Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

22 % rise in the first day after the listing – Polycab India

 

கடந்த சில வருடங்களாக இந்திய பங்குச்சந்தையில் மூலதனத்தை திரட்டுவதற்கு பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ.(Initial Public Offer -IPO) க்கு விண்ணப்பிக்கின்றன. பின்பு அவை முதன்மை சந்தை மூலம் தங்களுக்கான மூலதனத்தை முதலீட்டாளர்களிடம் பெறுகின்றன. முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கிய சந்தாதாரர்கள் அல்லது முதலீட்டாளர்கள் வெளியேறும் வண்ணம், இரண்டாம் சந்தையில்(Secondary Market)  அவர்களுக்கான வாய்ப்பு உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மும்பையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் பாலிகேப்(Polycab India), மின்கம்பிகள் மற்றும் கேபிள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. எப்.எம்.இ.ஜி.(FMEG -Electrical Goods) துறையில் மின் விளக்குகள் மற்றும் விசிறிகள், சுவிட்சுகள், சோலார் பொருட்களையும் தயாரிப்பு மற்றும் விற்பனையும் செய்து வருகின்றன.

 

மின் கம்பிகள்(Wires & Cables) தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வரும் பாலிகேப், சந்தையில் ரூ.1,345 கோடியை மூலதனமாக பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தது. இந்த மூலதனம் நிறுவனத்தின் கடன் மற்றும் செயல்பாட்டு மூலதன செலவினங்களுக்கு என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை சந்தையில் 533 – 538 ரூபாய் என்ற அளவில் 2.5 கோடி பங்குகளை வெளியிட்ட இந்நிறுவனத்திற்கு விண்ணப்பித்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 52 மடங்காகும்.

 

பாலிகேப் நிறுவனத்திற்கு 24 நகரங்களில் உற்பத்தி ஆலைகளும், இதன் தயாரிப்பு பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இதன் மொத்த வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு 3.5 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

 

முதன்மை சந்தையில் வெற்றிகரமாக தனது மூலதனத்தை பெற்ற இந்நிறுவனம் நேற்று(16-04-2019) மும்பை(BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்டது. முதன்மை சந்தையில் ரூ. 538 என்ற விலையில் முடிந்திருந்த இந்நிறுவன பங்கு, நேற்று இரண்டாம் சந்தையின் துவக்கத்திலேயே 633 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகியது. ஒரே நாளில்  அதிகபட்சமாக 677 ரூபாய் வரை சென்ற இந்த பங்கு, சந்தையின் முடிவில் பங்கு ஒன்றுக்கு ரூ. 655 என்ற விலையில் இரு சந்தைகளிலும் முடிவடைந்தது. இது 22 சதவீத ஏற்றமாகும்.

 

தேசிய சந்தையில் பாலிகேப் நிறுவனத்தில் நேற்று வர்த்தகமாகிய மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 2.30 கோடி பங்குகளாகும். பாலிகேப் நிறுவனத்திற்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகவும், அதனை சார்ந்து சில பங்குச்சந்தை நிபுணர்கள் இந்நிறுவன பங்கிற்கு குறுகிய கால இலக்கு விலைகளை கூறியுள்ளனர். சந்தையில் இந்த நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கேவல்ஸ் இந்தியா(Havells India), பினோலெக்ஸ் கேபிள்ஸ்(Finolex), கெய்(KEI Industries) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

 

ஐ.பி.ஓ. விண்ணப்பம் முடிந்து இரண்டாம் சந்தைக்கு வந்தவுடன் ஒரு நிறுவனத்தில் உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவு வெளியீடு மற்றும் அதனை சார்ந்து சந்தை செயல்படும் தன்மையை உன்னிப்பாக ஆராய்ந்தவுடன் இது போன்ற பங்குகளில் முதலீட்டை மேற்கொள்வது நீண்ட கால முதலீட்டாளரின் சாராம்சமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

Infosys gains profit of Rs. 4,074 Crore in the Fourth Quarter – FY19

 

2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 4,074 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் இதன் வருவாய் 21,539 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம்(Operating Profit) ரூ. 5,149 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானம் நான்காம் காலாண்டில் 665 கோடி ரூபாயாக இருக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வரிக்கு முந்தைய லாபம்(PBT) 5,283 கோடி ரூபாய் ஆகும். கடந்த மார்ச் 2017-18ம் காலத்தில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் 18,083 கோடி ரூபாயும், நிகர லாபம் ரூ. 3,690 கோடியாகும். இதனை ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 19 சதவீத வளர்ச்சியை (YoY) பெற்றுள்ளது.

 

2018-19ம் நிதியாண்டின் முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் கையிருப்பு 62,778 கோடி ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நிறுவனத்தின் கையிருப்பு தொகை எவ்வளவு என்பதை, ஆண்டு இருப்பு நிலை அறிக்கையை(Balance Sheet) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 21,400 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,609 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை ஒப்பிடுகையிலும், தற்போது வெளியிடப்பட்ட நிகர லாபம் 13 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

 

நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் செலவின விகிதம் ரூ. 16,390 கோடியாகவும், இது மூன்றாம் காலாண்டு செலவினத்தை காட்டிலும் சற்று குறைவாக இருக்கிறது. பணத்திற்கு சமமாக(Cash Equivalents) நிறுவனத்திற்கு 2018-19ம் நிதி ஆண்டில் 19,568 கோடி ரூபாய் உள்ளது.

 

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஆராயும் போது, இன்போசிஸ்(Infosys) நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் பத்து சதவீதத்திற்கு மேலான வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே வேளையில், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறுவனத்தின் விற்பனை (வருவாய்) அளவு வளர்ச்சி குறைந்து வருகிறது.

 

பங்கு மூலதனத்தின் மூலமான வருவாய்(ROCE & ROE) ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்துள்ளதை காட்டுகிறது.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

டி.சி.எஸ். நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 8126 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 8126 கோடி

Net profit rose to Rs. 8126 Crore in the Q4FY19 – TCS

 

சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வந்து கொண்டிருக்கும் மாதமிது. கடந்த 2018-19ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் லாப வளர்ச்சி சராசரியை ஒட்டியே அமைந்தது. ஆனால் இம்முறை நான்காம் காலாண்டு முடிவுகள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேர்தல் களம் மற்றும் அடுத்த மாதம் மத்தியில் புதிய அரசு பதவியேற்கும் என்ற நிலையில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சந்தையில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தும். நேற்று (12-04-2019) இந்திய ஐ.டி. துறையில் மாபெரும் நிறுவனமாக விளங்கும் டாட்டா கன்சல்டன்சி(Tata Consultancy Services) மற்றும் இன்போசிஸ்(Infosys) நிறுவனங்கள் தங்கள் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

 

2018-19ம் நிதி வருடத்தில் டி.சி.எஸ்.(TCS) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம்(Net Profit) ரூ. 8126 கோடியாகவும், இந்த காலத்தில் வருவாய் 38,010 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 6,904 கோடி ரூபாயாகவும், வருவாய் ரூ. 32,075 கோடியாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

இயக்க லாப வரம்பு(Operating Profit Margin- OPM) கடந்த பத்து காலாண்டுகளில் 25 முதல் 28 சதவீதம் என்ற தொடர் வளர்ச்சியில் இருக்கிறது. கடந்த இரு நிதி ஆண்டுகளின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் 17.70 சதவீத வளர்ச்சியையும், வருவாய் 18.50 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளது. நடந்து முடிந்த நான்காம் காலாண்டில் நிறுவனம் 6,356 புதிய பணியாளர்களை சேர்த்துள்ளது.

 

இரட்டை இலக்க வளர்ச்சி, வர்த்தகத்தில் உயர்தரம் மற்றும் சிறந்த நிர்வாக திறன் ஆகியவற்றால் தற்போதைய வளர்ச்சி சாத்தியம் அடைந்ததாகவும், கடந்த 15 காலாண்டுகளில் சென்ற நான்காம் காலாண்டு வளர்ச்சி தான் சிறந்ததாக இருந்ததாகவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு ஈவுத்தொகை(Dividend per Share) 18 ரூபாய் அளிப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

 

இது போல இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவில்(Quarterly Results), நிறுவன வருவாய்(Revenue) 21,539 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் 4,078 கோடி ரூபாய் என வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து வரும் பதிவில் நாம் அலசலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ

2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ  

Zomato had a loss of 29.4 Crore Dollar in the 2018-19 Fiscal year

மாதத்திற்கு சராசரியாக 19 கோடி உணவு பயனாளர்களை கொண்டுள்ள உணவு விநியோக சேவை நிறுவனம் ஜோமாடோ(Zomato). 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று தனது சேவையை 24 நாடுகளிலும், 4000க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டிருக்கிறது. சீனாவின் அலிபாபா நிறுவனம் ஜோமாடோவில் 10 சதவீத பங்கு அளவில் முதலீடு செய்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வெளிநாட்டு நிறுவனங்களான உபேர் ஈட்ஸ்(Uber Eats) மற்றும் ஸ்விக்கி(Swiggy) நிறுவனங்களுடன் உணவு விநியோக சேவையில் போட்டிபோட்டு கொண்டு வெற்றிகரமாக வலம் வரும் இந்திய நிறுவனம் தான் ஜோமாடோ. உலகளவில் இதுவரை 12 நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது ஜோமாடோ. உணவகங்களை இணையத்தில் தேடுவது, உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது, நிர்வாகங்களுக்கு தேவையான உணவு சார்ந்த சேவையினை அளித்தல் மற்றும் மற்ற உணவு விற்பனைகளை(Food Delivery Business) செய்து வருகிறது  இந்த நிறுவனம்.

 

நேற்று (05-04-2019) தனது 2018-19ம் நிதியாண்டுக்கான ஆண்டு நிதி அறிக்கையை (Annual Report) வெளியிட்டது, 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக நிறுவனம் சார்பில் .தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் 2018-19ம் நிதியாண்டில் 20.6 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த 2017-18ம் நிதி வருட வருவாயை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாகும். 2017-18ம் நிதியாண்டில் ஜோமாடோ நிறுவனத்தின் வருவாய் 6.8 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

 

இந்திய பிராந்தியத்தில் ஏற்பட்ட செலவின விகிதங்கள் அதிகமானதாகவும், இதன் தொடர்ச்சியாக நிறுவனம் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகள் வரும் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வருவாயை அளிக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உணவு விநியோக சேவையில்(Delivery Service) 15.5 கோடி டாலர்களும், உணவகங்களுடன் சேர்ந்து உணவளிக்கும் வகையில்(Dining out) 4.9 கோடி டாலர்களும், சுகாதாரமான உணவளிக்கும் பிரிவில்(Sustainability) 20 லட்சம் டாலர்களையும் 2018-19ம் நிதி வருடத்தில் வருவாயாக ஈட்டியுள்ளது. ‘Feeding India’ என்ற பெயரில் 8500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு, உணவில்லாதவர்களுக்கு 2 கோடி உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு – பாரத ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு – பாரத ரிசர்வ் வங்கி

REPO Rate reduced to 6 percent by 0.25 bps cut – RBI

 

மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் மூன்று நாட்களாக நடந்திருந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று(04-04-2019) நிதி கொள்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(Repo Rate) விகிதம் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6 சதவீதமானது. நடப்பு 2019ம் வருடத்தில் இரண்டாவது முறையாக பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழுவில்(Monetary Policy Committee) நான்கு பேர் மட்டுமே வட்டி விகித குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய ரெப்போ வட்டி விகித குறைப்பு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வட்டி விகிதத்திலும் குறைக்கப்பட வேண்டும்.

 

ரிவெர்ஸ் ரெப்போ(Reverse Repo) விகிதம் 5.75 சதவீதமாகவும், வங்கி விகிதம்(Bank Rate) 6.25 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்.(CRR) விகிதம் 4 சதவீதத்திலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 19.25 சதவீதத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் வங்கிகளின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் பத்து சதவீதத்திலிருந்து 8.7 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வங்கி வைப்பு நிதிக்கான(Fixed Deposit) வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

What is Bank Repo Rate ?

 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனவும், இது முதல் அரையாண்டில் 6.8 – 7.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாம் அரையாண்டில் 7.3 – 7.4 என்ற சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ம் நிதி வருடத்தின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation Rate) 3 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் 3.5 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதம் வரை இருக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க மதிப்பீடு, முன்னர் சொல்லியிருந்த மதிப்பீட்டை விட குறைவாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் முதலீட்டு நடவடிக்கைகளில் மந்த நிலை காணப்படுவதால் கடந்த 2018-19ம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருந்திருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) தெரிவித்துள்ளது.

 

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, 10 வருட கால அரசு  பத்திரங்களின்(Bond yield) வட்டி அதிகரிக்கும். அதே போல வங்கிகளில் வட்டி விகிதம்(Interest Rate) அதிகரிக்கப்படும் நிலையில், பத்திரங்களின் வட்டி விகிதம்  குறைவாகவே காணப்படும். இதனை சார்ந்து முதலீட்டாளர்களின் முதலீட்டு சாதனமும் மாறுபடும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

செயற்கை நுண்ணறிவு தளமான ஹாப்டிக் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

செயற்கை நுண்ணறிவு தளமான ஹாப்டிக் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

Reliance Jio acquired the Artificial Intelligence Company Haptik for Rs. 700 Crore

 

மும்பை மாநகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஹாப்டிக்(Haptik). கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடல்(Artificial Intelligence) தளங்களை வடிவமைத்து வருகிறது. இரு நிறுவனர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களும், மிகப்பெரிய வாடிக்கையாளர் பட்டியலையும் கொண்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமேசான் பே, ஓலா, கோகோ கோலா, ஜோமாடோ, கோ பிபோ(Goibibo), மஹிந்திரா, ஒயோ(Oyo) மற்றும் எச்.டி.எப்.சி. லைப் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து அதற்கான உரையாடல் தளங்களை வழங்கி வருகிறது. டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனம் ஹாப்டிக் நிறுவனத்தில் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

 

ஹாப்டிக் நிறுவனம் ஐ.பி.எல். மற்றும் ட்ரீம் 11(Dream 11) ஆகிய பிராண்டுகளுக்கும் தனது சேவையை(Conversational AI Platform) அளித்து வருகிறது. இதன் உரையாடல் தளம் நினைவூட்டல் செய்தி, விமானம் அல்லது வாகன பயணத்தை பதிவு செய்வது, கைபேசி ரீசார்ஜ் மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்துவதில்  பயனாளருக்கு துணைபுரியும்.

 

ஹாப்டிக் நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கும்  முயற்சியை ஏற்கனவே கையாண்டது. தற்போது இவற்றில் ஜியோ வெற்றி கண்டு செயற்கை நுண்ணறிவு தளத்தை கொண்டுள்ள ஹாப்டிக் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

 

ஹாப்டிக் நிறுவனத்தில் ஜியோ முதலீடு செய்ய உள்ள தொகை ரூ. 700 கோடி எனவும், முதற்கட்ட முதலீடாக 230 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ தரப்போவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஹாப்டிக் நிறுவனத்தில் ஜியோவின் பங்கு 87 சதவீதமாகவும், மற்ற பங்குகள் அதன் நிறுவனர்களிடம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது மற்றும் உலகளவில் ஒன்பதாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜனவரி மாத முடிவின் படி, ரிலையன்ஸ் ஜியோவுக்கு 28.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு

39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு

The Bombay Sensex history which celebrated its 40th Birthday and crossed all time high of 39,000 Points

 

ஆசியாவின் முதல் மற்றும் பழமையான பங்குச்சந்தை தான் மும்பை பங்குச்சந்தை. உலகளவில் முதல் பத்து இடத்திற்குள் உள்ள இந்திய பங்குச்சந்தையும் மும்பை பங்குச்சந்தை தான், இதன் சந்தை மதிப்பு சுமார் 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தைக்கு வால் ஸ்ட்ரீட்(Wall Street) போன்று மும்பை சந்தைக்கு தலால் ஸ்ட்ரீட்(Dalal Street) ஆகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1875ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை பின்னர் பல மாற்றங்களை தொட்டு சந்தையில் உள்ளவர்களுக்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டது. சென்சிட்டிவ் இண்டெக்ஸ்(Senstive Index) என்பது தான் பின்னாளில் பி.எஸ்.இ. சென்செக்ஸ்(BSE Sensex) என்றானது. பழமையான பங்குச்சந்தை என்று அமைய பெற்றிருந்தாலும், 1979ம் ஆண்டில் தான் மும்பை பங்குச்சந்தை, புள்ளிகளின் அடிப்படையில் வர்த்தகமாக தொடங்கியது.

 

1979ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி, சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை கொண்டு துவங்கப்பட்டது. நேற்று (02-04-2019) தனது வரலாற்று உச்சமான 39,000 புள்ளிகள் என்ற நிலை அடைந்தது. 39,000 புள்ளிகள், அதாவது கடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் 390 மடங்குகள் வளர்ந்துள்ளது என்பது தான் உண்மை. பல ஏற்ற-இறக்கங்களை கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளது என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

 

சென்செக்ஸ்(Sensex) ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒருவர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 3.9 கோடி ரூபாயாக இருந்திருக்கும். இது தனிப்பட்ட பங்குகளின் வருமானத்தை சொல்லவில்லை என்பதை கவனிக்கவும். 2008ம் வருடத்தை சென்செக்ஸின் மிக மோசமான ஆண்டு எனலாம். உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை நம் நாட்டின் சந்தையையும் அப்போது பாதித்தது. மும்பை சென்செக்ஸ் குறியீடு 2008ம் வருடத்தில் 54 சதவீத இறக்கத்தை கண்டிருந்தது, இதனை சந்தையின் மாபெரும் வீழ்ச்சி என பொருளாதார வல்லுனர்களும் கூறியிருந்தனர்.

 

அடுத்த சில காலங்களிலே விழுந்த இடத்திலிருந்து வெகுண்ட சென்செக்ஸ் குறியீடு 73 சதவீத ஏற்றத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றும் மும்பை சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகமாக தான் உள்ளது. 1990ம் வருடம் ஜூலை மாதத்தில் சென்செக்ஸ் தனது 1000 புள்ளிகளை தொட்டது.

 

ஜனவரி மாதம் 1992ம் ஆண்டில் 2000 புள்ளிகளையும், 1999ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 5000 மற்றும் பிப்ரவரி 2006ல் 10,000 புள்ளிகள் என்ற நிலையை எட்டியது. 2007ம் வருடம் டிசம்பர் மாதம் சென்செக்ஸ் குறியீடு 20,000 புள்ளிகளை கண்டது. 2008ம் வருடம் உச்சத்தில் 20,000 புள்ளிகளுக்கும் மேலாக இருந்த குறியீடு அதே வருடத்தின் முடிவில் 8,750 புள்ளிகள் என்ற வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும் அடுத்த இரண்டு வருடங்களில் தனது பழைய நிலையான 20,000 புள்ளிகளை தக்கவைத்து கொண்டது. மே மாதம் 2014ம் வருடம் 25,000 புள்ளிகள் மற்றும் மார்ச் 2015ம் ஆண்டில் 30,000 புள்ளிகள், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 35,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டியது மும்பை சென்செக்ஸ்.

 

கடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் கூட்டு வட்டியின் அடிப்படையில் 17 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange -BSE) 5000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. 1991 மற்றும் 1992ம் காலகட்டங்களில் ஹர்ஷத் மேத்தா மோசடி, 2007 மற்றும் 2008ம் வருடங்களில் உலக பொருளாதார மந்த நிலை, வங்கிகளின் திவால் நிலை சென்செக்ஸ் குறியீட்டை பதம் பார்த்தது(Market Crash in 1991). 2015ம் வருடத்தில் சீன நாட்டில் ஏற்பட்ட மந்த நிலை, சீன யுவான் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் 2016ம் ஆண்டில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் நிலை மற்றும் பணமதிப்பிழப்பு நிகழ்வு ஆகியவை சந்தையை பாதித்த காரணிகளாக சொல்லப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019

Small Savings Scheme Interest rates for the Period – April to June 2019

 

அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய நிதி அமைச்சகத்தால்(Ministry of Finance)  அறிவிக்கப்படும். சமீபத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்ட ஒரு தகவலில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை எனவும், ஏற்கனவே இருந்த (ஜனவரி-மார்ச் 2019) வட்டி விகிதங்களே இம்முறையும் தொடரும் எனவும் கூறியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எனவே நடப்பு மாதத்தில், அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான நாட்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. கடந்த முறை வெளியிட்ட வட்டி விகிதங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரு வருட வைப்பு தொகையில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் 2018 வரை 6.9 சதவீத வட்டியும், இதுவே நடப்பு ஜனவரி முதல் மார்ச் மாத காலத்தில் 7 சதவீதமாகவும் இருந்தது.

 

கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், மூன்று வருடத்திற்கான வைப்பு தொகை(3 Years Term Deposit) வட்டி விகிதம் 7.20 சதவீதமாக இருந்தது. பின்னர் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு நான்காம் காலாண்டில் 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களில் கடந்த சில வருடங்களாக குறைவான வட்டி விகிதங்கள்(Interest Rate Cut) இருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு காரணமாக செயல்படுவது பணவீக்க காரணியாகும்(Inflation Rates).

Small Savings scheme interest 2019

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தில் அதிகபட்ச வட்டியாக மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு(Senior Citizen Savings Scheme) 8.70 சதவீதம் வழங்கப்படுகிறது. செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi) 8.5 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரம் 7.70 சதவீதமும் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) 8 சதவீத வட்டியும் அளிக்கப்படும்.

 

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

 

பொது வருங்கால வைப்பு நிதிக்கான(PPF) வட்டி விகிதங்கள், சில வருடங்களாக குறைந்த விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருட கால பி.பி.எப். வட்டி விகிதங்களில் அதிகபட்சமாக 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 12 சதவீதமும், குறைந்தபட்ச விகிதமாக கடந்த 2018ம் வருடத்தில் 7.60 சதவீத வட்டி விகிதமும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரை தளத்தின் பதிவு – 31.03.2019

இந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரை தளத்தின் பதிவு – 31.03.2019

Varthaga Madurai – Financial Freedom Article Published in Nanayam Vikatan Magazine

 

நமது வர்த்தக மதுரை இணைய தளத்தில் கடந்த ஜனவரி மாதம், ‘ நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள் ‘ என்ற தலைப்பில் நிதி சார்ந்த பதிவை பிரசுரித்தோம். தற்போது அதன் பதிவு, இந்த வார நாணயம் விகடன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர் திரு. சி. சரவணன் அவர்களுக்கும், மேலும் இந்த நிதி சார்ந்த பதிவை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இன்றைய காலகட்டத்தில், நிதி சார்ந்த விஷயங்கள் மிகவும் அவசியமான விஷயமாக இருந்து வருகின்றன.

 

முன்னொரு காலத்தில் சேமிப்புக்கு மட்டுமே பெயர் போன நம் நாடு, இன்று நுகர்வோர் கலாசாரத்தில்(Consumerism) சிக்கி தவிப்பது வருத்தத்திற்குரியது. போதிய வருமானம் இல்லாத காலத்தில், கூட்டு குடும்பத்தை சமாளித்து வந்த நாம், இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு நல்ல வருமானம் இருந்தும், சேமிப்பு மற்றும் முதலீட்டு விஷயத்தில் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

 

நமக்கான நிதி சார்ந்த பாதை தெளிவாகும் போது, வாழ்க்கை பயணமும் மகிழ்ச்சியாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தற்போதைய நிலையில், நிதி சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம்(Financial Freedom) என்பதும் ஆரோக்கியமான தன்மையே. நாம் ஒன்றும் செல்வந்தராக வேண்டிய அவசியமில்லை, அதே வேளையில் எந்த சூழ்நிலையிலும் கடன் பெறாமல் வாழ்ந்து காட்டினாலே நாமும் பணக்காரர் தான்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஒரு மில்லியன் வாகன விற்பனை சாதனை – டாட்டா மோட்டார்ஸ்

ஒரு மில்லியன் வாகன விற்பனை சாதனை – டாட்டா மோட்டார்ஸ்

First Indian Company reaches One Million Vehicle Sales Record – Tata Motors

ஜாகுவார் லாண்ட் ரோவர்(JLR) நிறுவனத்தை டாட்டா மோட்டார்ஸ் கையகப்படுத்திய பிறகு, வாகன துறையில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் பல சிக்கல்களில் தவித்தது. சீன வர்த்தக கொள்கை மற்றும் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பிரெக்ஸிட்(Brexit)  நிகழ்வு ஆகியவை இந்நிறுவனத்தின் ஜே.எல்.ஆர். பிராண்டை பதம் பார்த்தது. அடுத்தடுத்த வாகன விற்பனை சரிவு, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவில் 26,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை மட்டும் தனியாக பார்க்கும் போது, அதன் வாகன விற்பனை ஒவ்வொரு காலாண்டும் கணிசமான அளவை கொண்டிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் டாட்டா மோட்டார்ஸ் மட்டும் 16,200 கோடி ரூபாய் விற்பனையையும், ஜே.எல்.ஆர்.(Jaquar) நஷ்டத்தை சேர்க்காமல், நிறுவனத்தின் லாபம் 618 கோடி ரூபாயாக உள்ளது. இந்த லாபம் செப்டம்பர் 2018ம் காலத்தை விட ஆறு மடங்கு அதிகமாகும்.

 

கடந்த 2018ம் வருடத்தில் டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors) நிறுவனம் உலகளவில் 10 லட்சம் இலகுரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 10 லட்சம் வாகனங்களை ஒரே வருடத்தில் விற்பனை செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் டாட்டா மோட்டார்ஸ் பெற்றது. இலகுரக வாகன பிரிவில்(Light Vehicle) கார்கள், வேன்கள், சிறிய பயன்பாடுகளுக்கான வாகனம் மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களும் (3.5 டன் வரையிலான) அடங்கும்.

 

2018ம் வருட காலத்தில் டாட்டா நிறுவனம் மொத்தம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 10.49 லட்சமாகும். இதுவே 2017ம் ஆண்டில் காணும் போது, இந்நிறுவனம் 9.86 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை அளவை கணக்கில் கொள்ளும் போது, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் உலகளவில் உள்ள வாகன துறையில் 16வது இடத்தில் உள்ளது.

 

நடப்பில் டாட்டா அல்ட்ரோஸ்(Tata Altroz) மற்றும் ஹாரியர்(Harrier) பிராண்டுகள் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை ஹாரியர் வாகனத்திற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளது. வாகன விற்பனையில் வோக்ஸ்வேகன் குழுமம்(Volkswagen Group) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் டொயோட்டா(Toyota) நிறுவனமும், மூன்றாம் இடத்தில ரெனால்ட்-நிசான்(Renault-Nissan) குழுமமும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் ஜெனரல் மோட்டார்ஸ்(GM) நிறுவனம் மற்றும் ஹூண்டாய்-கியா(Hyundai-Kia) குழுமம் அங்கம் வகிக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com