Tag Archives: foreign investors

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

Foreign Portfolio Investors have so far invested Rs. 12,000 Crore in the Current Month – April 2019

 

நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாதங்களாக அவர்களின் முதலீட்டு தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

நம் நாட்டில் உள்ள கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்குச்சந்தை(Stock Market) இரண்டிலும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 11,180 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். இது போன்று மார்ச் மாதத்தில் 45,980 கோடி ரூபாயும், நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 12,000 கோடி ரூபாயையும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த மூன்று மாதங்களாக உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors -DII) பெரும்பாலும் நிகர விற்பனையையே மேற்கொண்டுள்ளனர். சந்தை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் உள்ளூர் முதலீட்டாளர்களான பரஸ்பர நிதிகள், சந்தையில் கண்ட லாபத்தை வெளியே எடுத்து வருவதாலும் இவர்களது விற்பனை அதிகமாகியுள்ளது.

 

பிப்ரவரி மாதத்தின் முடிவில் அந்நிய முதலீட்டாளர்களின்(Foreign Portfolio Investors) பங்கு முதலீடு ரூ. 13,564 கோடியாகவும், உள்ளூர் முதலீட்டாளரின் நிகர விற்பனை (-565) கோடி ரூபாயாகவும் இருந்து வந்துள்ளது. மார்ச் மாத காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII /FPI) சுமார் 32,370 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், உள்ளூர் முதலீட்டாளர்கள் 13,930 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

தற்போது நாட்டில் தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்கனவே தனது புதிய உச்சத்தை கடந்தாகி விட்டது. தேர்தல் முடிவுக்கு பின் சந்தையில் முதலீடு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும், தற்சமயம் சந்தையின் சிறிய இறக்கத்திலாவது முதலீடு(Equity) செய்வதே சிறந்தது.

 

மே மாதத்தில் தேர்தல் முடிவுக்கு பின், வலுவான ஒரு ஆட்சி அமையும் நிலையில் நமது பங்குச்சந்தை மேலும் புதிய உச்சத்தை காணலாம் என கருதப்படுகிறது. சந்தையை பாதிக்கும் காரணிகளில் உலகளாவிய நிகழ்வுகள் இருந்து வந்தாலும், இப்போது அரசியல் நகர்வுகளும், அதனை அடுத்த புதிய அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் சந்தையின் குறியீடுகளை தீர்மானிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடு

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடு

Massive Outflows from Indian Stock Market by the Foreign Investors

 

இந்திய பங்குச்சந்தை நடப்பு வருடம் முழுவதும் ஏற்ற-இறக்கமாகவே காணப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 (Nifty 50) குறியீடு இந்த ஆண்டில் (14-12-2018 வரை) சுமார் 5.90 சதவீத ஏற்றத்திலும், மும்பை பங்குச்சந்தை 8.70 சதவீத ஏற்றத்திலும் உள்ளது. அதே நேரத்தில் கடந்த மூன்று மாத கால அடிப்படையில் பார்க்கும் போது, நிப்டி 50 குறியீடு 6.30 சதவீத இறக்கத்திலும், மும்பை சந்தை ஆறு சதவீத இறக்கத்திலும் இருக்கிறது.

 

அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு (Foreign Portfolio Investors), நம் நாட்டின் சந்தையில் கடந்த ஒரு வருடமாக குறைவான அளவிலே உள்ளது. கடந்த வருடத்தில் அதிகபட்ச வெளிநாட்டு முதலீடாக சுமார் 2 லட்சத்தை பெற்ற இந்திய பங்குச்சந்தை, இந்த வருடத்தில் அதற்கு நேரெதிர் மாறாக அமைந்தது. இந்த ஆண்டில் இதுவரை மட்டும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் (Equity & Debt) இருந்து வெளியே எடுத்த தொகை மட்டும் சுமார் 87,700 கோடி ரூபாய்.

 

பொருளாதார தேக்க நிலை, சமீபத்திய பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜினாமா, வரவிருக்கும் அமெரிக்க வட்டி விகித அறிவிப்பு, உள்நாட்டு அரசியல் என பங்குச்சந்தையை வெகுவாக பாதித்ததும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை சந்தையில் இருந்து வெளியே எடுக்க காரணமாக அமைந்துள்ளது. இந்திய சந்தையில் உள்ள மிகப்பெரிய மற்றும் வளர்ச்சி நிறுவனங்களில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு (Share Holding) மட்டும் சுமார் 25 சதவீதமாகும்.

 

சந்தையில் உள்ள நிறுவனங்களின் நிறுவனர்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு அடுத்தாற் போல், அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு இருப்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் வெளியேறும் பட்சத்தில், பங்குச்சந்தை ஆட்டம் காண்பது இயல்பு. வரவிருக்கும் அமெரிக்க வட்டி விகித அறிவிப்பை (US Fed Rate) சார்ந்தும், அவர்களின் முதலீடு வெளியேறுகிறது. முன்னாள் கவர்னர் திரு. உர்ஜித் பட்டேல் அவர்களின் தீடீர் ராஜினாமாவும் (RBI Governor’s Resignation) மற்றொரு காரணமாக உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்திய கடன் சந்தையிலும் (Debt Market) அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேறும் மதிப்பு 50,000 கோடி ரூபாயை தாண்டியது. கடந்த ஆறு வருடங்களாக வாங்கும் போக்கையே கொண்டிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதன்முறையாக இந்த வருடம் முழுவதும் முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருக்கின்றனர். நாட்டில் அடுத்து வரவிருக்கும் பட்ஜெட் அறிக்கையும், தேர்தலும் (Elections 2019) மற்றும் அதனை சார்ந்த காரணிகளும் இனி பங்குச்சந்தையை நகர்த்தலாம்.

 

அந்நிய முதலீட்டாளர்கள் (FII Outflows) வெளியேறி சென்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் (Domestic Investors) சதவீதம் சற்று சாதகமாக உள்ளது. பரஸ்பர நிதி முதலீடுகளில் வரும் SIP முதலீடும் சந்தைக்கு பலத்தை சேர்கின்றன. நடப்பு மாதத்தில் பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் 2,930 கோடி ரூபாயை விற்றும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 610 கோடி ரூபாய்க்கு வாங்கியும் உள்ளனர். அதே வேளையில் கடந்த மாதம் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 12,000 கோடி ரூபாய். இது கடந்த 11 மாதங்களில் இல்லாத தொகையாகும். இதற்கு காரணமாக சொல்லப்பட்ட விஷயம் கச்சா எண்ணெய் விலை குறைவு.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

Mostly outflows of FII and the rise in Domestic Investments – Trading Activity for October 2018

கடந்த மாதம் (October 2018) முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியது இந்திய பங்குச்சந்தை. நமது நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஏற்ற-இறக்கம் அதிகமாக காணப்பட்டது. நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை மாற்றம், வங்கிகளின் செயல்பாடு போன்ற்வற்றால் பங்குச்சந்தை முதலீடு வெகுவாக பாதிக்கப்பட்டது.

 

அக்டோபர் மாதத்தில் மட்டும் நடந்த 21 வர்த்தக நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரும்பாலும் விற்பனையை மட்டும் கையாண்டிருந்தனர். அந்த மாதத்தின் மொத்த விற்பனையாக ரூ. 1,40,238 கோடியும், நிகர விற்பனையாக ரூ. 29,200 கோடியும் அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகமாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் மாத மொத்த கொள்முதல் ரூ.111,037 கோடியாகவும், மொத்த விற்பனை ரூ.1,40,238 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இருப்பினும், உள்நாட்டு முதலீடு நல்ல ஏற்றம் பெற்றது. கடந்த மாதத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (Domestic Institutional Investors -DII) மொத்த கொள்முதலாக ரூ. 1,00,992 கோடியையும், மொத்த விற்பனையாக ரூ. 74, 958 கோடியையும் கொண்டிருந்தனர். அவர்களின் அக்டோபர் மாத நிகர கொள்முதல் ரூ. 26,033 கோடியாக முடிவடைந்தது.

 

அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை பொறுத்தவரை அக்டோபர் 15 மற்றும் 17 ம் தேதிகளில் மட்டும் நிகர கொள்முதலை பெற்றிருந்தனர். மற்ற நாட்கள் அனைத்தும் விற்பனையை மட்டுமே மேற்கொண்டிருந்தனர். அதே சமயத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் விற்பனையையும், மற்ற வர்த்தக நாட்களில் நிகர கொள்முதலையும் வர்த்தகமாக்கினர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தினை பார்க்கும் பொழுது, வெளிநாட்டு முதலீடு நிகர விற்பனையாக ரூ.9,468 கோடியாகவும், உள்நாட்டு முதலீடு நிகர கொள்முதலாக ரூ. 12,500 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் 200 சதவீத விற்பனையையும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 108 சதவீத கொள்முதலையும் கொண்டிருந்தனர்.

 

உள்நாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் நிகர கொள்முதல் கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 2017 மாதத்தில் இருந்த ரூ. 21,025 கோடி நிகர கொள்முதல்  தான் அதிக அளவாக சொல்லப்பட்டது.  கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(Sensex) குறியீடு 2000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty50) 600 புள்ளிகளும் நிகரமாக இறங்கியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com