Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

இன்று நாட்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2019

இன்று நாட்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2019

India’s interim budget today for the year 2019.

 

மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும் என தெரிகிறது. நடப்பு ஆட்சியில் இதுவரை நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ(Arun Jaitley) தலைமையில் வெளியிடப்பட்டு வந்த பட்ஜெட் தாக்கல், இம்முறை தற்காலிக நிதி அமைச்சர் பியூஸ் கோயல்(Piyush Goyal) தலைமையில் அமைய உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக பட்ஜெட் தாக்கல் நிகழும் நாளன்று அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படத்தான் செய்யும். வரிச்சலுகைகள்(Income Tax Slabs), சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கைகள், விவசாயம் சார்ந்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிற விஷயங்களை நாம் கவனிக்க தொடங்குவோம். இன்று நடைபெறும் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்(Interim Budget) தான் எனினும், வரி சார்ந்த அறிவிப்புகள், நிதி பற்றாக்குறை எண்கள்(Fiscal Deficit), வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் ஆகியன விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

 

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாம் மேற்கொள்ளும் வரவு-செலவுகளை(Budget Planning) போன்றே, ஒரு நாட்டினுடைய பட்ஜெட்டும் அவசியமாகும். இது நமக்கான பட்ஜெட் அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நமது நாட்டிற்கான பட்ஜெட்டை திட்டமிட நாம் மற்றொருவரை பொறுப்பில் அமர செய்துள்ளோம் என்பதை நாம் நினைவில் கொள்வது முக்கியம். நடப்பு 2019ம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 3.3 சதவீதமாக இருக்கலாம் என முன்னர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது அவற்றில் 20 புள்ளிகள் வரை மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது. 2019-20ம் நிதியாண்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 3.2 – 3.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பட்ஜெட் தாக்கலில் அரசு தனது நிதியை (வரவு-செலவு) எவ்வாறு கையாண்டது என்பதை நாம் இன்று அறியலாம். மேலும், வரப்போகும் நாட்களில் அரசாங்கத்தின் நிதி சார்ந்த திட்டங்கள் என்ன என்பதை அறிய முடியும். பண மதிப்பிழப்பு(Demonetization), ஜி.எஸ்.டி.(GST) வரி போன்றவை சிறு மற்றும் குறுந்தொழில்களை வெகுவாக பாதித்துள்ளதாக சொல்லப்படுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பு(Unemployment Rate) சார்ந்த எண்களும் முக்கியத்துவம் பெறுகிறது. வங்கிகளின் வாராக்கடன் நிலையும் கவலை அளிக்கிறது.

 

இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இன்று வெளியிடப்படும் இடைக்கால பட்ஜெட் நிதி நலன் சார்ந்து இருக்குமா அல்லது தேர்தல் வியூகத்தில் அமையப்போகுமா என்பது தெரிய வரும். இன்றைய பட்ஜெட்டில், மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயமாக வரிச்சலுகைகள்(Tax Concessions) மற்றும் விவசாயம் சார்ந்த கொள்கைகளாக இருக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்

உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்

A Fifth of the World’s Richest people are over 80 years old

 

ப்ளூம்பெர்க்(Bloomberg) பத்திரிகை வெளியீட்டின் படி, உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ள முதல் 500 நபர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 80 வயதை கடந்தவர்கள். முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ்(Jeff Bezos) உள்ளார். இரண்டாம் இடத்தில் பில்கேட்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் பழுத்த முதலீட்டாளர் வாரன் பப்பெட் உள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸ் 132 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளார்.  இந்தியாவின் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) உலகத்தர வரிசையில் 12ம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள். முதல் 500 இடங்களில் பெரும்பாலானோர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த பட்டியலில் 19 இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக பணக்காரர்கள்(Billionaire) வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இவற்றில் 21 பணக்காரர்கள் 90 வயதிலிருந்து 100 வயதுக்கு உட்பட்டவர்கள், இதில் 8 நபர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மலேசிய நாட்டை சேர்ந்த ராபர்ட் கோக் அவரின் வயது 90. இவருடைய சொத்துக்களின் மதிப்பு 17.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வாரன் பப்பெட்(Warren Buffet) தற்போது தன்னுடைய 88வது வயதில் உள்ளார்.

 

90 வயதை கடந்த எட்டு ஆசிய பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இந்தியாவின் 90 வயதான பலோன்ஜி மிஸ்ட்ரியின்(Palonji Mistry) சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நமது நாட்டின் மதிப்பில் சுமார் 1,42,710 கோடி ரூபாயாகும். 90 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளவர் ஹாங்காங் நாட்டை சேர்ந்த லை காசிங்(Li Ka-Ching), 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்வகித்து வருகிறார்.

 

உலகின் பணக்காரர்கள் வரிசையில் மூத்த வயதுடைய இருவர்(Oldest and Richest), நடப்பு வருடத்தின் துவக்கத்தில் காலமாகி உள்ளனர். இந்தோனேசிய நாட்டினை சேர்ந்த எக்கா(Eka) தனது 15 வயதில் தேங்காய் மற்றும் பாமாயில் எண்ணெய் வர்த்தகத்தை தொடங்கியவர் பின்னர் உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுத்தார். இவர் தனது 98வது வயதில், இம்மாதத்தின் ஆரம்பத்தில் காலமானார்.

 

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹென்றி தனது இளமை காலத்தில் காலணிகள்(Shoe) விற்பனையாளராக ஆரம்பித்த இவர், பின்னாளில் அந்நாட்டின் முக்கியமான நபர்களில் ஒருவரானார். ஹென்றி கடந்த வாரம் தனது 94 வயதில் காலமானார். மூத்த வயதுடைய இந்த இருவரின் சொத்துக்கள் மட்டும் 1700 கோடி அமெரிக்க டாலர்கள் – இந்திய ரூபாயில் 1,21,300 கோடி.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

முதலீட்டை தாமதப்படுத்துவதால் நிகழும் பாதகங்கள்

முதலீட்டை தாமதப்படுத்துவதால் நிகழும் பாதகங்கள்

The Cost of Delayed Investing – Disadvantages of invest later

 

கடந்த சனிக்கிழமை (26-01-2019) அன்று விருதுநகரில் நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்ட் (Aditya Birla Mutual Fund – ABSL) நிறுவனத்தின் சார்பாக பரஸ்பர நிதிக்கான விழிப்புணர்வு(Mutual Fund Awareness) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதலீட்டு ஆலோசகரும், செபி(SEBI) ஆலோசனை குழுவின் உறுப்பினருமான திரு. வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்டின் பிராந்திய தலைவருமான திரு.சுவாமிநாதன் கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிதி சார்ந்த அடிப்படை அறிவை(Financial Education) பெறுவது பற்றி திரு. சுவாமிநாதன் கருணாநிதி அவர்கள் பேசும் போது, ‘ நமது குடும்பத்தின் நலனை காக்கும் அனைத்து விஷயங்களிலும் நாம் கூடி பொதுவாக செயல்படும் நிலையில், முதலீட்டு விஷயங்களிலும் குடும்பத்துடன் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்றார். நாம் சம்பாதித்த பணம் நமக்கான வேலையை செய்ய நாம் கட்டளையிட வேண்டும். அதற்கு வெறும் சேமிப்பு மட்டும் போதாது, முதலீட்டையும் கற்று கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும்.

 

சரியான நிதி திட்டமிடல்(Financial Planning) மற்றும் இளமையில் முதலீடு(Invest Early) என்ற இரு காரணிகள் மட்டுமே நம்மையும், நம் குடும்பத்தையும் நிதி சிக்கலில் இருந்து பாதுகாக்கும். நாம் பெறும் வருமானத்தை கொண்டு மட்டும் நாம் எதையும் சாதித்து விட முடியாது. நமக்கான நிதி இலக்கை(Goals) அடைய நாம் சிறிதளவு பணத்தையும், அதற்கான காலத்தையும் கொடுக்க வேண்டும். பணக்காரர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து அதற்கான நேரத்தையும் கொடுக்க அனுமதிக்கின்றனர். ஆனால் நடுத்தர மக்களும், ஏழைகளும் பணத்தை குறுகிய காலத்தில் செலவழிக்க பழகுவது ஆரோக்கியமான விஷயமல்ல.

 

இளமையில் முதலீடு செய்வதால் நாம் பெறும் பயனையும், முதலீட்டில் தாமதத்தை ஏற்படுத்துவதால் நிகழும் பண இழப்புகளையும் நாம் அறிந்து கொள்வது நன்று. ராம்(Ram) என்ற இளைஞர் தனது 25 வயது முதல் மாதம் ரூ. 1000/- ஐ ஒரு முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். தனது ஓய்வு காலமான 60 வயது வரை, அதாவது சுமார் 35 வருடங்களுக்கு அவர் மாதாமாதம் முதலீடு செய்து வருகிறார். ராமுக்கு கிடைக்கும் வருமான வட்டி விகிதம் 12 சதவீதம் எனில், முதிர்வில் அவருக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ. 64 லட்சம்.

 

ராமின் நண்பரான குமார்(Kumar) தனது 25 வயதில் முதலீடு செய்ய விருப்பமில்லாமல், முதலீட்டை 30வது வயதில் தொடங்குகிறார். இவரும் மாதாமாதம் 1000 ரூபாயை 12 % வட்டியில் முதலீடு செய்து வருகிறார். குமாரின் ஓய்வு காலமான 60 வயதில் அவர் பெறும் முதிர்வு தொகை 35 லட்ச ரூபாயாக உள்ளது. இவரின் மொத்த முதலீட்டு காலம் 30 வருடங்கள். அதாவது ராமை விட 5 வருடங்கள் மட்டுமே குறைவு. இருவருக்குமிடையே முதிர்வு தொகையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ?

 

கூட்டு வட்டியின்(Power of Compounding) மகிமை தான்.

 

ராம் தனது 55 வயதில் (30 வருடங்கள்) மாதாமாதம் முதலீடு செய்யும் ரூ. 1000/- ஐ நிறுத்தினாலும், 35 வருட முடிவில் அவருக்கு கிடைக்கும் தொகை 64 லட்ச ரூபாயாகும். இது தான் இளமையின் முதலீட்டு ரகசியமும்(Secret of Young Investing), கூட்டுவட்டி பலனும்(Compound Interest). இருவருக்கும் இடையே முதிர்வு தொகை மட்டுமே வித்தியாசம் அல்ல, மாறாக குமாருக்கு ரூ. 29 லட்சம் பண இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராம் தனது முதலீட்டின் முதிர்வு தொகையை கொண்டு, தனக்கான நிதி இலக்கினை பூர்த்தி செய்யலாம். அதே நேரத்தில் குமாருக்கு அது போதுமான தொகையாக இருந்திராது.

 

இளமையில் நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால், உங்களுக்கான பின்வரும் பாதகங்கள் (Disadvantages of Investing Later):

 

  • நிதி இலக்கை அடைவதில் சிக்கல் (அ) தாமதம்.
  • தாமதமாக முதலீட்டை துவங்கும் போது, அதிகப்படியான தொகையை மாதாமாதம் முதலீட்டிற்கு ஒதுக்கும் நிலை.
  • முதுமையில் தொடர் முதலீட்டிற்கான வாய்ப்பு குறைவு.
  • கூட்டு வட்டியின் நீண்டகால பலனை தவற விடுதல்
  • நிதி சுதந்திரத்தை(Financial Independence) பெறாமை
  • முதலீட்டின் மீதான வட்டி வருமானம் குறையும் வாய்ப்பு.

 

பின்னர் அவர் பேசும் போது, ‘ ஒவ்வொரு முதலீட்டு சாதனத்திலும் நாம் பார்க்க வேண்டிய முக்கிய காரணிகளாக முதலீட்டு பாதுகாப்பு(Safety), நீர்மை நிறை (பணத்தை எளிதாக பெறுதல் -Liquidity), சிறந்த வருமானம்(Good returns), வரி(Tax Efficiency) ஆகியவை ‘ என்கிறார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதன் பின் பேசிய திரு. நாகப்பன் அவர்கள், ‘ ஒரு முதலீட்டை தேர்ந்தெடுக்கும் முன், அதற்கான கல்வியை நாம் தான் பெற வேண்டும். திருமணம், கல்வியில் நமக்கு இருக்கும் அக்கறை முதலீட்டு திட்டத்தை(Investment Products) தேர்ந்தெடுப்பதிலும் இருக்க வேண்டும். நாம் சம்பாதிக்கும் மாத வருமானம் போக, இரண்டாம் வருமான வாய்ப்பை(Secondary Income) நாம் எப்போதும் தேடுவதற்கு கற்று கொள்ள வேண்டும்.

 

ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதன் ரிஸ்க்கை(Risk) அறிவதோடு, நமக்கான ரிஸ்க்கை குறைக்க டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance), மெடிகிளைம் பாலிசி(Mediclaim) போன்றவற்றை முன்னரே எடுத்து கொள்வது அவசியம். பணம் சம்பாதிப்பது மட்டுமே நம்மை பணக்காரர்களாக உருவாக்காது, மாறாக நமது நிதி தேவைகளை சரியாக திட்டமிட்டு அதன் சார்ந்து நாம் பழக்கப்படும் போதே, நிதி சுதந்திரம் அடையலாம். ‘ என்றார்.

 

தேவைக்கு மேல் ஒரு ரூபாய் சம்பாதிப்பவனே உண்மையில் பணக்காரன் – வ. நாகப்பன்

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

பங்குச்சந்தையில் தின வர்த்தகர்களுக்கான எளிய மூன்று உத்திகள்

பங்குச்சந்தையில் தின வர்த்தகர்களுக்கான எளிய மூன்று உத்திகள்

Three Simple Strategies to follow – Day Traders

 

பங்குச்சந்தையில் மூன்று விதமான நபர்கள் அமைய பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். தின வர்த்தகர்கள்(Day Traders), குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள்(Investor) என காலங்களுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, விற்பவர்கள் உள்ளனர். தினசரி வர்த்தகர்களை பொறுத்தவரை அவர்கள் வர்த்தகம் செய்யும் காலம் சில மணிகளிலிருந்து அன்றைய நாள் முழுவதுமாக இருக்கும்.

 

தின வர்த்தகர்கள் அனைவரும் தங்களின் நேர மேலாண்மை(Time Management) மற்றும் பங்குகளின் மீதான சரியான அணுகுமுறையை(Trend) கொண்டிருக்க வேண்டும். இதனை வர்த்தக ஒழுக்கம்(Trading Discipline) என்றும் குறிப்பிடலாம். பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொரு தின வர்த்தகர்களுக்கும் ஒவ்வொரு விதமான கொள்கைகள் இருக்கலாம். அந்த கொள்கைகள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடவும் செய்யலாம்.

 

பங்குச்சந்தை தின வர்த்தகத்தில் நாம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என எண்ணப்பட்டாலும், உண்மை என்னவோ இழப்பு அல்லது ஆபத்திற்கான வாய்ப்பு தான் அதிகம் எனலாம். அதனால் தான் தினசரி வர்த்தகம்(Intra Day) மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் லாபங்களை பதிவு செய்வதை விட, நஷ்டத்தினை முடிந்த அளவு தவிர்த்தாலே வெற்றியடையலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பங்குச்சந்தை என்பது ரிஸ்க் அதிகம் நிறைந்த ஒரு வாய்ப்பு சந்தை ஆகும். அதனால் நமது மனம் போன போக்கில் வர்த்தகம் செய்யாமல் சில அடிப்படை விஷயங்களை கற்று கொண்டு, அதற்கான வியூகம்(Strategy) அமைப்பதே சிறந்தது. திட்டமிடப்பட்ட வியூகத்தை நாம் தவறாமல் எப்போதும் பயன்படுத்த வேண்டியதும் அவசியம். அது போன்ற வியூகங்களை கையாள இங்கு சில எளிமையான உத்திகளை கொடுத்துள்ளோம்.

 

பங்குச்சந்தையில் நாம் தின வர்த்தகம் மேற்கொள்ளும் நாள் அன்று, உலகளாவிய சந்தை புள்ளிவிவரங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார செய்திகளை தெரிந்து வைத்திருப்பது நன்று. நாம் வர்த்தகம் செய்யும் நாளன்று பங்குச்சந்தை காளையாக உள்ளதா அல்லது கரடியாக உள்ளதா, இல்லையெனில் பக்கவாட்டில் நகர்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Best Intra Day Strategies

சந்தை இன்று நேர்மறையாக அல்லது ஏற்றமாக(Bullish) தொடங்குகிறது எனில், விலை ஆதரவு(Support level) உள்ள நிலையில் பங்குகளை கண்டறியுங்கள். பின்பு, அதன் விலை ஆதரவு நிலையில் உள்ள போது பங்குகளை வாங்க தயாராகுங்கள். அப்படியில்லாமல் இருப்பதற்கான நிலை தெரிந்தால் அன்றைய நாளில் வர்த்தகம் செய்வதை முடிந்தவரை தவிருங்கள்.

 

சந்தை கரடியின் பிடியில் அல்லது இறக்கத்தில்(Bearish) அமைந்தால், அதிகபட்ச விலையில்(Resistance level) உள்ள நிலையை அல்லது பங்குகளை கண்டறியுங்கள். பின்பு அதே விலையில் பங்குகளை முதலில் விற்க(Short – Selling) தொடங்குங்கள். பங்குகள் அதிகபட்ச விலையில் கிடைக்கவில்லை எனில், அதன் நிலை வரும் வரை காத்திருக்கவும் அல்லது அன்றைய நாளில் வர்த்தகம் செய்வதை தவிர்க்கலாம்.

 

நீங்கள் வர்த்தகம் செய்யும் நாளில், பங்குச்சந்தை பக்கவாட்டில்(Sideways) நகர்கிறது என்றால், பிரேக் அவுட் (Breakout) உத்தியை பயன்படுத்துங்கள். பிரேக் அவுட் ஆன பிறகு வர்த்தகம் செய்வதை தொடங்குங்கள். இவை மூன்றும் ஒவ்வொரு தின வர்த்தகரும்(Day Trading) பின்பற்றக்கூடிய எளிய உத்திகள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உங்களை நீங்களே ஒழுங்குபடுத்தி கொண்டு வர்த்தகம் செய்கையில், அதற்கான பலன் கிடைக்கும்.

 

( இந்த பதிவிற்கான ஆங்கில பதிவை பார்க்க: Simple Strategies for the Day Trading )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 3209 கோடி

ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 3209 கோடி

Conglomerate ITC comes with a net profit of Rs. 3209 Crore in Q3FY19

 

நடப்பு மாதம் முழுவதும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவரும் காலமாகும். அதனால் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் அக்டோபர்-டிசம்பர் மாத காலத்திற்கான காலாண்டு முடிவுகளை பொதுவாக இம்மாதத்தில் வெளியிடும்.

 

நிறுவனங்களின் வரவு-செலவு அறிக்கை தானே, இதில் என்ன இருக்கிறது என நாம் கேட்கலாம். சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தனியார் லிமிடெட் நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றின் செயல்பாடு மற்றும் உண்மைத்தன்மையை அறிய இந்த காலாண்டு முடிவுகள் (வரவு-செலவு) உதவும்.

 

கடந்த அக்டோபர்-டிசம்பர் 2018 காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம்(ITC) தனது நிகர லாபமாக 3,209 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதுவே கடந்த ஜூலை-செப்டம்பர் காலத்தில் 2,954 கோடி ரூபாயை லாபமாக (Net Profit) பெற்றுள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.11,431 கோடி. இது இரண்டாம் காலாண்டில் 11,272 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது வெளியிடப்பட்ட முடிவுகளின் படி, மூன்றாம் காலாண்டில் நிகர லாப வரம்பு(Net profit margin) 28.07 சதவீதமாக உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மூன்றாம் காலாண்டு முடிவுகளை கடந்த 2017ம் ஆண்டின் அதே காலத்துடன் (Year on Year) ஒப்பிடும் போது, அப்போது நிறுவனத்தின் வருவாய்(Revenue) 9,952 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.3,090 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 3.85 சதவீதமும், வருவாய் 14.86 சதவீதமும் வளர்ச்சியை கொண்டுள்ளது.

 

பொதுவாக சந்தையில் உள்ள நிதி வல்லுனர்களின் கருத்துக்கள் ஒருமித்தவாறு அமைவதில்லை. சில வல்லுனர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்த இந்த நிறுவனத்தின் முடிவுகள், மற்றவரின் பார்வையில் ஏமாற்றத்தை தரலாம். ஒரு காலத்தில் புகையிலையை(Cigarette giant) மட்டுமே முதன்மை தொழிலாக கொண்டிருந்த ஐ.டி.சி. நிறுவனம், சமீப வருடங்களாக தனது முதலீட்டை மற்ற தொழில்களிலும் பரவலாக்கம் செய்து வருகின்றன.

 

ஐ.டி.சி. நிறுவனம் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்(FMCG) துறையில் புகையிலை மட்டுமில்லாமல், தின்பண்டம் மற்றும் உணவு சார்ந்த பொருட்களையும் தயாரித்து வருகின்றன. இது போக தங்கும் விடுதிகள்(ITC Hotels), விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பேப்பர் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது. ஆசிர்வாத் கோதுமை, சன் பீஸ்ட், கிளாஸ்மேட்(Classmate Notebooks), மங்கள்தீப், மின்ட்(Mint), விவேல்(Vivel), பியமா(Fiama), ஜான் பிளேயர்ஸ், லைப் ஸ்டைல் ஆகியவை ஐ.டி.சி. நிறுவனத்தின் பிராண்டுகள் ஆகும்.

 

புகையிலையை சாராமல், ஐ.டி.சி. நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்களில் அதன் வருவாய் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 3,200 கோடியாகவும், ஹோட்டல் துறையில் 12 சதவீத வளர்ச்சியுடனும் உள்ளது. பேப்பர் சார்ந்த தொழிலில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,542 கோடி, இது 20 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. விவசாயம் சார்ந்த துறையில் அதிகபட்சமாக 26 சதவீத வளர்ச்சியுடன் ஐ.டி.சி. நிறுவனம் உள்ளது. இதன் வருவாய் 1,925 கோடி ரூபாயாக இருக்கிறது. புகையிலை மூலமான வருவாய் 10 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. இந்த துறையில் சந்தை எதிர்பார்த்த வருவாயை கொண்டிருக்கவில்லை.

 

வரவிருக்கிற பொது பட்ஜெட் தாக்கலில் புகையிலை சார்ந்த பொருட்களுக்கான வரி மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐ.டி.சி. நிறுவனத்தின் புகையிலை தொழிலுக்கு சற்று பாதகத்தை ஏற்படுத்தலாம்.

 

மூன்றாம் காலாண்டு முடிவின் கோப்புகளை(ITC Q3 Results) பார்க்க:

 

https://www.bseindia.com/xml-data/corpfiling/AttachLive/86e40823-d19d-4b06-97cf-6da5b6b260e4.pdf

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

புதிய சிப் வசதியுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்

புதிய சிப் வசதியுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்

New Chip based e-passport for the Public in India

 

நம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 1997ம் ஆண்டு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்(Foreign Tourists) எண்ணிக்கை 24 லட்சமாக இருந்தது. இதுவே கடந்த 2017 ம் வருடத்தில் ஒரு கோடி எண்ணிக்கையை தாண்டியது. சுற்றுலா பயணிகளின் மூலம் பெறும் வருமானமும் நம் அரசுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொடுத்துள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1997ம் ஆண்டில் 10,500 கோடி ரூபாயாக இருந்த வருமானம், கடந்த 2017ம் ஆண்டில் ரூ.1,77,874 கோடியை தாண்டியுள்ளது. சுற்றுலா துறை நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்கினை கொண்டுள்ளது. நமது நாட்டில் சுற்றுலா மேற்கொள்ளும் அன்னிய நாட்டினரின் எண்ணிக்கையில் முதல் மூன்று இடத்தில் வங்கதேசம், அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகையை கொண்டிருக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் (புள்ளிவிவரம்-2015) உள்ளது. இந்த துறையில் தமிழகத்தின் பங்கு சுமார் 20 சதவீதமாகும்.

 

இது போல நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் குடிமக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகமாக உள்ளது. வேலை, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற வெவ்வேறு வகைகளில் இந்தியர்கள் வெளிநாட்டிற்கு தொடர்ச்சியாக செல்கின்றனர். கடந்த 2018 ம் வருடம் மட்டும் இஸ்ரேல்(Indian Tourists in Israel) நாட்டிற்கு சென்ற இந்திய சுற்றுலாதாரர்களின் எண்ணிக்கை 70,800 ஆகும்.

 

எல்லோருக்கும் வெளிநாட்டிற்கு செல்லும் ஆர்வம் இருந்தாலும் பெரும்பாலோர் பாஸ்போர்ட் மற்றும் விசா நடைமுறைகளில் தங்களுக்கு ஏற்படும் சிக்கலால் வெளிநாட்டு பயணம் என்ற எண்ணத்தை மறந்து விடுகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக இ-சேவா முறை மூலம் பாஸ்போர்ட் விநியோகம் எளிதாக அமைந்ததுடன், பாஸ்போர்ட் பெறுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2018 ம் வருடம் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2.7 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

புதிய சிப் வசதியுடன் இ-பாஸ்போர்ட்(New Chip based E-passport) அளிக்கும் நடைமுறையையும் அரசு கடந்த 2017 ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. முதலில் அரசு அலுவல்கள் சார்ந்தே அளிக்கப்பட்டு வந்த இ-பாஸ்போர்ட் இனி பொதுமக்களுக்கும் விரைவில் வர உள்ளது. பாஸ்போர்ட் பெறுவோரின் அனைத்து விவரங்களும் சிப் வடிவில்(Chip) சேமிக்கப்படும் எனவும், முன்னும்-பின்னும் தடிமனான அட்டைகளை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

குடியேற்ற நுழைவுகளில் (Immigration Counters), இ-பாஸ்போர்ட் சில நொடிகளில் தேவைப்படும் விவரங்களை செயல்படுத்தும். 64 கிலோ பைட்டு(64 KB) நினைவகம் கொண்டுள்ள இந்த சிப் வடிவிலான இ-பாஸ்போர்ட் சுமார் 30 வருகைகள் வரையிலான தகவல்களை சேமித்து வைத்திருக்கும். இது பாஸ்போர்ட் வைத்திருப்போரின் புகைப்படத்தையும், கைரேகைகளையும் பாதுகாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 

முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட், அதற்கான மென்பொருளை ஐ.ஐ.டி கான்பூரில் (IIT Kanpur) உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் எந்த வணிக நிறுவனமும் ஈடுபடவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி

கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி

Kotak Mahindra Bank Q3 FY19 net profit rises to Rs.1291 Crore

 

தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தனது மூன்றாம் காலாண்டு முடிவுகளை திங்கட்கிழமை அன்று (21-01-2019) வெளியிட்டது. 2018-19 ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டில் (Q3FY19 – அக்டோபர்-டிசம்பர்) நிகர லாபமாக ரூ.1,290.93 கோடியை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் வங்கியின் வருவாய் 6,250 கோடி ரூபாயாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதற்கு முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) வங்கியின் வருவாய்(Revenue) ரூ. 5,810 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,141.65 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட காலாண்டு முடிவுகளை கடந்த 2017-18 ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் அதிகமாக  உள்ளது. 2017-18 ம் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.5,009 கோடியாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ.1,053 கோடியாகவும் இருந்தது.

 

முந்தைய மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 23 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. வங்கியின் வருவாயும் 25 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 2.15 சதவீதத்திலிருந்து 2.07 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மோசமான கடன் விகிதமும் (Bad loans) 0.81 சதவீதத்திலிருந்து 0.71 சதவீதமாக குறைந்துள்ளது.

 

நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குக்கான காசா (CASA Ratio) விகிதமும் 51 சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 2017-18 ம் நிதியாண்டு காலத்தில் 47 சதவீதமாக இருந்தது. சேமிப்பு கணக்கில் உள்ள வைப்பு தொகை 34 சதவீதம் அதிகரித்து 73,958 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை 19 சதவீதம் அதிகரித்து ரூ.29,607 கோடியாக உள்ளது. இதுவே 2017-18 ம் வருடத்தில் அக்டோபர்-டிசம்பர் காலத்தில் சேமிப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை ரூ. 55,397 கோடியாகவும், நடப்பு கணக்கில் 24,776 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

 

டிசம்பர் 31, 2018 தேதியின் படி, வங்கியின் மொத்த வாராக்கடன்(Non Performing Asset) 2.07 சதவீதம் மற்றும் நிகர வாராக்கடன்(NNPA) 0.71 சதவீதமாகும். கடந்த வருட முடிவில் கோடக் மஹிந்திரா வங்கிக்கு 1,453 கிளைகளும், 2,270 ஏ.டி.எம்.(ATM) மையங்களும் செயல்பாட்டில் இருக்கிறது. போதுமான மூலதன விகிதம் 18.1 சதவீதமாக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

மீட்கப்படுமா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ?

மீட்கப்படுமா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ?

Will the Jet Airways be recover ?

நமது வர்த்தக மதுரை இணைய தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், நாட்டில் உள்ள விமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமாகியிருப்பதை விஜய் மல்லையாவின் தலைப்பில் ஒரு கட்டுரையின் மூலம் சொல்லியிருந்தோம். அவற்றில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) விமான சேவை நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று நிதியாண்டுகளில் மட்டுமே லாபத்தை கண்டுள்ளது. நிகர லாபத்தில் அதிகபட்சமாக கடந்த 2017ம் நிதி ஆண்டில் ரூ.1,483 கோடியையும், நஷ்ட காலத்தில், அதிகபட்ச நிகர நஷ்டமாக 2014ம் நிதி வருடத்தில் ரூ.3,668 கோடியை இழந்துள்ளது. நடப்பு 2018-19ம் வருடத்தில் முதல் இரண்டு காலாண்டுகளிலும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நஷ்டத்தை (Net Loss on Quarterly) மட்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மூன்றாம் (அக்டோபர்-டிசம்பர் 2018 Q3 Results) காலாண்டு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், சேவையை தொடர்வதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லை என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கடன்(Debt) மட்டும் ரூ. 8,400 கோடி. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த எதிஹாட் நிறுவனம் 24 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) முதலீடு செய்திருந்தாலும், நமது நாட்டின் சட்ட விதிமுறைப்படி இந்த நிறுவனம் இயக்குனர் குழுவையோ அல்லது ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தையோ கட்டுப்படுத்த முடியாது.

 

தொடர்ச்சியாக கடந்த மூன்று காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ், ஒரு வாரத்திற்கு பிறகான விமான சேவையை தொடர போதுமான பணமில்லை என கூறியுள்ளது. ஏற்கனவே வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் இந்நிறுவனம், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சந்தித்த நிலையில் தற்போது உள்ளது.

 

நிறுவனர் பங்குகளை அடுத்து அதிகபட்ச பங்குகளை கொண்டிருக்கும் எதிஹாட் விமான நிறுவனம் தனது பங்குகளை கொண்டு கூடுதல் கடன் தொகையை பெறாது என தெரிகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அவசர கால நிதியை முயற்சித்து கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் விமான நிறுவனங்களை மறுசீரமைப்பது சார்ந்த நிகழ்வில், எதிஹாட் நிறுவனத்தின் சேர்மன் டோனி டக்ளஸ், பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்ட விளக்கமானது, ‘ ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தங்கள் நிறுவனம், அவசர கால நிதியாக  ஜெட் ஏர்வேஸுக்கு உதவ விரும்புகிறது. அதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தங்கள் நிறுவனம் மேலும் சில பங்குகளை வாங்க முயற்சிக்கும். ஆனால் அதற்கான விலையாக சந்தை விலையில் பாதியான ரூ. 150 க்கு பங்கு ஒன்றுக்கு தரப்போவதாக அறிவித்துள்ளது.

 

கடந்த 2012 ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, இந்திய விமான நிறுவனங்களில் அந்நிய நாட்டு விமான நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 சதவீத பங்குகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதனை சார்ந்தே தற்போது எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) பங்குகளை வாங்குவது பற்றி கூறியிருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்பது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவை பொறுத்தே அமையும். ஆனால் எதிஹாட் நிறுவனம் வாங்கப்போகும் விலை பங்கு ஒன்றுக்கு ரூ.150 என்பது தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

 

தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கு விலை ரூ. 270 ஆக சந்தையில் வர்த்தகமாகியுள்ளது. புதன் கிழமை (16-01-2019) அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8 சதவீத இறக்கத்தை கண்டுள்ளது. எதிஹாட் நிறுவனத்தின் குறைந்த விலையிலான மதிப்பீடு தான் ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை சரிவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

2017-18 ம் ஆண்டில் எல்.ஐ.சி. இந்தியாவின் வளர்ச்சி மந்தமானது

2017-18 ம் ஆண்டில் எல்.ஐ.சி. இந்தியாவின் வளர்ச்சி மந்தமானது

LIC India’s growth Sluggish in the year 2017-18

 

சமீபத்தில் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI)  2017-18 ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. தனிநபருக்கான கிளைம் (Individual Insurance Claim Settlement) கோருவதில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஆயுள் காப்பீட்டு பிரிவில் உள்ள ஒரே பொது நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் 2017-18 ம் ஆண்டில் 98.04 சதவீத கிளைம் விகிதத்தை பெற்றுள்ளது.

 

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கிளைம் விகித பங்கு 95.24 சதவீத அளவில் இருந்தது. அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டை கோரும் கிளைம் விகிதத்தில் 97.68 சதவீதத்தை கொண்டுள்ளது. 2017-18 ம் ஆண்டுக்கான அறிக்கையில் எல்.ஐ.சி. இந்தியாவின்(LIC India) நிகர லாபம் ரூ. 2446 கோடியாக உள்ளது. இதுவே கடந்த 2016-17 ம் காலத்தில் நிகர லாபம் ரூ. 2231 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எல்.ஐ.சி. நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து இருந்தாலும், மொத்த ப்ரீமியத்துக்கான வருவாயில் அதன் பங்கு பின்னடைவை சந்தித்துள்ளது. 2016-17 ம் ஆண்டில் 71.81 சதவீதத்தை கொண்டிருந்த இந்த நிறுவனம் கடந்த 2017-18 ம் வருடத்தில் 69.36 சதவீத பங்கினை மட்டுமே கொண்டிருந்தது.

 

கடந்த வருடத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் தனிநபருக்கான காப்பீடு(Individual Death Claim Settlement Ratio) கோருதலில் 8.28 லட்சம் கிளைம்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 14,623 கோடி ரூபாய். அதே நேரத்தில் 9,286 காப்பீடுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுக்களின் மொத்த மதிப்பு ரூ. 532 கோடி.

 

2017-18 ம் வருடத்தில் புதிய பாலிசிக்கான எண்ணிக்கையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு குறைந்துள்ளது. தனியார் நிறுவனங்களின் புதிய காப்பீடு எண்ணிக்கை 8.5 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் மொத்தம் விற்கப்பட்ட புதிய பாலிசிகளின் எண்ணிக்கை 282 லட்சம் ஆகும். இவற்றில் எல்.ஐ.சி. பங்கு 75 சதவீதமும், மற்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு 25 சதவீதமும் இருந்தது. இருப்பினும் 2016-17 ம் ஆண்டினை ஒப்பிடும் போது, எல்.ஐ.சி. நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை.

 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2017-18 ம் நிதியாண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் காப்பீடுகளின் பங்கு 70 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அதே வேலையில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் (Private Insurance) பங்கு 27.69 சதவீதத்திலிருந்து 30.65 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகளவில் காப்பீடு  வளர்ச்சியில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. உலகளாவிய காப்பீட்டு சந்தையில் நமது நாட்டின் பங்கு 2.76 சதவீதமாகும். வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் வரிசையில் இந்தியாவில் தான் காப்பீடுகளின் தேவையும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனம் – ஜிரோதா

நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனம் – ஜிரோதா

Largest Stock Broker in India – Zerodha

 

சுமார் 8.47 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட பங்குச்சந்தை தரகராக தற்போது ஜிரோதா நிறுவனம்(Zerodha) உள்ளது. இதற்கு அடுத்தாற் போல் ஐ.சி.ஐ.சி.ஐ. செக்கியூரிட்டிஸ் (ICICI Securities) நிறுவனம் 8.44 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜிரோதா நிறுவனத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் செயலில் உள்ளவர்கள் (Active Clients) என்பது கவனிக்கத்தக்கது.

 

கடந்த 2010 ம் வருடம் நிதின் காமத் (Nithin Kamath) மற்றும் நிகில் காமத் (Nikhil) ஆகிய இருவரால் துவங்கப்பட்ட பங்குச்சந்தை தரகு நிறுவனம் தான் ஜிரோதா (Zerodha). பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தை உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது எனலாம். பெரிய தரகு நிறுவனங்கள் பிரமாண்டமான அலுவலக கிளைகளை ஏற்படுத்தியும், வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட தரகு கட்டணத்தையும் (Brokerage Charges) வசூலித்து வந்த நிலையில், ஜிரோதா நிறுவனம் இணையம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தரகு கட்டணத்திலும் சலுகையை கொண்டு வந்தது.

 

நாளொன்றுக்கு 20 லட்சம் வர்த்தக பரிவர்த்தனைகளையும், சராசரி தினசரி வர்த்தக மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியும் நடைபெற்று கொண்டிருப்பதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரகு கட்டணத்தில் சலுகை (Discount Broking) காட்டிய இந்நிறுவனம், டெலிவரி(Delivery Shares) என்று சொல்லப்படும், பங்குகளை இன்று வாங்கி மற்றொரு நாளில் விற்கும் பரிவர்தனைகளுக்கு எந்தவொரு தரகு கட்டணத்தையும் பெறுவதில்லை (Zero Brokerage). இது மற்ற தரகு நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Clients Stock Brokers wise 2018

400 கோடி ரூபாய் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜிரோதா நிறுவனத்தில் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்களும், 8.47 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பல சவால்களை சந்தித்த இந்த நிறுவனம் கடந்த வருடத்தின் சிறந்த தரகு நிறுவனமாகவும் பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து விருதை பெற்றது. இதை விட மற்றொரு சிறப்பம்சம் ஜிரோதா நிறுவனத்திற்கு எந்த கடனும் இல்லை என்பது தான்.

 

தொழிலில் புதுமை, தொழில்நுட்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துதல் மற்றும் கடனில்லாமல் நிறுவனத்தை நடத்துவது போன்ற்வை ஜிரோதா நிறுவனத்தை தற்போது நாட்டின் மிகப்பெரிய தரகு நிறுவனமாக (Largest Stock Broker) மாற்றியுள்ளது. இதற்கு பின்னர் பல சவால்களும், நம்பிக்கைகளும் இருந்ததாக நிறுவனர் நிதின் காமத் கூறியுள்ளார். பல கோடி ரூபாய் முதலீடுகளை செய்து விட்டு, பங்குச்சந்தை தரகு நிறுவனமாக உருவெடுக்கும் ஒரு நிறுவனம் பெரும்பாலும் அதன் வாடிக்கையாளரையே சார்ந்துள்ளது. இதனால் தரகு கட்டணங்களும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com