செபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா ?
SEBI’s New Restrictions – will the Indian Stock Market rebound ?
கடந்த வெள்ளிக்கிழமை அன்று (20-03-2020) இந்திய பங்குச்சந்தை குறியீட்டில் நிப்டி(Nifty50) 482 புள்ளிகளும், சென்செக்ஸ்(Sensex) 1628 புள்ளிகளும் ஏற்றம் பெற்றது. இரண்டு சந்தைகளும் 5 சதவீதத்திற்கு மேல் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் 8 பில்லியன் டாலர்கள் அளவில் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இரண்டு நாட்களுக்கு முன்பு 2.76 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 3.37 லட்சத்தை தாண்டி விட்டது. இறப்பு விகிதம் மூன்று நாட்களில் 10 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க சந்தையில் அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் நாட்டின் பொருளாதார சரிவை தவிர்க்க பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தற்போது பலனளிக்கவில்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) அறிக்கையின் படி, இந்தியாவில் இதுவரை 17,237 பேருக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் சார்பில் சொல்லப்பட்ட அறிக்கையில் இதுவரை விமான நிலையத்தில் 15.17 லட்சம் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை சரிவை தடுக்க செபி(SEBI) கடந்த சில நாட்களாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிக ஏற்ற – இறக்கம் கொண்ட மற்றும் வலுவில்லாத சில பங்குகளில் மார்ஜின் அளவை குறைத்துள்ளது. அதே வேளையில் சில பங்குகளில் தினசரி வர்த்தகம் மற்றும் ஊக வணிகத்தை தடை செய்துள்ளது. மீறி வர்த்தகம் புரிபவர்களுக்கு அபராத கட்டணம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இருப்பினும், பங்குகளை டெலிவரி முறையில் வாங்குபவர்களுக்கு மார்ஜின் அளவை அதிகரித்து சொல்லியுள்ளது செபி. சந்தை அளவிலான வரம்பிலும்(Free Floating) ஒரு குறிப்பிட்ட பங்கின் சந்தை மூலதனத்தில் 10 சதவீதமாக குறைத்துள்ளது. இது முன்னர் 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தை மூலதன வரம்பில் ஒவ்வொரு நாளின் வர்த்தக முடிவிலும் 10 சதவீத அளவில் அதிகரித்து சொல்லப்படும் என செபி தெரிவித்துள்ளது.
உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அடுத்த சில காலங்களுக்கு நீடிக்கும் என்பதால், இந்திய சந்தையும் அதனை பின்பற்றியே செயல்படும். எனவே தற்போதைய நிலையில் சந்தையில் பங்குகளை வர்த்தகம் புரிவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. மேலும் இது சந்தை நகர்வுக்கு சாதகமாக இருக்காது. குறுகிய காலத்தில் சந்தை சில நாட்கள் ஏற்றம் பெற்றாலும், அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் வணிக இணைப்பு பாதிப்பு ஆகியவை சந்தையை மந்தநிலையில் தான் வைத்திருக்கும். நீண்ட கால முதலீட்டாளர்கள் தற்போதைய சந்தையில் கொக்கு போல ஒற்றை காலில் நின்று சரியான மீன்களை (பங்குகள்) பிடிக்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை