All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

E-VAHAN BIMA (ELECTRONIC MOTOR INSURANCE POLICY)

E-VAHAN BIMA (ELECTRONIC MOTOR INSURANCE POLICY)

மின்னணு மோட்டார் வாகன காப்பீடு

 

  • இது ஒரு மின்னணு /டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட மோட்டார் வாகன காப்பீடு. (அனைத்து வாகனங்களுக்கும்)
  • இது இந்திய அரசின் IRDA(INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY OF INDIA) மூலம் துவக்கப்பட்ட திட்டம்.
  • நாம் வாங்கும் மோட்டார் வாகன காப்பீடுக்கு காகித வடிவிலான (நடைமுறையில் உள்ள) சான்று நமது முகவரிக்கும் , டிஜிட்டல் வடிவிலான சான்று E-MAIL க்கும் அனுப்பப்படும்.
  • மின்னணு மோட்டார் காப்பீடு (E-MOTOR INSURANCE POLICY) ஒரு QR (QUICK RESPONSE) CODE ஐ கொண்டிருக்கும்.
  • அந்த CODE ஐ நீங்கள் உங்கள் கைபேசியில் வைத்து கொள்ளலாம்; இல்லையெனில் நகலை பிரிண்ட் செய்து வைக்கலாம்.

 

  • போக்குவரத்து போலீசார், உங்களிடம் வாகன பாலிசி பற்றி கேட்கும் போது, நீங்கள் QR CODE யோ (அ) அதன் பிரிண்ட் செய்த நகலையோ அவரிடம் காண்பிக்கலாம். அவர் QR CODE ஐ ஸ்கேன் செய்து, காப்பீடு சம்பந்தமான தகவல்களை IIB (INSURANCE INFORMARTION BUREAU OF INDIA) யிடம் இருந்து பெற்று கொள்வார்.
  • E-VAHAN BIMA கைபேசி செயலியும் விரைவில் வெளிவர உள்ளது.

 

நினைவில் கொள்க:

 

  • தற்போது, மின்னணு மோட்டார் காப்பீடு திட்டம் ஜனவரி 2, 2016 முதல் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது; அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் அமல்படுத்தபடலாம்.
  • இதனை பெறுவதற்கு, எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை; அரசாங்கத்தால் வழங்கப்படும் இத்திட்டம் ஒரு இலவச சேவையே.

மேலும் தகவல்களுக்கு IRDA ன் தகவல் புத்தகத்தை பதிவிறக்கி கொள்ளவும்…

Hand Book-E VAHAN BIMA

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்/Healthy Financial Planning

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்:

Prepare for Healthy Financial Planning

 

1. வரவு-செலவு மற்றும் சேமிப்பு அறிக்கையை உருவாக்குங்கள்
2. பணவீக்கத்தை தாண்டிய உண்மையான வருமானத்தை தேடுங்கள்; முதலீடு செய்யுங்கள்
3. முதலீட்டை பகிர்ந்து கொள்ளுங்கள் (Bank Deposits, Mutual Funds, Stocks,Realty, Gold, Knowledge)
4. காப்பீடு செய்து கொள்ளுங்கள் (Health and Life-Term)
5. பிளாஸ்டிக் பணத்தை பயன்படுத்துங்கள் (E-Payments, Save Tax); பிளாஸ்டிக்கை ஊக்குவிக்காதீர்கள்
6. ஓய்வை (Retirement plan) பற்றி சிந்தியுங்கள்
7. கடனை குறையுங்கள்/கடனில்லா (Debt Free) வாழ்க்கையை வாழுங்கள்
8. அவசர நிதியை (Emergency Fund) அவசரப்படுத்துங்கள்
9. மாடி தோட்டம் அமையுங்கள் /முடிந்தால் மரம் வளருங்கள்
10. உதவி செய்யுங்கள் /உங்கள் அறிவை பரிமாறுங்கள்

 

நன்றி – வர்த்தக மதுரை

எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? Where quoting PAN Mandatory ?

 

Where quoting PAN Mandatory ? (From 1st January, 2016)
எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? [2016, ஜனவரி 1 ம் தேதி முதல் ]
1. வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு (Bank Account Opening).
2. வங்கியில் ஒரே பரிமாற்றத்தில்/ஒரு நாளில் ரூ. 50,000/- க்கு மேல் பண வரவு வைக்கும் போது.
3. தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் ஏதேனும் வாங்கும் போது, ஒரே பரிமாற்றத்தில் வாங்கும் மதிப்பு ரூ. 2,00,000 க்கு அதிகமாக இருந்தால்.
4. வாங்கும் சொத்தின் மதிப்பு ரூ. 10,00,000 (லட்சம்) க்கு மேல் இருந்தால்.
5. Hotel/Restaurant ல் செலவு ரொக்கமாக ரூ. 50,000/- க்கு அதிகமாக இருப்பின்.
6. DEMAT கணக்கு தொடங்குவதற்கு.
7. வெளிநாட்டு சுற்றுலா செலவு(Fare,Payment to travel agent)  ரூ. 50,000/- க்கு மேல் இருந்தால் (அ) வெளிநாட்டு நாணயத்தை வாங்கும் மதிப்பு ஒரு பரிமாற்றத்தில் ரூ. 50,000/- க்கு மேல் இருப்பின்.
8. காப்பீட்டுக்கு(Life Insurance) ஒரு வருடத்திற்கு செலுத்தும் பணம் ரூ. 50,000 /- க்கு அதிகமாக இருந்தால், பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம்.

 

மேலும் தகவலுக்கு, கீழே உள்ள Income Tax India ன் அட்டவணையை பாருங்கள்.

PAN-mandatory

 

வாசகர்கள் அனைவருக்கும் 2016 ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Happy New Year 2016  🙂

நலமும், வளமும் பெருகட்டும்..

முதலீடும் திருவினையாக்கும் !
வர்த்தக மதுரை

தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond Scheme) முதலீடு செய்யலாமா ?

 

தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond Scheme) முதலீடு செய்யலாமா ?

 

Should we invest in Gold Bond Scheme ?

 

  • மத்திய அரசினால் தொடங்கப்பட்ட திட்டம் தான் “தங்க பத்திர திட்டம்” (Gold Bond Scheme)
  • அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவினை குறைக்கவும், அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் தடுக்கவும் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவாகும்.

 

எவ்வளவு முதலீடு செய்யலாம் ?

 

  • இந்த திட்டத்தில் தங்கம் யூனிட்களாக தரப்படும்.
  • குறைந்த பட்சமாக:    2 கிராம்,  (முறையே 2, 5, 10, 50, 100 கிராம்களில்)
  • அதிகபட்சமாக:     500 கிராம் வரை
  • முதிர்வு காலம்:   8 வருடங்கள்.  (5 வருடங்களுக்கு பிறகும் இந்த திட்டத்திலிருந்து வெளியேறலாம்)

 

வட்டி விகிதம் எவ்வளவு ?

 

  • வட்டி:    2.75 % ( ஆறு (6) மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்)
  • வாங்கப்படும் யூனிட்கள் தங்கத்தின் விலையில் தான் கிடைக்கும்.
  • யூனிட்கள் வாங்கும் போது இருந்த தங்கத்தின் விலைக்கு தான் வட்டி கணக்கிடப்படும் / கிடைக்கும்.
  • வாங்கப்படும் தங்க பத்திரங்கள், காகித வடிவம் மற்றும் டீமேட் வடிவத்திலும் கிடைக்கும்.
  • ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, (Gold Bond Scheme) பத்திரங்களை அடமானம் வைத்து கடனும் பெறலாம்.

 

யார் முதலீடு செய்யலாம் ?

 

  • இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்

 

நினைவில் கொள்க:

 

  • முதிர்வு காலம் முடிந்தவுடன், பணமாக மட்டுமே (அன்றைய தங்கத்தின் விலையில் ) பெற முடியும்; தங்கமாக கிடைக்காது 🙂
  • தங்க பத்திரங்களை, வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களிலும் வாங்கலாம்.
  • தங்க பத்திரங்களை நிதி சந்தையிலும்(Cash Market) வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
  • முதலீடுக்கு மூலதன ஆதாய வரி (தங்கத்தினை போல) விதிப்பு உண்டு; கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விதிப்பு உண்டு.
  • முதலீடு முதிர்வு அடையும் போது, லாபமோ (அ) நஷ்டமெனில் அது முதலீட்டாளர்களையே சாரும்.
  • முதிர்வு தொகை முதலீட்டை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், முதலீட்டை அடுத்த மூன்று (3) வருடங்கள் வரை நீட்டிக்கலாம்.

 

கடந்த காலத்தில், தங்கத்தினை மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும் அட்டவணை:

 

investment-returns-2015

(Comparison Chart – Data: Morgan Stanley)

 

முதலீடும் திருவினையாக்கும்… !!

நன்றி, வர்த்தக மதுரை

World Savings Day | Save Tax – Make Money

 

உலக சேமிப்பு தினம் – World Savings Day – October 31 

 

எளிய முறையில் சேமியுங்கள்… வரிச்சலுகையை பெறுங்கள்… செல்வத்தினை பெருக்குங்கள்…

(World Savings Day – October 31) உலக சேமிப்பு தினத்தையொட்டி ஒரு எளிய முறையில் சேமிக்க மற்றும் வரிச்சலுகையை பெற…

 

சேமிப்பு மற்றும் முதலீடு என்பது நம் எல்லோர் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நாட்டின் வளர்ச்சியானது பெரும்பாலும் பொருளாதாரத்தினை சார்ந்தே இருக்கிறது. அதை போல, நமது தனி நபர் மற்றும் குடும்பத்தின்  பொருளாதார வளர்ச்சி, நமது சேமிப்பு மற்றும் முதலீட்டை சார்ந்தே உள்ளது.  நமது வருமானம் பெரும்பாலும் அரசுக்கு செலுத்தும் வரியாகவே செலவு செய்யப்படுகிறது. நாம் நமது சேமிப்பின் மூலம், நேர்மையான முறையில் அரசுக்கு வரி செலுத்துவதும் மற்றும் நமது பணத்தினை பெருக்குவது எப்படி என்பதை சில எளிய திட்டத்தின் மூலம் பார்ப்போம்.

 

 

1. PPF (Public Provident Fund) பொது வருங்கால வைப்பு நிதி:

 

நாம் ஏற்கனவே நமது இணைய பக்கத்தில்  PPF ல் முதலீடு செய்வது பற்றி விவரித்திருந்தோம்.

( How to invest in PPF  )

  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 Onwards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.7 %
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)

 

ELSS (Equity Linked Savings Scheme) இ.எல்.எஸ்.எஸ் :

 

  • இது பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு திறந்த-முனைய திட்டம்.
  • இதன் மூலம் நாம் வரிச்சலுகை (Section 80C of Income Tax Act) பெறமுடியும் மற்றும் நம் முதலீட்டின் மீதான வருமானத்தையும், வங்கிகளை காட்டிலும் சற்று அதிகமாக பெற முடியும்.
  • குறைந்த பட்ச முதலீடாக சில நிறுவனங்கள் 500 ரூ. முதல் அனுமதிகின்றன.
  • குறைந்த பட்ச Lock-in-period – 3 வருடங்கள்.

 

 

RGESS (Rajiv Gandhi Equity Savings Scheme):

 

  • 2012-13 ம் ஆண்டின் பட்ஜெட்டில், அன்றைய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம்.
  • இத்திட்டம் முதல் முறை முதலீடாளர்களுக்காக உருவாக்கப்பட்டது.
  • ஏற்கனவே மற்ற வரிச்சலுகை திட்டத்தில் ரூ.1,50,000 வரை சலுகை பெற்றவர்கள், இந்த திட்டத்தில் மேலும் ரூ. 50,000 /- அதிகபட்ச முதலீடாக (முதல் முறை முதலீட்டாளருக்கு மட்டும்) மேற்கொள்ளலாம்.

 

அனைவருக்கும் உலக சேமிப்பு தின நல்வாழ்த்துக்கள்…

முதலீடும் திருவினையாக்கும்… !!

நன்றி – வர்த்தக மதுரை 

 

 

Things to know before invest in Company Fixed Deposits(FD)

6 Things to know before  invest in company fixed deposits:

 

நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்ய போகிறீர்களா ?

 

கவனிக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:

 

பொதுவாக வங்கியில் நாம் முதலீடு செய்யும் வைப்பு தொகை ஒரு பாதுகாப்பான முதலீடாகும். அதை போல, நிறுவனங்களில் வைப்பு தொகை முதலீடு செய்யும் முன், நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. Safe on Investment  முதலீட்டு பாதுகாப்பு:

நிறுவன வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி, வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட சற்று அதிகம் தான்.  வங்கிகள்  வைப்பு தொகை போன்ற பாதுகாப்பினை, நாம் நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் எதிர்பார்க்க இயலாது. ஏனெனில், வங்கிகளின் வைப்பு தொகைக்கு RBI(Reserve Bank of India) இன் வரையறுக்கப்பட்ட நிபந்தனைக்களுக்கு, வட்டி விகித கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால் ஒரு நிறுவன முதலீட்டில் நாம் தான், அந்த நிறுவனத்தை பற்றிய  தகவல்களையும், பாதுகாப்பையும் அறிய வேண்டும்.

  1. TDS (Tax Deducted at Source) பிடித்தம்:

ஒரு நிறுவன வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானம் 5000 ரூபாய்க்கு மேல்  சென்றால் TDS பிடித்தம் உண்டு. ஆனால் வங்கிகளில் TDS பிடித்தம் உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே !

  1. Higher rate of interest  அதிக வட்டி விகிதம்:

நிறுவன வைப்பு தொகையில் நீங்கள் செய்யும் முதலீடுக்கு, வட்டி வருமானம் வங்கிகளை விட  நிச்சயம் அதிகமாக தான் இருக்கும். ஆனால் அதே  அளவுக்கு பாதுகாப்பற்ற(Risk) தன்மையும் உண்டு. உங்கள் ரிஸ்க் க்கு ஏற்றார் போல் ரிவார்டு உண்டு !

  1. Rating of the Company மதிப்பீடுகளை அலசுங்கள்:

பொதுவாக, ஒரு நிறுவன வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்யும் முன், அதன் மதிப்பீடுகளை அலசுங்கள். சில நிதி நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் வைப்பு தொகை திட்டத்திற்கு மதிப்பீடுகளை இலவசமாக வழங்குகின்றன. ( Financial Institutions like CRISIL, ICRA ) அவற்றினை கண்டறிந்து, அந்த நிறுவனம் பாதுகாப்பானதா மற்றும் நாம் செய்யும் முதலீடுக்கு உரிய வட்டி விகிதம் கிடைக்குமா என்று அறியலாம்.

 

  1. Background of the company நிறுவனத்தை அறியுங்கள்:

நீங்கள் முதலீடு செய்ய போகும் நிறுவனத்தை பற்றியும், அதன் கடந்த கால வரலாற்றை பற்றியும் அறியுங்கள். இதற்கு அந்த நிறுவனம் முதலீட்டாளருக்கு உரிய வருமானத்தை கொடுத்து உள்ளதா…நிறுவனத்தின் பொருளாதாரம் எப்படி… நிறுவனர்கள் எப்படி… வாடிக்கையாளர்கள் சேவை  எவ்வாறு உள்ளது என்று அறிய வேண்டும்.

 

  1. Plan your Term காலத்திற்கு ஏற்றார் போல் முதலீடு செய்யுங்கள்:

நாம் ஏற்கனவே சொன்னது போல, நிறுவன வைப்பு முதலீடு என்பது ஒரு ரிஸ்க் நிறைந்தது என்பதால் உங்களது தேவைக்கு ஏற்றார் போல் முதலீடு செய்யுங்கள். உதராணமாக, ஒரு நிறுவனம் மிகவும் ரிஸ்க் தன்மை உள்ளது என்று அறிந்தால், குறுகிய கால முதலீடு செய்யுங்கள். ரிஸ்க் தன்மை பரவலாக உள்ளது என்றால், ஒரு சில வருடங்கள் (அ)  நீண்ட கால முதலீட்டிற்கு செல்லுங்கள்.

 

*கவனிக்க:

  • நீங்கள் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும் சரி, பண பாதுகாப்பை பற்றியும், கையெழுத்திடும் ஆவணங்களை பற்றியும் அறிந்த பிறகே முடிவெடுங்கள்.

 

முதலீடும் திருவினையாக்கும்… !!

 

நன்றி, வர்த்தக மதுரை

Calculating your Future Monthly Expense

 

Calculating your Future Monthly Expense:

உங்கள் வருங்கால/எதிர்கால செலவுகளை கணக்கிடுவது எப்படி ?

 

நமக்கு எல்லோருக்கும் தெரியும், நமது மாத செலவு எவ்வளவு என்று ; அல்லது போன மாதம் எவ்வளவு செலவானது என்று நம்மால் உறுதியாக இல்லாவிட்டாலும் உத்தேசமாக சொல்ல முடியும் 🙂

ஆனால் நமது இன்றைய மாத செலவு, 5 (அ) 10 வருடங்களுக்கு பின்பு எவ்வளவு தேவைப்படும் என்று நம்மால் உடனடியாக கணக்கிட்டு சொல்ல முடியாது. நமது எதிர்கால செலவுகளை கணக்கிட ஒரு சுலப வழிமுறை:

 

Formula for Calculating Future Expense:
Future Expense = Present Expenses X ( 1 + Inflation %) ^ n
Future Expense – எதிர்கால செலவு (மாதத்திற்கு)
Present Expense – தற்போதைய செலவு (மாதத்திற்கு)
Inflation % – பணவீக்கம் %
n (Number of Years) – தேவைப்படும் ஆண்டுகள்

 

உதாரணத்திற்கு, நமது இன்றைய மாத செலவு ரூ. 10,000 /- என கொள்வோம். பணவீக்கம் சராசரியாக 7 % எடுத்து கொள்வோம். 20 வருடங்களுக்கு பிறகு, நமது இன்றைய செலவு ரூ. 10,000 /- அன்று எவ்வளவு தேவைப்படும் என்று பார்ப்போம்.
Future Monthly Expense = 10,000 X ( 1 + 0.07 ) ^ 20

= 10,000 X (3.869)

= Rs. 38,697 /-

 

 

இன்று இணையதளத்திலும், கைபேசியிலும் எதிர்கால செலவுகளை கணக்கிடுவதற்கான Calculator(s) இருந்தாலும், அதற்கான கணித வழிமுறையை தெரிந்து கொள்வது பயனாக இருக்கும்.

 

நன்றி – வர்த்தக மதுரை

 

Power of Compounding

 

Power of Compounding: கூட்டு வட்டியின் சக்தி

 

 

உலகத்தின் எட்டாவது அதிசயம் எதுவென்றால், அது கூட்டு வட்டியின் சக்தி தான் ! எட்டாவது அதிசயம் என்று சொன்னாலும், நீங்கள் பணக்காரர் ஆவதற்கான ரகசியம் தான் இந்த கூட்டு வட்டி !

 

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்று படி,

 

“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t … pays it.”

 

நீங்கள் முதலீடு செய்தாலும் சரி, கடன் வாங்கி செலவு செய்தாலும் சரி… கூட்டு வட்டியின் பலனை தெரிந்து கொள்வது அவசியம்.

 

ஒரு சின்ன உதாரணம்:

 

நான் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 சேமிக்க முடிவு செய்தேன்; அதனை கூட்டு வட்டியின் அடிப்படையில் ஒரு வங்கியில் சேமிக்க / முதலீடு செய்தேன். சரியாக 5 வருடங்கள் வரை நான் இவ்வாறு ஒவ்வொரு மாதமும் சேமித்தேன். எனக்கு வங்கி கொடுக்க முடிவு செய்த வட்டி 8.5 % (கூட்டு வட்டியில் !)

 

5 வருட முடிவில், நான் கையில் பெற்ற பணம்: ரூ. 7,437 /- ( எனது மொத்த முதலீடு ரூ. 6000 க்கு )

 

சுருக்கமாக மற்றும் தெளிவாக சொன்னால், நான் முதலீடு செய்த ஒவ்வொரு 100 ரூக்கும், சராசரியாக 25 ரூ. வருமானமாக பெற்றேன் !

 

4 ல் ஒரு பங்கு லாபமாக !

 

உங்களுக்கு எந்த தொழில் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கூட்டு வட்டியின் ரகசியத்தை அறிந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் தான் ! பணக்காரர் தான் !
நீங்கள் சேமிக்க முயன்றால், கூட்டு வட்டியின் பலனை அறியலாம்; கடன் வாங்கி செலவு செய்ய முயன்றால், கூட்டு வட்டியின் எதிர் வினையையும் அறியலாம் 🙂

 

நினைவில் கொள்க:

 

கூட்டு வட்டியின் எளிதான சூத்திரம்:

 

CI = P * (1 + i) ^ n

 

CI = Compound Interest
P = Principal
i = Interest Rate
n = Number of years

 

  • உங்கள் கையில் இருக்கும் பணம், எதிர்காலத்தில் எவ்வளவு ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடவும், இந்த சூத்திரத்தை பயன்படுத்தலாம்.

 

  • தற்போது உங்களுக்கு ஆகும் மாத செலவுகள், எதிர்காலத்தில் எவ்வளவு ரூபாய் மாத செலவுக்கு தேவைப்படும் என்பதற்கும் பயன்படுத்தலாம்.

 

  • உங்கள் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியினை மேற்கொள்வதற்கும் இதனை உபயோகப்படுத்தலாம்.

 

நன்றி – வர்த்தக மதுரை

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

Is it better to invest in PPF ?

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

PPF (Public Provident Fund) ஐ பற்றி…

  • PPF என்பது ஒரு பொது வருங்கால வைப்பு நிதி; ஓய்வு காலத்திற்கான ஒரு சிறந்த முதலீட்டு திட்டம்.
  • VPF, EPF ல் பயனடைய முடியாதவர்கள் PPF Account ஐ, மிக எளிதாக பெறலாம்.
  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 On wards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.0 % ( Jan-Mar 2019)
  • PPF கணக்கில் நாம் கடனும் பெற்று கொள்ளலாம். (நாம் கணக்கு தொடங்கிய 3 ம் நிதியாண்டிலிருந்து, 5 ம் நிதியாண்டு வரை கடன் பெறலாம்)
  • கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, 6 ம் நிதியாண்டிலிருந்து அனுமதிக்கப்படும்.
  • இத்திட்டத்தில் NRI, On behalf of a HUF, Association of Persons ஆகியோர் முதலீடு செய்ய முடியாது.
முதலீடு…
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)
எப்போது முதலீடு செய்யலாம் ?
  • பொதுவாக, நாம் PPF கணக்கை, எந்த தபால் அலுவலகத்திலும் (அ) வங்கியிலும் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். (நடப்பில், SBI, ICICI வங்கிகள்  வழங்குகிறது)
  • PPF கணக்கில் வைப்பு  வட்டி விகிதமானது, ஒரு மாதத்தின் 5 ம் தேதியிலிருந்து அம்மாதத்தின் 30/31 ம் தேதிக்குள் இருக்கும் குறைந்த பட்ச இருப்பு பணத்திற்கு கணக்கிடப்படுகிறது.  ஆகையால், மாதத்தின் முதல் தேதியிலிருந்து 5 ம் தேதிக்கு முன் நாம் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் நல்ல பலனை பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019
நினைவில் கொள்க:
  • PPF என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு சாதனம், குறுகிய காலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்படாத பட்சத்தில், கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வேண்டாம்.
  • PPF கணக்கை நாம் இணையதளத்திலும் (PPF Account Online) தொடங்கலாம், பணம் செலுத்தலாம் மற்றும் பெறலாம்.
  • உங்களுடைய முதலீடு பங்குசந்தையில், பரஸ்பர நிதியில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் PPF Account ல் முதலீடு செய்யலாம்; இது ஒரு பாதுகாப்பு திட்டமும் கூட…
  • வருமான வரிசலுகை பெற நினைப்பவர்கள், காப்பீடு திட்டத்தில் அதிக பணத்தை போட்டு வைப்பதற்கு பதில், PPF கணக்கில் வரிசலுகை பெறலாம்.
நன்றி – வர்த்தக மதுரை 

விதி எண்: 72 (Rule No. 72)

 

What is Rule No. 72

 

நிதி ஆய்வுகளில் விதி எண்: 72 (Rule No. 72) உள்ள அதிசயம் என்ன ?

 

பொதுவாக நாம் அனைவருக்கும், நமது கையில் இருக்கும் பணத்தை எப்படி இரு மடங்காக (அ) இரட்டிப்பாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள்… போன்சி திட்டங்கள் (Ponzi Schemes – Pyramid, Chain Level Marketing) முடிவில், நமது முதலீட்டு பணம் திரும்பி வராது 🙂

 

சரி அது போகட்டும், நாம் விதி எண்: 72 க்கு வருவோம். நாம் செய்த முதலீடு(Bank Deposits,Postal Savings,Mutual Funds,Stock Markets,Chit Funds) இரு மடங்காக எப்போது வ(ள)ரும் என்று கணித ரீதியாக கணக்கிடுவதே, இந்த Rule No. 72.

 

எப்படி கணக்கிடுவது ?

 

Rule No.72 = 72 / Expected Interest (எதிர்பார்க்கும் வட்டி விகிதம்)
நீங்கள் ஒரு வங்கியில் ரூ.1,00,000 /- முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். வங்கியின் வைப்பு வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 % கூட்டு வட்டியில் தருகின்றனர். இப்போது நமது ஒரு லட்சம் எப்போது இரட்டிப்பாகும்…

 

விதி எண்:72,  

 

72 / 8 (வங்கியின் வட்டி விகிதம்)
ஒன்பது ஆண்டுகளில் (9 Years) !
இனி, நீங்கள் தைரியமாக உங்கள் பணத்தை இரட்டிப்பாகும் நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். போன்சி திட்டத்தில் அல்ல 🙂

 

நினைவில் கொள்க:

 

  • விதி எண். 72, கூட்டு வட்டியில் மட்டுமே கணக்கிடப்படுகிறது; தனி வட்டியில் அல்ல !

 

  • விதி எண். 72, உங்களுக்கு ஒரு நிச்சயமான வருடங்களை கணக்கிட்டு கொடுக்கும், நாட்களை அல்ல ! (தோராயமாக)

 

 

நன்றி – வர்த்தக மதுரை