வீழ்ச்சியடைந்த இந்திய கார் விற்பனை – பிப்ரவரி மாத புள்ளிவிவரங்கள்
Falling Auto Sales Numbers in February 2020 – Indian Automobile Manufacturers
நம் நாடு விவசாயம் சார்ந்த நாடு என்று முகமதிப்பை கடந்து, இன்று சேவைத்துறையை மட்டுமே முக்கிய நிலையாக கொண்டிருக்கிறது. மொத்த மதிப்பு(GVA) அடிப்படையில் சேவை துறை சுமார் 54.40 சதவீதத்தையும், விவசாயம் 16 சதவீதத்தையும், தொழிற்துறை சுமார் 29.5 சதவீத்தையும் உள்ளடக்கியது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொழிற்துறையை உற்று நோக்கும் போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகனத்துறை 12 சதவீதத்தை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காணப்பட்டு வரும் பொருளாதார மந்தநிலை இந்திய வாகனத்துறையின் விற்பனையையும் பாதித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, இரு நாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக போர், உள்நாட்டில் அரசின் வாகனத்துறைக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை வாகன விற்பனையில் தொய்வு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய கொரோனா வைரஸ் பாதிப்பும் இந்திய வாகனத்துறைக்கு பாதகமாக அமைந்துள்ளது எனலாம். பிப்ரவரி மாத புள்ளிவிவரங்களின் படி, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது வாகன விற்பனையில் 42 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியிலும் 40 சதவீதத்திற்கு மேல் குறைந்து காணப்படுகிறது.
இது போல மாருதி(Maruti Suzuki) நிறுவனம் தனது பிப்ரவரி மாத மொத்த விற்பனையில் ஒரு சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனையிலும் சுமார் 4 சதவீத அளவு குறைவாக இருந்துள்ளது. இருப்பினும், தனது ஏற்றுமதியில் 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்த விற்பனையில் 32 சதவீதமும், உள்நாட்டில் 34 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது. வணிக வாகன(Commercial Vehicles) விற்பனையில் இம்முறை 35 சதவீத விற்பனை குறைவை ஏற்படுத்தியுள்ளது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். இது போல பயணிகள் வாகன விற்பனையும் 31 சதவீதம் குறைந்துள்ளது.
எய்ச்சர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 29 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு விற்பனை சுமார் 27 சதவீதமும், ஏற்றுமதியில் 39 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது எய்ச்சர். கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமில்லாமல், பி.எஸ்.6 இடம் பெயர்வுக்கான நிகழ்வும் விற்பனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டின் வாகன உற்பத்தி தேவைக்கான உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எதிர்பாராத நிகழ்வுகளால் சரியான நேரத்தில் வாகனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2018ம் நிதியாண்டில் மட்டும், சீனா நம் நாட்டிற்கு சுமார் 4.3 பில்லியன் டாலர்கள் அளவிலான பொருட்கள் மற்றும் சேவையினை ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மின் மற்றும் மின்னணு சார்ந்த பொருட்கள்(Electrical & Electronic) தான் பெரும்பங்கு வகிக்கிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை