EPFO Interest Rate

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

Employees Provident Fund Interest Rate History

 

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தற்சமயம் 2018-19ம் நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உள்ளது. வருங்கால வைப்பு நிதி(Employees Provident Fund) என்று சொல்லப்படும் பி.எப். க்கான வட்டி விகிதங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 1952ம் வருடம் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான சட்டம்(EPF Act) நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் தங்களது நிறுவனத்தை இ.பி.எப். அமைப்பில்(EPFO) பதிவு செய்ய வேண்டும். இ.பி.எப். அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பி.எப். க்கான தொகையை தங்கள் தொழிலாளர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்திருக்க வேண்டும். அதே வேளையில் நிறுவனத்தின் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படும் தொகை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில்(Bonds) மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி பி.எப். தொகையை பங்குச்சந்தையிலும்(Equity exposure) முதலீடு செய்யலாம் என்ற சட்டம் சில காலங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. எனவே, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையின் ஒரு பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

EPF Interest Rate History 1952

1952ம் வருடம் இ.பி.எப். க்கான சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 1952-53ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட முதல் வட்டி விகிதம் 3 சதவீதமாகும். பின்னர் பி.எப். வட்டி விகிதங்கள்(Interest rate) நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க எண்களை சார்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டன.

 

1976-77 மற்றும் 1977-78ம் நிதி ஆண்டுகளில் பி.எப். சந்தாதாரர்கள் தங்களது பி.எப். கணக்கில் எந்தவொரு பணத்தையும் எடுக்காத பட்சத்தில், 1978-79ம் நிதியாண்டில் 8.25 சதவீத வட்டியுடன் 0.5 சதவீத போனஸ் வட்டியும்(Bonus Rate) அளிக்கப்படும் என இ.பி.எப். வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.

 

1990ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு பி.எப். வட்டி விகிதம் 12 சதவீதமாக கொடுக்கப்பட்டது, இது இ.பி.எப். வரலாற்றில் அளிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி விகிதம். பின்னர் 2001ம் வருடம் முதல் பி.எப்.வட்டி விகிதம் குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதமாக, 2011-12ம் ஆண்டு 8.25 சதவீதமாக இருந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s