Tag Archives: fundamental analysis

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள்

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள் 

10 Factors to read in a Stock Market Investing

பங்குச்சந்தை முதலீட்டில் பணம் சம்பாதிக்க நீண்ட காலத்தில் பொறுமையுடன் அணுகுவது அவசியமானது. அதே வேளையில், ‘ ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்து விட்டு, 10 வருடங்கள் காத்திருந்தேன். பங்கு விலை இப்போது சரிந்து விட்டதே. எனது முதலீட்டில் 70-80 சதவீத தொகையை இழந்து விட்டேன் ‘ என நம்மில் பலர் புலம்புவதை பார்த்திருப்போம். இது பொதுவாக முதலீட்டில் உள்ள அனைவருக்குமான விஷயம் தான்.

நீங்கள் 10 வெவ்வேறு நிறுவன பங்குகளை முதலீட்டில் வைத்திருந்தாலும், அனைத்து பங்குகளும் உங்களுக்கு உடனடியாக முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. 5-10 வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்குகளும், வேறுபட்ட காலத்தில் தனது ஏற்ற-இறக்கத்தை காணும். நீண்டகாலத்தில் முதலீடு செய்து பண பெருக்கத்தை ஏற்படுத்த பெரிதாக மெனக்கெட தேவையில்லை எனலாம். இருப்பினும் சில அடிப்படை காரணிகளை நாம் வாங்கிய அல்லது வாங்க போகும் பங்கு நிறுவனத்தில் அலசி ஆராய்ந்து விட்டால், நமக்கான வேலை அவ்வளவு தான்.

நல்ல நிறுவன பங்குகளின் விலை குறுகிய காலத்தில் ஏறவில்லை என்றாலும், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கு பயன் தராமல் போகாது. நல்ல நிறுவன பங்குகள் எனும் போது கடனில்லா நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறமை, நிறுவனர்களின் தொழில் நாணயம், வருவாயில் சராசரி வளர்ச்சியாக இருப்பினும் நெடுங்காலமாக தொழில் செய்து வருவது ஆகியவற்றை சொல்லலாம்.

மேலே சொல்லப்பட்ட நல்ல நிறுவன பங்கின் தன்மையை மேலும் சில காரணிகளை கொண்டு நாம் அறியலாம். அது போன்ற பத்து காரணிகள் இங்கே,

  • இ.ஐ.சி. கட்டமைப்பு (EIC Framework) முறையில் ஒரு நிறுவன பங்கினை புரிந்து கொள்வது
  • நிர்வாகத்திறன் எப்படி என்பதனை அறிந்து கொள்வது அவசியம்
  • நிறுவனத்தின் நிதி அறிக்கையை அடிப்படையாக கற்று கொள்வது
  • விற்பனை மற்றும் லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது ?
  • பங்கு முதலீட்டின் மீதான வருவாய் (Return on Equity)
  • மூலதனத்தின் மீதான வருமானம் (Return on Capital Employed)
  • ஒரு பங்கின் வருவாயை அதன் விலையுடன் ஒப்பிட்டு காண்பது (PE)
  • நிறுவனத்தின் கடன் எப்படி ? (கடன்-பங்கு விகிதம் – Debt to Equity)
  • நிறுவனர்களின் பங்கு பங்களிப்பு மற்றும் பங்கு அடமானம்(Holding & Pledging)
  • மதிப்பீடுகள் அவசியமானது, நீங்கள் வாங்க வேண்டிய பங்கு விலை என்ன ? (Price is what you pay, value is what you get)

இந்த பத்து காரணிகளை நாம் ஒரு நிறுவன பங்கில் தேட ஆரம்பித்தாலே நமக்கான நீண்டகால செல்வவளம் பெருக்கும் முதலீட்டை அறியலாம். தரகர் சொன்னார், நண்பர் பரிந்துரைத்தார், ஊடக செய்தியில் கண்டேன், வாட்சாப் அல்லது டெலிகிராமில் பகிரப்பட்டது என ஏதாவது ஒரு பங்கினை வாங்கி மாட்டிக்கொள்வதை விட, உங்களது முதலீட்டு சிந்தனையையும் சிறிது மெருகேற்றி கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Rites(Rail India Technical and Economic Service) Limited – Fundamental Analysis 

நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக இருப்பது, ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை’ நிறுவனம். இதனை சுருக்கமாக ரைட்ஸ் லிமிடெட்(Rites) என கூறுவதுண்டு. பொறியியல் ஆலோசனை நிறுவனமாக வலம் வரும் ரைட்ஸ் நிறுவனம் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் முக்கியத்துவம் பெறுகிறது.

1974ம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்புகளுக்கான ஆலோசனை மற்றும் திட்டமிடலை செய்து வருகிறது. இந்திய ரயில்வே துறைக்கு மட்டுமில்லாமல், 60 நாடுகளுக்கும் மேலாக தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6000 கோடி, மத்திய அரசு தன்வசம் வைத்திருக்கும் பங்குகளின் அளவு 72 சதவீதமாகும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ..சி. இந்தியாவிடம்(LIC) சுமார் 8 சதவீத பங்குகளும், எச்.டி.எப்.சி. டிரஸ்டி(HDFC Trustee) நிறுவனத்திடம் 3 சதவீத பங்குகளும் உள்ளது. இதன் தொழில் விரிவாக்கம் பெரும்பாலும் ரயில்வே சார்ந்த திட்டங்களாக இருந்து வருகிறது.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலான நாடுகளின் அரசு நிறுவனங்கள் தான் உள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனகல், போட்ஸ்வானா, மொரிசியஸ், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் ரயில்வே சார்ந்து ஏற்றுமதிகளை அதிகம் கொண்டிருக்கும் நிறுவனமாகவும் ரைட்ஸ் லிமிடெட் உள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,474 கோடியாகவும், செலவினம் ரூ.1,811 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபமாக ரூ.616 கோடி சொல்லப்பட்டுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாபம் கடந்த 5 வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் ஏற்றம் பெறவில்லை. எனினும் பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஒரு வருடத்தில் 25 சதவீதமும், ஐந்து வருடங்களில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,383 கோடி மற்றும் பணவரத்து(Cashflow) சீராக வந்து கொண்டிருக்கிறது. ஜூன் 2020 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதம் குறைந்திருந்தாலும், நீண்டகாலத்தில் இந்நிறுவனத்தின் தேவை அதிகரித்து தான் காணப்படுகிறது. நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் வாய்ப்பு அதிகமாகியிருக்கும் நிலையில், ரைட்ஸ் பங்குக்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதன் பாதகமாக அதன் துறை வளர்ச்சியும், அரசு சார்பில் ஏற்படும் கொள்கைகளும் தான்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. அதன் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.02 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 117 மடங்கில் உள்ளது. அரசு நிறுவனமாக இருப்பதால், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. முகமதிப்பு 10 ரூபாயாகவும், கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 7 சதவீதமாகவும் இருக்கிறது. அடிப்படை பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) ரைட்ஸ் லிமிடெட் பங்கு ஒன்றின் விலை 300 ரூபாய் பெறும்.

முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல்

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல் 

Hindustan Zinc Limited – Fundamental Analysis

இந்திய மெட்டல் துறையில் இரும்பு அல்லாத உலோகங்களின்(Non-ferrous Metals) பங்களிப்பு மிகவும்  முக்கியத்துவமானது. காப்பர், அலுமினியம், துத்தநாகம், தங்கம், வெள்ளி, மெக்னீசியம், ஈயம், தகரம் ஆகியவை இரும்பு அல்லாத உலோகங்கள் எனப்படுகின்றன. இவை வாகனத்துறை, மின்சக்தி, தொலைத்தொடர்பு, விவசாயம், பாதுகாப்பு துறை, ரசாயனம் மற்றும் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

நம் நாட்டில் அலுமினியம், காப்பர், ஈயம் மற்றும் ஜிங்க்(துத்தநாகம்) ஆகிய நான்கும் வர்த்தகத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இரும்பு அல்லாத உலோகங்களின் பிரிவில் உள்ள,  ‘ஜிங்க்’ வாகனத்துறை, ரயில்வே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகம், பாதுகாப்பு மற்றும் கட்டுமான துறைகளின் பயன்பாட்டில் உள்ளது.

ஜிங்க் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், நாட்டின் முதன்மை நிறுவனமாகவும் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்(Hindustan Zinc Limited) நிறுவனம் உள்ளது. ஒருங்கிணைந்த சுரங்க மற்றும் வளங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் துத்தநாகம், ஈயம், வெள்ளி மற்றும் காட்மியம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது.

துவக்கத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமாக இருந்த இந்துஸ்தான் ஜிங்க்(HZL), பின்னர் அரசின் பங்குவிலக்கல் அறிவிப்பின் கீழ் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2001ம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனத்தை வேதாந்தா நிறுவனம்(Vedanta – Sterlite Industries) ஏலத்தில் வாங்கியது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. அக்னிவேசு அகர்வால் உள்ளார். பொது பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தில் வேதாந்தா நிறுவனம் 65 சதவீத பங்குகளையும், மத்திய அரசு 30 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

சுரங்கம் மற்றும் உருக்குதல் பிரிவில் தனது செயல்பாடுகளை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் செய்து வருகிறது. உலகளவில் துத்தநாகத்தை மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் வலம் வருகிறது. உலோகங்கள் மற்றும் சுரங்க துறை பிரிவின் கீழ் ஆசிய-பசிபிக் பகுதியில் முதலிடத்தை கொண்டுள்ளது இந்துஸ்தான் ஜிங்க். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 86,600 கோடி. புத்தக மதிப்பு 95 ரூபாய் மற்றும் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.02 ஆக உள்ளது.

வட்டி பாதுகாப்பு விகிதம் 58 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 65 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 23 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 18,560 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 6,805 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 39,465 கோடி என சொல்லப்பட்டுள்ளது. லாபத்தில் பண வரத்து (Cash Flow from Operating Activities) நன்றாக வந்து கொண்டிருக்கிறது.

முகமதிப்பு(Facevalue) பங்கு ஒன்றுக்கு ரூ.2 ஆக இருக்கும் நிலையில், சமீபத்திய ஈவுத்தொகை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூன் 2020 காலாண்டில் வருவாய் ரூ.3,989 கோடியாகவும், நிகர லாபம் 1,359 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 684 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக மெட்டல் துறையில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சி, உலக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation), இந்துஸ்தான் ஜிங்க் பங்கு ஒன்றின் விலை ரூ.230 பெறுமானத்தை பெறும். முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு 

Stock Market – Fundamental Analysis – 30 Hrs Sweet Spot Course

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு நீண்ட காலமானது. மும்பை பங்குச்சந்தையின்  வயது சுமார் 140 வருடங்களுக்கு மேல். வணிகத்தை பிரதானமாக கொண்டது தமிழகமும், நமது நாடும். நாம் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தாலும், முன்னர் பார்த்திருந்தாலும் அடிப்படையில் நாம் ஒரு தொழில்முனைவோர்களே.

வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியதுமானது. அதனை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளில் வேலை தேடுவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதே அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். அது போல தான் பங்குச்சந்தையிலும். ஊக வணிகத்தில் பணம் பண்ணுகிறேன் என கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது ஆரோக்கியமானதல்ல.

பங்குச்சந்தைக்கும், நாட்டில் உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெருமளவிலான தொடர்பு உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை காணலாம். தொட்டுணர கூடியதல்ல, பங்குச்சந்தை முதலீடு. ஆனால் நீங்கள் தொட்டுணர்ந்து பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் சேவைகளிலும் பங்குச்சந்தை நிறுவனங்கள் தான் உள்ளது.

பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களை நமது தொழில் போல பாவித்து, அதன் அடிப்படை திறன்களை அலசி ஆராய்ந்து நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதே சிறந்தது. நல்ல நிறுவனங்களை கண்டறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கற்றலுடன், நிறுவனங்களின் நிதி அறிக்கைகள்(Financial Reports) மற்றும் நிர்வாகத்தை(Management) மதிப்பிடுவது அவசியமாகும்.

இதற்கு ஒரு முதலீட்டாளராக நமக்கு தேவைப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என சொல்லப்படும் அடிப்படை பகுப்பாய்வு தான். பங்குச்சந்தையின் வர்த்தக ஏற்ற – இறக்கத்திற்கு அனைத்துமான மூதாதை தான் அடிப்படை பகுப்பாய்வு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் நம்மிடம் சிறிதளவு பண உதவி கேட்டாலே யோசிக்கும் நாம், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும்.

வெறுமென பங்குகளை வாங்கி வைத்தால், லாபமோ அல்லது செல்வத்தையோ ஏற்படுத்த முடியாது. அதற்கான விதை சரியாக இருப்பது அவசியமாகும். வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு வகுப்பை துவங்க உள்ளோம். பங்குச்சந்தையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? அப்படி  செய்யாவிட்டால் நாம் சம்பாதிக்கும் பணம் யாரோ ஒருவரால் முதலீடு செய்யப்பட்டு, அவர் பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்பு ஏன் ஏற்பட்டது ?

சரியான விலையில் பங்குகளை வாங்குவது எப்படி ?

சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வேறுபாடு என்ன ?

பங்கு முதலீட்டில் நஷ்டத்தை எவ்வாறு தவிர்க்கலாம் ?

மதிப்புமிக்க முதலீட்டாளர்களின்(Value Investors) செல்வத்தை நாமும் பெறுவது எப்படி ?

பங்குகள் மூலம் எவ்வாறு சொத்துக்களை(Financial Assets) ஏற்படுத்தலாம் ?

மோசமான நிர்வாகத்தையும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பங்குகளையும் கண்டறிவது எப்படி ?

பங்குச்சந்தையில் கூட்டு வட்டியின் மகிமை(Power of Compounding) என்ன ?

பணத்தின் மூலம் பணம் பண்ணும்(Money works for you) உண்மை சூத்திரம் என்ன ?

வாருங்கள், இது போன்ற கேள்விகளுக்கான விடையாக பங்குச்சந்தை அடிப்படை கற்றலை ஏற்படுத்துவோம்.

பதிவு செய்ய…

Stock Market – Fundamental Analysis Course – Registration 

கட்டணம்: ரூ. 4,500/- 

இணைய வகுப்பு சலுகை(Online Course):  ரூ. 2250/- மட்டுமே 

பதிவுக்கு பின் வகுப்புக்கான நாள் மற்றும் நேரம், இணைப்பு ஆகியவை உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Fundamental Analysis Course

புத்தகத்தின் வாயிலாக மட்டுமே கற்க விரும்புபவர்களுக்கு…

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – How to pick the right stock in the Share market ?

புத்தக  விலை: ரூ. 228/- மட்டுமே

உரிமை துறப்பு(Disclaimer):

மேலே சொல்லப்பட்ட நிகழ்வு (வகுப்புக்கள்) பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கற்றலுக்கு மட்டுமே. வகுப்புக்களில் சொல்லப்படும் பங்குகள் யாவும் மாதிரியாகவே(Examples) சொல்லப்படும். அவை வாங்க கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய பங்குகள் அல்ல. வர்த்தக மதுரை ஒரு நிதி சேவை(Financial Advisory Services) சார்ந்த நிறுவனம் ஆகும். நடத்தப்படும் வகுப்புகளுக்கு சான்றிதழ்கள், தரவரிசைகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது.

இது ஒரு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை வகுப்பு, தகவல் மற்றும் கற்றலுக்கு மட்டுமே.

பங்குகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய லாப, நஷ்டங்களுக்கு இந்த தளம் பொறுப்பல்ல. பங்குகளில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகரை அணுகுவது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

National Aluminium Company(NALCO) – Fundamental Analysis

ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் நால்கோ (NALCO). மத்திய அரசின் நவரத்னா நிறுவனமாக பார்க்கப்படும் நால்கோ, அலுமினிய உற்பத்தி சேவையை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தொழிலாக கொண்டுள்ளது.

அலுமினிய துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், துறை சார்ந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வழங்கும் உலகின் முக்கிய நிறுவனமாகவும் நால்கோ சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்து உள்ளது  கவனிக்கத்தக்கது.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 5,960 கோடி. அதன் புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், தற்போதைய பங்கு விலை 32 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. டிவிடெண்ட் தொகைக்கு(Dividend yield) பெயர் போன இந்நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோவின் கடன்-பங்கு விகிதம் 0.01 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 100 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NALCO DCF

நிறுவனர்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களாக சொல்லப்படும் மத்திய அரசு பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை. இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை புத்தக மதிப்பு அடிப்படையின் படி மலிவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. எனினும், இந்த துறை உலக பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளன.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 8.50 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி விகிதம் ஐந்து வருடங்களில் 24 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 3 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நான்காம் காலாண்டு முடிவுகள்(Q4FY20) இன்னும் வெளிவரவில்லை. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 42 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அதே வேளையில் பங்கு மீதான வருவாய் கடந்த 12 மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,499 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,734 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு மற்றும் பணவரத்து நன்றாக உள்ளது. அதிக ரிஸ்க் கொண்ட இந்த துறை அவ்வப்போது உலகளவில் ஏற்படும் பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் நால்கோ உள்ளது. பங்கு விலை பெரிய அளவில் ஏற்றம் பெறாவிட்டாலும், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் போது, இந்த பங்கினை சிறிய அளவில் வாங்கி கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டில் டிவிடெண்ட் தொகையை ஈர்க்க உதவும் இது போன்ற பங்குகளை சேர்த்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள்

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள் 

Fundamental Analysis – 14 Days Free Course – Quick Links to read

பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை பகுப்பாய்வு வகுப்புக்களை நாம் கடந்த மூன்று வருடங்களாக வர்த்தக மதுரை தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பயனாளர்கள், அடிப்படை பகுப்பாய்வு கற்றலின் மூலம் தங்கள் பங்குகளை அலசுவதற்கான முயற்சியை நாம் கொடுத்துள்ளோம்.

14 இலவச வகுப்புக்களை கொண்ட இந்த இணைப்பு நமது தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டண வகுப்புகளை பதிவு செய்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச வகுப்புகள் அனைத்தும் உங்களது மின்னஞ்சலில் தானியங்கி முறையில் செயல்படும்.

இதுவரை பயன்பெற்றவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் பயனாளர்களுக்கு வசதியாக விரைவான இணைப்பு ஒன்றினை இங்கே கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில், பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை கண்டறிவதற்கான வாய்ப்பு கிட்டும்.

14 இலவச வகுப்புகளின் விரைவான இணைப்புக்கள்…

மேலே குறிப்பிட்டுள்ள 14 இலவச வகுப்புகளின் இணைப்பை கிளிக் செய்து அடிப்படை பகுப்பாய்வை கற்கலாம். அடிப்படை பகுப்பாய்வில் சந்தேகம் அல்லது இணைப்பை கிளிக் செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் அதே பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

இல்லையெனில், contact@varthagamadurai.com  என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் செய்தியை அனுப்பவும்.

14 இலவச வகுப்புக்களை மின்னஞ்சலில் பெற…

Fundamental Analysis – 14 Days Free Course 

சிறப்பு  கட்டண வகுப்புகளுக்கு…

Premium Courses – Fundamental Analysis – Stocks | Mutual Funds | Money Education

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்

அனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல் 

Anuh Pharma – Small Cap – Fundamental Analysis

எஸ்.கே. குழும நிறுவனங்களின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் இதர பாக்டீரியா எதிர்ப்பு மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. காசநோய் எதிர்ப்பு மற்றும் மேக்ரோலைட்ஸ் ஆகிய தயாரிப்புகளில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.கே. குழுமம்(SK Group) மருந்து தயாரிப்பு போக சுகாதாரம், கல்வி, ஏற்றுமதி, கெமிக்கல், சமூக சேவை ஆகியவற்றிலும் பங்காற்றி வருகிறது. அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 370 கோடி. தற்போதைய பங்கு ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 66 ரூபாயாக உள்ளது. எனவே பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் இரண்டு மடங்கில் உள்ளது.

கடன்-பங்கு விகிதம் 0.06 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 91 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனில்லாத நிறுவனமாக உள்ள அனுக் பார்மா நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 76 கோடியாகவும், செலவினம் 67 கோடி ரூபாயாகவும் உள்ளது.

டிசம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ. 6.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 318 கோடியாகவும், நிகர லாபம் 20.50 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஐந்து வருட காலத்தில் 4 சதவீதமும், பத்து வருடங்களில் 10.3 சதவீதமாகவும் உள்ளது.

லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 6 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 10.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 16.5 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலத்தில் 11 சதவீதம் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை நிறுவனம் ஐந்து முறை போனஸ் பங்குகளை(Bonus Issue) முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. அளிக்கப்பட்ட போனஸ் பங்குகள் அனைத்தும் பங்கு ஒன்றுக்கு, ஒன்றுக்கும் மேலாக தான் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்பு நிலை கையிருப்பு தொகை ரூ. 152 கோடியாகும். பங்கின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஒரு வருடத்தில் 14 சதவீதத்தில் உள்ளது. இதுவே ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமும், பத்து வருடங்களில் 17 சதவீதமாகவும் இருக்கிறது. சமீப தகவலில், பங்கு ஒன்றுக்கு 2.75 ரூபாயை டிவிடெண்ட் தொகையாக(Dividend) அறிவித்துள்ளது அனுக் பார்மா நிறுவனம்.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் அனுக் பார்மா நிறுவனத்தின் உண்மையான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 160 ஐ மதிப்பாக பெறும். பங்குகளை வாங்க விரும்புவோர் ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis – Free Course) கண்டறிந்து, சரியான விலையில் முயற்சி செய்ய வேண்டும். அலசுவதற்கு நேரமில்லாதவர்கள் அல்லது சிரமமாக எண்ணுபவர்கள், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்குகளை வாங்கி வைப்பது மட்டுமே வேலையாக இல்லாமல், வருங்காலங்களில் அதன் நிதி அறிக்கையையும் அலசுவது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல்

எச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா ? – பங்குச்சந்தை அலசல் 

Would you buy HEG LTD – Graphite Electrode now ? Fundamental Analysis

எல்.என்.ஜே. பில்வாரா(LNJ Bhilwara) குழுமத்தின் ஒரு அங்கம் மற்றும் அதன் முதன்மை நிறுவனம் தான் எச்.இ.ஜி. லிமிடெட். மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கிராபைட் எலெக்ட்ரோடு(Graphite Electrode) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் செயல்படுகிறது. தனது உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குழுமத்தின் அனுபவம் சுமார் 60 வருடங்களாகும். நிறுவனத்தின் நிறுவனர் திரு. எல்.என். ஜுன்ஜுன்வாலா தனது ஆரம்பகட்ட தொழிலாக ஜவுளி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் துவங்கினார். பின்பு ஆற்றல் சார்ந்த பல தொழில்களையும், தொழில்நுட்பம், மருத்துவம், கிராபைட் என பல பரிணாமத்தை எடுத்து வந்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,591 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,026 கோடியாகவும் இருந்தது. எச்.இ.ஜி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,500 கோடியாகவும், புத்தக மதிப்பு 1,038 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.16 ஆக உள்ளது. எனவே, நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 90 மடங்கில் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் செய்யப்படவில்லை. அதே வேளையில் கடந்த காலாண்டில் நிறுவனர்கள் சார்பில் 2 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் ஒரு மடங்கில் தான் உள்ளன. இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை(Dividend) அளிப்பதில் சிறப்பாக உள்ளன.

எச்.இ.ஜி. லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலங்களில் 85 சதவீதமும், ஐந்து வருடங்களில் 41 சதவீதமும் மற்றும் பத்து வருட கால அளவில் 14 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 36 சதவீதமும், லாபம் 98 சதவீதமும் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை பற்றிய இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்

பங்கு மீதான வருவாய்(Return on Equity – ROE) கடந்த மூன்று வருடங்களில் 77 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 56 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் ரூ. 3,968 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதார காரணிகள் இந்த நிறுவனத்தின் தொழிலை அவ்வப்போது பாதிக்கும். அமெரிக்க – சீன வர்த்தக போர், கொரோனா வைரஸ் பதற்றம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வருவாயை சமீபத்தில் பாதித்துள்ளது எனலாம்.

கடந்த 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த பங்கின் விலை ரூ. 180 என்ற அளவில் வர்த்தகமானது. பின்பு மலை போல் உயர்ந்து, 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ. 4900 என்ற விலை வரை சென்றது. கடந்தாண்டு நிறுவனம் சார்பில் பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப பெறும் முறையில்(Buyback of Shares) பங்கு ஒன்றுக்கு ரூ. 5500 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று வருடத்திற்கு முன்னர் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெருத்த லாபத்தை எடுத்துள்ளனர். பின்பு, இந்த பங்கின் விலை 2019ம் ஆண்டு (பங்குகள் திரும்ப பெறும் செய்திக்கு பிறகு) முழுவதும் சரிவை நோக்கி தான் சென்றது. நல்ல லாபத்தை கண்ட அன்னிய முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டிலிருந்து கடந்த நிதியாண்டின் முடிவில் வெளியேறியுள்ளனர்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதன் வருவாய் மற்றும் லாபம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 394 கோடி மற்றும் செலவினம் ரூ. 389 கோடியாக இருந்துள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ. 1 கோடி நிகர நஷ்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 2000, 3000 என்ற விலையில் இந்த பங்குகளை வாங்கியவர்கள் பெருத்த சரிவை சந்தித்துள்ளனர். சுழற்சி முறை மற்றும் உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படும் இந்த பங்கு, அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்தவை. அதே வேளையில் அனைத்து காலத்திலும் வாங்கக்கூடிய பங்காக இது அமையவில்லை.

எனவே நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக வளரும் பட்சத்தில், பங்கின் விலையும் மலிவாக கிடைக்கும் போது முதலீடு செய்யலாம். நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அடிப்படை பகுப்பாய்வின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 850 மதிப்பு பெறும் என சொல்லியிருந்தோம். மூன்றாம் காலாண்டு முடிவின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 710 என்ற மதிப்பை மட்டுமே பெறக்கூடும். தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,170 என்ற விலையில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனம் கடந்த நிதியாண்டின் முடிவில் பங்கு ஒன்றுக்கு 80 ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியிருந்தது. இப்போது மூன்றாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – வோல்டாஸ் பங்குகளை வாங்கலாமா ?

பங்குச்சந்தை அலசல் – வோல்டாஸ் பங்குகளை வாங்கலாமா ?

Voltas – A Tata Product – Fundamental Analysis

டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ்(Voltas) நிறுவனம் கடந்த 1954ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இந்நிறுவனம் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் வணிகத்தில் பரவலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏர் கண்டிஷனர், ஏர் கூலர்கள், நீர் குளிரூட்டிகள், நீர் விநியோகிப்பான் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை சேவையை செய்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் முதல் இன்வெர்ட்டருடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை தயாரித்த நிறுவனம் வோல்டாஸ். இந்தியாவின் மிகப்பெரிய ஏர் கண்டிஷனிங் நிறுவனமாகவும் வோல்டாஸ் வலம் வருகிறது. உலகின் மிகப்பெரிய கோபுரமான துபாயின் பர்ஜ் கலிஃபா(Burj Khalifa) மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் மிகப்பெரிய கப்பலான குயின் மேரியிலும்(RMS Queen Mary 2) வோல்டாஸ் நிறுவனத்தின் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.

வீட்டு உபகரணங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க சேவைகளை கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 23,210 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 123 விலையில் உள்ளது. இதன் சந்தை பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 6 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்திற்கு கடன்கள் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 30 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை.

கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 32 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த பத்து வருட காலத்தில் 17 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 8 சதவீதமும், 5 வருட காலத்தில் 6 சதவீதமும் மற்றும் பத்து வருட காலங்களில் 5 சதவீதமும் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை இலவச வகுப்புகள்(Stock Market Course) – பதிவு செய்ய

நிறுவனத்தின் லாபம் கடந்த மூன்று வருடங்களில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமும் மற்றும் 10 வருடங்களில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. வோல்டாஸ் பங்கின் விலை கடந்த ஐந்து வருடங்களில் 23 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 4,060 கோடி.

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் 2019ம் காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,493 கோடியாகவும், நிகர லாபம் 87 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த டிசம்பர் 2018 காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் மற்றும் லாபத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,124 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 508 கோடி.

Voltas Balance sheet 2019

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 30 மடங்காகவும் உள்ளது. தற்போது இந்த பங்கின் விலை ரூ. 700க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வின்(DCF) படி, பங்கு ஒன்றின் விலை 250 ரூபாய் மதிப்பை பெறும். நிறுவனத்தின் நிதி அறிக்கை திருப்திகரமாக உள்ளது. பிராண்டு(Value Brand) காரணத்தால் பங்கு விலை அதிகமாக காணப்படுகிறது. இந்த துறை பருவகால மற்றும் சுழற்சி முறையில் காணப்படுவதால், வருவாய் பெரும்பாலும் சொல்லப்பட்ட காலத்தில் தான் மீண்டெழும்.

பொதுவாக சில்லரை வணிகத்தில் குளிர் சாதனங்களின் சேவை கோடை காலத்தில் தான் தேவைப்படும். இந்த நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் ஜூன் காலாண்டுகளில் (ஏப்ரல் – ஜூன்) தான் அதிகமாக இருக்கும். அதே போல மார்ச் காலாண்டுகளும் (ஜனவரி-மார்ச்) ஓரளவு வருமானத்தை ஈட்டும். எனவே வருவாய் மற்றும் பங்கு விலை குறைந்திருக்கும் காலங்களில் இந்த பங்கினை கவனிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட்

பங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட் 

Should you buy the Ex – Multibagger ITC LTD at current price ?

இந்திய பன்னாட்டு குழும நிறுவனமான ஐ.டி.சி. லிமிடெட்(ITC Ltd) 1910ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் முதன்மை தொழிலாக புகையிலை சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைமையிடமாக கொல்கத்தா விளங்குகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புகையிலை மட்டுமில்லாமல் உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், காகிதம் சார்ந்த எழுது பொருட்கள், பூஜை பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள், பேக்கேஜிங் துறை(Packaging), தொழில்நுட்பம் மற்றும் நட்சத்திர விடுதி(Hotels) போன்ற தொழில்களில் முத்திரை பதித்து முன்னிலை வகிக்கிறது.

இதன் குறிப்பிட்ட பிராண்டுகளாக ஆசீர்வாத் ஆட்டா(Aashirvaad Atta), வில்ஸ்(Wills), கிங்ஸ், கிளாஸ்மேட்(Classmate) புத்தக நோட்டுக்கள், மங்கள்தீப் ஊதுபத்திகள்(Mangaldeep), ஷெரட்டன், பார்ச்சூன் மற்றும் கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல்கள், ஐ.டி.சி. பேப்பர் பொருட்கள், சன்பீஸ்ட் பிஸ்கட், கேண்டிமேன், பிங்கோ, இப்பீ நூடுல்ஸ் என பல வகைகள் சந்தையில் உள்ளன.

ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டின் வருவாய் 52,000 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 12,820 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 27,200 நபர்கள்.

புகையிலை தொழில் முதன்மையாக சொல்லப்பட்டாலும், கடந்த சில காலங்களாக இந்த தொழிலில் உள்ள பங்களிப்பை குறைத்து, மற்ற தொழில்களில் ஐ.டி.சி. நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,91,110 கோடி. புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்காக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை(Debt Free) என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சம்.

ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை நிறுவனர்களின் பங்களிப்பு(No Promoters Holding) எதுவும் தற்போது இல்லை. அதனால் நிறுவனர்களின் பங்கு அடமானம் என்ற சமாச்சாரமும் இல்லை. கார்ப்பரேட் அமைப்பு(Bodies Corporate) மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பாக மொத்தம் 50 சதவீத பங்குகள் உள்ளது. இந்திய புகையிலை உற்பத்தியாளர்கள் அமைப்பின் சார்பில் 24 சதவீத பங்குகள் கைவசம் உள்ளன. குறிப்பிடும்படியாக எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 16 சதவீத பங்களிப்பையும், ஓரியண்டல் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம், ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸுரன்ஸ் ஆகிய காப்பீடு நிறுவனங்கள் தலா ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. சிங்கப்பூர் அரசாங்கமும் ஐ.டி.சி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 460 மடங்காகவும், பங்கு மீதான வருமானம்(ROE) கடந்த பத்து வருடங்களில் 27 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 15 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 11 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

பங்குச்சந்தை இலவச வகுப்புகள் – 14 நாட்கள் (இணைய வழியில்)

லாப வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 11 சதவீதம், ஐந்து வருட காலத்தில் 8 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 14 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 11 சதவீத வருவாயை தந்துள்ளது. எனினும், முதலீட்டாளர் ஒருவர், கடந்த 2005ம் வருடத்தின் போது ஐ.டி.சி. நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால், அன்றைய விலையில் மொத்த முதலீடு ரூ. 30,000 (பங்கு விலை ரூ. 30 X 1000 பங்குகள்). தற்போதைய நிலையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 1.08 கோடி. 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீடு தற்போது 360 மடங்கு உயர்ந்திருக்கும். இவற்றில் போனஸ் பங்குகள் மற்றும் முகமதிப்பு பிரிப்பு(Face value Split) உள்ளடக்கமாகும். டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

கடந்த 2008ம்  நிதியாண்டில் ரூ.14,633 கோடியாக இருந்த நிறுவன வருவாய் 2019ம் நிதியாண்டின் முடிவில் 48,350 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே போல, 2008ம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம்(Net Profit) 3,158 கோடி ரூபாய். தற்போது 2019ம் ஆண்டின் முடிவில் இதன் நிகர லாபம் 12,592 கோடி ரூபாய். நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் காலாண்டு முடிவில் 57,259 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்திற்கு வர வேண்டிய பண வரவும்(Cash Flow) சரியான அளவில் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சந்தையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை கணக்கில் காட்டும். ஆனால், சொல்லப்பட்ட லாபம் கல்லாவில்(Cash Flow) வந்து சேர்ந்தால் மட்டுமே, அது உண்மையான கணக்கு. இல்லையென்றால், அந்த நிறுவனம் பிற்காலத்தில் கடன் வாங்கி சிரமப்பட நேரிடும். ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை லாபம் சாதகமாக பெறப்படுகிறது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை ரூ. 236 ஆக (26,December 2019) உள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வு (DCF Valuation) முறைப்படி, இந்த நிறுவன பங்கை ஆராய்ந்தால், பங்கு ஒன்றின் விலை 180 ரூபாய்க்கு மதிப்புடையது. ஆனால் தற்போதைய சந்தையில் நிலவும் விலை 56 ரூபாய் கூடுதலாக உள்ளது. சந்தை இறக்கத்தில் இந்த பங்கினை வாங்குவதற்கான வாய்ப்பு கிட்டலாம். இருப்பினும், நீண்ட கால முதலீட்டிற்கு, இந்த பங்கினை தகுந்த நிதி அல்லது பங்கு ஆலோசகரை கொண்டு, வாங்கும் முடிவை எடுக்கலாம்.

ITC Fair Value December 2019

நிறுவனத்தின் பாதகமாக நிறுவனர்களின் பங்களிப்பு நேரிடையாக இல்லாமல் இருப்பதால், இந்த பங்கில் உள் வர்த்தகம்(Insider Trading) அதிகமாக நடைபெறும். சமீப காலமாக ஐ.டி.சி. நிறுவன பங்கில் உள் வர்த்தகத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. அதுவும் பெரும்பாலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இருப்பினும், பங்குகளை விற்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வாங்குவதற்கான காரணம், பின்னாளில் அதன் விலை ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை மட்டுமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com