All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

மத்திய அரசின் 102 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ?

மத்திய அரசின் 102 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ?

Rs. 102 Lakh Crore Investment Plan – How much allocation for department wise ?

 

கடந்த செவ்வாய் கிழமை அன்று (31-12-2019) பேசிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நாட்டின் உட்கட்டமைப்புக்காக 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த முதலீடு அடுத்த ஐந்து வருடத்திற்கான முதலீட்டு திட்டம் எனவும் கூறியுள்ளார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முதலீடு செய்யப்பட உள்ள ரூ. 102.5 லட்சம் கோடி மூலம் ஆற்றல் சேமிப்பு(Energy), சாலை மேம்பாடு(Roadways), ரயில் போக்குவரத்து(Railways), வீட்டு வசதி மற்றும் நீர்ப்பாசன(Irrigation) மேம்பாட்டிற்கு பயன்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் நீளத்தை அதிகரிப்பதும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, அனைத்து வீடுகளிலும் குடிநீர் தேவையை உறுதி செய்வது என பல திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன.

 

மின் உற்பத்தியை அதிகரிப்பது, நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற பார்வையையும் அரசு முன்வைத்துள்ளது. நாட்டின் அடுத்த இலக்கான 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்($5 Trillion Economy) பொருளாதாரம் என்ற நிலையை அடைய உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அது சாத்தியம். இந்நிலையில் ஒவ்வொரு துறைக்குமான முதலீட்டு பட்ஜெட்டை பற்றியும் மத்திய அரசு கூறியுள்ளது.

 

போக்குவரத்து துறையில் சாலை மேம்பாட்டிற்கு 19.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 13.7 லட்சம் கோடி ரூபாயும், விமான துறைக்கு ரூ. 1.40 லட்சம் கோடி மற்றும் துறைமுகத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது.

 

ஆற்றல் சேமிப்பை(Energy) பொறுத்தவரை மின்சாரத்திற்கு(Power) 11.8 லட்சம் கோடி ரூபாய், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ரூ. 9.3 லட்சம் கோடி, அணு 1.5 லட்சம் கோடி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு 1.9 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கென முதலீடும் கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்புக்கு 4.1 லட்சம் கோடி ரூபாயும், கிராமப்புறங்களில் குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய ரூ. 3.6 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுக்கு 16.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

 

விவசாய துறைக்கு 8 லட்சம் கோடி ரூபாயும், சமூக உட்கட்டமைப்புக்கு (கல்வி, விளையாட்டு, உடல்நலம், சுற்றுலா துறை) ரூ. 3 லட்சம் கோடி, தொழிற்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2025ம் ஆண்டின் முக்கிய இலக்காக 2 லட்சம் கிலோமீட்டர் சாலையும், 750 ரயில் நிலையங்கள் வளர்ச்சிக்காக தனியார் மயமாக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இணைய வேகம் மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள 35 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவது, 619 கிகா வாட் மின் உற்பத்தி, நாட்டில் உள்ள சாலைகளில் 10 சதவீதத்தை விரைவுவழி பாதைகளாக(Expressways) மாற்றுவது என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் காலங்களில் அரசின் பட்ஜெட் அறிவிப்பு, அதனை சார்ந்த நிதி பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் காலாண்டு பொருளாதார வளர்ச்சி எண்கள் முக்கியத்துவம் பெறும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள்

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள் 

Simple Investment Thoughts for the year T20 – 2020

 

2019ம் வருடத்தின் கடைசி நாளை இன்று அடைந்தாயிற்று. 2020ம் ஆண்டினை வரவேற்கத்தக்க வகையில் பல கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெறும். தமிழர்களின் புத்தாண்டு தைத்திருநாள் தான் எனினும், புதிய கொள்கைகளையும், பழக்கங்களையும் கடைபிடிக்க ஆங்கில ஆண்டு ஒரு உந்துதல் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாம் ஜனவரி 1ம் தேதி நினைத்த ஒரு விஷயத்தை பழக்கமாக மாற்றுகிறோமோ, இல்லையோ – ஆனால் அதற்கான முயற்சியை எடுத்தாலே பாதி வெற்றி பெற்றது போல் தான். அது போல சில எளிய முதலீட்டு சிந்தனைகளை இங்கே கொடுத்துள்ளோம். அவை அனைவரும் கடைபிடிக்க கூடிய வகையில் அமையும்.

 

T20 ஆண்டுக்கான முதலீட்டு சிந்தனைகள்…

 

  • மரம் நடுங்கள். அவை அடுத்த 20 வருடங்களுக்குரியது, பணத்தின் மீது எவ்வாறு கூட்டு வட்டி செயல்படுகிறதோ, அதனை போல மரத்தின் மீதும் இயற்கை உந்துதல் எப்போதும் இருக்கும். நாம் செய்ய வேண்டியது, மரம் நட்டு அதனை பராமரிப்பது தான். (SIP Investment போல !)

 

  • வங்கியில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை எப்போதும் சரியான அளவில் பராமரிக்க பழகுங்கள். இந்த பழக்கம் பின்னாளில் நமது குடும்பத்தின் நிதி நிலையிலும்(Asset to Liability) பிரதிபலிக்கும். அதிக பணத்தையும், ஆடம்பரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் சிறு தொகையை பராமரித்தாலே போதும்.

 

  • உங்களின் வருமானம் மாத சம்பளமாக இருக்கலாம். இல்லையெனில் தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதனை ஒரு மணிநேர கணக்கில்(Earnings per Hour) பார்க்க பழகுங்கள். உதாரணத்திற்கு, தனிநபர் ஒருவரின் மாத சம்பளம் ரூ. 30,000 எனில், அவருடைய ஒரு நாள் சம்பளம் ரூ. 1000 மற்றும் ஒரு மணிநேர சம்பளம் ரூ. 125 /- (8 மணிநேர வேலை எனும் போது). அதற்காக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களிடம் செலவிடக்கூடிய நேரங்களை தவறவிடாதீர்கள். அதற்கும் ஒரு நன்மதிப்பு உண்டு.

 

  • சாலையில் யாராவது உங்களிடம் உதவி கேட்டு நின்றால், அவர்களுக்கு பணம் கொடுக்க முதலில் முன்வராதீர்கள். அதற்கு மாற்றாக அவர்களுடைய கதையை (பிரச்சனைகள்) சில நிமிடங்கள் கேட்க துவங்குங்கள். உண்மையில் அவருடைய பிரச்சனை பணம் மட்டுமில்லாமல், வேறு ஏதாவது விஷயமாக இருக்கலாம். அது அடிப்படை கல்வியோ, மருத்துவமோ, ஆதரவோ அல்லது நல்ல உணவாக இருக்கலாம்.

 

  • நிதி சார்ந்த விஷயங்களில் நண்பர்கள் குழுவை (Build a Financial Relationship) ஏற்படுத்துங்கள். வெறும் மால்களிலும், திரையரங்குகளிலும் செலவழிப்பது மட்டுமே நம் நோக்கமாக இருக்க கூடாது. மாறாக மால்களிலும், அரங்கத்தின் பின் உள்ள தொழில் தன்மையையும் நாம் கற்று கொள்ள வேண்டும். நான்கு நண்பர்கள் சேர்ந்தால், ஆரோக்கியமான நிதி விஷயங்களை கலந்துரையாட வேண்டும். பணம் சார்ந்த விஷயத்தை பேச பழக வேண்டும். அதனை சார்ந்த தகவல்களையும் பரிமாறி கொள்ள வேண்டும். (உதாரணமாக நாளிதழ்களில் வரும் வணிக செய்திகள் மற்றும் குடும்ப பட்ஜெட் சார்ந்து)

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • பெரிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். ஆனால் சிறு சிறு இலக்குகளுக்கு (Goals) முக்கியத்துவம் கொடுங்கள். சிறு இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு, உங்களுக்கு நீங்களே ஒரு சிறிய அளவிலான பரிசை கொடுத்து பழகுங்கள். (உதாரணமாக, நான் இன்று இந்த ஐந்து வேலைகளை முடிக்க கற்று கொள்வேன். அதனை அடைந்து பரிசையும் பெறுவேன்)

 

  • தோல்வி அடைய தயங்காதீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதில் பெரிய பாடங்களை கற்று கொள்ள வாய்ப்பில்லை. வெறும் பாராட்டுகளை மட்டுமே பெறுவீர்கள். தோல்வியில் மட்டுமே விமர்சனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை (New Opportunities) கண்டறிய முடியும். உங்களுக்கு தேவை, புதிய வாய்ப்புகளே – கவலை அல்ல…

அனைவருக்கும் 2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… T20 Year Wishes

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

அடுத்த ஐந்து வருடத்திற்கான அற்புதமான முதலீட்டு வாய்ப்புகள் – 2020

அடுத்த ஐந்து வருடத்திற்கான அற்புதமான முதலீட்டு வாய்ப்புகள் – 2020

Good Investment Opportunities for the next Five years – T20 Year

சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே, அதற்கான பலனை பெற முடியும். வெறுமென நம் வீட்டின் ஏதாவது ஒரு மூளையில், தலையணைக்கு அடியில் பணத்தை சேர்த்து வைப்பது வெறும் சேமிப்பாக தான் இருக்கும். அதனால் நமக்கு ஒரு வார அல்லது ஒரு மாத பயன் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனை நீங்கள் நீண்ட நாட்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பதில் எந்த பலனும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பணவீக்கம்(Inflation) என்ற சொல்லை நீங்கள் அறிந்து கொண்டால், இந்த பொருளாதார உலகினை வெல்லலாம். நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்து வைப்பது சேமிப்பு, அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதும் சேமிப்பு(Savings) தான். அதனை குறுகிய காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், முதலீடு(Investment) என்னும் சாதனம் வளர கூடியது. நீண்ட காலத்தில் கூட்டு வட்டி என்னும் பணக்கார விதியை எடுத்து கொண்டு செல்லும் இந்த முதலீட்டு சாதனத்திற்கு உண்டு.

அதனால் நம்மில் பெரும்பாலோர் முதலீட்டிற்கும், சேமிப்புக்கும்(Savings vs Investing) வித்தியாசம் தெரியாமல் போன்சி திட்டங்களில் பணத்தை போட்டு ஏமாந்து விடுகின்றனர். மேலும் அதனை ஒரு முதலீடு என தவறாக கருதுகின்றனர். எந்தவொரு முதலீட்டுக்கும் வளர்வதற்கு கால அவகாசம் தேவை. நாம் ஒரு தொழிலை ஆரம்பித்தவுடன், ‘ அண்ணாமலை ‘ ஆகி விட முடியாது. அந்த தொழில் சிறப்பாக வளர்வதற்கான கால அவகாசம் தேவை. நாம் தொடர்ச்சியாக தொழிலை செய்ய வேண்டும், குறைகள் இருப்பினும் அதனை திருத்தி செய்ய வேண்டும். பின்பு தான் அதன் முதலீடு வளரும். அதனால் தான் தொழில் புரிபவர்கள், தாங்கள் செய்த முதலீட்டை ஐந்து வருடங்களுக்கு பிறகு தவணை முறையில் பெறுகின்றனர்.

இதனை போல தான் ரியல் எஸ்டேட் துறைக்கும், நீங்கள் வாங்கிய வீட்டையோ அல்லது நிலத்தையோ உடனடியாக விற்க போவதில்லை. ரியல் எஸ்டேட் விளம்பரம் வேண்டுமானால், உடனடியாக இந்த விலைக்கு போகும் என கதை கட்டலாம். ஆனால் எதார்த்த நிலை, அந்த முதலீடு வளர்வதற்கு நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இது தான் முதலீட்டின் சாராம்சம்.

அடுத்த ஐந்து வருடங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம். ஐந்து வருட காலம் என்ற அளவு நிர்ணயிக்கப்பட்டதின் அவசியம், நீங்கள் உங்கள் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவற்கான காலம் எனலாம். ஒன்றாம் வகுப்பு சேர்ந்தவுடன் ஐ.ஏ.எஸ்.(IAS) ஆகி விட முடியாது. கற்க வேண்டும், கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

முதலீட்டு கொள்கைக்கு மூன்று விதமான பிரிவுகளாக நாம் வகைப்படுத்தலாம். முதலாவதாக குறைந்த ரிஸ்க் தன்மை உடையவர்கள் (ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள்), இரண்டாவதாக நடுத்தர ரிஸ்க் தன்மையை எடுக்க கூடியவர்கள் மற்றும் தீவிரமாக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய கூடியவர்கள் என மூன்று வகைகளாக பிரித்துள்ளோம். நீங்கள் எந்த மனப்பான்மை உடையவர்கள் என்பதை பொறுத்து முதலீட்டு தேர்வுகள் மாறுபடும்.

அதற்காக இளம்வயதினர் ரிஸ்க் எடுக்காமல் இருக்க கூடாது. வருவாய் ஈட்டுவதற்கான காலம் அதிகமாக இருப்பதால், இவர்கள் குறைந்தபட்சம் நடுத்தர ரிஸ்க் தன்மையை தேர்வு செய்வது சிறந்தது. இல்லையென்றால், நீண்ட கால பலனை பெற முடியாது. நம் நாட்டில், பெரும்பாலான இளைஞர்கள் குறைந்த ரிஸ்க் தன்மையை மட்டுமே கொண்டிருக்கிறார்கள் என்பது பாதகமான விஷயம். இல்லையெனில், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ஏதாவது ஏமாற்று பேர்வழிகளிடம் மாட்டி கொள்கின்றனர். 

வயதானவர்கள் முடிந்தவரை அதிக ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவர்கள் குறைந்த அளவிலான ரிஸ்க் முதலீட்டு சாதனங்களை தேர்வு செய்து தங்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக வாழ்வது நன்று. செல்வ வளம்(Wealth) படைத்த வயதானவர்கள் தங்கள் பலத்தை பொறுத்து ரிஸ்க் தன்மையை மாற்றி கொள்ளலாம்.

Investment opportunities 2020 India

முதலீட்டு காலத்தை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலமாக பிரித்துள்ளோம். குறுகிய காலமாக மூன்று வருடத்திற்கு குறைவாக, நடுத்தர காலம் எனில் மூன்று முதல் ஏழு வருடங்களுக்குள் மற்றும் நீண்ட காலமாக 7 வருடத்திற்கு மேல் என சொல்லியுள்ளோம். குறைந்த அளவிலான ரிஸ்க் உடையவர்கள்(Conservative) அல்லது ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் குறுகிய கால தேவைக்கு அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், தங்க பண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவற்றில் தங்கம் சார்ந்த எந்தவொரு சாதனமும் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது என்பதை மறக்க வேண்டும். பங்குச்சந்தையுடன் ஒப்பிடும் போது, தங்கம் பெரிய ஏற்ற இறக்கத்திற்கு உட்படாது. அதே வேளையில் அவற்றின் வருவாயும் குறைவாக தான் இருக்கும். நீண்ட காலம் எனில், பணவீக்கத்தை தாண்டி வருவாயை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

குறுகிய கால முதலீட்டிற்கு, நடுத்தர ரிஸ்க்(Moderate) எடுக்க கூடியவர்கள் லிக்விட் பண்டுகள் மற்றும் கால அளவு கொண்ட பண்டுகளை (Duration Based) தேர்ந்தெடுக்கலாம். அதிக ரிஸ்க் எடுக்க கூடியவர்கள் கால அளவு மற்றும் கிரெடிட் ரிஸ்க் பண்டுகளை(Credit Risk Funds) தேர்வு செய்யலாம்.

இது போல மற்ற காலங்களுக்கும், முதலீட்டாளர்களின் மனநிலையை பொறுத்து முதலீட்டு வாய்ப்புகளை கொடுத்துள்ளோம். முதலீடு செய்யும் முன், உங்களுக்கான தேவை அல்லது இலக்கை நிர்ணயித்து முதலீடு செய்ய பழகுங்கள். வெறுமனே என்னிடம் நிறைய பணம் உள்ளது, நான் முதலீடு செய்கிறேன் என செய்ய வேண்டாம். அவ்வாறான சூழ்நிலை இருந்தால், நீங்கள் மற்றவர்களுக்கு உதவ முன் வரலாம். மற்றவர்களின் தொழிலை ஊக்குவிப்பதற்கு பயன்படலாம். அதனால் முதலீட்டு இலக்கு என்பது எப்போதும் அவசியம்.

முதலீடு என்பது பொதுவாக ரிஸ்க் தன்மையை கொண்டது. அதனால் தான் வளரக்கூடியது. நான் செய்த முதலீடு ஏன் இறக்கம் காண்கிறது என கேட்க கூடாது. தேவைக்கான காலத்தை பொறுத்து முதலீட்டை தேர்வு செய்யுங்கள். பி.எஸ்.சி.(B.Sc) மூன்று வருடங்கள், பி.இ.(B.E) நான்கு வருடங்கள் மற்றும் மருத்துவம் ஐந்து வருடங்கள்… புரிந்து கொள்ளுங்கள்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இங்கே ரியல் எஸ்டேட் துறை பற்றி சொல்லப்படவில்லை என்றாலும், இது போன்ற முதலீடுகள் நடுத்தர காலம் முதல் நீண்ட காலத்தை சார்ந்தவை. உங்களுக்கு அந்த தொழிலை புரிந்து கொள்ள முடியும் என்றால் மட்டும் முதலீடு செய்யுங்கள். இல்லையெனில், முதலீட்டு பரவாலாக்கத்தை ஏற்படுத்துங்கள். அதாவது ரியல் எஸ்டேட் கொஞ்சம், சிறிதளவு தங்கம், பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Funds) பகுதியாக என பிரித்து முதலீடு செய்யலாம்.

உங்களுக்கு முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்துவது சிரமமாக இருப்பின், பரஸ்பர நிதிகள் வழங்கும் அஸெட் அலோகேஷன் பண்டுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஏனெனில், அவர்கள் இதனை தான் செய்கிறார்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரலாறு காணாத வங்கி மோசடிகள் – உங்கள் பணமும் இருந்திருக்கலாம்

வரலாறு காணாத வங்கி மோசடிகள் – உங்கள் பணமும் இருந்திருக்கலாம் 

All Time High in Bank Frauds of worth Rs. 2.63 Lakh Crore  – H1: 2019 – 20 – RBI

நம் நாட்டில் உள்ள நிதி துறையில் மக்களின் நம்பிக்கையாக விளங்குவது வங்கிகளும், அஞ்சலகங்களும் தான். நாம் வாங்கக்கூடிய மாத சம்பளமாக இருந்தாலும், சிறு சேமிப்பாக இருந்தாலும், இல்லையெனில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பண பரிவர்த்தனை செய்வதாக இருந்தாலும் நாம் மேலே சொன்ன இரண்டு பிரிவுகளை தான் தேர்ந்தெடுப்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அஞ்சலகத்தை விட வங்கியில் கூடுதல் சேவை வழங்கப்படுவதால், நாம் பெரும்பாலும் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். நகைக்கடன், மாத வருவாய், ஓய்வூதியம், பிக்சட் டெபாசிட்(Fixed Deposit), ஏ.டி.எம்.(ATM) சேவை, காசோலை பரிவர்த்தனை, இணைய வழி பரிவர்த்தனை என பல தேவைகளுக்கு நாம் வங்கிகளை நம்பியுள்ளோம்.

இன்று நாம் பண பரிவர்த்தனை சார்ந்த பல செயலிகளை கண்டிருந்தாலும், நம்மில் பலர் வங்கிகளில் கிடைக்கப்பெறும் செயலிகளை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் நமக்கு வங்கியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக. இருப்பினும், நம் நாட்டை பொறுத்தவரை இணைய வழி பரிமாற்றத்திற்கான பாதுகாப்பு முழுவதுமாக அமைக்கப்படவில்லை எனலாம். குறிப்பிடத்தக்க பாதுகாப்பை தாண்டி, ஏதேனும் மோசடிகள்(Bank Frauds) நடந்தாலும் அதற்கான உடனடி தீர்வுகள் மற்றும் குறைதீர்க்கும் மையங்கள் இங்கு பெரிதாக இல்லை.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டில் உள்ள வங்கிகளில் ஏற்பட்டுள்ள மோசடிகளின் மதிப்பு ரூ. 2.63 லட்சம் கோடி என பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் நடைபெற்ற மோசடிகளின் எண்ணிக்கை மட்டும் 4,412 மற்றும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.13 லட்சம் கோடி ஆகும்.

Bank Frauds H1FY20 RBI Report

கடந்த நிதியாண்டில் 6,801 வங்கி மோசடிகள் நடைபெற்று இருந்தன. ஆனால் அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 71,540 கோடி மட்டுமே. தற்போது சொல்லப்பட்டுள்ள வங்கி மோசடிகளின் மதிப்பு வரலாறு காணாத புதிய உச்சத்தை கண்டுள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 398 வழக்குகள் 50 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகள் என பாரத ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய்க்கு மேலான வழக்குகள் 21 எனவும், அவற்றின் மதிப்பு 44,951 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு காரணமாக சொல்லப்படுவது, ‘ மோசடி நடந்த தேதிக்கும், அதனை கண்டறிய தேவைப்பட்ட நாளுக்குமான இடைவெளியே. அதாவது கால தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது ‘. வங்கி மோசடிகள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் தான் அதிகமாக காணப்பட்டுள்ளது. 85 – 90 சதவீத மோசடிகள் பொதுத்துறை வங்கிகளிலும், 10 சதவீத மோசடிகள் தனியார் வங்கிகளிலும் மற்றும் இதர வெளிநாட்டு வங்கிகளிலும் நடைபெற்றுள்ளது. இதர பிரிவுகளில் பேமெண்ட் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளும் அடங்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட்

பங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட் 

Should you buy the Ex – Multibagger ITC LTD at current price ?

இந்திய பன்னாட்டு குழும நிறுவனமான ஐ.டி.சி. லிமிடெட்(ITC Ltd) 1910ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் முதன்மை தொழிலாக புகையிலை சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைமையிடமாக கொல்கத்தா விளங்குகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புகையிலை மட்டுமில்லாமல் உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், காகிதம் சார்ந்த எழுது பொருட்கள், பூஜை பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள், பேக்கேஜிங் துறை(Packaging), தொழில்நுட்பம் மற்றும் நட்சத்திர விடுதி(Hotels) போன்ற தொழில்களில் முத்திரை பதித்து முன்னிலை வகிக்கிறது.

இதன் குறிப்பிட்ட பிராண்டுகளாக ஆசீர்வாத் ஆட்டா(Aashirvaad Atta), வில்ஸ்(Wills), கிங்ஸ், கிளாஸ்மேட்(Classmate) புத்தக நோட்டுக்கள், மங்கள்தீப் ஊதுபத்திகள்(Mangaldeep), ஷெரட்டன், பார்ச்சூன் மற்றும் கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல்கள், ஐ.டி.சி. பேப்பர் பொருட்கள், சன்பீஸ்ட் பிஸ்கட், கேண்டிமேன், பிங்கோ, இப்பீ நூடுல்ஸ் என பல வகைகள் சந்தையில் உள்ளன.

ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டின் வருவாய் 52,000 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 12,820 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 27,200 நபர்கள்.

புகையிலை தொழில் முதன்மையாக சொல்லப்பட்டாலும், கடந்த சில காலங்களாக இந்த தொழிலில் உள்ள பங்களிப்பை குறைத்து, மற்ற தொழில்களில் ஐ.டி.சி. நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,91,110 கோடி. புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்காக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை(Debt Free) என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சம்.

ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை நிறுவனர்களின் பங்களிப்பு(No Promoters Holding) எதுவும் தற்போது இல்லை. அதனால் நிறுவனர்களின் பங்கு அடமானம் என்ற சமாச்சாரமும் இல்லை. கார்ப்பரேட் அமைப்பு(Bodies Corporate) மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பாக மொத்தம் 50 சதவீத பங்குகள் உள்ளது. இந்திய புகையிலை உற்பத்தியாளர்கள் அமைப்பின் சார்பில் 24 சதவீத பங்குகள் கைவசம் உள்ளன. குறிப்பிடும்படியாக எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 16 சதவீத பங்களிப்பையும், ஓரியண்டல் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம், ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸுரன்ஸ் ஆகிய காப்பீடு நிறுவனங்கள் தலா ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. சிங்கப்பூர் அரசாங்கமும் ஐ.டி.சி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 460 மடங்காகவும், பங்கு மீதான வருமானம்(ROE) கடந்த பத்து வருடங்களில் 27 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 15 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 11 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

பங்குச்சந்தை இலவச வகுப்புகள் – 14 நாட்கள் (இணைய வழியில்)

லாப வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 11 சதவீதம், ஐந்து வருட காலத்தில் 8 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 14 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 11 சதவீத வருவாயை தந்துள்ளது. எனினும், முதலீட்டாளர் ஒருவர், கடந்த 2005ம் வருடத்தின் போது ஐ.டி.சி. நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால், அன்றைய விலையில் மொத்த முதலீடு ரூ. 30,000 (பங்கு விலை ரூ. 30 X 1000 பங்குகள்). தற்போதைய நிலையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 1.08 கோடி. 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீடு தற்போது 360 மடங்கு உயர்ந்திருக்கும். இவற்றில் போனஸ் பங்குகள் மற்றும் முகமதிப்பு பிரிப்பு(Face value Split) உள்ளடக்கமாகும். டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

கடந்த 2008ம்  நிதியாண்டில் ரூ.14,633 கோடியாக இருந்த நிறுவன வருவாய் 2019ம் நிதியாண்டின் முடிவில் 48,350 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே போல, 2008ம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம்(Net Profit) 3,158 கோடி ரூபாய். தற்போது 2019ம் ஆண்டின் முடிவில் இதன் நிகர லாபம் 12,592 கோடி ரூபாய். நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் காலாண்டு முடிவில் 57,259 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்திற்கு வர வேண்டிய பண வரவும்(Cash Flow) சரியான அளவில் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சந்தையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை கணக்கில் காட்டும். ஆனால், சொல்லப்பட்ட லாபம் கல்லாவில்(Cash Flow) வந்து சேர்ந்தால் மட்டுமே, அது உண்மையான கணக்கு. இல்லையென்றால், அந்த நிறுவனம் பிற்காலத்தில் கடன் வாங்கி சிரமப்பட நேரிடும். ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை லாபம் சாதகமாக பெறப்படுகிறது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை ரூ. 236 ஆக (26,December 2019) உள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வு (DCF Valuation) முறைப்படி, இந்த நிறுவன பங்கை ஆராய்ந்தால், பங்கு ஒன்றின் விலை 180 ரூபாய்க்கு மதிப்புடையது. ஆனால் தற்போதைய சந்தையில் நிலவும் விலை 56 ரூபாய் கூடுதலாக உள்ளது. சந்தை இறக்கத்தில் இந்த பங்கினை வாங்குவதற்கான வாய்ப்பு கிட்டலாம். இருப்பினும், நீண்ட கால முதலீட்டிற்கு, இந்த பங்கினை தகுந்த நிதி அல்லது பங்கு ஆலோசகரை கொண்டு, வாங்கும் முடிவை எடுக்கலாம்.

ITC Fair Value December 2019

நிறுவனத்தின் பாதகமாக நிறுவனர்களின் பங்களிப்பு நேரிடையாக இல்லாமல் இருப்பதால், இந்த பங்கில் உள் வர்த்தகம்(Insider Trading) அதிகமாக நடைபெறும். சமீப காலமாக ஐ.டி.சி. நிறுவன பங்கில் உள் வர்த்தகத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. அதுவும் பெரும்பாலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இருப்பினும், பங்குகளை விற்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வாங்குவதற்கான காரணம், பின்னாளில் அதன் விலை ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை மட்டுமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

150 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத சாதனை, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி

150 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத சாதனை, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி

First time in 150 years on Zero Fatality Rate in Indian Railways

 

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் நிறுவனமான இந்தியன் ரயில்வே(Indian Railways), உலகின் நான்காவது  பெரிய ரயில் நிறுவனமாகும். 1853ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்திய ரயில்வே துறை தினசரி 20,000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளையும், 13 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்திய ரயில்வே பாதையின் நீளம் சுமார் 67,300 கிலோ மீட்டர் மற்றும் மொத்த தடத்தின் நீளம் சுமார் 1,21,400 கிலோமீட்டர் (மார்ச் 2017 நிலவரப்படி). 2018-19ம் நிதியாண்டின் முடிவில் ரயில்வே துறையின் வருவாய் 1.97 லட்சம் கோடி ரூபாய். சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 6000 கோடி ரூபாய். 

 

18 மண்டலங்களை கொண்டுள்ள இந்திய ரயில்வே துறை CRIS, RITES, CONCOR, IRCON, IRCTC, RVNL, IRFC, NHSRCL, DFCCI, RAILTEL மற்றும் MVRC ஆகிய 10 துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியது. இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக இயக்கப்பட்ட ரயில், தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

 

ரயில் பயணம் அனைவருக்கும் சுகமானதாக இருந்தாலும், தாமதம் மற்றும் கூட்ட நெரிசல் ஆகியவை பெரும்பாலானவர்களை பயணங்களில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அது போல எதிர்பாராத ரயில் விபத்துகளும், பெருமளவிலான உயிர்சேதத்தை ஏற்படுத்தும். 

 

1990-1995 கால கட்டங்களில் ரயில் விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக 500 பேர் இறக்க நேரிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் இறப்பு விகிதங்கள் குறைவாக இருந்தாலும், அது ஒரு ஆபத்தான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ரயில் விபத்துகளால் உயிர் சேதம் மட்டுமில்லாமல், அதற்கான இழப்பீடு தொகையும் அரசாங்கத்தால் அதிகளவில் செலவு செய்யப்பட்டது.

 

இதனை காரணமாக கொண்டு, ரயில்வே துறையில் சமீப வருடங்களாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கான காப்பீட்டை(Travel Insurance) பெறும் வகையிலும் வசதி செய்யப்பட்டது. இதனால், பயணிகளின் பயணமும் காப்பீடு தொகையால் பாதுகாக்கப்பட்டது. சிக்னல் கோளாறுகள், விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிகைகள் என பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் ரயில்வே துறையின் கவனம் ஈர்க்கப்பட்டது.

 

2017-18ம் நிதியாண்டில் 73 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2018-19ம் ஆண்டில் 37 ஆக குறைந்தது. அதாவது 40 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை விட, 94 சதவீத குறைபாடுகள் சொல்லப்பட்ட காலத்தில் தீர்க்கப்பட்டன. 1980 கால கட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்திருந்த நிலையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் 59 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன.

 

இதனை விட ஆச்சர்யம் என்னவென்றால், நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதுவரை எந்த ஒரு ரயில் விபத்துகளிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்திய ரயில்வே வரலாற்றில் இது போன்ற நிகழ்வு, முதன்முறையாக தற்போது நடந்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் பயணிகளுக்கான சுகமான மற்றும் பாதுகாப்பான பயணமாக, இந்திய ரயில் போக்குவரத்து அமையும் என எதிர்பார்க்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மலைப்பிரதேச ரயில் பயணங்களை மகிழ்விக்க ஏற்கனவே விஸ்டாடோம்(Vistadome Coach) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் விமான சேவை தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில் சேவைகளும் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன. இது வெற்றி பெற்றதையடுத்து, இந்திய ரயில்வே துறை உலகளவிலான மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.

 

நாடு முழுவதும் மின்சார சேவை(Electricity) மற்றும் இரட்டை பாதை வேலைகள் முடியும் தருவாயில், ரயில் பயணங்கள் பெருமளவிலான நகர்ப்புற சாலை நெரிசல்களை குறைக்கும் எனலாம். உயர்ரக சேவையில் கட்டணம் அதிகம் இருக்கலாம் என்பதனை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், குறுகிய தூரங்களுக்கான ரயில் சேவையும் சலுகை கட்டணத்தில் ரயில் பயணிகளை மகிழ்விக்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

    

ரியல் எஸ்டேட் முதலீட்டை போல பங்குகளை நீண்ட கால சொத்துக்களாக மாற்றுவது எப்படி ?

ரியல் எஸ்டேட் முதலீட்டை போல பங்குகளை நீண்ட கால சொத்துக்களாக மாற்றுவது எப்படி ?

How to convert Shares into Long term Assets like Real Estate Property Investing ?

 

பங்குச்சந்தையில் வெறுமனே அவ்வப்போது பங்குகளை வாங்கி விற்காமல், அதனை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது, நாம் சிறப்பான செல்வத்தை சேர்க்க முடியும். பொதுவாக வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு ஆகியவை சிறு சேமிப்பு திட்டங்களாக சொல்லப்படுகின்றன. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயும் குறைவாக தான் இருக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சிறு சேமிப்பை மட்டுமே ஒருவர் நீண்ட காலத்திற்கு நம்பியிருந்தால், எதிர்பார்த்த செல்வத்தை உருவாக்க முடியாது. சிறு சேமிப்பு திட்டம் என்பது குறைந்த வருவாய் உள்ளவர்களும் சேமிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவையே. மேலும், வருங்காலத்தில் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாது. சேமிப்பு என்பவை குறைந்த அளவு ரிஸ்க் தன்மை கொண்டவை. அதனால் தான், அவற்றின் வட்டி விகிதமும் குறைவாக அமையும்.

 

முதலீடு என்பது எப்போதும் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டது. எனினும், முதலீட்டை பரவலாக்குவதன் மூலம், நாம் ரிஸ்க் தன்மையை பரிமாற்றி நீண்ட காலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம். முதலீடு என்பதற்கு சிறந்த உதாரணமாக தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் (வீட்டு மனை), பரஸ்பர நிதிகள், பங்குகள் மற்றும் தொழிலை சொல்லலாம். முதலீட்டில் ஏற்ற – இறக்கம் என்பது எப்போதும் இருக்கும். அவ்வாறு இருக்கும் காரணத்தால் தான், நாம் நீண்ட காலத்தில் பணத்தை பெருக்க முடியும். இல்லையெனில், அவையும் சேமிப்பு திட்டத்தை போலவே குறைந்த வருவாயை கொண்டிருக்கும்.

 

உதாரணமாக நாம் தங்கத்தை எடுத்து கொள்வோம். தங்கத்தின் விலை தினமும் ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்யும் போது, நமது முதலீட்டு குணநலன்கள் எவ்வாறு அமையும் என்பது நமக்கு தெரியும். விலை குறையும் போது, தங்கத்தை(Gold) வாங்கி வைத்து கொள்வோம். விலை அதிகரிக்கும் போது, நாம் உடனடியாக அதனை விற்க போவதில்லை. ஏனெனில், நம்மை பொறுத்தவரை தங்கம் ஒரு நீண்ட கால முதலீடு. அவசர தேவைக்கு மட்டுமே அதனை அடகு வைக்கவோ, சிறிய அளவில் விற்காகவோ செய்வோம்.

 

இதனை போலவே, ரியல் எஸ்டேட் முதலீடும். இன்று ஒரு வீட்டு மனையை குறைந்த விலையில் வாங்கி, நாளை அதனை விற்க நாம் முடிவெடுக்க மாட்டோம். ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த தொழிலதிபர்கள், ஏஜெண்டுகள் வேண்டுமானால் அதனை செய்யலாம். அவர்களும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு சிறிது காலம் எடுத்து கொள்ள வேண்டும். நாம் வாங்கிய வீட்டு மனையை, பின்னொரு காலத்தில் நமக்கு தேவையான சொத்தாக நாம் கருதலாம். இல்லையெனில், பிற்காலத்தில் அதனை விற்று பணம் பண்ணலாம், அதனை நமது தேவைக்கும் பயன்படுத்தலாம்.

 

ஆனால் பங்குகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். பங்குகளும், பங்குச்சந்தையும் வேற்று கிரக வாசிகள் அல்ல. அவையும் ஒரு தொழில் தான். தங்கத்தின் விலை நம் கையில் இல்லை. அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு ஏற்ப, அவற்றின் விலையும் மாறுபடும். ரியல் எஸ்டேட்(Real Estate Property Value) விலையும் நம் நம்பிக்கையில் அல்ல. அவை அரசின் கொள்கைகளிலும், சந்தையில் உள்ள வளர்ச்சி தேவையை பொறுத்தே அமையும். பங்குகளின் விலை தொழில் செய்யும் நிறுவனத்தின் திறனை பொறுத்து மாறுபடும். 

 

பொதுவாக முதலீடு என்பது மூன்று வகையான விஷயங்களை கொண்டிருக்கும் – ரிஸ்க் தன்மை(Risk), பணவீக்கத்தை தாண்டிய வருமானம்(Beat Inflation), வரி சலுகைகள்(Tax Concession). நீண்ட கால முதலீடு மற்றும் சொத்துக்களுக்கு மட்டுமே அரசு வரி சலுகைகளை அறிவிக்கும். ரிஸ்க் தன்மையை உணர்ந்து, நீண்ட காலத்தில் அதனை பரவலாக்கும் போது வருவாயும் அதிகமாக இருக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதாரத்தின் இரு கண்கள்:

 

தேவை – உற்பத்தி(Demand & Supply) மற்றும் கடன் வழங்குதல் – பெறுதல் (Lending & Borrowing) இவ்விரண்டும் பொருளாதாரத்தின் இரு கண்கள் எனலாம். இந்த இரு காரணிகளை நாம் எந்தவொரு காலத்திலும் தவிர்க்க இயலாது. தேவையில்லாத உற்பத்தியும், உற்பத்தியில்லாத தேவையும் எந்த பயனும் இல்லை. இதனை போலவே ஒருவர் கடன் கொடுக்க முன்வந்தால் மட்டுமே, மற்றொருவர் அதனை கடனாக பெற்று தொழில் புரிய முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இதன் காரணமாக தனிமனித வாழ்வில் நிதி மேம்படும்.

 

பங்குகளில் நீண்ட கால முதலீட்டிற்கு தயாராகும் போது, சரியான நிறுவனத்தை சரியான விலையில்(Choose the Right Stock at Fair Price) அடையாளம் காண்பது முக்கியம். நாம் அதனை பற்றிய விளக்கத்தை நமது தளத்தில் கொடுத்துள்ளோம். நாம் முதலீடு செய்யப்போகும் பங்குகளின் தொழில் நமக்கு புரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். புரியவில்லை என்றால், அதனை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு எங்கேனும் கிடைக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

 

பங்குச்சந்தை  முதலீடு – 14 நாட்கள்  இலவச பயிற்சி 

 

உங்களால் புரிந்து கொள்ள முடியாத பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம். நல்ல இடம், இன்னும் 5 வருடங்களில் மதிப்பு இரண்டு மடங்காகும் என தரகர் சொன்னார். ஆனால், ஸ்மார்ட் சிட்டி வரப்போகிறது என, அரசாங்கம் குறைந்த விலையை நிர்ணயித்து விட்டதே என மனை வாங்கிய பின் யோசிக்க கூடாது. வீட்டுமனை வாங்கும் போது, நமது எச்சரிக்கை உணர்வு எவ்வாறு உள்ளதோ, அதனை போலவே பங்குகளிலும், பிற முதலீட்டிலும்.

 

நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் தொழில் எதிர்கால சவால்களை சமாளிக்க கூடிய வகையில் இருக்குமா, தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனம் மாற தயாரானால், அதற்கான முதலீடு நிறுவனத்திடம் கைவசம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். நிறுவனத்தின் தொழில் தொடர் வளர்ச்சியை பெறுமா, அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதனுடைய இலக்கு மற்றும் திறன் என்ன என்பதும் அவசியம்.

 

அதிவேக வளர்ச்சி உள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம். அடுத்த 20 வருடங்களில் ஆண்டுக்கு 10-15 சதவீத தொடர் வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் போதும். இதனை கண்டறிய கடந்த 10-20 வருட கால நிதி அறிக்கையை உற்று நோக்குங்கள். 

 

நிறுவனத்தை பற்றிய செய்தி அடிக்கடி ஊடகங்களில் வராமல் இருக்க வேண்டும். செய்தியினால் உற்சாகமடையும் பங்குகளின் விலை, பின்பு அதே செய்தியால் வீழ்ச்சி அடையவும் செய்யலாம். நம்பகமான தொழில் மற்றும் நிறுவனமாக இருக்கும் போது, அவை ஊழியர்களை மட்டுமல்ல முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

 

நிறுவனம் தனக்கு கிடைத்த லாபத்தை வெறும் டிவிடெண்ட் தொகையாக(Dividend) மட்டும் கொடுக்காமல், தொழிலுக்கான அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்க முதலீடு செய்கிறதா என பார்க்க வேண்டும். பெரும் செல்வத்தை உருவாக்க நல்லதொரு தொழிலை (பங்குகள்) தேர்ந்தெடுப்பது அவசியம். பங்குகளில் கண்ட லாபத்தை மறுமுதலீடு செய்ய தயாராகுங்கள். இல்லையெனில், அதனை சரியான வழியில் பயன்படுத்துங்கள். 

 

ரிஸ்க் நிர்வாகம்(Risk Management), தொடர் முதலீடு மற்றும் பொறுமையே(Patience) நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் சாதனமாகும். இவை பங்கு முதலீட்டிலும் நீண்ட கால சொத்தாக மாற்றும் போது கிட்டும். மேலே சொன்னவற்றை உங்களால் கடைபிடிப்பது கடினம் என யோசித்தால், உங்களுக்கான சிறந்த நிதி ஆலோசகரை வைத்து கொண்டு முதலீடு செய்யுங்கள். அதுவும் சிரமம் எனில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும், பங்கு சார்ந்த திட்டத்தினை சரியாக தேர்ந்தெடுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

தொல்லையில்லா வாழ்வுக்கு தொடர் முதலீடு !

தொல்லையில்லா வாழ்வுக்கு தொடர் முதலீடு !

SIP Investing for Hassle free Living

எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan) எனப்படும் தொடர் முதலீட்டு முறையில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, தங்கள் நிதி இலக்குகளை அடையும் வரை தொடர்ச்சியாக முதலீடு செய்வதில்லை. இதனால் நாம் நிர்ணயித்த இலக்கினை அடைய முடியாமல் போகலாம் அல்லது அடைவதில் தாமதம் ஏற்படலாம்.

 

இந்த நிதி தவறு, பின்னாளில் குடும்பத்தின் நிதி நிலைமையையும் பாதிக்கலாம். நாம் ஒரு இலக்கை(Goal) நிர்ணயித்து விட்டு, அதற்கான தொடர் வேலைகளை செய்யாமல் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் குறுகிய காலத்தில் உணர வாய்ப்பில்லை. அதனால் தான் இலக்குகள் இளமை காலத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இளமை காலத்தில் நாம் சேமிக்கும் தொகை சிறிய அளவில் இருந்தாலும், நமது இலக்கை நோக்கி பயணிக்கையில் அந்த தொகை வளத்தை உருவாக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாம் கடன் வாங்கும் போது, எவ்வாறு தவணை தொகையை சரியாக ஒவ்வொரு மாதமும் செலுத்துகிறோமோ, அதே போல முதலீட்டையும் தவறாது செய்வது, நமக்கு நாமே செய்யும் கடமை. தொடர் முதலீட்டால் பயன் பெறப்போவது நாமும், நமது குடும்பமும் மட்டுமே. நம்மை நாமே மகிழ்வித்து கொள்வது தான் தொடர் முதலீட்டின் ரகசியமே.

 

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம். உங்களுக்கு 15 வருடங்களுக்கு பிறகு ஒரு கோடி ரூபாய் கார்பஸ்(Corpus) தொகை தேவைப்படுகிறது என வைத்து கொள்வோம். நீங்கள் செய்ய வேண்டிய மாதாந்திர முதலீடு (SIP) ரூ. 14,800 /- இதற்கு நீங்கள் 15 சதவீதம் வருவாய் தரக்கூடிய முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியெனில், அது பரஸ்பர நிதி முதலீட்டில் மட்டுமே தற்போதைய நிலையில் சாத்தியமாகும். 

 

11 சதவீத வட்டி வருவாய் எனில், நீங்கள் அடுத்த 15 வருடங்களுக்கு மாதாமாதம் 21,800 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 7 சதவீதம் மட்டுமே தரக்கூடிய முதலீட்டு சாதனமாக இருக்கும் போது, உங்கள் மாதாந்திர எஸ்.ஐ.பி. தொகை 31, 400 ரூபாய். என்ன சற்று மலைப்பாக இருக்கிறதா ? மாதம் ரூ. 50,000 மற்றும் ஒரு லட்சம் என முதலீடு செய்பவர்களும் நம் ஊரில் உண்டு. 

 

பொதுவாக எஸ்.ஐ.பி. முறையில் மாதாந்திர முதலீட்டை மேற்கொள்ளும் போது, நமக்கான முதலீட்டு காலத்தை நினைவில் கொண்டிருப்பது அவசியம். இலக்கிற்கான காலம் குறுகிய காலமாக இருக்கும் போது, செய்ய வேண்டிய மாத முதலீட்டு தொகை அதிகமாக இருக்கும். அதே வேளையில், இலக்கிற்கான காலம் நீண்ட காலமாக இருக்கும் நிலையில், நமது மாதாந்திர முதலீடும் குறைவாக அமையும். இது நமது இலக்கிற்கான தொகையை பொறுத்து மாறுபடும்.

 

உதாரணமாக எனக்கு 20 வருடங்களில் ஒரு கோடி ரூபாய் கார்பஸ் கிடைத்தால் பரவாயில்லை என்றால், உங்களது மாதாந்திர முதலீடு 6,600 ரூபாய் மட்டுமே. இதுவே 15 வருடங்கள் எனும் போது தான் அது 14,800 ரூபாயாக (15 சதவீத வருவாயில்) உள்ளது. அதனால் முதலீடு செய்யும் தொகையை காட்டிலும், இடைவிடாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே அவசியம். இவை அனைத்தும் கூட்டு வட்டியின் மகிமையே !

 

எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும் போது நான்கு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இலக்கிற்கான காரணம் அல்லது பெயர்(Goal Name), இலக்கிற்கான தொகை(Goal Amount), இலக்கிற்கான காலம்(Period) மற்றும் எதிர்பார்க்கும் வருமான விகிதம்(Expected Returns). இங்கே வருமான விகிதம் என்பது நமக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருவாய். பெரும்பாலான நிதி இலக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது இந்த வட்டி வருவாய் தான். எனவே சரியான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.

 

உதாரணமாக நீங்கள் மாதாமாதம் 700 ரூபாயை, அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 10 லட்சம். இதுவே 30 வருடங்களாக இருப்பின், உங்களுக்கு கிடைக்கப்பெறும் தொகை ரூ. 49 லட்சம். கூடுதலாக பத்து வருடங்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக முதலீடு செய்யும் போது, நமக்கு கிடைக்கும் தொகையும் அதிகமாக உள்ளது. 

 

மற்றுமொரு உதாரணம் – நீங்கள் மாதாமாதம் ரூ. 10,000 /- ஐ எஸ்.ஐ.பி. முறையில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில், 15 சதவீத வருவாய் எனும் போது, முடிவில் உங்களுக்கு 1.51 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் தொடர் முதலீடு செய்வது முக்கியம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உங்கள் நண்பர் ஒருவருக்கும் இதே போன்று ஒரு இலக்கு உள்ளது. காலம் மற்றும் முதலீடு செய்யும் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் முதல் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதாமாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்து வருகிறார். சில காரணங்களால் 6வது வருடம் முழுவதும் அவர் முதலீடு செய்யவில்லை. அதாவது 12 மாதங்கள் அவர் முதலீட்டை தொடரவில்லை. பின்னர் 7வது வருடம் முதல் இலக்கு காலமான 20 வருடங்கள் வரை அவர் முதலீட்டை தொடர்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு, உங்கள் நண்பருக்கு கிடைக்கும் முதிர்வு தொகை எவ்வளவு ?

 

ஆம், உங்களை விட குறைவே… எவ்வளவு தொகை குறைவு ?

 

உங்களுக்கும், நண்பருக்குமான இடைவெளி 10 லட்சம் ரூபாய் !!!

 

நண்பருக்கு, 20 வருட முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ. 1.41 கோடி. அவர் உங்கள் தொகையை அடைய இன்னும் சிறிது காலம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது அவருக்கான இலக்கு நாட்கள் வந்திருக்கலாம். இப்போது இது ஒரு தொல்லையே. 

 

நண்பர் முதலீடு செய்யாமல் விட்ட தொகை ரூ. 1.20 லட்சம் மட்டுமே (12 மாதங்கள் X 10,000/- மாத முதலீடு). ஆனால் அதற்கான இடைவெளி 10 லட்ச ரூபாய் மதிப்பில். இதனால் தான் நாம் தொடர் முதலீட்டின்  அவசியத்தை வலியுறுத்துவது. 

 

முதலீட்டில் நாம் காலத்தை தாமதப்படுத்த முடியாது. நமது குழந்தைகளின் மேற்படிப்பு(Child Education), திருமணம்(Marriage), நமக்கான ஓய்வு காலம்(Retirement) என்பவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற வேண்டியவை. அவற்றில் கால தாமதத்தை ஏற்படுத்தும் போது, அது நமக்கு தான் தொல்லை. எனவே இலக்கினை சரியாக திட்டமிடுங்கள். அதற்கான முதலீட்டை தொடர்ச்சியாக செய்யுங்கள். இலக்கிற்கான கார்பஸ் தொகையை, இடையில் எக்காரணத்திற்காகவும் எடுத்து விடாமல் இருப்பதும் அவசியம்.

தொல்லையில்லா வாழ்வுக்கு மட்டுமல்ல, தொடர் முதலீடு….

 

தொலைநோக்கு பார்வைக்கும் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

 

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

Deadline for PAN – Aadhaar Linking – 31, December, 2019

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி, 2019 என வருமான வரி அலுவலகம் கூறியுள்ளது. வருமான வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் – ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட தேதிக்குள், இணைக்காத பட்சத்தில் வரும் நாட்களில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. மேலும் நாம் வாங்கிய பான் கார்டு(PAN) எண்ணும் செயலிழக்கப்படும். இந்த இணைப்பை இந்திய குடிமக்கள் (பான் இருப்பு) அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை, பட்ஜெட் தாக்கலில் பான் எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை(Aadhaar) கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டிருந்தது. பின்பு பான் – ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு 30, செப்டம்பர், 2019 என சொல்லப்பட்டது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது வரும் 31, டிசம்பர், 2019 என நிர்ணயிக்கப்பட்டது.

ஆதார் – பான் எண் இணைப்பை இரண்டு வகைகளில் கையாளலாம். முதல் முறை, வருமான வரி தாக்கல் இணைய தளத்திற்கு சென்று பதிவிடுவது. மற்றொன்று குறுஞ்செய்தி (SMS) வாயிலாக இந்த இணைப்பை ஏற்படுத்தலாம். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

பான் – ஆதார் எண் இணைப்பு – இரு முறைகள்(PAN – Aadhaar Linking) 

மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து பான் – ஆதார் எண் இணைப்பு வழிமுறையை பின்பற்றுங்கள்.

பான் – ஆதார் எண் இணைப்பதில் சில நபர்களுக்கு விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆதார் மற்றும் பான் எண்ணில், உங்கள் பெயர், பிறந்த காலம் மாறுபட்டிருந்தால் உடனடியாக தேவையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதன் பின்பு, மறு இணைப்பை ஏற்படுத்த முயற்சியுங்கள். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com