கொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள்
Recent Market & Economy numbers – Coronavirus – Covid-19
தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (இந்திய நேரப்படி காலை 08.00, மார்ச் 21,2020) – 2,76,007. இறந்தவர்களின் எண்ணிக்கை – 11,401 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,952 ஆகும். நடப்பில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களில் 5 சதவீதம் பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நம் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 249 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. இதுவரை 5 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், இத்தாலியில் அதிகமான இறப்பு விகிதமும் ஏற்பட்டுள்ளது. அடுத்த இரு வாரங்கள் நம் நாட்டிற்கு சவாலான காலமாக பார்க்கப்படுகிறது. முடிந்தவரை நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்.
கொரோனா வைரஸ் என்பது அம்மை, டெங்கு போன்ற சாதாரண பாதிப்பு தான் எனினும், இன்றைய காலத்தில் மக்கள் அடிக்கடி பயணத்தை மேற்கொள்வது மற்றும் பொது இடங்களில் அதிகமான கூட்டம் கூடுவதால் தான் பெரும்பாலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. முறையான சுகாதார விழிப்புணர்வும் மற்றும் ஆரோக்கிய ஆர்வமும் தான் இதனை குறைக்க இயலும். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. வரவிருக்கும் காலாண்டுகள் நாட்டின் பொருளாதார நிலைக்கு சவாலாக இருக்க கூடும்.
இதன் காரணமாக அரசு சார்பிலும் பொருளாதாரம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படலாம். அமெரிக்க கச்சா எண்ணெய் பேரலுக்கு 22.63 டாலர்களாகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 29 டாலர்களுக்கு குறைவாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது நமது பொருளாதாரத்திற்கு சாதகமாக இருந்தாலும், தற்போதைய நிலையில் பெரிய நுகர்வு தேவை எதுவுமில்லை. கொரோனா செய்திகளால், மற்ற பொருளாதார காரணிகள் சரிவர வெளியிடப்படவில்லை.
மீண்டும் எண்ணெய் வள நாடுகளில் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடைபெற இருப்பதால், அமெரிக்காவும் அதற்கான உத்தியை உலகளவில் ஏற்படுத்தும். நேற்றைய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ்(Sensex) இரண்டும் 5 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. SGX Nifty குறியீடு தற்போது 7 சதவீத இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நடப்பு மார்ச் மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 51,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 44,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீத வீழ்ச்சியையும், இந்திய பங்குச்சந்தை ஒரு மாத அளவில் 31.50 சதவீத இறக்கத்தையும் கண்டுள்ளது.
சந்தையில் அதிகப்படியான இறக்கம் ஏற்படுத்துவதை தடுக்க செபி(SEBI) பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரம் உலக பொருளாதார செய்திகளால் தான் பெரும்பாலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,952 ஆகவும், 24 காரட் கிராம் ஒன்றுக்கு ரூ. 4,150 என்ற விலையிலும் வர்த்தகமானது.
நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான(LTCG Tax) வரிகளை நீக்குதல் மற்றும் டிவிடெண்ட் தொகைக்கான(Dividend Distribution Tax) வரி கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில், அது நம் சந்தைக்கு சாதகமாக இருக்கும். அடுத்த சில காலங்களுக்கு பொருளாதார பின்னடைவை தொடர்ந்து பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம். நாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் சில தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை இது போன்ற காலங்களில் குறைக்க மாட்டோம் என கூறியுள்ளது நல்ல விஷயம். அதே வேளையில் குறுகிய காலத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இந்த பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்குமா என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட துறைக்கு நிவாரணம் அளிக்கப்படும் என திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத பொருளாதார மந்தநிலையில் தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும். இது ஒரு தற்காலிகமான நிகழ்வே. பொருளாதாரம் மீண்டு எழும் போது, நமக்கான வாய்ப்புகளும், வருமானங்களும் சிறப்பாக அமையும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை