Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியேறும் துணை கவர்னர் – மீண்டும் ஒரு சர்ச்சை ?

ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியேறும் துணை கவர்னர் – மீண்டும் ஒரு சர்ச்சை ?

RBI’s Deputy Governor Viral Acharya’s exit – Hot Controversies

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்தியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசுக்கும் இடையே பல காலங்களாக முரண்பாடு இருந்து கொண்டே தான் வருகிறது. சில காலங்களுக்கு முன் கவர்னராக இருந்த திரு. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேறிய பிறகு, அது பல விவாதங்களாக மாறியது. பின்பு கவர்னராக அமர்ந்த திரு. உர்ஜித் படேலுக்கும்(Urjit Patel), மத்திய அரசுக்கும் இடையே நிதி சார்ந்த முரண்பாடுகள் ஏற்பட்டன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நெருக்கடியான சூழ்நிலையில் உர்ஜித் பட்டேல் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். இது மாதிரியான நிலையில் தற்போது துணை கவர்னர்(Deputy Governor) பொறுப்பில் இருந்த திரு. விரல் ஆச்சார்யா தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இன்னும் அவருக்கான பதவிக்காலம் ஆறு மாதம் எஞ்சியுள்ள நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

 

பாரத ரிசர்வ் வங்கி(RBI) கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான இடைவெளி, தற்போது இருக்கும் அரசில் மட்டுமல்ல. இது போன்ற நிலை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாரத ரிசர்வ் வங்கியின் முக்கிய பொறுப்பாக பணவீக்கத்தை கட்டுக்குள்(Inflation) வைத்திருப்பதும், வங்கிகளின் நிதி நிலையை(Banking Regulations) கவனிப்பதும் தான் நடைமுறை செயலாக இருந்து வருகிறது.

 

சமீப காலமாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் அளிக்கும் சேவையில் சிக்கல்கள் இருந்து வருகின்றன. வங்கிகளின் வாராக்கடனும்(Bad loans) அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், வங்கிகளின் இணைப்பும் நடந்து வருவது தவிர்க்க முடியாததாக மாறி விட்டது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) முடிவுகளில் கவர்னருக்கும், துணை கவர்னருக்குமான தீர்மானம் வேறுபட்டு வருகிறது.

 

ரெப்போ வட்டி விகித(Repo rate) அறிவிப்பில் துணை கவர்னர் விரல் ஆச்சார்யாவுக்கு திருப்தி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக திரு. சக்திகாந்த தாஸ் உள்ளார். நாட்டின் 25வது கவர்னராக பதவியேற்ற சக்திகாந்த தாஸ்(Shaktikanta Das) ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

 

விரல் ஆச்சார்யா கடந்த 2017ம் ஆண்டு முதல் பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவியில் இருந்து வருகிறார். நடைமுறை நிதி தீர்மானத்தில் இவருக்கு திருப்தி இல்லை என்று செய்தி வந்திருப்பினும், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக விரல் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகினறனர்.

 

பாரத ரிசர்வ் வங்கியில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாமை, மத்திய அரசின் ஒத்துழைப்பு ரிசர்வ் வங்கிக்கு கிடைக்க பெறாதது என பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிற சூழ்நிலையில், இவருக்கு பதிலாக புதிய துணை கவர்னர் யார் என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

 

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டு கொண்டிருக்கும் வங்கிகளின் நிதி சிக்கலை, நடப்பில் இருக்கும் மத்திய அரசு எவ்வாறு தீர்வு காணப்போகிறது என்பதில் தான் அடுத்தகட்ட பொருளாதார நகர்வு அமையும். மத்திய அரசும், மத்திய வங்கியும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, அது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

தங்கம் விலையேற்றம் – தற்போது முதலீடு செய்ய ஏற்ற காலமா ?

தங்கம் விலையேற்றம் – தற்போது முதலீடு செய்ய ஏற்ற காலமா ?

Is it the right time to invest in Gold ?

 

தமிழகத்தில் தங்கத்தின் சமீபத்திய விலை 24 K (Carat) விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 3,415 ஆகவும், 22 K விலை கிராம் ஒன்றுக்கு 3,259 ரூபாயாகவும் வர்த்தகமானது. நடப்பு ஜூன் மாதத்தில் 22K விலை ஒரு கிராமுக்கு ரூ. 3,079 என்ற விலையிலிருந்து 180 ரூபாய் வரை தற்போது அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் ஒன்றாம் தேதி இது கிராம் ஒன்றுக்கு(Gold price per gram) ரூ. 2,905 ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக மக்களிடையே தங்கத்தை ஆபரணமாக இப்போது வாங்கி வைக்கலாமா என்ற ஆவலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், முதலீடு என்ற சிந்தனையில் காணும் போது, தற்போதைய விலை எவ்வாறு உள்ளது என நாம் பார்ப்போம்.

 

பொதுவாக தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகள்(Factors) உள்ளன. நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதியை சார்ந்து உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகளவில் எப்போதெல்லாம் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறதோ, அப்போது தங்கத்தின் மீது மதிப்பு அதிகரிக்கும். இதற்கு காரணமாக சொல்லப்படுவது தங்கம் ஒரு இழப்புக்காப்பு கருவி(Hedging) என்று சொல்லப்படுவதால் தான்.

 

தங்கத்தின் விலையில் அமெரிக்க டாலர் மதிப்பின் மாற்றமும் உள்ளது என்பது உண்மையே. நாம் தங்கத்தை டாலர் மதிப்பில் தான் இறக்குமதி செய்து வருகிறோம். தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் சுவிட்சர்லாந்து(Switzerland) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் சீனாவும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. உலகின் மொத்த தங்க இறக்குமதியில்(Gold Imports) 22 சதவீதம் என்ற அளவில் சுவிட்சர்லாந்து நாட்டின் பங்களிப்பு உள்ளது. நம் நாட்டின் இறக்குமதி மதிப்பு 11 சதவீதமும், சீனாவின் இறக்குமதி 15 சதவீதமும் உள்ளது.

 

தங்கத்தினை அதிகமாக கையிருப்பு(Gold Reserves) வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த தங்க கையிருப்பில் அமெரிக்கா சுமார் 75 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்தியா பத்தாவது இடத்தில் 5 சதவீத கையிருப்புடன் உள்ளது. நம் நாட்டில் தங்கத்தின் மதிப்பு பெரும்பாலும் திருமண நாட்களிலும், விழாக்காலங்களில் மட்டுமே பார்க்கப்படுகிறது. அவசர தேவைக்கு தங்கத்தை அடமானம் வைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்தாலும், அடமானத்திற்கு பிறகான மீட்டெடுப்பில் நம் நாட்டில் பெரும்பாலோர் தோல்வியடைகின்றனர்.

 

பங்குச்சந்தை எப்போதெல்லாம் மந்த நிலையில் அல்லது இறக்கத்தில் காணப்படுகிறதோ, அப்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை தங்கத்தின் மீது அதிகரிக்கிறது. அதாவது பங்குச்சந்தை ஏற்றம் பெறும்போதெல்லாம், தங்கத்தின் விலை இறங்கும். மாறாக பங்குச்சந்தை இறக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

 

அதே போல, ஒரு நாட்டின் பணவீக்கம்(Inflation) அதிகரிக்கும் போது, அந்நாட்டின் பணத்தின் மதிப்பு வலுவிழக்கும். இது போன்ற சமயங்களில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை அமைகிறது. இதன் காரணமாக பணவீக்க அதிகரிப்பு சூழ்நிலையில் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம். பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் அதிகமாக காணப்படும். இது போன்ற நிலை ஏற்படும் போது தங்கத்திற்கும், வங்கி வட்டி விகிதத்திற்கும் இடையே போட்டி ஏற்படுவதுண்டு.

 

பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பான வைப்பு நிதி வட்டி விகிதம் எனும் போது, தங்கத்தில் அதிகம் முதலீடு சேருமா என்பதும் சந்தேகமே. ஆகையால், பணவீக்கம் அதிகரித்து, வங்கிகளில் போதுமான வட்டி வருவாய் கிடைக்கப்பெறவில்லை எனில், தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கலாம்.

 

தங்கத்தினை நம் நாடு டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து வருகிறது என்பதை நாம் சொல்லியிருந்தோம். உலக சந்தையில் தங்கத்தின் விலையில் எந்த தாக்கம் இல்லையென்றாலும், இந்தியாவில் ரூபாய்-டாலர் மதிப்பின் மாற்றம் தங்கத்தின் இறக்குமதி விலையில் தெரிய வரும். ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு வலுவடையும் போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

 

தங்கத்தின் அதிகப்படியான தேவையும், மற்ற முதலீடுகளின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவும் தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்யலாம். தற்போதைய நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என கேட்டால், வேண்டாம் என்று தான் நாம் சொல்ல வேண்டியிருக்கும்.

 

பொதுவாக உலக பொருளாதாரம் மந்தமாக காணப்படும் போது, தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையும் அதிகமாக காணப்படும். ஆனால் இம்முறை வெள்ளியின் விலை தங்கத்தினை போல அதிகரிக்கவில்லை. தங்கத்தின் தற்போதைய விலை அதிகரிப்பு தற்காலிகமே என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

இப்போதைய முதலீட்டு வாய்ப்பாக வெள்ளியை எடுத்து கொள்ளலாம் எனவும், வர்த்தக போர், டாலர் மாற்றம் ஆகிய காரணத்தால் தங்கத்தின் விலை தற்காலிகமாக அதிகரித்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. அதே போன்று, எந்தவொரு முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்வதற்கான ஏற்ற காலம், அவை இறக்கத்தில் இருக்கும் போது மட்டுமே. ஏற்றத்தில் வாங்கி விட்டு, பின்பு நான் வாங்கிய பிறகு இறங்கி விட்டதே என புலம்ப வேண்டாம். பங்குகளிலும் நாம் இதனை காணலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அப்பல்லோ இன்சூரன்ஸை கையகப்படுத்தும் எச்.டி.எப்.சி.(HDFC) நிறுவனம்

அப்பல்லோ இன்சூரன்ஸை கையகப்படுத்தும் எச்.டி.எப்.சி.(HDFC) நிறுவனம்

HDFC acquires Apollo Munich Health Insurance

 

அப்பல்லோ முனிச்(Apollo Munich) காப்பீடு நிறுவனம் தான் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு அங்கமாக உள்ளது. இதனை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது எச்.டி.எப்.சி. நிறுவனம் களம் இறங்கியுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் கீழ் ஏற்கனவே எச்.டி.எப்.சி – எர்கோ(HDFC Ergo) காப்பீடு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸை வாங்கிய பின், அது எச்.டி.எப்.சி – எர்கோ காப்பீட்டுடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸின் 51 சதவீத பங்குகளை எச்.டி.எப்.சி. வாங்க உள்ளது. இதன் மதிப்பு சுமார் 1,336 கோடி ரூபாய்.

 

1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தில் 43,557 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதன் சந்தை மதிப்பு 18,800 கோடி ரூபாயாகவும், மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 77 கோடியாகவும் உள்ளது.

 

அப்பல்லோ முனிச் காப்பீடு நிறுவனம் தனி நபர் விபத்து காப்பீடு(Personal Accident) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) சேவைகளை வழங்கி வருகிறது. எச்.டி.எப்.சி. எர்கோ மற்றும் அப்பல்லோ முனிச் இணைப்பிற்கு பிறகு, அதன் மொத்த காப்பீட்டு பிரீமியம் 10,800 கோடி ரூபாயாகவும், சந்தை மதிப்பு 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

அப்பல்லோ முனிச் நாடு முழுவதும் 70,000 க்கும் மேற்பட்ட நெட்ஒர்க் மருத்துவமனைகளையும், 180 க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும் கொண்டுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனம் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கான கடன் சேவையை அளித்து வருகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் 3,74,000 கோடி ரூபாயாகும்.

 

கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,580 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 2,862 கோடியாகவும் இருந்துள்ளது. தற்போது ஏற்படப்போகும் கையகப்படுத்தல் இந்திய காப்பீட்டு சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி

மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி

India’s Air Passenger Traffic growth in May 2019

 

துரிதமாக செயல்பட்டு கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்(Jet Airways) கடந்த சில காலங்களாக கடன் சிக்கலில் மாட்டி கொண்டு, தற்போது திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. விமான சேவையும் ஏற்கனவே நிறுத்தப்பட்டதால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 16,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஊழியர்கள் அடுத்தகட்ட வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக மே மாதத்தில் விமான பயணிகள் போக்குவரத்து(Passenger Traffic) மற்ற மாதங்களை காட்டிலும், கணிசமான வளர்ச்சியை பெற்றிருக்கும். இம்முறையும் விமான போக்குவரத்து சுமார் 3 சதவீத வளர்ச்சியை கடந்த மே மாதத்தில் கண்டிருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் விமான போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர்.

 

ஸ்பைஸ் ஜெட்(Spicejet) நிறுவனம், பயணிகள் போக்குவரத்தில் கடந்த மே 2018 ஐ காட்டிலும் இம்முறை 24 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் சந்தை மதிப்பு 15 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது கடந்த நான்கு வருடங்களில் இருந்த உச்சபட்ச மதிப்பில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உள்ளது.

 

கோ-ஏர்(GoAir) நிறுவனம் மே மாதத்தில் 31 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் முறையே ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ(Interglobe Aviation -Indigo) விமான நிறுவனம் உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சுமார் 23 சதவீதமாக காணப்பட்டது.

 

ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனமும் மே மாதத்தில் 9 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஒன்பது மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச வளர்ச்சியாகும். விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.

 

பெரும்பாலான விமான நிறுவனங்கள் கடந்த மாதத்தில் வளர்ச்சியை கொண்டிருந்தாலும், பயணிகள் இருக்கை சுமை(Passenger Load factor) எண்ணிக்கையில் வளர்ச்சியை பெறவில்லை. கோ-ஏர் மற்றும் ஏர் இந்தியா இரு நிறுவனங்களை தவிர்த்து மற்ற விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகள் இருக்கையை கணிசமாக நிரப்ப வில்லை எனலாம்.

 

இண்டிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 63,945 கோடி ரூபாயாகவும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 8,200 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.400 என்ற விலையிலும், குறைந்தபட்சமாக நேற்று ரூ.31.65 என்ற விலையிலும் வர்த்தகமாகி உள்ளது. ஜெட் ஏர்வேஸ் கடந்த ஒரு வருட காலத்தில் முதலீட்டாளருக்கு 90 சதவீத வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

3301 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம்

3301 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம்

Reliance Infra has reported a net loss of Rs. 3301 Crore in Q4FY19

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம் உள்கட்டமைப்பு(Infrastructure) துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் மின் பரிமாற்ற சேவைகளை செய்து வருகிறது. 2018-19ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இந்நிறுவனம் 3,301 கோடி ரூபாய் நஷ்டத்தை காண்பித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதற்கு முந்தைய வருடத்தின்(2017-18) மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 134 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவன வருவாய் 4,013 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.888 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய வருமானம் 1,832 கோடி ரூபாய் நிகர இழப்பாக உள்ளது.

 

வரிக்கு பிந்தைய வருவாய்(PAT) ரூ. 3,301 கோடி நஷ்டமாகவும், ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனம் 2,427 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்து பத்து நிதியாண்டுகளுக்கும் மேலாக நிறுவனம் இதர வருமானத்தை கொண்டிருந்தாலும், தற்போது முதன்முறையாக 2018-19ம் நிதி வருடத்தில் நஷ்டத்தை அடைந்துள்ளது.

 

நிறுவனத்தின் விற்பனை கடந்த 10 வருடங்களில் 13 சதவீத வளர்ச்சியையும், லாபம் பத்து வருடங்களில் 10 சதவீத இழப்பையும் கண்டுள்ளது. நிறுவனம் 15,860 கோடி ரூபாயை கடனாக கொண்டுள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்களிப்பில் 98 சதவீத பங்குகளை அடமானம் வைத்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

2018-19ம் நிதியாண்டில் இருப்பு நிலை கையிருப்பு(Reserves) 13,913 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில் 23,975 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனில் அம்பானியின் பெரும்பாலான பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடனில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. கடன் தன்மையை குறைக்க, வளர்ச்சியை கொண்டிருந்த மியூச்சுவல் பண்ட் தொழிலிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.

 

இருப்பினும், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட்(Reliance Mutual Fund) தொழிலில் ஜப்பானை சேர்ந்த நிப்பான் லைப் நிறுவனம்(Nippon Life) கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளன. ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் சராசரி வளர்ச்சியை கொண்டிருக்கின்றன. வரவிருக்கும் நாட்களில் இதன் புதிய நிர்வாக திறமையை ஆராயலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

தயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு

தயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு

India to raise Import tariffs for US Goods – 29 Items in line

 

கடந்த ஜூன் 1ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி.(GSP) சலுகைகளை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து, தற்போது அமெரிக்க நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா தயாராக உள்ளது. ஜி.எஸ்.பி.(Generalized System of Preferences) என்பது ஏழை மற்றும் வளரும் நாடுகள், அமெரிக்க சந்தைக்கு தங்கள் பொருட்களை எவ்வித கட்டணமில்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும். இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரி சலுகைகளை பெறும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சுமார் 29 பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இது நாளை(16-06-2019) முதல் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு இறக்குமதியாகும் உருக்கு(Steel Import) மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு கூடுதல் வரி விதித்திருந்தது.

 

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முனைந்தது. இருப்பினும், இடையே நடைபெற்ற சீன-அமெரிக்க வர்த்தக போர், தேர்தல் அறிவிப்புகள் ஆகியவற்றால் தாமதம் ஏற்பட்டது. நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்க அலுவலகம் இந்தியாவுக்கான ஜி.எஸ்.பி. சலுகைகளை திரும்ப பெற்றதை அடுத்து, தற்போதைய கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு முடிவு ஏற்பட்டுள்ளது.

 

29 வகையான பொருட்களில் ஆப்பிள், பாதாம் பருப்பு, பருப்பு வகைகள், போரிக் அமிலம்(Boric Acid), சுண்டல் ஆகியவை அடங்கும். இதனால் வரும் நாட்களில் இதன் விலையில் மாற்றம் தெரியலாம். கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருக்கு பொருட்களுக்கு 25 சதவீதமும், அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதமும் கூடுதல் வரியை விதித்தது அமெரிக்கா.

 

கூடுதல் வரி விதிக்கப்பட உள்ள 29 வகை பொருட்களின் இறக்குமதி மதிப்பு(Import Cost) (வரிக்கு பிந்தைய) 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், இவற்றில் ஆப்பிள் மற்றும் பாதாம் பொருட்களின் மதிப்பு பெரும்பான்மையாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நடப்பு ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் ஜி 20(G20 Summit) மாநாடு நடைபெற உள்ள நிலையில், தற்போதைய இறக்குமதி சார்ந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே ஏற்படலாம் என தெரிகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மே மாத சில்லரை விலை பணவீக்கம் (Retail Inflation) 3.05 சதவீதமாக உயர்வு

மே மாத சில்லரை விலை பணவீக்கம் (Retail Inflation) 3.05 சதவீதமாக உயர்வு

Inflation rose to 3.05 percent in May, but IIP growth up 3.4 percent in April 2019

 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) என்றழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 3.05 சதவீதமாக உள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது. மே மாதத்திற்கு சொல்லப்பட்ட பணவீக்கம் கடந்த 7 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத பணவீக்கம் 2.92 சதவீதத்திலிருந்து 2.99 சதவீதமாக சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டது. இருப்பினும் பணவீக்க விகிதம் கடந்த 10 மாதங்களாக  நிர்ணயிக்கப்பட்ட(RBI Policy) 4 சதவீத அளவிற்குள் தான் உள்ளது.

 

நாட்டின் பணவீக்க சராசரியை கணக்கிட்டால், கடந்த 2012ம் வருடம் முதல் 6.11 சதவீத சராசரியை கொண்டுள்ளது. முதலீட்டை மேற்கொள்ளும் ஒருவர் பணவீக்கத்தை சரிகட்டிய பிறகே, தனது மூலதன வருவாயை(Capital Gains) கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலோர் பணவீக்கத்தை தங்கள் குடும்ப பட்ஜெட்டில் சேர்த்து கொள்வதில்லை. இதன் காரணமாக கல்வி, திருமணம், ஓய்வு போன்ற நீண்ட கால நிதி இலக்குகளை சரியாக திட்டமிடுவதில் சிரமம் ஏற்படுவதுண்டு.

 

மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றின் பணவீக்கம் 8.12 சதவீதமும், காய்கறிகள் 5.46 சதவீதமும், பருப்பு வகைகள்(Pulses) 2.13 சதவீதமும் மற்றும் எண்ணெய், கொழுப்பு பொருட்கள் 0.91 சதவீதமாகவும் உள்ளது. அதே வேளையில் பழங்களின்(Fruits) சில்லரை விலை பணவீக்கம் 5.17 சதவீதமாக குறைந்துள்ளது.

 

பணவீக்கம் உயர்ந்து வந்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தின் தொழிற்துறை உற்பத்தி(Industrial Production) 3.4 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மாத காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்க தொழிலில்(Mining) குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

தொழில்துறை உற்பத்தி கடந்த 15 வருடங்களில் 6.28 சதவீதம் என்ற சராசரி அளவை பெற்றிருக்கிறது. வீட்டுமனை பணவீக்கம் மே மாதத்தில் உயர்ந்தும், ஆடைகள் மற்றும் காலணிகள் விலை குறைந்தும் காணப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா ?

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா ?

Automobile Sales drop – Economic recession ?

 

சீன-அமெரிக்க வர்த்தக போர் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான எல்லை பதற்றம் ஆகியவை ஒருபுறம் எனில், சமீபத்திய வாகனத்துறையின் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்திய நாடு விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டது என்ற நிலை மாறி, இன்று சேவைத்துறையில்(Service sector) மட்டுமே நாம் சிறந்து விளங்குகிறோம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில்(GDP) விவசாயம் 16 சதவீதத்தையும், உற்பத்தி துறை(Manufacturing) 30 சதவீதத்தையும் மற்றும் சேவைத்துறை 54 சதவீதம் என்ற அளவை கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறை இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை எனலாம்.

 

நடப்பு  ஜூன் மாதத்தில் 7 நிறுவனங்கள் தனது பயணிகள் வாகன(Passenger vehicle) உற்பத்தியை குறைத்து கொள்வதாக கூறியுள்ளன. இவற்றில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் மாருதி நிறுவனங்கள் அடங்கும். கடந்த மாதத்தில் உள்ளூர் பயணிகள் வாகன விற்பனையும் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இது போன்ற விற்பனை வீழ்ச்சி கடந்த 2001ம் ஆண்டில் தான் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் பண்டிகை நாட்களிலும் வாகன விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதன் தாக்கம் வாகனத்துறை பங்குகளிலும் வெளிப்பட்டு வந்துள்ளது. நடப்பு வருடத்தில் ஜனவரி மாதம் முதல் வாகன விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

மே மாதத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் வணிக வாகனங்கள் முறையே விற்பனை 7 சதவீதம் மற்றும் 10 சதவீத சரிவை கண்டுள்ளன. வாகன ஏற்றுமதியும் கடந்த சில மாதங்களாக வளர்ச்சியில் தேக்கத்தை கொண்டுள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம்(Maruti Suzuki) டீசல் வாகன உற்பத்தியை வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

 

பொருளாதாரத்தில் வலுவடைந்த நாடுகளிடையே ஏற்பட்டு கொண்டிருக்கும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் தற்போது வாகனத்துறையை பாதித்து கொண்டிருந்தாலும், உள்நாட்டிலும் இந்த துறைக்கு சாதகமான விஷயங்கள் நடைபெறவில்லை.

 

அதிகரிக்கப்பட்ட வாகன காப்பீடு தொகை(Insurance Premium), சரக்கு மற்றும் சேவை வரி(GST) ஆகியவற்றால் வாகன துறை வளர்ச்சி உள்நாட்டிலும் சரிவடைந்ததாக கூறப்படுகிறது. நடப்பில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 28 சதவீதமாக இருந்து வருகிறது. இதனை 18 சதவீதம் என்ற வரி விதிப்பில் கொண்டுவரும் போது வாகன துறை வரும் காலத்தில் வளர்ச்சியை காணலாம். நம்மை போன்ற வளர்ந்து வரும் நாட்டில், உட்கட்டமைப்பு(Infrastructure) மற்றும் போக்குவரத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். வாகனத்துறை வளர்ச்சி இதனை சாத்தியமாக்குமா என்பதை வரவிருக்கும் நாட்களில் எதிர்பார்ப்போம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிக்கலில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் – 98,000 கோடி ரூபாய் முறைகேடு புகார்

சிக்கலில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் – 98,000 கோடி ரூபாய் முறைகேடு புகார்

Indiabulls Housing Finance in Trouble – Complaint of Rs. 98K Crore Scam

 

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வீட்டு நிதி நிறுவனமாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்(IHFL) உள்ளது. தேசிய வீட்டு வசதி வங்கியின்(NHB) கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த நிறுவனம் வீட்டு கடனுக்கான சேவையை வழங்கி வருகிறது. குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானங்களுக்கு கடன் அளிக்கும் வசதியையும் செய்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம், இந்தியா புல்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,300 கோடி ரூபாயாகவும், நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு 21 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளில் 13 சதவீதம் என்ற அளவிற்கு பங்குகளை அடமானம் வைத்துள்ளனர்.

 

தற்போது இந்த நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் ஒரு மோசடி புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சமீர் மற்றும் இயக்குனர்கள் பொது மக்களின் பணத்தை மோசடி செய்து விட்டார்கள் எனவும், இதன் மதிப்பு சுமார் 98,000 கோடி ரூபாய் எனவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

 

ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை பெற்ற இந்தியாவை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் துணையுடன், நிறுவனத்தின் தலைவர் பல போலி நிறுவனங்களை (Shell Companies) உருவாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதலீடாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு கடன் தொகையும் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த புகாரை இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் பெயரை களங்கப்படுத்தவும், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை அச்சுறுத்தவும்(Blackmailing) தான் இது போன்ற பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

வழக்கின் முக்கியத்துவமாக, நிறுவனத்தின் தலைவர் அரசியல் பின்புலம் உள்ளவர் என்றும், அரசு பணியாளர்கள் மற்றும் தர மதிப்பீட்டு(Rating Agencies) நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மோசடி(Scam) நடைபெற்றிருக்காது. வருமான வரித்துறை(Income Tax Department), செபி மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இது சார்ந்து நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டும் ‘ எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

உலகளவில் பொருளாதார மந்தநிலை இருக்கும் சூழலில், இந்தியாவில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்னை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளன என்றே சொல்லலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ

India’s Top most Influential Brands – Reliance Jio takes Second Place

 

உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்(Ipsos), பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமான இப்சோஸ், ஊடகம் மற்றும் சந்தைப்படுத்துதல், கருத்துக்கணிப்புகள் மற்றும் சமூக ஆராய்ச்சியை பல நாடுகளில் சேவையாக கொண்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் இந்த நிறுவனம் இந்தியாவிற்கான சிறந்த மற்றும் செல்வாக்கு மிகுந்த(Influential Brands) பிராண்டுகளின் பெயர்களையும், அதனை சார்ந்த நிறுவன பெயர்களையும் வெளியிட்டது. நாட்டின் மிகச்சிறந்த பிராண்டாக,  ‘கூகுள்(Google)’ முதலிடத்தில் உள்ளது. கூகுள் பிராண்டு கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் அங்கம் வகித்து வருகிறது.

 

இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்டுகளில் இரண்டாவது இடத்தை இம்முறை ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) பெற்றுள்ளது. கடந்த வருடம் அமேசான் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஜியோ மூன்றாவது இடத்திலும்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மார்ச் மாத முடிவில் 30 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 840 கோடியாகவும் உள்ளது.

 

மூன்றாம் இடத்தில் பே.டி.எம்.(Paytm) நிறுவனமும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் பேஸ்புக், அமேசான் நிறுவனங்கள் உள்ளன. எட்டாவது இடத்தில் ஏர்டெல் மற்றும் பத்தாவது இடத்தில் ஆப்பிள்(Apple – Iphone) நிறுவனமும் உள்ளது. முதல் பத்து இடங்களில் பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனமும், பிளிப்கார்ட்(Flipkart) மற்றும் சாம்சங் நிறுவங்களும் அடங்கும்.

 

சொல்லப்பட்ட தரவரிசை, மக்களின் நினைவில் இருந்த முக்கிய நிறுவன பிராண்டுகள், நம்பகத்தன்மை மற்றும் நிறுவனங்களின் முன்னணி சேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிராண்டுகளை ஆராய்ந்த பிறகே, மேற்சொன்ன தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இப்சோஸ்(Ipsos – Global Market research) நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com