2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ

2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ  

Zomato had a loss of 29.4 Crore Dollar in the 2018-19 Fiscal year

மாதத்திற்கு சராசரியாக 19 கோடி உணவு பயனாளர்களை கொண்டுள்ள உணவு விநியோக சேவை நிறுவனம் ஜோமாடோ(Zomato). 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று தனது சேவையை 24 நாடுகளிலும், 4000க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டிருக்கிறது. சீனாவின் அலிபாபா நிறுவனம் ஜோமாடோவில் 10 சதவீத பங்கு அளவில் முதலீடு செய்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வெளிநாட்டு நிறுவனங்களான உபேர் ஈட்ஸ்(Uber Eats) மற்றும் ஸ்விக்கி(Swiggy) நிறுவனங்களுடன் உணவு விநியோக சேவையில் போட்டிபோட்டு கொண்டு வெற்றிகரமாக வலம் வரும் இந்திய நிறுவனம் தான் ஜோமாடோ. உலகளவில் இதுவரை 12 நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது ஜோமாடோ. உணவகங்களை இணையத்தில் தேடுவது, உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது, நிர்வாகங்களுக்கு தேவையான உணவு சார்ந்த சேவையினை அளித்தல் மற்றும் மற்ற உணவு விற்பனைகளை(Food Delivery Business) செய்து வருகிறது  இந்த நிறுவனம்.

 

நேற்று (05-04-2019) தனது 2018-19ம் நிதியாண்டுக்கான ஆண்டு நிதி அறிக்கையை (Annual Report) வெளியிட்டது, 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக நிறுவனம் சார்பில் .தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் 2018-19ம் நிதியாண்டில் 20.6 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த 2017-18ம் நிதி வருட வருவாயை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாகும். 2017-18ம் நிதியாண்டில் ஜோமாடோ நிறுவனத்தின் வருவாய் 6.8 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

 

இந்திய பிராந்தியத்தில் ஏற்பட்ட செலவின விகிதங்கள் அதிகமானதாகவும், இதன் தொடர்ச்சியாக நிறுவனம் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகள் வரும் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வருவாயை அளிக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உணவு விநியோக சேவையில்(Delivery Service) 15.5 கோடி டாலர்களும், உணவகங்களுடன் சேர்ந்து உணவளிக்கும் வகையில்(Dining out) 4.9 கோடி டாலர்களும், சுகாதாரமான உணவளிக்கும் பிரிவில்(Sustainability) 20 லட்சம் டாலர்களையும் 2018-19ம் நிதி வருடத்தில் வருவாயாக ஈட்டியுள்ளது. ‘Feeding India’ என்ற பெயரில் 8500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு, உணவில்லாதவர்களுக்கு 2 கோடி உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு – பாரத ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு – பாரத ரிசர்வ் வங்கி

REPO Rate reduced to 6 percent by 0.25 bps cut – RBI

 

மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் மூன்று நாட்களாக நடந்திருந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று(04-04-2019) நிதி கொள்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(Repo Rate) விகிதம் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6 சதவீதமானது. நடப்பு 2019ம் வருடத்தில் இரண்டாவது முறையாக பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழுவில்(Monetary Policy Committee) நான்கு பேர் மட்டுமே வட்டி விகித குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய ரெப்போ வட்டி விகித குறைப்பு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வட்டி விகிதத்திலும் குறைக்கப்பட வேண்டும்.

 

ரிவெர்ஸ் ரெப்போ(Reverse Repo) விகிதம் 5.75 சதவீதமாகவும், வங்கி விகிதம்(Bank Rate) 6.25 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்.(CRR) விகிதம் 4 சதவீதத்திலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 19.25 சதவீதத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் வங்கிகளின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் பத்து சதவீதத்திலிருந்து 8.7 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வங்கி வைப்பு நிதிக்கான(Fixed Deposit) வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

What is Bank Repo Rate ?

 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனவும், இது முதல் அரையாண்டில் 6.8 – 7.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாம் அரையாண்டில் 7.3 – 7.4 என்ற சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ம் நிதி வருடத்தின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation Rate) 3 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் 3.5 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதம் வரை இருக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க மதிப்பீடு, முன்னர் சொல்லியிருந்த மதிப்பீட்டை விட குறைவாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் முதலீட்டு நடவடிக்கைகளில் மந்த நிலை காணப்படுவதால் கடந்த 2018-19ம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருந்திருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) தெரிவித்துள்ளது.

 

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, 10 வருட கால அரசு  பத்திரங்களின்(Bond yield) வட்டி அதிகரிக்கும். அதே போல வங்கிகளில் வட்டி விகிதம்(Interest Rate) அதிகரிக்கப்படும் நிலையில், பத்திரங்களின் வட்டி விகிதம்  குறைவாகவே காணப்படும். இதனை சார்ந்து முதலீட்டாளர்களின் முதலீட்டு சாதனமும் மாறுபடும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

செயற்கை நுண்ணறிவு தளமான ஹாப்டிக் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

செயற்கை நுண்ணறிவு தளமான ஹாப்டிக் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

Reliance Jio acquired the Artificial Intelligence Company Haptik for Rs. 700 Crore

 

மும்பை மாநகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஹாப்டிக்(Haptik). கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடல்(Artificial Intelligence) தளங்களை வடிவமைத்து வருகிறது. இரு நிறுவனர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களும், மிகப்பெரிய வாடிக்கையாளர் பட்டியலையும் கொண்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமேசான் பே, ஓலா, கோகோ கோலா, ஜோமாடோ, கோ பிபோ(Goibibo), மஹிந்திரா, ஒயோ(Oyo) மற்றும் எச்.டி.எப்.சி. லைப் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து அதற்கான உரையாடல் தளங்களை வழங்கி வருகிறது. டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனம் ஹாப்டிக் நிறுவனத்தில் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

 

ஹாப்டிக் நிறுவனம் ஐ.பி.எல். மற்றும் ட்ரீம் 11(Dream 11) ஆகிய பிராண்டுகளுக்கும் தனது சேவையை(Conversational AI Platform) அளித்து வருகிறது. இதன் உரையாடல் தளம் நினைவூட்டல் செய்தி, விமானம் அல்லது வாகன பயணத்தை பதிவு செய்வது, கைபேசி ரீசார்ஜ் மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்துவதில்  பயனாளருக்கு துணைபுரியும்.

 

ஹாப்டிக் நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கும்  முயற்சியை ஏற்கனவே கையாண்டது. தற்போது இவற்றில் ஜியோ வெற்றி கண்டு செயற்கை நுண்ணறிவு தளத்தை கொண்டுள்ள ஹாப்டிக் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

 

ஹாப்டிக் நிறுவனத்தில் ஜியோ முதலீடு செய்ய உள்ள தொகை ரூ. 700 கோடி எனவும், முதற்கட்ட முதலீடாக 230 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ தரப்போவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஹாப்டிக் நிறுவனத்தில் ஜியோவின் பங்கு 87 சதவீதமாகவும், மற்ற பங்குகள் அதன் நிறுவனர்களிடம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது மற்றும் உலகளவில் ஒன்பதாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜனவரி மாத முடிவின் படி, ரிலையன்ஸ் ஜியோவுக்கு 28.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு

39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு

The Bombay Sensex history which celebrated its 40th Birthday and crossed all time high of 39,000 Points

 

ஆசியாவின் முதல் மற்றும் பழமையான பங்குச்சந்தை தான் மும்பை பங்குச்சந்தை. உலகளவில் முதல் பத்து இடத்திற்குள் உள்ள இந்திய பங்குச்சந்தையும் மும்பை பங்குச்சந்தை தான், இதன் சந்தை மதிப்பு சுமார் 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தைக்கு வால் ஸ்ட்ரீட்(Wall Street) போன்று மும்பை சந்தைக்கு தலால் ஸ்ட்ரீட்(Dalal Street) ஆகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1875ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை பின்னர் பல மாற்றங்களை தொட்டு சந்தையில் உள்ளவர்களுக்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டது. சென்சிட்டிவ் இண்டெக்ஸ்(Senstive Index) என்பது தான் பின்னாளில் பி.எஸ்.இ. சென்செக்ஸ்(BSE Sensex) என்றானது. பழமையான பங்குச்சந்தை என்று அமைய பெற்றிருந்தாலும், 1979ம் ஆண்டில் தான் மும்பை பங்குச்சந்தை, புள்ளிகளின் அடிப்படையில் வர்த்தகமாக தொடங்கியது.

 

1979ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி, சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை கொண்டு துவங்கப்பட்டது. நேற்று (02-04-2019) தனது வரலாற்று உச்சமான 39,000 புள்ளிகள் என்ற நிலை அடைந்தது. 39,000 புள்ளிகள், அதாவது கடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் 390 மடங்குகள் வளர்ந்துள்ளது என்பது தான் உண்மை. பல ஏற்ற-இறக்கங்களை கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளது என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

 

சென்செக்ஸ்(Sensex) ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒருவர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 3.9 கோடி ரூபாயாக இருந்திருக்கும். இது தனிப்பட்ட பங்குகளின் வருமானத்தை சொல்லவில்லை என்பதை கவனிக்கவும். 2008ம் வருடத்தை சென்செக்ஸின் மிக மோசமான ஆண்டு எனலாம். உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை நம் நாட்டின் சந்தையையும் அப்போது பாதித்தது. மும்பை சென்செக்ஸ் குறியீடு 2008ம் வருடத்தில் 54 சதவீத இறக்கத்தை கண்டிருந்தது, இதனை சந்தையின் மாபெரும் வீழ்ச்சி என பொருளாதார வல்லுனர்களும் கூறியிருந்தனர்.

 

அடுத்த சில காலங்களிலே விழுந்த இடத்திலிருந்து வெகுண்ட சென்செக்ஸ் குறியீடு 73 சதவீத ஏற்றத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றும் மும்பை சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகமாக தான் உள்ளது. 1990ம் வருடம் ஜூலை மாதத்தில் சென்செக்ஸ் தனது 1000 புள்ளிகளை தொட்டது.

 

ஜனவரி மாதம் 1992ம் ஆண்டில் 2000 புள்ளிகளையும், 1999ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 5000 மற்றும் பிப்ரவரி 2006ல் 10,000 புள்ளிகள் என்ற நிலையை எட்டியது. 2007ம் வருடம் டிசம்பர் மாதம் சென்செக்ஸ் குறியீடு 20,000 புள்ளிகளை கண்டது. 2008ம் வருடம் உச்சத்தில் 20,000 புள்ளிகளுக்கும் மேலாக இருந்த குறியீடு அதே வருடத்தின் முடிவில் 8,750 புள்ளிகள் என்ற வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும் அடுத்த இரண்டு வருடங்களில் தனது பழைய நிலையான 20,000 புள்ளிகளை தக்கவைத்து கொண்டது. மே மாதம் 2014ம் வருடம் 25,000 புள்ளிகள் மற்றும் மார்ச் 2015ம் ஆண்டில் 30,000 புள்ளிகள், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 35,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டியது மும்பை சென்செக்ஸ்.

 

கடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் கூட்டு வட்டியின் அடிப்படையில் 17 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange -BSE) 5000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. 1991 மற்றும் 1992ம் காலகட்டங்களில் ஹர்ஷத் மேத்தா மோசடி, 2007 மற்றும் 2008ம் வருடங்களில் உலக பொருளாதார மந்த நிலை, வங்கிகளின் திவால் நிலை சென்செக்ஸ் குறியீட்டை பதம் பார்த்தது(Market Crash in 1991). 2015ம் வருடத்தில் சீன நாட்டில் ஏற்பட்ட மந்த நிலை, சீன யுவான் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் 2016ம் ஆண்டில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் நிலை மற்றும் பணமதிப்பிழப்பு நிகழ்வு ஆகியவை சந்தையை பாதித்த காரணிகளாக சொல்லப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

Personal Finance – Survey / Polling

 

மூன்றாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?

 

விடை:       9 வருடங்கள்

 

விளக்கம்:  பணத்தை சேர்த்து வைப்பது என்னவோ பலருக்கு கஷ்டமான காரியமாக இருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு நாம் வைத்திருக்கும் பணம் இரண்டு மடங்காக மாறினால், மிகவும் சந்தோசப்படுவோம். நிதி கல்வியில் கூட்டு வட்டியின் பலன்(Compound Interest) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில், கூட்டு வட்டியின் தன்மை இல்லாமல் நமது பணம் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாவதற்கு வாய்ப்பு எங்கும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போன்சி திட்டங்களில்(Ponzi Schemes) நமது பணத்தை செலவு செய்து ஏமாற்றம் அடையாமல், பணம் எவ்வாறு இரு மடங்காகிறது என்பதை நாம் கற்று கொண்டாலே, நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் தேட செல்வோம். (Rule 72)விதி எண் – 72 என்ற எளிமையான கணக்கு நமது பணம் எத்தனை வருடங்களில் இரண்டு மடங்காக மாறும் என சொல்லிவிடும்.

Rule No. 72  = 72 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

உதாரணத்திற்கு உங்களிடம் உள்ள ரூ. 1 லட்சம் எத்தனை வருடங்களில் இரு மடங்காகும் என்பதை அறிய, நமக்கு தேவையான தகவல் நமது பணத்தின் மதிப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வட்டி விகிதம். நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை 8 சதவீத வட்டியில் முதலீடு செய்தால், 9 வருடங்களுக்கு பிறகு அது இரண்டு லட்ச ரூபாயாக (72/8 =9 Years) மாறும். இது ஒரு மனக்கணக்கு போல செயல்படும். இதே போன்று நமது பணம் மூன்று மடங்காக வேண்டுமானால், அதற்கான சூத்திரம்:

 

115 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

  • நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?

 

விடை:  4.16 ரூபாய்

 

விளக்கம்: 1947ம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன், நம் நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அப்போதைய காலத்தில் நம் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ரூபாய் – பவுண்ட்(Rupee – Pound) மதிப்பில் தான் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 1927ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை நமது வர்த்தகம் ரூபாய் – பவுண்ட் மாற்றத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அப்போது ஒரு பவுண்ட் மதிப்பு 13 ரூபாய் (13.37) என்ற அளவில் இருந்தது.

 

அப்படியிருக்கும் சமயத்தில், ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 4 டாலர் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – மூன்று ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. எனவே நாம் சுதந்திரம் பெற்ற தருணத்தில்(இந்திய அரசியலமைப்பு துவக்கத்தின் போது), ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.16 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. நாம் நினைப்பது போல ஒரு டாலர் – ஒரு ரூபாய் என்ற மதிப்பில் இல்லை. 1913ம் ஆண்டு வாக்கில் ஒரு டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயில் 9 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?

 

விடை: ரிஸ்க் இல்லை

 

விளக்கம்: லிக்விட் பண்ட் என்பது பரஸ்பர நிதிகள் வழங்கும் கடன் சார்ந்த திட்டங்களாகும்(Debt Mutual Funds). இதில் பெறப்படும் முதலீடு அரசாங்க பத்திரங்கள், கருவூல மசோதா(Treasury Bills), வணிக ஆவணங்கள் மற்றும் வைப்பு சான்றிதழ்(Certificate of Deposit) போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக 91 நாட்களுக்குள் முதிர்வடையும் சாதனம்(Maturity) ஆகும். இவற்றில் ரிஸ்க் என்பது மிக குறைவு மற்றும் வங்கிகளில் உள்ள ரிஸ்க் தன்மையே லிக்விட் பண்டிலும் இருக்கும். எனவே இந்த பண்ட் வகைகளை ரிஸ்க் இல்லா முதலீடு(Risk Free) என்றே சொல்லலாம்.

 

லிக்விட் பண்டுகள் பொதுவாக வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கொடுக்கும் குறுகிய கால முதலீட்டு சாதனமாக பயன்படும். வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறையும் போதும், லிக்விட் பண்டுகளில் வட்டி விகிதம் சற்று அதிகமாக தான் காணப்படும்.

  • உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

விளக்கம்: எந்தவொரு முதலீட்டையும் நாம் மேற்கொள்ளும் முன், அவற்றில் முதலீடு செய்வதற்கான காரணத்தை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது, எனக்கு இவ்வளவு மடங்குகள் பணம் வேண்டும் என நாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.

 

நாம் கற்க போகும் கல்விக்கு, ஒரு அடிப்படை நோக்கம் இருப்பது போல முதலீட்டிற்கும் நோக்கம் இருந்தாக வேண்டும். இதனை தான் நாம் நிதி இலக்குகள்(Financial Goals) என சொல்கிறோம். உதாரணத்திற்கு, 5 வருட கல்வி செலவு, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவு, நான்கு சக்கர வாகனம் வாங்கும் திட்டம், ஓய்வு கால தொகை(Retirement Corpus), புதிய வீடு வாங்குதல் ஆகியவை நிதி இலக்குகள் என சொல்லலாம்.

 

நிதி இலக்குகளுக்கு முதலீடு செய்ய நம்மிடம் தேவையான பணம், காலம் மற்றும் தோராயமான வட்டியை அளிக்கும் முதலீட்டு சாதனம் அமைய பெற வேண்டும்.

 

குமார் என்பவருக்கு அடுத்த 15 வருடங்களில் தனது மகளின் மேற்படிப்புக்காக 10 லட்சம் ரூபாய் (இன்றைய மதிப்பில்) தேவை உள்ளது. 15 வருடங்களில் அவரது நிதி இலக்கினை அடைய தேவைப்படும் முதலீட்டு வாய்ப்பு – பங்குகள் / பரஸ்பர நிதிகள் / வங்கி வைப்பு நிதி / நிலம் / தங்கம். பொருத்தமான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நம் கடமை.

 

  • DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

விடை:  ரூ. 1 லட்சம்  

 

விளக்கம்: பொதுவாக நம்மிடம் உள்ள காலங்காலமாக இருந்த நம்பிக்கை வங்கியில் பணம் போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது. தற்போது அந்த நம்பிக்கையும் நம்மிடம் இல்லை எனலாம். வங்கிகளின் வாராக்கடன் சிக்கலுக்கு பின், வங்கிகளின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து விட்டது எனலாம்.

 

பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் தான் DICGC(Deposit Insurance and Credit Guarantee Corporation) எனப்படும் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கூட்டுஸ்தாபனம். இந்த நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் செய்யப்பட்ட வைப்பு தொகை, சேமிப்பு மற்றும் தொடர் கணக்கு தொகை, தொடர் வைப்பு தொகை(Recurring) ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யப்படும். சொல்லப்பட்ட கணக்கில் உள்ள தொகை அல்லது முதலீட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு எடுக்கப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் வங்கியில் உள்ள நமது பணத்தை இழக்க நேரிட்டால், நமக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர் ஒருவர் ஒரு வங்கியின் கீழ் பல்வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அவருக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே. வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு வங்கிகளின் கீழும் ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கான ப்ரீமியத்தை குறிப்பிட்ட வங்கிகளே செலுத்த வேண்டும். வங்கிகள் சொல்லப்பட்ட ப்ரீமியத்தை செலுத்த தவறினால், வங்கியின் பதிவு மற்றும் காப்பீட்டை ரத்து செய்யும் அதிகாரம் DICGC க்கு உண்டு. எனவே வங்கிகளில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு(Rs.1 Lakh Insurance) தொகை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

 

இந்த வார கேள்விகள்:

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?
  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு(Interest Income) வரி செலுத்த தேவையில்லை ?
  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?
  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

https://www.surveymonkey.com/r/8QLXFGZ

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019

Small Savings Scheme Interest rates for the Period – April to June 2019

 

அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய நிதி அமைச்சகத்தால்(Ministry of Finance)  அறிவிக்கப்படும். சமீபத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்ட ஒரு தகவலில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை எனவும், ஏற்கனவே இருந்த (ஜனவரி-மார்ச் 2019) வட்டி விகிதங்களே இம்முறையும் தொடரும் எனவும் கூறியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எனவே நடப்பு மாதத்தில், அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான நாட்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. கடந்த முறை வெளியிட்ட வட்டி விகிதங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரு வருட வைப்பு தொகையில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் 2018 வரை 6.9 சதவீத வட்டியும், இதுவே நடப்பு ஜனவரி முதல் மார்ச் மாத காலத்தில் 7 சதவீதமாகவும் இருந்தது.

 

கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், மூன்று வருடத்திற்கான வைப்பு தொகை(3 Years Term Deposit) வட்டி விகிதம் 7.20 சதவீதமாக இருந்தது. பின்னர் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு நான்காம் காலாண்டில் 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களில் கடந்த சில வருடங்களாக குறைவான வட்டி விகிதங்கள்(Interest Rate Cut) இருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு காரணமாக செயல்படுவது பணவீக்க காரணியாகும்(Inflation Rates).

Small Savings scheme interest 2019

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தில் அதிகபட்ச வட்டியாக மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு(Senior Citizen Savings Scheme) 8.70 சதவீதம் வழங்கப்படுகிறது. செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi) 8.5 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரம் 7.70 சதவீதமும் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) 8 சதவீத வட்டியும் அளிக்கப்படும்.

 

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

 

பொது வருங்கால வைப்பு நிதிக்கான(PPF) வட்டி விகிதங்கள், சில வருடங்களாக குறைந்த விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருட கால பி.பி.எப். வட்டி விகிதங்களில் அதிகபட்சமாக 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 12 சதவீதமும், குறைந்தபட்ச விகிதமாக கடந்த 2018ம் வருடத்தில் 7.60 சதவீத வட்டி விகிதமும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரை தளத்தின் பதிவு – 31.03.2019

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரை தளத்தின் பதிவு – 31.03.2019

Varthaga Madurai – Financial Freedom Article Published in Nanayam Vikatan Magazine

 

நமது வர்த்தக மதுரை இணைய தளத்தில் கடந்த ஜனவரி மாதம், ‘ நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள் ‘ என்ற தலைப்பில் நிதி சார்ந்த பதிவை பிரசுரித்தோம். தற்போது அதன் பதிவு, இந்த வார நாணயம் விகடன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர் திரு. சி. சரவணன் அவர்களுக்கும், மேலும் இந்த நிதி சார்ந்த பதிவை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இன்றைய காலகட்டத்தில், நிதி சார்ந்த விஷயங்கள் மிகவும் அவசியமான விஷயமாக இருந்து வருகின்றன.

 

முன்னொரு காலத்தில் சேமிப்புக்கு மட்டுமே பெயர் போன நம் நாடு, இன்று நுகர்வோர் கலாசாரத்தில்(Consumerism) சிக்கி தவிப்பது வருத்தத்திற்குரியது. போதிய வருமானம் இல்லாத காலத்தில், கூட்டு குடும்பத்தை சமாளித்து வந்த நாம், இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு நல்ல வருமானம் இருந்தும், சேமிப்பு மற்றும் முதலீட்டு விஷயத்தில் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

 

நமக்கான நிதி சார்ந்த பாதை தெளிவாகும் போது, வாழ்க்கை பயணமும் மகிழ்ச்சியாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தற்போதைய நிலையில், நிதி சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம்(Financial Freedom) என்பதும் ஆரோக்கியமான தன்மையே. நாம் ஒன்றும் செல்வந்தராக வேண்டிய அவசியமில்லை, அதே வேளையில் எந்த சூழ்நிலையிலும் கடன் பெறாமல் வாழ்ந்து காட்டினாலே நாமும் பணக்காரர் தான்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஒரு மில்லியன் வாகன விற்பனை சாதனை – டாட்டா மோட்டார்ஸ்

ஒரு மில்லியன் வாகன விற்பனை சாதனை – டாட்டா மோட்டார்ஸ்

First Indian Company reaches One Million Vehicle Sales Record – Tata Motors

ஜாகுவார் லாண்ட் ரோவர்(JLR) நிறுவனத்தை டாட்டா மோட்டார்ஸ் கையகப்படுத்திய பிறகு, வாகன துறையில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் பல சிக்கல்களில் தவித்தது. சீன வர்த்தக கொள்கை மற்றும் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பிரெக்ஸிட்(Brexit)  நிகழ்வு ஆகியவை இந்நிறுவனத்தின் ஜே.எல்.ஆர். பிராண்டை பதம் பார்த்தது. அடுத்தடுத்த வாகன விற்பனை சரிவு, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவில் 26,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை மட்டும் தனியாக பார்க்கும் போது, அதன் வாகன விற்பனை ஒவ்வொரு காலாண்டும் கணிசமான அளவை கொண்டிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் டாட்டா மோட்டார்ஸ் மட்டும் 16,200 கோடி ரூபாய் விற்பனையையும், ஜே.எல்.ஆர்.(Jaquar) நஷ்டத்தை சேர்க்காமல், நிறுவனத்தின் லாபம் 618 கோடி ரூபாயாக உள்ளது. இந்த லாபம் செப்டம்பர் 2018ம் காலத்தை விட ஆறு மடங்கு அதிகமாகும்.

 

கடந்த 2018ம் வருடத்தில் டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors) நிறுவனம் உலகளவில் 10 லட்சம் இலகுரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 10 லட்சம் வாகனங்களை ஒரே வருடத்தில் விற்பனை செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் டாட்டா மோட்டார்ஸ் பெற்றது. இலகுரக வாகன பிரிவில்(Light Vehicle) கார்கள், வேன்கள், சிறிய பயன்பாடுகளுக்கான வாகனம் மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களும் (3.5 டன் வரையிலான) அடங்கும்.

 

2018ம் வருட காலத்தில் டாட்டா நிறுவனம் மொத்தம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 10.49 லட்சமாகும். இதுவே 2017ம் ஆண்டில் காணும் போது, இந்நிறுவனம் 9.86 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை அளவை கணக்கில் கொள்ளும் போது, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் உலகளவில் உள்ள வாகன துறையில் 16வது இடத்தில் உள்ளது.

 

நடப்பில் டாட்டா அல்ட்ரோஸ்(Tata Altroz) மற்றும் ஹாரியர்(Harrier) பிராண்டுகள் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை ஹாரியர் வாகனத்திற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளது. வாகன விற்பனையில் வோக்ஸ்வேகன் குழுமம்(Volkswagen Group) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் டொயோட்டா(Toyota) நிறுவனமும், மூன்றாம் இடத்தில ரெனால்ட்-நிசான்(Renault-Nissan) குழுமமும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் ஜெனரல் மோட்டார்ஸ்(GM) நிறுவனம் மற்றும் ஹூண்டாய்-கியா(Hyundai-Kia) குழுமம் அங்கம் வகிக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

Best 5 Long term Equity Mutual Funds to Invest – 2019

 

பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்திருப்பது இந்திய பங்குச்சந்தையின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது எனலாம். முன்னர் இருந்ததை விட கடந்த மாதத்தில் இறக்குமதியின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்திய டாலர்-ரூபாய் பரிமாற்றத்தில், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதும் சந்தைக்கு சாதமாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில், அந்த நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில காலங்களாக நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவாக இல்லையெனினும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் வளர்ச்சி சராசரிக்கும் மேலாகவே உள்ளன. பங்குச்சந்தை ஏற்ற காலங்களில் நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதே பாதுகாப்பானது. பின்னாளில் சந்தை ஏதேனும் காரணத்தால் இறக்கம் கண்டாலும், நல்ல பங்குகளில் அந்த தாக்கம் அவ்வளவாக இருக்காது.

 

பங்குச்சந்தையில் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis) ஆராய்ந்து பங்குகளை வாங்குவதற்கு நேரம் உள்ளவர்கள் பங்குச்சந்தையில் நேரிடையாக ஈடுபடலாம். மற்றவர்களுக்காகவே பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்  இன்று பல கொட்டி கிடக்கின்றன. தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக நிதி சார்ந்த விஷயங்களும் நல்ல முன்னேற்றம் காணும். அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரக்கூடியது.

 

இந்திய சந்தையில் நாம் முதலீடு செய்கிறோமோ இல்லையோ, ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டின் கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்கு சந்தையில்(Stock Market) தற்போது தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறார்கள். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் நீண்ட கால நிதி இலக்குகள் மற்றும் செல்வம் சேர்ப்பதற்கான ஒரு சிறந்த முதலீட்டு சாதனமாக உள்ளது. குறுகிய கால மற்றும் உடனடி தேவை உள்ளவர்களுக்கும் பரஸ்பர நிதிகளில் திட்டங்கள் அமைய பெற்றுள்ளன.

 

நடப்பு 2019ம் வருடத்தில் உங்கள் முதலீட்டை தொடங்குவதற்கான சிறந்த ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்(Long term Equity Funds) இங்கே,

 

  • ஆக்ஸிஸ் ப்ளூ சிப் பண்ட் (Axis Blue Chip Fund)
  • ஐ.சி.ஐ.சி.ஐ. புரு ப்ளூ சிப் (ICICI Pru Blue Chip Fund)
  • மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூ சிப் (Mirae Asset Emerging Blue Chip Fund)
  • எச்.டி.எப்.சி. மிட்கேப் ஆஃபர்ச்சுனிடிஸ்(HDFC Midcap Opps Fund)
  • எச்.டி.எப்.சி. டாப் 100 பண்ட் (HDFC Top 100 Fund)

Best Long term Equity funds 2019

 

மேலே சொன்ன மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்(Mutual Funds) நீண்ட காலத்திற்கு உரியவை. ஐந்து வருட காலத்தில் சொன்ன அனைத்து திட்டங்களும் 12 சதவீதத்திற்கு மேல் வருவாயை கொடுத்துள்ளன. இவை எதிர்காலத்திலும் கிடைக்க கூடிய வருவாய் என நாம் சொல்ல முடியாது. அதே வேளையில் நீண்ட கால பயணத்தில் நல்ல வருமானத்தை அளிக்க கூடிய பண்டுகளாக இவை உள்ளன.

 

முதலில் உங்கள் நிதி இலக்குகளை தீர்மானியுங்கள். பிறகு அதன் காலத்திற்கு ஏற்றாற் போல், மேலே சொன்ன திட்டங்களில் முதலீடு செய்து விட்டு இலக்குகளை அடையும் வரை பொறுமையாக இருங்கள். ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் செலவின விகிதம்(Expense Ratio) என காணும் போது, சராசரியாக இரண்டிலிருந்து 2.5 சதவீதம் வரை உள்ளன. ஒரு வருடத்திற்குள் உங்கள் முதலீட்டை திரும்ப பெறும்(Redemption) பட்சத்தில், வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுக்கும் முன், உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். ஒவ்வொரு முதலீட்டு சாதனமும் வெவ்வேறான ரிஸ்க் மற்றும் வருவாய் காலத்தை கொண்டிருப்பவை. தெளிவான முதலீட்டு முடிவுகளுக்கு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் பயன் பெறுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் – ஸ்டேட் வங்கி சேர்மன்

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் – ஸ்டேட் வங்கி சேர்மன்

Banks have to exit Jet Airways in the next two months – SBI Chairman

 

1949ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் திரு.நரேஷ் கோயல். தனது சிறு வயதிலே தந்தையை இழந்ததும், குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிக்கல்களால் தனது தாயாரின் மாமா வீட்டில் கல்வியை தொடங்கினார் நரேஷ். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை முடித்த இவர் 1967ம் ஆண்டு தனது உறவினர் ஒருவரின் பயண நிறுவனத்தில்(Travel Agency) காசாளராக பணிபுரிந்தார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பின்னர் விமானத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணி வாழ்க்கையை தொடங்கிய அவர் பல பொறுப்புகளை வகித்தார். 1975ம் வருடம் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்(Philippines Airline) நிறுவனத்தில் பிராந்திய மேலாளராக பதவி வகித்த நரேஷ் கோயல் 1993ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தையும், அதன் விமான சேவையையும் துவங்கினார். தனது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பத்து வருட காலம் பணிபுரிந்த அனிதா என்ற பெண்மணியை மணந்தார்.

 

விமான துறை சார்ந்த சேவைகளுக்கு பல விருதுகளை வாங்கிய இவர், 1990ம் காலகட்டங்களில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். 25 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நிதி சிக்கலில் மாட்டி கொண்டது. வங்கிகளில் வாங்கிய கடனை(Debt) திரும்ப செலுத்த முடியாமலும், விமான சேவையை தொடர முடியாமலும் திணறியது.

 

ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) விமான நிறுவனத்தில் 22,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் குழுவில் இருந்தும், சேர்மன் பதவியிலிருந்தும் நரேஷ் கோயல் விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் மற்றும் கடன் அளித்த வங்கிகள் அழுத்தம் கொடுத்தது. இதனையடுத்து நேற்று(25-03-2019) நரேஷ் கோயல்(Naresh Goyal) மற்றும் அவரது மனைவி அனிதா கோயல்(Anita) தங்களது பதவியிலிருந்து விலகினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அபுதாபி நாட்டின் எதிஹாட் விமான நிறுவனம்(Etihad Airways) 24 சதவீத பங்குகளை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் பதவி விலகலை அடுத்து, வங்கிகளும் தங்களது கடன் தொகையை மீட்டெடுக்கும் முயற்சியில் முழுவதுமாக இறங்கியுள்ளன. வங்கிகளும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை வைத்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேலான வங்கி கடன்கள் நிலுவையில் உள்ளன.

 

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என எஸ்.பி.ஐ. சேர்மன் திரு. ரஜனீஷ் குமார்(Rajnish Kumar) தெரிவித்துள்ளார். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளின் பொறுப்பில் உள்ளன என்றே சொல்லலாம். நிறுவனத்தில் உள்ள கடனை வசூலிப்பதும், பின்னர் அதனிலிருந்து வெளியேறுவதும் தான் வங்கிகளின் நடவடிக்கையாக  சொல்லப்படுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் விலகியது இந்திய விமானத்துறையில் ஒரு சோகமான நாள் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagmadurai.com

Financial Blog in Tamil