Personal Finance Survey Tamil

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான்காம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra Day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?

 

விடை:   இல்லை.

 

விளக்கம்:  பொதுவாக பங்குச்சந்தை மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் ரிஸ்க் நிறைந்தவை. சந்தையில் வர்த்தகத்தின் போது ஏற்ற-இறக்கம்(Volatility) எப்போதும் காணப்படும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஒருவர் நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை நிச்சயம் பெறலாம்.

 

பங்குச்சந்தையில் நாம் பங்குகளை தினமும் வாங்கி விற்கலாம்(Intra day), குறுகிய காலத்தில்(Short term) வர்த்தகம் செய்யலாம் மற்றும் நீண்ட கால முதலீடாகவும் கொள்ளலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவே ஆகும். சந்தையில் தினசரி வர்த்தகத்தில் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தாலும், எப்போதும் இது சாத்தியமில்லை. உதாரணத்திற்கு நாம் தினமும் பங்குச்சந்தையில் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்பது நமது ரிஸ்க் திறனை பொறுத்தது. ஐயாயிரம் ரூபாய் லாபம் என்பது போல, அதற்கு நேரெதிரான நஷ்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் தினசரி வர்த்தகத்தின் மூலம் நாம் விரைவாக செல்வம் சேர்ப்பதற்கு வாய்ப்பு குறைவே. குறுகிய காலத்தில் பங்குச்சந்தையின் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று யாரவது உங்களிடம் சொன்னால், எச்சரிக்கை தேவை – இது ஏமாற்று பேர்வழிகளின் போன்சி திட்டங்களாக(Ponzi Schemes) இருக்கலாம்.

 

  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை ?

 

விடை: இல்லை (தவறு).

 

விளக்கம்: வங்கியில் கிடைக்கும் வட்டி வருமானம் வரி செலுத்துதலுக்கு

உட்பட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு(Fixed Deposit) வழங்கப்படும் வட்டி, தனி நபர் ஒருவரின் வருமான வரம்பிற்கு உட்பட்டு வரி விதிக்கப்படும். வருமான வரிச்சட்டம் பிரிவு 80TTA ன் கீழ் ஒருவரின் சேமிப்பு கணக்கில் உள்ள வட்டி தொகை வருடத்திற்கு ரூ.10,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேலாக கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி உண்டு.

 

வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வங்கிகள் பொதுவாக டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்த தொகையை திரும்ப பெற சிறப்பு படிவத்தை(Form 15G & 15H) பூர்த்தி செய்யலாம். நடப்பு வருட பட்ஜெட் தாக்கலின் படி, உங்களின் வைப்பு நிதியில் உள்ள வட்டி தொகை(Interest Income) ரூ. 40,000 மற்றும் அதற்கு குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகள் உங்களிடம் பிடித்தம் செய்யாது. அதே வேளையில் நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், வரி தாக்கல் செய்யும் போது உங்களது வட்டி வருமானம் மற்றும் டி.டி.எஸ். பிடித்தம் பதிவு செய்யப்படும்.

 

  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?

 

நாம் கற்கும் எந்தவொரு கல்வியும் நமக்கும், நமது சமுதாயத்திற்கும் பயன்படுமாறு இருத்தல் வேண்டும். அது பண்பாடு அல்லது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி. நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கோ அல்லது தொழிலை தொடங்குவதற்கோ நம்மிடம் தேவையான அடிப்படை திறன்(Basic Skills) இருத்தல் வேண்டும். இதனை நாம் கற்ற கல்வி அல்லது வேலைப்பயிற்சி மூலமாகவோ நாம் பெற்றிருக்கலாம்.

 

நமக்கான வேலை அல்லது தொழிலை செய்வதற்கு முன், நாம் பல வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி கற்றலில் அனுபவம் பெறுகிறோம். பின்னர் ஒரு நிறுவனத்தில் ஆரம்பகட்ட நிலையில் வேலை செய்கிறோம். ஐந்து முதல் பத்து வருட தொழில் அனுபவத்திற்கு பிறகே, நாம் அந்த தொழிலை 50 சதவீதம் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வருகிறது.

 

பெரும்பாலோருக்கு ஒரே நிறுவனத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாம் சம்பாதிப்பதற்காகவே நம் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்யும் போது, பொருளாதாரம் அல்லது நிதி சார்ந்த அறிவை(Financial Education) கற்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் ?

 

நமது குடும்பத்திற்கான மாத வரவு-செலவு, குழந்தைகளுக்கான எதிர்கால நிதி திட்டமிடல், நமக்கான ஓய்வு கால திட்டமிடல், அவசர காலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறோமா என்பதனை நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி தான் திட்டமிட வேண்டும்.

.

உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட், பில் கேட்ஸ் போன்றோர் புத்தக வாசிப்புக்கு மட்டும் தினமும் ஆறு மணிநேரம் செலவிடுகின்றனர். நமக்கு நேரமில்லாமலா போகும் !

 

அட, நம்ம பேஸ்புக் நிறுவனர் மார்க்(Mark Zuckerberg) இரண்டு வாரத்துக்குள் ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுகிறாராமே 🙂

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

 

விளக்கம்: அவசர கால நிதி (Emergency Fund) என்றால் என்ன மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் ஏற்கனவே கீழ்காணும் கட்டுரையில் பதிவிட்டுள்ளோம்.

 

அவசர கால நிதிக்கான திட்டமிடல்

 

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

 

  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

விளக்கம்: அவசரத்திற்கு தவணை திட்டம்(Equated Monthly Installment -EMI) உதவலாம். வருமுன் காப்பது நல்லதா, வந்த பின் வருந்துவதா ? மூளையை யோசிக்க விடுங்கள். கீழே உள்ள சிறு பதிவை படியுங்கள். பின்னர் நீங்களே சாமர்த்தியமாக முடிவெடுப்பீர்கள்.

 

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

நிறைவு பெறுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s