Category Archives: Fundamental Analysis – Stocks

Earning per share (EPS) and Book Value – வகுப்பு 6.0

Earning per share (EPS)  and Book Value – வகுப்பு  6.0

Fundamental Analysis – Factors – EPS & Book value

 

 

நாம் தொழிலின் முதற்கணக்கை இங்கே ஆரம்பிக்க இருக்கிறோம். நமக்கான பங்கினை தேர்வு செய்வதற்கு, நாம் வாங்கும் ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதனை கவனமாக கொள்ள வேண்டும். நாம் பங்குச்சந்தையில் தொழில் செய்ய தான் வந்துள்ளோம். அதனால் நீண்ட கால நோக்கில் நாம் லாபமடைய வேண்டும் மற்றும் நஷ்டத்தினையும் முடிந்தளவு குறைக்க வேண்டும். ஆனால் நஷ்டத்தை தவிர்த்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் ஏற்கனவே சொன்னது போல, நாம் தொழிலில் தான் ஈடுபட்டுளோம். நஷ்டமடையாமல் தொழிலில் எப்போதும் லாபம் மட்டுமே பார்க்க முடியுமா என்ன !  வாருங்கள் முதலில் EPS என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம்.

 

 

Earning Per Share (EPS):

 

EPS ன் விரிவாக்கத்திலேயே நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம்; ஒரு பங்கு மீதான வருமானம் அல்லது நாம் வாங்கும் ஒரு பங்குக்கான வருமானம் என கொள்ளலாம். நம் தேநீர் நண்பர் தொழிலை போல தான். நாம் அவர் தொழிலில் பங்குதாரர் என கொள்வோம்.

 

நமது முதலீடு  (அ) பங்கு:   

 

நண்பரின் முதலீடு –  ரூ. 2,00,000 /-

 

நாம் செய்த முதலீடு  – ரூ. 1,00,000 /-         ( மொத்த முதலீடு –  ரூ. 3,00,000 /- )

 

நண்பரின் தொழிலில் ரூ. 3,00,000 /- முதலீட்டை ரூ. 10 முகமதிப்பு (Face value)  கொண்ட 30,000 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ( 10 X 30,000 )

 

நண்பருக்கான பங்குகள் – 20,000  ( 10 X 20000 = 2,00,000 /-)

 

நமக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் –  10,000  ( 10 X  10000 = 1,00,000 /-).

 

ஆக, ஒவ்வொரு முதலீட்டிற்கும் ஏற்ப பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல தான் பங்குச்சந்தையில், நமக்கு ஒரு நிறுவனத்தில் நாம் கேட்ட பங்குகள் கிடைக்கும் அல்லது விற்பனையில் இருக்கும் பங்குகள் அதன் விலையில் கிடைக்கும்.

 

உதாரணத்திற்கு, நமது நண்பரின் முதல் மாத வருமானம் (செலவுகள் போக) – ரூ. 60,000 /- என எடுத்துக்கொண்டால்,  மொத்த முதலீட்டின் மீதான வருமானம்:

 

Rs. 60,000 /-  ( For Total Investment of Rs. 3 lakhs) – Net Profit

 

EPS = Net Profit / No., of shares

 

60,000 / 30,000 = Rs. 2 /- (EPS)

 

எனவே, ஒரு பங்கிற்கு கிடைத்த முதல் மாத வருமானம் – ரூ. 2 /- ஆகும். நல்லது தானே 🙂   10 ரூ. முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு சம்பாதித்த தொகை – ரூ. 2 ஆகும். இதனை தான் நாம் EPS என்கிறோம். தொழில் லாபத்தில் தான் உள்ளது. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் EPS  காலாண்டிற்கு ஒரு முறை (அ) வருடத்திற்கு ஒரு முறை என தகவல் வெளியிடப்படும். நாம் அதனை பார்த்து நாம் வைத்திருக்கும் பங்குகளுக்கான தொழில் சம்பாதித்த வருமானத்தை பார்த்து கொள்ளலாம்.

 

இங்கே நமது நண்பரின் தொழிலில் நமக்கான பங்குகள் – 10,000 மற்றும் நம்முடைய முதலீடு ரூ. 1,00,000 /-  ஆகும். பங்கின் மீதான வருமானம் என்பது தொழிலின் மொத்த முதலீடு (அ) எல்லா பங்குகளை சேர்த்தே கணக்கிடப்படும். நமது நண்பரின் தொழிலின் அடுத்த மூன்று மாதங்களுக்கான EPS (ஒவ்வொரு மாதம்) – Rs. 2, 5, 6 என எடுத்து கொண்டால் அதன் பங்கின் மீதான வருமானம் வளர்ந்து கொண்டே செல்கிறது என அர்த்தம். இது நமக்கும் நல்லது தான்.

 

எளிமையாக,  EPS  = Net Profit / Total No. of Shares.   EPS வளர்ச்சி உள்ள பங்குகளை வாங்குவது நல்லது. அந்த நிறுவனம் தான் பெற்ற முதலீட்டிற்கு வருமானம் தந்து கொண்டிருக்கிறது.  பொதுவாக ஒரு பங்கு மீதான வருமானம் என்பது அதன் முகமதிப்பு அடிப்படையில் தான். சந்தையின் விலையில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

XYZ நிறுவனம் 2016 – 17 (Financial Year) க்கான நிதி ஆண்டில் நிகர லாபமாக (Net Profit) ரூ. 5 கோடியை சம்பாதித்துள்ளது. அதன் மொத்த பங்கு முதலீடு (Equity) – ரூ. 2 கோடி. ஒரு பங்கிற்கான முகமதிப்பு (Face Value) –  10, சந்தை விலை – ரூ. 50 /- எனில்,

 

அதன் மொத்த பங்குகள் (Total No., of shares)  எத்தனை  ?

ஒரு பங்குக்கான வருமானம் (EPS) எவ்வளவு ?

 

கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

 

P/E (Price to Earnings):

 

நாம் ஒரு பங்கு மீதான வருமானத்தை EPS என்கிறோம்; இங்கே P/E  என்பது அந்த பங்குக்கான வருமானத்தை போல, அதன் சந்தை விலை எவ்வளவு மடங்கு உள்ளது என அறிவது.

 

உதாரணத்திற்கு,

 

நாம் வாங்க போகும் XYZ  நிறுவனத்தின் 2016 – 17  நிதியாண்டுக்கான EPS – ரூ. 15 மற்றும் அதன் சந்தை(Current Market Price) விலை – ரூ. 90.  இப்போது அதன் சந்தை விலை EPS ல் எத்தனை மடங்கு என கணக்கிட்டால்,

 

P/E = Current Market Price (P) / Earning per share (E) =   90 / 15 = 6 Times.

 

சந்தை விலையானது EPS ஐ போல, 6 மடங்கு உள்ளது. பொதுவாக சந்தையில் குறைவான P/E மடங்கு உள்ளது நல்லது.

 

ஆனால், அதற்காக குறைவான மடங்கு உள்ள பங்குகளையே பார்த்து விட்டு வாங்க கூடாது. அதன் காரணங்களை பின்னர் அறியலாம்.

 

இந்த P/E விகிதத்தையே இன்னொரு முறை மூலம் வித்தியாசப்படுத்தலாம். அதாவது P/E விகிதத்தை தலை கீழாக பயன்படுத்தினால்,

 

1 / (P/E)   =  1 / 6 = 0.1666  X 100 = 16.66 %

 

இதனை நமது பங்குக்கான முதலீடு எவ்வளவு லாபம் (அ) நஷ்டத்தினை தரலாம் என்பதை கண்டறியலாம். இங்கே 16.66 % லாபம் கிடைத்துள்ளது.

 

நாம் மேலே EPS ல் கேட்ட கேள்விகளில், P/E கண்டறிவதையும் சேர்த்து கொள்ளுங்கள். அதற்கான P/E ஐ கண்டுபிடுயுங்கள்.

 

( Read this post after the advertisement… )

 

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

PEG (Price to Earnings Growth):

 

நாம் P/E எவ்வாறு கண்டறிவது என்பதை இதற்கு முன் பார்த்தோம். அந்த P/E வளர்ச்சியினையும் பார்த்து விடுவோம்.

 

சுருக்கமாக, கடந்த சில வருடங்களாக பங்கு மீதான வருமானம் ஈட்டும் ஒரு நிறுவனத்தை பார்ப்போம். XYZ நிறுவனம் கடந்த 5 வருடங்களாக, தொடர்ச்சியாக 10 % EPS வளர்ச்சி மற்றும் P/E விகிதம் – 16  ஐ கொடுக்கும் பட்சத்தில் அவற்றின் P/E வளர்ச்சி (PEG),

 

PEG Ratio = (P/E) / EPS Growth  = 16 / 10 =  1.06

 

நாம் கணக்கிட்ட இந்த P/E வளர்ச்சியானது, கடந்த கால மதிப்புகளை (EPS, P/E) கொண்டு தான் செயல்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இதே வளர்ச்சியை கொண்டிருக்கலாம் என்றால், இதே PEG வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். மாறாக வருமானத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருந்தால் இதன் வளர்ச்சி விகிதமும் மாறும். இது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என சொல்லவில்லை. அதனால் இது ஒரு கணக்கீடாக மட்டும் தான் எடுத்து கொள்ளவேண்டும். இதனையே காரணமாக எடுத்து கொண்டு பங்கு வாங்குவது கூடாது. பங்குச்சந்தை காரணிகள் அனைத்தையும் ஆராய்ந்து விட்டு தான் பங்கு முதலீடு செய்வது, முதல் மீதான ஆபத்தை (Risk) குறைக்கும்.

 

புத்தக மதிப்பு (Book Value):

 

புத்தக மதிப்பை பற்றி நாம் ஏற்கனவே பங்குச்சந்தை அடிப்படை வரையறை – வகுப்பு 4.0 ல் பார்த்தோம்.

 

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு தான் அதன் புத்தக மதிப்பு. பொதுவாக நிறுவனத்தின் சொத்துகளிலிருந்து, கடன்களை கழித்தால் கிடைப்பது தான் புத்தக மதிப்பு எனப்படும்.

 

உதாரணத்திற்கு,  

 

XYZ நிறுவனத்திற்கு உள்ள சொத்துக்கள் – ரூ. 5 கோடி மற்றும் கடன்கள் – ரூ. 2 கோடி என்றால், அதன் புத்தக மதிப்பு,

 

Book Value  = Total Assets – Total Liabilities = ( 5 – 2) =   ரூ. 3 கோடி.

 

நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகள் – 3 லட்சம் எனில்,  ஒவ்வொரு பங்குக்கும் கிடைக்கும் புத்தக மதிப்பு – ரூ. 100 ( 3 கோடி / 3 லட்சம் பங்குகள்)

 

ஒரு நிறுவனம் ஏதேனும் காரணத்தால் விற்கப்படுமாயின், முதலீட்டாளருக்கு கிடைக்கும் மதிப்பு அல்லது தொகை – புத்தக மதிப்பு.

 

Price to Book Value (P/Bv):

 

ஒரு பங்கின் சந்தை விலை அதன் புத்தக மதிப்பில் எத்தனை மடங்கு உள்ளது என்பதை அறிவது.

 

உதாரணத்திற்கு,

 

XYZ நிறுவனத்தின் புத்தக மதிப்பு – ரூ. 100 மற்றும் அதன் சந்தை விலை – ரூ. 300 எனில், அதன் P/Bv:

 

Price to Book value =  300 / 100 = 3.33 Times (Trading at 3 times on its book value)

 

தற்போது இருக்கும் சந்தை விலை, அதன் புத்தக மதிப்பை விட 3 மடங்கு விலையில் வர்த்தகமாகிறது. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும் போது அதன் சந்தை விலை கூடும். அதன் காரணமாக புத்தக மதிப்பின் மடங்கிலும் மாற்றம் ஏற்படும். நல்ல நிறுவனத்திற்கு சில நேரங்களில் நல்ல மற்றும் அதிக விலை கொடுத்தாலும் வாங்கலாம்.

 

நினைவில் கொள்ளுங்கள்:

 

  • EPS வளர்ச்சி  விகிதம் (High EPS)  ஒவ்வொரு  காலாண்டும்  மற்றும் ஒவ்வொரு வருடமும்  அதிகமாக  இருக்கும்  நிறுவனத்தை  உற்று  நோக்குங்கள். சில  நிறுவனங்கள்  அதன்  இதர  சொத்து  விற்பனை  (Other income) மூலம்  வருமானத்தை  காட்டும். சொத்து  விற்பனை  அதன்  உண்மையான  செயல்பாடுகளின் மீதான வருமானத்தை காட்டாது. அதனால் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகள் விற்பனை மூலம் கிடைத்த செயல்பாட்டு லாபங்களை (Operating profit) கொண்டு பாருங்கள்.

 

  • ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அந்த துறையின் சராசரி P/E (Industry) மற்றும் துறை சார்ந்த போட்டி நிறுவனங்களின் P/E (Peers) உடன் ஒப்பிட்டு பாருங்கள். P/E விகிதம் குறைவாக (Low P/E) இருக்கும் நிறுவனங்களை பாருங்கள். அதே நேரத்தில் ஒரு நிறுவனம் அந்த துறையில் தலைமையாக (Market Leader) இருக்கும் போது அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனால் அதன் தேவை அதிகமாக இருக்கும் மற்றும் P/E விகிதமும் அதிகமாக காணப்படும். இதனை போன்றும் பாருங்கள். ( E.g:  TCS, Infosys, Pidilite, Asian Paints, HUL, ITC, MRF )

 

  • P/E ன் தலைகீழ் தான் உங்கள் முதலீட்டுக்கான வருமானம். அதனால் 1 / (P/E) விகிதம் மற்ற முதலீடு சாதனங்களை விட (Bank Deposits, Postal Savings, Bonds) அதிக வருமானம் தருகிறதா என பாருங்கள்.

 

  • PEG விகிதம் 1 க்கு கீழ் (Below 1.0) இருந்தால் ஒரு நிறுவனத்தின் பங்குக்கு நல்லது. அதற்காக மிக குறைந்த PEG ஐ பார்க்க வேண்டாம். ஏனென்றால், கடன் அதிகம் உள்ள நிறுவனத்திற்கும் இந்த விகிதம் சில சமயங்களில் குறைவாக காட்டப்படும். எல்லாம் கணக்கு செய்யும் வேலை தான் 🙂

 

  • ஒரு பங்கின் புத்தக மதிப்பு (High Book value) அதிகமாக இருப்பது நல்லது. அதே சமயத்தில் அதன் P/Bv மடங்கு அதிகமாக இருக்காமல் பார்த்து கொள்வதும் அவசியம். நன்றாக செயல்படும் நிறுவனத்தின் சந்தை விலை அதிகமாக இருக்கும் போது P/Bv விகிதமும் அதிகமாக இருக்கும். சந்தை விலை குறையும் போது, அந்த பங்கை வாங்கலாம்.  ஆனால் புத்தக மதிப்பு அதிகம் இருப்பது முக்கியம்.

 

  • P/Bv விகிதத்தை அந்த துறையில் உள்ள மற்ற போட்டி நிறுவனத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

 

  • EPS, P/E, P/Bv – எதுவாக இருந்தாலும் அதன் விகிதத்தை கடந்த 5 – 10 வருடத்திற்கான நிதி அறிக்கையின் மூலம் பாருங்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே பார்ப்பது சரியாக வராது. ஒரு பங்கு வாங்குவதற்கு இந்த காரணிகள் மட்டும் போதாது. மற்ற காரணிகளையும் நாம் பார்த்து விடுவது சிறந்தது.

 

 

அடுத்த வகுப்பில், நாம் இந்த காரணிகளை நடைமுறை பயிற்சியின் (Practical Way) மூலம் பார்ப்போம்.  இந்த வகுப்பின் உங்களுக்கான சந்தேகங்களை பகிர மற்றும் கருத்து தெரிவிக்க,

 

https://varthagamadurai.com/contact/

 

(or)

 

mailto:  contact@varthagamadurai.com

 

பதிவு  செய்யுங்கள்.

 

அடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0

அடிப்படை  பகுப்பாய்வு  – காரணிகள்  – வகுப்பு  5.0

Fundamental Analysis Factors or  Financial Ratios

 

நினைவில்  கொள்ளுங்கள்  – “ பங்குச்சந்தை  ஒரு  தொழில்; நீங்கள்  அந்த  தொழிலில் ஒரு நிறுவனத்தின்  பங்குதாரர். “

 

இந்த  வகுப்பின்  அவசியமே  தொழில்  தான்.

 

நமது  தேநீர்  நண்பர்  தொழிலை  போல… நண்பர்  என்பதற்காக  நாம்  நம்  பணத்தை  கொடுத்து  விட  முடியாது. நமக்கு  அவரின்  தொழில்  மிகவும் முக்கியம். அதை  விட  அவரின்  தொழில்  கணக்குகள் ( நிதி  அறிக்கைகள்) மிகவும்  அவசியமான  ஒன்று. நாம்  சில வகுப்பிற்கு முன் பார்த்த  ஒரு  தொழிலின்  வரவு – செலவு, லாப – நட்ட கணக்குகள் தான் இங்கே பயன்பட போகிறது. அதாவது  ஒரு நிறுவனம்  அல்லது தொழிலின்  நிதி  அறிக்கையை  மிக  எளிமையான முறையில் நாம் கண்டறிந்து கொள்ள இந்த விகிதங்கள்  உதவுகிறது. இதனை காரணிகள் (Financial Ratios or Factors) எனவும் பெயரிடலாம்.

 

நிதி  அறிக்கைகள்  சம்மந்தமான விகிதங்கள்  அல்லது  காரணிகள்  பல  இருப்பினும், நமக்கு  ஒரு  நிறுவனத்தின்  பங்கினை  தேர்ந்தெடுப்பதற்கு  தேவையான முக்கிய காரணிகளை  பார்ப்போம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

காரணிகள் 10 (Factors – 10):

 

 

நாம் மேலே சொன்ன 10 முக்கிய காரணிகள் தான் அடிப்படை பகுப்பாய்வுக்கான அவசியம். ஒரு தொழிலின் மதிப்பை இதன் மூலம் கண்டறியலாம். அடுத்து வரும் ஒவ்வொரு வகுப்பிலும் இந்த காரணிகளை பற்றி நடைமுறையோடு (Practical Way) ஆராய்வோம்.

 

உங்களுக்கான நடைமுறை பயிற்சிக்காக ஒரு மாதிரி – இருப்பு நிலை அறிக்கை மற்றும் வருமான அறிக்கையை பாருங்கள்.

Sample of Balance sheet and Income Statement:

 

(Image and Data Courtesy:  http://www.accounting-basics-for-students.com/ )

 

Sample Balance Sheet:

Balance sheet sample

 

 

 

 

 

 

 

 

 

 

Sample Income Statement:   

 

Income Statement sample

 

 

உங்கள்  பங்கு  மீதான  வருமானத்திற்கு (EPS)  தயாராகுங்கள். அடுத்த  வகுப்பில்  சந்திப்போம்.

 

 

 

 

 

பங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0

Stock Market Fundamentals – Definitions

பங்குச்சந்தை அடிப்படை  வரையறை – வகுப்பு 4.0 :

பங்கு  என்பது  என்ன  ?  (What is a Share or Stock  ? )

 

பங்கு (Share or Stock) என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிலில் உள்ள ஒரு பகுதி (அ) பகுதிகளுக்கான உரிமை. ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் தனது நிதி சார்ந்த முதலீட்டை பல பகுதிகளாக பிரித்து வைத்திருக்கும். உரிமை கோரும் ஒவ்வொருவருக்கும் தேவையான பகுதிகள் ஒதுக்கப்படும். அவையே பங்குகள் எனப்படும். பங்குகள் வாங்குவதினால் அந்நிறுவனத்தின் ஒரு பகுதி உரிமையாளாராகலாம். அந்த நிறுவனத்தின் லாபங்களில் நமக்கான பங்கும் உண்டு.

 

XYZ நிறுவனம் தனக்கான முதலீடு ரூ. 1,00,000 /- ஐ பங்கு ஒன்றுக்கு ரூ.10  வீதம் பிரித்தால் 10,000 பங்குகள் பிரிக்கப்படும். இந்த  10,000 பங்குகளில் உரிமை கோருபவருக்கு தேவையான பங்குகள் ஒதுக்கப்படும்.

 

பங்கு ஒன்றுக்கு ரூ. 10 என்பது முக மதிப்பு (Face value) எனப்படும். எனவே 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10,000 பங்குகள் சேர்ந்தால் ரூ. 1,00,000 /- முதலீடு ஆகும்.

 

பங்குச்சந்தை என்பது என்ன ? (What is a Share Market ?)

 

பங்குச்சந்தை (Stock Market) என்பது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழில்  முதலீட்டை பொதுவெளியில் (Publicly) திரட்டிக்கொள்ளும் ஒரு சந்தை ஆகும். நிறுவனங்கள் என்பது தனியாராகவோ (அ) அரசு சார்ந்த நிறுவனம் (அ) அரசாங்கமே இருக்கலாம். பங்குச்சந்தையில் பங்கு வாங்குவது மற்றும் விற்பது நடக்கும். பங்குச்சந்தையில் நிறுவனங்கள் முதலீடு திரட்டுவதற்கு பொதுவுடைமை  நிறுவனமாக (Public Limited Company) பதிவு செய்திருக்க வேண்டும்.

 

பங்குச்சந்தையில் இரு வகை சந்தைகள் உள்ளன. ஒன்று முதன்மை சந்தை (Primary Market), மற்றொன்று இரண்டாம் நிலை சந்தை (Secondary Market). பங்குச்சந்தையில் புதிதாக ஒரு நிறுவனம் பொதுவுடைமை நிறுவனமாக்கப்பட்டு, முதலீடு திரட்டுவதற்கு விண்ணப்பிக்கும் போது, அவை முதலில் முதன்மை சந்தையில்(Primary Market) தான் பட்டியலிடப்படும். இந்த முறையை Initial Public Offer (IPO) எனப்படும். IPO வில் நிறுவனங்கள் தங்கள் தொழிலின் அறிக்கைகள், முதலீடு திரட்டுவதற்கான அறிவிப்புகள் மற்றும் காரணங்கள், முதலீட்டின் மதிப்பு, ஒரு பங்குக்கான விலை வரம்பு ஆகியன தெரிவிக்கப்படும்.

 

பொதுவாக முதன்மை சந்தையில் நிறுவன முதலீட்டாளர்கள் (Institutional Investors), வங்கிகள் (Banks), வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரிய முதலீட்டாளர்கள் தான் பங்கேற்று பங்குகளை பெறுவர். சிறு முதலீட்டாளர்களின் வரவு குறைவே.

 

முதன்மை சந்தையில் வாங்கிய பங்குகள், இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market)  விற்பனைக்கு வரும் போது நாம் ஏற்கனவே சொன்ன முதலீட்டாளர்களும், சிறு மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்று பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவர்.

 

சுருக்கமாக சொன்னால், பங்குச்சந்தை மூலம் நிறுவனங்களுக்கு தேவையான முதலீடும், முதலீட்டாளர்களுக்கு நிறுவன பங்கின் உரிமையும் கிடைக்கும்.

 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர்களின் பங்கு லாப – நட்ட மதிப்புக்கு உட்பட்டது. சந்தையில் ஏற்படும் நஷ்டத்திற்கு முதலீட்டாளர்களே பொறுப்பு; நிறுவனம் அல்ல !

 

financial market structure india

 

 

பங்குச்சந்தை அமைப்பு ( Stock Market Exchange ):

 

பங்குச்சந்தையை  சந்தைப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களின்  நலனை  பாதுகாத்தல், பட்டியலிடப்படும்  நிறுவனங்களை  ஒழுங்குமுறைப்படுத்துதல்  போன்றவற்றை  SEBI (Securities and Exchange Board of India ) என்ற  ஒழுங்கு முறை ஆணையம்  நிர்வகிக்கிறது. இந்தியாவில் நிறைய  பங்குச்சந்தைகள்  இருப்பினும், இரண்டு  பங்குச்சந்தைகள்  மட்டும்  பெரும்பாலும்  பரவலாக்கப்பட்டுள்ளன.

 

  • NSE (National Stock Exchange) – தேசிய  பங்குச்சந்தை

 

  • BSE (Bombay Stock Exchange) – மும்பை  பங்குச்சந்தை

 

NSE – இந்தியாவிலுள்ள முன்னணி பங்குச்சந்தை. 2000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

 

BSE – ஆசியாவின் முதல் மற்றும் மிக  பழமையான  பங்குச்சந்தை  ( Since 1852 ). உலகளவில்  முதல்  பத்து  இடத்தில் இருக்கும்  மிகப்பெரிய  பங்குச்சந்தை  ஆகும். 5000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.   மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு 4485 பில்லியன் டாலராகும் (ரூ. 4,48,500 கோடிகள்). உலகின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்காவின் NYSE (New york Stock Exchange) – (20 லட்சம் கோடி டாலர்) உள்ளது.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

 

 

பங்கு தரகர் (Stock Broker):

 

பங்கு தரகர் என்பவர் SEBI ஒழுங்குமுறை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) ஒரு தரகு நிறுவனம். இந்த பங்கு தரகர் தான் பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு பாலமாக உள்ளார். பங்குச்சந்தையில் நாம் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றால், பங்கு தரகர் இல்லாமல் வாங்க முடியாது. நமக்கு தேவையான பங்கை வாங்க மற்றும் விற்க இவர் மூலமே முடியும். பங்கு தரகராக பதிவு செய்யும் நிறுவனம் கோடிகளில் சொத்து மதிப்பையும் (Networth) கொண்டு, பங்குச்சந்தை அமைப்புக்கு லட்சங்களில் கட்டணங்களை(Fees and Deposits) செலுத்த வேண்டும்.

 

பங்கு தரகர் என்பவர் Trading Member என்றும் சொல்லப்படுவார். இவரிடம் தான் நீங்கள் பங்கு வர்த்தக கணக்கை (Trading Account) ஆரம்பிக்க வேண்டும்.

 

முதலீட்டாளர் (Investor):

 

முதலீட்டாளர் என்பவர் தனது மூலதனத்திற்கு,  எதிர்பார்த்த நிதி சார்ந்த வருவாயை முதலீடு மூலம் செயல்படுத்துபவர். முதலீட்டாளர் தான் எதிர்பார்த்த வருவாய்க்காக பல முதலீட்டு சாதனங்களை (Investment Products) அறிந்து மற்றும் ஆராய்ந்து முடிவெடுப்பார். அவர் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வார். முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை (Risk Management) உணர்ந்து, ஒரு மதிப்புமிக்க முதலீட்டாளராக இருப்பார்.  – Value Investor

 

சந்தை மூலதனம் (அ) மதிப்பு (Market Capitalisation):

 

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் மதிப்பு. நிறுவனத்தின் மொத்த பங்குகளை, பங்கு ஒன்றின் விலையால் பெருக்கினால் கிடைக்கும் மதிப்பு தான் சந்தை மூலதனம் (Market Cap)

 

Rs. 100 / share

 

Market cap = 100 (Share Price)  X 10,00,000 (No. of shares) = 100,000,000  ( 10 கோடி)

 

முக மதிப்பு (Face Value):

 

ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Primary Market) போது, ஒரு பங்கிற்கான மதிப்பு தான் முக மதிப்பு (Face Value).

 

Face value = Rs. 10 / share.

 

சில நிறுவனங்கள் தங்கள் முகமதிப்பிலேயே பங்குகளின் விலையை நிர்ணயிக்கும். இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் தொழிலின் பாரம்பரியம் மற்றும் மதிப்பின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கும். அவை முக மதிப்பை விட விலை அதிகமாக இருக்கும். இதனை Premium price என்பர்.

 

Market Price (with premium) = Rs. 50 / share (Face value – Rs. 10 /share)

 

பொதுவாக, நிறுவனங்கள் முக மதிப்பு அடிப்படையிலே முதலீடுகளை திரட்டும். ஆனால் ஒரு பங்கின் விலை Premium price ல் வரலாம்.

 

புத்தக மதிப்பு (Book Value):

 

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு தான் அதன் புத்தக மதிப்பு.  புத்தக மதிப்பை ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு எனவும் சொல்லலாம்.

 

Book Value = Total Assets – Intangible Assets – Liabilities

 

நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை அதன் கடன்கள் மற்றும் தொட்டுணுற முடியாத சொத்துகளிலிருந்து(Intangible Assets) கழித்தால் கிடைப்பது புத்தக மதிப்பு. Intangible Assets – Patents, License, Copyright, Goodwill, Software.

 

ஒரு நிறுவனம் ஏதேனும் காரணத்தால் விற்கப்படுமாயின், முதலீட்டாளருக்கு கிடைக்கும் மதிப்பு அல்லது தொகை – புத்தக மதிப்பு. நமது தேநீர் நண்பர் தனது தொழிலை மற்றவருக்கு விற்று விட்டால், கடன்கள் போக மீதி அவருக்கு (பங்குதாரருக்கு) கிடைப்பது.

 

பங்குச்சந்தை குறியீடு (Market Index):

 

பங்குச்சந்தை குறியீடு என்பது பங்குச்சந்தையின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது பிரிவின் அளவீடு ஆகும்.

 

BSE 500 – மும்பை பங்குச்சந்தை 500 ல் உள்ள பட்டியலிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட 500 நிறுவனங்களின் சந்தை மூலதன (Market Cap) சராசரி மதிப்பு தான் அதன் குறியீடு.

 

S & P BSE – 500:  Index value – 14,500

 

Nifty 50 – 10,400

 

Nifty SML 100 Free – 8480

 

S & P BSE Capital Goods – 19,220

 

சென்செக்ஸ் ( BSE Sensex):

 

இது மும்பை பங்குச்சந்தையின் குறியீடு (Sensitive Index – Sensex). இந்த குறியீட்டின் கீழ் மொத்தம் 30 பட்டியலிடப்பட்ட  நிறுவனங்கள் உள்ளன. இந்த 30 நிறுவனங்களின் தினசரி சராசரி சந்தை மதிப்பை கொண்டே குறியீடு இயங்கும். இதே போல Small Cap, Mid Cap மற்றும் ஒவ்வொரு தொழில் துறைகளுக்கும் (Sector) என பல்வேறு குறியீடுகள் உள்ளன. ஒரு குறியீட்டின் கீழ் அதே நிறுவனங்கள் தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அதன் சந்தை மதிப்பை பொருத்து குறியீடுகள் மாற்றப்படலாம்.

 

உதாரணத்திற்கு BSE: Sensex 30 உள்ள XYZ நிறுவனத்தின் வர்த்தக சந்தை மதிப்பு குறைந்தால் அந்த நிறுவனம் வேறு ஏதேனும் குறியீடுகளுக்கு மாற்றப்படலாம். அதற்கு பதில் BSE: Sensex 30 ல் மற்றொரு நிறுவனம் சேர்க்கப்படும்.

 

நிப்டி (Nifty):

 

இது தேசிய பங்குச்சந்தையின் குறியீடு (NSE Fifty). இந்த குறியீட்டில் நன்றாக செயல்படும் மொத்தம் 50 நிறுவனங்கள் உள்ளன. 50 நிறுவனங்களின் தினசரி சராசரி வர்த்தக மதிப்பை பொருத்து குறியீடு எண் மாறும். BSE Sensex ல் சொன்னது போல இவற்றிலும்  பல குறியீடுகள் உள்ளன.

 

இரண்டு குறியீடுகளுக்கும் இடையே வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டும் இரு வேறு பங்குச்சந்தைகள் – அவ்வளவு தான்.

 

 

பொதுவாக மும்பை பங்குச்சந்தையை விட, தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகமாக நடைபெறும். தேசிய பங்குச்சந்தையை காட்டிலும் மும்பை பங்குச்சந்தையில் நிறுவனங்கள் அதிகம்.

 

 

நாம் மேலே சொன்ன சில வரையறைகள் மூலம் பங்குச்சந்தை அடிப்படையை தெரிந்து கொள்ளலாம்.  இதனை தொடர்ந்து வரும் வகுப்பில், பங்குச்சந்தையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நிதி காரணிகளை (Financial Ratios or Factors) பார்ப்போம்.

 

கற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0

 

கற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0

 

Stock Market –  Fundamental Analysis – Learning Course

பங்குச்சந்தை  –  அடிப்படை  பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு  வரவேற்கிறோம்.

 

கடந்த இரு வகுப்புகள் என்ன சலிப்பாக இருந்ததா ?  🙂

 

என்ன வெறும் கதையாக சொல்லி விட்டு போகீறாரே, அடிப்படை பகுப்பாய்வு என்பது  எங்கே என நீங்கள் கேட்பதுண்டு. கடந்த இரண்டு வகுப்புகள் நமக்கு பணத்தை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தவே…

 

பணம் எவ்வாறு செயல்படுகிறது, வளர்கிறது மற்றும் மாறுபடுகிறது; அது நம்  வாழ்வில் எப்படி உதவுகிறது, பணவீக்கம் என்றால், முதலீட்டில் பங்குச்சந்தையின் பங்கு மற்றும் அதன் தொழில் அமைப்பு ” போன்றவற்றை அறியாமல் நாம் அடுத்த செயலாக்கத்திற்கு நகர முடியாது. பணத்தை நாம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; ஆனால் சம்பாதித்த பணத்தை கொண்டு செல்வத்தை சேர்ப்பதும், அதன் வளர்ச்சியை தக்க வைப்பதும், உங்கள் பணம் உங்களுக்காக உழைத்தால் மட்டுமே முடியும்.  நமது கல்வி பொருளாதாரத்தை பற்றி அவ்வளவாக சொல்லி கொடுக்காததால், நாம் இன்று பொருளாதாரரீதியாக அல்லல்படுகிறோம்.

 

ஏழை – பணக்காரனின் ரகசியம்:

 

” குறுகிய தூரம் செல்பவர்கள் வேகமாக செல்வதும், நெடுந்தூரம் பயணிப்பவர்கள் நிதானமாக செல்வதும் சாலைகளின் ரகசியங்கள்…”

அது தான் ஏழை – பணக்காரனின் ரகசியமும் !

 

 

இந்த வகுப்பு தான், நமது அடிப்படை பகுப்பாய்வுக்கான அடித்தளமாக உள்ளது. வாருங்கள் அலசுவோம்…

 

நாம் சுற்றுலா சென்றாலும் சரி, வேலைக்கு சென்றாலும் சரி, திட்டமிடல் என்பது தனிமனிதருக்கும், குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கும் பொதுவானது தான். திட்டமிடல் என்பது கணிதம் சார்ந்ததாக தான் இருக்கும். இந்த அடிப்படை கணிதத்தை நாம் சரியாக கையாளாததால் தொழில் மற்றும் குடும்பத்தில் நிதிச்சுமை ஏற்படுகிறது. இது  நம் பங்கு முதலீட்டிற்கும் பொருந்தும். ஒரு சிறந்த குடும்பத்தை பொருளாதாரரீதியாக நாம் அலசினால், அது அந்த குடும்பத்தின் வரவு-செலவில் தான். அதே  போல, ஒரு தொழிலின் மதிப்பு என்பது அதன் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பில் உள்ளது. வருமானம் ஈட்டியாதா, இனி வாய்ப்புள்ளதா என கண்டறிவதே வரவு-செலவின் நோக்கம். அதை நாம் எப்படி கண்டறியலாம் ?

 

அதன் நிதி அறிக்கையில் தான் (தொழிலின்  வரவு- செலவு, லாப- நட்டம்)

 

இதற்கு நாம் ஒரு கணித மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நமது பள்ளிக்கால கணக்கே போதும். சில அடிப்படை விஷயங்களை மட்டும் புரிந்து விட்டு செல்வோம்.

 

நிதி அறிக்கைகள் – துளிகள் (Learn Financial Statements):

 

இருப்புநிலை அறிக்கை  ( Balance Sheet ):

 

இருப்பு நிலை அறிக்கை என்பது ஒரு தொழிலின் சொத்துக்கள், கடன்கள் மற்றும்   பங்குதாரர்களின்  பங்கு ஆகியன அடங்கிய  ஒரு  நிதி  அறிக்கை  ஆகும். ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும்  கடன்கள் எவ்வாறு உள்ளது, பங்குதாரர்கள் எவரும் இருந்தால் அவர்களின் பங்கு முதலியவற்றை இந்த அறிக்கை எளிமையாக விளக்கும். இருப்பு நிலை அறிக்கை பொதுவாக கீழ்கண்டவாறு அமையும்:

 

சொத்துக்கள் = கடன்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்கு.

 

Assets = Liabilities and Shareholders’ Equity

 

assets and liabilities

 

மேலே உள்ள இரண்டும் (Sources and Applications) சமமாக இருக்க வேண்டும். Sources ல் உள்ள Liabilities என்பது உங்கள் கடன் சார்ந்ததாக இருக்கும். நீங்கள் உங்கள் தொழிலை ஆரம்பிக்க வங்கியில் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அந்த கடன் Liabilities ல் அடங்கும். உங்கள் தொழிலில் உங்கள் சொந்த முதலீடு, அதாவது நீங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை தொழிலுக்காக பயன்படுத்தியிருந்தால் அது Equity ஆகும்.

 

Equity என்பது தொழிலுக்கான உங்கள்  சொந்த முதலீடு, Liabilities ல் நீங்கள் பெற்ற கடன் அல்லது  மற்றவர்களிடம் பெற்ற கடனாகும்.

 

உங்கள் தொழிலுக்காக நீங்கள் ஏதேனும் பொருட்கள், இயந்திரங்கள் வாங்கியிருந்தால் அது Assets ல் அமையும். நீங்கள் கொள்முதல் விற்பனையாளர்கள் யாருக்கும் முன்தொகை ஏதும் கொடுத்திருந்தால் அவையும் Assets ல்  இருக்கும்.

 

பொதுவாக, Sources என்பது பணம் எப்படி வருகிறது மற்றும்  Applications என்பது பணம் எவ்வாறு செல்கிறது என்பதை சுருக்கமாக சொல்கிறது.

 

Sources உள்ள Liabilities ன் பங்கை குறைவாக  இருந்தால் நல்லது. அதாவது உங்கள் கடன்கள் (Liabilities) அதிகமாக இருந்தால் மீண்டும்  செலுத்த வேண்டிய ஒன்று. அதனால் உங்கள் லாபத்தை பொறுத்து உங்கள் கடனும் இருத்தல் நலம். இது ஒவ்வொரு தொழிலுக்கும் மாறுபடும். சில தொழில்களை நாம் பெரும்பாலும் கடன் வாங்கி  (Credit) தான் செய்ய முடியும்.

 

பங்கு மூலதனம் (Share Capital):

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, Equity என்பது தொழில் அல்லது பங்கு உரிமையாளர்களுக்கு சொந்தமானது. தொழிலை தொடங்கியவர்கள் முதலீடு செய்திருந்தால் அது Capital (மூலதனம்) எனப்படும்.

 

நாம் செய்த முதலீடு போக, பின்னர் பெறப்படும் லாபங்கள் Reserves (கையிருப்பு) எனப்படும். ஒரு நிறுவனத்தில் கையிருப்பு அதிகமாயிருந்தால், அது லாபத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என அர்த்தம். எதிர்காலத்தில் தொழிலில் ஏதேனும் மந்த நிலை ஏற்பட்டாலும், இந்த Reserves ஐ கொண்டு சமாளித்து விடலாம். இந்த Reserves தொகை பங்கு உரிமையாளர்களுக்கு சொந்தமானது எனலாம்.

 

Current Liabilities and Current Assets:

 

கடன்கள் என்பது நாம் செலுத்த வேண்டிய தொகை. இந்த கடன் தொகையை நாம் இரு பிரிவாக ஆராயலாம். நம் நண்பர் தனது தேனீர் கடை தொழிலுக்கு ரூ. 1,00,000 /- கடனாக பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். கடனில் நாம் நாளை அல்லது அடுத்த மாதம் செலுத்த வேண்டிய தொகை இருந்தால் அது Current Liabilities. அடுத்த வருடம் தான் இந்த கடன் தொகை செலுத்த வேண்டியிருப்பின் அது, Non-current Liabilities.

 

நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரும்பாலும் Current Liabilities ஆக இருந்தால், உங்களுக்கு அந்தளவு வருமானம் வருகிறதா என பார்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் Current Liabilites ஐ மட்டுமே செலுத்தி கொண்டிருந்தால் லாபம் பார்ப்பது குறைவாக அமையும். இவற்றை கவனத்தில் கொள்ளவும்.

 

Current Liabilities – Bank Interest Payable, Rent, Tax, Salary, Dividends.

 

நீங்கள் யாருக்காவது உங்கள் தொழிலுக்காக முன்பணம் செலுத்தியிருந்தால் (Suppliers), நிலம்,  இயந்திரங்கள் ஏதும் வாங்கியிருந்தால் அவை Non-current Assets எனப்படும். இவற்றை நீங்கள் உடனடியாக பெற முடியாது.

 

தொழிலில் உங்கள் வாடிக்கையாளர்கள் எவரும் பணம் செலுத்த உள்ளவர்கள், பாக்கி பணம் உடனடியாக செலுத்த வேண்டியவர்கள் – Current assets எனப்படும்.

 

Current Assets – Cash, Goods Sales, Short term deposits

 

Working Capital:

 

Working Capital = Current Assets – Current Liabilities

 

Current Assets – 100 ( சில  காலங்களில்  பெற வேண்டிய தொகை )
Current Liabilities – 80 ( இன்னும்  சில காலங்களில்  செலுத்த வேண்டிய பணம்
Working Captial = ( 100 – 80) = 20 (சில காலங்களில் நாம் பணமாக பெறுவது.

 

Working Capital அதிகமாயிருந்தால் ஒரு தொழிலுக்கு ஆரோக்கியமானது. Working Capital தொகை எதிர்மறையாக (Negative) சென்றால், நாம் சம்பாதித்ததை விட கொடுப்பது தான் அதிகமாக இருக்கும். ஆதலால் நாம் பணத்தை பெறுவதற்கான காலங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

லாப – நட்ட அறிக்கை (Profit and Loss Statement ):

 

ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட காலத்தில் இருந்த வரவு, செலவு மற்றும் லாபங்கள் அல்லது நஷ்டங்கள். குறிப்பிட்ட காலம் என்பது காலாண்டு, ஒரு முழு நிதி ஆண்டு என அமையலாம்.

 

லாப – நட்ட அறிக்கை மூலம் ஒரு நிறுவனத்தின் நிதி சூழ்நிலையை அறிந்து கொள்ளலாம். தொழிலின் அனைத்து செலவினங்களையும், மொத்த வருவாயிலிருந்து கழித்தால் கிடைக்கும் லாப – நட்ட செயல்பாட்டை அறியலாம்.

 

Profit and Loss Statement: (For the Period Ended 2017 – 2018 ):

 

profit and loss statement example

 

Sales (விற்பனை):

 

உங்கள் தேநீர் நண்பர் தனது கடையில் இன்று 1000 தேநீரை விற்றிருந்தால் (விலை- ரூ. 10 / Tea) அவரின் அன்றைய மொத்த தேநீர் விற்பனை – ரூ. 10,000 /- (1000 X 10 ). ஒரு தொழிலின் வருமானம் விற்பனையை சார்ந்து தான் உள்ளது. அவை ஒரு பொருள் அல்லது சேவையின் விற்பனையாக இருக்கலாம்.

 

Depreciation (தேய்மானம்):

 

ஒரு சொத்தின் அல்லது பொருட்களின் தேய்மான மதிப்பு குறைவு. நம் தொழிலில் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளுக்கும் நாளடைவில் மதிப்பு குறையும். அதனை தேய்மானம் எனலாம். நாம் வாங்கிய தயாரிப்பு இயந்திரம், கணினி ஆகியவை பிற்காலத்தில் மதிப்பு குறைந்து இருந்தால், அதனை நாம் பராமரிப்பு செலவு செய்து அல்லது அதற்கு பதிலாக வேறு ஒரு புதிய பொருட்களை வாங்க முன் வருவோம். அதற்கான செலவாக தேய்மான செலவு எனலாம். தேய்மான செலவை நமது வருமானத்தில் இருந்து நாம் கழித்து கொள்ளலாம்.

 

ROI (Return on Investment) and ROE (Return on Equity):

 

உங்கள் நண்பர் ரூ. 5,00,000 /- ஐ முதலீடு செய்து தொழில் செய்து வருகிறார். அவர் தனது முதல் வருடத்தின் முடிவில் ரூ. 75,000 /- ஐ லாபமாக ஈட்டியுள்ளார். அவருடைய அந்த வருட ROI =  ( 75000 / 500000 X 100) = 15 % உங்கள் முதலீட்டின் மீதான வருமானம். இந்த ரூ. 5,00,000 /- முதலீடு அவரின் மொத்த முதலீடாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் கடனால் பெற்றிருக்கலாம். ஆனால் மொத்த தொழில் முதலீட்டுக்கே இந்த ROI வருமானம்.

 

ROE:  உங்கள் நண்பரின் தொழிலில் அவருடைய சொந்த முதலீடு (Equity) – ரூ. 2,00,000 மட்டுமே ( 2,00,000 / 5,00,000). மற்றவை நண்பர்கள் மற்றும் வங்கி கடனாக பெற்றவையாக வைத்து கொள்வோம். இப்போது நண்பரின் ROE = ( 75000 / 200000 X 100 = 37.5 %  இதன் அர்த்தம், நண்பர் தனது ஒவ்வொரு 100 ரூபாய் முதலீட்டிற்கும்,  37.50 ரூபாய் வருமானம் பார்க்கிறார்.

 

ROI என்பது மொத்த முதலீட்டின் மீதான வருமானத்தை காட்டுகிறது; ROE என்பது தொழிலின் ஒரு குறிப்பிட்ட பங்குதாரரின் வருமானத்தை வெளிப்படுத்துகிறது.

 

அடுத்த வகுப்பில் அடிப்படை பகுப்பாய்வுக்கான காரணிகளை ஆராயலாம்.

 

 

 

பங்குச்சந்தை – ஒரு தொழில் – 2.0

பங்குச்சந்தை – ஒரு  தொழில்  – 2.0 ( Share is a Business )

 

பங்குச்சந்தை  என்பது  காகிதத்தில்  உள்ள வெறும்  எண்கள் அல்ல !

( Stock Market –  Fundamental Analysis – Learning Course)

அவை ஒரு தொழிலின் மதிப்பு. பங்குச்சந்தையில் நாம் ஏதேனும் ஒரு பங்கை வாங்கினாலோ அல்லது  விற்றாலோ அவ்வளவு தான் என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால்  அதன்  பின்னணியில் ஒரு தொழில் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எப்படி நாம் காய்கறி சந்தையில் தக்காளியை வாங்கினால், அதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் தொழில் சார்ந்து உள்ளன. விவசாயம், விவசாயி மற்றும் அதனை சார்ந்த  உற்பத்தி, வேலையாட்கள், பயிர் செய்யும் காலம் முதல் விளைச்சல் வரை, அறுவடையிலிருந்து அங்காடி விற்பனை வரை, போக்குவரத்து, விலை நிர்ணயம், லாபம் என விஷயங்கள் தொழில் அடிப்படையில் உள்ளன. அதே மதிப்பு தான் பங்குச்சந்தையிலும்.

 

இந்த மதிப்பை தான் உலகின் பெரும் பணக்காரர் வாரன் பப்பே (Warren Buffet) அவர்கள், இவ்வாறு  கூறுகிறார்,

 

I am a better investor because I am a businessman, and I am a better businessman because I am an investor.”

 

 

ஒரு தொழிலை பற்றி உதாரணத்திற்கு பார்ப்போம். உங்கள் ஊரில் உள்ள நண்பர் ஒருவர் தேநீர் கடை ( டீ கடை) தொழில்  நடத்தி வருகிறார். கூடவே பருப்பு வடையும் [ ஆமை வடை 🙂 ], உளுந்து வடையும் ! அவரது தொழிலின் சில எண் மதிப்பினை பார்ப்போம்.

business chart

 

நண்பரின் முதலீட்டின் மீதான வருமானம் (Return on Investment) 10 % தருகிறது. அதாவது அவரது ஒரு மாதத்தின் லாபம், முதலீட்டில் 10 ல் ரூ பங்கு. இதே போன்று அவர் லாபமீட்டினால் அவர் தனது  முதலீட்டை அடுத்த 10 மாதத்தில் பெறலாம். மேலே உள்ள அட்டவணையை கொண்டு நாம் இன்னும் சில எண்களை கண்டறியலாம் (Operating profit margin, Compounded Sales Margin, Profit Growth ). இதற்கு நாம் நண்பரின் தொழிலை அடுத்த சில மாதங்களுக்கு கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அவருடைய கடை விற்பனை மற்றும் லாபம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து எண்களை கண்டறியலாம்.

 

நண்பருடைய தொழிலுக்கான எதிர்கால சந்தை வாய்ப்புகள், பாதகங்கள் முதலியவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். நமது நண்பரின் தொழில் இப்போது மாலை வேளையில் மட்டுமே நடைபெற்று கொண்டிருக்கிறது. தான் வேலை செய்யும் நிறுவனத்தின் பொறுப்பை விட்டு விட்டு அவர் இந்த தொழிலை முழுவதுமாக செய்ய விருப்பமாக உள்ளார். ஆனால் அவருக்கான அடுத்த முதலீட்டை தான் அவர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். அவரின் மறுமுதலீட்டிற்கு தனது நண்பர்களை அணுகலாம், வங்கியில் கடன் வாங்கலாம் அல்லது ஏதேனும் ஒரு முறையில் முதலீடு அவருக்கு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் தான், உங்களுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஏன் நாமும் அவர் தொழிலில் இணையலாமே என்று. உங்கள் யோசனை சரி தான். அவரிடமே நாம் சந்தித்து யோசனைகளை சொல்லலாம். நாம் இங்கே கவனிக்க வேண்டியது,

 

நண்பரின் தொழிலுக்கு மறுமுதலீடு எவ்வளவு தேவை, நம்மால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும், தொழிலில் நமக்கான பங்கு என்ன, தொழில் ஏதேனும் காரணத்தால் சுணக்கம் (அ) நஷ்டமடைந்தால் நமது முதலீட்டின் நிலை என்ன மற்றும் இன்ன பிற விஷயங்களை நாம் கவனித்து தொழிலில் இணையலாம். இதே போன்று தான் பங்குச்சந்தையும். ஏற்கனவே தொழில் செய்து வரும் நிறுவனத்தில் நாம் எதுவும் வேலை பார்க்காமல் ஒரு பங்குதாரராக இணைந்து செயல்படுவது. பண முதலீடு செய்வது மட்டுமே நமது வேலை. நண்பரின் தொழிலுக்கே  நாம் பல விஷயங்களை ஆராய வேண்டுமெனும் போது, பங்குச்சந்தையில் நாம் எப்படி அணுக வேண்டுமென்பது மிகவும் முக்கியம்.

 

நம்மிடம் நமது உறவுக்காரர் (அ) நண்பர் ஒருவர் பண உதவி கேட்டு வந்தால், நாம் பணத்தை உடனே கொடுத்து விடுவோமா என்ன ? அவரின் குடும்ப சூழ்நிலை, வருமானம், குணங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு தான் அவருக்கு பண உதவி செய்வோம். இதே போன்று தான் நமது மணப்பொருத்தத்திலும், வீடு கட்டுவதிலும். ஆனாலும் பங்குச்சந்தையில் மட்டும் நாம் கொஞ்சம் அவசரப்படுகிறோம்.

 

பணத்தின்  மதிப்பு (Time value of money):

 

உங்களிடம் ரூ. 100 உள்ளது. இன்றைய 100 ரூபாய் ஒரு வருடத்திற்கு பிறகு அதே எண் மதிப்பை கொள்வதில்லை. 7 % பணவீக்கம்(Inflation) எனில், ஒரு வருடத்திற்கு பிறகு அது ரூ. 107 ஆக மாறும். 10 % எனில், இன்றைய 100 ரூபாய் – 110 ரூபாயாக மாறும். அதே 100 ரூ. பத்து வருடத்திற்கு பிறகு (7 % பணவீக்கம்) ரூ. 197 ஆக இருக்கும்.  இதனை Time value of money (or) Future Value என்பர். கணக்கீடு எல்லாம் நாம் பள்ளியில் கற்ற தனிவட்டி மற்றும் கூட்டு வட்டியின் வேலை தான்.

 

சரி, 100 ரூபாய் ஒரு வருடத்திற்கு பிறகு பணவீக்கத்தால் மாறும். ஒரு வருடத்திற்கு பிறகான 100 ரூபாய்க்கு இன்று எவ்வளவு மதிப்பு  என்பது தெரியுமா ?

 

அடுத்த வருடத்தின் 100 ரூபாய் இன்று (7 % பணவீக்கம் அல்லது தள்ளுபடி விலை)  ரூ. 93 /- ஆகும். அதுவே 5 வருடத்திற்கு பிறகான 100 ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ரூ. 71 ஆகும். இதனை Discounted Value (or) Present value of future amount எனலாம்.  ஆகையால் நீங்கள் உங்கள் வீட்டில் கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கும் பணத்திற்கு பின்னாளில் மதிப்பில்லை. அதனை முதலீடு செய்து பணவீக்கத்தை தாண்டிய வருமானம் பெற்றால் மட்டுமே அதற்கு மதிப்பு.  Time value of money and Discounted Value இந்த இரண்டும் ஒரு முதலீட்டாளருக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்த இரண்டையும் நாம் நம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம்.

 

நமது வங்கி டெபாசிட்டில் (அ) பி.எப். (Provident Fund)  உள்ள சேமிப்பு  வளர்கிறதே  அது  தான்  Time value of money.  இதை  தான் நாம்  இன்று  SIP (Systematic Investment Plan) மூலம்  செய்கிறோம். அது  வங்கி தொடர் சேமிப்பானாலும்  சரி, பரஸ்பர நிதி  முதலீடானாலும் (Mutual Fund) சரி எல்லாம் ஒரே பாடம்  தான். பத்து வருடத்திற்கு  பிறகு வீடு கட்டினால் விலைவாசி  உயரும். அதற்கு பதில் இன்றே வங்கியில் கடன் வாங்கி வீடு  கட்டலாம் (அ) வாங்கலாம். மாத தவணையில் செலுத்தி கொள்ளலாம் என நினைக்கிறோமே, இந்த  EMI (Equated monthly installement) திட்டத்தின் அடிப்படை தான் Discounted Value. அதாவது பத்து வருடத்திற்கு பிறகு  ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள வீட்டை தற்போதே உரிமையாக்கி கொள்வது. அதனை நாம் மாதத்தவணையில் செலுத்துவது நமக்கு சௌகரியம் தான் அல்லவா ! அதனால் 100 ரூபாய் மதிப்பை அறிந்து வைத்து கொள்வது ஒரு முதலீட்டாளருக்கு அவசியம். 1000 ரூபாய் மதிப்பிலான பொருளை கண்டறிந்து 200 ரூபாய்க்கு வாங்கினால் லாபம் தானே 🙂

 

அறிந்து கொள்ளுங்கள்:   EMI vs SIP ?

 

எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – கூட்டு வட்டி (Power Of Compounding)

 

உலகத்தின் எட்டாம் அதிசயம் “கூட்டு வட்டி – Compound Interest” என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein).

கூட்டு வட்டியின் பலனை பற்றி, நாம் நமது பள்ளிக்காலங்களில் படித்திருப்போம். நமது பள்ளிக்கல்வியில் கணித பாடத்தில் வட்டி விகிதம், கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்போம். அதன் பலனை நாம் அறியவே, நமது பள்ளிகளில் (1990 களில்) அஞ்சலக சேமிப்பான “Sanchayika” திட்டம் மிகவும் பிரபலம். அது கூட்டு வட்டியின் மகிமையையே வெளிப்படுத்துகிறது. அவர் சொல்கிறார் பாருங்கள்,

 

“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t, pays it….”   – Albert Einstein

 

அறிந்து கொள்ளுங்கள்:  கூட்டு வட்டியின் கணக்கை(Power of Compounding)…

 

பங்குச்சந்தையை பற்றி நாம் பேசும் போது, EIC Framework என்ற ஒன்று உண்டு. பங்குச்சந்தை நிலை என்பது நம் கையில் இல்லை. நாம் வேண்டுமானால் பங்குச்சந்தையில் பொறுமையக பணம் பண்ணலாம். ஆனால் பங்குச்சந்தையுடன்  போட்டி போட முடியாது. அதன் நிலையை தினமும் கணிக்க முடியாது; கவனிக்கலாம்.

 

EIC framework

 

 

Economy | Industry | Company (EIC) Framework:

 

இது ஒரு மேலிருந்து கீழ் அணுகுமுறை. ஒரு பங்கை வாங்குவதற்கு இது மிகவும் உதவும். ஒரு தொழிலை எடுத்து கொண்டால் முதலில் நாம் நாட்டின்  பொருளாதாரத்தை  கவனிக்க  வேண்டும். பின்பு அதனை சார்ந்த  துறையை நோக்க வேண்டும். முடிவில் தான் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு நமது நாட்டின் பொருளாதாரம் நடப்பில் எவ்வாறு உள்ளது. எந்தெந்த துறைக்கு எல்லாம் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது மற்றும் அரசின் கொள்கைகள் எந்த தொழிலுக்கு சாதகமாக உள்ளது. முடிவில் அதனை சார்ந்து தான் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது அதே துறையில் நீண்டகாலம் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிறுவனத்தை முடிவு செய்ய வேண்டும். நமது நண்பர் தொழிலிலும் அவ்வாறு தான். தேயிலைக்கு எவ்வாறு சந்தை உள்ளது, தேநீர் பருகும் நிலை மற்றும் தேவை கோடை காலத்தில் எப்படி போன்றவற்றையும் கவனத்தில் கொள்வது நல்லது. ஆனால் ஒரு முதலீட்டாளரை பொறுத்தவரை இந்த முறை எல்லா சமயத்திலும் பயன் பெறாது. உதாரணத்திற்கு நாம் நமது நண்பர் தொழிலை சொன்னமே, அவர் பல ஊர்களில் தேநீர் கடை மற்றும் தேயிலை சார்ந்த வேறு ஏதேனும் தொழில் செய்தால் இந்த முறை உதவும். மாறாக நமது ஊரில் மட்டுமே வைத்திருக்கிறவருக்கு இது தேவையில்லை. தேயிலை விலை உயர்ந்தால் அவருக்கென்ன… வேறு ஏதாவது பிராண்டயோ(Brand) அல்லது விலை குறைந்த தேயிலை, இல்லையெனில் தேனீர் விலையை சற்று கூட்டி விட்டு போகலாம். சேவை மனப்பான்மை உள்ளவர் என்றால், அதே விலையில் கொடுத்து விட்டு தனது லாபத்தை குறைத்து கொள்ளலாம். சிறு மற்றும் உள்ளூர் தொழிலுக்கு நீங்கள் இந்த முறையை தலைகீழாக தான் அணுக வேண்டும். AVT, Brooke Bond க்கு வேண்டுமானால் நீங்கள் மேலிருந்து கீழாக பார்க்கலாம். தொழில் மற்றும் நிறுவனத்தின் அளவை (Size / Market cap of the Company ) சார்ந்தது EIC Framework.

 

ஒரு நிறுவனம் அல்லது தொழிலின் மதிப்பு என்பது அதன் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பில் உள்ளது.

 

லாபத்தில் இருக்கும் தொழில் எப்போதும் மதிப்புடையது. எனவே தொடர்ச்சியான லாப வளர்ச்சியை கொடுக்கும் நிறுவனத்தையே நாம் வாங்க வேண்டும். வெறும் பெயரளவில்(Not just a Brand) அல்ல… அதே  போன்று  கடன் சுமையிலும் தத்தளிக்க  கூடாது. வாங்கும் கடனை லாபத்திற்கு மாற்ற வேண்டியது (Leverage) ஒரு நிறுவனத்தின் கடமை.

 

அடுத்த வகுப்பில், ஒரு நிறுவனம் (அ) தொழிலின் நிதி அறிக்கையை(Financial statements) எப்படி ஆராய்வது என்பதை பார்ப்போம். சமீபத்தில் தான் நாம் அரசின் பட்ஜெட் 2018 ஐ கவனித்திருப்போம். இது நாம் வாங்க போகும் பங்கின் (Share) பட்ஜெட் !

 

Disclaimer:

This content is an information for the purpose of learning. It’s not recommending any stock or listed company or make any investment in a certain financial products. All content as a text here are reserved by the part of website(www.varthagamadurai) and the images shown for the reference has attributed (image courtesy).

 

Stock Market – Fundamental Analysis – Course – 1.0

Stock Market –  Fundamental Analysis – Learning Course

 

பங்குச்சந்தை  –  அடிப்படை  பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு  வரவேற்கிறோம்.

 

இது ஒரு இணைய வழி கற்றல் முறை(Online Learning Course). அனைத்து வகுப்புகளும் மற்றும் அதன் தகவல்கள் நேரிடையாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே(Subscribed Email Address) அனுப்பப்படும். வகுப்புகள் தினசரி என்றில்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது  வாரத்திற்கு மூன்று நாட்களாகவோ இருக்கலாம். இந்த கற்றல் வகுப்பு உங்களுக்கு பங்குச்சந்தை பற்றிய உள்ளார்ந்த அறிவு மற்றும் செயல்முறை விளக்கமாகவும் அமையும். அதனால் நீங்கள் பெறும் ஒவ்வொரு தகவலையும் பரிசோதித்து பார்க்கலாம்.

 

நீங்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் ?

 

நம் ஒவ்வொருக்கும் வாழ்க்கையில் தேவைகள் மற்றும் விருப்பங்கள் இருக்கும். தேவைகள் பொதுவானவை; ஆனால் விருப்பங்கள் மாறுபடலாம். முதலில் நாம் நம் தேவைகளை பட்டியலிடுவோம்:

 

  • உணவு (Food)
  • உடை  (Clothing)
  • இருப்பிடம் (Shelter)
  • மருத்துவம் (Medical)
  • கல்வி  (Education for Future and Growth)
  • ஓய்வு காலம் (Retirement Stage)

 

விருப்பங்கள் சில…

 

  • விரும்பிய வாகனம் வாங்குவது (Buying a Car)
  • சுற்றுலா செல்வது (Vacation and  Foreign Tour)
  • குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறையை கொடுப்பது (Education for Children)
  • வீடு பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்(House Repair and Maintenance)
  • புதிய தொழில் தொடங்குவது (Starting a Business)
  • மற்றவர்களுக்கு உதவி செய்ய (Helping others)

 

நீங்களும் உங்களுக்கான பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். தேவையோ, விருப்பங்களோ எதுவாயினும் அவற்றிற்கு நிதி அல்லது பணம் தேவை. நாம் பட்டியலிட்ட அனைத்து தேவைகள் மற்றும் விருப்பங்கள் நமக்கானவை. இவற்றை நாம் பெரும்பாலும் எப்படி பெறுகிறோம் ?

 

நாம் அதற்காக உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், பின்பு நமக்கான தேவை, விருப்பங்களை நிறைவேற்றுகிறோம். நமது விருப்பங்களை காலத்திற்கு ஏற்றவாறு நாம் மாற்றியமைக்கலாம் அல்லது தள்ளி போடலாம், ஆனால் நமது தேவைகள் அவ்வாறில்லை. எனவே நமது தேவையை முதலில் நிறைவேற்றுவது அவசியம். ஆனால் நம்மில் பலருக்கு தேவைகளை பூர்த்தி செய்வதிலே காலம் முழுவதும் கடந்து விடுகிறது. அப்புறம் எங்கே நமது விருப்பங்கள், கனவுகள் ! சில நேரங்களில் நம்மால் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க முடிகிறது, அதனை கொண்டு நமது தேவை மற்றும் விருப்பங்களை அணுகுகிறோம். பல சமயங்களில் வருமானம் பற்றாக்குறையாகவே உள்ளது. ஏன் சிலருக்கு மட்டும் பணம் எப்போதும் கையில் இருக்கிறது, பலருக்கு இது சாத்தியமாக இல்லை ?

 

அதனை தான் நமது பள்ளி மற்றும் கல்லூரி கால படிப்பு நமக்கு கற்று தர தவறி விட்டது. Rich Dad, Poor Dad ன் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி சொல்வது போன்று, நமக்கான அடிப்படை கல்வியில் பணத்தை பற்றியும், அதனை எப்படி கையாள வேண்டும் என்பதனை பற்றியும் சொல்லி தரவில்லை. மாறாக, நமக்கு அறிவியலும், புவியியலும் சொல்லி கொடுக்கப்பட்டது. அவற்றை கூட நாம் நம் தினசரி வாழ்க்கை மற்றும் வேலையிடத்தில் பயன்படுத்த முழுமையாக சொல்லவில்லை. நீங்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் மற்றும் ஒரு நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டுமென்பதே நம் கல்வி முறை கொடுத்தது.

 

நம் நாட்டில் பணத்தை பற்றிய அடிக்கடி பழக்கப்பட்ட ஒரு விஷயமென்றால், அது சேமிப்பு  (Savings) தான். நாம் எவ்வாறு சேமிக்க வேண்டுமென்று காலங்காலமாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும், எப்படி தொழில் செய்யலாம் என சொல்லித்தந்தது மிக குறைவு தான். பங்குச்சந்தையிலும் இது தான் நமக்கு சிக்கலே. சேமிப்பிற்கும், முதலீடிற்கும் உள்ள இடைவெளி தெரியாமல் முடிவில், ஊக வணிகம் (Speculation) செய்து விடுகிறோம். நமக்கு கிடைப்பது பணமுதல் இழப்பு. பங்குச்சந்தைக்கும், தரகருக்கும் கிடைக்கிறது சேவை மற்றும் தரகு கட்டணம்.

 

சரி, நாம் காலங்காலமாக சில சேமிப்பு முறைகளை பின்பற்றி வந்திருக்கிறோம். நமக்காக அல்ல, நம் பெற்றோர்கள் சொன்னார்கள் என்று. அவற்றின் கடந்த கால வருமான தாக்கம் மற்றும் ஏற்ற-இறக்கத்தை பார்த்து விடுவோம்.

 

January 2000 ல் 100 ரூ. விலையுள்ள ஒரு பொருள் அல்லது சேவை, கடந்த October 2017 ல் ரூ. 308 /- ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தின் மடங்குகளை இதன் மூலம் நாம் அறியலாம். அதே ஜனவரி 2000 ல் நம் கையிலிருந்த ரூ. 100 ன் மதிப்பு, அக்டோபர் 2017 ல் ரூ. 33 /- மட்டுமே. இதனை நாம் பணத்தை கொண்டு வாங்கும் திறன்(Purchasing Power) என்போம். இதன்  விளைவாக  தான்  நாம் சேமிக்க  பழகுகிறோம்.

 

Gold Prices (Last 5 Years):

Gold price 5 years

Bank Interest Rate (Since 2000):

 

interest rate 2017 india

 

Returns of Equity, Gold, Money market mutual fund, FD:

 

returns of equity and gold

 

மேலே உள்ள தகவல்களை கொண்டு நமக்கு சில சிந்தனைகள் கிடைத்திருக்கும்.

 

Financial Goal(s):

 

நிதி இலக்குகளை பற்றி நாம் ஏற்கனவே நமது அறிமுக வகுப்பில் மற்றும் காணொளியில் (See the video) அறிந்திருப்போம். நமது நிதி இலக்குகள் வங்கி வைப்பு தொகை, தங்கம் மற்றும் மனையில் வெற்றி பெறுவதில்லை, ஆனால் பரவலாக்கப்படலாம். நிதி இலக்குகளில் வெற்றி அடைய இரண்டே வழி: பங்குச்சந்தை மற்றும் தொழில் தொடங்குவது.  நமது இலக்குகள் வெற்றியடையாமல் போவதற்கான முதற்காரணம் – பணவீக்கம். நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை வேண்டுமானால் கூட்டி கொள்ளலாம். பணவீக்கத்தை தடுக்க முடியாது. ஆனால் புத்தியால் கையாளலாம். அது தான் பணவீக்கத்தை தாண்டிய வருமானம். விலைவாசியை தாண்டிய வருமானம் வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் தொழிலில் அதை விட லாபம் அதிகமாக தான் பெற வேண்டும்.

 

சேமிப்பும், பணவீக்கமும் ஒன்றையொன்று சார்ந்தது

 

மேலே உள்ள வாக்கியத்தை மறவாதீர்கள்; விலைவாசி (பணவீக்கம்) உயர்ந்தால் உங்களால் அதிமாக சேமிக்க  முடியாது. விலைவாசி உயர்ந்தால் மட்டுமே வங்கிகள் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். விலை குறையும் போது அல்ல… உங்களால் எப்போது  அதிகமாக சேமிக்க முடியும் ? அப்போது வங்கிகள் மற்றும்  அரசாங்கம் உங்களுக்கு குறைந்த வட்டியே கொடுக்க முன்வருகிறது. வருமான  வரி கட்டுபவராக நீங்கள் இருந்தால், உங்கள் வங்கி வைப்பு தொகைக்கும் வரி உள்ளதை மறக்க வேண்டாம்.

 

Post Tax Returns(CAGR):

Post tax returns

 

ஏன்  வங்கிகள் அவ்வப்போது வட்டி விகிதத்தை குறைக்கின்றன ?

 

வங்கி சேமிப்பில் உள்ள ரிஸ்குகள் – ஆபத்தானவை

 

பணவீக்கம் ஒரு சாதாரண சேமிப்பு விஷயத்திற்கே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், உங்கள் நீண்ட கால இலக்குகளை யோசித்து பாருங்கள். 10 அல்லது 20 வருடத்திற்கு முன் நீங்கள் வாங்கிய பொருளின் விலை இன்று இல்லை. அதன் இன்றைய மதிப்பு பணவீக்க மதிப்பு  தான். இப்போது நினைத்து பாருங்கள்  உங்கள் எதிர்கால கல்வி செலவுகள், வீடு, ஓய்வு, மருத்துவம் – பணவீக்கத்தில் !

 

Inflation India chart since 2004

 

நினைவில்  கொள்ளுங்கள் நிதி இலக்குகள் பொதுவாக நீண்ட கால இலக்குகள் ஆகும்.

பங்குச்சந்தை ஆபத்தானதா, சூதாட்டமா  ?

 

முதலீடு  பற்றி பேசும் போது, நான் அடிக்கடி ஒரு வாசகத்தை  சொல்வதுண்டு…

 

“ Drive the Car without knowing the Basic, is Ridiculous and Dangerous “

 

 

நீங்கள்  கல்வியை தொடங்குவதற்கு முன்னரே கல்வி நிலையங்களில் கட்டணத்தை வசூலிக்கின்றனர். அவர்கள் உங்களை ஏமாற்றி விட்டால் (கற்று தரவில்லை)  ?   🙂

 

இது தான்  பங்குச்சந்தையும்; அடிப்படை விஷயங்களை அறியாமல், அனுபவம் பெறாமல் நாம் எதையும் சொல்ல விட முடியாது. ஒதுக்கி விடவும் இயலாது. நீங்கள் வேண்டுமானால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் போகலாம். ஆனால் அரசாங்கமும், நீங்கள் உழைக்கும் நிறுவனமும் பங்குச்சந்தையில்  தான்  லாபம் பார்த்து கொண்டு இருக்கின்றனர் – உங்கள் முதலீட்டை (பணம்) கொண்டு  தான் 🙂

 

Stock market historical chart

 

Data reference:   

 

Inflation Calculation and Forecasting

Inflation India

Gold Price History

Fixed Deposit Rates Historical data

Stock Market Performance

 

 

Disclaimer:

This content is an information for the purpose of learning. It’s not recommending any stock or listed company or make any investment in a certain financial products. All content as a text here are reserved by the part of website(www.varthagamadurai) and the images shown for the reference has attributed (image courtesy).

 

பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

Fundamental Analysis – Discounted Cash Flow

 

DISCOUNTED CASH FLOW METHOD:

 

  • நாம் வாங்க போகும் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை கணக்கிட்டு (அ) கணித்து, அதனை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிட்டு நாம் நிர்ணயிக்கும் விலை (சலுகை விலை) தான் நாம் உண்மையாகவே வாங்க கூடிய விலை. இதனை தான் இம்முறையில் நாம் கண்டுபிடிக்கிறோம்.

 

  • சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நாம் வாங்க போகும் பங்கினை சலுகை விலையில் வாங்கினால், நமக்கு தானே லாபம் !

 

  • DISCOUNTED CASH FLOW முறை சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் தமிழில் உள்ளன. ( உதாரணம்: ஷேர் மார்க்கெட் A to Z – சொக்கலிங்கம் பழனியப்பன்)

 

MARGIN OF SAFETY:

 

  • ஒரு பங்கின் உண்மையான விலையை கண்டறிய, நாம் இரு முறைகளை பின்பற்றினோம். ஆனால் இந்த உண்மையான விலையிலே வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. இதை விட குறைவான விலைக்கு கிடைத்தால் அது நமக்கு தான் லாபம். நஷ்டத்தையும் தவிர்க்கலாம். அது தான் “MARGIN OF SAFETY”

 

  • உண்மையான விலையிலிருந்து எத்தனை சதவிகிதம் குறைவாக கிடைக்கிறது என்பதே “MARGIN OF SAFETY”

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

EPS வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை

 

EPS (Calculate Earning per share) வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை:

 

( 5 வருட அடிப்படையில்… )

2006 – 2.10, 2007 – 2.80, 2008 – 3.45, 2009 – 3.90, 2010 – 4.20, 2011 – 4.50

 

Step 1. Current EPS / 1st EPS = 4.50 / 2.10 = 2.14
Step 2.  Growth Multiple of (2.14) to the 1/5th Power (5 years)
(2.14) X Power of (1/5) = 1.164
Step 3.            Value – 1 =   1.164 – 1 =   0.164

 

then, 0.164 *100 = 16.40 %
So, Earning per share (EPS) Growth for the last 5 years = 16.40 %

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value

 

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value

 

 

பங்கின் வளர்ச்சி முறை (Ben Graham’s EPSG – Intrinsic Value)

 

பெஞ்சமின் கிராஹாமின் “The Intelligent Investor” புத்தகத்தில், நாம் சொன்ன உள்ளார்ந்த மதிப்பை (Intrinsic Value) கண்டறிய அவர் ஒரு சூத்திரத்தை வகுத்துள்ளார்.

 

V = EPS X ( 8.5 + 2 g ) X 4.4 / Y  (Benjamin Graham)

 

V = Intrinsic Value
EPS = Average EPS for the last 12 months (or) One Financial Year
8.5 = Assumed P/E Ratio of Stock
g = Assumed growth rate for the forthcoming years ( 7 to 10 years )
4.4 = Interest Rate of AAA Corporate Bond in year 1965 (Model Introduced year)
Y = Interest Rate of AAA Corporate Bond as on Today.

 

குறிப்பு:

  • EPS = ஒரு பங்கின் வருமானத்தை நாம் கடந்த 12 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும். (சராசரி வருமானம்)
  • 8.5 = பங்கின் உத்தேச P/E விகிதம்
  • g = பங்கின் சராசரி உத்தேச வருமான வளர்ச்சி – அடுத்த 7 முதல் 10 வருடங்களுக்கு கணக்கிடவும்
  • 4.4 = அரசாங்கத்தின் 10 வருட பத்திரங்களின் நிலையான (அ) பாதுகாப்பான வருவாய் வட்டி விகிதம் (இந்த சூத்திர முறை 1965 ல் அறிமுகபடுத்தபட்ட போது – 4.4 )
  • Y = பத்திரங்களின் இன்றைய வட்டி (10-year Government of India bonds ) – இந்தியாவில் 8 %

மேலே உள்ள இந்த முறையின் மூலம், நாம் ஒரு பங்கின் உண்மையான மதிப்பை கண்டறியலாம்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.0 – True Value

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.0 – True Value

 

உண்மையான விலையை கொடுங்கள்; உங்கள் விலையை கொடுங்கள்

(Give the True Value for your Stocks)

 

நாம் இது வரை பல அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை பார்த்தோம். இதன் அடிப்படையில் நாம் ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்குவதற்கு தயாராக உள்ளோம். ஆனால் சந்தையில் அந்த பங்கின் விலை பல விலைகளில் வர்த்தகமாகிறது. நாம் எந்த விலையினை பார்க்க ?

இதற்கு தான், பங்கின் / நிறுவனத்தின் உண்மையான மதிப்பை கண்டறிய வேண்டும். உண்மையான மதிப்பை அறிவதற்கு பல வழிகள் இருந்தாலும், நாம் இங்கே இரண்டு முறையினை மட்டும் ஆராயலாம்.

 

  • பங்கின் வளர்ச்சி முறை (Ben Graham’s EPSG – Intrinsic Value)

 

  • தள்ளுபடி விலை முறை (Discounted Cash Flow)

 

இந்த இரு முறைகளையும் நாம் பின்வரும் பகுதியில் அறிவோம்.
சந்தையில் நாம் ஒரு பங்கினை வாங்கும் முன், அதன் உண்மையான விலையினை கண்டறிந்து, (Margin of Safety) பேரம் பேசுவதற்கு தயாராக வேண்டும்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை