Tag Archives: hdfc bank

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு 

HDFC was promoted by ICICI(Industrial Credit and Investment Corporation of India)

என்ன, எச்.டி.எப்.சி. வங்கியை ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் தோற்றுவித்ததா என கேள்வி எனலாம். வாருங்கள் எச்.டி.எப்.சி.யின் வரலாற்றை பார்ப்போம். 

குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் திரு.ஹஸ்முக் பரேக்(Hasmukhbhai Parekh). நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், லண்டன் பொருளாதாரக் கல்வி மையத்தில் தனது படிப்பை முடித்து விட்டு, பின்னர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் நிதிச்சந்தை சார்ந்தும் தனது அனுபவங்களை மெருகேற்றிக் கொண்டார். 1956ம் ஆண்டு வாக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிய இணைந்தார். 

அப்போது ஐ.சி.ஐ.சி.ஐ.(Industrial credit and Investment corporation of India) ஒரு அரசு பொதுத்துறை நிறுவனமாகும்(தனியார் நிறுவனம் அல்ல). இந்தியாவில் உள்ள சில அரசு பொதுத்துறை வங்கிகளும், உலக வங்கியும் ஒன்றிணைந்து உருவாக்கியதே ஐ.சி.ஐ.சி.ஐ. இந்நிறுவனத்தின் முதல் தலைவராக திரு. ஆற்காடு ராமசாமி முதலியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1994ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இதன் துணை நிறுவனமாகும். 

பின்னர் காலப்போக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைக்கப்பட்டு, தற்போது இந்தியப் பன்னாட்டு தனியார் வங்கிக் குழும நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் வேலை பார்ப்போரின் எண்ணிக்கை மட்டும் 1,35,900 பேர். முன்னர் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்த ஹஸ்முக் பரேக் அவர்கள், பின்னர் அதன் தலைவராகவும், நிறுவன இயக்குனர் குழுவின் முக்கிய பதவியையும் வகித்து 1976ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் இவரது நிதி சார்ந்த ஆலோசனையை பெற்றுக் கொண்டு தான் இருந்துள்ளது.

நிதித்துறையில் தனக்கு கிடைத்த அளப்பரிய அனுபவத்தை கொண்டு, தனது 66வது வயதில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தை போன்று ஒரு நிதி சார்ந்த வங்கியை துவக்க அவர் விரும்பினார். அந்த நிறுவனத்தின் பெயர் தான், ‘எச்.டி.எப்.சி.(HDFC)’. அப்போதைய அரசின் நிதிச் செயலாளராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் ஹஸ்முக் பரேக் ஒருமுறை கூறியது, “எச்.டி.எப்.சி., இந்திய மக்களிடம் அறியப்படாத ஒரு நிறுவனம். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறுமா என எனக்கு தெரியவில்லை”. இருப்பினும் நிறுவனத்தின் திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி கடந்த 1977ம் ஆண்டு இந்திய வணிக சமூகத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் சில அன்னிய நிறுவன முதலீடுகளுடன் எச்.டி.எப்.சி.(Housing Development Finance Corporation) நிறுவனம் துவங்கப்பட்டது. 

அப்போது திரு.ஹஸ்முக் பரேக் அவர்களை மரியாதை செய்யும் விதமாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும் எச்.டி.எப்.சி. நிறுவனத்தை பற்றி விளம்பரப்படுத்தி மக்களுக்கு கொண்டு சென்றது கவனிக்கத்தக்கது. இந்திய நடுத்தர மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் ஒரு நிதி நிறுவனம் வேண்டுமெனவும், அது தனது கல்லூரிக்கால விருப்பம் எனவும் திரு.ஹஸ்முக் பரேக் ஒரு முறை கூறியுள்ளார். தனது ஓய்வுகாலத்தில் துவக்கிய ஒரு வங்கி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. அதாவது மிகப்பெரிய ஒரு வங்கியில் வேலை பார்த்த இவர், அந்த வங்கியின் நிதி சார்ந்த மதிப்பை காட்டிலும் ஒரு வங்கியை ஏற்படுத்தியது இந்திய நிதித்துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் மற்றும் சிறப்பம்சம் கொண்ட அடமான நிதி(வங்கி) நிறுவனமாகவும் எச்.டி.எப்.சி. இருந்துள்ளது. இன்று இதன் சொத்து மதிப்பு சுமார் 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிறுவனத்தின் இந்திய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 12.51 லட்சம் கோடி ரூபாய். 2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் மட்டும் சுமார் 2.83 லட்சம் கோடி ரூபாய். எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank). 2022ம் ஆண்டு வாக்கில் இரு நிறுவனமும் இணைக்கப்பட்டு தற்போது எச்.டி.எப்.சி. வங்கி என இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2.13 லட்சம் பேர். எச்.டி.எப்.சி. வங்கி இந்தியாவில் மட்டுமில்லாமல், அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வங்கிக் குழுமம் இன்று வங்கி சேவை, முதலீட்டு வங்கி சேவை, அடமானம், தனியார் முதலீடு, மியூச்சுவல் பண்டு, காப்பீடு, பங்கு தரகு, டிஜிட்டல் நிதி சேவை, ரிஸ்க் மேலாண்மை மற்றும் முதலீட்டு மேலாண்மை என பல துணை நிறுவனங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மட்டும் ரூ.4.55 லட்சம் கோடி. செப்டம்பர் 2024 முடிவில் நிறுவனத்தின் வாராக்கடன் தன்மை(Gross NPA) 1.36 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் தன்மை(Net NPA) 0.41 சதவீதமாகவும் உள்ளது. 

எச்.டி.எப்.சி. நிறுவனம் நேரடியாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தால் துவங்கப்படாவிட்டாலும், அந்த நிறுவனத்தின் முக்கிய பதவி வகித்த திரு. திரு.ஹஸ்முக் பரேக் அவர்களின் முயற்சியையே சாரும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

       

எச்.டி.எப்.சி. வங்கி நான்காம் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 6,928 கோடி

எச்.டி.எப்.சி. வங்கி நான்காம் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 6,928 கோடி 

HDFC Bank’s Standalone Net Profit of Rs. 6,928 Crore – Q4FY20

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய். ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வருவாய் வளர்ச்சியை கொண்டிருக்கும் இவ்வங்கி 2019-20ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது.

நான்காம் காலாண்டில்(Quarterly Results) வங்கியின் வருவாய் ரூ. 29,885 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 6,033 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 9,174 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 6,928 கோடி. கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, வருவாய் வளர்ச்சி 13.5 சதவீதமும், நிகர லாபம் 17.7 சதவீதமும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

மார்ச் 2020 காலாண்டு முடிவில் ஒட்டுமொத்த வாராக்கடன்(Gross NPA) விகிதம் 1.26 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.36 சதவீதமாகவும் இருந்துள்ளது. இது கடந்த சில காலாண்டுகளை காட்டிலும் குறைவாக தான் காணப்படுகிறது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் வங்கி ஒட்டுமொத்தமாக ரூ. 1.05 கோடியை வருவாயாகவும், ரூ. 22,332 கோடியை நிகர லாபமாகவும் வங்கி கொண்டிருந்தது.

எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் கடந்த மூன்று வருடங்களில் 19 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது போல லாபத்தில் 20.50 சதவீதமும் (3 வருடங்கள்) மற்றும் ஐந்து வருடங்களில் 21 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

தற்போது சொல்லப்பட்ட முடிவுகளில் வங்கியின் வட்டி வருவாய் கடந்த காலத்தை காட்டிலும் 16 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மார்ச் காலாண்டு முடிவில் மொத்த மூலதன போதுமான விகிதம் 18.50 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவுறுத்தலின் படி, எச்.டி.எப்.சி. வங்கி முதலீட்டாளர்களுக்கு ஈவு தொகையை(Dividend) வழங்கப்போவதில்லை என கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பொருளாதார மந்தநிலை நிலவும் இது போன்ற காலங்களில் ஈவு தொகையை நிறுத்தி வைப்பதன் மூலம் வங்கியின் மூலதனத்தை பாதுகாக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான ஈவு தொகையை இனி அறிவிக்காது என தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி 

India’s Largest Private Sector Bank – HDFC Bank – Q3FY20

வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான எச்.டி.எப்.சி.(HDFC) குழுமத்தின் ஒரு அங்கம் தான் எச்.டி.எப்.சி. வங்கி. துணை நிறுவனமாக செயல்படும் இந்த வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகவும் செயல்படுகிறது. இதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் கோடி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிதி சேவையில் உள்ள இந்த வங்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களை கொண்டு சேவை புரிந்து வருகிறது. கடந்த ஆண்டில் உலகின் சிறந்த பிராண்டுகளில் 60வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 25 வருடங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank) இன்று 2,700 நகரங்களில் 5,500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு, இதுவரை 2.5 கோடி டெபிட் கார்டுகள் மற்றும் 1.3 கிரெடிட் கார்டுகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.

வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 11.89 லட்சம் கோடி. இன்று அனைத்து பரஸ்பர நிதி சேவைகளின் திட்டத்தில்(Mutual Funds Scheme Portfolio) முன்னிலை வகிப்பது எச்.டி.எப்.சி. வங்கி தான். வங்கியின் மீதான நம்பிக்கையால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த பங்கின் விலை 22.50 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ. 29,370 கோடி என சொல்லப்பட்டுள்ளது. நிதி லாபமாக ரூ. 3,233 கோடியும், வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 9,902 கோடியும் உள்ளது. வங்கியின் நிகர லாபமாக ரூ. 7,416 கோடி சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 33 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இம்முறை இதர வருவாய் நிகர லாபத்தை ஊக்குவித்துள்ளது.

வங்கியின் வருவாய் கடந்த 10 வருடங்களில் 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது போல வங்கியின் லாப வளர்ச்சியும் கடந்த பத்து வருட காலத்தில் 25 சதவீதமாக இருக்கிறது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE), பத்து வருடங்களில் 18 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக ரூ. 1.48 லட்சம் கோடி உள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் 1.45 சதவீதமாக உள்ளது. நிகர வாராக்கடன் 0.48 சதவீதமாக உள்ளது. இது 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த வாராக்கடன் 1.38 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.42 சதவீதமாகவும் இருக்கிறது. பொறுப்புகளுக்கான ஒதுக்கீடு(Provisions) மூன்றாம் காலாண்டில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு தொகை முன்னர் ரூ. 2,211 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 3,043 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

எச்.டி.எப்.சி. வங்கியின் கடன்-பங்கு விகிதம் 6.97 மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 1.64 மடங்கில் உள்ளது. பொதுவாக மற்ற துறையில் உள்ள நிறுவனங்களின் கடன்-பங்கு மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதத்துடன் வங்கித்துறையில் உள்ள நிறுவனங்களை ஒப்பிட கூடாது. ஏனெனில், நிதித்துறையில் கடன் வழங்கினால் மட்டுமே வருவாய் கிடைக்கப்பெறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி

எச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி 

HDFC Bank Q1FY20 Net profit to Rs. 5,568 Crore

 

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank), வங்கி சேவை மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட இந்த வங்கியின் சந்தை மதிப்பு(Market Cap) சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2019-20ம் நிதியாண்டின் முதலாம் (ஜூன்) காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் ரூ. 27,392 கோடியாகவும், நிகர லாபம் 5,568 கோடி ரூபாயாகவும் உள்ளது. நிகர வட்டி வருவாய்(NII) 13,295 கோடி ரூபாயாக இருந்தது.

 

இதர வருமானமாக ரூ. 4,970 கோடியும், மொத்த வாராக்கடன்(Gross NPA) அளவு ஜூன் காலாண்டில் 1.4 சதவீதமாக உள்ளது. கடன்களுக்கான ஏற்பாடாக(Provisions) ரூ. 2,613 கோடி இருந்துள்ளது. இருப்பினும் நிகர வாராக்கடன் அளவு கடந்த காலாண்டில் 0.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலாண்டில் 0.41 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வங்கியின் நிதி சேவையில் வைப்பு நிதி அளவு 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. வங்கியின் கடன் புத்தகமும்(Loan Book) ஜூன் மாத காலாண்டில் 17 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் நிதி விளிம்பு(Financial Margin) 13 சதவீதமாகவும், வரிக்கு முந்தைய லாபம் 8,534 கோடி ரூபாயாக உள்ளது.

 

கடந்த 10 வருட காலத்தில், எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் 20 சதவீத வளர்ச்சியையும், கூட்டு லாபம் 25 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளது. பங்குதாரர்களுக்கு கடந்த ஐந்து வருட காலத்தில் 17.72 சதவீதமும் மற்றும் 10 வருட காலத்தில் 18 சதவீத முதலீட்டின் மீதான வருவாயை(ROE) தந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com