State Bank of India

ஸ்டேட் வங்கியின் ( இணை வங்கிகளுக்கான ) காசோலை மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்

ஸ்டேட் வங்கியின் ( இணை வங்கிகளுக்கான ) காசோலை(Cheque Books) மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்

Cheque Books of SBI associated banks(Merged) valid till march 31,2018

 

பாரத ஸ்டேட் வங்கியுடன் (State Bank of India – SBI) பாரதீய மகிளா வங்கி(BMB) மற்றும் ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகள்(Associated Banks) கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. அதன் படி, அனைத்து இணை வங்கிகளும் SBI வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. SBI நாட்டின் மிகப்பெரிய கடனளிக்கும் வங்கியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே SBI ன் இணை வங்கிகளாக இருந்த State bank of Travancore, State bank of Mysore, State bank of Bikaner and Jaipur, State bank of Hyderabad மற்றும் State bank of Patiala வங்கிகள் ஒன்றாக கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் இணைக்கப்பட்டது. தற்போது வரை இந்த இணை வங்கிகள் வழங்கும் காசோலைகளையே அதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

 

SBI ன் கீழ் இணை வங்கிகள் செயல்படுவதால், இணை வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலை புத்தகங்கள் (Cheque Books) வரும் மார்ச் 31, 2018   உடன் முடிவடைவதாகவும், அதன் பிறகு SBI ன் புதிய காசோலையை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் SBI நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இணை வங்கிகளில் இதுவரை இருந்து வந்த காசோலை வரும் 31, மார்ச் மாதத்துடன் ரத்து செய்யப்படுகிறது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

SBI சார்பாக தனது இணை வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய காசோலையை ஏற்கனவே வழங்கி வருகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தங்களது பழைய பயன்படுத்தாத காசோலைகளை வங்கியிடம் கொடுத்து விட்டு, புதிய முறைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பழைய காசோலை ரத்துக்கான காலக்கெடுவை ஏற்கனவே SBI இரு முறை (September and December 2017) நீட்டித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

இணை வங்கிகள் இணைப்புக்கு பிறகு, SBI வங்கி தனது 1300 கிளைகளுக்கு IFSC (Indian Financial System Code) என்று சொல்லப்படும் இந்திய நிதியமைப்பு குறியீட்டையும், கிளைகளின் பெயரையும் மாற்றியமைத்தது. இணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் SBI இணையதளத்தில் புதிய காசோலைக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

மேலும் மற்ற முறைகளாக SBI மொபைல் பேங்கிங் (Mobile Banking), அருகிலுள்ள ATM மற்றும் வங்கி கிளைகளையும் அணுகி புதிய காசோலை புத்தகத்தை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளது.

 

புதிய காசோலை பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய வங்கிக்கிளையின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை பயன்படுத்தலாம் எனவும், அதே நேரத்தில் ஆன்லைன் பேங்கிங் (Internet Banking) முறைக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s