Tag Archives: Indian Railways

பயணிகள் ரயில் சேவையில் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கவுள்ள இந்திய ரயில்வே

பயணிகள் ரயில் சேவையில் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கவுள்ள இந்திய ரயில்வே 

Indian Railways to face Rs.30,000 Crore loss in Passenger Service – Impact on Covid-19 

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக பயணிகள் ரயில் சேவை நீண்ட நாட்கள் முடக்கப்பட்ட நிலை தற்போதைய நிலையில் தான். கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகள் சேவையும் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும் பொருட்டு, சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

இருப்பினும், சில மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 230 சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. அதே வேளையில் சரக்கு ரயில்கள் அதிகப்படியாக இயங்கி வருவது சற்று ஆறுதலான விஷயம்.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. சொல்லப்பட்ட மாதத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) துவங்கப்பட்டது. லக்னோ – புது டில்லி தடத்தில் இந்த தனியார் சேவை ஆரம்பிக்கப்பட்டது. உணவு விநியோகம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்(Tourism and Hospitality), இணைய வழியிலான பயணச்சீட்டு விற்பனை ஆகிய சேவையை செய்து வருகிறது ஐ.ஆர்.சி.டி.சி.

கடந்த நிதியாண்டில் இதன் வருவாய் 1500 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. பயணிகளுக்கான உள்ளூர் ரயில் சேவை மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொரோனா தாக்கத்தால் இயக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு பெருத்த வருவாய் குறைவு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

இது சார்ந்து சமீபத்தில் பேசிய மத்திய ரயில்வே சேர்மன் வினோத் குமார், ‘ பயணிகள் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களும் முழுமையான நிலையில் நிரப்பப்படவில்லை. அவை பெரும்பாலும் 75 சதவீத பயணிகளுடன் தான் செல்கின்றன. அதே வேளையில் சரக்கு ரயில் சேவை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன ‘ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நடப்பு  நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக ரூ.30,000 கோடி முதல் 35,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் சரக்கு ரயில்கள் மூலம் இம்முறை கூடுதலாக 50 சதவீத வருவாய் கிடைக்கப்பெறும் என்றார். அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காகவே சரக்கு ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 428 கோடி ரூபாய்(ஜூன் மாத முடிவில்) வருவாய் கிடைத்துள்ளது. அதே வேளையில் அவற்றுக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ.2,140 கோடி. சிறப்பு ரயில்களில் சராசரியாக பயணச்சீட்டுக்கான கட்டணம் ரூ.600 ஆக இருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் சராசரியாக பயணி ஒருவருக்கு 3,400 ரூபாய் செலவிட்டுள்ளது. எனினும், இது போன்ற அவசர காலங்களில் வருவாயை மட்டுமே குறிப்பாக எடுத்து கொள்ள முடியாது என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஊரடங்கு காலத்தில் குறைந்த சரக்கு வருவாய் – இந்திய ரயில்வே

ஊரடங்கு காலத்தில் குறைந்த சரக்கு வருவாய் – இந்திய ரயில்வே 

Revenue declined during the Nationwide Lock down – Indian Railways

நாட்டின் மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனமாகவும், உலகின் 4வது மிகப்பெரிய ரயில் தடங்களை கொண்ட நிறுவனமாகவும் இந்திய ரயில்வே வலம் வருகிறது. சுமார் 96,000 கிலோமீட்டர் பாதை நீளத்தை கொண்ட இந்நிறுவனம் நாளொன்றுக்கு 20,000 பயணிகள் ரயில் போக்குவரத்தை இயக்கி வருகிறது.

இந்திய ரயில்வேயின் வருவாய் 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 12.3 லட்சம். மத்திய ரயில்வே அமைச்சராக தற்போது திரு. பியூஸ் கோயல் பதவி வகிக்கிறார். 175 வருடங்கள் பழமையான நிறுவனமாக இருக்கும் இந்திய ரயில்வே முதன்முறையாக தனது ரயில் சேவையை கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தியது.

மார்ச் 24ம் தேதி துவங்கிய ஊரடங்கு காலத்தில், சுமார் 48 நாட்கள் தனது பயணிகள் ரயில் போக்குவரத்தை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட பயணிகள் சேவை ரயில்களின் எண்ணிக்கை மட்டும் 13,523. இந்த ஊரடங்கு காலத்தின் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்கான சிறப்பு பயணிகள் ரயில்களையும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான சரக்கு ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்கியது.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த பங்கின் விலை ஆரம்பநிலையில் சுமார் 112 மடங்கு அளவில் பங்குதாரர்களிடம் கேட்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. 2019-20ம் நிதியாண்டில் ரூ.1506 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு, உணவு விநியோகித்தல் மற்றும் சுற்றுலா சார்ந்த சேவைகளை ஐ.ஆர்.சி.டி.சி. வழங்குகிறது. 2019ம் ஆண்டு கணக்கின் படி, சுமார் 2 கோடி பயனாளர்கள் இதன் இணையதளத்தை பயன்படுத்தி ரயில் பயண முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே நிறுவனத்தை பொறுத்தவரை மூன்று விதங்களில் வருவாய் ஈட்ட பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில், சரக்கு ரயில் மூலமான வருவாய் மற்றும் இதர வருவாயாக மூன்று வருவாய்களை கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ரயில்வே வருவாய் வளர்ச்சி சீராக வந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், பயணிகள் ரயில் சேவை பெரிதாக எதுவுமில்லை. நாடு முழுவதும் இயங்கிய சில சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போதைய கணக்கில் உள்ளன.

சரக்கு ரயில்களை(Frieght Earnings) பொறுத்தவரையில் உணவு தானியங்கள், உரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் இம்முறை சொல்லப்பட்ட காலத்தின் சரக்கு வருவாய் சுமார் 38 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சரக்கு கையாளப்படும் அளவிலும் 28 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.

ஏப்ரல்-மே காலத்தில் நிலக்கரி போக்குவரத்து ரூ. 5,778 கோடிக்கு நடந்துள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலத்தில் ரூ.11,030 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக நிலக்கரி மூலமான வருவாய் 90 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இது போல சிமெண்ட் வருவாயும் 100 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. கடந்த வருடம் ரூ.1,630 கோடியாக இருந்த சிமெண்ட் மூலமான வருவாய் இம்முறை 730 கோடி ரூபாயாக உள்ளது.

அதே வேளையில் உணவு தேவை அதிகரித்ததால், உணவு தானியங்களின் வருவாய் 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. வடக்கு ரயில்வேயின் அம்பாலா பிரிவில்(Ambala Division) சரக்கு வருவாய் ஏப்ரல்-மே காலத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் ரூ.130 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருவாய் இம்முறை 235 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு தானியங்கள் மூலமான வருவாய் தான்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

Looking for a job in Indian Railways – Check before about the Modernization of Indian Railways

நாட்டின் மிகப்பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனமாகவும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட சாம்ராஜ்யமாகவும் திகழ்வது இந்தியன் ரயில்வே(Indian Railways). நம் நாட்டில் இந்திய ரயில்வேயின் வரலாறு 166 வருடங்களாகும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் இந்திய ரயில்வேயின் பங்கும் முக்கியமானது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகமான பயணமாக ரயில் இருந்து வந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளரும் நாடுகளில் ஒவ்வொரு நாடும் கேபிட்டலிசம் என்ற தன்மையை கொண்டு ஓடி கொண்டிருக்கிறது. அவற்றில் நம் நாட்டிற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. சமூக சேவை கடமைகள் என்ற நிலை மாறி, அரசு துறையும் தனியார் நிறுவனங்களை போன்று வருவாயை வலுப்படுத்த வேண்டுமென்ற நிலைக்கு சென்று விட்டன. நடப்பு பட்ஜெட் 2020 தாக்கல் படி, ரயில்வே துறையின் உட்கட்டமைப்புக்கு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை (தேஜஸ் – Tejas Express) துவங்கப்பட்டது. தனியார் ரயில் சேவையின் முதல் மாதத்தில் நல்ல லாபத்தை பார்த்ததாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்தது.

அடுத்த வாரம் நாட்டின் மூன்றாவது தனியார் ரயில் சேவை இந்தூர் – வாரணாசி இடையே தொடங்கப்பட உள்ளது. ரயில் பயண சீட்டு வழங்குவதிலும் ரயில்வே துறை ஏற்கனவே நவீனமாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மேற்கு ரயில்வேயில் ஒரே நாளில் 5.5 லட்சம் பயணச்சீட்டுகள் டிஜிட்டல் முறையில் விற்கப்பட்டுள்ளன. வெறும் கைபேசி செயலி மூலமே சொல்லப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரயில்வே துறையின் அடுத்த இலக்கு நூறு வெவ்வேறு வழித்தடங்களில் நாடு முழுவதும் 150 தனியார் ரயில் சேவையை துவங்குவதாகும்.

வரும் 2025ம் ஆண்டுக்குள் தனியார் முதலீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டுடன் 500 ரயில்கள் மற்றும் 750 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதாகும். சுருக்கமாக சொன்னால் 750 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும். பயணிகள் ரயில்களின் வேகத்தை 160 கி.மீ. வரை அதிகப்படுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. அரசு துறையான ரயில்வே வேலை கிடைப்பதற்கும், சொல்லப்பட்ட விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் ?

இதுவரை மத்திய அரசின் ரயில்வே வேலை கிடைப்பதற்கு பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். ஆனால், அது போன்ற நிலை இனி எதிர்காலத்தில் நடைபெறாது. பெரும்பாலான இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைக்கலாம். காரணம், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே உலகளவில் நவீனமயமாக்கப்படுவது தான். அதே வேளையில், அரசு துறை வேலை தானே என இனி யாரும் அலட்சியம் கொள்ள முடியாது. இது ஒரு தனியார் கார்பொரேட் நிறுவனம் போன்று தான். சேவை என்ற நிலையிலிருந்து மாறி வருவாய் மட்டுமே இலக்கு என்ற தன்மை நிகழும் போது, ஒவ்வொருவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். வேலையில் பிழை ஏற்பட்டால், ரயில் பயணிகளின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், அதனை சார்ந்த ஊழியர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை வலுப்படும். இனி லஞ்சம் என்ற நிலை இல்லாமல், உயர்ரக பயணங்களுக்கு செல்ல வேண்டும்.

ரயில்வே வேலைக்கு செல்லும்  முன், தேஜஸ் ரயில் சேவையில் பயணம் செய்து பாருங்கள். பிறகு உங்களுக்கு தெரியும், வேலைக்கு செல்ல வேண்டுமா அல்லது பங்குதாரராக வேண்டுமா என்று.

ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட், ஹூண்டாய், சீமென்ஸ், மெக்குவாரி ஆகிய பிரபலமான அந்நிய நிறுவனங்கள் தங்கள் ரயில் சேவையை நம் நாட்டில் துவங்க உள்ளன. டாட்டாவும், அதானியும் இந்த ரயில் களத்தில் இறங்க உள்ளன. முற்றிலும் தனியார் பங்களிப்புடன் இனி இந்திய ரயில்வே உலகத்தரத்திற்கு நவீனமயமாகும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் (ராணுவத்தை தவிர்த்து) ஓய்வூதியம் இல்லை என்பதை மறக்க வேண்டாம். இனியும் பழைய ஓய்வூதியம் என்ற நிலைக்கு அரசு முன்வராது.

எனவே நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான இந்த பொதுத்துறைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பிராண்டட்(Branded) நிறுவனத்தில் வேலை செய்வது போன்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், ஏமாற்றமே மிஞ்சும். நல்ல சேவை, மிடுக்கான உடை, வேகமெடுக்கும் பயணம், கை நிறைய சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் ஐ.டி. நிறுவனத்தை போன்ற தோரணை ஆகியவை கிடைக்கப்பெறும். எந்த நிலையிலும் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அரசு வேலை என எண்ணிக்கொள்ள வேண்டாம்.

ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்தாண்டின் அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு வந்தது. சந்தைக்கு வரும் போது, இந்த பங்கின் விலை ரூ. 320. தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,514. இதன் சந்தை மதிப்பு ரூ. 24,216 கோடி. நிறுவனர்களின் (மத்திய அரசு) பங்களிப்பு 87 சதவீதம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. பங்கின் விலை கடந்த நான்கு மாதங்களில் 450 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதாவது நீங்கள் வாங்கிய விலையிலிருந்து சுமார் 5 மடங்குக்கு அருகில். வருங்காலத்தில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனத்திற்கும் இது நடக்கலாம். ஆனால் நீண்டகாலத்தில் நல்ல நிதி அறிக்கையை கொண்ட நிறுவனங்களே சந்தையில் முதலீட்டாளர்களை கவரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

150 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத சாதனை, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி

150 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத சாதனை, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி

First time in 150 years on Zero Fatality Rate in Indian Railways

 

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் நிறுவனமான இந்தியன் ரயில்வே(Indian Railways), உலகின் நான்காவது  பெரிய ரயில் நிறுவனமாகும். 1853ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்திய ரயில்வே துறை தினசரி 20,000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளையும், 13 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்திய ரயில்வே பாதையின் நீளம் சுமார் 67,300 கிலோ மீட்டர் மற்றும் மொத்த தடத்தின் நீளம் சுமார் 1,21,400 கிலோமீட்டர் (மார்ச் 2017 நிலவரப்படி). 2018-19ம் நிதியாண்டின் முடிவில் ரயில்வே துறையின் வருவாய் 1.97 லட்சம் கோடி ரூபாய். சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 6000 கோடி ரூபாய். 

 

18 மண்டலங்களை கொண்டுள்ள இந்திய ரயில்வே துறை CRIS, RITES, CONCOR, IRCON, IRCTC, RVNL, IRFC, NHSRCL, DFCCI, RAILTEL மற்றும் MVRC ஆகிய 10 துணை நிறுவனங்களையும் உள்ளடக்கியது. இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக இயக்கப்பட்ட ரயில், தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

 

ரயில் பயணம் அனைவருக்கும் சுகமானதாக இருந்தாலும், தாமதம் மற்றும் கூட்ட நெரிசல் ஆகியவை பெரும்பாலானவர்களை பயணங்களில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அது போல எதிர்பாராத ரயில் விபத்துகளும், பெருமளவிலான உயிர்சேதத்தை ஏற்படுத்தும். 

 

1990-1995 கால கட்டங்களில் ரயில் விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக 500 பேர் இறக்க நேரிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் இறப்பு விகிதங்கள் குறைவாக இருந்தாலும், அது ஒரு ஆபத்தான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ரயில் விபத்துகளால் உயிர் சேதம் மட்டுமில்லாமல், அதற்கான இழப்பீடு தொகையும் அரசாங்கத்தால் அதிகளவில் செலவு செய்யப்பட்டது.

 

இதனை காரணமாக கொண்டு, ரயில்வே துறையில் சமீப வருடங்களாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கான காப்பீட்டை(Travel Insurance) பெறும் வகையிலும் வசதி செய்யப்பட்டது. இதனால், பயணிகளின் பயணமும் காப்பீடு தொகையால் பாதுகாக்கப்பட்டது. சிக்னல் கோளாறுகள், விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிகைகள் என பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் ரயில்வே துறையின் கவனம் ஈர்க்கப்பட்டது.

 

2017-18ம் நிதியாண்டில் 73 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2018-19ம் ஆண்டில் 37 ஆக குறைந்தது. அதாவது 40 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை விட, 94 சதவீத குறைபாடுகள் சொல்லப்பட்ட காலத்தில் தீர்க்கப்பட்டன. 1980 கால கட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்திருந்த நிலையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் 59 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன.

 

இதனை விட ஆச்சர்யம் என்னவென்றால், நடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதுவரை எந்த ஒரு ரயில் விபத்துகளிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்திய ரயில்வே வரலாற்றில் இது போன்ற நிகழ்வு, முதன்முறையாக தற்போது நடந்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் பயணிகளுக்கான சுகமான மற்றும் பாதுகாப்பான பயணமாக, இந்திய ரயில் போக்குவரத்து அமையும் என எதிர்பார்க்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மலைப்பிரதேச ரயில் பயணங்களை மகிழ்விக்க ஏற்கனவே விஸ்டாடோம்(Vistadome Coach) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் விமான சேவை தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில் சேவைகளும் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன. இது வெற்றி பெற்றதையடுத்து, இந்திய ரயில்வே துறை உலகளவிலான மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.

 

நாடு முழுவதும் மின்சார சேவை(Electricity) மற்றும் இரட்டை பாதை வேலைகள் முடியும் தருவாயில், ரயில் பயணங்கள் பெருமளவிலான நகர்ப்புற சாலை நெரிசல்களை குறைக்கும் எனலாம். உயர்ரக சேவையில் கட்டணம் அதிகம் இருக்கலாம் என்பதனை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், குறுகிய தூரங்களுக்கான ரயில் சேவையும் சலுகை கட்டணத்தில் ரயில் பயணிகளை மகிழ்விக்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com