண்டாகாது. ஆனால் தின வர்த்தகரை பொறுத்தவரை, அவரிடம் இருப்பது அன்றைய நாள் மட்டுமே – சந்தை போக்கினை (Market Trend) பின்பற்ற வேண்டும்.

 

  • உங்களுக்கான திட்டம் (Entry, Exit, Stoploss) செயல்பட்டவுடன், நீங்கள் அதனை உணர்வுபூர்வமாக (Emotional) அணுக கூடாது. உங்களுக்கான லாபமோ, நட்டமோ வந்தவுடன் வெளியேறுவதே உங்களுக்கான சிறந்த திட்டமாகும். Over Trade செய்வதை தவிர்ப்பது நலம்.

 

  • எப்போதும் சந்தையில் ஒதுக்கப்பட்ட அளவை மீறி வெளிப்பாடை அதிகரிக்க வேண்டாம். (Don’t take over exposure on Margin) முடிந்தளவு உங்களிடம் உள்ள பணத்தை கொண்டே வர்த்தகம் செய்ய பழகுங்கள்.

 

  • இழப்பை குறைப்பதற்கான STOP LOSS தேர்வை எப்போதும் குறிப்பிடுங்கள். STOP LOSS ஒரு பயனுள்ள தேர்வு என்பதை மறக்க வேண்டாம். இன்று நீங்கள் தோற்றாலும், நாளை வெற்றியடைவதற்கான பாதை தான் Stoploss.

 

  • ஒவ்வொரு நாளும் சந்தை முடியும் முன், உங்களுடைய வர்த்தக செயல்பாட்டை (Order and Trade Execution) சரி பார்த்து கொள்ளுங்கள். அதே போல, வர்த்தகத்திற்கு பிந்தைய பரிவர்த்தனை அறிக்கைகளை (Transactions – Contract note) பொறுமையாக படியுங்கள்.

 

  • பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் உலகளவிலான செய்திகள், வதந்திகள், நிறுவனத்தின் தாக்கங்கள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றால் தாக்கமடையும். அதனால் எல்லா நாட்களையும் ஒரே அளவில் கருதக்கூடாது. தின வர்த்தகத்துக்கு தேவையான அடிப்படை கல்வியை கற்று கொண்ட பின்னரே சந்தைக்கு வர வேண்டும். எல்லோரும் பங்குசந்தையில் உள்ளார்கள் என்று நீங்களும் பணத்தை கொண்டு வந்தால் – பங்குச்சந்தை உங்கள் பணத்தை உள்வாங்கி கொள்ளும், உங்களுக்கு பணம் திரும்ப வராது.

 

  • நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis), தின மற்றும் குறுகிய கால வர்த்தகர்களுக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis) போன்ற பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கல்வியை கற்று கொள்வது, உங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும்.

 

இலவச பங்குச்சந்தை வகுப்புகள் – Free Share Market Course online

 

ஆம், பங்குச்சந்தை ஆபத்தானது தான் – சாலையில் நாம் வாகனத்தை ஓட்டுவது போல..

 

பங்குச்சந்தை ஒரு முதலீட்டு வாய்ப்பு தான் – சாலை விதிமுறைகளை பின்பற்றும் போதும், நமக்கான வேகத்தை கொண்டிருக்கும் போதும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தள்ளுபடி பணப்பாய்வு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 13.0

தள்ளுபடி பணப்பாய்வு மற்றும்  பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 13.0

Discounted Cash Flow and Margin of Safety

Discounted Cash Flow (DCF) Valuation:

 

நீங்கள் ஏதேனும் ஒரு முதலீட்டு சாதனத்தில் (Investment Products) ரூ. 10,000 /- ஐ ஒரு முறை மட்டுமே முதலீடு செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். உங்களுக்கு அந்த தொகை பத்து வருடங்களுக்கு பிறகு தான் தேவைப்படுகிறது. பத்துவருட முடிவில் (10 % வட்டியில்) உங்களுக்கு கிடைப்பது ரூ. 25,937/-. நீங்கள் செய்த முதலீட்டை தவிர்த்து பார்த்தால், உங்களுக்கு கிடைத்த முதலீட்டு வருமானம்  – ரூ. 15,937 /- ( 25,937 – 10,000). இந்த முதலீட்டின் மூலம் கிடைத்த 15,937 ரூபாயை நாம் நிகர தற்போதைய வருமானம் (அ) மதிப்பு (NPV – Net present value) என்கிறோம். இதனை போன்று நமது பங்குச்சந்தை நிறுவனத்திலும். நீங்கள் ரூ. 10,000 ஐ ஒரு நிறுவனத்தில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு கிடைக்கும் நிகர தற்போதைய மதிப்பு என்பது அவசியமானது. நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் தொழில் மூலம் கிடைக்கும் NPV மதிப்பு நேர்மறையாக இருந்தால், அந்த நிறுவனத்தின் வருவாய் செலவை காட்டிலும் அதிகமாக உள்ளது எனலாம். NPV மதிப்பு சுழியாக அமைந்தால் (பூஜ்யம்) அந்த நிறுவனத்தின் பணப்பாய்வு அறிக்கையின் படி, வரவு-செலவில் மாற்றமில்லை என எடுத்து கொள்ளலாம். NPV மதிப்பு எதிர்மறையாக இருப்பின், நிறுவனத்தின் செலவு வருவாயை காட்டிலும் அதிகமாயுள்ளது எனலாம். இருப்பினும், சில சமயங்களில் ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் புது கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்காக செலவு செய்திருக்கலாம்.அதனால் பணப்பாய்வு அறிக்கையை (Cash Flow statement) ஆராய்வது முக்கியமானதாகும்.

 

ஒரு நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகை குறிப்பிட்ட காலத்தில் சரியாக வந்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்ற செயல்பாடுகள் நன்றாக இருந்திருக்கும். ஆகையால் நாம் பார்க்க போகும் இந்த முறை பணப்பாய்வு (Cash Flow) அடிப்படையில் அமையும். ஒரு நிறுவனத்தின் அனைத்து செலவினங்களும் போக, உபரியாக எவ்வளவு தொகையை கொண்டிருக்கிறது என்பதை பணப்பாய்வு அறிக்கையில் அறியலாம். இந்த உபரியை Free Cash Flow (FCF) எனலாம். இது ஒவ்வொரு வருடமும் மாறுபடும். இந்த உபரி என்று சொல்லப்படும் Free Cash Flow ஒரு முதலீட்டாளருக்கு தேவையானது. இதனை கொண்டு நாம் ஒரு பங்கின் உள்ளார்ந்த (அ) உண்மையான விலையை அறியலாம்.

 

DCF முறையில் கணக்கிட தேவையானவை:

 

  • எதிர்கால பணப்பாய்வுகளின் வளர்ச்சி மதிப்பீடு (Growth Estimating in FCF)
  • முனைய வளர்ச்சி விகிதம் (TGT – Terminal Growth Rate)
  • தள்ளுபடி விகிதம் (Discount Rate)

 

ஒரு நிறுவனத்தின் Free Cash Flow -FCF மதிப்பினை பெற அதன் பணப்பாய்வு அறிக்கையை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் கிடைக்கும் Net Cash from /(used in) Operating Activities மதிப்பை, Purchase of Fixed Asset ல் கழித்து கிடைப்பது தான் Free Cash Flow. இதனை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு கணக்கிட்டு அதன் சராசரியை அறிந்து வையுங்கள். ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை நாம் கணிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. இருப்பினும், நாம் அந்த நிறுவனத்தின் கடந்த கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு, எதிர்காலத்தில் இதனை போன்று அமையலாம் என DCF முறைக்கு எடுத்து கொண்டோம். எதிர்கால வளர்ச்சியாக சுமார் அடுத்த 10 வருட காலங்களை எடுத்து கொள்ளலாம். சராசரியாக முதல் 5 வருடங்களுக்கு வளர்ச்சி 10 % என எடுத்து கொண்டால், அடுத்த 5 வருட காலத்திற்கு அதனை விட குறைவாக எடுத்து கொள்வது ஒரு முதலீட்டாளரான நமக்கு பாதுகாப்பு தான். ஏனெனில் அடுத்த 5 வருடங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதை எளிதாக முடிவு செய்யலாம், ஆனால் 10 வருடத்தில் என்ன நடக்கும் என்பதை நம்மால் எளிதாக கூற முடியாது, இதே போல தான் ஒரு நிறுவனத்தின் தொழிலுக்கும்.

 

Discounted cash flow

 

உதாரணத்திற்கு, நாம் எடுத்து கொள்ளும் முதல் 5 வருட வளர்ச்சி – 10 %, அடுத்த 5 வருட வளர்ச்சி – 8 %. நாம் இங்கே எடுத்து கொண்ட நிறுவனம் 10 வருட கால கணக்கீட்டிற்கு தான். முனைய வளர்ச்சி(Terminal Growth) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் எதிர்பார்க்கப்படும் பணப்பாய்வு வளர்ச்சியாகும். அதனால் Terminal Growth Rate எனப்படும் முனைய வளர்ச்சியை பொதுவாக, 0 – 2 சதவீதத்திற்கு இடையில் ஒரு மதிப்பை எடுக்கலாம். தள்ளுபடி விகிதம்(Discount Rate) என்பது எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் தொகைக்கு (Future Cash Flows) இன்றைய மதிப்பில் தள்ளுபடி செய்வது. உதாரணத்திற்கு, நாம் முதலீடு செய்திருக்கும் நம் நண்பரின் தொழிலில் ஒரு ஆண்டுக்கு பிறகு கிடைக்கும் Cash Flow தொகை ரூ. 100 என எதிர்பார்த்தால், நமது தள்ளுபடி 5 % ஆக இருக்கும் பட்சத்தில் நாம் தொழிலுக்கு செலுத்த வேண்டிய தொகை – ரூ. 95.23 /- ( 100 / 1.05); தள்ளுபடி 15 % ஆக இருக்கும் போது, நாம் கொடுக்க வேண்டிய தொகை – ரூ. 86.95 /- (100/1.15). இதன் மூலம் நாம் அறிவது, எந்த அளவுக்கு நமது தள்ளுபடி விகிதம் அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு நாம் வாங்க வேண்டிய பங்கின் விலைக்கும் விலை குறைவு கிடைக்கும். ஆக 100 ரூபாய் மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு 15 % தள்ளுபடியில் ரூ. 86.95 /- கொடுத்தால் போதும். அதிக விலைக்கு சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை.

 

இதற்கான சூத்திரம்:

 

DCF = [CF1 / (1+r)1] + [CF2 / (1+r)2] + … + [CFn / (1+r)n]

 

CF = Cash Flow

r = discount rate (WACC – Weighted Average Cost of Capital)

 

(Source: https://www.investopedia.com/terms/d/dcf.asp )

 

Discounted cash flow

பாதுகாப்பு விளிம்பு (Margin of Safety):

 

நீங்கள் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்கள். கலந்து கொள்ளும் முன் என்ன செய்யலாம் ?

 

பொதுவாக பந்தயத்திற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். பந்தயத்திற்கான தூரம் மற்றும் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் அறிந்து வைப்போம். முக்கியமாக, பந்தயத்திற்கு தயாராகும் விதமாக நமக்கு நாமே பயிற்சி எடுத்து கொள்வோம் அல்லது ஒரு பயிற்சியாளரிடம் கற்று கொள்வோம். இது போன்ற விஷயத்தில் ஒன்றையும் கடைபிடிக்காமல் நம்மால் பந்தயத்தில் வெல்வது, இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெறுவது சாத்தியமில்லை எனலாம். இதனை தான் நாம் பாதுகாப்பு விளிம்பு என்கிறோம். ஒரு செயலை செய்யும் முன், அதற்கான விஷயங்களை தயார்படுத்தி கொண்டால் நமக்கு கிடைக்கும் விளைவு நேர்மறையாக அமையலாம், இல்லாவிட்டாலும் எதிர்மறை விளைவிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாம் பேருந்தில் பயணம் செய்யும் முன், பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதல் பணத்தை கையில் வைத்து கொள்வோம். இது ஒரு பாதுகாப்பு அம்சம் கருதி தான் செய்கிறோம். மழை வரும் என கணித்தால், நம்முடன் மழைக்குடையை எடுத்து செல்வோம். நமது வாகனம் மற்றும் வீட்டு கதவுக்கு இரண்டு சாவிகள், நம்மிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஒரு நகல் என நாம் ஒவ்வொரு விஷயத்திலும் பாதுகாப்பு கருதி, வரும் முன் காப்போம் செயலை தினமும் செய்து வருகிறோம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இதனை போல தான் பங்குச்சந்தையிலும்; நாம் ஒரு பங்கின் உண்மையான விலையை கணித்தாயிற்று, ஆனால் சந்தையில் நாம் அதன் உண்மையான விலையில் பங்கை வாங்கிய பின், விலை குறைந்தால் என்ன செய்வது ?

 

அதனால் தான் பங்கிற்கும், வரும் முன் காப்போம் செயல்பாடு. உண்மையான விலையிலிருந்து சற்று குறைவான விலையில் பங்கு கிடைத்தால் நமக்கு நல்லது தானே. பங்கின் விலை அதன் உண்மை விலையிலிருந்து இறங்கினாலும், நம் முதலுக்கு ஆபத்து இல்லையே. உதாரணமாக நாம் கண்டறிந்த ஒரு பங்கின் உண்மையான விலை(Intrinsic Value)  ரூ. 100 என வைத்துக்கொள்வோம். சந்தை ஏதோ ஒரு காரணத்தால் இறக்கமடைகிறது. நாம் வாங்கிய பங்கும் இறங்குகிறது (இறக்கத்தில் விலை – ரூ. 85/-). இப்போது நாம் பாதுகாப்பு விளிம்பு அடிப்படையில் (Margin of Safety) 10 % விலையில் வாங்கியிருந்தால் ( 10 % of Rs. 100 = 90 Rs.) நமக்கு பங்கு ஒன்றுக்கு 5 ரூபாய் தான் நஷ்டம். பாதுகாப்பு விளிம்பு 20 % என்றால் (20 % of Rs. 100 = 80 Rs), நமக்கு சந்தை இறங்கினாலும் 5 ரூபாய் லாபம் தான். ஆக, Margin of Safety மூலம் நாம் நமது முதலீட்டை பாதுகாத்து கொள்ளலாம். சரி, எவ்வளவு சதவீதம் Margin of Safety ஆக வைத்து கொள்ளலாம் என கேட்டால், அது ஒரு முதலீட்டாளரின் ரிஸ்க் தன்மையை பொறுத்து தான் அமையும். உங்கள் வயது, வருமானம் மற்றும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய மனக்கட்டுப்பாடு போன்றவை தான் இதனை தீர்மானிக்கும். இருப்பினும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளராக 20-30 % Margin of Safety எடுத்து கொள்வது நம் பணத்திற்கு பாதுகாப்பானது.

இப்போது நமக்கு புரிந்திருக்கும், ஒரு பங்குக்கு உள்ளார்ந்த மதிப்பும், பாதுகாப்பு விளிம்பும் எவ்வளவு முக்கியமென்று. அதனால் ஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் வாங்கும் முன் பேரம் பேச தயாராகுங்கள்.

பங்கு வாங்கலியா பங்கு (பங்காளி)-Share Market Extravaganza

பங்கு வாங்கலியா பங்கு (பங்காளி)

Share Market Extravaganza

 

பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் !

 

பங்குச்சந்தை ஒரு தொழில் வாய்ப்பு மற்றும் பணம் பண்ணுவதற்கான கடல் !

 

மேலே உள்ள வாக்கியத்தில், எவை ‘உங்களை அதிகமாக அச்சுறுத்தும்; எவை உங்களை புத்துணர்வூட்டும் ? ‘

 

நான் சொல்கிறேன், கல்வி நிலையங்கள் ஒரு ஏமாற்று வேலையாளி என்று ! (உதாரணத்திற்கு மட்டுமே) 🙂

 

  • கல்வி நிலையங்கள் அதிகமான கட்டணங்களை வசூல் செய்கிறது;

 

  • கல்வி நிலையங்களில் அடிப்படை வசதியை கூட செய்து தருவதில்லை;

 

  • கல்வி நிலையங்களில் தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படவில்லை;

 

  • கல்வி கொள்கைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை;

 

  • எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை;

 

இன்னும் பல…

 

மேலே உள்ள எல்லா வாக்கியங்களுக்கும் ஒரு கல்வி நிலையத்தை சுட்டிக்காட்டி ‘ஆம்’ என்று நீங்கள் பதில் சொல்ல முடியுமா ?

 

ஏதேனும் ஒன்றுக்கொன்று நிறை, குறைகள் இருக்கலாம்; பரவாயில்லை நாம் நமது பிள்ளைகளை கல்வி நிலையங்களில் படிக்கத்தான் வைக்கிறோம்; நாமும் அங்கே தான் படித்தோம் !

 

தேர்ந்தெடுப்பது நாம் தான்; தேவைகளும் நமக்கு தான் !

 

வாருங்கள், மற்றொரு உதாரணம் பார்ப்போம்…

 

வங்கிகள் எப்படி செயல்படுகின்றன(How the bank works) என்பதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன்;

வங்கிகளில்  நீங்கள் செய்யும் டெபாசிட் (வைப்பு தொகை) பணத்தை அவர்கள் யாருக்கு கடனாக கொடுக்கிறார்கள் என்று உங்களிடம் சொல்லப்படுவதில்லை; நீங்கள் கடனாக பெற்ற தொகை யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதும் சொல்லப்படுவதில்லை !

 

அது வங்கிகளின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் !

 

ஆனால், பங்குச்சந்தையில்…      அது தான் நமக்கு பிரச்சனையே 🙂

 

நீங்கள் ஒரு வங்கியில் ரூ. 1,00,000 /- தொகையை டெபாசிட் செய்கிறீர்கள்;  5 வருட வைப்புத்தொகையாக உங்களுக்கு 8 % வட்டி வருமானம் தரப்படுகிறது.  இந்த 5 வருட காலத்தில் உங்கள் எத்தனை வங்கி வாடிக்கையாளருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது, எத்தனை கடனை சரியாக கட்டினார்கள், அதாவது உங்கள் ரூ. 1,00,000/- தொகையின் ஏற்ற, இறக்கத்தை நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்க வாய்ப்புமில்லை; ஆனால் வங்கிகளுக்கு தெரிந்திருக்கலாம், எத்தனை பேர் கடனை கட்டி முடித்தார்கள் மற்றும் எவ்வளவு பேர் திவாலானார்கள் என்று 🙂

பங்குச்சந்தையில் பங்கின் விலை ஏறுவதும், இறங்குவதும் அதன் இயல்பே; அவ்வாறு நடைபெறுவதால் தான் நாம் வருமானம் ஈட்ட முடியும்; தற்போதெல்லாம் நாம் தக்காளி விலையேற்ற – இறக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை; பங்குச்சந்தையை பற்றியது தான் நமது கவலை எல்லாம் !

 

உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் கேட்டு பாருங்கள் (காய்கறி சந்தைக்கு போகும் பெண்களிடம் ), அன்றைக்கு சமையலுக்கு எந்த காய்கறி விலை மலிவாக கிடைக்கிறதோ அதை தான் அவர்கள் சமைப்பார்கள்; போட்டி போட்டு கொண்டு அதிக விலைக்கு வாங்கமாட்டார்கள்; காய்கறி சந்தையில் பேரம் பேசுவதற்கும் தயங்கமாட்டார்கள்; ஆனால் இங்கு பங்குச்சந்தையில் அதுவே தலைகீழ் – பெறுவதோ பெரும் நஷ்டம், பிறகு அது சூதாட்டம் 🙂

 

பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதை பற்றி நான் இந்த கட்டுரையில் சொல்ல வரவில்லை; மாறாக, பங்குச்சந்தை பற்றிய அறியாமையையும், பணம் பண்ணுவதற்கான வாய்ப்புகளையே நான் சொல்ல வருகிறேன்.

 

கல்வி நிலையங்களும், வங்கிகளும்  எப்படி உங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதோ, அது போன்று தான் பங்குச்சந்தையும் !

 

பங்குச்சந்தைக்கும் கட்டுப்பாட்டாளர் (Regulators) உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது; விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக தான் உள்ளன.

 

நாம் ஏன் பங்குச்சந்தையில் ஈடுபட (முதலீடு செய்ய) வேண்டும் ?

 

  • செயலற்ற வருமான வாய்ப்பு (Passive Income – Financial Asset)
  • அதிக லாபம் / வருமானம் -நீண்ட காலத்தில் (Higher Returns in Longterm)
  • பணவீக்கத்தை சரிக்கட்டும் வாய்ப்பு (Beat Inflation)
  • வரிச்சலுகைகள் (Tax Benefits – Longterm Capital Gains)
  • உரிமை / பங்குதாரராக வாய்ப்பு / தொழிலில் ஒரு சிறு பகுதியாக இருக்க (Ownership Rights / Be a part of a business)
  • நிதி மற்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு கிடைக்க (Knowledge about Finance and Economics)

இவையனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டுமா….

 

பங்குச்சந்தையில் ஈடுபடுங்கள்…

 

Investing vs Trading:

 

பங்குச்சந்தையில்  ஈடுபடுவதற்கு முன்னர், பங்குச்சந்தைக்கு நீங்கள் யார் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

 

நீங்கள் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, முதல் போட்டு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என வைத்து கொள்வோம்; உங்களுடைய நோக்கம் தொழிலில் நீண்ட கால வளர்ச்சியும், அதனை சார்ந்த வருமானம் பெருக வேண்டும் என்பதே. நீங்கள் உங்கள் தொழிலில் மிகவும் கவனமுடன் செயல்படுவீர்கள்; உங்களுக்கு, ‘தொழில்முனைவோர்’, ‘முதலீட்டாளர்’ (Entrepreneur /Investor)  என பெயர் சூட்டலாம். உங்களது உற்பத்தி, பொருட்கள், விற்பனை, வாடிக்கையாளர்கள், அரசாங்க தொழில் கொள்கைகள், காலநிலை ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை.

 

எனக்கு நீண்ட கால நோக்கம் என்று எதுவும் கிடையாது; எனக்கு தினமும் நான் செய்யும் வேலை / தொழிலில் இருந்து எதாவது ஒரு சிறு தொகை கிடைத்தால் போதும்; ஆனால் தினமும் வருமானம் வேண்டும், நான் ரிஸ்க் எடுக்கவும் தயார் – முதலுக்கு லாபம் வரலாம்; நஷ்டமும் கூட ! உங்களுக்கு தின ‘வர்த்தகர் / வணிகர்’ (Day Trader) என பெயர் சூட்டலாம்; உங்களுக்கென்று எந்த பொருளும் சொந்தமில்லை, உங்களுக்கு எதை பற்றிய கவலையுமில்லை – பெரும்பாலான சமயங்களில் 🙂

 

Speculating / Speculator (ஊக வணிகம்) என்ற ஒருவரும் உண்டு; இவர் சந்தையில் எந்த காரணத்திற்காக வந்தார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்கே தெரியாது; அனைத்தும் ஊக வணிகத்தில் தான் – மிக்க அபாயத்துடன்  !

கவனத்தில் கொள்ளுங்கள்:  நீங்கள் பங்குச்சந்தையில் ஒரு பங்கினை வாங்கி, அதனை ஒரு வருடத்திற்குள் விற்றால் கிடைக்கும் லாபத்திற்கு குறுகிய கால ஆதாய வரி; ஒரு வருடத்திற்கு மேல் விற்றால் எந்த வரியும் கிடையாது !   

 

Fundamentals(Business)  vs Technicals (Charts):

 

Fundamental Analysis:

 

உங்கள் தொழிலை நீங்கள் மாதத்திற்கு ஒரு முறையோ (அ) மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ கணக்கு சரிபார்த்தால் நன்றாக இருக்குமா, இல்லையா ?  அதை தான் இங்கு பார்க்கிறீர்கள். உங்கள் தொழிலின் வரவு-செலவு கடந்த காலத்தில் எவ்வாறு உள்ளது, அதன் அடிப்படையில் இனி என்னவாறு திருத்தம் மற்றும் மேம்படலாம் . உங்களுக்கு உதவும் காரணிகள் Balance Sheet, Income Statement, Industrial and Economy, Price to Earning, Intrinsic value, etc.

 

Technical Analysis:

 

கடந்த கால விலை மற்றும் அளவுகளை கொண்டு மதிப்பிடுவது; விலை இயக்கம் சார்ந்த சந்தை நடவடிக்கைகளை கண்காணிப்பது – A Mathematical Calculation based on Price Movements.

 

பங்குச்சந்தை ஒரு ரிஸ்க் ?

 

ஆம், பங்குச்சந்தை ஒரு ரிஸ்க்கான தளம் தான். வருமானம் பார்க்கலாம், நீங்கள் கற்று கொள்வதற்கு தயாரானால் !

 

நஷ்டமும் அடையலாம், புரியாமல் செய்தால் ; மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் 🙂

 

  • வங்கி தொகையிலும் ரிஸ்க் உண்டு, பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் – நீங்கள் எதிர்பார்த்த தொகை வராமல் போகலாம்.

 

  • தங்கத்திலும் ஏற்ற இறக்கங்கள் இயல்பு; உங்கள் அவசர தேவைக்கு அதன் சந்தை மதிப்பை விட குறைவாகவே பணம் பெற முடியும்.

 

  • நிலத்திலும் சிக்கல்கள் உண்டு, நீங்கள் நினைத்த மாத்திரத்தில் விற்று பணம் பெற முடியாது; சட்டங்கள் அப்படி சொல்லுகிறது 🙂

 

Risk Tolerance’ என்று சொல்லப்படும் இடர் சகிப்பு தன்மை என்பது அவசியம்; அதாவது உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன்(Risk Capacity) மற்றும் விருப்பம்(Risk Attitude) பற்றி சொல்லுவது; எந்த முதலீடானாலும் இது பொருந்தும்.

 

இதனை புரிந்து நீங்கள் பங்குச்சந்தையில் நீங்கள் செயல்பட்டால், உங்களுக்கு கிடைப்பது…  Capital Appreciation, Beat Inflation, Dividend Yield, Higher Returns, Liquidity, Ownership Style இன்னும் பல !

 

இறுதியாக…

 

இன்று நம்மில் எண்ணற்றவர்களுக்கு இருக்கும் வேலையை / தொழிலை நிறுத்தி விட்டு புதிய தொழிலை ஆரம்பிக்கலாம் என எண்ணங்கள் இருக்கலாம்; அப்படிப்பட்டவர்களுக்கு பங்குச்சந்தை ஒரு வரப்பிரசாதம் !

 

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலையை கற்க விரும்புபவர்கள் பங்குச்சந்தையை கற்கலாம்; கலக்கவும் செய்யலாம் 🙂

 

நீண்ட கால இலக்குகள் உள்ளவர்கள் பங்குச்சந்தையின் வாயிலாக வெற்றி பெறலாம்.

 

கடலில் நீந்தினாலும் சரி, படகோட்டினாலும் சரி நீங்கள் கடலில் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்;

 

கரையில் இருந்தாலும் பரவாயில்லை, கடலில் கால்களை வைக்க மறுக்க வேண்டாம்;

 

பங்குச்சந்தை ஒரு கடல் !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

Fundamental Analysis – Discounted Cash Flow

 

DISCOUNTED CASH FLOW METHOD:

 

  • நாம் வாங்க போகும் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை கணக்கிட்டு (அ) கணித்து, அதனை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிட்டு நாம் நிர்ணயிக்கும் விலை (சலுகை விலை) தான் நாம் உண்மையாகவே வாங்க கூடிய விலை. இதனை தான் இம்முறையில் நாம் கண்டுபிடிக்கிறோம்.

 

  • சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நாம் வாங்க போகும் பங்கினை சலுகை விலையில் வாங்கினால், நமக்கு தானே லாபம் !

 

  • DISCOUNTED CASH FLOW முறை சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் தமிழில் உள்ளன. ( உதாரணம்: ஷேர் மார்க்கெட் A to Z – சொக்கலிங்கம் பழனியப்பன்)

 

MARGIN OF SAFETY:

 

  • ஒரு பங்கின் உண்மையான விலையை கண்டறிய, நாம் இரு முறைகளை பின்பற்றினோம். ஆனால் இந்த உண்மையான விலையிலே வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. இதை விட குறைவான விலைக்கு கிடைத்தால் அது நமக்கு தான் லாபம். நஷ்டத்தையும் தவிர்க்கலாம். அது தான் “MARGIN OF SAFETY”

 

  • உண்மையான விலையிலிருந்து எத்தனை சதவிகிதம் குறைவாக கிடைக்கிறது என்பதே “MARGIN OF SAFETY”

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

EPS வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை

 

EPS (Calculate Earning per share) வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை:

 

( 5 வருட அடிப்படையில்… )

2006 – 2.10, 2007 – 2.80, 2008 – 3.45, 2009 – 3.90, 2010 – 4.20, 2011 – 4.50

 

Step 1. Current EPS / 1st EPS = 4.50 / 2.10 = 2.14
Step 2.  Growth Multiple of (2.14) to the 1/5th Power (5 years)
(2.14) X Power of (1/5) = 1.164
Step 3.            Value – 1 =   1.164 – 1 =   0.164

 

then, 0.164 *100 = 16.40 %
So, Earning per share (EPS) Growth for the last 5 years = 16.40 %

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value

 

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value

 

 

பங்கின் வளர்ச்சி முறை (Ben Graham’s EPSG – Intrinsic Value)

 

பெஞ்சமின் கிராஹாமின் “The Intelligent Investor” புத்தகத்தில், நாம் சொன்ன உள்ளார்ந்த மதிப்பை (Intrinsic Value) கண்டறிய அவர் ஒரு சூத்திரத்தை வகுத்துள்ளார்.

 

V = EPS X ( 8.5 + 2 g ) X 4.4 / Y  (Benjamin Graham)

 

V = Intrinsic Value
EPS = Average EPS for the last 12 months (or) One Financial Year
8.5 = Assumed P/E Ratio of Stock
g = Assumed growth rate for the forthcoming years ( 7 to 10 years )
4.4 = Interest Rate of AAA Corporate Bond in year 1965 (Model Introduced year)
Y = Interest Rate of AAA Corporate Bond as on Today.

 

குறிப்பு:

  • EPS = ஒரு பங்கின் வருமானத்தை நாம் கடந்த 12 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும். (சராசரி வருமானம்)
  • 8.5 = பங்கின் உத்தேச P/E விகிதம்
  • g = பங்கின் சராசரி உத்தேச வருமான வளர்ச்சி – அடுத்த 7 முதல் 10 வருடங்களுக்கு கணக்கிடவும்
  • 4.4 = அரசாங்கத்தின் 10 வருட பத்திரங்களின் நிலையான (அ) பாதுகாப்பான வருவாய் வட்டி விகிதம் (இந்த சூத்திர முறை 1965 ல் அறிமுகபடுத்தபட்ட போது – 4.4 )
  • Y = பத்திரங்களின் இன்றைய வட்டி (10-year Government of India bonds ) – இந்தியாவில் 8 %

மேலே உள்ள இந்த முறையின் மூலம், நாம் ஒரு பங்கின் உண்மையான மதிப்பை கண்டறியலாம்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 7.0 – Interest Coverage Ratio

பங்கு சந்தை பகுப்பாய்வு 7.0 – Interest Coverage Ratio

 

  • வட்டி எல்லை விகிதம் (Interest Coverage Ratio): ஒரு நிறுவனம் நிலுவையிலுள்ள வட்டி கடனை எவ்வாறு செலுத்த முடியும் (அ)
    வட்டி கடன் சுமையை குறைப்பதற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை
    தீர்மானிக்கும் ஒரு விகிதம் தான் வட்டி எல்லை விகிதம்(Interest Coverage
    Ratio).

 

  • Interest Coverage Ratio(ICR): 

    EBIT / Interest Expenses
    ( வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் / வட்டிச்செலவுகள் )

    *EBIT:    Earnings Before Interest and Taxes

 

  • பொதுவாக, வட்டி எல்லை விகிதம் ஒரு நிறுவனத்திற்கு, 1.5 க்கு மேல்
    இருந்தால் நல்லது. இதற்கு மேல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த
    நிறுவனம் தனது கடன் சுமையை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    வட்டி எல்லை விகிதம் 1.5 க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அந்த
    நிறுவனத்தை தவிர்ப்பது நல்லது. விகிதம் 1.0 க்கு குறைவான நிறுவனம் ,
    Bankruptcy எனப்படும் திவாலாகும் சூழ்நிலையும் உள்ளது.
    வட்டி எல்லை விகிதத்தை, ஒரு நிறுவனத்தின் கடந்த 5 (அ) 10 ஆண்டுகள்
    அடிப்படையில் ஆராய்வது சிறந்தது.
    Debt – Equity Ratio போன்று இதுவும் ஒரு மிக முக்கியமான கடன் விகிதம்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 6.0 – Dividend Yield

 பங்கு சந்தை பகுப்பாய்வு 6.0 – Dividend Yield

 

Dividend Yield: ஈவு தொகை ஈட்டம் / விளைச்சல்
ஈவு தொகை (Dividend):
  • ஒரு நிறுவனம் தான் சம்பாதிக்கின்ற லாபத்தின் ஒரு பகுதியை, பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஈவு தொகை (Dividend) என்கிறோம்.
  • பங்குதாரர்களுக்கு  ஈவு தொகையை கொடுக்கும் தீர்மானம், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய இயக்குனர்களுக்கு(Board of Directors – BOD) உண்டு.
  • ஈவு தொகை பற்றி நாம் பேசும் பொழுது, Ex-Date & Record Date என்று இரு தேதிகள் உள்ளன.
  • ஒரு பங்கினை அதன் Ex-date தேதி அன்றோ (அ) முன்னரோ வாங்கியிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஈவு தொகை பெறுவதற்கு உரிமை உண்டு.  Record Date அன்று யார் பெயரெல்லாம் பங்குதாரர் பட்டியலில் சேர்க்கபட்டுள்ளதோ, அவர்கள் ஈவு தொகை பெற உரிமை உண்டு.
ஈவு தொகை அளிக்கும் விகிதம் (Dividend Payout Ratio ):
  • பொதுவாக ஈவு தொகையை அறிவிக்கும் ஒரு நிறுவனம், அந்த தொகையினை எவ்வளவு ரூபாய் என்று சொல்லாமல், ஈவு தொகை சதவிகிதமாக அறிவிக்கும்.
உதாரணம்:
SKYTECH நிறுவனம், 2012-13 ம் ஆண்டில், ஈவு தொகையாக தனது 10 ரூபாய் முக மதிப்பின் அடிப்படையில், 50 % என்று அறிவிக்கிறது.
முக மதிப்பு = 10 ரூ.          ஈவு தொகை = 50 % (2012-13 வருடம்)
ஒரு பங்கிற்கு நாம் பெரும் ஈவு தொகை =  (50% X 10)  = 5 ரூ / பங்கு
இதையே நாம் அந்த நிறுவனத்தின் 2012-13 வருட EPS உடன் ஒப்பிட்டால், அதை ஈவு தொகை அளிக்கும் விகிதம் (Dividend Payout Ratio) என்கிறோம்.
ஒரு பங்கின் ஈவு தொகை = 5 ரூ.       EPS = 20 ரூ (2012-13 வருடம்)
ஈவு தொகை அளிக்கும் விகிதம்:   Annual Dividend Per Share /  EPS on year
                                                              5 / 20 = 0.25 X 100 = 25 %
Div. Payout Ratio:   25 %
ஈவு தொகை ஈட்டம் (Dividend Yield):
முன்னர், ஈவு தொகையை நாம் அதன் முக மதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டோம். இது போன்று, அந்த பங்கின் தற்போதைய சந்தை விலைக்கு, ஈவு தொகை எவ்வளவு சதவிகிதம் என்று கணக்கிட்டால், அதற்கு ஈவு தொகை ஈட்டம் (Div. Yield) என்று பெயர்.
உதாரணம்:
“SKYTECH”  பங்கின் சந்தை விலை = 95 ரூபாய், ஈவு தொகை = 5 ரூ /பங்கு.
Div. Yield:     Annual Dividend Per Share / Current Market Price
          5 / 95  = 0.0526 X 100 =  5.26 %
ஈவு தொகை ஈட்டம்:  5.26 %
ஆக, SKYTECH நிறுவனத்தில் நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 5.26 % வட்டி போன்று, ஈவு தொகை கிடைக்கும்.
நினைவில் கொள்க:
  • ஈவு தொகை பற்றி பேசும் போது, Cum Dividend & Ex-Dividend என்று சொல்வதுண்டு. ஈவு தொகை கொடுக்கும் முன்னரும், கொடுத்த பின்னரும் உள்ள நிறுவனத்தின் நிதி அறிக்கையை விவரிப்பதற்கு இவை உதவும்.
  • நிறுவனத்தின் லாபம் என்று சொல்லப்படும், EPS ஐ ஒரு நிறுவனம் இரு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு(Re-investment) பயன்படுத்துவது (அ) பங்குதாரர்களுக்கு ஈவு தொகையாக(Dividend) கொடுப்பது.
  • ஈவு தொகை என்பது ஒரு நிறுவனம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அந்த நிறுவனம் நன்கு வளர்ச்சியடைந்து மீதி இருக்கும் லாபத்தை, பங்குதாரர்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் செய்யலாம்.
  • நாம் பெரும் ஈவு தொகைக்கு எந்த விதமான வரியும் (No Brokerage/ Tax) இல்லை. ஆகையால், அந்த தொகை நேரிடையாக நமது வங்கி கணக்கில், அந்நிறுவனத்தால் வரவு வைக்கப்படும்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 5.0 – Debt to Equity

பங்கு சந்தை பகுப்பாய்வு 5.0 – Debt to Equity

 

Debt to Equity Ratio (D/E):

 

பொதுவாக, பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் போது, கடன் தன்மை குறைவாக உள்ள நிறுவனத்தை பார்ப்பது நல்லது.

முற்றிலும் கடன் இல்லாத (அ) கடன் மிக குறைவாக உள்ள நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. (Debt Free Stocks/Companies)

ஒரு நிறுவனத்தின் கடன் விகிதத்தை நாம் அறிந்து கொள்ள, அந்நிறுவனத்தின் கடன் தொகையை, அதன் பங்குகளுடன் ஒப்பிட வேண்டும்.

 

D/E = Debt / Equity        (கடன் / பங்கு முதலீடு நிதி )

 

கடன் – பங்கு விகிதம் ஒன்றுக்கு குறைவாக(Below 1.0 is Good) இருந்தால், அந்த பங்கினை தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேல் இருந்தால் நாம் அந்த நிறுவனத்தின் மற்ற அடிப்படை பகுப்பாய்வுகளை ஆராய வேண்டும் அல்லது அந்த பங்கினை தவிர்ப்பது நல்லது.

 

 

நினைவில் கொள்க:

 

  • கடன்-பங்கு விகிதத்தை நாம் நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். ஆதலால் கடந்த 3,5,10 வருட கால கடன் தன்மையை நாம் அலசி பார்க்க வேண்டும்.
  • கடன் விவரங்களை நாம் எளிதாக ஆராய, அந்த நிறுவனத்தின் Balance Sheet ஐ பார்க்கலாம்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை