Dividend yield

ஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0

ஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0

Dividend Yield and Dividend Payout

 

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வின் பத்தாம் வகுப்புக்கு நாம் வந்துள்ளோம். ஏற்கனவே நாம் கடந்த சில வகுப்பில் பார்த்த அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் சம்மந்தமான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் பகிரலாம்.

 

contact@varthagamadurai.com  (contact at varthagamadurai dot com)

 

(or)

 

https://varthagamadurai.com/contact/

 

பொதுவாக நாம் ஒரு வங்கியில் வைப்பு தொகையாக பணத்தை முதலீடு செய்யும் போது, நாம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயம் தான் – முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் எதிர்பார்த்த வட்டி வருமானத்துடன் தேவையான நேரத்தில் பணத்தை திரும்ப பெறுவது. இதை விட வேறு எதுவுமில்லை. இன்றைய காலகட்டத்தில் வங்கியில் உள்ள நமது பணம் நம்மிடம் வந்து சேர்ந்தாலே போதுமானது. வட்டி வருமானத்தை பற்றி இப்போதெல்லாம் நமது கவலையில்லை.

 

பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒரு நிறுவனம் தனது முதலீட்டை கொண்டு தொழிலில் ஈடுபடுகிறது. முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்தை அந்த நிறுவனம் மூன்று விதமாக பயன்படுத்தலாம். ஒன்று கிடைத்த லாபத்தை தொழிலில் மறுமுதலீடாக செய்து வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டிருக்கலாம். அடுத்ததாக, லாபத்தை கொண்டு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளை அந்த நிறுவனமே திரும்ப வாங்கி கொள்ளலாம். இதனால் நிறுவனத்தின் உரிமை சதவீதம் அதிகரிக்கும். இறுதியாக லாபத்தை முதலீட்டாளரான நமக்கே பகிர்ந்தளிக்கலாம். இவ்வாறாக நிறுவனத்தின் லாபத்தை மூன்று நிலைகளில் பிரிக்கலாம். இந்த செயல்முறை நிறுவனத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுத்தப்படும்.

 

நிறுவனம் லாபத்தை அதன் வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்தினால், அந்த பங்கின் விலை உயரலாம். இதனால் ஒரு முதலீட்டாளருக்கு லாபம் தான். பங்குகளை திரும்ப பெறுவதாயின் அப்போதும் முதலீட்டாளர் பலன் உண்டு. இதை விட எளிமையாக லாபத்தை பகிர்ந்து கொடுத்தால் அது முதலீட்டாளருக்கு நேரிடையாக பலன் தரும். அது தான் ஈவு தொகை அளித்தல் ஆகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

Dividend:

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு நிறுவனம் தான் சம்பாதித்த லாபத்தை பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது ஈவு தொகை (Dividend) எனப்படும். பங்குதாரர்களுக்கு ஈவு தொகை கொடுக்கப்படும் தீர்மானம், பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தின் வாரிய இயக்குனர்களுக்கு(Board of Directors) உண்டு.

 

நிறுவனங்கள் ஈவு தொகையை அறிவிக்கும் போது, ஒரு பங்குக்கு இவ்வளவு தொகை என்று அறிவிப்பதை விட, அதனை ஈவு தொகை சதவீதமாக (Dividend payout) அறிவிக்கும்.

 

உதாரணத்திற்கு, National Aluminium Company  நிறுவனம் கடந்த ஜனவரி 30 ம் தேதி, ஒரு பங்குக்கு 94 %  ஈவு தொகையாக அறிவித்தது. பொதுவாக ஈவு தொகையானது அதன் முக மதிப்பின்(Face value) அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

National Aluminium Company நிறுவனத்தின் தற்போதைய முக மதிப்பு – ரூ. 5, அறிவிக்கப்பட்ட ஈவு தொகை சதவிகிதம் – 94 %. ஒரு பங்கிற்கு நாம் பெறும் ஈவு தொகை,

 

Dividend per share  = (Dividend payout X Face value)  

 

 

Dividend per share = (94 % X 5) = Rs. 4.70 /-

 

எனவே நாம் ஒரு பங்குக்கு பெறும் தொகை ரூ. 4.70 /-  நிறுவனம் ஈவு தொகையை இரு காலங்களில் அறிவிக்கும். ஒன்று இடைக்கால ஈவு தொகையாக (Interim Dividend) மற்றும் இறுதி ஈவு தொகையாக (Final Dividend) கொடுக்கப்படும். ஈவு தொகை என்பது ஒரு நிறுவனம் முதலீட்டாளருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கிடைத்த லாபத்தை நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம். ஆனால் அறிவிக்கப்பட்ட ஈவு தொகையானது, கட்டாயம் முதலீட்டாளருக்கு கொடுக்கப்பட வேண்டும். நமக்கு கிடைக்க வேண்டிய ஈவு தொகை சொல்லப்பட்ட தேதியில் கொடுக்கப்படவில்லை எனில், நாம் பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபியிடம் (SEBI) புகார் தெரிவிக்கலாம்.

 

Dividend Payout Ratio:

நாம் ஏற்கனவே பார்த்த படி, ஈவு தொகையானது ரூபாய் அளவில் சொல்லப்படாமல், ஈவு தொகை சதவீதத்தில் தான் தெரிவிக்கப்படும் என்று. இந்த ஈவு தொகை சதவீத விகிதத்தை Dividend Payout Ratio என்கிறோம். Dividend Payout Ratio ஐ கணக்கிடுவதற்கு ஒரு வருடத்தில் நிறுவனத்தால் ஒதுக்கப்படும் மொத்த ஈவு தொகையை அதன் நிகர வருமானத்தால் (அந்த வருடத்திற்கு) வகுக்க கிடைப்பதாகும்.

 

Dividend Payout Ratio = Dividends / Net Income

 

National Aluminium நிறுவனத்தில் 2017 மார்ச் நிதியாண்டு(March Ending 2017) முடிவில் ஈவு தொகையாக ஒதுக்கப்பட்ட (அ) கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 541.22 கோடி மற்றும் அந்த வருட நிகர வருமானம்(Net Income) – ரூ. 668.53 கோடி. இப்போது அதன் Payout Ratio,

 

Dividend Payout Ratio = 541.22 / 668.53 =  0.80956 X 100 = 80.96 %

 

இந்த தகவலை நாம் அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். சுலபமாக புரிந்து கொள்ள, ஒரு நிறுவனம் தனது லாபத்தில் எவ்வளவு தொகையை முதலீட்டாளருக்கு கொடுப்பதற்காக ஒதுக்குகிறது என்பது தான் Payout Ratio எனப்படும்.

Dividend Yield ( ஈவு தொகை ஈட்டம் ):

 

நாம் ஒரு பங்கிற்கு பெறும் ஈவு தொகையை அதன் முக மதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டு அறிந்து கொண்டோம். இதனை போல, நாம் வாங்கும் பங்கின் தற்போதைய சந்தை விலையில், பெறும் ஈவு தொகை எவ்வளவு சதவீதம் என கணக்கிடுவது ஈவு தொகை ஈட்டம் (Dividend yield) எனப்படும்.

 

உதாரணத்திற்கு, National Aluminum நிறுவனத்தின் சமீபத்திய ஈவு தொகை ஈட்டம் – 4.23 % (பங்கின் சந்தை விலை – ரூ. 66.25).

 

ஈவு தொகை ஈட்டத்தை கணக்கிட,

 

Dividend Yield = Annual Dividend per share / Current Market Price (CMP)

 

நால்கோ (National Aluminium Company) நிறுவனத்தை எடுத்து கொண்டால், கடந்த நிதியாண்டில் (March Ending 2017) ஈவு தொகையாக ரூ. 2.80 /- கொடுத்துள்ளது. அதன் படி, பங்கின் சந்தை விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால்,

 

Dividend Yield = 2.80 / 66.25 =  0.04226 X 100 = 4.226 % (Rounded to 4.23 %)

 

நினைவில் கொள்ளுங்கள்:

 

ஈவு தொகை ஈட்டத்தை(Dividend Yield) நாம் வேறொரு முறையாகவும் எடுத்து கொள்ளலாம். ஈவு தொகை ஈட்டம் என்பது வங்கி வட்டி விகிதத்தை போல தான், உங்கள் வங்கி சேமிப்பு தொகைக்கு கொடுக்கப்படும் 4 % போல அல்லது வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானம் என வைத்து கொள்ளலாம். 4.23 % ஈட்டம் என்பது உங்களுடைய ஒவ்வொரு நூறு ரூபாய் (Yield per 100 rupees) முதலீட்டிற்கும் கிடைத்த தொகை. ஈவு தொகை ஈட்டமானது ஒரு நிலையான விகிதம் அல்ல, அது பங்கின் சந்தை விலை பொறுத்து மாறுபடும். நீங்கள் குறைந்த விலையில் (Buy price – Rs.30) பங்குகளை வாங்கியிருந்தால் தற்போது கிடைக்கும் ஈவு தொகை (Dividend Yield –  9.33 %) லாபமானது தான்.

 

வங்கி வட்டி வருமானத்தை காட்டிலும் பங்குகளில் கிடைக்கும் ஈவு தொகை சிறந்தது. ஏனெனில் பங்குகளில் கிடைக்கும் ஈவு தொகைக்கு நிறுவனமே வருமான வரியை செலுத்தி விட்டு தான் நமக்கு கையில் கொடுக்கும். அப்படியிருக்க, நாம் பெறும் தொகை வங்கி வட்டி வருமானத்தை விட சற்று அதிகம் தான். ஆனால் நீங்கள் வாங்கிய பங்கின் சந்தை விலை மிகவும் முக்கியம்.

 

ஈவு தொகையை பற்றி அறியும் போது, Cum Dividend மற்றும் Ex Dividend என்ற இரு விஷயங்கள் உண்டு. ஈவு தொகை கொடுக்கும் முன்னரும், கொடுத்த பின்னரும். இதனை நாம் அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையில் பார்த்தால் நமக்கு விஷயம் புரியும். நாம் பெறும் ஈவு தொகை நமது வங்கி கணக்கில் நேரிடையாகவே வரவு வைக்கப்படும்.

 

ஈவு தொகை பெறுவதற்கு நாம் இரண்டு விதமான நாட்களை குறித்து வைத்து கொள்ளவும். Ex Dividend Date & Record Date. ஒரு பங்கை EX Dividend Date அன்றோ அல்லது அதற்கு முன்னரோ (On or before) நீங்கள் வாங்கியிருந்தால், ஈவு தொகை பெறுவதற்கு உரிமையுண்டு. அதன் பின்னர் வாங்குவோருக்கு அந்த காலத்திற்கு உரிய ஈவு தொகை கிடைக்காது. Record Date என்பது யாரெல்லாம் பங்குதாரர்களாக நிறுவன புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனரோ அவர்களுக்கு மட்டுமே ஈவு தொகை வழங்கப்படும். அதனால் பங்குச்சந்தை அமைப்பு வெளியிடும் தகவல்கள் மற்றும் நாட்களை குறித்து வைத்து கொள்வது நல்லது.

 

பொதுவாக, ஈவு தொகை கொடுக்கப்பட்டவுடன் பங்கின் சந்தை விலையில் சிறிது ஏற்ற – இறக்கமும், நிறுவனத்தின் நிதி அறிக்கையில் மாற்றமும் நிகழ்வது இயல்பு. நாம் இதனை பற்றி அவ்வளவாக கவலைப்பட தேவையில்லை. ஈவு தொகை அளிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் வளர்ச்சியடைந்த (அ) வளர்ச்சி பெற்று வருபவையாக இருக்கும். இருப்பினும் நாம் எப்போதும் நிறுவனத்தின் வரவு- செலவு, லாப-நட்ட கணக்கினை பார்ப்பது அவசியம்.

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s