Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி

RBI hikes repo rate by 0.25 percent – July 2018

 

புதன் கிழமை (01-08-2018) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது (25 basis points) பாரத ரிசர்வ் வங்கி. பாரத ரிசர்வ் வங்கி, இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரெப்போ விகிதம் அதிகரிப்பால், தற்போது 6.25 சதவீதம் என்ற அளவிலிருந்து 6.50 சதவீதம்(Repo Rate) என்ற நிலையை கொண்டுள்ளது. இதே நேரத்தில் ரிவெர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo Rate) 0.25 சதவீதம் அதிகரித்து 6.25 % ஆக உள்ளது. Reverse Repo விகிதம் என்பது வணிக வங்கிகளிடம் இருந்து பாரத ரிசர்வ் வங்கி பெறும் தொகைக்கான விகிதம் ஆகும்.

 

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால், வங்கிகளில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் உயரும். பொதுவாக வங்கிகளுக்கு பண வரவு நன்றாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் சலுகை விகிதத்தில் தரப்படலாம். ஆனால் தற்போதைய நிலையில், கடந்த சில காலங்களாக வங்கி டெபாசிட் வட்டி விகிதம் குறைவாக இருந்ததால், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் வங்கியின் வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம்.

 

இந்த உயர்வால்(RBI Monetary Policy), வீட்டுக்கடன், வாகன கடன், மற்றும் தொழில் புரிய கடன் வாங்குவோர் பாதிக்கப்படலாம். வங்கி டெபாசிட்தாரர்களும் தங்கள் சேமிப்புக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற கோணத்திலும் எதிர்பார்க்கின்றனர்.

 

2018-19 நிதியாண்டுக்கான (2வது அரையாண்டு) பணவீக்க மதிப்பீடையும்  ரிசர்வ் வங்கி 4.7 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக -Inflation இருக்கும் என கூறியுள்ளது. பணவீக்கம் உயரும் என்ற நிலைப்பாட்டை கொண்டே இந்த ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019-20 ம் நிதியாண்டில் (முதல் அரையாண்டு) பணவீக்கம் 5 % ஆக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 2018-19 ல் 7.4 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

 

உலகளவில் நடைபெறும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருமானம் ஜூலை மாத முடிவில் ரூ. 96,483 கோடியாக உள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாக இருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

2017-18 ம் நிதியாண்டில் 6.84 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

2017-18 ம் நிதியாண்டில் 6.84 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

6.84 Crore Income Tax Returns filed during Financial year 2017-18

 

2018-19 மதிப்பீடு ஆண்டுக்கான (Assessment Year 2018-19) வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை 31ம் தேதியிலிருந்து நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 31 ம் தேதியாக அறிவித்துள்ளது நேரடி வரிகளின் மத்திய வாரியம்(Central Board of Direct Taxes).

 

2017-18 ம் நிதியாண்டில் (Financial year) பெற்ற வருமானத்திற்காகவே 2018-19 (Jan-Dec 2018) மதிப்பீடு காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி அறிவித்த பின்பும், பொது மக்களிடையே ஒரு குழப்பம் இருந்தது. அதாவது CBDT அறிவித்த தகவலில், குறிப்பிட்ட பிரிவுகளில் வரும் வரிதாரர்களுக்கு மட்டுமே ஆகஸ்ட் 31, கடைசி தேதியாகும் என எடுத்து கொள்ளப்பட்டது. தற்போது இதனை சரியாக விளக்கமளிக்கும் விதத்தில் வருமான வரி தாக்கல் இணையத்தளத்திலே, ‘ உங்களின் வருமானம் (Income Tax Return) எந்த வரி தணிக்கைக்கு உட்பட்டதாக இல்லாத போது ‘ கடைசி தேதியாக ஆகஸ்ட் 31 இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

 

இதனால் சம்பளம் பெறும் வரிதாரர்கள் அனைவருக்குமான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஐ எடுத்து கொள்ளலாம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியையும் மார்ச் 31, 2019 ஆக CBDT அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஜூன் 30, 2018 காலக்கெடுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான வழக்கும் நிலுவையில் உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆதார் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் முறையை கட்டாயமாக்க கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது வருமான வரி தாக்கலை பூர்த்தி செய்ய ஆதார் மூலமான ஆய்வு, வங்கி கணக்கு, இன்டர்நெட் பேங்கிங், டீமேட் கணக்கு, தபால் மூலம் என ஐந்து வகைகளில் செய்யலாம்.

 

2017-18 ம் நிதியாண்டில் மட்டும் 6.84 கோடி கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது 2016-17 ம் நிதி வருடத்தில் 5.43 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் (Apr-Jun 2018 -Updated as on 30-06-18) சுமார் 77,24,900 கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

Filing Category and Income wise

( Range1 =>  Up to ₹5,00,000, Range2 =>  ₹5,00,001 – ₹10,00,000, Range3 =>  ₹10,00,001 – ₹20,00,000, Range4 =>  ₹20,00,001 – ₹50,00,000, Range5 =>  ₹50,00,001 – ₹1,00,00,000, Range6 =>  Above ₹1,00,00,000 )

 

வருமான வரி தாக்கல் இணையதளத்தின் புள்ளிவிவரங்களின் படி, 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் வரி தாக்கல் செய்த தனி நபர் எண்ணிக்கை சுமார் 56,20,300 ஆகவும், 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களில் வரி தாக்கல் செய்த தனி நபர் எண்ணிக்கை 12,74,470 ஆகவும் உள்ளது. அனைத்து பிரிவுகள் உட்பட 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்களின் தாக்கல் எண்ணிக்கை 58,55,770 ஆகும். அதே நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களின் வரி தாக்கல் எண்ணிக்கை 10,058 ஆக கொண்டுள்ளது.

 

நடப்பு நிதியாண்டில் வரி தாக்கல் செய்யப்பட்ட மாநில அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (6,31,400) உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும் (12,12,780), இரண்டாம் இடத்தில குஜராத் மாநிலமும் (9,59,887) உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா ? – புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள்

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா ? – புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள்

New GST Rates with effect from July 27, 2018

 

நேற்றைய (22-07-18) ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் (GST Council Meeting) ஏராளமான பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. நிதி அமைச்சர் பியூஸ் கோயல் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்:

 

நூறுக்கும் மேற்பட்ட நுகர்வோர் சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. டிவி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பொருட்கள், வாக்கும் கிளீனர் (TV, Washing Machine, Refrigerator, Vacuum Cleaner) போன்ற பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 28 சதவீதலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

 

பெயிண்டுகள் மற்றும் வார்னிஷ், ரெசின் சிமெண்ட், லித்தியம் பேட்டரி (Paint, Varnish, Resin Cement, Lithium-ion Battery) போன்ற பொருட்களுக்கும் 28 % லிருந்து 18 % சதவீதமாக வரி விதிக்கப்பட்டன. கைத்தறி துணிகள், பின்னப்பட்ட தொப்பிகள் (Knitted Cap)போன்ற கைவினை பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மாற்றப்பட்டன.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கூட்டத்தில், முக்கியமாக சானிட்டரி நாப்கின்களுக்கு(Sanitary Napkin Tax free) வரி விலக்களிக்கப்பட்டன. கான்க்ரீட் கலவை லாரிகள், தீயணைப்பு வாகனங்கள், கிரேன் லாரிகள் போன்ற சிறப்பு வாகனங்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

 

5 கோடி ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் இனி மேல் மாதாமாதம் வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை, அதற்கு பதிலாக காலாண்டிற்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும்.

 

இந்த கூட்டத்தில் சொல்லப்பட்ட வரி விகித குறைப்பு மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 7000 கோடி ரூபாய் செலவினங்களாக கருதப்படும் எனவும், புதிய வரி விகித குறைப்பு வரும் ஜூலை 27, 2018 முதல் அமலுக்கு வரும் எனவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

New GST rates

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO

ஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO

44 Lakhs Jobs Created in 9 Months – EPFO

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organization -EPFO) கடந்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு சம்மந்தமான ஒரு தகவலை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 2017 இலிருந்து 2018 மே மாதம் வரை, ஒன்பது மாதங்களில் நாட்டில் 44 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது.

 

2017 செப்டம்பர் – 2018 ஏப்ரல் காலத்தில் வருங்கால வைப்பு நிதி புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 41.26 லட்சமாகும். கடந்த மே மாதத்தில் மட்டும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 லட்சமாகும்.

 

மே மாதத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கையில் 18-21 வயது பிரிவில் மட்டும் 2.50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 22-25 வயது பிரிவில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை 1.90 லட்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு சுமார் 6 கோடி உறுப்பினர்களையும், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியையும் நிர்வகிக்கிறது.

 

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களது வருமானத்திலிருந்து சேமிக்கின்றனர். ஊழியர்களின் நிறுவனமும், ஊழியர்களின் சார்பில் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்களிப்பை செலுத்திகிறது.

 

EPFO அமைப்பின் சார்பில் மூன்று விதமான வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு(EPFO) 1952 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment) மற்றும் இந்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.

 

மேலே குறிப்பிடப்பட்ட தரவுகள் அந்தந்த மாதத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை என்றும், அவர்களின் பங்களிப்பு அடுத்தடுத்த மாதத்தில் தவறும் பட்சத்தில் தரவுகளின் எண்ணிக்கையிலும் மாறுபாடு இருக்கலாம் என EPFO அமைப்பு கூறியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.57 சதவீதமாக உயர்வு

ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.57 சதவீதமாக உயர்வு

India’s Export rose to 17.57 Percent – June 2018

 

ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் 17.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு இருந்த போதிலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 16.6 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

 

ஜூன் மாதத்தின் வர்த்தக பற்றாக்குறை (Balance of Trade) கடந்த ஐந்து வருட அதிகபட்ச உயர்வாக உள்ளது. இந்த பற்றாக்குறை உயர்வுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததே காரணமாகும். எண்ணெய் இறக்குமதி ஜூன் மாதத்தில் 57 சதவீதமாக அதிகரித்து 12.73 பில்லியன் டாலராக இருந்தது.

 

மே மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 14.62 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தின் ஏற்றுமதி 27.7 பில்லியன் டாலராக (ஒரு வருடத்தில்) இருந்துள்ளது. இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்து 44.3 பில்லியன் டாலராக உள்ளது.

 

தங்கம் இறக்குமதி (Gold Import) கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, 2.8 சதவீதம் குறைந்து ஜூன் மாதத்தில் 2.39 பில்லியன் டாலராக உள்ளது. ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 5 சதவீதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

India Trade balance

(Data courtesy: tradingeconomics.com)

 

நாட்டின் சில்லரை பணவீக்கம்(Retail Inflation) கடந்த மே மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது. மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 6.25 % அளவில் உள்ளது. வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

.

 

2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கால்சென்டர்

2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கால்சென்டர்

SBI Credit Card Holders cheated by Fake Call center

 

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், தொழில்நுட்ப திருட்டுகளும் அதிகமாக நடந்து வருகின்றன. இதிலும் குறிப்பாக வங்கி மோசடிகள் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டே பெரும்பாலும் நடைபெறுகின்றன.

 

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்  நகரில் உள்ள ஒரு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் மூலம் மோசடி நடந்துள்ளது. போலி கிரெடிட் கார்டு கால் சென்டர் மூலம்,  jayyshree.com என்ற இணையதள பரிவர்த்தனைகள் வாயிலாக OTP – ஒரு முறை கடவுச்சொல்லை கொண்டு 2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை  ஏமாற்றியுள்ளனர்.

 

2000 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் மொத்தமாக சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் 30 டெலி காலர்கள்(Tele Callers) என்று சொல்லப்படும் கால்சென்டர் தொலைபேசி அழைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலும் பெண் அழைப்பாளர்களே ஆவர்.

 

மோசடியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜூலை 8 ம் தேதி கைது செய்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் ஆணையர் கூறியதாவது, ‘ எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பிரிவு ஊழியர்கள் பேசுவது போன்று, வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் பேசி கிரெடிட் கார்டு விவரங்களை  சேகரித்து, அதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு மோசடி செய்துள்ளனர் ‘ என்றார்.

 

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட விஜய் குமார் சர்மா என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளில் வாடிக்கையாளர்கள் கவனமாக செயல்படும் படி சைபர் கிரைம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரி தாக்கலுக்கு எந்தெந்த படிவங்களை பயன்படுத்த வேண்டும் ?

விவசாயிகளுக்கான கரீப் பருவ குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது – அமைச்சரவை

விவசாயிகளுக்கான கரீப் பருவ குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது – அமைச்சரவை

Government hikes Minimum Selling Price for Kharif Crops

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதலுக்கு பின், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை (Minimum Selling or Support Price – MSP) உயர்த்துவது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

 

விவசாயிகளுக்கான கரீப் பருவம் வரும் அக்டோபர் மாதம் துவங்கும் நிலையில், கோடை கால அறுவடை பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அரசு அறிவித்துள்ளது.

 

குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தும் வண்ணம் அரசு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். வருட – வருடாந்திர காலத்துடன் ஒப்பிடும் போது ராகி முதலிடத்திலும், அதற்கடுத்தாற் போல் எண்ணெய் வித்துக்களும் உள்ளன.

 

ராகி 100 கிலோவுக்கு ரூ. 2897 /- ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த வருடத்துடன் பார்க்கும் போது, 52 சதவீதம் அதிகமாகும். அதே போல எண்ணெய் வித்துக்களுக்கு 100 கிலோவுக்கு 5,977 /- ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது 45 சதவீத உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கலப்பின சோளம் 100 கிலோவுக்கு 2,430 /- ரூபாயாக 42 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ரக நெல்லுக்கு 100 கிலோவுக்கு ரூ. 200 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018-19 பருவ காலத்தில் 100 கிலோ ரூ. 1,750 /- என சொல்லப்பட்டிருக்கிறது.

 

ஏற்கனவே கடந்த பட்ஜட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ, அனைத்து பயிர்களுக்கும் அதன் உற்பத்தி தொகையில் குறைந்தபட்சம் அரை மடங்கு விலையை அரசு நிர்ணயிக்கும் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இப்போது விலை உயர்த்தப்பட்டதாக அமைச்சரவை வெளியிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்

நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்

Fiscal Defit would be below budgeted level of 3.3 percent

 

2018-19 ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)  3.3 சதவீத அளவுக்குள் இருக்கும் என நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு முழுவதும், ஒதுக்கப்பட்ட 3.3 சதவீத அளவை விட நிதி பற்றாக்குறை குறைவாக இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களிலேயே ஒதுக்கப்பட்ட அளவில் 55 சதவீத அளவை எட்டியது. இந்த நிதி வருடத்தின் ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை விகிதம் நாட்டின் ஜி.டி.பி. (GDP) ல் 3.3 சதவீதம் என்ற போதிலும், 2017-18 இந்த அளவு 3.53 சதவீதமாக இருந்தது.

 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே மாத காலத்தில், நிதி பற்றாக்குறை அளவு ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இந்த அளவு, இந்த வருடத்தின்ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை அளவில் 55 சதவீதத்தை எட்டியது. நிதி பற்றாக்குறை என்பது பொதுவாக அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான அளவாகும்.

 

இந்த நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவை வரிகளின் (GST) வருவாய் ரூ. 13 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  2017-18 ம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதத்தில் நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவில் 68 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

 

தொழில் துறை தொழிலாளர்களின் பணவீக்கம் (Retail Inflation for Industrial Workers)  கடந்த மே மாதத்தில் 3.96 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.97 % ஆக இருந்தது. உணவு பொருட்களுக்கான சில்லரை பணவீக்கம் 1.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

மீன், கோழி, முட்டை, வெங்காயம், உருளை கிழங்கு, பால் மற்றும் நெய் போன்ற உணவு பொருட்கள் விலை உயர்ந்தும், கோதுமை, மாம்பழம், வெண்டை, மற்றும் கடுகு எண்ணெய் போன்றவை விலை குறைந்தும் காணப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com