தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond Scheme) முதலீடு செய்யலாமா ?
Should we invest in Gold Bond Scheme ?
- மத்திய அரசினால் தொடங்கப்பட்ட திட்டம் தான் “தங்க பத்திர திட்டம்” (Gold Bond Scheme)
- அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவினை குறைக்கவும், அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் தடுக்கவும் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவாகும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம் ?
- இந்த திட்டத்தில் தங்கம் யூனிட்களாக தரப்படும்.
- குறைந்த பட்சமாக: 2 கிராம், (முறையே 2, 5, 10, 50, 100 கிராம்களில்)
- அதிகபட்சமாக: 500 கிராம் வரை
- முதிர்வு காலம்: 8 வருடங்கள். (5 வருடங்களுக்கு பிறகும் இந்த திட்டத்திலிருந்து வெளியேறலாம்)
வட்டி விகிதம் எவ்வளவு ?
- வட்டி: 2.75 % ( ஆறு (6) மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்)
- வாங்கப்படும் யூனிட்கள் தங்கத்தின் விலையில் தான் கிடைக்கும்.
- யூனிட்கள் வாங்கும் போது இருந்த தங்கத்தின் விலைக்கு தான் வட்டி கணக்கிடப்படும் / கிடைக்கும்.
- வாங்கப்படும் தங்க பத்திரங்கள், காகித வடிவம் மற்றும் டீமேட் வடிவத்திலும் கிடைக்கும்.
- ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, (Gold Bond Scheme) பத்திரங்களை அடமானம் வைத்து கடனும் பெறலாம்.
யார் முதலீடு செய்யலாம் ?
- இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்
நினைவில் கொள்க:
- முதிர்வு காலம் முடிந்தவுடன், பணமாக மட்டுமே (அன்றைய தங்கத்தின் விலையில் ) பெற முடியும்; தங்கமாக கிடைக்காது 🙂
- தங்க பத்திரங்களை, வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களிலும் வாங்கலாம்.
- தங்க பத்திரங்களை நிதி சந்தையிலும்(Cash Market) வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
- முதலீடுக்கு மூலதன ஆதாய வரி (தங்கத்தினை போல) விதிப்பு உண்டு; கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விதிப்பு உண்டு.
- முதலீடு முதிர்வு அடையும் போது, லாபமோ (அ) நஷ்டமெனில் அது முதலீட்டாளர்களையே சாரும்.
- முதிர்வு தொகை முதலீட்டை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், முதலீட்டை அடுத்த மூன்று (3) வருடங்கள் வரை நீட்டிக்கலாம்.
கடந்த காலத்தில், தங்கத்தினை மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும் அட்டவணை:
(Comparison Chart – Data: Morgan Stanley)
முதலீடும் திருவினையாக்கும்… !!
நன்றி, வர்த்தக மதுரை