ஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0

ஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0

Dividend Yield and Dividend Payout

 

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வின் பத்தாம் வகுப்புக்கு நாம் வந்துள்ளோம். ஏற்கனவே நாம் கடந்த சில வகுப்பில் பார்த்த அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் சம்மந்தமான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் பகிரலாம்.

 

contact@varthagamadurai.com  (contact at varthagamadurai dot com)

 

(or)

 

https://varthagamadurai.com/contact/

 

பொதுவாக நாம் ஒரு வங்கியில் வைப்பு தொகையாக பணத்தை முதலீடு செய்யும் போது, நாம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயம் தான் – முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் எதிர்பார்த்த வட்டி வருமானத்துடன் தேவையான நேரத்தில் பணத்தை திரும்ப பெறுவது. இதை விட வேறு எதுவுமில்லை. இன்றைய காலகட்டத்தில் வங்கியில் உள்ள நமது பணம் நம்மிடம் வந்து சேர்ந்தாலே போதுமானது. வட்டி வருமானத்தை பற்றி இப்போதெல்லாம் நமது கவலையில்லை.

 

பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒரு நிறுவனம் தனது முதலீட்டை கொண்டு தொழிலில் ஈடுபடுகிறது. முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்தை அந்த நிறுவனம் மூன்று விதமாக பயன்படுத்தலாம். ஒன்று கிடைத்த லாபத்தை தொழிலில் மறுமுதலீடாக செய்து வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டிருக்கலாம். அடுத்ததாக, லாபத்தை கொண்டு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளை அந்த நிறுவனமே திரும்ப வாங்கி கொள்ளலாம். இதனால் நிறுவனத்தின் உரிமை சதவீதம் அதிகரிக்கும். இறுதியாக லாபத்தை முதலீட்டாளரான நமக்கே பகிர்ந்தளிக்கலாம். இவ்வாறாக நிறுவனத்தின் லாபத்தை மூன்று நிலைகளில் பிரிக்கலாம். இந்த செயல்முறை நிறுவனத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுத்தப்படும்.

 

நிறுவனம் லாபத்தை அதன் வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்தினால், அந்த பங்கின் விலை உயரலாம். இதனால் ஒரு முதலீட்டாளருக்கு லாபம் தான். பங்குகளை திரும்ப பெறுவதாயின் அப்போதும் முதலீட்டாளர் பலன் உண்டு. இதை விட எளிமையாக லாபத்தை பகிர்ந்து கொடுத்தால் அது முதலீட்டாளருக்கு நேரிடையாக பலன் தரும். அது தான் ஈவு தொகை அளித்தல் ஆகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

Dividend:

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு நிறுவனம் தான் சம்பாதித்த லாபத்தை பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது ஈவு தொகை (Dividend) எனப்படும். பங்குதாரர்களுக்கு ஈவு தொகை கொடுக்கப்படும் தீர்மானம், பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தின் வாரிய இயக்குனர்களுக்கு(Board of Directors) உண்டு.

 

நிறுவனங்கள் ஈவு தொகையை அறிவிக்கும் போது, ஒரு பங்குக்கு இவ்வளவு தொகை என்று அறிவிப்பதை விட, அதனை ஈவு தொகை சதவீதமாக (Dividend payout) அறிவிக்கும்.

 

உதாரணத்திற்கு, National Aluminium Company  நிறுவனம் கடந்த ஜனவரி 30 ம் தேதி, ஒரு பங்குக்கு 94 %  ஈவு தொகையாக அறிவித்தது. பொதுவாக ஈவு தொகையானது அதன் முக மதிப்பின்(Face value) அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

National Aluminium Company நிறுவனத்தின் தற்போதைய முக மதிப்பு – ரூ. 5, அறிவிக்கப்பட்ட ஈவு தொகை சதவிகிதம் – 94 %. ஒரு பங்கிற்கு நாம் பெறும் ஈவு தொகை,

 

Dividend per share  = (Dividend payout X Face value)  

 

 

Dividend per share = (94 % X 5) = Rs. 4.70 /-

 

எனவே நாம் ஒரு பங்குக்கு பெறும் தொகை ரூ. 4.70 /-  நிறுவனம் ஈவு தொகையை இரு காலங்களில் அறிவிக்கும். ஒன்று இடைக்கால ஈவு தொகையாக (Interim Dividend) மற்றும் இறுதி ஈவு தொகையாக (Final Dividend) கொடுக்கப்படும். ஈவு தொகை என்பது ஒரு நிறுவனம் முதலீட்டாளருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கிடைத்த லாபத்தை நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம். ஆனால் அறிவிக்கப்பட்ட ஈவு தொகையானது, கட்டாயம் முதலீட்டாளருக்கு கொடுக்கப்பட வேண்டும். நமக்கு கிடைக்க வேண்டிய ஈவு தொகை சொல்லப்பட்ட தேதியில் கொடுக்கப்படவில்லை எனில், நாம் பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபியிடம் (SEBI) புகார் தெரிவிக்கலாம்.

 

Dividend Payout Ratio:

நாம் ஏற்கனவே பார்த்த படி, ஈவு தொகையானது ரூபாய் அளவில் சொல்லப்படாமல், ஈவு தொகை சதவீதத்தில் தான் தெரிவிக்கப்படும் என்று. இந்த ஈவு தொகை சதவீத விகிதத்தை Dividend Payout Ratio என்கிறோம். Dividend Payout Ratio ஐ கணக்கிடுவதற்கு ஒரு வருடத்தில் நிறுவனத்தால் ஒதுக்கப்படும் மொத்த ஈவு தொகையை அதன் நிகர வருமானத்தால் (அந்த வருடத்திற்கு) வகுக்க கிடைப்பதாகும்.

 

Dividend Payout Ratio = Dividends / Net Income

 

National Aluminium நிறுவனத்தில் 2017 மார்ச் நிதியாண்டு(March Ending 2017) முடிவில் ஈவு தொகையாக ஒதுக்கப்பட்ட (அ) கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 541.22 கோடி மற்றும் அந்த வருட நிகர வருமானம்(Net Income) – ரூ. 668.53 கோடி. இப்போது அதன் Payout Ratio,

 

Dividend Payout Ratio = 541.22 / 668.53 =  0.80956 X 100 = 80.96 %

 

இந்த தகவலை நாம் அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். சுலபமாக புரிந்து கொள்ள, ஒரு நிறுவனம் தனது லாபத்தில் எவ்வளவு தொகையை முதலீட்டாளருக்கு கொடுப்பதற்காக ஒதுக்குகிறது என்பது தான் Payout Ratio எனப்படும்.

Dividend Yield ( ஈவு தொகை ஈட்டம் ):

 

நாம் ஒரு பங்கிற்கு பெறும் ஈவு தொகையை அதன் முக மதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டு அறிந்து கொண்டோம். இதனை போல, நாம் வாங்கும் பங்கின் தற்போதைய சந்தை விலையில், பெறும் ஈவு தொகை எவ்வளவு சதவீதம் என கணக்கிடுவது ஈவு தொகை ஈட்டம் (Dividend yield) எனப்படும்.

 

உதாரணத்திற்கு, National Aluminum நிறுவனத்தின் சமீபத்திய ஈவு தொகை ஈட்டம் – 4.23 % (பங்கின் சந்தை விலை – ரூ. 66.25).

 

ஈவு தொகை ஈட்டத்தை கணக்கிட,

 

Dividend Yield = Annual Dividend per share / Current Market Price (CMP)

 

நால்கோ (National Aluminium Company) நிறுவனத்தை எடுத்து கொண்டால், கடந்த நிதியாண்டில் (March Ending 2017) ஈவு தொகையாக ரூ. 2.80 /- கொடுத்துள்ளது. அதன் படி, பங்கின் சந்தை விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால்,

 

Dividend Yield = 2.80 / 66.25 =  0.04226 X 100 = 4.226 % (Rounded to 4.23 %)

 

நினைவில் கொள்ளுங்கள்:

 

ஈவு தொகை ஈட்டத்தை(Dividend Yield) நாம் வேறொரு முறையாகவும் எடுத்து கொள்ளலாம். ஈவு தொகை ஈட்டம் என்பது வங்கி வட்டி விகிதத்தை போல தான், உங்கள் வங்கி சேமிப்பு தொகைக்கு கொடுக்கப்படும் 4 % போல அல்லது வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானம் என வைத்து கொள்ளலாம். 4.23 % ஈட்டம் என்பது உங்களுடைய ஒவ்வொரு நூறு ரூபாய் (Yield per 100 rupees) முதலீட்டிற்கும் கிடைத்த தொகை. ஈவு தொகை ஈட்டமானது ஒரு நிலையான விகிதம் அல்ல, அது பங்கின் சந்தை விலை பொறுத்து மாறுபடும். நீங்கள் குறைந்த விலையில் (Buy price – Rs.30) பங்குகளை வாங்கியிருந்தால் தற்போது கிடைக்கும் ஈவு தொகை (Dividend Yield –  9.33 %) லாபமானது தான்.

 

வங்கி வட்டி வருமானத்தை காட்டிலும் பங்குகளில் கிடைக்கும் ஈவு தொகை சிறந்தது. ஏனெனில் பங்குகளில் கிடைக்கும் ஈவு தொகைக்கு நிறுவனமே வருமான வரியை செலுத்தி விட்டு தான் நமக்கு கையில் கொடுக்கும். அப்படியிருக்க, நாம் பெறும் தொகை வங்கி வட்டி வருமானத்தை விட சற்று அதிகம் தான். ஆனால் நீங்கள் வாங்கிய பங்கின் சந்தை விலை மிகவும் முக்கியம்.

 

ஈவு தொகையை பற்றி அறியும் போது, Cum Dividend மற்றும் Ex Dividend என்ற இரு விஷயங்கள் உண்டு. ஈவு தொகை கொடுக்கும் முன்னரும், கொடுத்த பின்னரும். இதனை நாம் அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையில் பார்த்தால் நமக்கு விஷயம் புரியும். நாம் பெறும் ஈவு தொகை நமது வங்கி கணக்கில் நேரிடையாகவே வரவு வைக்கப்படும்.

 

ஈவு தொகை பெறுவதற்கு நாம் இரண்டு விதமான நாட்களை குறித்து வைத்து கொள்ளவும். Ex Dividend Date & Record Date. ஒரு பங்கை EX Dividend Date அன்றோ அல்லது அதற்கு முன்னரோ (On or before) நீங்கள் வாங்கியிருந்தால், ஈவு தொகை பெறுவதற்கு உரிமையுண்டு. அதன் பின்னர் வாங்குவோருக்கு அந்த காலத்திற்கு உரிய ஈவு தொகை கிடைக்காது. Record Date என்பது யாரெல்லாம் பங்குதாரர்களாக நிறுவன புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனரோ அவர்களுக்கு மட்டுமே ஈவு தொகை வழங்கப்படும். அதனால் பங்குச்சந்தை அமைப்பு வெளியிடும் தகவல்கள் மற்றும் நாட்களை குறித்து வைத்து கொள்வது நல்லது.

 

பொதுவாக, ஈவு தொகை கொடுக்கப்பட்டவுடன் பங்கின் சந்தை விலையில் சிறிது ஏற்ற – இறக்கமும், நிறுவனத்தின் நிதி அறிக்கையில் மாற்றமும் நிகழ்வது இயல்பு. நாம் இதனை பற்றி அவ்வளவாக கவலைப்பட தேவையில்லை. ஈவு தொகை அளிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் வளர்ச்சியடைந்த (அ) வளர்ச்சி பெற்று வருபவையாக இருக்கும். இருப்பினும் நாம் எப்போதும் நிறுவனத்தின் வரவு- செலவு, லாப-நட்ட கணக்கினை பார்ப்பது அவசியம்.

 

மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018

மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018

 

Wholesale Price Index (WPI) Inflation eases to 2.48 percent in February 2018

நாட்டின் பிப்ரவரி மாதத்திற்கான  மொத்த விலை பணவீக்கம்(Wholesale Price Index -WPI Inflation)  2.48 % ஆக குறைந்தது. இந்த சதவீதம் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவாகவும் உள்ளது. 2017 ல் இதே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 5.51 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

உணவு பொருட்களின் விலை குறைவால் மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதமாக உள்ளது. காய்கறிகளின் பணவீக்கம் 15.26 % ஆக உள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதத்தில் 40.77 % ஆக இருந்தது. முட்டை, மீன் மற்றும் மாமிசம் போன்றவற்றின் பணவீக்கம் 0.37 சதவீதத்திலிருந்து 0.22 % ஆக குறைந்துள்ளது.

 

எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 3.81 % ஆக அதிகரித்தும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 24.51 % ஆக குறைந்தும் இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம் 3.04 சதவீதமாக உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஏற்கனவே இந்த வாரம் வெளியிடப்பட்ட சில்லறை பணவீக்கம்(Retail Inflation) 4.44 % ஆக உள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவாகும். பணவீக்க சரிவுக்கு காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை குறைவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் உலக வங்கி(World Bank), நாட்டின் 2019 நிதியாண்டுக்கான(FY19) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை(GDP)  7.3 % ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. அதுவே 2019-20 ல் 7.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. இந்த கணிப்பு பணமதிப்பிழப்பு(Demonetisation) மற்றும் ஜி.எஸ்.டி (GST) தாக்கத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

 

பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சம்மந்தமான தகவல்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office –CSO) அறிவித்து வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த புள்ளி விவரங்களையும் இந்த அலுவலகம் வெளியிட்டு வருகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

ஆதார் இணைப்புக்கு காலவரையற்ற காலக்கெடு – உச்ச நீதிமன்றம் நீட்டிப்பு

ஆதார் இணைப்புக்கு காலவரையற்ற காலக்கெடு – உச்ச நீதிமன்றம் நீட்டிப்பு

Aadhaar Linking with indefinite deadline – Supreme Court Extends

 

நாட்டில் உள்ள பல்வேறு சேவைகளுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான காலக்கெடுவாக வரும் மார்ச் 31 ம் தேதியாக (March 31,2018)  நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்பு தொடர்பாக ஒரு தீர்ப்பை வெளியிட்டது. வங்கிக்கணக்குகள் மற்றும் கைபேசி எண்களுக்கான(Bank accounts and Mobile numbers) ஆதார் இணைப்பு காலவரையற்ற காலக்கெடுவாக (Indefinite Deadline) அறிவிக்கப்பட்டது.

 

இதற்கு முன், சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி மார்ச் 31 (March 31, 2018) என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று இது சம்மந்தமான வழக்கை விசாரிக்கும் போது, வங்கிக்கணக்குகள் மற்றும் கைபேசி எண்களுக்கான ஆதார் இணைப்பில் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், அதனால் அதன் இணைப்புக்கான கடைசி தேதியை காலவரையற்றதாகவும் அறிவித்தது.

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடருவதாகவும், இது சம்மந்தமான அடுத்த கட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தை சார்ந்து உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் ஆதார் இணைப்புக்காக அரசு, மக்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

அதே நேரத்தில் அரசு மூலம் பெறும் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு (LPG, MNREGA, PDS -Subsidy & Welfare)  ஆதார் எண் கட்டாயம் என்ற நடைமுறையில் எந்த மாற்றமுமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

மேலும், பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டுகளுக்கும்(Passport and PAN) ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அரசு கட்டாயப்படுத்த கூடாது என தீர்ப்பில் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், மத்திய அரசு பான் கார்டுகளுக்கான ஆதார் எண் இணைப்பு காலக்கெடு – மார்ச் 31, 2018 என அறிவித்திருந்தது.

 

நேற்று அறிவித்த இந்த தீர்ப்பின் காரணமாக, மற்ற சேவைகளுக்கும் (PPF, Mutual Funds, PAN, Insurance, Wallet) ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

கடன் – பங்கு தன்மை மற்றும் வட்டி செலுத்தும் விகிதம் – வகுப்பு 9.0

கடன் – பங்கு தன்மை மற்றும் வட்டி செலுத்தும் விகிதம் – வகுப்பு 9.0

Debt to Equity and Interest Coverage Ratio

 

கடந்த வகுப்பில் நாம் பங்குகள் மீதான வருமானம் பற்றி  பார்த்தோம். அதனை போன்றே, ஒரு நிறுவனத்திற்கு தனது  பங்கு அளவில் கடன் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்போம். நாம் ஏற்கனவே சொன்னது போல, ஒரு நிறுவனத்திற்கு கடன் குறைவாக  இருந்தால், அது லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதை விட, ஒரு நிறுவனம் கடனில்லாமல் இருந்தால் சாலச்சிறந்தது.

 

நம் வீட்டில் நடக்கும் அணுகுமுறையையே நாம் பெரும்பாலும் ஒரு நிறுவனத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கலாம். ‘ வீட்டில் ஒற்றுமை நிலவினால், நாட்டில் அமைதி உண்டாகும் ‘ என்பார்கள். அதனை போல உங்களால் உங்கள் குடும்ப வரவு-செலவினை அறிய முடிந்தால், நிறுவனத்தின் நிதி அறிக்கையை வெகு சுலபமாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

 

உதாரணமாக, நம் குடும்பத்தின் வரவு-செலவு கணக்கினை உற்று நோக்கினால் கடன் தன்மை பற்றி நாம் அறிய வாய்ப்புண்டு. நமது குடும்பத்தின் வருமானம் ரூ. 50,000 /- என்றால், நமது செலவு ரூ. 55,000 /- ஆக இருப்பின் நாம் கடன் வாங்கி தான் செலவு செய்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருந்த சேமிப்பை / சொத்தை செலவழித்ததன் மூலம் ஈடு கட்டியிருக்கலாம். இதுவே நமது செலவு ரூ. 45,000 /- எனில், நமக்கு கிடைக்கும் மீதித்தொகை ரூ.5,000 /- இதனை கொண்டு அடுத்த மாத (அ) எதிர்கால செலவுக்கு ஈடு கட்டலாம். இதன் மூலமே நாம் நமது கடன் தன்மையை அறிந்து கொள்ளலாம். உங்கள் வரவுக்கு மீறிய செலவு என்றுமே கடனில் முடியும். வரவுக்குள் செலவு என்றால் ஆனந்தம் பெருகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

Debt to Equity Ratio:

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு நிறுவனத்தின் கடன் தன்மையை அறிய, அந்த நிறுவனத்தின் கடன் தொகையை அதன் பங்குகளுடன் ஒப்பிட வேண்டும்.

 

D/E  = Debt / Equity (கடன் / பங்கு முதலீடு)

 

உதாரணத்திற்கு Wipro Ltd  நிறுவனத்தின்  சமீபத்திய கடன்(Debt) தொகை ரூ. 14,241 கோடி மற்றும் அதன் பங்கு முதலீடு (Equity Capital) ரூ. 486 கோடி. இப்போது அதன் கடன் – பங்கு தன்மை அறிய,

 

Debt / Equity  = 14241 / 486 =  29.30 / 100 =  0.29 (Debt to Equity Ratio)

 

Wipro Ltd நிறுவனத்தின் தற்போதைய கடன்-பங்கு விகிதம் 0.29 ஆகும். கடன்-பங்கு விகிதம் 1 க்கு குறைவாக இருந்தால் (Below 1.0) ஓரளவுக்கு நல்லது. ஒன்றுக்கு மேல் இருந்தால், அந்த நிறுவனத்தின் மற்ற பகுப்பாய்வு காரணிகளையும் பார்க்க வேண்டும். முடிந்தால் அது போன்ற நிறுவனங்களை தவிர்த்தல் நல்லது. ஆகையால் விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருப்பது அதன் கடன் தன்மை பரவாயில்லை என்பதை குறிக்கிறது.

 

சில நிறுவனங்களுக்கு கடன்-பங்கு விகிதம் பூஜ்யம் (Zero) ஆக இருக்கும். அப்படி இருக்கையில் அந்த நிறுவனத்துக்கு கடன் தன்மை ஏதுமில்லை என கொள்ளலாம். அதாவது  வரவும், செலவும் சரியாக இருக்கிறது போல…

 

நிறுவனத்துக்கு  தான் கடனேதும் இல்லையே, அப்புறம் என்ன பங்குகள் வாங்க வேண்டியது தானே என்கிறீர்களா ?  அவசரப்பட வேண்டாம். நிறுவனத்துக்கு கடன் இல்லை, சரி – கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளருக்கு சரியாக கொடுக்கிறதா, லாப வளர்ச்சி எப்படி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். முற்றிலும் கடன் இல்லை(Debt free stocks) என இயங்கும் நிறுவனங்கள் உண்டு. அப்படியென்றால் அவை கடனே வாங்கவில்லை என்று அர்த்தம் இல்லை. குறுகிய கால கடனை வாங்கி கட்டி முடிக்கலாம்; ஆனால் நீண்ட காலத்தில் அந்த நிறுவனத்திற்கு கடன் ஏதும் இல்லை.

கடனை பற்றி பேசும் போது கடன் தன்மை பற்றிய மற்றொரு விஷயம் உண்டு. ஒரு நிறுவனம் தனது கடனை வட்டியுடன் திரும்ப செலுத்துவதற்கான திறன் எவ்வாறு உள்ளது என்பதும் முக்கியம். அது தான் வட்டி செலுத்தும் விகிதம் மூலம் அறிவது.

 

Interest Coverage Ratio:

 

ஒரு நிறுவனம் தனது கடனுக்கான வட்டி செலவுகளை எவ்வளவு எளிதில் செலுத்த முடியும் என்பதை தீர்மானிக்க Interest Coverage விகிதம் பயன்படுகிறது. இதன் மூலம் அதன் வட்டி கடன் சுமையை அறியலாம்.

 

Interest Coverage Ratio (ICR)  = EBIT / Interest Expenses

 

*EBIT – Earnings Before Interest and Taxes

 

ஒரு  நிறுவனத்தின் குறிப்பிட்ட கால வருவாயை (வட்டி மற்றும் வரி நீங்கலாக) அந்த காலத்துடைய வட்டிச்செலவினால் வகுத்தால் கிடைப்பது. அதாவது நிறுவனம் தனது கடனை அடைக்குமா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வட்டி செலுத்தும் விகிதம் (ICR) அல்லது வட்டி எல்லை விகிதம் பொதுவாக ஒரு நிறுவனத்திற்கு 1.5 க்கு மேலாக இருந்தால் நல்லது. இதனால் ஒரு நிறுவனம் தனது கடன் சுமையை குறைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

 

உங்களுடைய வருவாய் ரூ. 1 ஆக இருந்து, கடனும் ரூ. 1 ஆக இருந்தால் உங்களால் வருவாயை கொண்டு கடனை அடைத்து முடிக்கலாம். கடன் ஒரு ரூபாய்க்கு மேல் இருந்தால் கஷ்டம் தான். அதனால் தான் பல நிறுவனங்கள் கடனை அடைக்க மேலும் கடனை வாங்குகிறது. சந்தையில் வளர்ச்சி கிடைத்தால் நன்று, இல்லையென்றால் திவால் தான் !

 

உதாரணத்திற்கு, Advanced Enzyme Technologies என்ற நிறுவனத்தை எடுத்து கொள்வோம். இந்த நிறுவனம் மருந்துகள் (Pharmaceuticals) துறையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ICR – 26.41 ஆக உள்ளது. தனது வட்டி செலுத்தும் தன்மை 26 மடங்கு அதிகம் உள்ளது. ரூ. 1 கடன் என்றால், அதனிடம் கடனை அடைப்பதற்காக 26 ரூபாய் உள்ளது. அதனால் இந்த நிறுவனத்திற்கு வாங்கும் கடனால் எந்த பாதிப்பும் இல்லை. சாமர்த்தியமாக கடனை கட்டி முடித்து விடும்.

 

நிறுவனத்தின் EBIT – ரூ. 133.12 கோடி  மற்றும் வட்டி செலவுகள் – ரூ. 5.04 கோடி.

 

ICR =  133.12 /  5.04 = 26.41 (Interest Coverage Ratio)

 

நினைவில் கொள்ளுங்கள்:

 

  • Debt to Equity Ratio ஐ நீண்ட காலத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். அதனால் ஆராயும் போது 5-10 வருட காலத்திற்கு தகவல்களை சேகரியுங்கள்.
  • கடன் சம்மந்தமான விவரங்களை அறிய, நிறுவனத்தின் Balance Sheet ஐ பார்க்கலாம்.
  • வட்டி எல்லை விகிதம் (ICR) 1.5 க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தை தவிர்ப்பது நல்லது. மதிப்பு 1.0 க்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படலாம்.
  • அதே நேரத்தில் இந்த ICR விகிதம் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களுக்கு ஒத்து போகாது. ஏனெனில் அவற்றின் வருமானம் கடன் வழங்களில் தான் பெரும்பாலும் உருவாக்கப்படும்.
  • Debt to Equity மற்றும் ICR ஒரு முக்கியமான கடன் சார்ந்த விகிதங்களாகும்.

 

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

How to update Aadhaar online for Mutual Funds ? (Aadhaar Linking)

 

பயோமெட்ரிக் (Biometric) மற்றும் மக்கள் தொகை தரவை அடிப்படையாக கொண்டு 12 இலக்க தனியுரிமை அடையாள எண்ணாக(12 Digit) உருவாக்கப்பட்டுள்ள ஆதார் (Aadhaar) இன்று ஒவ்வொரு தகவல் நடைமுறைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் உரிமை எண்ணாகவும் உள்ளது. நீங்கள் வங்கி கணக்கு, பான் அட்டை, பங்குச்சந்தை, பரஸ்பர நிதி என ஒவ்வொரு செயல்முறைக்கும் கணக்கு துவங்கும் போது ஆதார் என்பது கட்டாயம்.

 

வங்கிக்கணக்கு, கைபேசி எண்களுக்கான ஆதார் இணைப்பை நாம் பெரும்பாலும் நேரிடையாகவே பதிவு செய்திருப்போம். ஆனால் பெரும்பாலும் நாம் தவற விடுவது மற்றும் மறப்பது நமது பரஸ்பர நிதிக்கான இணைப்பை தான். நாம் பரஸ்பர நிதியில்(Mutual Funds) பொதுவாக மாதாந்திர முதலீடு என்று சொல்லப்படும் SIP (Systematic Investment plan) திட்டத்தை தான் தேர்ந்தெடுத்திருப்போம். இதன் மூலம் நமது வங்கிக்கணக்கில் இருந்து பரஸ்பர நிதிக்கு தானியங்கி சேவையாக பண பரிமாற்றம் நடைபெறும். இதன் காரணமாக நாம் பெரும்பாலும் பரஸ்பர நிதி சார்ந்த குறுஞ்செய்தி, மின்னஞ்சலை பார்க்க தவறி விடுவோம்.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஏற்கனவே பணமோசடி தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act -PMLA) Rules 2017 ன் படி பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனத்தை (முதலீடு செய்த நிறுவனம்) அணுகலாம் அல்லது இணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்(Communicate with Nearest branch or update online). இங்கே நாம் ஆன்லைனில் பதிவு செய்வது பற்றி பார்ப்போம்.

 

நினைவில் இருக்கட்டும், பரஸ்பர நிதியுடன் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி –  வரும் மார்ச் மாதம் 31,2018 (31st march, 2018).

 

பொதுவாக பரஸ்பர நிதி சார்ந்த உங்களின் தகவல்கள் பரஸ்பர நிதி வசம் பராமரிக்கப்படாது. அதனை RTA (Registrar and Transfer Agent) போன்ற அமைப்புகள் தான் பராமரித்து தகவல்களை சேமித்து வைக்கும். இணையத்திலும் அது போன்ற அமைப்புகள் தான் உங்களுடைய ஆதார் தகவல்களை பெறுகிறது. RTA ஆக தற்போது CAMS, UTI, Karvy, Franklin பரஸ்பர நிதிக்கு உள்ளன. அவற்றின் இணைய தளத்தில் நாம் நமக்கான ஆதார் தகவலை பதிவு செய்யலாம்.

 

CAMS Online

 

கீழே  கொடுக்கப்பட்ட இணைய  தளத்தில் நீங்கள் உங்களுக்கான  பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைக்கலாம். CAMS அமைப்பு பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனத்துக்கான தகவல்களை பராமரிக்கிறது. ( SBI Mutual Fund, ICICI Prudential, Birla Sunlife, HDFC, DSP blackrock, IDFC, IIFL, PPFAS, Tata mutual fund, Kotak, HSBC, L and T, Shriram, Mahindra)

 

CAMS – Aadhaar Linking

CAMS Aadhaar linking

 

 

CAMS இணைய தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் பான் எண் (PAN), பரஸ்பர நிதி கணக்கு (Folio Account number), மற்றும் ஆதார் எண்ணை (Aadhaar) உள்ளீடு செய்யவும். உங்களுக்கான சந்தேகங்களையும் நீங்கள் அதே பக்கத்தில் அறியலாம்.

 

FAQ on Aadhaar Linking process – CAMS

 

Karvy Computershare:

 

கார்வி நிறுவனமும் பரஸ்பர நிதிக்கான தகவல்களை பராமரிக்கிறது. கார்வி நிறுவனம் கையாளும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் – Axis mutual fund, UTI, Canara robeco, Mirae asset, Motilal oswal, Reliance, Quantum, BOI Axa, Invesco, DHFL மற்றும் இன்னும் பிற நிறுவனங்கள். அதற்கான பதிவை செய்ய கீழ்கண்ட இணைய தளத்தை பாருங்கள்.

 

Karvy – Link your Aadhaar with mutual fund

 

Karvy Aadhaar linking

 

மேலே நாம் சொன்ன இரு தளத்திலும் உங்கள் பரஸ்பர நிதிக்கான ஆதாரை பதிவு செய்வதுடன், உங்கள் நடப்பு நிலையையும் (Aadhaar linking status for mutual fund) அதே தளத்தில் அறிந்து கொள்ளும் வசதி உண்டு. நாம் சொன்ன இரு தளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது உங்கள் பரஸ்பர நிதிக்கான நிறுவன பெயர் இல்லையென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பதிவின் போது உங்களுக்கான OTP கைபேசியில் வரலாம். அதனால், பரஸ்பர நிதியில் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியம்.

 

ஆதார் இணைப்பு – பரஸ்பர நிதி சம்மந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு, வர்த்தக மதுரைக்கு நீங்கள் மின்னஞ்சல் (contact at varthagamadurai.com) அனுப்பலாம்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை.

 

www.varthagamadurai.com

 

  

 

இ – வாலட் பயன்பாடு – கே. ஒய். சி. கட்டாயம்

இ – வாலட் பயன்பாடு  – கே. ஒய். சி. கட்டாயம்

KYC Mandatory for Digital Wallet accounts

பண மதிப்பிழப்புக்கு (Demonetisation) பிறகு, இ – வாலட் (E-Wallet) என்ற  மின்னணு சாதனம் சார்ந்த பணப்பை கணக்குகள் இந்தியாவில் அதிகமானது. அதனை தொடர்ந்து வாலட் மூலம் பண பரிவர்த்தனைகள்  எளிமையாக்கப்பட்டது. ஒருவர் தனது ஸ்மார்ட் போனை கொண்டு இணைய உதவியுடன் எந்தவொரு பொருட்களையும் வாங்குவது எளிதானது.

 

இ – வாலட் முறையால் கணினி வழியான பரிவர்த்தனைகளை விட ஸ்மார்ட் போன் மூலமான வர்த்தகம் அதிகமானது. டிஜிட்டல் வாலட் கணக்குகளுக்கு என  இதுவரை எந்த விதிமுறையும் இல்லாமல் இருந்து வந்தது. வாலட் கணக்கை தொடங்குவதற்கு உங்களுடைய கைபேசி எண் மட்டும் போதுமானதாக இருந்தது. இந்நிலையில் பரிவர்த்தனைகளின் விகிதம்  அதிகரித்ததனால், பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) ‘ இ – வாலட்’‘ களுக்கு KYC (Know your customer / client) என்னும் வாடிக்கையாளரை அறியும் ஒப்பந்தத்தை கட்டாயமாக்க முடிவு செய்தது. இதற்கான கால கெடு பிப்ரவரி 28 ம் தேதியுடன் முடிந்து விட்டதாகவும் அறிவித்துள்ளது.

 

Get up to Rs.1000 cashback! Link your bank account and do your first money transfer on #PhonePe.

 

பிப்ரவரி 28, 2018 க்கு பிறகு இ – வாலட் களை பயன்படுத்துபவர்கள் கட்டாயம் KYC நடைமுறைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சமர்பிக்காதவர்களுக்காக, அவர்கள் வாலட் கணக்கில் உள்ள தொகைக்கு இணைய ஷாப்பிங் (E-commerce) செய்து கொள்ளலாம் அல்லது ஒரே பரிவர்த்தனையில் தங்கள் வங்கிக்கு பணத்தை மாற்றி கொள்ளலாம்(Transfer money to bank account) என கூறியுள்ளது.

 

எனவே இனி மேல், வாலட் கணக்குகள் மற்றும் அதன் பண பரிவர்த்தனைகளுக்கு KYC ஒப்பந்தம் அவசியமாகும். இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் இனி தங்கள்  வங்கி கணக்கிலிருந்து வாலட் கணக்குக்கு பணத்தை மாற்ற முடியாது. நாளுக்கு நாள் பெருகி வரும் இணைய வணிகத்தால், இணைய வழி பரிவர்த்தனைகளின் மதிப்பு வரும் 2023 ல் 1 லட்சம் கோடி ( 1 Trillion) அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த டிசம்பர் 2017 ல் வாலட் மூலமான பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 12,500 கோடி என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதுவே பண மதிப்பிழப்புக்கு முன்னர் ரூ. 3385 கோடியாக இருந்தது. வாலட் சந்தையில் முதலிடத்தை Paytm தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Mobikwik, PhonePe, Tez, Amazon pay, Oxigen என பல வாலட் சேவைகள் உள்ளன. தற்போது வாட்ஸ் அப் நிறுவனமும் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

இருப்பினும் இந்தியாவை பொறுத்தவரை வாலட் சேவை நிறுவனங்கள் இன்னும் லாபம் ஈட்டியதாக தெரியவில்லை. சிறு தொழில்முனைவோர்களிடமும் இன்னும் இந்த சேவை முழுவதுமாக பரவலாக்கப்படவில்லை. எனவே KYC என்னும் நடைமுறை வங்கி கணக்கை போலவே, டிஜிட்டல் வாலட் களுக்கும் பொருந்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

முதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0

முதலீடு மற்றும் பங்குகள் மீதான  வருமானம் – வகுப்பு  8.0

Return on Investment – Return on Equity (ROE), Return on Assets (ROA) Ratios

 

சென்ற வகுப்பில் ஒரு நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை  பற்றி பார்த்தோம். நிறுவனத்தின்  லாபம் அதனை அதன் துறை சார்ந்த தொழிலில்  நிலைத்து  நிற்க  துணைபுரிகிறது. நிறுவனத்தில்  உள்ளவர்களும்  பொருளாதாரத்தில்  நன்கு  வளர்ச்சியடைவார்கள். ஆனால்  நாம்  ஒரு  முதலீட்டாளராக நமக்கும்  அந்த  லாபத்தில்  பலன்  கிடைக்க  வேண்டுமே, அது  தானே  நியாயம். நாம்  ஒன்றும்  அந்த  நிறுவனத்தில்  வேலை  செய்யவில்லை; நிறுவனத்தை  தொடங்கவும் இல்லை. ஆனால்  ஒரு  முதலீட்டாளராக நமக்கும்  லாபத்தில்  உரிமை  உண்டு. நாம் நம்  பணத்தை  முதலீடு  செய்திருக்கிறோம்.

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, ஒரு நிறுவனத்தின் முதலீடு என்பது நிறுவனர்கள் மற்றும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களிடம் திரட்டிய பணமும் ஆகும். அதனால் தான் முதலீடு என்பது பங்குகளாக கணக்கிடப்படுகிறது. Earning Per Share என்ற  ஒரு  தலைப்பை  பார்த்தோம்  அல்லவா, அது  நமது  வருமானத்தை  தான்  சொல்கிறது. நம்மிடம்  உள்ள  ஒவ்வொரு  பங்குக்கும், அந்த  நிறுவனம்  எவ்வளவு  வருமானம்  சம்பாதித்து கொண்டிருக்கிறது. அவற்றில்  நமக்கு  எவ்வளவு  தொகையை  கையில்  கொடுத்திருக்கிறது என்பது  தான். எந்த  ஒரு  முதலீடும்  அதன்  லாபம்  (அ) வருமானத்தினால்  தான்  ஈர்க்கப்படும். நாம்  வங்கியில்  ரூ. 1 லட்சத்தை  வைப்பு  தொகையாக  வைத்திருக்கிறோம்  எனில், அதனை  வெறுமென நாம் வைக்க  முடியாது. நமது  எதிர்பார்ப்பின்  பலன் – வங்கியில்  நமது  பணம்  பத்திரமாக  இருக்கிறது  மற்றும் நமது வைப்பு தொகைக்கு  ஏதேனும்  வட்டி  வருமானம்  கிடைக்கும் என்பதால்  தான். அதே நேரத்தில் நம் வங்கி சேமிப்பும் பாதுகாப்பு தான் என கூறி விட முடியாது. Deposit Insurance and Credit Guarantee Corporation – DICGC  எனும்  ஒப்பந்தம் உள்ளது. அதன்  அடிப்படையில் தான்  நமது  பணத்திற்கு  பாதுகாப்பு வழங்கப்படும்.

 

ஒரு  பங்கு  முதலீட்டாளராக  நமக்கு, ஒரு  நிறுவனம்  அதன்  லாபத்தில் ஒரு  தொகையை  பகிர்ந்தளிக்கிறது. பகிர்ந்தளித்தல் என்றால்  அது நமக்கான  லாபத்தை  உடனே  கொடுத்து விட போவதில்லை. அந்த லாபம்  நமக்கு  பல  நிலைகளாக  வந்தடையும். ஒரு  நிறுவனத்தின்  லாபம் – பங்குகளின்  விலை  அதிகரிப்பு(Price Increase), போனஸ் பங்குகள்(Bonus Shares), ஈவுத்தொகை வருமானம்(Dividend), மேற்கொண்டு தொழில் வளர்ச்சிக்கு(Growth)  என பல நிலைகளாக பரிமாறப்படும்.

 

உதாரணத்திற்கு, நீங்கள் TVS motor நிறுவனத்தில் 100 பங்குகள் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் வாங்கும் போது இருக்கும் விலையை விட, 5 வருடங்களுக்கு பிறகு அதன் விலை ஏற்றமடைந்திருக்கும். இது அந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சியினால் இருக்கலாம். நினைவில் வைத்திருங்கள் – கடன் அதிகமாக இருக்கும் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகமாகலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. நீண்ட காலத்தில் வளர்ச்சியடையும் நிறுவனங்களின் பங்கு விலையே சாதகமாகும். அதனால் தான் முதல் வகுப்பின் தொடக்கத்திலிருந்து நான் சொல்கிறேன், பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், அதனை நீண்ட காலமாக அணுகுங்கள்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஒரு முதலீட்டின் மீதான வருமானம் (Return on Investment – ROI) என்பது ஒரு நிறுவனத்தின் லாபத்தை நமது பங்குடன் ஒப்பிடுவதற்கும், மற்ற முதலீடுகளின் திறனை பார்ப்பதற்கும் பயன்படுகிறது. வங்கி வட்டி வருமானத்தை காட்டிலும் அதிகமான வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறோம். வங்கியிலேயே நாம் எதிர்பார்க்கும் வருமானம் கிடைத்து விட்டால் நமக்கெதுக்கு பங்குச்சந்தை, 🙂 நாம் எதிர்பார்க்கும் வருமானம் என்பது பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும்.

ROI  =  Net Profit / Cost of Investment

 

நாம்  TVS motor நிறுவனத்தில்  வாங்கிய  100 பங்குகளை (வாங்கிய  விலை Rs. 100 X 100 Shares), ஐந்து  வருடங்களுக்கு  பிறகு  ரூ. 120 ( 120 X  100) என்ற  விலையில்  விற்கிறோம். இப்போது  நம்  முதலீடு  மீதான  வருமானம்,

 

ROI  = 2000 / 10000  =  0.2  X  100  =  20 %

 

நம்  முதலீட்டின்  மீதான  வருமானம்  20 % ஐ தந்துள்ளது. இது  ஒன்றும்  பெரிய சூத்திரமல்ல. நமது  ஊரில்  கொய்யா பழம் விற்கும் பாட்டி கதை போல  தான். இங்கே  நிகர லாபம் (Net Profit) என்பது  ஒரு  நிறுவனத்தின்  வரிகள், வட்டி  செலுத்துதல்  மற்றும்  கட்டணங்கள்  போக  தான்.

 

Return on Equity – ROE:

 

ஒரு  நிறுவனத்தின்  நிகர வருவாயின்  அளவு  அதன்  மொத்த  பங்குதாரர்களின்  விகிதத்தை  சாரும். பங்குதாரர்கள்  முதலீடு  செய்துள்ள  ஒரு  நிறுவனம்  அவர்களின்  முதலீட்டை  கொண்டு  எவ்வளவு  லாபம் சம்பாதித்தது என்பதை  அறிவது  Return on Equity.

 

ROE  = Net Income / Shareholder’s Equity

 

நிறுவனத்தின்  நிகர  லாபத்தை  பங்குதாரர்களின்  முதலீட்டில்  வகுத்தால்  கிடைப்பது  ROE ஆகும்.

 

உதாரணத்திற்கு,

 

நம்  தேநீர்  நண்பர் தொழிலில்  சென்ற வருட லாபம்  ரூ. 10 லட்சம்  என  கொள்வோம். அதே  வருடம், பங்குதாரர்கள் மேற்கொண்ட  மொத்த முதலீடு (நம்மையும்  சேர்த்து) – ரூ. 20 லட்சம்  என  வைத்து  கொள்வோம். இப்போது பங்கு  முதலீட்டின்  மீதான  வருமானம்,

 

ROE = 10,00,000 / 20,00,000  =  0.5 X 100  =   50 %

 

ஆக, நம்  தேநீர்  நண்பரின்  தொழில் 50 % வருமானத்தை  பங்குகள்  மீது  கொடுத்துள்ளது. அதாவது  நாம்  முதலீடு  செய்த  ஒவ்வொரு  ரூபாய்க்கும்  50 பைசா  லாபம்  தந்துள்ளது. ( Rs. 0.50 /- of profit for every Rupee of Shareholder’s Equity)

 

Return on Equity ஐ  Return on Networth (RONW) என  கூறுவதும் உண்டு.  பொதுவாக  ROI என்பது  நம் முதலீட்டின்  மீதான  வருமானத்தை தெரிவிக்கிறது. ROE என்பது பங்குகள்  மீதான  வருமானத்தை சொல்வதோடு, ஒரு  நிறுவனத்தின்  செயல்திறனையும்  கண்டறிகிறது. அதிக  ROE உள்ள  நிறுவனங்கள் அதிக  லாபம்  சம்பாதிப்பதோடு  அல்லாமல், புதிய முதலீட்டையும்  எதிர்காலத்தில்  பெற  வேண்டிய  அவசியமில்லை  என்பதனை காட்டுகிறது. அதனால் அதிக ROE விகிதம் உள்ள  நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள்  வாங்கும்  பங்குக்கான  ROE விகிதம் பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி விகிதத்தை சேர்த்த அளவை விட அதிகமாக இருக்குமாறு (Morethan Inflation and Bond Interest rates)  பார்த்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, வங்கி வட்டி  விகிதம் – 7 % மற்றும் பணவீக்க விகிதம் – 6 % என இருந்தால் (7 + 6) ROE  13 % விகிதத்தை கடந்து இருக்கும்படி பங்குகளை தேர்ந்தெடுங்கள்.

 

Return on Asset (ROA):

 

ROA –  ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களில் அதன் ஒரு குறிப்பிட்ட காலத்தின் லாபம்,  எவ்வளவு சதவிகிதத்தை கொண்டுள்ளது.

 

ROA   = Net Income / Total Assets

 

XYZ நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய  லாபம் – ரூ. 2 லட்சம் (வரி கட்டியது போக) மற்றும் அந்த காலத்தில் அதன் மொத்த சொத்து மதிப்பு – ரூ. 10 லட்சம்.

 

ROA = 2,00,000 / 10,00,000 = 0.2 X 100  =  20 %

 

XYZ நிறுவனத்தின் கடந்தாண்டு லாபம் அதன் மொத்த சொத்து மதிப்பில் 20 % ஆகும். அதிக ROA விகிதம் ஒரு நிறுவனம் நன்றாக வளர்ச்சியடைந்து வருவதை காட்டுகிறது. அதே நேரத்தில் ROA விகிதம் ஒரு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை பற்றி சொல்லவில்லை. அதனால் முதலீட்டாளர்களான நாம் நிறுவனத்தின் கடன் சுமையையும் பார்க்க வேண்டும். ROA ஐ மட்டுமே ஒரு நிலையாக எடுத்து கொண்டு பங்கு வாங்குவது  கூடாது. மற்ற அம்சங்களையும் ஆராய்ந்து விட்டு தான் பங்குகளை கவனிக்க வேண்டும்.

 

நினைவில்  கொள்ளுங்கள்:

 

  • ROI, ROE, ROA – இம்மூன்றும் கடந்த கால வருமானம்(Past Earnings) அல்லது லாபத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என சொல்லப்படவில்லை. அதனால் ஒரு பங்கின் கடந்த 5 – 10 வருட கால லாபத்துடன் ஒப்பிடுவது நன்று.

 

  • சில பங்குகளுக்கு ROE விகிதம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ காட்டப்படும். அந்த சமயத்தில், நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையை(Cash flow Statement) ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கலாம்.

 

  • பெரும்பாலான சமயங்களில், கடன் அதிகம் உள்ள நிறுவனத்திற்கும் ROE விகிதம் அதிகமாக இருக்கலாம். அதனால் கடன் விகிதத்தை (Debt-Equity) சரிபார்த்த பின்னரே ROE விகிதத்தை கவனிக்கலாம்.

 

  • பங்குதாரர்கள் எண்ணிக்கை குறைவு, நிறுவனமே பங்குகளை திரும்ப பெற்று கொள்ளுதல் (Buyback) ஆகியவற்றாலும் ROE விகிதம் செயற்கையாக அதிகரிக்கலாம்.

 

  • Return on Assets விகிதத்தை, துறைகளின் மற்ற நிறுவனத்துடன் ஒப்பிட்டு பார்த்து பங்குகளை வாங்குவது சிறந்தது.

 

அடுத்த வகுப்பில் நிறுவனத்தின் கடன் தன்மை(Debt to Equity) மற்றும் வட்டி செலுத்தும் விகிதத்தை(Interest coverage Ratio) பார்ப்போம்.

 

சென்செக்ஸ் பங்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இனி இல்லை – மும்பை பங்குச்சந்தை

சென்செக்ஸ் பங்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இனி இல்லை – மும்பை பங்குச்சந்தை

No Transaction charges for BSE SENSEX 30 Stocks

இந்தியாவில்  பிரபலமான பங்குச்சந்தையாக தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் திகழ்கின்றன. தேசிய பங்குச்சந்தை ‘Nifty 50’ என்ற குறியீட்டாலும், மும்பை பங்குச்சந்தை ‘Sensex 30’ என்ற குறியீடு மூலமும் சந்தையில் வர்த்தகமாகின்றன. சந்தை மதிப்பு அதிகமாக உள்ள  நிறுவனங்களே இந்த Nifty 50 நிறுவனங்களாகவும், மும்பை BSE Sensex 30 நிறுவனங்களாகவும் அமைகின்றன.

 

பங்குச்சந்தையில் பங்கு வாங்குவதும், விற்பதும் பங்குத்தரகர் வாயிலாகவே நடைபெறுகிறது. இதற்கு தரகு நிறுவனங்கள் தங்களின் தரகு கட்டணம் போக, பங்குச்சந்தை பரிவர்த்தனை கட்டணத்தையும் வசூலிக்கிறது. இந்த பரிவர்த்தனை கட்டணம் (Transaction Charges) அந்தந்த பங்குச்சந்தை அமைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இது போக பங்கு பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax -STT), முத்திரை வரி(Stamp Duty), வருவாய் கட்டணங்கள் (SEBI Turnover charges) என பங்கு வர்த்தகத்திற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

தேசிய பங்குச்சந்தைக்கும், மும்பை பங்குச்சந்தைக்குமான பரிவர்த்தனை கட்டணங்கள் வெவ்வேறாக அமையும். பொதுவாக மும்பை பங்குச்சந்தையை விட தேசிய பங்குச்சந்தையில் பரிவர்த்தனை கட்டணங்கள் சற்று அதிகமாகும். அதே நேரத்தில் மும்பை சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையை காட்டிலும் பங்கு நிறுவனங்கள் அதிகமாக இருக்கும். இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை தனது பங்குகளுக்கான பரிவர்த்தனை கட்டணத்தில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

 

அதாவது, மும்பை சென்செக்ஸ் (BSE Sensex 30 stocks) குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், வரும் மார்ச் 12 முதல் (March 12, 2018) சென்செக்ஸ் 30 நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

 

இந்த சலுகை சில்லரை முதலீட்டாளரை கவரும் வகையிலும், சந்தை மதிப்பு அதிகமுள்ள நிறுவனங்களில் வர்த்தகம் அதிகம் நடைபெறும் எனவும் மும்பை சந்தை கூறியுள்ளது.  மும்பை பங்குச்சந்தையில் தற்போதுள்ள பரிவர்த்தனை கட்டணம் – 50 பைசாவிலிருந்து ரூ. 1.50 வரை (0.5 –  1.50) உள்ளது. 1 லட்சத்திற்கும் குறைவான பங்கு வர்த்தகத்திற்கு ரூ. 1.50 ம், 20 லட்சத்திற்கு மேற்பட்ட பங்கு வர்த்தகத்திற்கு 50 பைசாவாகவும் பரிவர்த்தனை கட்டணம் உள்ளது.

 

BSE Sensex Transaction charges

 

 

இந்த சலுகையால், மும்பை பங்குச்சந்தைக்கு எவ்வளவு இழப்பு ஏற்படலாம் என்ற தகவல் சொல்லப்படவில்லை. இருப்பினும்  குறைந்த அளவிலான பங்குகளை வாங்கி முதலீடு செய்வோருக்கு இந்த அறிவிப்பினால் பலன் ஏதுமில்லை. அதே சமயத்தில், தினசரி பங்கு வர்த்தகத்தில் (Day Trading) ஈடுபடுவோருக்கு சாதகமாக இருக்கும்.

 

BSE – மும்பை பங்குச்சந்தையின் மற்ற கட்டணங்கள் பற்றி அறிய…

 

Equity Segment Transaction Fees – List

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

இளம் தொழில்முனைவோராக கற்று கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

இளம்  தொழில்முனைவோராக கற்று  கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

10 Smart Ideas to learn as Young Entrepreneurs

நேற்று (25.02.2018)  மதுரை  மடீட்சியா அரங்கில், Youngs Indians (YI) – Confederation of Indian Industry(CII)  மற்றும்  Native Lead Foundation சார்பாக ஆரம்பம் (Aarambam – Startup Contest) 4 வது பதிப்பு (4th Edition) நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில் Native Lead Foundation நிறுவனர்  திரு. சிவராஜா  ராமநாதன் (Sivarajah Ramanathan), Thyrocare Technologies நிறுவனத்தின் நிர்வாக  இயக்குனர்  மற்றும்  நிறுவனர்  Dr. வேலுமணி (Dr. Velumani) அவர்கள், மற்றும்  YI – CII சார்பானவர்களும்  கலந்து  கொண்டனர்.

 

புதிய  தொழில்முனைவோருக்கான  தேடலும், அவர்களுக்கான  முதலீட்டு  வாய்ப்புகள்  பற்றி  பேசப்பட்டது. புதிய  சிந்தனைகள்  கொண்ட இளம்  தலைமுறையினர்  எவ்வாறு  அவற்றை  தொழிலாகவும், சமுதாயத்திற்கு  பயன்படும்படியும்  மாற்றுவதற்கான  ஆலோசனைகள்  கூறப்பட்டன.

 

இளம் தொழில்முனைவோராக  கடைபிடிக்க மற்றும்  கற்று  கொள்ள  வேண்டிய  அடிப்படை  சிந்தனைகள்  பற்றி  Thyrocare நிறுவனத்தின்  நிறுவனர்  டாக்டர்  வேலுமணி அவர்கள்  பேசும்  போது ,

( Read this post after the advertisement… )

 

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

  • ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது, அதனை பூஜ்யத்திலிருந்து தொடங்குங்கள் (Start from Zero). தொழிலை பற்றிய அறிவு, தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும்.

 

  • எப்போதும் எளிமையாக (Be Frugality)  இருக்க பழகுங்கள். அது தான் உங்களை ஒரு சிறந்த தொழில்முனைவோராக காட்டும்.

 

  • ரிஸ்க் (Risk – Reward) எடுக்க தயாராகுங்கள்; உங்கள் திடமான ரிஸ்க் உங்களுக்கு தித்திப்பான பலனை கொடுக்கும்.

 

  • விவாதம், ஆலோசனை மற்றும் முடிவெடுத்தல் (Discuss vs Decision Making) என வரும்பொழுது, எப்போதும் முடிவெடுக்க முயலுங்கள். விவாதம் ஒரு நல்ல முடிவை தராது. முடிவெடுங்கள், அந்த முடிவை நல்ல பயனாக மாற்றுங்கள் (No one decision is better).

 

  • தொழிலில் தவறு (Mistakes) என்பது ஒரு பெரிய குற்றமில்லை. தவறு செய்தால் தான் நீங்கள் தொழிலை சரியாக அணுகுகிறீர்கள் என அர்த்தம். தவறு செய்தால் மட்டுமே நீங்கள் தொழிலில் வெற்றியடைய முடியும்.

 

  • சொந்த ஊரில் தொழில் செய்வதை விட, தொழில் வாய்ப்பு அதிகமுள்ள சூழ்நிலையை தேர்வு செய்யுங்கள் . வீட்டை விட்டு வெளியே வர உங்கள் மனதுக்கு சொல்லுங்கள். மிகப்பெரிய வெற்றியடைய நீங்கள் மாற்றத்திற்கும் தயாராக வேண்டும் (Be out of Comfort Zone).

 

  • உங்கள் தொழில் மற்றும் சிந்தனைகளுக்கேற்ற நண்பர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் பால்ய நண்பர்கள் என்பதற்காக நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை( Choose Good contacts and friends).

 

  • உங்கள் நேரத்தை வீணடிக்கும் நபர்களிடமிருந்து விலகி செல்லுங்கள் (Avoid not related to you).

 

  • நீங்கள் ஆரம்பிக்கும்  தொழிலில் ஏழை மற்றும் அனுபவம் ஏதும்  இல்லாதவருக்கு  வாய்ப்பு  கொடுங்கள். அவர்களால் தான்  உங்களுக்காக  உண்மையாக  உழைக்க முடியும் (Employment for Poor and Freshers). நீங்கள்  ஒரு தொழிலில்  வெற்றி வேண்டுமென  நினைத்தால், ஒரு முதலாளியிடம் எந்த  சம்பளமும் வாங்காமல், கற்றலுக்கு  மட்டுமே  முக்கியத்துவம்  கொடுங்கள். அது  உங்களை  பெரும் முதலாளியாக்கும்(Learn to earn).

 

  • ஏற்கனவே  இருக்கும்  வேலையை விட்டு  விட்டு நீங்கள்  தொழில் செய்ய விரும்பினால், தொழிலுக்கு  தேவையான முதலீட்டை முன்னரே  சேமியுங்கள் (Create Emergency fund).

 

  • தொழில் ஆரம்பத்தில்  கடன்  எதுவும்  அதிகம் பெற  வேண்டாம். ஏற்கனவே  உங்களுக்கு  கடன்  இருந்தால், அதனை அடைத்து  விட்டு தொழில் தொடங்குவது  நல்லது (No Debt – No EMI).

 

இரண்டாம் தொழில்முனைவோர்களுக்கு (Second Generation Entrepreneurs) பெற்றோர் கற்று கொடுக்க  வேண்டியது…

 

  • உங்கள்  பிள்ளைகளுக்கு  எளிமையாக  வாழ (Frugality)  கற்று  கொடுங்கள். ஆடம்பரம்  வேண்டாம்.

 

  • ரிஸ்க் எடுக்க சொல்லி  கொடுங்கள். தவறுகளிலிருந்து பாடம்  கற்று கொடுங்கள்(Risk taking ability).

 

  • அவர்களுக்கு  உங்களின் தொழில் ஆலோசனை எதுவும்  தேவையில்லை (Don’t advise). உங்கள்  பிள்ளைகளை அவர்களாகவே  சிந்திக்க  கூறுங்கள்.

 

  • பிள்ளைகளுக்கு  சேமிப்பதின் அவசியத்தை சொல்லுங்கள் (Ask them to save).

 

  • உறவினர்கள் என்ன  நினைப்பார்கள்  என்ற  கவலை  வேண்டாம்(Avoid Neighborhoods words). உங்கள் குழந்தைகளை வெளி உலகுக்கு செல்ல அனுமதியுங்கள். வாய்ப்புகள் வெளியே  காத்திருக்கிறது (Don’t being Homesick).

 

மேலும் டாக்டர் வேலுமணி கூறும் போது, “ பொதுவாக ஏழையாக பிறந்தவர்கள் தான் பின்னாளில் பணக்காரராக மாறுகிறார்; ஒரு பணக்காரர் தான் பின்னாளில் ஏழையாக உள்ளார். இரவும், பகலும் போல இதுவும் நடக்கும். அதனால் ஏழையாக உள்ளோருக்கு வாய்ப்புகள் எப்போதும் காத்திருக்கிறது. விடா முயற்சியே வெற்றியின் கல்” எனவும் கூறினார்.

 

“ If you are born as poor, you have a 100 % chance of being  Rich “

 

தொழில் செய்வதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. ஆனால் நாம் நம் தொழில் சார்ந்த நபர்களுடன் தோழமை கொள்கிறோமா என்பதே இங்கு வெற்றிக்கான விடை. நாம் மேலே சொன்ன பத்து சிந்தனைகளை உங்கள் வாழ்விலும் பொருத்தி பாருங்கள். உங்கள் தொழிலிலும் வெற்றி நிச்சயம்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Sales and Profit – வகுப்பு 7.0

Sales and Profit – வகுப்பு 7.0

Fundamental Analysis – Factors – Sales & Profit

 

நாம் சென்ற வகுப்பில் Earning per share (EPS)  and Book Value  பற்றி பார்த்தோம். இந்த வகுப்பில் நாம் பார்க்க போவது ஒரு நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை பற்றி அலச போகிறோம். அதற்கு முன், சென்ற வகுப்பின் காரணிகளை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்துவது என்பதை பார்ப்போம்.

 

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை நடைமுறையில் தெரிந்து கொள்ள இன்று  இணையத்தில் நிறைய தளங்கள் வந்து விட்டன. பங்குச்சந்தை அமைப்புகளும் (Stock Exchanges) அதற்கான புள்ளிவிவரங்களை தினமும் பதிவு செய்கின்றன. பங்குத்தரகர்களும் தங்களது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அது போன்ற விவரங்களை தருகின்றன. இருப்பினும் சில தளங்கள் இந்த காரணிகளை அலசுவதற்காக எளிமையான முறையில் செயல்படுத்துகிறது. இந்த காரணிகள் அலசும் முறையை “Stock Screening” என்பர். Stock Screening என்பது ஒரு பங்கு அல்லது நிறுவனத்தின் அடிப்படை காரணிகளை ஆராய்வது. அதாவது ஸ்கேனிங் செய்வது போல.

 

Stock Screening அறிய நிறைய தளங்கள் இருப்பினும், நான் உங்களுக்காக ஒரு எளிமையான தளத்தினை பரிந்துரைக்கிறேன். ஆனால் இந்த தளத்திற்கும், வர்த்தக மதுரைக்கும் எவ்வித சம்மந்தமில்லை. நமக்கான புள்ளி விவரங்கள் மற்றும் காரணிகளை அலசுவதற்கே நாம் பயன்படுத்த போகிறோம்.

 

Screener.in  (https://www.screener.in)

 

இந்த தளம் பங்கு சார்ந்த ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், காரணிகள் போன்ற விவரங்களை இலவசமாக பதிவிடுகின்றன. நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் சார்ந்த தகவல்களை நீங்கள் மற்ற தளத்திலும் பார்வையிடலாம்.

 

நாம் சென்ற வகுப்பின் மூலம் கற்ற சில காரணிகளின் மதிப்பீடுகள் (See the below image),

 

 

EPS and book value Analysis

 

உதாரணத்திற்கு:

 

Screener.in  தளத்திற்கு செல்லுங்கள். முடிந்தால் இலவசமாக ஒரு புதிய கணக்கினை தொடங்குங்கள். Screener தளத்தில் நீங்கள் உங்கள் கணக்கை தொடங்கும்போது மட்டுமே, அவர்கள் அதிகப்படியான புள்ளிவிவரங்களை உங்களுக்கு தெரிவிப்பார்கள். வெறும் நிதி அறிக்கைகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்றால் கணக்கு ஆரம்பித்தல் அவசியமில்லை. இப்போது நாம் அலச போகும் நிறுவனம் – TVS Motor Company Ltd

 

( Read this post after the advertisement… )

 

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

Enter a Company (Search) ல் TVS motor என பதிவு செய்யுங்கள். இப்போது அந்த நிறுவனத்தின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். TVS motor நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Cap), சந்தை விலை (Current price), புத்தக மதிப்பு (Book value), P/E, EPS போன்ற தகவல்களும் காண்பிக்கப்படும்.

 

இப்போது Annual Results பகுதிக்கு செல்லுங்கள். இங்கே Net Profit என்ற வரிசையில் கடைசியாக உள்ள TTM பத்தியில் (Column) கிடைக்கும் எண்களை குறித்து வைத்து கொள்ளுங்கள். இவை கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும். நான் இங்கே எடுத்து கொண்ட TTM – Net profit மதிப்பு ரூ. 623.75 கோடி ரூபாய். TTM என்றால் Trailing Twelve Months. கடந்த 12 மாத காலத்தில் TVS motor நிறுவனத்தின் லாபம் தான் அது.

 

மறுபடியும் மேல் பக்கத்திற்கு வாருங்கள். இங்கே நீங்கள் Number of equity shares என்ற மதிப்பை பார்க்கலாம். இந்த மதிப்பு லட்சங்கள் அல்லது கோடிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். நான் எடுத்த Number of equity shares – 47.51.

 

EPS = Net Profit / Total Number of shares

 

623.75 / 47.51 =  Rs. 13.13

 

இந்த EPS மதிப்பையும் நாம் மேல் பக்கத்தில் சரிபார்த்து கொள்ளலாம். இதே போன்று நாம் கடந்த கால ( 5 – 10 Years) லாபங்கள் மற்றும் EPS அறியலாம்.

 

Calculate P/E and P/Bv:

 

இதே போல, P/E மதிப்பையும் கிடைத்த தகவல்களை கொண்டு கண்டறியுங்கள்.

 

P/E  = Current Price / EPS

 

Current price = Rs. 631.40 (dated 22.02.2018)

EPS = 13.13

 

P/E = 631.40 / 13.13 = 48.09

 

——————————————–

 

P/Bv = Current Price / Book Value

 

Book Value = Rs. 61.15 (dated 22.02.2018)

 

P/Bv = 631.40 / 61.15  =  10.33

 

TVS motor நிறுவனத்தின் சந்தை விலை அதன் புத்தக மதிப்பை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக உள்ளது.  இதனை போன்றே PEG மதிப்பையும் நாம் கண்டறியலாம்.

 

PEG = (P/E) / EPS Growth  = 3.24

 

Screener.in ல் நாம் மேற்கொண்டு மற்ற போட்டி நிறுவனத்துடன் Peer Comparison பகுதியில் பார்த்து ஒப்பிடவும் செய்யலாம்.

 

சரி, நாம் இந்த வகுப்புக்கான விஷயங்களை பார்ப்போம்.

 

விற்பனை (Sales and Operating Profit Margin):

 

ஒரு நிறுவனத்தின் வருவாய் என்பது பெரும்பாலும் அதன் விற்பனையை சார்ந்தே இருக்கும். விற்பனையின் மூலம் என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பது,  உற்பத்தியாளர்களிடம் பொருளை பெற்று வணிகம் செய்வது அல்லது ஒரு சேவையை அளிப்பது என இருக்கலாம். விற்பனை இல்லாமல் ஒரு தொழில் சிறந்து விளங்க முடியாது. அதனால் ஒரு நிறுவனத்தின் விற்பனை தான் அந்த தொழிலின் பிரம்மாஸ்திரம். இதற்காக தான் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தங்களது பொருட்களை விளம்பரம் செய்கின்றன.

 

விற்பனையை Sales அல்லது Operating என சொல்லலாம். விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாயை Sales Profit or Operating Profit எனலாம்.

 

TVS motor நிறுவனத்தின் விற்பனை விவரங்களையும் நாம் காலாண்டு மற்றும் வருட முடிவில் பார்க்கலாம். ஒரு நிறுவனத்தின் விற்பனை ஒவ்வொரு காலத்திலும் அதிகமானால் அது நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என அறியலாம். சில காலங்களில் அதன் வருமானம் குறையலாம். உதாரணத்திற்கு, ஐஸ்கிரீம் விற்பனை வருடத்தின் எல்லா நாட்களிலும் அதிகமாக இருக்க போவதில்லை. அதே போல, உலக பொருளாதார சூழ்நிலை, மூலப்பொருட்களின் பற்றாக்குறை, அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் தேவை – உற்பத்திக்கான இடைவெளியால் (Demand – Supply), போட்டி நிறுவனங்களால் விற்பனை அளவு மாறலாம். ஆனால் ஒரு தொழிலுக்கு தொடர் விற்பனை மற்றும் நிறுவனத்தின் லாபம் மிகவும் அவசியமானது.

 

Operating Profit என்ற விற்பனை (அ) இயக்க லாபத்தை அறிய அந்த காலத்திற்கான மொத்த விற்பனை வருவாயிலிருந்து செலவுகளை கழித்தால் கிடைப்பது.

 

Operating Profit = Sales – Expenses   

 

நம் தேநீர் நண்பர் கடையை போல… அவரின் ஒரு மாத விற்பனையை, மேற்கொண்ட செலவுகளில் கழித்தால் கிடைக்கும் மதிப்பு தான் இயக்க லாபம் (அ) விற்பனை லாபம்.

 

Operating Profit என்பது வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருமானம் (Earnings before interest and tax – EBIT).

 

Operating Profit Margin:

 

Operating Profit margin எனப்படுவது, ஒரு நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்திற்கு இடையே உள்ள விகிதம்.

 

Operating Profit Margin (OPM) = Operating Profit (or) EBIT  / Sales or Total Revenue

 

ஒரு நிறுவனத்தின் இயக்க லாப விகிதத்தை (OPM) அறிய, அதன் ஒரு காலத்திற்கான விற்பனை லாபத்திலிருந்து, மொத்த விற்பனையை வகுத்தால் கிடைப்பது.

 

TVS motor நிறுவனத்தின் டிசம்பர் (December 2017)  மாத  விற்பனை – ரூ. 3,684.95 கோடி மற்றும் விற்பனை லாபம் (Operating Profit) – ரூ. 286.79 கோடி.

 

OPM = Operating profit / Sales

 

286.79 / 3684.95 = 0.0778 X 100 = 7.78 %

 

OPM = 7.78 % (December 2017 for TVS motor company)

 

லாபம் (Profit and Net Profit Margin):

 

ஒரு நிறுவனம் விற்பனை நன்றாக செய்வது இருக்கட்டும். அது லாபத்தில் இயங்க வேண்டுமே. அது தானே, ஒரு முதலீட்டாளராக நமக்கு தேவை. நாம் பார்த்திருப்போம், சில நிறுவனங்கள் விற்பனையில் நன்றாக செயல்படும். ஆனால் பெரும்பாலும் நட்டத்தில் காலத்தை கழிக்கும். விற்பனையை விட அதன் செலவுகள் அதிகமாயிருக்கலாம். கடன்களால் லாபம் பாதிப்படையலாம். லாபம் இல்லாமல் தனது வேலையாட்களுக்கு எத்தனை நாட்கள் தான் அந்த நிறுவனம் சம்பளம் கொடுத்து விட முடியும். முடிவில் திவால் நிறுவனங்கள் மற்றும் வங்கி கடன் மோசடி என செய்தி தகவல் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

 

அதனால், விற்பனைக்கான ஊதியமாக லாபமும் பெற வேண்டும் ஒரு நிறுவனம். இல்லாவிட்டால் அந்த தொழிலுக்கு மதிப்பேது !

 

ஒரு நிறுவனம் அதன் விற்பனையில் தனது செலவை காட்டிலும் அதிகமாக வருவாய் ஈட்டினால் அதனை லாபம் என்கிறோம். செலவுகள் – மூலப்பொருட்கள், ஊதியம், விளம்பரம், வரி, வட்டி செலுத்துவது, தேய்மானம் போன்றவையாக இருக்கலாம். மீதி கிடைப்பதை நாம் நிகர லாபம் (Net Profit) என்கிறோம்.

 

Net Profit (NP) = Total Revenue (or) Sales – Total Expenses

 

இதனை Net Earnings or Net income எனவும் சொல்லலாம். உதாரணத்திற்கு, நமது சம்பளத்திலிருந்து மாதாந்திர அடிப்படை செலவுகள், வரி செலுத்துவது, பொழுதுபோக்கு, காப்பீடு, போக்குவரத்து போன்ற செலவுகளை கழித்தது போக மீதம் உள்ள தொகை தான் நமக்கான லாபம். அதனை தான் நாம் சேமிப்பு என்கிறோம். சேமிப்பு இருந்தால் தான் நாம் நமக்கான எதிர்கால தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். அதே போல தான் ஒரு நிறுவனத்திற்கும் லாபம் இருப்பின், அது எதிர்காலத்தில் நன்றாக செயல்பட துணைபுரியும்.

 

TVS motor நிறுவனத்தின் நிகர லாபத்தையும் நாம் பார்க்கலாம். நாம் ஏற்கனவே சொன்னது போல, அதன் டிசம்பர் மாத்திற்கான விற்பனை லாபம் ரூ. 286.79 கோடி.

 

Operating Profit = Rs. 286.79 Crores

 

Other income = Rs.  18.16 Crores

 

Net Profit = Operating profit + other income – (Depreciation + Interest + Tax)

 

NP = 304.95 – 150.60 = Rs. 154.35 Crores (December 2017 for TVS motor company)

 

Other income என்பது நிறுவனத்தின் நேரிடையான விற்பனை மூலம் வந்த வருமானம் அல்ல. அதற்கு கிடைத்த வட்டி, வாடகை, ஈவு தொகை, சொத்து விற்பனை மூலமான வருவாயாகும்.  நீங்களும் கடந்த மாதங்களுக்கான நிகர லாபங்களை கணக்கிட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

 

நிகர லாப விகிதம் (Net Profit Margin):

 

ஒரு நிறுவனம் அல்லது தொழிலின் லாபம் ஒவ்வொரு மாதத்திற்கும் மாறுபடும். தொடர் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மென்மேலும் லாபமீட்ட வழிமுறைகள் வகுக்கும். பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் தனது லாப – நட்ட அறிக்கையை ஒவ்வொரு காலாண்டும் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை சமர்ப்பிக்கும். அதன் அறிக்கையில் நாம் அந்த நிறுவனம் லாபமீட்டுகிறதா என அறியலாம்.

 

நிகர லாபத்தை பார்த்தோம். நிகர லாப விகிதம்(NPM) என்பது ஒரு வருடத்திற்கான மொத்த விற்பனையில் லாபத்தின் பங்கு (அ) விகிதம் எவ்வளவு என கண்டறிவது. ஒரு நிறுவனம் கடந்த ஆண்டு எவ்வளவு லாபம் பெற்றது, இந்த ஆண்டில் அதை விட எவ்வளவு மடங்கு (அ) விகிதத்தில் பெற்றது எனவும் தெரிந்து கொள்ளலாம்.

 

NPM =  Net Profit / Total Sales

 

TVS motor கடந்த 2017 ம் ஆண்டு நிதி அறிக்கையின் படி, நிகர லாபமாக ரூ. 558.08 கோடி ஈட்டியுள்ளது.

 

Net Profit – Rs. 558.08 Crores

 

Total Sales = Rs. 12,135.31 Crores

 

NPM = 558.08 / 12135.31 =  4.60 %

 

Screener.in தளத்தில் NPM Last year என்ற பகுதியில் பார்க்கலாம். ஒவ்வொரு வருடத்திற்கான நிகர லாப விகிதத்தையும் நாம் ஒப்பிடலாம்.

 

நினைவில் கொள்ளுங்கள்:

 

  • இயக்க லாப விகிதத்தை (OPM), நாம் காலாண்டு (அ) வருட அடிப்படையிலோ கணக்கிடலாம்.

 

  • இயக்க(விற்பனை) லாபம், அந்த நிறுவனத்தின் நிகர லாபத்திலிருந்து எவ்வளவு வேறுபடுகிறது என்பதையும் கணிக்கலாம்.

 

  • நாம் பார்த்த நிகர லாப விகிதத்தை (NPM), அந்த துறையை சார்ந்த மற்ற போட்டி நிறுவனங்களுடனும்(Peers)  காலாண்டு (Recent Quarters)வாரியாகவோ, (Annual)வருட வாரியாகவோ ஒப்பிட்டு பார்க்கலாம். இதன் மூலம் நாம், அந்த துறையின் சிறந்த ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம்.

 

  • NPM என்பது ஒரு நிறுவனத்தின் விற்பனை அளவுடன் தொடர்புடையது. ஆதலால், விற்பனைக்கும், லாபத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

 

  • லாப விகிதத்தை(NPM) ஒப்பிடும் போது, குறைந்தது 5-10 வருட காலத்தின்  அடிப்படையில் ஒப்பிடுவது நல்லது.

 

  • ஒரு நிறுவனத்தின் நிகர லாபம், பெரும்பான்மையாக விற்பனையிலிருந்து வந்திருந்தால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

 

Financial Blog in Tamil